Monday, January 10, 2011

தனியார் மருத்துவமனைகளுக்கும் வருமானம் கலைஞர் டிவிக்கும் வருமானம்!


சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமணி 9-1-2011

கலைஞர் காப்பீடு திட்டம் போல தனியார் மருத்துவமனைகள் கள்ளா கட்ட சிறப்பான சேவை செய்வது 108 ஆம்புலன்ஸ் சேவை. எல்லா இடத்திலேயும் நிரம்பி விட்ட தனியார் மருத்துவமனைக்கு நம்ம பணத்திலேயே மருத்துவம் செய்ய காப்பீடு திட்டம் அதற்கு உங்களை அழைத்து செல்ல 108 சேவை. இதற்கெல்லாம் முதலாளிகளிடம் இருந்து பங்கு வாங்குவது பத்தாது என்று 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தில மக்கள் பையில் இருந்து ஒரு கோடி ரூபாயும் கொள்ளையடித்து விட்டார் கலைஞர்.

http://athikalai.wordpress.com/2011/01/10/108ambulance/


குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!


குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.

நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.

அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.

மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.

நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.

ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.

http://newstbm.blogspot.com/2011/01/blog-post_3292.html

மறந்துடாதீங்க..! - சோனியாவுக்கு கருணாநிதி...

ன்றைய அலப்பறைக் கூட்டம் நீதி வேண்டி போராடிய கண்ணகி சிலை அருகே கூடியது. கடற்காற்று வீச காலாற நடந்து இளைப்பாறவும் வசதி என்ற ஏற்பாடு.ஆனால் தொடக்கமே தொங்கலில் ஆரம்பமானது. நம்ப சுவருமுட்டி சுந்தரமும்,கோட்டை கோபாலும் உடல் முழுக்க காயக்கட்டோடு நொண்டியடித்து வந்ததைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி.
''சுவருமுட்டி, என்னய்யா ஆச்சு. அண்ணா சமாதியில 'ஸ்டேட் ஆட, சென்ட்ரல் ஆட'ன்னு நிகழ்ச்சி நடத்தின... போலீஸ் புடிச்சுகிட்டுப் போய் இப்படி ஒரேடியா ஆடிட்டாங்களோ'' என்றார் சித்தன்.
''அட, அது இல்லப்பா... இது வேற...ஆனால் இதுவும் போலீஸ் அடிதான்.சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டாய்ங்க.
"அப்படி என்ன தப்பு பண்ணினே.?"
"ஒண்ணுமில்ல சித்தா..நமக்கு வேண்டிய பையன். 500 ரூபாய் பிக்பாக்கெட் அடிச்சான்னு சந்தேகம்தானாம்.போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டுபோய் ஜட்டியோட வச்சு உரிச்சுட்டாங்க.தகவல் கிடைச்சுப் போனேன்.'என்னய்யா இப்படி செய்துட்டீங்கன்னு நியாயம் கேட்டேன். திருடினவன்கிட்ட பிறகு எப்படி விசாரிக்கிறதாம். துரையை விருந்து வச்சு விசாரிக்கச் சொல்றாரோன்னு நக்கலடிச்சாங்க.."
"நீங்க செய்யுறது ரொம்ப தப்பு. நம்ப பிக்பாக்கெட் ஆளு வீட்டுக்கு போய் முதல்ல சோதனை போடணும். அப்படியே அவரோட நண்பர்களின் வீடு அலுவலகம் எல்லாம் போய் சோதனை போடணும். கிடைச்ச ஆதாரத்தை எடுத்கிட்டு வந்து நீங்க புலனாய்வு விசாரணை நடத்தணும். அவருதான் குற்றவாளின்னு தெரிஞ்ச பிறகு விசாரணைக்கு வரச்சொல்லி நோட்டீஸ் அனுப்பணும்.
அந்த நோட்டீஸ் வந்தவுடனேயே எங்காளு பெரிய ஆஸ்பிட்டல் போய் மெடிக்கல் செக்கப்புன்னு சர்டிபிகேட் வாங்கி வச்சுக்குவாரு. அப்புறமா உங்க ஸ்டேஷனுக்கு வருவாரு. அதுக்கு முன்னாடி மீடியாவை எல்லாம் நீங்களே கூட்டியாந்து வச்சிக்கிடணும். எங்காளு 'நான் தைரியமாதான் விசாரணைய எதிர்கொள்ள போறேன்னு சவால் விடுவாரு. இம்புட்டுக்கும் பிறகுதான் நீங்க அவர்கிட்ட பணிவா கேள்விகளை கேட்கணும். பிக்பாக்கெட் ஆளு இடையில அவரோட வக்கீல்கிட்ட ஆலோசனைய கேட்பாரு. டாக்டர்கிட்டவும் பேசுவாரு. அதுக்கு அனுமதிக்கணும். எந்த விதத்திலேயும் அவரோட மனித உரிமைய நீங்க பறிக்கக் கூடாது..."
"அடடே.. ரொம்ப நல்லாத்தான் போவுது. அப்புறம்."-சித்தன்
"அப்புறமென்ன.. எங்காளுக்கு வீட்டு சாப்பாட்டைத்தான் நீங்க அனுமதிக்கணும். உங்க சாப்பாட்டை நம்ப முடியாது. எங்காளுக்கு எதிரான தாதா யாராச்சும் உங்களோட ஊடுருவி ஏதாச்சும் செய்துட்டா... அதனாலதான் வீட்டு சாப்பாட்டு. அதையும் எங்காளேதான் ஒரு எட்டு நடந்து போய் எடுத்துகிட்டுவர நீங்க அனுமதிக்கணும்..
அப்புறம் ரொம்ப டையாடா இருக்கு.இதுக்கு மேல ஒத்துழைக்க வாய்ப்பில்லேன்னு சொல்லுவாரு. சரி போய்ட்டு வாங்க ராசான்னு மரியாதையா அனுப்பி வைக்கணும். அடுத்த நாள் நீங்க வேலை வெட்டிய விட்டுட்டு அவருக்காக காத்துகிட்டு இருக்கணும்.வழக்கம் போல வருவாரு.நீங்களும் வழக்கம் போல விசாரிக்கணும்.அன்னைக்கும் விசாரணை முடியாம மூன்றாவது நாளும் வாங்கன்னு கேட்டுக்கணும். எங்காளு, ஏற்கனவே டாக்டர்கிட்ட வாங்கின மெடிகல் ரிப்போர்ட்டை காட்டி 'எனக்கு தைராய்டு பிரச்சனை இருக்கு. அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும். பதினைஞ்சு நாளைக்கு என்னை டிஸ்டப் பண்ணவே கூடாதுன்னு கேட்டுக்குவாரு. சரி போய்ட்டு வாங்க ராசான்னு அனுப்பி வைக்கணும்'' என்றெல்லாம் பிக்பாக்கெட் ஆளோட மனித உரிமைய சொன்னேன்...
"அதுக்கு போலீஸ் என்ன சொன்னாங்க?"- சித்தன்
''ஐநூறு ரூபாய் கேசுக்கெல்லாம் அப்படியெல்லாமா செய்ய முடியும்னு கிண்டலடிச்சாய்ங்க.'சரி ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடி அடிச்சா..'. ன்னு கேட்டுட்டேன். இப்படி கட்டு போடுற அளவுக்கு பிரிச்சு மேய்ஞ்சுட்டாய்ங்க..." பாவமாக சொன்னார் சுவருமுட்டி..!
"உனக்கு ரொம்பவும் குறைச்சலாதான் கொடுத்திருக்காய்ங்க..." என்று கலாய்த்த சித்தன்,கோபாலைப் பார்த்து "உனக்கு எப்படிய்யா அடி!?" என்றார்.
"என் கதை வேறய்யா. நம்ப முதல்வர் ஐயா வைரமுத்துவோட புத்தக வெளியீட்டு விழாவுல கலந்துகிட்டு என்ன பேசினாரு தெரியுமா.?" - கோபால்
"அவர் பேசினது தெரியும். உனக்கு நடந்ததைச் சொல்லுய்யா"-சித்தன்
"நடந்ததை அப்படியே சொல்லிடறேன். 'இந்த விழாவில் வைரமுத்துவை பாராட்ட நான் வரவேண்டும் என்று அழைக்கப்பட்ட போது எனக்கு ஒரு மிக முக்கியமான வேலை வந்தது. விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை. அது முதல்வரின் கடமை. அதற்கு செல்லாமலே இங்கு வந்துவிட்டேன் என்றால் அதற்கு என்ன பொருள்.? நான் முதல்வராக இருக்கலாம்.ஆனாலும் ஒரு முதல்வரைவிட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றுல்ல. என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமை தரக்கூடியவன். சேர மன்னன் கணைக்கால் இரும்பொறையின் அரண்மனைக்கு சென்றார் தமிழ் புலவர் மோசு கீரனார். பயணக் களைப்பால் அரண்மனை வாசலில் இருந்த முரசு கட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்டார் புலவர். வாயிற் காப்போன் மூலம் இதை அறிந்து கோபத்துடன் வந்து பார்த்த மன்னன், முரசு கட்டில் படுத்திருப்பது தமிழ் புலவன் என்பதை அறிந்தான். உடனே அவருக்கு விசிறியால் வீசினான். இதைக்கண்ட பதற்றத்துடன் எழுந்த புலவரிடம், உங்களுக்காக அல்ல இது. நான் தமிழுக்கு ஆற்றும் தொண்டு என்றார். அதைப் போலத்தான், இங்கே பிரதமர் வருகிறார் என்றாலும்கூட அங்கே செல்லாமல் இந்த 'மன்னன்'இங்கே வந்ததற்கு காரணம் தமிழுக்கு செய்யும் தொண்டு, தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதை நான் கூற விரும்புகிறேன்' என்று மன்னர் ஐயா, இல்லை கலைஞர் ஐயா பேசினார் இல்லையா..."
"ஆமாம்யா. பேசினார்தான். இப்போ அதற்கு என்னவாம்."-சித்தன்.
''நானும் கோபாலபுரத்தில் இருக்கிற மன்னர் வீட்டாண்டே போனேன். புலவர் மோசு கீரனார் மாதிரி படுத்து தூங்கினா கலைஞர் வந்து விசிறி விடுவார்னு நினைச்சு படுத்தேன். செக்யுரிட்டிங்க வந்தாய்ங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சாய்ங்க. நானும் ஒரு புலவர்தான்னு, எழுதின கவிதைய எல்லாம் காட்டின பிறவும்கூட நம்பல. உங்கவீட்டு அடி, எங்கவீட்டு அடியில்ல.. தர்ம அடின்னு சொல்லுவாய்ங்களே... அப்போதான் அனுபவிச்சேன்...''அய்யயோவென்று அழுதபடியே சொன்னார்.
"நல்லவேளை அதோடு விட்டுவிட்டார்களே. மெண்டல்னு சொல்லி கீழ்பாக்கம் ஆஸ்பிட்டல்ல போய் சேர்த்துட்டு ஆறு மாசத்துக்கு வெளிய விடாதீங்கன்னு சொல்லாம விட்டாங்களேன்னு பெருமைப்படுய்யா" என்று கிண்டலடித்தார் அன்வர்பாய்.
''சரி நான் அரசியல் மேட்டருக்கு வாறேன். பிரதமரை வரவேற்கப் போகாம முதல்வர் அப்படி பேசினது காங்கிரஸ் பிரமுகர்களை கொதிப்படைய வச்சிருக்காம்.நம்ப குடைச்சல்காரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'பிரதமரை முதல்வர் வரவேற்காம விட்டதைப் பற்றி கவலையில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் ரொம்ப லொள்ளு.பதிலுக்கு நாங்க செய்ய ஆரம்பிச்சா தாங்க மாட்டார்கள். எனக்கு முதலமைச்சர் பதவியெல்லாம் முக்கியமில்ல.தமிழ்தான் முக்கியம்னு கருணாநிதி தமிழ் வளர்க்க போனால் நன்றாக இருக்கும். ஒரு பிரதமரைவிட புலவர்தான் முக்கியம் என்று கூறிய உங்களுக்கு எதுக்கு அரசியல், அதிகாரம்? எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு அன்னைத் தமிழ் வளர்க்க போக வேண்டியதுதானேன்னு' காட்டமா கேட்டிருக்காரு. ஆயிரம் 'கை'கள் தடுத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை என்பது இளங்கோவனுக்குதான் பொருந்தும்'' என்று சிரித்தார் கோபால்.
"இன்னொரு குடைச்சலையும் சொல்றேன் கேளுங்க. பொங்கல் திருவிழாவுக்கான இலவச பொருட்களை வழங்கும் விழா பல்லாவரத்தில் நடந்தது.முதல்வர் கலந்துகிட்ட அந்த விழாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. யசோதா திமுகவின் சாதனைகளை சும்மா அள்ளிவிட்டார். இந்த அம்மாவுக்கு நம்ப கட்சியில எப்ப கொள்கை பரப்பு செயலாளர் பதவிய கொடுத்தோம்னு கலைஞருக்கே சந்தேகம். அப்படி புகழ் பாடினார் யசோதா. அடுத்து பேசவந்த கலைஞர் 'எங்க கட்சியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனே பெண் வேடமிட்டு வந்தது போல,இந்த அரசின் சாதனைகளை யசோதா எடுத்துச் சொன்னார். சொல்வார். எதிர்காலத்திலும் அதைச் சொல்வார்.இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவது சிலருடைய பழக்கம். ஆனால் பெண்களுக்கு அந்த மறதியில்லை. அப்படி அதை மறந்து பேசினால் அவர்கள் பெண்களே இல்லை' என்று எங்கேயோ தாக்கி பேசினார். ஆனால் அவர் பேசுவது சத்தியமாக ஜெயலலிதாவை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்''என்ற சுவருமுட்டியை இடைமறித்த சித்தன்"யோவ் யாரைச் சொன்னார்னு தெளிவா சொல்லேன்யா. தலை வெடிச்சுடும் போல இருக்கு" என்றார்.
''தலைவரு சுத்தி வளைச்சு சோனியாவைத்தான் அப்படி போட்டு தாக்கியிருக்காரு.'அன்னை'யோட கூட்டணி உறவுக்காக ஈழப் பிரச்னையில் ஒரு லட்சம் தமிழ் மக்கள் படுகொலையானது வரைக்கும் எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கோம். அதையெல்லாம் அம்மையார் மறந்துடக்கூடாது. அப்படி மறந்துட்டா அவர் பெண்ணே இல்லைன்னு சொல்றாரு. காங்கிரஸுக்காக வேண்டி வைகோ, சீமான், நெடுமாறன்னு பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ள வச்சேன்.அதையும் மறந்துடுவாய்ங்களா என்னன்னு கேட்கிறாரு.யாருக்கு புரியுதோ இல்லையோ அந்தம்மாவுக்கு புரியணும்னு சொல்றாரு. இதுக்கு மேலயும் கூட்டணி உறவை முறிச்சுகிட்டா என்னால தாங்க முடியாது. அழுதுடுவேன்னு மறைமுகமா அறிவுறுத்துறாரு. கலைஞர் சொல்லவந்த சேதி இதுதான்னு மூத்த காங்கிரஸ் ஆளுங்க நல்லாவே புரிஞ்சுகிட்டு 'அய்யோன்னு' சிரிக்குறாய்ங்க'' என்றார் சுவருமுட்டி..!
"சரி எம்புட்டு அடிச்சாலும் அசரமாட்டோம்னு சொல்ற சேதி தெரியுமா? ஸ்பெக்ட்ரம் ஊழல்னு சொல்லி என்னதான் சி.பி.ஐ.விசாரணை நடத்தினாலும்,குடைச்சல் கொடுத்தாலும் நாங்க அசரமாட்டடோம்னு நம்ப ஜகத் கஸ்பர் சொல்றாரு.அவரும் கனிமொழியம்மாவும் சேர்ந்து சங்கமம் விழாவை படு அமர்களமா நடத்தப் போறதா சொன்னாங்க. அதுக்கு நம்ப தமிழ்நாடு அரசும் சுற்றுலாத் துறை மூலமாக நான்கு கோடி ரூபாய் கொடுக்கப் போறதா பட்டைய கிளப்பினாங்க.கடந்த வருஷத்தைவிட இந்த வருஷம் இன்னும் சூப்பரா நடத்தப் போறம்னு பில்டப் பண்ணாங்க. ஆனா அதுக்கம் உலை வச்சுட்டாங்க நம்ப 'தமிழக மக்கள் உரிமை கழகத்தை' சேர்ந்தவங்க"- சித்தன்.
"ஏன் என்னாச்சு. அந்த சங்கமம் விழாவுல சி.பி.ஐ. ரெய்டு மாதிரியும் நடனம் ஆடச் சொல்றாங்களோ?"- முந்திக்கொண்டு கேட்டார் சுவருமுட்டி
''அப்படி ஆடச் சொன்னாலும் பரவாயில்ல. நல்லாவே ஆடிடுவாங்க. ஆனா விஷயமே வேற. பாதர் ஜகத் கஸ்பர் மேல ஸ்பெக்ட்ரம் ஊழல் கறை படிந்திருக்க அதனாலதான் சி.பி.ஐ வந்து ரெய்டு நடத்தியிருக்கு. அந்த விசாரணை இன்னும் முடியல.அதுக்கு முன்னாடியே அவர் தலைமையில் நடக்கிற சங்கமம் விழாவுக்கு அரசு பணத்தை நான்கு கோடியை தூக்கி கொடுக்கிறது தப்பு. அரசாங்கம் அப்படி செய்யக்கூடாதுன்னு சென்னை உயர் நீதிமன்றத்துல ஒரு வழக்கு போட்டிருக்காங்க. குற்றம் சுமத்தப்-பட்டிருக்கிற ஒரு நிறுவனம் நடத்துற விழாவுக்கு கெவர்மெண்ட் அவ்வளவு தொகையை கொடுக்கலாமான்னு பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கு. அது மட்டுமல்ல நம்ப மதுரைக்காரர் அழகிரி அண்ணன் இருக்காரு இல்ல. அவரும் கனிமொழி, ஜகத் கஸ்பருக்கு எதிரா கொடி பிடிக்கிறாரு. முதலில் ராசாவையும், கனிமொழியையும் கட்சியை விட்டு நீக்குங்கன்னு அடம் பிடிக்கிறாரு. இந்த லட்சணத்துல கனிமொழி முன்ன நிக்குற சங்கமம் விழாவுக்கு நான்கு கோடியை தூக்கி கொடுக்கிற தகவல் கிடைச்சதும் செம கடுப்புல இருக்கிறாரு" என்றார் சித்தன்.
"கடைசியா நான் ஒரு விஷயத்தை சொல்றேன். 'முதல் நாள் முறுக்கிக்கிட்டு தமிழ்தான் முக்கியம்ணு விமான நிலையம் போகாம அடுத்த நாள் கவர்னர் மாளிகைக்கு போய் பிரதமரை சந்தித்தார் கலைஞர்.அப்போ கூட்டணி பத்தி என்கிட்ட எதுவும் வேணாம் சாமி. அதை நீங்க சோனியா அம்மாகிட்டதான் பேசணும்னு கண்டிப்பா சொல்லிட்டாராம் பிரதமர்.பிறவுதான் வேற வழியில்லாம 'வெள்ள நிவாரண நிதி' பற்றி பேசிட்டு வந்தாரு. அப்படி வந்தப்போ வெளிய மீடியா ரொம்ப ஆவலா கேட்ட நினைச்ச 'திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவு' பற்றி கேட்டாங்க. அதுக்கு 'உங்களுக்கும் எனக்குமான உறவு எப்படியோ அப்படித்தான்'னு கலைஞரு பதில் சொன்னதுதான் பெரிய சிக்கலா இருக்கு.அதாவது பத்திரிகைகாரர்களுக்கும் அவருக்கும் அம்புட்டு நல்ல உறவாம். பிரிக்க முடியாத பிடிப்பாம். எந்த பத்திரிகைகாரனுக்கு, எந்த காலத்தில் அவரை பிடிச்சிருக்கு? அந்த மாதிரிதான் திமுக-காங்கிரஸ் உறவுன்னு சொல்லாம சொல்கிறாரோன்னு மீடியாக்காரர்களுக்கு குழப்பம். தெனமும் டாஸ்மாக் தண்ணி அடிக்கிற எனக்கே தலைசுத்திப் போச்சுது. பாவம் பத்திரிகைகாரர்கள் அந்த குழப்பத்தில் ரொம்ப நேரமா வழி தெரியாம கவர்னர் மாளிகையிலேயே சுத்திகிட்டு இருந்திருக்காங்க. இந்தப்பக்கம் என்னடான்னா அறிவியல் மாநாட்டுக்கு வந்த பிரதமர் 'திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்பவும் போல் உறுதியா இருக்குன்னு சொல்றாரு.என்ன மாதிரி உறுதின்னு நம்ப ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்-கிட்டதான் கேட்டு சொல்லணும்னு சொல்லாம சொல்றாரு போல. ஏம்பா சித்தா உனக்கு ஏதாவது புரியுதா..'' என்று அப்பாவியாக பார்த்தார் சுவருமுட்டி.!!
"உன் சந்தேகத்தை போக்க ஒரு அறிவிப்பு செய்யலாம் 'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் முதல்வர்- பத்திரிகையாளர்கள் உறவு எப்படின்னு சரியா சொல்றவங்களுக்கு ஆயிரம் திருவோடு பரிசா கொடுக்கப்படும். அடுத்ததா நம் ஜனங்களுக்கு அதுதான் டிமாண்ட் பொருளா இருக்கும். அதனால சரியான பதிலைச் சொல்லி இப்பேவே வாங்கி வச்சிக்கிடுங்கோ'ன்னு சொல்லிடலாம். இதோ சொல்லிட்டேன்..." என்றபடியே எழுந்தார். சபை கலைந்தது.
- பா.ஏகலைவன்.

http://www.kumudam.com/dotcom/muchandi/index.php?type=muchandi&pag=1

அனைவரும் அறியவேண்டிய மருத்துவ துணுக்குகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.



3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.


http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_4103.html?utm_source=BP_recent

தி மு க வில் உள்வீட்டு குழப்பம்.... வேடிக்கை பாருங்க.... !!!

இரண்டாக உடைகிறதா திமுக… ?



வெள்ளிக்கிழமை, 07 ஜனவரி 2011 07:03

திமுகவின் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2533551202_1bb302a3dd_b

திமுக என்றதும், ஏதோ மாவட்டச் செயலாளர்கள் யாராவது கலகம் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.

இது மாவட்டச் செயலாளர்கள் யாரும் செய்த கலகம் அல்ல. கழகம் என்றால் குடும்பம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். அந்தக் குடும்பத்தில் தான் இன்று கலகம் நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டின் கடைசி நாளில் தொடங்கிய அந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்த மாதம் 31 அன்று தொலைபேசியில் கருணாநிதியை அழைத்த அழகிரி, தனது கோபத்தையெல்லாம் கருணாநிதியிடம் கொட்டி விட்டு, ராசாவை திமுகவை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என்று தெளிவாக தெரிவித்து விட்டார். ஆனால் கருணாநிதி இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

கடந்த பதிவில் எழுதியிருந்தது போல, அழகிரி சென்னைக்கு வந்து கடந்த 3ம் தேதி, தனது தென் மண்டல செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.

அதற்கு முதல் நாள் கடும் குருட்சேத்திரம் நடந்திருக்கிறது சிஐடி காலனியில்.

“நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம், தேர்தல சந்திக்கிறோம். இங்க என்னடான்னா சென்னை சங்கமம்னு கூத்தடிச்சிகிட்டு இருக்காங்க. நம்ப குடும்பத்துக்கு வந்த எல்லா அவமானமும் அந்தக் குடும்பத்தாலதான். என்னை கட்த்ரோட் அரசியல்வாதின்னு ************* பேசறா…. அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்காம கம்முனு இருக்கார். இப்படியே போனா நாளை பின்ன என்னை எவன் மதிப்பான். இவரு என்னடான்னா அந்த வீட்லயே போய் உக்காந்துகிட்டு இருக்காரு… எம்பி பதவிய ராஜினாமா செய்யச் சொல்லுங்க. சங்கமத்த நிறுத்தச் சொல்லுங்க. நானா அந்தக் குடும்பமான்னு முடிவெடுக்கச் சொல்லுங்க…… “ என்று கடும் கோபத்துடன் பேசி விட்டு சென்றிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் கருணாநிதியிடம் சொல்லப் பட்டாலும், இறுக்கமாக இருந்த கருணாநிதி ஒன்றும் பதில் பேசவில்லை.

Karunaaaa

நேற்று கனிமொழி பிறந்தநாளுக்கு சிஐடி காலனி சென்ற கருணாநிதி, கனிமொழியிடம் காலையில் பேசி விட்டு, மீண்டும் இரவு பேசியிருக்கிறார்.

நேற்று தனது அமைச்சரவை சகா ஒருவருடன் நீண்ட நேரம் கருணாநிதி புலம்பியிருக்கிறார்.

“என்னய்யா நெனச்சுகிட்டிருக்கான் அவன்… அவன் இல்லன்னா ஒண்ணுமே பண்ண முடியாதா…. 62லேர்ந்து இந்தக் கட்சிய வளத்தவன்யா நானு…. அவன் இல்லன்னா தேர்தல சந்திக்க முடியாதுன்னு நெனைக்கிறானா அவன்….

அவனுக்கு என்னய்யா பண்ணல… ?

எலெக்ஷன்ல நிக்கனும்னான்…. எம்பி ஆக்கினேன். மந்திரி ஆகனும்னான். மந்திரி பதவி வாங்கிக் கொடுத்தேன்… கட்சிப் பதவி வேணும்னான். தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தேன்…. இப்ப என்னய்யா ஓவரா பேசறான்… இவன் சொல்ற ஆளையெல்லாம் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கட்சியை எப்படி நடத்துறது… ?

என்னமோ ரொம்ப பேசறானே….. இவன் மட்டும்தான் கட்சிய வளத்தானா… ? நான் வளக்கலியா…. நீ வளக்கலியா..? இவந்தான் கட்சி மாதிரி பேசறான்… ? “ என்று புலம்பியிருக்கிறார்.

சென்னை சங்கமம் விழா என்ன ஆனாலும் நடந்தே தீர வேண்டும் என்று உறுதியாக கருணாநிதி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

அடுத்த அதிர்ச்சிகரமான தகவல். கனிமொழிக்காக, அழகிரியை தியாகம் செய்ய கருணாநிதி துணிந்து விட்டார் என்பதுதான். ஆம் தோழர்களே…

2241493328_ebcf2d56eb_o

முந்தாநாள் பேராசிரியர் அன்பழகனை தொடர்பு கொண்ட கருணாநிதி, அழகிரியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொண்டதாக திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எப்போது கருணாநிதி கேட்டாலும் உடனடியாக கையெழுத்து போட்டுத் தரும் அன்பழகன், முதன் முறையாக “யோசித்துச் செய்யுங்கள்“ என்று கூறியிருக்கிறார். தான் நினைத்ததை நடத்தியே தீரும் பிடிவாத குணம் கொண்டவரான கருணாநிதி, துரைமுருகனை உடனடியாக வரச் சொல்லி, அன்பழகனை சந்தித்து, அழகிரியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் படி அன்பழகனை வற்புறுத்துமாறு கூறியுள்ளார். அதன் படி, அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு அன்பழகனை சந்தித்து விட்டு 11.30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்.

இது இப்படி இருக்க, அஞ்சா நெஞ்சன், தொடை தட்டிக் கொண்டு களமிறங்க தயாராகி வருகிறார். தனது ஆதரவாளர்களோடு தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் அவர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களோடு திமுகவை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்காக ஜனவரி 14 பொங்கல் வரை கெடு விதித்திருப்பதாகவும் அழகிரி கூறியிருக்கிறார். கனிமொழி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ராசா கட்சியை விட்டு நீக்கப் பட வேண்டும், சென்னை சங்கமம் ரத்து செய்யப் பட வேண்டும் என்ற தனது கோரிக்கையில் அழகிரி பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிகிறது.

azhagiri_stalin_mk_kanimozhi

கருணாநிதியும் அழகிரியும் ஆளுக்கு ஒரு பக்கம் தோள் தட்டி வரும் நிலையில், திமுகவில் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில், தான் இரண்டாவதாக திருமணம் செய்த லட்சுமி சிவபார்வதிக்காக, தான் உருவாக்கிய கட்சியான தெலுங்கு தேசம் தன் வாழ் நாளிலேயே இரண்டாக உடைந்ததை பார்த்தவர் என்.டி.ராமாராவ்.

அந்தக் காட்சியை இது நினைவுபடுத்தவில்லை ?

Karunanidhi_with_3rd_wife_Rajathi_Ammal_by_HKR

எது எப்படியோ, 2011 ஆண்டு அமர்க்களமாகத்தான் தொடங்கியிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி மரண ஓலமிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்காக போலித்தனமாக ஊளையிட்டுக் கொண்டே, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இந்தக் குடும்பம், இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாவது, சவுக்குக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே



தலையங்கம்: நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!



கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானபோது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்தவரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்று!

அவரைத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கியபோது, அட, நம்ம ஊர் ஆண்டிமுத்து ராசாவால் ஊழல் மயமாக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறையைச் சுத்தப்படுத்த ஒரு நேர்மையானவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், தவறுகள் நிறுத்தப்படும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்தது.

இப்போதல்லவா தெரிகிறது, ராஜிநாமா செய்த ஆ. ராசாவின் இடத்தில் அமர்த்த கபில் சிபலை ஏன் பிரதமர் தேர்ந்தெடுத்தார் என்று!

திறமையான வழக்குரைஞர்களின் பணி, தனது கட்சிக்காரர்களைத் தப்ப வைப்பது. சட்டத்தை வளைத்தும் நெளித்தும், புதுப்புது விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் முன்வைத்து குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுதான் என்பது தெரிந்த விஷயம். கபில் சிபல் இப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகச் செயல்படவில்லை. ஒரு வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் பத்திரிகைத் தொடர்பாளராகவும்தான் அமைச்சரவையில் செயல்படுகிறார் என்பதை அவரது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தெளிவாக்கி இருக்கிறது.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை முற்றிலும் தவறான அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இப்போது பதவி வகிக்கும் வழக்குரைஞர் கபில் சிபலின் கருத்து. அதாவது, முறையாகத் தணிக்கை செய்து அதன் அடிப்படையில் ஓர் அரசியல் சட்ட அமைப்பு தாக்கல் செய்திருக்கும் அறிக்கை முழுமையாகத் தவறானது என்கிற வாதத்தை ஓர் அமைச்சர், பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்பது இப்போது நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான ஒன்று. அதை விவாதிக்கவோ, குறைகூறவோ, நிராகரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் முன் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ஆஜராகித் தனது கருத்துகளை ஏற்கெனவே கூறிவிட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது செயல்பாடுகள் பற்றியோ, அறிக்கை பற்றியோ சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசுவதோ, குறைகூறுவதோ அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல் என்பதுகூடவா, மெத்தப் படித்த அமைச்சர் கபில் சிபலுக்குப் புரியாமல் போனது.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி, ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது இரண்டாவது தலைமுறை (2ஜி) அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட 122 உரிமங்களாலும், 35 இரட்டைத் தொழில்நுட்ப உரிமங்களாலும் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் "உத்தேச' இழப்பு ரூ. 1,76,645 கோடி. இந்த இழப்பு, கடந்த ஆண்டு நடந்த மூன்றாவது தலைமுறை அலைக்கற்றை உரிம விற்பனையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வதுபோல, அமைச்சர் கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவே இல்லை என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தவறான அறிக்கையால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறுகிறார். அதேநேரத்தில், சில நடைமுறைத் தவறுகள் நடந்திருப்பதாக ஒத்துக்கொண்டும் இருக்கிறார்.

அது என்ன நடைமுறைத் தவறு? ஒருசிலருக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தந்து உரிமத்தைக் குறைந்த விலையில் பெற்று மிக அதிகமான விலைக்கு விற்று கோடி கோடியாகச் சம்பாதிக்க வாய்ப்பளித்ததுதான் அந்த நடைமுறைத் தவறு. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த மிகப்பெரிய மோசடியே அதுதானே. அதை ஏற்றுக்கொண்ட பிறகு, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அது வழக்குரைஞரின் விதண்டாவாதமாக இருக்கிறதே தவிர, ஒரு பொறுப்பான அமைச்சரின் விளக்கமாக இல்லை.

நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் விசாரணை நடந்துவரும் நேரத்தில் அமைச்சர் கபில் சிபல் இப்படிப் பேசவேண்டிய அவசியம் என்ன என்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் டி.ராஜாவின் கேள்விக்கும், இதுபோன்று அரசியல் சட்ட அமைப்பான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியைத் குற்றப்படுத்துவதன் மூலம் நடைபெற்று வரும் பல விசாரணைகளில் அதிகாரிகள் முறையாகத் தகவல்களைத் தராமல் தடுக்க அமைச்சர் உதவுகிறார் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டனத்திலும் நியாயம் தெரிகிறது.

அமைச்சர் கபில் சிபலின் பத்திரிகை நிருபர்களிடமான பேச்சு இடதுசாரிக் கட்சிகளும், பாரதிய ஜனதா கட்சியும் கோருகிற நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கான அவசியத்தை மேலும் அதிகரிக்கிறது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கபில் சிபல் பேசியிருக்க முடியாது. அப்படியானால், காங்கிரஸ் தலைமை முறைகேடாக உரிமம் பெற்று கோடிகளில் லாபத்தை அள்ளிக் குவித்த கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா?

சில நாள்களுக்கு முன்னர்தான் இதே கபில் சிபல் - பாஜக கூட்டணியில் 1999-ல் இருந்து பின்பற்றப்பட்ட "முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' கொள்கையால் ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு என்று கண்டுபிடித்து கூறியிருந்தார். அந்த நஷ்டம் ஆ. ராசா நடவடிக்கையில் லாபமானது என்கிறாரா அவர்? "நரி'யைப் "பரி'யாக்கிய கதையாக அல்லவா இருக்கிறது இது!

Sunday, January 9, 2011

இங்கே ஏன் கலைஞர் இல்லை ?

எங்கும் கலைஞர்
எதிலும் கலைஞர்
கலைஞர் புகைப்படம் இல்லாத
அரசு தொடர்புடைய எதுவுமே இல்லை
அரசு பஸ்களில் – கேலண்டர்களில் -
பாடபுத்தகங்களில் -
ரேஷன் கடைப் பொட்டலங்களில் -

ஏன் இலவச சர்க்கரைப் பொங்கல் பைகளில் கூட -
கருப்புக் கண்ணாடியுடன் கலைஞர்
சிரித்துக் கொண்டே உங்களைப்
பார்த்துக் கொண்டிருப்பார் !

ஒரே ஒரு அரசு சார்ந்த இடத்தில்
மட்டும் கலைஞரைக் காணவில்லை !
அடுக்குமா இந்த ஓரவஞ்சனை !!

என்ன பாவம் செய்தன
டாஸ்மாக் கடைகளும் -
சாராய பாட்டில்களும் !

http://vimarisanam.wordpress.com/2011/01/06/