Sunday, February 23, 2014

நல்லா கேட்டுக்கோங்க ...நான் தான் ஒரிஜினல் டீ கடைக்காரன் - புண்ணாக்கின் பிதற்றல் !


மோடிக்கு போட்டியாக டீக்கடைகளை திறந்த லாலு

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியின், டீக்கடை விவாதங்களுக்கு போட்டியாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத்தும், பீகாரின் பல நகரங்களில், டீக்கடைகளை துவக்கியுள்ளார்.

நரேந்திர மோடி, துவக்கத்தில், டீக்கடை வைத்திருந்தார். அதை, காங்கிரஸ் ஏளனமாக கூறியதால், அதையே தங்கள் பிரசார ஆயுதமாக, பா.ஜ., மாற்றியது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான டீக்கடைகள், நரேந்திர மோடி பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில், டீக்கடை விவாதங்களை, மோடி நடத்தி வருகிறார். இதனால், அவருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

இதை அறிந்த லாலு பிரசாத், 'மோடி, தன்னை டீக்கடைக்காரர் என சொல்வது பொய். நான் தான் உண்மையான, டீக்கடைக்காரன். சிறு வயதில், பாட்னாவில், டீக்கடை நடத்தியுள்ளேன்' என்றார். மேலும், 'லாலு சாய் துகான்' என்ற பெயரில், பீகாரின் சில நகரங்களில், டீக்கடைகளை, அவரின் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக டீக்கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக டீ கொடுக்கப்படுகிறது. கூடவே, பிஸ்கட்டும் தரப்படுகிறது. அத்துடன், லாலு தான், உண்மையான டீக்கடைக்காரர் என, அவர் கட்சியினர், பொதுமக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.

இதற்கான பொறுப்புகளை ஏற்று நடத்தி வரும், லாலு கட்சி பிரமுகர், இக்பால் ஷாமி கூறும் போது, 
''முதற்கட்டமாக, மிதிலாஞ்சல், சமஸ்திபூர் போன்ற இடங்களில், டீக்கடைகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில், பல கிராமங்களிலும், லாலு டீக்கடை துவக்கப்படும். இந்த கடைகள், மோடி, பீகாருக்கு, தேர்தல் பிரசாரத்திற்கு வரும், மார்ச், 3ம் தேதி வரை நடத்தப்படும்,'' என்றார். 


இதை, பீகார் மாநில, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, சுஷில்குமார் மோடி கிண்டலடித்துள்ளார். ''மோடிக்கு எதிரான லாலுவின் இந்த கோமாளித்தனத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,'' என, அவர் கூறியுள்ளார்.


இந்த ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகர் - ஆஸ்கார் விருது பெரும் லாலு !!!


நான் தான் உண்மையான டீ வியாபாரி :சொல்கிறார் லாலு

பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும், 300 நகரங்களில் ஆயிரம் டீக்கடையில் டி.விக்களை அமைத்து பொதுமக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடும் பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளார். இது குறித்து, ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: 

நான் சிறுவயதில் கால்நடைக் கல்லூரியில் இருந்த போலீஸ் குடியிருப்பில் எனது மூத்த சகோதரருடன் சேர்ந்து டீ விற்பனை செய்துள்ளேன். மேலும், படிக்கும் காலங்களில் பிஸ்கட்களையும், டீயும் விற்பனை செய்துள்ளேன். நான்தான் உண்மையான டீ வியாபாரி. எப்போதும் எனது சிறுவயது நாட்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை’ என்று கூறினார். மேலும், மோடி எப்படி டீ விற்பனை செய்ய முடியும். ரத்தங்களையும், கலவரங்களையும்தான் விற்பனை செய்ய முடியும் என்று கடுமையாக தாக்கினார். 

கலவரம் நடந்த முஷாபர் நகரில் மார்ச் 3ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடியின் பேரணிக்கு இணையாக ராஷ்டீரிய ஜனதா தளமும் பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நமோ டீ கடை பிரசாரம் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வரும் பா.ஜ.வைப் பார்த்து மற்ற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை எப்படி நடத்துவது என்று இப்போது ஆலோசித்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=124#sthash.s2kgG9QD.dpuf

தொங்கு பாராளுமன்றமா ??? நோ சான்ஸ் > தொங்கு காங்கிரஸ் மட்டுமே வரலாறு கூறவிருக்கும் உண்மை !


தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி !

தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி 
புதுடெல்ல: இந்த மக்களவை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற கணிப்புகள் உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை. 

தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரையில் இல்லாத அளவுக்கு பா.ஜ. கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். தவறான நிர்வாகம், ஊழல் ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணயில் மலிந்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய அத்வானி, சுதந்திர இந்தியாவில் இதுவரையில் எந்த ஒரு தேசிய கட்சியும் பெறாத அளவுக்கு அதிக தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கூறப்பபடுவதை நிராகரித்தார். 

நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நாடு முழுவதும் பா.ஜ.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இந்த அளவுக்கு இதற்கு முன்பு கட்சிக்கு ஆதரவை இருந்ததை தான் பார்க்கவில்லை என்றும் அத்வானி குறிப்பிட்டார். பா.ஜ.வுக்கு ஆதரவான அலையும் காங்கிரசுக்கு எதிரான மோசமான நிலைமையும் உள்ளது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். இதற்கு முன்பு அது இந்த அளவுக்கு தோற்றது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் தோல்வி இருக்கும். இது வரலாற்றிலும் இடம்பெறும். 

தவறான நிர்வாகம், பெருமளவில் ஊழல், அரசின் பிற்போக்கான கொள்கைகள் ஆகியவையே இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை கொண்டு சென்றுள்ளது என்றார். டெல்லியில் பா.ஜ. கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அத்வானி பேட்டியளித்தார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜிம் உடன் இருந் தார்.

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=150#sthash.s1Gw7HSC.dpuf

பிஜேபி - யின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: ந-மோ தலைமையில் அரசு அமைவது உறுதி


கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்: பா.ஜ. கூட்டணி 236 ;காங்கிரஸ் கூட்டணி 92 

ஏப்ரல்  மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றிய கருத்துக்கணிப்பை ஏபிபி நியூஸ் மற்றும் ஏசி நீல்சன் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

நாடு முழுவதும் பரவலாக பா.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 236 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 92 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ. கட்சி மட்டுமே 217 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட இந்த முறை கூடுதல் இடங்களில் பா.ஜ. வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 92 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், அதற்கு மக்களிடம் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியைத் தவிர்த்து காங்கிரஸ் மட்டும் 73 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைவிட இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் நிலைக்கு இடதுசாரிகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதாவது 29 இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், திமுக, அதிமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் மொத்தம் 186 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தலா 88 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேபோல், தெற்கில் 21 தொகுதிகளிலும் கிழக்கில் 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வடக்கில் 23 தொகுதிகளிலும் மேற்கில் 22 தொகுதிகளிலும் தெற்கில் 26 தொகுதிகளிலும் கிழக்கில் 21 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 


இந்த கருத்துக்கணிப்பில் பா.ஜ. தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட 36 இடங்கள்தான் குறைவாக உள்ளன. மக்களவையில் மொத்த இடங்கள் 543. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 272 இடங்கள். 

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=163#sthash.COjvYtG9.dpuf

Saturday, February 22, 2014

Is Arvind Kejriwal an American Agent???


Ford Foundation, Hivos, Panos and Dutch Embassy- Is Kejariwal an American agent?

Thirteen Questions for Mr. Chameleon Kejariwal:

When was the “ Sampoorna Parivartan” registered and what is the registration number and other details of the NGO?

When was ‘Parivartan’ created out of Sampoorna Parivartana? Is it true that Sampporna Parivartan was given a grant of 85000 dollars by Ford Foundation in 2002 and only on aspect of looting money , different groups were created?

Is it true that you continue to claim the legal status of Parivartan as follow: “Parivartan is not registered under any Act as a society or a trust or a Company. It is a people’s movement. For Income Tax purposes, it is an Association of Persons.”

Is it true that you advertised through various medium in June 2002 that “All donations made to Parivartan are tax exempt under section 80 G. Parivartan is also registered under section 12A of Income Tax Act. “? Is this not misleading information aimed to dupe Samaritans?

Did you receive funds from the World bank for your campaign of Jan Sunvai in Delhi under the banner of Parivartan? When Parivartan was not registered, how was the fund routed?

Is it true that the World Bank featured the insignificant work of Parivartan in their Report ,”Social Accountability Stocktaking Exercise for South and East Asia. Washington, DC: World Bank Institute. (2005)(pp.30-32)http://www.worldbank...se studies on s

Is it true that you were selected for the Magsaysay Award only after featuring in this World Bank report ?Is it also true that Narayan Murthy, the INFOSYS Chief is a Trustee of Ford Foundation and pushed for your award?

Is it true that in your biography as prepared by the Ramon Magsaysay Foundation, the first reference has been made to the CIA(Central intelligence of America)?Is it a mere coincidence or Freudian slippage that reveals the true character?

Is it true that a New York university researcher Shimrit Lee worked with your organization, Kabeer in 2009-10 and advised you for launching a Colour Revolution kind of political mobilization in India? Is it true that subsequently she went to Egypt and witnessed the Tahrir uprising?Is it also true that she advised in 2010 for public protest in India and creation of mohalla and gram sabhas? Did you seek clearance from Home Ministry for hosting a suspicious researcher who has been active in the Middle east, Chad in Africa, required as per law of the land?

Is it true that you represented Sampoorna Parivartan NGO and the Secretary of the NGO that you had founded worked in the Commission Advisory Committee of the Delhi Electricity Regulatory Commission constituted vide the NOTIFICATION No. F.1(135)/DERC/2000-01/5092 Delhi, the 27th March, 2003 and therefore you bear the sole responsibility for the crisis in Delhi caused by power hike and installation of faulty metres?

Is it true that you talk about transparency but shut down the website of both Parivartan and Kabir when the same came under scrutiny in 2012?

Is it true that synchronous with your action in concealing the issue of dubious foreign funding for ulterior political motives, the Ford Foundation has also hidden all the details about funding to Kabir when this blog post appeared in October 2012 and was widely attracting the attention of patriotic Indians, thereby pointing to your complicity with dubious foreign organizations?

Is it true that you sought funds from foreign embassies, including that of Dutch Embassy even after being aware that all Dutch funding to Indian NGOs was stopped for many years after 2002 since those funds percolated to anti-national forces as per government reports?

http://www.nandamurifans.com/forum/index.php?/topic/261607-is-arvind-khejriwal-an-american-agent/

Friday, February 21, 2014

வீரத்துறவி விவேகானந்தர்

கலங்கிய வீரத்துறவி! 



“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?
ஜன., 12,1863ல் மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண் டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித் தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக் கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த தேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடக்க காரணம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரிமுனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.
“அம்மா, மகாசக்தி! நீ இமயத் தில் பார்வதியாய் இருக்கிறாய்; இங்கே பகவதியாய் வீற்றிருக் கிறாய். கன்னியாக இருந்தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர் களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக் கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையிட்டார்.
தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக் கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந் தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவரது கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிகளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங் களும், ஆகமங்களும், புராணங் களும், சித்தாத்தங்களும் இருப்பது தெரிந்தது.
ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன்மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிகமே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.
அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித் தால் எடுபடாதே! அவனது பசியைப் போக்கிவிட்டு, ஆன்மிகத் தைப் போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசியைப் போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம் வேண்டுமே! அப்போது தான் அவரது கண்கள் கலங்கின.
அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்தப் பார்வை அமெரிக்காவைக் காட் டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்துமத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமது கருத்துக் களை ஏற்கும் வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவ வேண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
குமரியில் பிறந்த இந்த சிந் தனை பெரும் சிரமத்தின் பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.
இந்த அரிய சாதனையைப் படைத்த விவேகானந்தருக்கு அவரது 107வது நினைவுநாளில் வீர அஞ்சலி செலுத்துவோம்.
http://senthilvayal.com/2009/07/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/

Wish you all a funny week-end >>> refresh your mind reading once again the comedy show of Prince Charles


Arnab: Do you believe Congressmen were involved.
Rahul: Innocent people died.

Arnab: How is Modi to be blamed for 2002 after SIT gave clean chit?
Rahul: We believe in empowering women.

Arnab: But your party continues to blame Modi.
Rahul: The real issue is empowering women.

Arnab: Why are you still protecting Ashok Chavan?
Rahul: We brought RTI.

Arnab: Is it appropriate of Virbhadra Singh to take money?
Rahul: There is a legal process. We have passed Lokpal.

Arnab: What about inflation?
Rahul: Women are the backbone of the country.

Arnab: What is your opinion on apples?
Rahul: The problem in this country lies with oranges.

Arnab: Will you apologize for 1984?
Rahul: I like kababs

Arnab: Why were you silent during the scams?
Rahul: Mongolia’s capital is called Ulan Bator

Thanks to Prajwal, my facebook friend (I copied from his wall). It was so funny that I thought its good to share with other people who want qa reason to laugh:D

- See more at: http://www.padhokhelo.com/funny-conversation-national-kid-rahul-grill-in-chief-arnab/#sthash.IrnAG0Lz.dpuf