Sunday, March 27, 2011

இலவசம்... இலவசம்.... இலவசம்....

இலவசம்... இலவசம்.... இலவசம்.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது
புதன்கிழமை, 23 மார்ச் 2011 06:48

32536265

சாதிக் குடும்பத்தை சந்தித்த 'மனிதர்கள்'!


உடல் இங்கே... உறவுகள் எங்கே?
2G மர்மச் சுழல்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சாதிக் பாட்சாவின் உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் நடந்த நேரம். சாதிக் பாட்சாவின் நண்பர்களும், ஊழியர்களும் பதைபதைப்புடன் காத்திருந்த சமயத்தில், சாதிக் பாட்சாவின் மரணம் பற்றி விசாரித்தோம். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளை அப்படியே இங்கே தருகிறோம்...

1. மார்ச் 16-ம் தேதி காலை நேரத்தில், சாதிக் பாட்சாவை காரில் யாரோ ஒருவர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவரே திருப்பிக் கொண்டுவந்து விட்டதாகவும் தெருவாசிகள் சொல்கிறார்களே? அது, உண்மையா... அழைத்துச் சென்றவர் யார்?

2. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள சாகித் பால்வாவுக்கும் சாதிக் பாட்சாவுக்கும் நெருக்கம் உண்டு. அந்த வகையில், பண பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலையில் சாதிக் இருந்தார் என்றும், அதனால் மும்பையில் இருந்து சில நிழல் மனிதர்கள் கிளம்பிவந்து சாதிக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?

3. கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை சாதிக் வெளிநாடுகள் போய் வந்திருக்கிறார். அந்த நேரங்களில் நடந்த சந்திப்புகளை விசாரிக்க மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவுசெய்து, விசாரணைக்காக அழைத்ததாகச் சொல்கிறார்கள். அதற்குள் என்ன நடந்தது?

4. சாதிக்கை சுதந்திரமாக உலவவிட்டு இருந்தாலும், அவரை எந்த நேரமும் கண்காணிப்பு வளையத்தில்தான் சி.பி.ஐ. வைத்து இருந்ததாக சொல்கிறார்களே? அப்படியானால், அவர் இறந்த அன்றும் அவரது வீட்டு வாசலில் நிச்சயமாக சி.பி.ஐ. இருந்திருக்குமே... அவர்கள் ஏன் அசம்பாவிதத்தைத் தடுக்கவில்லை?

5. சாதிக்கின் உடலை அவரது வீட்டிலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பிய அவரது குடும்பத்தினர், வீட்டின் வெளியே பூட்டுப் போட்டுவிட்டு எங்கே கிளம்பிப் போனார்கள்? பிற்பகல் 1.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் அவர்கள் வீட்டிலும் இல்லை, மருத்துவமனையிலும் இல்லை. எங்கே போனார்கள்? அவர்களை யாரோ அழைத்துச் சென்று 'நடந்ததை இப்படித்தான் சொல்லவேண்டும்' என்று ரிகர்சல் நடத்தியதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா? யார் அவர்கள்?

6. மாலை 5 மணி வரை சாதிக் வீட்டு வாசலில் நிருபர்களும் போலீஸாரும் தடய அறிவியல் துறை அதிகாரிகளும் காத்துக் கிடந்தனர். இந்த நிலையில், திடீரென மாலை 5 மணிக்கு சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹானா பானு தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகித் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தது யார்?

7. தேனாம்பேட்டை போலீஸ், 'சாதிக் பாட்சா இறந்தது எப்போது தெரியும்? யார் முதலில் பார்த்து? நீங்கள் அப்போது வீட்டில் இருந்தீர்களா? வெளியில் எங்கே போனீர்கள்?' என்றெல்லாம் குடும்பத்தினரிடம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்ததாகச் சொல்கிறார்களே, உண்மைதானா?

8. பெரம்பலூரில் இருந்து வந்திருந்த சாதிக் பாட்சாவின் நண்பர் ஒருவர், ''சி.பி.ஐ-யின் தீவிர விசாரணை, ரெய்டுகளால்தான் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார் சாதிக் என்கிறபோது, அவசரஅவசரமாக தமிழக அரசு இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ-யிடமே ஒப்படைக்க முடிவு செய்தது ஏன்? சாதிக் பாட்சாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சி.பி.ஐ-யின் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது குற்றம்சாட்ட அவரது உறவினர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே...'' என்று வருந்துகிறார். ஏன் இந்த வழக்கு அவசரமாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது?

8. சாதிக்கின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மருத்துவர் குழுவினர்,''சாதிக் பாட்சாவின் உடலில் எந்தக் காயமும் இல்லை. கழுத்து இறுக்கப்பட்டதால், மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவரது கழுத்துப் பகுதி சதையை பரிசோதனைக்கு எடுத்து அனுப்பி இருக்கிறோம். அந்த ரிசல்ட் வந்தபிறகுதான், மற்ற விவரங்களைச் சொல்லமுடியும்'' என்கிறார்கள். இதன்படி பார்த்தால், கழுத்து இறுக்கப்பட்டு இறந்த நிலையில், சாதிக் பாட்சா தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது, தூக்கு மாட்டியதால் கழுத்து இறுகி, மூச்சுத் திணறி இறந்தாரா?

9. சாதிக் பாட்சா இறந்தது எப்போது என்கிற கேள்விக்கு மருத்துவர்கள் தரப்பில், 'ஆஸ்பத்திரிக்கு கொண்டுவருவதற்கு 12 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்திருக்கலாம்’ என்று பொத்தாம்பொதுவாக சொல்கிறார்கள். ஆனால், சாதிக்கின் குடும்பத்தினர் மதிய வேளையில்தான் தூக்கு மாட்டி இறந்தார் என்று சொல்கிறார்கள். இதில் ஏதோ முரண்பாடு தெரிகிறதே? சாதிக் இறந்த நேரத்தில் வீட்டில் வேறு யாரும் இருந்தார்களா?

10. சாதிக் எழுதி வைத்ததாகச் சொல்லப்படும் கடிதங்களில் காணப்படும் கையெழுத்து அவருடையதுதானா? சாதிக் பாட்சா இறப்பதற்கு முன், சுதந்திரமான சூழலில் எழுதினாரா? மிரட்டல் ஆசாமிகள் எழுத வைத்தார்களா? மனதில் குழப்பத்துடன் இருக்கும்போது எழுதினாரா? இவற்றைப் பழைய கையெழுத்துடன் ஒப்பீடு செய்தால் கண்டுபிடிக்க முடியும்தானே? கடிதத்தில் இருந்தது 15-ம் தேதி என்கிறார்களே, உண்மையா?

11. சாதிக் இறந்தது முதல், அவரது அடக்கம் வரை அவரது முகத்தை மூடிக் கொண்டுபோனது ஏன்? இறந்தது சாதிக் பாட்சாதானா?

இந்தக் கேள்விகளுடன், டெல்லியில் இருந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைத் தொடர்புகொண்டு, சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து கருத்துக் கேட்டோம்.

''2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கத் துவங்கியதும், எனக்கு நம்பகமான சோர்ஸில் இருந்து வந்த தகவல்படி, 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் சிலரை இந்தியாவில் சுட்டுக் கொல்ல துபாயில் இருந்து இரண்டு வெள்ளைக்காரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியப் பிரமுகரான ஆ.ராசாவுக்கும் ஆபத்து நேரிடலாம். அவர் வெளியில் இருப்பதைவிட ஜெயிலுக்குள் இருப்பதுதான் நல்லது' என்று அன்றே சொன்னேன். நல்லவேளை! ராசா தற்போது திகார் ஜெயிலில் மிகவும் பாதுகாப்பான வார்டில் இருக்கிறார். வெளியே சென்றால் ஆபத்து என்பதை உணர்ந்து, காவல் நீட்டிப்புக்குக்கூட கோர்ட்டுக்குப் போகாமல் சிறையில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபரன்ஸை பயன்படுத்துகிறார். சாதிக் பாட்சாவுக்கு கீழக்கரை, துபாய், மலேசியா நாடுகளுடன் ஹவாலா தொடர்பு உண்டு.

ஆ.ராசா பணத்தை இவர் மூலம் டீல் பண்ணியிருக்கலாம் என்பது சி.பி.ஐ-யின் சந்தேகம். ஆனால், சாதிக் பாட்சா ரொம்ப தைரியமானவர். மனக்குழப்பம் இல்லாமல் வெளியில் நடமாடி வந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனோநிலையில் இல்லை. சாதிக்கின் மனைவியும் வக்கீலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சாதிக்கை 'அப்ரூவர்' ஆகிவிடும்படி அட்வைஸ் பண்ணி இருக்கிறார்கள். இந்தத் தகவல் எப்படியோ வெளியில் கசிந்திருக்கிறது. அதன்பிறகு, யார் அவரைத் தொடர்பு கொண்டார்கள், என்ன பேசினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென சாதிக் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் நடந்ததை முழுவதுமாக விசாரிக்கவேண்டும்.
இப்போதெல்லாம் ஹார்ட் அட்டாக்கைக்கூட, திடீரென உண்டாக்கும் அளவுக்கு கிரிமினல்கள் வளர்ந்து விட்டார்கள். காலி சிரிஞ்ச் ஒன்றை ஒருவரின் கையில் குத்தி, வெறும் காற்றை அழுத்திவிட்டால், அது காற்றுக் குமிழியாக ரத்தக் குழாய் வழியாக இதயத்துக்குப் போய் வெடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுபோன்று எத்தனையோ நவீன வழிகளைக் கையாள்கிறார்கள். அதனால், சாதிக்கின் தற்கொலை சம்பவத்தையும் அந்தக் கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்!'' என்கிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். தமிழக மக்களும் விடை தேடி காத்திருக்கிறார்கள்.

பதில் சொல்லுமா சி.பி.ஐ.?

Thanks to Junior Vikatan.

ருத்ராட்ச பூனை கருணாநிதி....

இனி வரும் காலங்களில் கருணாநிதி என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் ஏராளமான விளக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. முரண்பாட்டு மூட்டையாக காட்சி அளிக்கும் அந்த மனிதரின் (மன்னிக்கவும்) செயல்களை அலசி பார்த்தால் வெட்கக் கேடு. எனினும், தமிழனின் தலைவிதி, அந்த மனிதனை பற்றி பேச veண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

பண்டாரம். ரதேசி என்று சகட்டுமேனிக்கு திட்டிய கும்பலோடு கைகோர்த்து அதிகாரத்தில் பங்கு எடுத்தும், 'நான் இருக்கும் இடத்தில மதவாதம் இருக்காது' என்று உறுதி கூறினார். சுமார் எட்டு ஆண்டு காலம் மத்தியில் அதிகாரத்தை சுவைத்த பிறகு, அந்த கும்பலால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்ததும் 'மதவாத சக்திகளுடன் கூட்டணி முறிந்தது' என்றார்.

கருணாநிதியின் அந்தர் பல்டிக்கு 'இது ஒரு சின்ன உதாரணம்'. ஆனால், சில கொள்கைகளில் மட்டும் அவர் விடாப்பிடியாக இருந்து வருகிறார். 'ஆட்சி-அதிகாரத்தில் இல்லா விட்டால் தமிழனுக்காக போராடுவது, ஆட்சியில் இருந்தால் தன்னுடைய குடும்பத்துக்காக போராடுவது, சினிமா நடிகைகளின் குத்தாட்டத்தை பல மணி நேரம் ஆனாலும் 'ஜொள்ளு' விட்டு ரசிப்பது' இப்படி சில கொள்கைகள் அவருக்கு உண்டு.

ஒரு விஷயம். எந்த நேரமும் அவர் பேசிக்கொண்டு இருக்கும் நாத்திக கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்று யாராவது நினைத்தால் அது மிகவும் தப்பு. மஞ்சள் துண்டு போடுவதில் இருந்து அவருடைய மூட நம்பிக்கைகளை பட்டியல் இட்டால் கணக்கில் அடங்காது. எனினும். அது பற்றி கொஞ்சம் பேச விட்டால் நன்றாக இருக்காது. அவற்றை இப்போது பேச விட்டால் எப்போது பேசுவது?

ஜெயலலிதா என்றால் பச்சை நிறம், 9 என்ற எண் பற்றி அனைவரும் பேசுவது வழக்கமாகி விட்டது. இந்த காரணநிதி கூட, தன்னை நல்லவர் போலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வந்தவர் போலவும் காட்டிக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தது உண்டு. ஆனால், கருணாநிதி பற்றிய ரகசியம் தெரியுமா?

உலக அளவில் அனைத்து மக்களும் அஞ்சி நடுங்கும் எண்கள் எது வென்றால் 8 மற்றும் 13 . மேலும், இந்தியாவை பொறுத்தவரை சனிக்கிழமை என்றால் யாருக்கும் ஆகாது. இந்த எண்களும், கிழமையும் கருணாநிதிக்கு பிடித்த ராசியனவை ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொடங்கும் எந்த முக்கிய காரியமாக இருந்தாலும் இந்த எண்கள் அல்லது சனிக்கிழமை வருமாறு அமைப்பதே வழக்கமாக வைத்துள்ளார். 2006 -ம ஆண்டு அவர் பதவி ஏற்ற நாள் (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் (அவருடைய பதவியை காப்பாற்றுவது தொடர்பான நிகழ்வுகள்) எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தேர்தல் தேதிகளில் கூட, அவருக்கு ராசியாக அமையுமாறு பார்த்துக்கொள்கிராரோ என்ற சந்தேகம் உள்ளது. இத்தாலி அம்மையாரின் ஆசியுடன் எதுவும் நடக்கலாம்.

பாராளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் வாக்குபதிவு நடந்த நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை நாள். சமீப காலமாக தமிழ் நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு இடை தேர்தலின் வாக்குபதிவு நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை இவற்றை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும். எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.

இவை எல்லாம் முடிந்து போனவை. தற்போதைய சூழ்நிலையில் ஒரு முக்கிய நிகழ்வை பார்த்தால் என்னுடைய கருத்து நிதர்சனமான உண்மை என்பது விளங்கும். புதிய சட்டசபை கட்டிடம் திறப்பு விழா - மார்ச் 13 (சனிக்கிழமை) நிரந்தர முதல்வராக இருக்கலாம் என்பதற்காக இந்த திட்டமோ என்னவோ?

அந்த கட்டத்தை கட்ட தொடங்கும்பொது நவரத்னா கற்களை பூமியில் கொட்டி பூஜை போட்டதும இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், அண்ணா பல்கலை வளாகத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பூமி பூஜை போடப்பட்ட்ட பொது இந்த நிகழ்வுகள் எல்லாம் நடை பெற்றதக்கு கடும் கண்டனம் எழுப்பியது இந்த கருணாநிதி தான். அப்போது பகிரங்கமாக நடந்ததும், தற்போது கமுக்கமாக நடந்ததும் தான் வித்தியாசம்.

அதாவது, எதை பகிரங்கமாக வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு பத்திரிகைகளை அன்பாக (?) வேண்டி கொள்பவர் கருணாநிதி. தமிழ் நடிக பட்டாளம் சார்பாக. அவரோட சாதனைகளை (?) பாராட்டி சென்னையில் பிப்ரவரி 7 -ம தேதி பாராட்டு விழா நடந்தது. அட அது கூட, சனிக்கிழமை தாங்க.

இந்த ருத்ராட்ச பூனையின் மூட நம்பிக்கைகள் பற்றி இனிமேலாவது அனைவரும் அறிந்து கொண்டால் சரி.

http://tamilan-superpowerindia.blogspot.com/2011/02/blog-post_2202.html

சோனியா, கருணாநிதி மீதும் கிரிமினல் வழக்கு! தயாராகிறார் சுவாமி

SSwamy%203.jpg
இந்தியாவையே மலைக்க வைக்கும் அளவுக்கு நடந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த அறுபதாயிரம் கோடி ரூபாயை சோனியா காந்தி, ஆ.ராசா, கருணாநிதி ஆகியோர் பங்கு போட்டிருக்கிறார்கள். அதனால் இந்த ஊழல் வழக்கில் மூவரையும் வரிசையாக கைது செய்ய வேண்டும்...’’ என்று சொல்லி அதிர்ச்சி குண்டை வீச ஆரம்பித்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த அதிரடி, புதிரடிகள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தரப்பில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசினோம்.

S%20swamy%207.jpg
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சோனியா காந்தியையும், கருணாநிதியையும் குற்றவாளிகள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்களே...

நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தவறு நடந்திருக்கிறது என்று நான் சொன்னபோதுகூட இப்படித்தான் பலரும் நம்ப மறுத்தார்கள். ஆனால், என்ன நடந்தது? மத்திய தலைமை தணிக்கை அதிகாரி தன்னுடைய விசாரணை அறிக்கையில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். விசாரணை தீவிரமாகும்போது சோனியா காந்தியும் கருணாநிதியும் கடுமையாக சிக்கிக் கொள்வார்கள். உடனே, ‘அன்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுதான் நடந்திருக்கிறது...’ என்று சொல்லப் போகிறார்கள்.

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள்?

பிரதமருக்கு இது தொடர்பாக நான் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். அந்த கடிதத்தில் மிகவும் தெளிவாக எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக 60 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார் ஆ.ராசா. அந்தப் பணம் முழுவதையும் அவர் மட்டுமே எடுத்துக் கொள்ளவில்லை. பத்து சதவீதத்தை மட்டுமே தனக்காக எடுத்துக் கொண்டு விட்டு, மீதப்பணத்தை கருணாநிதிக்கும் சோனியா காந்திக்கும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார். முப்பது சதவீதம் கருணாநிதி குடும்பத்துக்கும் அறுபது சதவீதம் சோனியா காந்தி குடும்பத்துக்கும் போயிருக்கிறது. இதை கருணாநிதியோ, சோனியா காந்தியோ இல்லை என்று மறுக்கட்டும். அல்லது என் மீது வழக்குப் போடட்டும்.

சோனியா காந்தியின் குடும்பத்தினரை ஏன் இந்த விவகாரத்துக்குள் இழுக்கிறீர்கள்?


தொடர்பு இருக்கும்போது இழுக்கத்தானே வேண்டும்? சோனியா காந்தியின் சகோதரிகள் அனுஷ்கா, நாடியா இருவருக்கும் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உண்டு. ஆ.ராசா ஊழல் மூலம் கொள்ளையடித்துக் கொடுத்த பணத்தை சோனியா காந்தி தன்னுடைய இரு சகோதரிகள் மூலமாகத்தான் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார்.

S%20swamy%204.jpgகணவரால் கைவிடப்பட்ட அந்த இரண்டு சகோதரிகளுக்கும் மலேசியா, ஹாங்காங், லண்டன், அமெரிக்கா, பாகிஸ்தான் என்று பல நாடுகளிலும் நண்பர்கள் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை இந்த நாடுகளில்தான் அவர்கள் முடக்கி இருக்கிறார்கள். இதற்காக துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஏற்பாடு செய்து கொடுத்த தனியார் விமானம் ஒன்றின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். சீனாவுக்கும் கூட அவர்கள் சென்று வந்திருக்கிறார்கள். அருகிலிருக்கும் மக்காவ் தீவு வங்கியில் பெரும்பாலான பணம் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆன்-லைன் மூலமாகவே இந்தியா-விலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை வெளிநாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்திருக்-கிறார்கள். இதில் அன்னிய செலாவணி மோசடியும் நடந்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக இறங்கி விசாரித்துக் கொண்டிருக்-கிறார்கள்.

இந்தப் பணமெல்லாம் வெளிநாட்டில் டெபாஸிட் செய்யப்பட்டது ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப் பணம் தீவிர-வாதத்-துக்கோ, மதமாற்றத்துக்கோ, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கோ, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ பயன்-படுத்தப்பட மாட்டாது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை.

இதனையெல்லாம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். பிரதமரிடம் இது தொடர்பாக பேசியும் இருக்கிறேன்.

S%20swamy%203.jpgஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு அரசு அனுமதி இல்லாமல் ஆன்-லைன் மூலமாக பணம் பரி-மாற்றம் செய்யப்பட்டால், அது யாருக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்கிற விவரத்தையெல்லாம் நொடியில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு அமைப்பு மூலமாக கண்டறிந்து-விடலாம். அதற்கு ஒபாமா உதவக்கூடும். அதற்காக ஒபாமாவிடம் பிரதமர் பேச வேண்டும்.

கூடவே, உலக அளவில் நடந்திருக்கும் இந்த பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், ஊழலில் ஊறித் திளைக்கும் சோனியா குடும்பத்தினர் வசமாகச் சிக்கிக் கொள்வார்கள். கருணாநிதியும் அவருடைய குடும்பத்தினரும் கட்டாயம் கம்பி எண்ணி, களி திங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இல்லையென்றால், என்னிடம் இருக்கும் ஆதாரங்களையெல்லாம் வைத்து நானே ராசாவைத் தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் கருணாநிதி மீதும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வைப்பேன். இந்தியாவின் உளவு அமைப்புகள் சி.பி.ஐ., ரா, அமலாக்கப் பிரிவு எல்லாம் ஒன்றாக சேர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய மிகப் பெரிய ஊழல், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல். எல்லாம் சரி, இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தொடர்பில்லாதது போல பேசுகிறீர்களே...

‘சட்ட அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்...’ என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிடம் பிரதமர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆ.ராசாவும் இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் விசாரித்திருக்கிறார். அவருடைய எண்ணங்களுக்கு சட்ட அமைச்சகம் உடன்படவில்லை என்றதும், கடந்த 2007&ம் ஆண்டு நவம்பர் 2&ம் தேதி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் ஆ.ராசா. அதில் முழுக்க முழுக்க சட்ட அமைச்சகத்தைப் பற்றி புகார் சொல்லியிருக்கிறார். அதற்கு அன்றைக்கு மதியமே பதில் அனுப்பி இருக்கிறார் பிரதமர். ‘இரண்டு அமைச்சரவைக்குள் பிரச்னை என்றால், அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். அதேபோல, அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவிடமும் பேசி இது தொடர்பாக முடிவெடுத்து செயல்படுவதே நல்லது...’ என்று அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார்.

பிறகு ஒருமாதம் கழித்து 26.12.2007&-ல், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும், சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன்வதியும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக கடிதம் மூலம் பிரதமருக்குத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மன்மோகன் சிங் ஆதரவாக இருந்ததாகவும் பிரணாப் முகர்ஜி எதிர்ப்பாக இருந்ததாகவும் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்-கிறார்கள். அதில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரணாப் முகர்ஜிதான் ஆதரவாக இருந்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் கடுமையான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்ததும், சோனியா காந்தியிடம் மன்மோகன் சிங் கடுமையாக ரியாக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார். உடனே காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தைக் கூட்டி சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல், சோனியா காந்தி, ஏ.கே. அந்தோணி ஆகியோர், ராசாவை பதவி விலக்கத் தேவையில்லை என்று வாதிட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு பிரதமர் சம்மதிக்கவில்லை. அதன்பிறகுதான், ராசாவை பதவி விலக வைத்திருக்கிறார்கள். இப்பப் புரியுதா... சோனியா காந்தி கடைசிவரையில் ராசாவுக்கு ஆதரவாக நின்றிருப்பது?

S%20swamy%206.jpgதற்போதைய நிலையில் ஆ.ராசா சிறையில் இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று சொல்லி இருக்கிறீர்களே...

ஆமாம். ஊழலில் கொள்ளையடித்த பணத்தை அவர் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் வசமாக சிக்கிவிட்டார். சி.பி.ஐ. விரைவில் அவரை வளைத்துவிடும். அவர் உண்மைகளை கக்குவார். இதனால், கருணாநிதி குடும்பத்துக்கு சிக்கல் வரும். அப்படியொரு நிலையை கருணாநிதி அனுமதிப்பாரா? அதனால்தான் ராசா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது...’ என்று, அவர் தன்னுடைய நண்பர்களிடம் பதட்டமாகச் சொன்ன செய்தி எனக்கு வந்தது. பிறகுதான், ராசாவுக்கு பாதுகாப்புக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பினேன்.

ஊழலுக்கென்று யாரும் பெரிதாக இதுவரை தண்டிக்கப்படவில்லையே...

அப்படிச் சொல்ல முடியாது. அந்த வாதத்துக்கு ராசா விஷயம் முற்றுப்புள்ளி வைக்கும். ராசா விரை-விலேயே ஜெயிலுக்குப் போவார். டிசம்பர் முதல்வாரத்திலேயே அவர் மீது ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்குப் போட்டுவிடுவேன். விசாரித்து தண்டனையும் வாங்கித் தருவேன். விசா-ரணையில் சோனியா காந்தி, கருணாநிதி, கனிமொழி, ராசாத்தியம்மாள் ஆகியோர் கட்டாயம் சிக்கலுக்கு ஆளாவார்கள். முடிவில் கருணாநிதியும் ஜெயிலுக்குப் போவார். டெல்லியில் உங்களை சந்தித்த கனிமொழி, ‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டாராமே...

யார் என்னை சந்தித்தாலும் சரி... இந்த ஊழல் விவகாரத்தில் யாரிடமும் எதற்காகவும் காம்ப்ரமைஸ் கிடையாது. இது தொடர்பாக என்னை சந்தித்த எல்லோரிடமும் நான் இதையேதான் சொல்லி வந்திருக்கிறேன். இதற்காக நிறைய பேர் என்னை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பெயரையெல்லாம் சொல்வது நாகரிகமல்ல.

தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிராமணர்கள் ஒன்று சேர்ந்து ராசாவை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள் என்கிறாரே கலைஞர்..?

அவர் வாதப்படியே வைத்துக் கொள்வோம். ‘தலித்’ என்பதால் ஊழல் செய்ய சட்டம் அனுமதித்திருக்கிறதா? சரி, இந்தியாவின் சட்டமேதையாக இருந்த தலித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் இப்படித்தான் ஊழல் செய்தாரா? இதில் சாதி எங்கேயிருந்து வந்தது? ஊழலைப் பொறுத்தவரையில் ஊழல் ஒரு சாதி என்றால், ஊழலுக்கு எதிரானவர்கள் இன்னொரு சாதி. மற்றபடி, சாதிப் பிரச்னையை கிளப்பி அல்ப அரசியல் நடத்தக் கூடாது. ஏற்கனவே ராமகிருஷ்ண ஹெக்டே என்கிற உயர் சாதி இந்துவை பதவி இறக்கம் செய்தேன். அதேபோல, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குப் போட்டேன். ஒரு வழக்கில் அவருக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தேன். அப்படியிருக்க, இதில் சாதி எங்கே வருகிறது? ஜெயலலிதா மீது போட்ட வழக்குகளை அரசுத் தரப்பில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஒரு வழக்கிலும் தண்டனை வாங்கித் தரவில்லையே? அப்ப, கருணாநிதி பிராமண இனத்து ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடக்கிறாரா? கருணாநிதி வாயில் சனி புகுந்து விட்டது. இனி, அவர் இப்படித்தான் கண்டதையும் பேசுவார். கைது பயத்தில் உளறுகிறார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் நடத்திக் காட்டிய ‘சாகச’க் காட்சிகளையெல்லாம் சுவாமி மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறாரே கலைஞர்...

ஆடு நனையுதுன்னு ஓநாய் ஏன் அழ வேண்டும்? நாகரிகத்தைப் பொறுத்த வரையில் அ.தி.மு.க. என்ன? தி.மு.க. என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அந்த சம்பவங்களெல்லாம் இப்போது எதற்காக சொல்கிறார் கருணாநிதி? ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குண்டா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாமல் பிரச்னை

http://tamilan-superpowerindia.blogspot.com/2011/02/blog-post_6727.html