Saturday, March 26, 2011

அப்போது ராடியா; இப்போது கபூர்!


ஆட்சியை கைப்பற்ற தேர்தலில் லஞ்சம் கொடுப்பது ஒரு வகை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கே லஞ்சம் கொடுப்பது மற்றொரு வகை. முதல்வகையில் பயனாளிகள் பொதுமக்கள். இதில் சில ஆயிரங்கள் மட்டுமே வீசப்படும். இரண்டாம் வகையில் பயனாளிகள் எம்.பி.,க்கள். தொகையும் அதிகம். அதாவது சில, பல கோடிகள். அதுவும் கட்டுக்கட்டாக பணம் காட்டப்பட்டு வலைவீசப்படும்.

இந்த உலகத்திற்கே பெரும் நல்ல காரியம் செய்து வரும் விக்கிலீக்ஸ், மன்மோகனின் கடந்த ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற ஏமாற்றுவேலையின் பின்னால் எப்படியெல்லாம் எம்.பி.,க்கள் விலைபேசப்பட்டனர் என்ற நாற்றத்தை நாட்டுக்கு சொல்லியுள்ளது.

கேப்டன் சதீஷ் சர்மா என்பவரும் அவரது உதவியாளர் நச்சிகேதா கபூர் என்பவரும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை அழைத்து, ‘‘பாருங்கள்...’’ என்கின்றனர். கத்தை கத்தையாக பணம். ‘‘எதற்கு இந்த பணம் எல்லாம்?’’ என அதிகாரி கேட்கிறார். ‘‘கவலைப்படாதீர்கள்.. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும். எப்பாடுபட்டாவது அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்’’ என்கிறார் சர்மா. அந்த அதிகாரி இந்த தகவல்களை எல்லாம் வாஷிங்டனில் இருக்கும் தனது எஜமானர்களுக்கு அனுப்புகிறார். இதுதான் கேபிளில் உள்ளது.

சரி. சதீஷ் சர்மா யார்? ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் டூன் ஸ்கூலில் ராஜிவ் காந்தியோடு ஒன்றாக படித்தவர். இந்த நெருக்கத்தை வைத்தே காங்கிரஸ் வளர்ந்தவர். அதன்பிறகும் நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1993 லிருந்து 1996 வரை மத்திய அரசில் பெட்ரோலியத்துறைக்கு மந்திரியாக இருந்தவர். ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை... என நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நிறைய எம்.பி.,க்களுக்கு பெட்ரோல் பங்க் அனுமதி, கேஸ் ஏஜென்சி என அள்ளி வழங்கியவர். தமிழ்நாட்டில்கூட பல காங்கிரஸ்காரர்கள் இன்றைக்கும்கூட பெட்ரோல்பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் என வைத்து ஜாம் ஜாம் என கொழித்துக் கிடக்கின்றனர் என்றால் அது, அந்த காலத்தில் இவர் செய்த புண்ணியத்தில்தான் என்பது பலரும் அறியப்படாத செய்தி.

இந்த சர்மாவிடம் அரசியல் எடுபிடியாக இருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ள நச்சிகேதா கபூர் யார்? டெல்லியின் அதிகார வட்டாரங்களில் உலா வரும் பல ‘எடுப்பு’களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். காங்கிரசில் உள்ள பிரபல பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், அதிரடியான ஆளாகவும் கருதப்படுபவர் ரேணுகா சவுத்ரி. இவருடன்தான் இந்த கபூர் வளைய வந்தார். முந்தைய ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேணுகா பொறுப்பேற்றபோது அவருடனேயே அமைச்சகத்துக்குள்ளும் வந்துவிட ஆசைப்பட்டார். அதாவது அமைச்-சரின் சிறப்பு அதிகாரியாக கபூரை நியமிக்க ரேணுகா முயற்சி செய்ய, அதற்கு மத்திய அமைச்சரவை செயலகம் முட்டுக்கட்டை போட்டு-விட்டது. எந்தவொரு முக்கிய அலுவல்-களும் இவருக்கு அளிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்-கப்பட்டுவிட்டது. ஆனாலும் அறிவிக்-கப்படாத உதவி அதிகாரியாக வளைய வந்துள்ளார்.

அந்த அதிகார பவுஸை கொண்டுதான் இவர் அடிக்கடி பார்ட்டிகளை வைத்துள்ளார். அந்த பார்ட்டிகளில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்-தர்களும் பலமுறை பங்கேற்-றுள்ளனர். அப்போதே கபூரின் செயல்-பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

2009&ம் ஆண்டு தேர்தலில் ரேணுகா சவுத்ரி தோற்றுப் போய் விட்டதால் அமைச்சராக முடியவில்லை. இதனால் கபூரின் நிலைமை கேள்விக்-குறியானது. அப்போதுதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ரேணுகா இருந்த அமைச்சகத்தை விட்டு வெளியேறியபோது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து சில முக்கிய தகவல்களை அழித்துவிடும்படி கீழ்நிலை பணியாளர் ஒருவரை கபூர் மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கும் ஆளானார். தவிர இவரது கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க்கே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமைச்சகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். கூட போடப்பட்டது.

இதற்கிடையில், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கவே, அதில் அடைக்கலம் புகுந்தார் கபூர். 2009 ஜுலையில் ஆர்கனைசிங் கமிட்டி டைரக்டராக சேர்ந்துள்ளார். பிறகு 2010 பிப்ரவரியில் புரோட்டோகால் மற்றும் மீடியா தொடர்பு பிரிவிற்கு டெபுடி டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கப் பெற்றுள்ளார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய்.

தற்போது குடையோ குடையென குடைந்து வரும் சுரேஷ் கல்மாடிக்கு மிகவும் நெருக்கமாகவும் இந்த கபூர் இருந்துள்ளார். இவருடன் பணியாற்ற முடியாது என்று பல மூத்த அரசு அதிகாரிகள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். கபூரின் வரம்புமீறிய செயல்பாடுகளை கல்மாடியாலேயே நிறுத்த முடியாதநிலை கூட ஏற்பட்டது. இதனால் ஒரு சில அதிகாரிகளே கூட தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறவும் செய்துள்ளனர்.

இத்தனை சக்தி வாய்ந்தவரா கபூர் என்று கேட்பதற்கு முன் இன்னும் ஒரு கூடுதல் தகவல். இவரது கல்வி தகுதி என்ன என்பது பற்றி ஆராய்ந்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் பலருக்கும் ஏற்படுகிறது. காமன்வெல்த் ஆர்கனைசிங் கமிட்டிக்கு இவர் அளித்த ஆவணங்களின்படி பி.ஏ. (ஹானர்ஸ்) படித்தவர். ஆனால் இவர் இணைத்து அளித்ததோ டெல்லி பல்கலைக்கழக ரெகுலர் பி.ஏ. டிகிரி சான்றிதழ். அதில் எந்த காலேஜ் அல்லது எந்த கோர்ஸ் என்பது பற்றியோ விவரம் ஏதும் இல்லையாம்.

இவர் என்னதான் படித்தவர் என்று தெரிய, முகமது யூனுஸ் சித்திக் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டபோது அதிகாரிகளால் தகவல் தர இயலவில்லை. கபூர் வெறும் பத்தாம் கிளாஸ் படித்தவர். அதில் கூட அவர் பெயில் ஆனவர் என்று கூறும் சித்திக், இதுகுறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். போர்ஜரி சான்றிதழ்களை காட்டி உயர் அதிகார வளையம் வரை நுழைந்துள்ள இந்த கபூர் பற்றிதான் விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ளது. எம்.பி.,க்களை விலைபேசும் காரியங்களில் ஈடுபட்டதாக இந்த இருவர் மீதும் எழுந்துள்ள சர்ச்சை இப்போது அடங்காது போல தெரிகிறது. எப்படியோ மன்மோகன் ஆட்சி என்பது புரோக்கர்களின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு ராடியா இப்போது கபூர்!

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2587&rid=113












‘‘இதுதான் தி.மு.க.வின் சாதனையா?’’

உறவுகளை இழந்த விஜயலட்சுமியின் சென்ட்டிமென்ட் பிரசாரம்



சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்போம் என தி.மு.க.வினர் புறப்பட்டிருக்கும் நிலையில்... ‘‘என் குடும்பத்தில் ஒருத்தர் கூட இல்லாமல் மொத்தபேரையும் குத்திக் குதறி கொன்று போட்டீர்களே..? இதுதான் உங்கள் சாதனையா?’’ என்று மேடை போட்டு பேசத் தயாராகிவிட்டார் விஜயலட்சுமி.

யார் இந்த விஜயலட்சுமி?

கடந்த வருடம் ஆகஸ்ட் 12&ம் தேதி சேலம் சீல்நாயக்கன்பட்டியில் 78 வயதான ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது மனைவி சந்திரம்மாள், மகன் ரத்தினம், மருமகள் சந்தானலட்சுமி, பேரன் கௌதம், 12 வயதே ஆன பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் சொத்துத் தகராறில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட குப்புராஜின் மகள்தான் இப்போது நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கும் விஜயலட்சுமி.

சொத்துக்காக நடந்த இந்த கொலையில் தொடர்பிருப்பதாக அமைச்சர் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்ப்பட்டதும்... அவரை சிறைக்கே சென்று வீரபாண்டியார் பார்த்துவிட்டு வந்ததும் ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பின.

இந்த நிலையில்... கொலை செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சுமி, ஆரம்பம் முதலே ஆறு பேர் கொலை விஷயத்தில் தீவிர எதிர்ப்பு காட்டி வந்த பி.ஜே.பி. வக்கீல் மணிகண்டன் ஆகியோர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

‘அடுத்தது அ.தி.மு.க-. ஆட்சிதான். உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்’ என்று ஜெயலலிதா தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து, ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியை சேலத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சொல்வேன்’ என்று புறப்பட்டிருக்கிறார் விஜியலட்சுமி.

அவரிடம் பேசினோம்.

‘‘எங்கள் குடும்பத்து நபர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதையும், அதில் சேலம் தி.மு.க. கட்சி ஆட்கள் தலையீடு இருப்பதையும் அம்மாவிடம் சொன்னபோது கலங்கிப் போனார். ‘உங்களுக்கு நியாயம் கிடைக்க என் ஆதரவு உறுதி’ என்று சொல்லி எங்களை ஆறுதல் படுத்தினார். இன்று நான் சொந்த, பந்தங்களை பலி கொடுத்துவிட்டு அநாதையாக நிற்பதற்கு தி.மு.க ஆட்சியும், அதன் ஆட்களும்தான் காரணம். அதற்காகத்தான் இத்தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் சேலத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வேன். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில் என் குடும்பத்துக்கு நடந்த கொடுமையை அதிகமாக பரப்புரை செய்வேன். அம்மா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தி.மு.க. ஆட்சியால் எனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளேன். அம்மாவை சந்தித்துவிட்டு வந்ததையடுத்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சேலம் மாவட்ட தி.மு.க.வினர்தான் காரணம்’’ என்றார் உருக்கமாக.

வக்கீல் மணிகண்டனிடம் பேசினோம்.

‘‘ எனக்கும் செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதிலை. சேலத்தில் அமைச்சர் வீரபாண்டியார் பலப்பல கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார். இதெல்லாம் நியாயமாக சேர்த்த சொத்தா? இல்லை. பல பேரை மிரட்டி சம்பாதித்த சொத்து. இதை அம்மா ஆணைப்படி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மனதில் படும்படி சொல்வேன். சொத்துக்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த தி.மு.க. நிர்வாகிகள் அட்டூழியத்தை எடுத்துச் சொல்வேன்.

ஆரம்பத்தில் சரியாக சென்றுகொண்டிருந்த கொலை வழக்கு, இன்று செயலிழந்துவிட்டது. சி.பி.சி.ஐ.டி. ஏதோ வழக்குத் தொடுத்து விட்டோமே என்ற நினைப்பில்தான் விசாரித்து வருகிறது. உண்மையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அடாவடி, அராஜகம், ஏமாற்றுல், பித்தலாட்டம், ரவுடித்தனம் இதுதான் தி.மு.க. ஆட்சியில் சேலத்தில் நடந்தது. ஆறு பேர் கொலை வழக்கு பற்றிய அத்தனை கொடூரமான விஷயங்களையும் சேலம் தொகுதிக்குட்பட்ட மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வேன். இதுதான் அம்மா எனக்களித்த வேலை.

தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அத்தனை தொகுதி-களிலும் படுதோல்வி அடைய எங்களது ‘ஆறு பேர் கொலை’ பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போகிறோம். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரியில் இந்தக் கொடூரத்தைப் பற்றி வீட்டுக்கு வீடு எடுத்து சொல்லி அவரை தோல்வியடையச் செய்வோம்’’ என்றார் உறுதியாய்.

இதுபற்றி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஏற்கனவே இந்த விஷயத்தில் நாங்கள் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதைக்கண்டு பயந்துதான் அமைச்சர் வீரபாண்டியார் சங்ககிரிக்கு மாறிவிட்டார்’’ என்றார் உற்சாகமாய்.

அ.தி.மு.க. பிரசார வியூகத்தைப் பற்றி சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்திடம் பேசியபோது, ‘‘எதைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. கலைஞரின் நல்லாட்சி திட்டங்கள் எங்களது வெற்றியை எப்பொழுதோ எளிதாக்கிவிட்டது’’ என்றார் போல்டாக.

ஆனாலும், ‘‘ஜாமீனில் வெளிவந்திருக்கும் பாரப்பட்டி சுரேஷை தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டங்களில் தலைகாட்ட வேண்டாம் என்று அமைச்சரே உத்தரவிட்டிருக்கிறார். பிரசாரத்தில் சுரேஷ் இருந்தால் அதை வைத்தே அ.தி.மு.க. எங்கள் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிவிடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்’’ என்கிறார்கள் தி.மு.க.வினர்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2577&rid=113

பட மோசடியில் கருணாநிதி - ஜெயலலிதா குற்றச்சாட்டு !




தவறு என நான் சுட்டியதை மறுக்க, பிழையான படமொன்றைக் காட்டி தமிழக முதல்வர் கருணாநிதி மோசடி செய்துள்ளார் என எதிர்கட்சித்தலைவர் செல்வி: ஜெ.ஜெயலிலதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நான் வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத் தலைவர் மறுக்கிறார் என்று 13.1.2010 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, சப்பைக்கட்டும் வகையில் ஓர் அறிக்கையை கருணாநிதி வெளியிட்ட கருணாநிதி, தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படத்தை வெளியிட வைத்துள்ளார்.

20.1.2010 தேதியிட்ட 'மாலை மலர்' நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'டெக்கான் கிரானிக்கல்' போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ் சிவப்பு. ஆனால், 11.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன். நான் அன்று சட்டமன்றத்தில் பேசிய காட்சிகள் அனைத்துத் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

சட்டமன்றப் பேரவையின் மூலம் தான் என்னுடைய பேச்சுக்கள் அடங்கிய உரை தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால், நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாகத் தெரியும். அனைத்து நாளிதழ்களிலும் புகைப்படம் வெளியானது. கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

11.1.2010 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான் பேரவைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என்னுடைய குற்றச்சாட்டு. இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்த போது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். 8.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது கூட பேரவைத் தலைவருக்கு நான் வணக்கம் தெரிவித்த போது, அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக பேரவைத் தலைவரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் 11.1.2010 அன்று நான் வணக்கம் தெரிவித்தபோது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். 8.1.2010 அன்று நான் சட்டமன்ற பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம். இது மிகப் பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார்.

இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. பத்திரிகைகளுக்கு வண்ணப் படத்தைக் கொடுத்து மாட்டிக் கொண்டுவிட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும். இது போன்ற அற்ப விஷயங்களில் கூட மோசடி செய்து பொய் சொல்லும் முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறாரே என்று நினைத்து தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5130-2010-01-21-22-00-05

காக்க காக்க கனிமொழியை காக்க….. நோக்க நோக்க திஹாரை நோக்க






பக்திப் பரவசமான தலைப்பாக இருக்கிறது என்றுதானே பார்க்கிறீர்கள். இந்தத் தலைப்பின் முதல் பாதியை முணுமுணுத்துக் கொண்டிருப்பது, கருணாநிதியின் குடும்பத்தார். திடீரென்று அத்தனை பேருக்கும் பகுத்தறிவு வேஷத்தைத் தாண்டியும், பக்தி பீறிட்டுக் கொண்டு வருகிறது.

கடந்த வாரம், சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி சிபிஐ உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழி, மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் பெயர்கள் இடம் பெறும் என்று, நேற்று ஹெட்லைன்ஸ் டுடே செய்தி வெளியிட்டது.

நேற்றைய நாளேடுகளில் வெளி வந்திருக்கும் செய்தியோ, கலைஞர் டிவி எம்டி சரத்குமார் பெயர் மட்டும் தான் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறும் என்று தெரிவிக்கின்றது. கலைஞர் டிவியில், சரத் குமார் ஒரு சாதாரண வேலையாள். ஊழியர். 20 சதவிகித பங்கை வைத்திருப்பதாலேயே, கலைஞர் டிவியில் எல்லா முடிவுகளையும் அவர் எடுப்பார் என்று கூற முடியாது. அந்த நிறுவனத்தில் பெரும்பான்மை பங்கு வைத்திருக்கக் கூடிய, தயாளுவுக்கும், கனிமொழிக்கும் இல்லாத பொறுப்பு சரத்குமாருக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

DSC_0159

சரி இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால், வரக்கூடிய தகவல்கள் இந்திய ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

karunanidhi_dhayalu_ammal

தயாளு, சிபிஐ கேள்வி கேட்கும் போது, இதே போல வாயை வைத்திருந்திருப்பாரோ

கருணாநிதியின் கண்களாகவும், காதுகளாகவும், இருக்கும், ஜாபர் சேட் கருணாநிதியின் குடும்பத்தினரை பாதுகாக்க பல்வேறு வேலைகளிள் ஈடுபட்டாலும், டெல்லியில் ஜாபர் சேட்டுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை. ஆனால், காவல்துறையில், யாரை, எப்படி, எப்போது பிடிப்பது என்பது, அரிச்சுவடி. அந்த வகையில், கருணாநிதி குடும்பத்தினரை பாதுகாக்க, ஜாபர் சேட் தேர்ந்தெடுத்த நபர், முகம்மது ஷகீல் அக்தர்.

IMG_8801

முகம்மது ஷகீல் அக்தர்

யார் இந்த முகம்மது ஷகீல் அக்தர்…. ? இவர் 1989ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்டோரை பெங்களுரில் சுட்டுக் கொன்ற போது இவர் பிரபலமானார். இமாம் அலியை சுட்டுக் கொன்றதால், இவரது உயிருக்கு ஆபத்து என்று வந்த உளவுத் துறையின் தகவலை அடுத்து, மத்திய அரசுப் பணிக்கு டெல்லி செல்கிறார்.

ஷகீல் அக்தர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பீகார் மாநிலத்தில் லல்லு கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரோடு மிகுந்த நெருக்கம் உள்ளது, ஷகீல் அக்தரின் குடும்பம். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த சத்ருக்கன் சின்ஹாவிடம், கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்கிறார்.

பிறகு, திமுகவைச் சேர்ந்த ரகுபதி உள்துறையின் மத்திய இணை அமைச்சர் ஆனதும், அவருக்கு செயலாளராக ஆகிறார் அக்தர். மத்திய அமைச்சரின் செயலாளர் என்ற முறையில், ஐபி என்று அழைக்கப் படும் மத்திய உளவுத் துறையின் ரகசிய அறிக்கைகளும், நாகா தீவிரவாதிகளோடு நடத்தப் படும் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களும், ஷகீல் அக்தருக்கு வரும்.

இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஷகீல் அக்தருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. அந்தப் பெண்ணோடு ஷகீல் அக்தர் “நெருங்கிப்” பழகுகிறார். அந்த நெருக்கமான பழக்கத்தில், ஷகீல் அக்தர் தனது பாஸ்போர்ட்டைதொலைத்து விடுகிறார். புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பழைய பாஸ்போர்ட் எங்கே என்று கேட்டால் தொலைந்து போய் விட்டது என்கிறார். உடனடியாக இவர் மீது மத்திய உளவுத் துறையும், ‘ரா’ வும், கண்காணிப்பைத் தீவிரப் படுத்தின. கண்காணித்த போது, அந்த ஆங்கில அணங்கோடு, ஷகீல் அக்தர், டெல்லியின் பிரபல நட்சத்திர ஓட்டல்களிலும், கெஸ்ட் ஹவுஸ்களிலும் நடத்திய ‘சட்டம் ஒழுங்கு’ விவாதத்தைப் பற்யிய தகவல்களை உளவுத்துறை புகைப்பட ஆதாரங்களோடு கண்டுபிடித்தது. கண்டு பிடித்ததும், ஷகீல் அக்தர் கைது செய்யப்படும் நிலைக்கு ஆளானார்.

IMG_8798

அரசியல் வாதிகளோடு தொடர்பு இருக்கும் அதிகாரிகளை யார்தான் என்ன செய்ய முடியும் ?

உடனே லாலு பிரசாத் யாதவ், கருணாநிதியிடம் பேசி, இரவோடு இரவாக, ஷகீல் அக்தர், தமிழ்நாட்டுக்கு மாற்றப்படுகிறார். இது குறித்து அப்போது ஜெயலலிதா, இரவோடு இரவாக மாற்றப் பட்ட மர்மம் என்ன என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு, கருணாநிதியின் பதில் என்ன தெரியுமா ?

1580963828_4ea23b4ece_b

“ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஷகீல் அக்தருக்கு மெடல் குடுத்திருக்கிறார்” அதனால், அந்த அம்மையாரின் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. (கருமம், கருமம்) இதற்கு ஜெயலலிதா வெளியிட்ட பதில் அறிக்கையில்

“உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதிஅவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது.

அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்யதனியாக ஒரு குழு இருக்கிறது.

அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார்.

மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகாரிகளை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன?எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர்பட்டியலிட வேண்டும்.

ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணிஅமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?

சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன?

ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப்புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும்.

இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா ?”

என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு, இந்தச் சம்பவங்கள் மறக்கப் பட்டு, ஷகீல் அக்தர், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு இன்று வரை நடமாடி வருகிறார்.

பேக்ரவுண்ட் போதுமா ? இந்த ஷகீல் அக்தரிடம் தான், கனிமொழியையும், தயாளுவையும் காப்பாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கான காரணம், டெல்லியில் நீண்ட காலம் பணியாற்றியதனால், அவருக்கு உள்ள டெல்லி தொடர்புகள்.

அதற்காக நேரடியாக ஷகீல் யாரையும் தொடர்பு கொண்டு விட முடியாதல்லவா ? இதற்கு ஜாபர் சேட் வழி செய்து கொடுத்தார். இந்த ஆண்டு காவல் அதிகாரிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் பட்டியலில், ஜாபருக்கு, சர்வதேச சட்ட விருது ஒன்று வழங்கப் பட்டது. இந்த விருதை வழங்கியது, சர்வதேச சட்ட வல்லுனர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பு, ஒரு டுபாக்கூர் அமைப்பு. சட்ட வல்லுநர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, நீதிபதிகளுக்கு ப்ரோக்கர்களாக செயல்படுவதுதான். இதன் தலைவர், டாக்டர் (?????) ஆதிஷ் அகர்வாலா. இவர் வகிக்கும் பதவிகளை பட்டியலிடுகிறேன் பாருங்கள். இவர் ஒரு நாள் கூட கோட் போட்டு, நீதிமன்றத்தில் வாதாடியதே இல்லை என்பது கூடுதல் தகவல்.

jaff

Chairman, All India Bar Association
Convener, Indian Council of Jurists
Chairman, India Legal Information Institute
Secretary General, All India Senior Advocates Association

Senior Additional Advocate General, Govt. of Haryana
Additional Advocate General, Govt. of Punjab
Sr. Central Govt. Counsel, Supreme Court of India
Member, Bar Council of Delhi
Ex. Vice-Chairman, Bar Council of India
Ex. Vice-President, Supreme Court Bar Association
Ex. Additional Advocate General, Govt of Uttar Pradesh

மகாநதி படத்தில், ஹனீபா, விசிட்டிங் கார்டுகளை எடுத்து கமலிடம் காண்பிப்பது நினைவுக்கு வருகிறதா ? இந்த டுபாக்கூர் அமைப்பின் தமிழ்நாட்டுப் பிரதிநிதி, ஒரு டுபாக்கூர் வழக்கறிஞர் சங்கத்தை நடத்தி வரும், பிரபாகரன் என்ற வழக்கறிஞர். இந்த பிரபாகரன், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ப்ரோக்கராக செயல்பட்டு வருகிறார் என்பது உயர்நீதிமன்ற வட்டார தகவல்.

02ndjvn01_SC_Addl_A_492825e

டாக்டர் ஆதிஷ் அகர்வாலா

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி வந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நேர்மையான வழக்கறிஞர்கள் அவரை சந்தித்து, “நீங்கள் இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் சங்கம் நடத்தும் விழாக்களில் பங்கெடுத்து, அந்த சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ? “பிரபாகரன் நேர்மையற்றவர் என்றால், நீங்கள் மட்டும் நேர்மையானவர்களா ? ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்து இப்படிப் பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ? நான் அந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது” என்று கூறினார். எதற்கு மூடி மறைப்பானேன்… அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வேறு யாருமல்ல…. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ள சதாசிவம் தான் அது.

இந்த பிரபாகரன், சமீபத்தில் சீனாவில் நடந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் (???????) சென்னையைச் சேர்ந்த, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த சுப்ரமணி என்ற பத்திரிக்கையாளரை மட்டும், செலவு செய்து சீனா அழைத்துச் சென்றார் என்பது கூடுதல் தகவல்.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த ஆதிஷ் அகர்வாலா, ஜாபர் சேட்டுக்கு, சர்வதேச சட்ட வல்லுனர்கள் குழுமம் அளிக்கும் விருது ஒன்றை வழங்குகிறார். அந்த விருதில், அச்சமில்லாமல் பணியாற்றி, தீவிரவாதத்தையும், குற்றங்களையும், ஒழித்து தேசிய அளவில், மிகச் சிறப்பான பெயரை பெற்று, காவல் துறையில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தார் என்பதுதான் அந்த விருது. இந்த விருதை ஆதிஷ் அகர்வாலா வழங்குகிறார்.

Jaffer_important_picture

இதற்கு ஜாபர் கைமாறு செய்ய வேண்டாமா ? செய்தார். அது என்னவென்றால், ஆதிஷ் அகர்வாலாவை தமிழகத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது. (Additional Advocate General). இந்த பதவியை ஆதிஷ் அகர்வாலாவின் பதவிப் பட்டியலோடு சேர்த்து படியுங்கள். இந்த நியமனம் எப்போது வழங்கப் பட்டது தெரியுமா ? தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட அன்று. அறிவிப்பு வெளி வந்த பிறகு. முன் தேதியிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதற்கான அரசாணை வெளிப்படையாக வழங்கப் படாமல், மறைத்து வைக்கப் பட்டது கூடுதல் தகவல்.

Jaffer-important-picture

இந்த ஆதிஷ் அகர்வாலாவைத் தான் ஷகீல் அக்தரை தொடர்பு கொள்ள வைத்திருக்கிறார். ஆதிஷ் அகர்வாலா மூலமாக, மற்றொரு டெல்லி வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு, சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழியின் பெயரையும், தயாளுவின் பெயரையும் சேர்க்காமல் இருக்க ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஷகீல் அக்தரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

முதலில் சவுக்குக்கு இந்த தகவல் வந்த போது, இதை நம்பவில்லை. உச்சநீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கில் எப்படி இவ்வளவு தைரியமாக இதைச் செய்வார்கள் என்று நம்பவே முடியவில்லை. மேலும் உச்ச நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கையை ஆய்வு செய்த பிறகுதான், சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது, இவ்வளவு தைரியமாக எப்படிச் செய்வார்கள் என்று சந்தேகமாக இருந்தது.

IMG_8799

ஆனால், தினமணியிலும், மற்ற நாளேடுகளிலும் வரும் செய்தி, சரத்குமார் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை என்பது. மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கும், செய்தி. ஆனால் மனம் தளரலாமா ? இந்தத் தகவலை, சுப்ரமணியன் சுவாமிக்கும், உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்தி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும் சவுக்கு அனுப்பியுள்ளது. (நாங்களும் விடமாட்டோமுல்ல…)

சமூக அவலங்களை வெளிப்படுத்த கலைஞர் பராசக்தி எடுக்கலாம்,நான் சட்டப்படி குற்றம் எடுக்கக்கூடாதா? எஸ்.ஏ.சந்திரசேகர்

மழைவிட்டாலும் தூவானம்விடாத குறை​யாக 'காவலன்’ படப்பஞ்சாயத்துகள் முடிந்து, 'ஸ்ஸ்ஸ்... அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருந்த நேரத்தில், விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அடுத்த டார்ச்சர் ஆரம்பம்!

அவர் தயாரித்து இயக்கிய 'சட்டப்படி குற்றம்’, மார்ச்-25 ரிலீஸ் என்று அறிவிப்புகள் வந்தன. 'ஆளும் கட்சி சார்ந்த சில விஷயங்களை படம் அம்பலப்படுத்தும்’ என்ற பேச்சு இருந்தது. இப்போது, ''அந்தப் படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள்...'' என்று குற்றம் சாட்டுகிறார் எஸ்.ஏ.சி. அவரை சந்தித்ததுமே பொங்கி எழுந்து​விட்டார்.

''நான் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசையும் அமைச்சர்களையும் கடுமை​யாகத் தாக்கித்தான், 'நீதிக்குத் தண்டனை’ என்ற படம் எடுத்தேன். எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால், தடுத்து இருக்கலாம். ஆனால், அவர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். 'படத்தை அஞ்சு தடவை பார்த்தேன்... சமூக அக்கறையோட எடுத்திருக்கே, சபாஷ்!’ என தோளில் தட்டிப் பாராட்டி, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்ல படம் எடுத்து நாளாச்சு... நீ ஒரு படம் பண்றியா?’ என்று பாசமாகக் கேட்டார்.

ஆனால் இப்போது, 'சட்டப்படி குற்றம்’ படத்தை யாரும் இன்னும் பார்க்கவே இல்லை. அதற்குள் தேர்தல் கமிஷனிடம் தடை கோரிக் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஏன் இந்தப் புத்தி? எந்த நோக்கத்துக்காக கலைஞர் 'பராசக்தி’ படம் எடுத்​தாரோ, அதே நோக்கத்தில்தான் நானும் 'சட்டப்படி குற்றம்’ எடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதைச் சுட்டிக்காட்டி, எப்படி சரிசெய்யலாம் என தீர்வையும் சொல்லி இருக்கி​றேன். அதற்கு ஏன் தடை?'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''நான் படத்தைப் போட்டுக் காட்​டிய​போது, விநியோ​கஸ்தர்​கள் உடனே வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் என்ன உள் குத்து நடந்ததோ? சொல்லி​வைத்தமாதிரி திடீரென்று பின்வாங்கிவிட்டார்கள்! அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அதேபோல, அந்தப் படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் அதிபர்களை மிரட்டியது யார்? இந்தப் படம் எடுக்க நான் பட்ட கஷ்டங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லி முறையிடுவேன். அந்தச் சங்கத்தில் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களும் அலட்சியம் செய்தால், எனக்கு சாவதைத் தவிர, வேறு வழி இல்லை! அதையாவது செய்யவிடுங்கள்!'' என்று கோபமும் ஆவேசமுமாகக் கொந்தளித்து அடங்கினார் எஸ்.ஏ.சி.!

http://www.thedipaar.com/news/news.php?id=25996

Mar 26 எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் மீட்டுக் கொடுத்த வீடுதான் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு.

அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளராக, தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார் ராதாரவி. பத்தே பத்து தகவல்கள் சொல்கிறேன் என்று மடமடவென கொட்டத் தொடங்கினார். ''தமிழ்நாட்டு மக்களிடம் நான் சொல்லப்போகும் விஷயங்கள் இவைதான்'' என்கிறார்!

ஐம்பெரும் தலைவர்கள்

''ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள்... நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன் ஆகியோர்​தான். இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, நடராசன் மகன் என்.வி.என்.செல்வம், மதியழகன் தம்பி கிருஷ்ணசாமி, மகன் முகிலன், சம்பத் மனைவி சுலோசனா என்று நான்கு பேரின் வாரிசுகளும் இப்போது அ.தி.மு.க-வில் அம்மாவுடன்தான் இருக்கிறார்கள்!

கோபாலபுரத்து வீடு

'மக்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டேன்’ என்று கோபாலபுரத்து வீட்டைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்கிறார், கருணாநிதி. தனது மேகலா பிக்சர்ஸ் சினிமா கம்பெனிக்காக கருணாநிதி, அந்த வீட்டை அடகுவைத்தார். வெளிவந்த படங்கள் தோற்றன. அதனால், வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மா ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் வெறும் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 'எங்கள் தங்கம்’ படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். படம் பிரமாதமாக வியாபாரம் ஆனது. அந்தப் பணத்தில்தான் ஏலத்துக்குப் போன வீட்டைத் திரும்பப் பெற்றார். எம்.ஜி.ஆரும், அம்மாவும் மீட்டுக்கொடுத்த கோபாலபுர வீட்டைத்தான், இப்போது பொது மக்களுக்கு தானமாகத் தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் கருணாநிதி!

கருணாநிதி கமென்ட்

கோடானுகோடி ரூபாய்களை விழுங்கி, திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவை, 'குற்றவாளி இல்லை...’ என்று பிதற்றும் கருணாநிதி, பொய் வழக்குப் போடப்பட்ட அம்மாவை வாய் கூசாமல் 'குற்றவாளி’ என்பது எந்த விதத்தில் நியாயம்? டெல்லியில் சோனியாவை சந்தித்தபோது, 'எதிரியை நம்பலாம். ஆனால், துரோகியை நம்பக் கூடாது!’ என்று ராமதாஸ்பற்றி தன்னிடம் சோனியா சொன்னதாக கருணாநிதி கூறினார். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்?

சினிமா விளம்பரம்

நான், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், டப்பிங் கலைஞர்கள் அமைப்பின் தலைவர், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர். தினசரிப் பத்திரிகைகளில் கால் பக்கத்துக்கு மேல் சினிமா விளம்பரம் தரக் கூடாது என்பது சட்ட விதி. திடீர் என்று ஆளும் கட்சி ஆட்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தால், என்ன அர்த்தம்? தங்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை என்கிற கர்வம்தானே காரணம்?

சாவைத் தேடிய சாதிக் பாட்சா

சாதாரண ஜவுளி வியாபாரம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தார், சாதிக் பாட்சா. அவர் செய்த ஒரே பாவம்... ராசாவுக்கு நண்பராக இருந்ததுதான். சகவாசம் சரியில்லேன்னா சாவுகூட வீடு தேடி வரும் என்பதற்கு சாதிக் பாட்சாவின் மரணமே சாட்சி!

விஜயகாந்த் வளர்ச்சி

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பன் விஜயகாந்த். கட்சி தொடங்கிய அஞ்சு வருஷத்தில் நல்ல வளர்ச்சி. இது வரை விஜயகாந்த் இரண்டு படிக்கட்டுகள்தான் ஏறி இருக்கிறார். எப்போது எங்கள் அம்மாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, இனிமேல்தான் 98 படி உசரத்துக்கு அசுர வளர்ச்சி காணப்போவது உறுதி!

கருணாநிதி மாளிகை

ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகம் அமைக்க ஆசைப்பட்டார், அம்மா. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி வாசலில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்கினார் ஸ்டாலின். இப்போது அந்தக் கல்லூரிக்குள் கருணாநிதி மாளிகை என்று பெரிய வளாகத்தை யாரைக் கேட்டு கட்டி இருக்கிறார்கள்? பொதுவான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் இருக்கும் கட்டடத்துக்கு கருணாநிதி பெயரை எப்படிப் பயன்படுத்தலாம்?

ரிஜிஸ்டர் ஆபீஸ் வில்லன்கள்

சென்னை மட்டும் அல்ல... தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆளும் கட்சி ஆட்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் காசு இல்லாமல், உறவினர்களுக்கு ஆபரேஷன் செய்யப் பணம் இல்லாமல் பரம்பரையாக வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள், அப்பாவி மக்கள். அந்த வீட்டுக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாத ஆளும் கட்சி ஆட்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, ''எங்களுக்கு இரண்டு பெர்சன்ட் கொடு!'' என்று மிரட்டி வாங்கும் கொடூரம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுவிட்டு பல லட்சத்தை மிரட்டிப் பிடுங்குகிறார்கள்!

கான்கிரீட் வீடு டோக்கன்

அவசரத்துக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொண்டுபோகிறவர்கள் காரை மறித்து, சோதனை போடும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்கிறேன்? 'கான்கிரீட் வீடு கட்டித் தருகிறேன்’ என்று இப்போது டோக்கன்களைக் கொடுக்கிறார்களே. இது லஞ்சம் இல்லையா, உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

பிராணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை

சென்னை நந்தனத்தில் 'வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி’ உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள். வெளிநாட்டுக் கோழிகள், அபூர்வ வகை மான்கள், விசித்திரமான பிராணிகள் ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இந்த இடத்தை தமிழக அரசு பறக்கும் ரயில் திட்டத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கிறது. உண்மையில் ரயில்வே நிர்வாகம் தேவர் சிலைக்கு எதிரில் இருக்கும் இடத்தையே கேட்டது. ஆனால், வம்படியாக இந்த இடத்தை வாரி வழங்கி இருக்கிறார்கள். இங்கு வாழும் வாயில்லா ஜீவன்களை வேறு இடத்துக்கு மாற்றினால், இறந்துவிடும் என்று எடுத்துச் சொல்லியும் பிடிவாதம் பிடிக்கிறது, தமிழக அரசு. ஏன் இத்தனை பிடிவாதம்?''

http://www.thedipaar.com/news/news.php?id=26075

நாய்கள்,பன்றிகள்,கழுதைகள் இவைகள்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள். எஸ்.வி.சேகர்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசி​யாக ரிலீஸ் ஆவதும் அதில் குளறுபடிகள் குத்தாட்டம் போடுவதும் தேர்தலுக்குத் தேர்தல் அரங்கேறும் சம்பிரதாயம். இருந்தாலும், இந்தத் தேர்தலில் கொஞ்சம் ஓவர்!

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட... உடனடி எதிரொலியாக பாடை கட்டுவது, கொடும்பாவி எரிப்பு, கொடிக் கம்பங்கள் சாய்ப்பு, சத்தியமூர்த்தி பவன் சூறை​யாடல் என்று கதர் வேட்டிகள் கபடி ஆடு​கின்றன. 'கூட்டணி சேரவும் தெரியலை... ஸீட் ஒதுக்​கவும் தெரியலை’ என்று கொந்தளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இந்தப் பட்டியலில், இப்போது இருக்கும் 28 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போலவே பட்டியலில் ஜி.கே.வாசனின் 'கை’யே ஓங்கி இருக்கிறது. அவர் ஆதரவாளர்கள் 22 பேருக்கும், தங்கபாலு ஆதரவாளர்கள் 13 பேருக்கும், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 12 பேருக்கும், இளைஞர் காங்கிரஸுக்கு 9 பேருக்கும் பங்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு போன்றவர்களுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளே!

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு​வின் மனைவி ஜெயந்தி தங்கபாலுக்கு ஸீட் கொடுக்கப்​பட்டதற்குதான் உச்சகட்டக் கோபத்தைக் காட்டிவிட்​டனர் காங்கிரஸ்காரர்கள். சில மாதங்கள் முன்பு காங்கிரஸில் சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான எஸ்.வி.சேகர், அதே தொகுதியைக் குறிவைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைகள் பார்த்து வந்த கராத்தே தியாகராஜன் இருவரும் செம அப்செட்!

வேட்பாளர் குளறுபடிபற்றி காங்கிரஸ் புள்ளிகளிடம் பேசினோம். ''எஸ்.வி.சேகருக்காக ஜி.கே.வாசனும், இளங்கோவனும் பரிந்துரை செய்தனர். பொதுவாக, டெல்லி தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர்கொண்ட பட்டியலைக் கேட்கும். அதில் சம்பந்தப்பட்ட தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. இருந்தால், அவர் பெயர்தான் முதலில் இடம் பெறும். ஆனால், மயிலாப்பூர் தொகுதியில் தன் மனைவி ஜெயந்தி பெயரை முதலில் போட்டிருந்தார் தங்கபாலு. கடைசியாகத்தான் எஸ்.வி.சேகர் பெயர். எப்படியோ, தங்கபாலுவின் ஆசை நிறைவேறிவிட்டது...'' என்கிறார்கள்.

எஸ்.வி.சேகருக்காக வேறு சிலர் வயலார் ரவியிடம் சொல்லி இருக்கின்றனர். 'கவலைப்பட வேண்டாம். அவர் பெயர் பட்டியலில் உள்ளது’ என்று சொன்னாராம். விடியல் சேகர் பெயரைப் பார்த்து அதான் எஸ்.வி.சேகர் என்று வயலார் ரவி புரிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். 'புதுசாக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு ஸீட் தரக் கூடாது’ என்று நாமக்கல் ஜெயக்குமார் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தாராம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. ஆகி, பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய், அங்கு இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த செல்வப் பெருந்தகைக்கு செங்கம் தொகுதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, பி.ஜே.பி-யில் இருந்து வந்த திருநாவுக்கரசருக்கு, அறந்தாங்கி தொகுதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் சொல்லிப் புலம்புகிறது எஸ்.வி.சேகர் கோஷ்டி.

''தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்று, அவரைக் கவிழ்ப்பதற்காக எதிர் எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்த தங்கபாலுவும், ஜி.கே.வாசனும் கரம் கோத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள்!'' என்கிறார்கள்.

''சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலை வைத்துக்கூட படுக்காதவர்களுக்கும் ஸீட். கிரிமினல் வழக்கில் பேசப்பட்ட ஒருவர் ஸீட் வாங்க 1.50 கோடி 'கை’ மாறியதாம். வேட்பாளர் தேர்வில் நடந்த முயற்சியில் ஒரு செல்போன் உரையாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வேட்பாளரின் அழகைப்பற்றி வர்ணிக்கிறார்கள். 'நைஸ் லுக்கிங் லேடி’ என்று போகும் அந்த உரையாடல் ஆபாச ரகம். இதை எல்லாம் டெல்லியில் சொல்லி ஸீட் வாங்கி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டதுதான் கொடுமை. இப்போது ஸீட் வாங்கியவர்களில் முக்கியமான சிலர்தான் ஜெயிப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, 'கருணாநிதி காங்கிரஸ்’ கோஷ்டி ஒன்று செயல்படுகிறது. அவர்களை எப்படியும் வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது. மெஜாரிட்டிக்கு நெருக்கத்தில் போட்டியிடும் தி.மு.க. எப்படியும் அறுதிப்பெரும்பான்மை பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், கருணாநிதி காங்கிரஸ் கோஷ்டியினர் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களைவைத்து ஆட்சி அமைக்க வசதியாக இருக்கும் என்று தி.மு.க. நினைக்கிறது!'' என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் கூட்டமாக நின்று பேசுகிறார்கள்.

காங்கிரஸின் சீனியர்கள் சிலர், ''பெருந்​தலைவர் காமராஜ், 'கட்சிப் பணிக்கு மூத்தவர்கள் வர வேண்டும். அரசியல் பதவிகள் புதியவர்​களுக்குத் தர வேண்டும்’ என்று அறிவித்து முதல்வர் பதவியை துறந்தார். இதுதான் காமராஜரின் 'கே பிளான்.’ ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு, தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களுக்குதான் ஸீட்களை வாரி வழங்குகிறார்கள். யசோதா நான்கு ஐந்து முறை எம்.எல்.ஏ. அதோடு, சில தேர்தல்களில் போட்டி​யிட்டு தோல்வியும் அடைந்தார். கே.ஆர்.ராமசாமி 1989 முதல் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். வேலூர் ஞானசேகரன், 1991-ல் இருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ. இவர்களுக்கு இப்போதும் ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். ஜெயந்தி தங்கபாலு, அருள் அன்பரசு, விஷ்ணு பிரசாத் என்று வாரிசுகளுக்கு ஸீட்களை வாரி வழங்கி இருப்பதைவைத்தே காங்கிரஸ் கட்சி சல்லடையாகப் போய்க்கொண்டு இருக்கிறது!'' என்று சலிப்போடு சொன்னார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப்பற்றியும், அவர்களின் பின்னணிபற்றியும் நிலவும் அதிருப்தியை வி.ஐ.பி. புள்ளிகள் என்ன சொல்கிறார்கள்?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கேட்டோம். ''உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நிச்சயமாக ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே, எம்.எல்.ஏ-வாக இருந்த ராணி வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நான் பரிந்துரை செய்த யாருக்கும் ஸீட் கிடைக்கவில்லை. எனது வருத்தம், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஸீட் கிடைக்கவில்லை என்பதுதான். தங்கபாலு தன் குடும்பத்தினரும் எடுபிடிகளும் போட்டியிட வழி செய்திருக்கிறார். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் ஏன் இவற்றைத் தட்டிக் கேட்கவில்லை என்று தெரியவில்லை?'' என்றார் காட்டத்துடன்.

''அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு? சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்!'' என்கிறார் எஸ்.வி.சேகர்.

கராத்தே தியாகராஜனை சந்தித்தோம். ''மயிலாப்பூரில் மட்டும் இளைஞர் காங்கிரஸுக்காக 5,000 பேரை சேர்த்தோம். ஓர் உறுப்பினரைக்கூட சேர்க்காத ஜெயந்திக்கு ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் ப.சிதம்பரத்தை வைத்து பட்ஜெட் விளக்கக் கூட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கூட்டம், கடந்த எம்.பி. தேர்தலில் தீவுத் திடலில் கூட்ட ஏற்பாடு, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுலுக்கு வரவேற்பு என்று கட்சியை வளர்ப்பதற்காக எத்தனையோ வேலைகளைச் செய்திருக்கிறோம். கொடி கட்டவும், போஸ்டர் ஒட்டவும், மேடை போடவும் மட்டும் நாங்களா? எங்கள் உழைப்பைச் சுரண்டி, அதில் அவர் மனைவிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்திருக்கும் உழைப்புத் திருடர்தான் தங்கபாலு. அவரது செல்போனைத் தூக்கிக்கொண்டு வரும் தாமோதரனும், அவருக்கு கார் கதவைத் திறந்துவிடும் சிவலிங்கமும் வேட்பாளர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்றார் சீற்றத்துடன்.

இதில் எத்தனை பேர் தேறுவார்​களோ?

http://www.thedipaar.com/news/news.php?id=26078