http://www.kumudam.com/dotcom/muchandi/index.php?type=muchandi&pag=1
Monday, January 10, 2011
மறந்துடாதீங்க..! - சோனியாவுக்கு கருணாநிதி...
http://www.kumudam.com/dotcom/muchandi/index.php?type=muchandi&pag=1
அனைவரும் அறியவேண்டிய மருத்துவ துணுக்குகள்
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_4103.html?utm_source=BP_recent
தி மு க வில் உள்வீட்டு குழப்பம்.... வேடிக்கை பாருங்க.... !!!
திமுகவின் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக என்றதும், ஏதோ மாவட்டச் செயலாளர்கள் யாராவது கலகம் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.
இது மாவட்டச் செயலாளர்கள் யாரும் செய்த கலகம் அல்ல. கழகம் என்றால் குடும்பம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். அந்தக் குடும்பத்தில் தான் இன்று கலகம் நடந்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டின் கடைசி நாளில் தொடங்கிய அந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த மாதம் 31 அன்று தொலைபேசியில் கருணாநிதியை அழைத்த அழகிரி, தனது கோபத்தையெல்லாம் கருணாநிதியிடம் கொட்டி விட்டு, ராசாவை திமுகவை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என்று தெளிவாக தெரிவித்து விட்டார். ஆனால் கருணாநிதி இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
கடந்த பதிவில் எழுதியிருந்தது போல, அழகிரி சென்னைக்கு வந்து கடந்த 3ம் தேதி, தனது தென் மண்டல செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
அதற்கு முதல் நாள் கடும் குருட்சேத்திரம் நடந்திருக்கிறது சிஐடி காலனியில்.
“நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம், தேர்தல சந்திக்கிறோம். இங்க என்னடான்னா சென்னை சங்கமம்னு கூத்தடிச்சிகிட்டு இருக்காங்க. நம்ப குடும்பத்துக்கு வந்த எல்லா அவமானமும் அந்தக் குடும்பத்தாலதான். என்னை கட்த்ரோட் அரசியல்வாதின்னு ************* பேசறா…. அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்காம கம்முனு இருக்கார். இப்படியே போனா நாளை பின்ன என்னை எவன் மதிப்பான். இவரு என்னடான்னா அந்த வீட்லயே போய் உக்காந்துகிட்டு இருக்காரு… எம்பி பதவிய ராஜினாமா செய்யச் சொல்லுங்க. சங்கமத்த நிறுத்தச் சொல்லுங்க. நானா அந்தக் குடும்பமான்னு முடிவெடுக்கச் சொல்லுங்க…… “ என்று கடும் கோபத்துடன் பேசி விட்டு சென்றிருக்கிறார்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் கருணாநிதியிடம் சொல்லப் பட்டாலும், இறுக்கமாக இருந்த கருணாநிதி ஒன்றும் பதில் பேசவில்லை.
நேற்று கனிமொழி பிறந்தநாளுக்கு சிஐடி காலனி சென்ற கருணாநிதி, கனிமொழியிடம் காலையில் பேசி விட்டு, மீண்டும் இரவு பேசியிருக்கிறார்.
நேற்று தனது அமைச்சரவை சகா ஒருவருடன் நீண்ட நேரம் கருணாநிதி புலம்பியிருக்கிறார்.
“என்னய்யா நெனச்சுகிட்டிருக்கான் அவன்… அவன் இல்லன்னா ஒண்ணுமே பண்ண முடியாதா…. 62லேர்ந்து இந்தக் கட்சிய வளத்தவன்யா நானு…. அவன் இல்லன்னா தேர்தல சந்திக்க முடியாதுன்னு நெனைக்கிறானா அவன்….
அவனுக்கு என்னய்யா பண்ணல… ?
எலெக்ஷன்ல நிக்கனும்னான்…. எம்பி ஆக்கினேன். மந்திரி ஆகனும்னான். மந்திரி பதவி வாங்கிக் கொடுத்தேன்… கட்சிப் பதவி வேணும்னான். தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தேன்…. இப்ப என்னய்யா ஓவரா பேசறான்… இவன் சொல்ற ஆளையெல்லாம் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கட்சியை எப்படி நடத்துறது… ?
என்னமோ ரொம்ப பேசறானே….. இவன் மட்டும்தான் கட்சிய வளத்தானா… ? நான் வளக்கலியா…. நீ வளக்கலியா..? இவந்தான் கட்சி மாதிரி பேசறான்… ? “ என்று புலம்பியிருக்கிறார்.
சென்னை சங்கமம் விழா என்ன ஆனாலும் நடந்தே தீர வேண்டும் என்று உறுதியாக கருணாநிதி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
அடுத்த அதிர்ச்சிகரமான தகவல். கனிமொழிக்காக, அழகிரியை தியாகம் செய்ய கருணாநிதி துணிந்து விட்டார் என்பதுதான். ஆம் தோழர்களே…
முந்தாநாள் பேராசிரியர் அன்பழகனை தொடர்பு கொண்ட கருணாநிதி, அழகிரியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொண்டதாக திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எப்போது கருணாநிதி கேட்டாலும் உடனடியாக கையெழுத்து போட்டுத் தரும் அன்பழகன், முதன் முறையாக “யோசித்துச் செய்யுங்கள்“ என்று கூறியிருக்கிறார். தான் நினைத்ததை நடத்தியே தீரும் பிடிவாத குணம் கொண்டவரான கருணாநிதி, துரைமுருகனை உடனடியாக வரச் சொல்லி, அன்பழகனை சந்தித்து, அழகிரியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் படி அன்பழகனை வற்புறுத்துமாறு கூறியுள்ளார். அதன் படி, அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு அன்பழகனை சந்தித்து விட்டு 11.30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்.
இது இப்படி இருக்க, அஞ்சா நெஞ்சன், தொடை தட்டிக் கொண்டு களமிறங்க தயாராகி வருகிறார். தனது ஆதரவாளர்களோடு தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் அவர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களோடு திமுகவை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதற்காக ஜனவரி 14 பொங்கல் வரை கெடு விதித்திருப்பதாகவும் அழகிரி கூறியிருக்கிறார். கனிமொழி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ராசா கட்சியை விட்டு நீக்கப் பட வேண்டும், சென்னை சங்கமம் ரத்து செய்யப் பட வேண்டும் என்ற தனது கோரிக்கையில் அழகிரி பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிகிறது.
கருணாநிதியும் அழகிரியும் ஆளுக்கு ஒரு பக்கம் தோள் தட்டி வரும் நிலையில், திமுகவில் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில், தான் இரண்டாவதாக திருமணம் செய்த லட்சுமி சிவபார்வதிக்காக, தான் உருவாக்கிய கட்சியான தெலுங்கு தேசம் தன் வாழ் நாளிலேயே இரண்டாக உடைந்ததை பார்த்தவர் என்.டி.ராமாராவ்.
அந்தக் காட்சியை இது நினைவுபடுத்தவில்லை ?
எது எப்படியோ, 2011 ஆண்டு அமர்க்களமாகத்தான் தொடங்கியிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி மரண ஓலமிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்காக போலித்தனமாக ஊளையிட்டுக் கொண்டே, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இந்தக் குடும்பம், இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாவது, சவுக்குக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
தலையங்கம்: நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!
இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்று!
அவரைத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கியபோது, அட, நம்ம ஊர் ஆண்டிமுத்து ராசாவால் ஊழல் மயமாக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறையைச் சுத்தப்படுத்த ஒரு நேர்மையானவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், தவறுகள் நிறுத்தப்படும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்தது.
இப்போதல்லவா தெரிகிறது, ராஜிநாமா செய்த ஆ. ராசாவின் இடத்தில் அமர்த்த கபில் சிபலை ஏன் பிரதமர் தேர்ந்தெடுத்தார் என்று!
திறமையான வழக்குரைஞர்களின் பணி, தனது கட்சிக்காரர்களைத் தப்ப வைப்பது. சட்டத்தை வளைத்தும் நெளித்தும், புதுப்புது விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் முன்வைத்து குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுதான் என்பது தெரிந்த விஷயம். கபில் சிபல் இப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகச் செயல்படவில்லை. ஒரு வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் பத்திரிகைத் தொடர்பாளராகவும்தான் அமைச்சரவையில் செயல்படுகிறார் என்பதை அவரது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தெளிவாக்கி இருக்கிறது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை முற்றிலும் தவறான அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இப்போது பதவி வகிக்கும் வழக்குரைஞர் கபில் சிபலின் கருத்து. அதாவது, முறையாகத் தணிக்கை செய்து அதன் அடிப்படையில் ஓர் அரசியல் சட்ட அமைப்பு தாக்கல் செய்திருக்கும் அறிக்கை முழுமையாகத் தவறானது என்கிற வாதத்தை ஓர் அமைச்சர், பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்பது இப்போது நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான ஒன்று. அதை விவாதிக்கவோ, குறைகூறவோ, நிராகரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் முன் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ஆஜராகித் தனது கருத்துகளை ஏற்கெனவே கூறிவிட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது செயல்பாடுகள் பற்றியோ, அறிக்கை பற்றியோ சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசுவதோ, குறைகூறுவதோ அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல் என்பதுகூடவா, மெத்தப் படித்த அமைச்சர் கபில் சிபலுக்குப் புரியாமல் போனது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி, ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது இரண்டாவது தலைமுறை (2ஜி) அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட 122 உரிமங்களாலும், 35 இரட்டைத் தொழில்நுட்ப உரிமங்களாலும் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் "உத்தேச' இழப்பு ரூ. 1,76,645 கோடி. இந்த இழப்பு, கடந்த ஆண்டு நடந்த மூன்றாவது தலைமுறை அலைக்கற்றை உரிம விற்பனையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வதுபோல, அமைச்சர் கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவே இல்லை என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தவறான அறிக்கையால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறுகிறார். அதேநேரத்தில், சில நடைமுறைத் தவறுகள் நடந்திருப்பதாக ஒத்துக்கொண்டும் இருக்கிறார்.
அது என்ன நடைமுறைத் தவறு? ஒருசிலருக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தந்து உரிமத்தைக் குறைந்த விலையில் பெற்று மிக அதிகமான விலைக்கு விற்று கோடி கோடியாகச் சம்பாதிக்க வாய்ப்பளித்ததுதான் அந்த நடைமுறைத் தவறு. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த மிகப்பெரிய மோசடியே அதுதானே. அதை ஏற்றுக்கொண்ட பிறகு, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அது வழக்குரைஞரின் விதண்டாவாதமாக இருக்கிறதே தவிர, ஒரு பொறுப்பான அமைச்சரின் விளக்கமாக இல்லை.
நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் விசாரணை நடந்துவரும் நேரத்தில் அமைச்சர் கபில் சிபல் இப்படிப் பேசவேண்டிய அவசியம் என்ன என்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் டி.ராஜாவின் கேள்விக்கும், இதுபோன்று அரசியல் சட்ட அமைப்பான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியைத் குற்றப்படுத்துவதன் மூலம் நடைபெற்று வரும் பல விசாரணைகளில் அதிகாரிகள் முறையாகத் தகவல்களைத் தராமல் தடுக்க அமைச்சர் உதவுகிறார் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டனத்திலும் நியாயம் தெரிகிறது.
அமைச்சர் கபில் சிபலின் பத்திரிகை நிருபர்களிடமான பேச்சு இடதுசாரிக் கட்சிகளும், பாரதிய ஜனதா கட்சியும் கோருகிற நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கான அவசியத்தை மேலும் அதிகரிக்கிறது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கபில் சிபல் பேசியிருக்க முடியாது. அப்படியானால், காங்கிரஸ் தலைமை முறைகேடாக உரிமம் பெற்று கோடிகளில் லாபத்தை அள்ளிக் குவித்த கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா?
சில நாள்களுக்கு முன்னர்தான் இதே கபில் சிபல் - பாஜக கூட்டணியில் 1999-ல் இருந்து பின்பற்றப்பட்ட "முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' கொள்கையால் ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு என்று கண்டுபிடித்து கூறியிருந்தார். அந்த நஷ்டம் ஆ. ராசா நடவடிக்கையில் லாபமானது என்கிறாரா அவர்? "நரி'யைப் "பரி'யாக்கிய கதையாக அல்லவா இருக்கிறது இது!
Sunday, January 9, 2011
இங்கே ஏன் கலைஞர் இல்லை ?
எங்கும் கலைஞர்
எதிலும் கலைஞர்
கலைஞர் புகைப்படம் இல்லாத
அரசு தொடர்புடைய எதுவுமே இல்லை
அரசு பஸ்களில் – கேலண்டர்களில் -
பாடபுத்தகங்களில் -
ரேஷன் கடைப் பொட்டலங்களில் -
ஏன் இலவச சர்க்கரைப் பொங்கல் பைகளில் கூட -
கருப்புக் கண்ணாடியுடன் கலைஞர்
சிரித்துக் கொண்டே உங்களைப்
பார்த்துக் கொண்டிருப்பார் !
ஒரே ஒரு அரசு சார்ந்த இடத்தில்
மட்டும் கலைஞரைக் காணவில்லை !
அடுக்குமா இந்த ஓரவஞ்சனை !!
என்ன பாவம் செய்தன
டாஸ்மாக் கடைகளும் -
சாராய பாட்டில்களும் !
http://vimarisanam.wordpress.com/2011/01/06/
திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்
திருச்சி : திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், வனத்துறை அமைச்சரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதன்மை செயலர் ஸ்வரன் சிங் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர், அதிகாரி, கட்சி நிர்வாகி என யாராக இருந்தாலும், நேருவை மீறி யாரும் செயல்பட முடியாத நிலை உள்ளது. வனத்துறை அமைச்சர் செல்வராஜ், ம.தி.மு.க.,வுக்கு செல்வதற்கு முன், திருச்சி மாவட்ட தி.மு.க., செயலராக இருந்தார். செல்வராஜ் ம.தி.மு.க.,வுக்குச் சென்ற பிறகு, மாவட்ட செயலரான நேரு, கட்சியில் படுவேகமாக வளர்ந்து, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினிடம் மிகவும் நெருக்கமானார். ம.தி.மு.க.,விலிருந்து தாய் கட்சியான தி.மு.க.,வுக்கு திரும்பிய செல்வராஜ், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று அமைச்சரானார். ஆயினும், கட்சியில் முன்பிருந்த செல்வாக்கு, செல்வராஜுக்கு தற்போது இல்லை. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா, மாநில கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், திருச்சி தேவர் ஹாலில் நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், மத்திய இணையமைச்சர் நெப்போலியன் உட்பட அனைவரும் பங்கேற்பதாக இருந்தது. அமைச்சர் செல்வராஜ், முன்னதாகவே வந்து காத்திருந்தார். அமைச்சர் நேரு வந்ததும், விழா நடக்கும் அரங்குக்கு செல்வராஜ் சென்றார். இதற்கிடையே, “கார் பார்க்கிங்’கில் அமைக்கப்பட்டிருந்த மாநில கண்காட்சியை திறந்து வைக்கும்படி நேருவிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்வராஜ் மேலே சென்றது தெரியாமல், விறுவிறுவென, “கார் பார்க்கிங்’கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குக்கு நேரு சென்றார். “ரிப்பன்’ வெட்டி, கண்காட்சி ஸ்டால்களை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செல்வராஜ், வேகமாக கீழே வந்தார். ஆவேசமாக வந்த செல்வராஜ், “நான் வந்து உங்களுக்காக நீண்ட நேரமாக காத்திருக்கிறேன். உங்க இஷ்டத்துக்கு வந்ததும் கண்காட்சியை திறந்து வைத்தால் என்ன அர்த்தம்?’ என்று நேருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “நீங்கள் இருப்பது எனக்குத் தெரியாது. சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது; தெரியாமல் நடந்துவிட்டது’ என, நேரு சமாதானப்படுத்தினார்.
செல்வராஜின் தீவிர ஆதரவாளரான கைக்குடிசாமி, “இப்படித் தான் வேண்டுமென்றே எங்கள் அமைச்சரை திட்டமிட்டு அவமானப்படுத்துறீங்க…’ என்று எகிறினார். இதைப் பார்த்து டென்ஷனான நேரு, அவரை அதட்டினார். அங்கிருந்த அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர். உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் ஸ்வரன் சிங் தலையிட்டு, இரு அமைச்சர்களையும் சமாதானம் செய்து வைத்தார். மீண்டும், “ரிப்பன்’ கட்டப்பட்டு, அமைச்சர் செல்வராஜ் முன்னிலையில் அமைச்சர் நேரு, “ரிப்பனை’ வெட்டி மீண்டும் கண்காட்சியை திறந்து வைத்தார்.
Source & Thanks : dinamalar
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது : பா.ஜ., மாநில தலைவர் குற்றச்சாட்டு
மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசிய தாவது:
பா.ஜ., மதவாத கட்சியல்ல; கிறிஸ்து, முஸ்லீம் குழந்தைகளுக்கு வழங்குவது போன்று, இந்து ஏழை குழந்தைகளுக்கும் உதவ அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கோவில்களின் அர்ச்சனை கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், கோவில் சொத்துக்களும், வருமானமும் எங்கே செல்கிறது என தெரியவில்லை.
காய்கறி முதல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 8 ரூபாயாக இருந்த வெங்காயம் தற்போது 60 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது. பதுக்கல், கடத்தல், ஆன்லைன் வர்த்தகம் போன்ற காரணங்களினால், விலைவாசி உயர்ந்துள்ளது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, நெய்யாறு பாசன நீர் உரிமை காக்க நடவடிக்கையில்லை. குடிநீர் பிரச்னையை தீர்க்க நதிகளை இணைக்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நதிகளை இணைக்கமுடியவில்லை. தற்போது, ராகுல் நதிகளை இணக்க முடியாது என கூறுகிறார். ஆனால், முடியாததை முடிக்கவே பா.ஜ., ஆட்சிக்கு வரவேண்டும்.
தற்போது தமிழகத்தில், குழந்தைகளுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எனவே வரும் தேர்தலில், ஓட்டளிக்கும் போது யோசித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாநிலத்துணைத்தலைவர் சின்ராஜ், மாநில செயலாளர் வானதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஜயராகவன், ருத்ரக்குமார், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வடுகநாதன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங் கேற்றனர். முன்னதாக, பா.ஜ., கட்சி சார்பில், தாமரை யாத்திரை காரத்தொழுவு, கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம், பள்ளபாளையம் வழியாக உடுமலை பஸ்ஸ்டாண்ட் வந்தது. தாமரை யாத்திரை வாகனத்திற்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
எந்த கட்சியுடன் கூட்டணி? "சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த பிப்.,க்கு பின்னரே முடிவு செய்யப்படும்' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்யும் "தாமரை யாத்திரை' நேற்று பொள்ளாச்சி வந்தது. யாத்திரைக்கு தலைமை வகித்த மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதில்லை. சிறுபான்மையின மாணவர்களை போன்று தாழ்த்தப்பட்ட இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் தாமரை யாத்திரை நடக்கிறது. இதுவரை, 6,000 கி.மீ., தூரம் தாமரை யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 600 பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வரும் ஜன., 29ம் தேதி சென்னையில் நிறைவடையும் யாத்திரையையொட்டி, அன்று இரவு "சென்னை போராட்டம்' என நடக்கிறது.
கேரள மாநிலத்தை விட தமிழகத்தில், "சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வருமானம் அதிகரிக்கிறது. இதனால், ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வலிமை உள்ளது. வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தாமரை யாத்திரை நிறைவடைந்தவுடன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
http://erodelive.com/indexnews/politicalheadlinenews.php?id=2981
