Saturday, March 26, 2011

அப்போது ராடியா; இப்போது கபூர்!


ஆட்சியை கைப்பற்ற தேர்தலில் லஞ்சம் கொடுப்பது ஒரு வகை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கே லஞ்சம் கொடுப்பது மற்றொரு வகை. முதல்வகையில் பயனாளிகள் பொதுமக்கள். இதில் சில ஆயிரங்கள் மட்டுமே வீசப்படும். இரண்டாம் வகையில் பயனாளிகள் எம்.பி.,க்கள். தொகையும் அதிகம். அதாவது சில, பல கோடிகள். அதுவும் கட்டுக்கட்டாக பணம் காட்டப்பட்டு வலைவீசப்படும்.

இந்த உலகத்திற்கே பெரும் நல்ல காரியம் செய்து வரும் விக்கிலீக்ஸ், மன்மோகனின் கடந்த ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற ஏமாற்றுவேலையின் பின்னால் எப்படியெல்லாம் எம்.பி.,க்கள் விலைபேசப்பட்டனர் என்ற நாற்றத்தை நாட்டுக்கு சொல்லியுள்ளது.

கேப்டன் சதீஷ் சர்மா என்பவரும் அவரது உதவியாளர் நச்சிகேதா கபூர் என்பவரும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை அழைத்து, ‘‘பாருங்கள்...’’ என்கின்றனர். கத்தை கத்தையாக பணம். ‘‘எதற்கு இந்த பணம் எல்லாம்?’’ என அதிகாரி கேட்கிறார். ‘‘கவலைப்படாதீர்கள்.. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும். எப்பாடுபட்டாவது அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்’’ என்கிறார் சர்மா. அந்த அதிகாரி இந்த தகவல்களை எல்லாம் வாஷிங்டனில் இருக்கும் தனது எஜமானர்களுக்கு அனுப்புகிறார். இதுதான் கேபிளில் உள்ளது.

சரி. சதீஷ் சர்மா யார்? ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் டூன் ஸ்கூலில் ராஜிவ் காந்தியோடு ஒன்றாக படித்தவர். இந்த நெருக்கத்தை வைத்தே காங்கிரஸ் வளர்ந்தவர். அதன்பிறகும் நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1993 லிருந்து 1996 வரை மத்திய அரசில் பெட்ரோலியத்துறைக்கு மந்திரியாக இருந்தவர். ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை... என நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நிறைய எம்.பி.,க்களுக்கு பெட்ரோல் பங்க் அனுமதி, கேஸ் ஏஜென்சி என அள்ளி வழங்கியவர். தமிழ்நாட்டில்கூட பல காங்கிரஸ்காரர்கள் இன்றைக்கும்கூட பெட்ரோல்பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் என வைத்து ஜாம் ஜாம் என கொழித்துக் கிடக்கின்றனர் என்றால் அது, அந்த காலத்தில் இவர் செய்த புண்ணியத்தில்தான் என்பது பலரும் அறியப்படாத செய்தி.

இந்த சர்மாவிடம் அரசியல் எடுபிடியாக இருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ள நச்சிகேதா கபூர் யார்? டெல்லியின் அதிகார வட்டாரங்களில் உலா வரும் பல ‘எடுப்பு’களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். காங்கிரசில் உள்ள பிரபல பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், அதிரடியான ஆளாகவும் கருதப்படுபவர் ரேணுகா சவுத்ரி. இவருடன்தான் இந்த கபூர் வளைய வந்தார். முந்தைய ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேணுகா பொறுப்பேற்றபோது அவருடனேயே அமைச்சகத்துக்குள்ளும் வந்துவிட ஆசைப்பட்டார். அதாவது அமைச்-சரின் சிறப்பு அதிகாரியாக கபூரை நியமிக்க ரேணுகா முயற்சி செய்ய, அதற்கு மத்திய அமைச்சரவை செயலகம் முட்டுக்கட்டை போட்டு-விட்டது. எந்தவொரு முக்கிய அலுவல்-களும் இவருக்கு அளிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்-கப்பட்டுவிட்டது. ஆனாலும் அறிவிக்-கப்படாத உதவி அதிகாரியாக வளைய வந்துள்ளார்.

அந்த அதிகார பவுஸை கொண்டுதான் இவர் அடிக்கடி பார்ட்டிகளை வைத்துள்ளார். அந்த பார்ட்டிகளில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்-தர்களும் பலமுறை பங்கேற்-றுள்ளனர். அப்போதே கபூரின் செயல்-பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

2009&ம் ஆண்டு தேர்தலில் ரேணுகா சவுத்ரி தோற்றுப் போய் விட்டதால் அமைச்சராக முடியவில்லை. இதனால் கபூரின் நிலைமை கேள்விக்-குறியானது. அப்போதுதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ரேணுகா இருந்த அமைச்சகத்தை விட்டு வெளியேறியபோது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து சில முக்கிய தகவல்களை அழித்துவிடும்படி கீழ்நிலை பணியாளர் ஒருவரை கபூர் மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கும் ஆளானார். தவிர இவரது கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க்கே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமைச்சகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். கூட போடப்பட்டது.

இதற்கிடையில், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கவே, அதில் அடைக்கலம் புகுந்தார் கபூர். 2009 ஜுலையில் ஆர்கனைசிங் கமிட்டி டைரக்டராக சேர்ந்துள்ளார். பிறகு 2010 பிப்ரவரியில் புரோட்டோகால் மற்றும் மீடியா தொடர்பு பிரிவிற்கு டெபுடி டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கப் பெற்றுள்ளார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய்.

தற்போது குடையோ குடையென குடைந்து வரும் சுரேஷ் கல்மாடிக்கு மிகவும் நெருக்கமாகவும் இந்த கபூர் இருந்துள்ளார். இவருடன் பணியாற்ற முடியாது என்று பல மூத்த அரசு அதிகாரிகள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். கபூரின் வரம்புமீறிய செயல்பாடுகளை கல்மாடியாலேயே நிறுத்த முடியாதநிலை கூட ஏற்பட்டது. இதனால் ஒரு சில அதிகாரிகளே கூட தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறவும் செய்துள்ளனர்.

இத்தனை சக்தி வாய்ந்தவரா கபூர் என்று கேட்பதற்கு முன் இன்னும் ஒரு கூடுதல் தகவல். இவரது கல்வி தகுதி என்ன என்பது பற்றி ஆராய்ந்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் பலருக்கும் ஏற்படுகிறது. காமன்வெல்த் ஆர்கனைசிங் கமிட்டிக்கு இவர் அளித்த ஆவணங்களின்படி பி.ஏ. (ஹானர்ஸ்) படித்தவர். ஆனால் இவர் இணைத்து அளித்ததோ டெல்லி பல்கலைக்கழக ரெகுலர் பி.ஏ. டிகிரி சான்றிதழ். அதில் எந்த காலேஜ் அல்லது எந்த கோர்ஸ் என்பது பற்றியோ விவரம் ஏதும் இல்லையாம்.

இவர் என்னதான் படித்தவர் என்று தெரிய, முகமது யூனுஸ் சித்திக் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டபோது அதிகாரிகளால் தகவல் தர இயலவில்லை. கபூர் வெறும் பத்தாம் கிளாஸ் படித்தவர். அதில் கூட அவர் பெயில் ஆனவர் என்று கூறும் சித்திக், இதுகுறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். போர்ஜரி சான்றிதழ்களை காட்டி உயர் அதிகார வளையம் வரை நுழைந்துள்ள இந்த கபூர் பற்றிதான் விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ளது. எம்.பி.,க்களை விலைபேசும் காரியங்களில் ஈடுபட்டதாக இந்த இருவர் மீதும் எழுந்துள்ள சர்ச்சை இப்போது அடங்காது போல தெரிகிறது. எப்படியோ மன்மோகன் ஆட்சி என்பது புரோக்கர்களின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு ராடியா இப்போது கபூர்!

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2587&rid=113












‘‘இதுதான் தி.மு.க.வின் சாதனையா?’’

உறவுகளை இழந்த விஜயலட்சுமியின் சென்ட்டிமென்ட் பிரசாரம்



சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்போம் என தி.மு.க.வினர் புறப்பட்டிருக்கும் நிலையில்... ‘‘என் குடும்பத்தில் ஒருத்தர் கூட இல்லாமல் மொத்தபேரையும் குத்திக் குதறி கொன்று போட்டீர்களே..? இதுதான் உங்கள் சாதனையா?’’ என்று மேடை போட்டு பேசத் தயாராகிவிட்டார் விஜயலட்சுமி.

யார் இந்த விஜயலட்சுமி?

கடந்த வருடம் ஆகஸ்ட் 12&ம் தேதி சேலம் சீல்நாயக்கன்பட்டியில் 78 வயதான ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது மனைவி சந்திரம்மாள், மகன் ரத்தினம், மருமகள் சந்தானலட்சுமி, பேரன் கௌதம், 12 வயதே ஆன பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் சொத்துத் தகராறில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட குப்புராஜின் மகள்தான் இப்போது நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கும் விஜயலட்சுமி.

சொத்துக்காக நடந்த இந்த கொலையில் தொடர்பிருப்பதாக அமைச்சர் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்ப்பட்டதும்... அவரை சிறைக்கே சென்று வீரபாண்டியார் பார்த்துவிட்டு வந்ததும் ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பின.

இந்த நிலையில்... கொலை செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சுமி, ஆரம்பம் முதலே ஆறு பேர் கொலை விஷயத்தில் தீவிர எதிர்ப்பு காட்டி வந்த பி.ஜே.பி. வக்கீல் மணிகண்டன் ஆகியோர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

‘அடுத்தது அ.தி.மு.க-. ஆட்சிதான். உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்’ என்று ஜெயலலிதா தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து, ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியை சேலத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சொல்வேன்’ என்று புறப்பட்டிருக்கிறார் விஜியலட்சுமி.

அவரிடம் பேசினோம்.

‘‘எங்கள் குடும்பத்து நபர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதையும், அதில் சேலம் தி.மு.க. கட்சி ஆட்கள் தலையீடு இருப்பதையும் அம்மாவிடம் சொன்னபோது கலங்கிப் போனார். ‘உங்களுக்கு நியாயம் கிடைக்க என் ஆதரவு உறுதி’ என்று சொல்லி எங்களை ஆறுதல் படுத்தினார். இன்று நான் சொந்த, பந்தங்களை பலி கொடுத்துவிட்டு அநாதையாக நிற்பதற்கு தி.மு.க ஆட்சியும், அதன் ஆட்களும்தான் காரணம். அதற்காகத்தான் இத்தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் சேலத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வேன். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில் என் குடும்பத்துக்கு நடந்த கொடுமையை அதிகமாக பரப்புரை செய்வேன். அம்மா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தி.மு.க. ஆட்சியால் எனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளேன். அம்மாவை சந்தித்துவிட்டு வந்ததையடுத்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சேலம் மாவட்ட தி.மு.க.வினர்தான் காரணம்’’ என்றார் உருக்கமாக.

வக்கீல் மணிகண்டனிடம் பேசினோம்.

‘‘ எனக்கும் செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதிலை. சேலத்தில் அமைச்சர் வீரபாண்டியார் பலப்பல கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார். இதெல்லாம் நியாயமாக சேர்த்த சொத்தா? இல்லை. பல பேரை மிரட்டி சம்பாதித்த சொத்து. இதை அம்மா ஆணைப்படி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மனதில் படும்படி சொல்வேன். சொத்துக்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த தி.மு.க. நிர்வாகிகள் அட்டூழியத்தை எடுத்துச் சொல்வேன்.

ஆரம்பத்தில் சரியாக சென்றுகொண்டிருந்த கொலை வழக்கு, இன்று செயலிழந்துவிட்டது. சி.பி.சி.ஐ.டி. ஏதோ வழக்குத் தொடுத்து விட்டோமே என்ற நினைப்பில்தான் விசாரித்து வருகிறது. உண்மையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அடாவடி, அராஜகம், ஏமாற்றுல், பித்தலாட்டம், ரவுடித்தனம் இதுதான் தி.மு.க. ஆட்சியில் சேலத்தில் நடந்தது. ஆறு பேர் கொலை வழக்கு பற்றிய அத்தனை கொடூரமான விஷயங்களையும் சேலம் தொகுதிக்குட்பட்ட மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வேன். இதுதான் அம்மா எனக்களித்த வேலை.

தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அத்தனை தொகுதி-களிலும் படுதோல்வி அடைய எங்களது ‘ஆறு பேர் கொலை’ பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போகிறோம். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரியில் இந்தக் கொடூரத்தைப் பற்றி வீட்டுக்கு வீடு எடுத்து சொல்லி அவரை தோல்வியடையச் செய்வோம்’’ என்றார் உறுதியாய்.

இதுபற்றி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஏற்கனவே இந்த விஷயத்தில் நாங்கள் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதைக்கண்டு பயந்துதான் அமைச்சர் வீரபாண்டியார் சங்ககிரிக்கு மாறிவிட்டார்’’ என்றார் உற்சாகமாய்.

அ.தி.மு.க. பிரசார வியூகத்தைப் பற்றி சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்திடம் பேசியபோது, ‘‘எதைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. கலைஞரின் நல்லாட்சி திட்டங்கள் எங்களது வெற்றியை எப்பொழுதோ எளிதாக்கிவிட்டது’’ என்றார் போல்டாக.

ஆனாலும், ‘‘ஜாமீனில் வெளிவந்திருக்கும் பாரப்பட்டி சுரேஷை தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டங்களில் தலைகாட்ட வேண்டாம் என்று அமைச்சரே உத்தரவிட்டிருக்கிறார். பிரசாரத்தில் சுரேஷ் இருந்தால் அதை வைத்தே அ.தி.மு.க. எங்கள் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிவிடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்’’ என்கிறார்கள் தி.மு.க.வினர்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2577&rid=113

பட மோசடியில் கருணாநிதி - ஜெயலலிதா குற்றச்சாட்டு !




தவறு என நான் சுட்டியதை மறுக்க, பிழையான படமொன்றைக் காட்டி தமிழக முதல்வர் கருணாநிதி மோசடி செய்துள்ளார் என எதிர்கட்சித்தலைவர் செல்வி: ஜெ.ஜெயலிலதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நான் வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத் தலைவர் மறுக்கிறார் என்று 13.1.2010 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, சப்பைக்கட்டும் வகையில் ஓர் அறிக்கையை கருணாநிதி வெளியிட்ட கருணாநிதி, தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படத்தை வெளியிட வைத்துள்ளார்.

20.1.2010 தேதியிட்ட 'மாலை மலர்' நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'டெக்கான் கிரானிக்கல்' போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ் சிவப்பு. ஆனால், 11.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன். நான் அன்று சட்டமன்றத்தில் பேசிய காட்சிகள் அனைத்துத் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

சட்டமன்றப் பேரவையின் மூலம் தான் என்னுடைய பேச்சுக்கள் அடங்கிய உரை தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால், நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாகத் தெரியும். அனைத்து நாளிதழ்களிலும் புகைப்படம் வெளியானது. கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

11.1.2010 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான் பேரவைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என்னுடைய குற்றச்சாட்டு. இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்த போது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். 8.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது கூட பேரவைத் தலைவருக்கு நான் வணக்கம் தெரிவித்த போது, அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக பேரவைத் தலைவரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் 11.1.2010 அன்று நான் வணக்கம் தெரிவித்தபோது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். 8.1.2010 அன்று நான் சட்டமன்ற பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம். இது மிகப் பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார்.

இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. பத்திரிகைகளுக்கு வண்ணப் படத்தைக் கொடுத்து மாட்டிக் கொண்டுவிட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும். இது போன்ற அற்ப விஷயங்களில் கூட மோசடி செய்து பொய் சொல்லும் முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறாரே என்று நினைத்து தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5130-2010-01-21-22-00-05

காக்க காக்க கனிமொழியை காக்க….. நோக்க நோக்க திஹாரை நோக்க






பக்திப் பரவசமான தலைப்பாக இருக்கிறது என்றுதானே பார்க்கிறீர்கள். இந்தத் தலைப்பின் முதல் பாதியை முணுமுணுத்துக் கொண்டிருப்பது, கருணாநிதியின் குடும்பத்தார். திடீரென்று அத்தனை பேருக்கும் பகுத்தறிவு வேஷத்தைத் தாண்டியும், பக்தி பீறிட்டுக் கொண்டு வருகிறது.

கடந்த வாரம், சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி சிபிஐ உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழி, மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் பெயர்கள் இடம் பெறும் என்று, நேற்று ஹெட்லைன்ஸ் டுடே செய்தி வெளியிட்டது.

நேற்றைய நாளேடுகளில் வெளி வந்திருக்கும் செய்தியோ, கலைஞர் டிவி எம்டி சரத்குமார் பெயர் மட்டும் தான் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறும் என்று தெரிவிக்கின்றது. கலைஞர் டிவியில், சரத் குமார் ஒரு சாதாரண வேலையாள். ஊழியர். 20 சதவிகித பங்கை வைத்திருப்பதாலேயே, கலைஞர் டிவியில் எல்லா முடிவுகளையும் அவர் எடுப்பார் என்று கூற முடியாது. அந்த நிறுவனத்தில் பெரும்பான்மை பங்கு வைத்திருக்கக் கூடிய, தயாளுவுக்கும், கனிமொழிக்கும் இல்லாத பொறுப்பு சரத்குமாருக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

DSC_0159

சரி இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால், வரக்கூடிய தகவல்கள் இந்திய ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

karunanidhi_dhayalu_ammal

தயாளு, சிபிஐ கேள்வி கேட்கும் போது, இதே போல வாயை வைத்திருந்திருப்பாரோ

கருணாநிதியின் கண்களாகவும், காதுகளாகவும், இருக்கும், ஜாபர் சேட் கருணாநிதியின் குடும்பத்தினரை பாதுகாக்க பல்வேறு வேலைகளிள் ஈடுபட்டாலும், டெல்லியில் ஜாபர் சேட்டுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை. ஆனால், காவல்துறையில், யாரை, எப்படி, எப்போது பிடிப்பது என்பது, அரிச்சுவடி. அந்த வகையில், கருணாநிதி குடும்பத்தினரை பாதுகாக்க, ஜாபர் சேட் தேர்ந்தெடுத்த நபர், முகம்மது ஷகீல் அக்தர்.

IMG_8801

முகம்மது ஷகீல் அக்தர்

யார் இந்த முகம்மது ஷகீல் அக்தர்…. ? இவர் 1989ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்டோரை பெங்களுரில் சுட்டுக் கொன்ற போது இவர் பிரபலமானார். இமாம் அலியை சுட்டுக் கொன்றதால், இவரது உயிருக்கு ஆபத்து என்று வந்த உளவுத் துறையின் தகவலை அடுத்து, மத்திய அரசுப் பணிக்கு டெல்லி செல்கிறார்.

ஷகீல் அக்தர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பீகார் மாநிலத்தில் லல்லு கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரோடு மிகுந்த நெருக்கம் உள்ளது, ஷகீல் அக்தரின் குடும்பம். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த சத்ருக்கன் சின்ஹாவிடம், கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்கிறார்.

பிறகு, திமுகவைச் சேர்ந்த ரகுபதி உள்துறையின் மத்திய இணை அமைச்சர் ஆனதும், அவருக்கு செயலாளராக ஆகிறார் அக்தர். மத்திய அமைச்சரின் செயலாளர் என்ற முறையில், ஐபி என்று அழைக்கப் படும் மத்திய உளவுத் துறையின் ரகசிய அறிக்கைகளும், நாகா தீவிரவாதிகளோடு நடத்தப் படும் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களும், ஷகீல் அக்தருக்கு வரும்.

இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஷகீல் அக்தருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. அந்தப் பெண்ணோடு ஷகீல் அக்தர் “நெருங்கிப்” பழகுகிறார். அந்த நெருக்கமான பழக்கத்தில், ஷகீல் அக்தர் தனது பாஸ்போர்ட்டைதொலைத்து விடுகிறார். புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பழைய பாஸ்போர்ட் எங்கே என்று கேட்டால் தொலைந்து போய் விட்டது என்கிறார். உடனடியாக இவர் மீது மத்திய உளவுத் துறையும், ‘ரா’ வும், கண்காணிப்பைத் தீவிரப் படுத்தின. கண்காணித்த போது, அந்த ஆங்கில அணங்கோடு, ஷகீல் அக்தர், டெல்லியின் பிரபல நட்சத்திர ஓட்டல்களிலும், கெஸ்ட் ஹவுஸ்களிலும் நடத்திய ‘சட்டம் ஒழுங்கு’ விவாதத்தைப் பற்யிய தகவல்களை உளவுத்துறை புகைப்பட ஆதாரங்களோடு கண்டுபிடித்தது. கண்டு பிடித்ததும், ஷகீல் அக்தர் கைது செய்யப்படும் நிலைக்கு ஆளானார்.

IMG_8798

அரசியல் வாதிகளோடு தொடர்பு இருக்கும் அதிகாரிகளை யார்தான் என்ன செய்ய முடியும் ?

உடனே லாலு பிரசாத் யாதவ், கருணாநிதியிடம் பேசி, இரவோடு இரவாக, ஷகீல் அக்தர், தமிழ்நாட்டுக்கு மாற்றப்படுகிறார். இது குறித்து அப்போது ஜெயலலிதா, இரவோடு இரவாக மாற்றப் பட்ட மர்மம் என்ன என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு, கருணாநிதியின் பதில் என்ன தெரியுமா ?

1580963828_4ea23b4ece_b

“ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஷகீல் அக்தருக்கு மெடல் குடுத்திருக்கிறார்” அதனால், அந்த அம்மையாரின் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. (கருமம், கருமம்) இதற்கு ஜெயலலிதா வெளியிட்ட பதில் அறிக்கையில்

“உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதிஅவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது.

அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்யதனியாக ஒரு குழு இருக்கிறது.

அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார்.

மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகாரிகளை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன?எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர்பட்டியலிட வேண்டும்.

ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணிஅமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?

சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன?

ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப்புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும்.

இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா ?”

என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு, இந்தச் சம்பவங்கள் மறக்கப் பட்டு, ஷகீல் அக்தர், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு இன்று வரை நடமாடி வருகிறார்.

பேக்ரவுண்ட் போதுமா ? இந்த ஷகீல் அக்தரிடம் தான், கனிமொழியையும், தயாளுவையும் காப்பாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கான காரணம், டெல்லியில் நீண்ட காலம் பணியாற்றியதனால், அவருக்கு உள்ள டெல்லி தொடர்புகள்.

அதற்காக நேரடியாக ஷகீல் யாரையும் தொடர்பு கொண்டு விட முடியாதல்லவா ? இதற்கு ஜாபர் சேட் வழி செய்து கொடுத்தார். இந்த ஆண்டு காவல் அதிகாரிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் பட்டியலில், ஜாபருக்கு, சர்வதேச சட்ட விருது ஒன்று வழங்கப் பட்டது. இந்த விருதை வழங்கியது, சர்வதேச சட்ட வல்லுனர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பு, ஒரு டுபாக்கூர் அமைப்பு. சட்ட வல்லுநர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, நீதிபதிகளுக்கு ப்ரோக்கர்களாக செயல்படுவதுதான். இதன் தலைவர், டாக்டர் (?????) ஆதிஷ் அகர்வாலா. இவர் வகிக்கும் பதவிகளை பட்டியலிடுகிறேன் பாருங்கள். இவர் ஒரு நாள் கூட கோட் போட்டு, நீதிமன்றத்தில் வாதாடியதே இல்லை என்பது கூடுதல் தகவல்.

jaff

Chairman, All India Bar Association
Convener, Indian Council of Jurists
Chairman, India Legal Information Institute
Secretary General, All India Senior Advocates Association

Senior Additional Advocate General, Govt. of Haryana
Additional Advocate General, Govt. of Punjab
Sr. Central Govt. Counsel, Supreme Court of India
Member, Bar Council of Delhi
Ex. Vice-Chairman, Bar Council of India
Ex. Vice-President, Supreme Court Bar Association
Ex. Additional Advocate General, Govt of Uttar Pradesh

மகாநதி படத்தில், ஹனீபா, விசிட்டிங் கார்டுகளை எடுத்து கமலிடம் காண்பிப்பது நினைவுக்கு வருகிறதா ? இந்த டுபாக்கூர் அமைப்பின் தமிழ்நாட்டுப் பிரதிநிதி, ஒரு டுபாக்கூர் வழக்கறிஞர் சங்கத்தை நடத்தி வரும், பிரபாகரன் என்ற வழக்கறிஞர். இந்த பிரபாகரன், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ப்ரோக்கராக செயல்பட்டு வருகிறார் என்பது உயர்நீதிமன்ற வட்டார தகவல்.

02ndjvn01_SC_Addl_A_492825e

டாக்டர் ஆதிஷ் அகர்வாலா

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி வந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நேர்மையான வழக்கறிஞர்கள் அவரை சந்தித்து, “நீங்கள் இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் சங்கம் நடத்தும் விழாக்களில் பங்கெடுத்து, அந்த சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ? “பிரபாகரன் நேர்மையற்றவர் என்றால், நீங்கள் மட்டும் நேர்மையானவர்களா ? ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்து இப்படிப் பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ? நான் அந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது” என்று கூறினார். எதற்கு மூடி மறைப்பானேன்… அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வேறு யாருமல்ல…. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ள சதாசிவம் தான் அது.

இந்த பிரபாகரன், சமீபத்தில் சீனாவில் நடந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் (???????) சென்னையைச் சேர்ந்த, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த சுப்ரமணி என்ற பத்திரிக்கையாளரை மட்டும், செலவு செய்து சீனா அழைத்துச் சென்றார் என்பது கூடுதல் தகவல்.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த ஆதிஷ் அகர்வாலா, ஜாபர் சேட்டுக்கு, சர்வதேச சட்ட வல்லுனர்கள் குழுமம் அளிக்கும் விருது ஒன்றை வழங்குகிறார். அந்த விருதில், அச்சமில்லாமல் பணியாற்றி, தீவிரவாதத்தையும், குற்றங்களையும், ஒழித்து தேசிய அளவில், மிகச் சிறப்பான பெயரை பெற்று, காவல் துறையில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தார் என்பதுதான் அந்த விருது. இந்த விருதை ஆதிஷ் அகர்வாலா வழங்குகிறார்.

Jaffer_important_picture

இதற்கு ஜாபர் கைமாறு செய்ய வேண்டாமா ? செய்தார். அது என்னவென்றால், ஆதிஷ் அகர்வாலாவை தமிழகத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது. (Additional Advocate General). இந்த பதவியை ஆதிஷ் அகர்வாலாவின் பதவிப் பட்டியலோடு சேர்த்து படியுங்கள். இந்த நியமனம் எப்போது வழங்கப் பட்டது தெரியுமா ? தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட அன்று. அறிவிப்பு வெளி வந்த பிறகு. முன் தேதியிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதற்கான அரசாணை வெளிப்படையாக வழங்கப் படாமல், மறைத்து வைக்கப் பட்டது கூடுதல் தகவல்.

Jaffer-important-picture

இந்த ஆதிஷ் அகர்வாலாவைத் தான் ஷகீல் அக்தரை தொடர்பு கொள்ள வைத்திருக்கிறார். ஆதிஷ் அகர்வாலா மூலமாக, மற்றொரு டெல்லி வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு, சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழியின் பெயரையும், தயாளுவின் பெயரையும் சேர்க்காமல் இருக்க ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஷகீல் அக்தரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

முதலில் சவுக்குக்கு இந்த தகவல் வந்த போது, இதை நம்பவில்லை. உச்சநீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கில் எப்படி இவ்வளவு தைரியமாக இதைச் செய்வார்கள் என்று நம்பவே முடியவில்லை. மேலும் உச்ச நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கையை ஆய்வு செய்த பிறகுதான், சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது, இவ்வளவு தைரியமாக எப்படிச் செய்வார்கள் என்று சந்தேகமாக இருந்தது.

IMG_8799

ஆனால், தினமணியிலும், மற்ற நாளேடுகளிலும் வரும் செய்தி, சரத்குமார் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை என்பது. மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கும், செய்தி. ஆனால் மனம் தளரலாமா ? இந்தத் தகவலை, சுப்ரமணியன் சுவாமிக்கும், உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்தி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும் சவுக்கு அனுப்பியுள்ளது. (நாங்களும் விடமாட்டோமுல்ல…)

சமூக அவலங்களை வெளிப்படுத்த கலைஞர் பராசக்தி எடுக்கலாம்,நான் சட்டப்படி குற்றம் எடுக்கக்கூடாதா? எஸ்.ஏ.சந்திரசேகர்

மழைவிட்டாலும் தூவானம்விடாத குறை​யாக 'காவலன்’ படப்பஞ்சாயத்துகள் முடிந்து, 'ஸ்ஸ்ஸ்... அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருந்த நேரத்தில், விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அடுத்த டார்ச்சர் ஆரம்பம்!

அவர் தயாரித்து இயக்கிய 'சட்டப்படி குற்றம்’, மார்ச்-25 ரிலீஸ் என்று அறிவிப்புகள் வந்தன. 'ஆளும் கட்சி சார்ந்த சில விஷயங்களை படம் அம்பலப்படுத்தும்’ என்ற பேச்சு இருந்தது. இப்போது, ''அந்தப் படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள்...'' என்று குற்றம் சாட்டுகிறார் எஸ்.ஏ.சி. அவரை சந்தித்ததுமே பொங்கி எழுந்து​விட்டார்.

''நான் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசையும் அமைச்சர்களையும் கடுமை​யாகத் தாக்கித்தான், 'நீதிக்குத் தண்டனை’ என்ற படம் எடுத்தேன். எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால், தடுத்து இருக்கலாம். ஆனால், அவர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். 'படத்தை அஞ்சு தடவை பார்த்தேன்... சமூக அக்கறையோட எடுத்திருக்கே, சபாஷ்!’ என தோளில் தட்டிப் பாராட்டி, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்ல படம் எடுத்து நாளாச்சு... நீ ஒரு படம் பண்றியா?’ என்று பாசமாகக் கேட்டார்.

ஆனால் இப்போது, 'சட்டப்படி குற்றம்’ படத்தை யாரும் இன்னும் பார்க்கவே இல்லை. அதற்குள் தேர்தல் கமிஷனிடம் தடை கோரிக் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஏன் இந்தப் புத்தி? எந்த நோக்கத்துக்காக கலைஞர் 'பராசக்தி’ படம் எடுத்​தாரோ, அதே நோக்கத்தில்தான் நானும் 'சட்டப்படி குற்றம்’ எடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதைச் சுட்டிக்காட்டி, எப்படி சரிசெய்யலாம் என தீர்வையும் சொல்லி இருக்கி​றேன். அதற்கு ஏன் தடை?'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''நான் படத்தைப் போட்டுக் காட்​டிய​போது, விநியோ​கஸ்தர்​கள் உடனே வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் என்ன உள் குத்து நடந்ததோ? சொல்லி​வைத்தமாதிரி திடீரென்று பின்வாங்கிவிட்டார்கள்! அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அதேபோல, அந்தப் படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் அதிபர்களை மிரட்டியது யார்? இந்தப் படம் எடுக்க நான் பட்ட கஷ்டங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லி முறையிடுவேன். அந்தச் சங்கத்தில் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களும் அலட்சியம் செய்தால், எனக்கு சாவதைத் தவிர, வேறு வழி இல்லை! அதையாவது செய்யவிடுங்கள்!'' என்று கோபமும் ஆவேசமுமாகக் கொந்தளித்து அடங்கினார் எஸ்.ஏ.சி.!

http://www.thedipaar.com/news/news.php?id=25996

Mar 26 எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் மீட்டுக் கொடுத்த வீடுதான் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு.

அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளராக, தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார் ராதாரவி. பத்தே பத்து தகவல்கள் சொல்கிறேன் என்று மடமடவென கொட்டத் தொடங்கினார். ''தமிழ்நாட்டு மக்களிடம் நான் சொல்லப்போகும் விஷயங்கள் இவைதான்'' என்கிறார்!

ஐம்பெரும் தலைவர்கள்

''ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள்... நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன் ஆகியோர்​தான். இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, நடராசன் மகன் என்.வி.என்.செல்வம், மதியழகன் தம்பி கிருஷ்ணசாமி, மகன் முகிலன், சம்பத் மனைவி சுலோசனா என்று நான்கு பேரின் வாரிசுகளும் இப்போது அ.தி.மு.க-வில் அம்மாவுடன்தான் இருக்கிறார்கள்!

கோபாலபுரத்து வீடு

'மக்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டேன்’ என்று கோபாலபுரத்து வீட்டைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்கிறார், கருணாநிதி. தனது மேகலா பிக்சர்ஸ் சினிமா கம்பெனிக்காக கருணாநிதி, அந்த வீட்டை அடகுவைத்தார். வெளிவந்த படங்கள் தோற்றன. அதனால், வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மா ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் வெறும் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 'எங்கள் தங்கம்’ படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். படம் பிரமாதமாக வியாபாரம் ஆனது. அந்தப் பணத்தில்தான் ஏலத்துக்குப் போன வீட்டைத் திரும்பப் பெற்றார். எம்.ஜி.ஆரும், அம்மாவும் மீட்டுக்கொடுத்த கோபாலபுர வீட்டைத்தான், இப்போது பொது மக்களுக்கு தானமாகத் தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் கருணாநிதி!

கருணாநிதி கமென்ட்

கோடானுகோடி ரூபாய்களை விழுங்கி, திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவை, 'குற்றவாளி இல்லை...’ என்று பிதற்றும் கருணாநிதி, பொய் வழக்குப் போடப்பட்ட அம்மாவை வாய் கூசாமல் 'குற்றவாளி’ என்பது எந்த விதத்தில் நியாயம்? டெல்லியில் சோனியாவை சந்தித்தபோது, 'எதிரியை நம்பலாம். ஆனால், துரோகியை நம்பக் கூடாது!’ என்று ராமதாஸ்பற்றி தன்னிடம் சோனியா சொன்னதாக கருணாநிதி கூறினார். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்?

சினிமா விளம்பரம்

நான், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், டப்பிங் கலைஞர்கள் அமைப்பின் தலைவர், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர். தினசரிப் பத்திரிகைகளில் கால் பக்கத்துக்கு மேல் சினிமா விளம்பரம் தரக் கூடாது என்பது சட்ட விதி. திடீர் என்று ஆளும் கட்சி ஆட்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தால், என்ன அர்த்தம்? தங்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை என்கிற கர்வம்தானே காரணம்?

சாவைத் தேடிய சாதிக் பாட்சா

சாதாரண ஜவுளி வியாபாரம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தார், சாதிக் பாட்சா. அவர் செய்த ஒரே பாவம்... ராசாவுக்கு நண்பராக இருந்ததுதான். சகவாசம் சரியில்லேன்னா சாவுகூட வீடு தேடி வரும் என்பதற்கு சாதிக் பாட்சாவின் மரணமே சாட்சி!

விஜயகாந்த் வளர்ச்சி

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பன் விஜயகாந்த். கட்சி தொடங்கிய அஞ்சு வருஷத்தில் நல்ல வளர்ச்சி. இது வரை விஜயகாந்த் இரண்டு படிக்கட்டுகள்தான் ஏறி இருக்கிறார். எப்போது எங்கள் அம்மாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, இனிமேல்தான் 98 படி உசரத்துக்கு அசுர வளர்ச்சி காணப்போவது உறுதி!

கருணாநிதி மாளிகை

ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகம் அமைக்க ஆசைப்பட்டார், அம்மா. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி வாசலில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்கினார் ஸ்டாலின். இப்போது அந்தக் கல்லூரிக்குள் கருணாநிதி மாளிகை என்று பெரிய வளாகத்தை யாரைக் கேட்டு கட்டி இருக்கிறார்கள்? பொதுவான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் இருக்கும் கட்டடத்துக்கு கருணாநிதி பெயரை எப்படிப் பயன்படுத்தலாம்?

ரிஜிஸ்டர் ஆபீஸ் வில்லன்கள்

சென்னை மட்டும் அல்ல... தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆளும் கட்சி ஆட்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் காசு இல்லாமல், உறவினர்களுக்கு ஆபரேஷன் செய்யப் பணம் இல்லாமல் பரம்பரையாக வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள், அப்பாவி மக்கள். அந்த வீட்டுக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாத ஆளும் கட்சி ஆட்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, ''எங்களுக்கு இரண்டு பெர்சன்ட் கொடு!'' என்று மிரட்டி வாங்கும் கொடூரம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுவிட்டு பல லட்சத்தை மிரட்டிப் பிடுங்குகிறார்கள்!

கான்கிரீட் வீடு டோக்கன்

அவசரத்துக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொண்டுபோகிறவர்கள் காரை மறித்து, சோதனை போடும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்கிறேன்? 'கான்கிரீட் வீடு கட்டித் தருகிறேன்’ என்று இப்போது டோக்கன்களைக் கொடுக்கிறார்களே. இது லஞ்சம் இல்லையா, உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

பிராணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை

சென்னை நந்தனத்தில் 'வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி’ உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள். வெளிநாட்டுக் கோழிகள், அபூர்வ வகை மான்கள், விசித்திரமான பிராணிகள் ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இந்த இடத்தை தமிழக அரசு பறக்கும் ரயில் திட்டத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கிறது. உண்மையில் ரயில்வே நிர்வாகம் தேவர் சிலைக்கு எதிரில் இருக்கும் இடத்தையே கேட்டது. ஆனால், வம்படியாக இந்த இடத்தை வாரி வழங்கி இருக்கிறார்கள். இங்கு வாழும் வாயில்லா ஜீவன்களை வேறு இடத்துக்கு மாற்றினால், இறந்துவிடும் என்று எடுத்துச் சொல்லியும் பிடிவாதம் பிடிக்கிறது, தமிழக அரசு. ஏன் இத்தனை பிடிவாதம்?''

http://www.thedipaar.com/news/news.php?id=26075

நாய்கள்,பன்றிகள்,கழுதைகள் இவைகள்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள். எஸ்.வி.சேகர்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசி​யாக ரிலீஸ் ஆவதும் அதில் குளறுபடிகள் குத்தாட்டம் போடுவதும் தேர்தலுக்குத் தேர்தல் அரங்கேறும் சம்பிரதாயம். இருந்தாலும், இந்தத் தேர்தலில் கொஞ்சம் ஓவர்!

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட... உடனடி எதிரொலியாக பாடை கட்டுவது, கொடும்பாவி எரிப்பு, கொடிக் கம்பங்கள் சாய்ப்பு, சத்தியமூர்த்தி பவன் சூறை​யாடல் என்று கதர் வேட்டிகள் கபடி ஆடு​கின்றன. 'கூட்டணி சேரவும் தெரியலை... ஸீட் ஒதுக்​கவும் தெரியலை’ என்று கொந்தளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இந்தப் பட்டியலில், இப்போது இருக்கும் 28 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போலவே பட்டியலில் ஜி.கே.வாசனின் 'கை’யே ஓங்கி இருக்கிறது. அவர் ஆதரவாளர்கள் 22 பேருக்கும், தங்கபாலு ஆதரவாளர்கள் 13 பேருக்கும், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 12 பேருக்கும், இளைஞர் காங்கிரஸுக்கு 9 பேருக்கும் பங்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு போன்றவர்களுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளே!

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு​வின் மனைவி ஜெயந்தி தங்கபாலுக்கு ஸீட் கொடுக்கப்​பட்டதற்குதான் உச்சகட்டக் கோபத்தைக் காட்டிவிட்​டனர் காங்கிரஸ்காரர்கள். சில மாதங்கள் முன்பு காங்கிரஸில் சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான எஸ்.வி.சேகர், அதே தொகுதியைக் குறிவைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைகள் பார்த்து வந்த கராத்தே தியாகராஜன் இருவரும் செம அப்செட்!

வேட்பாளர் குளறுபடிபற்றி காங்கிரஸ் புள்ளிகளிடம் பேசினோம். ''எஸ்.வி.சேகருக்காக ஜி.கே.வாசனும், இளங்கோவனும் பரிந்துரை செய்தனர். பொதுவாக, டெல்லி தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர்கொண்ட பட்டியலைக் கேட்கும். அதில் சம்பந்தப்பட்ட தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. இருந்தால், அவர் பெயர்தான் முதலில் இடம் பெறும். ஆனால், மயிலாப்பூர் தொகுதியில் தன் மனைவி ஜெயந்தி பெயரை முதலில் போட்டிருந்தார் தங்கபாலு. கடைசியாகத்தான் எஸ்.வி.சேகர் பெயர். எப்படியோ, தங்கபாலுவின் ஆசை நிறைவேறிவிட்டது...'' என்கிறார்கள்.

எஸ்.வி.சேகருக்காக வேறு சிலர் வயலார் ரவியிடம் சொல்லி இருக்கின்றனர். 'கவலைப்பட வேண்டாம். அவர் பெயர் பட்டியலில் உள்ளது’ என்று சொன்னாராம். விடியல் சேகர் பெயரைப் பார்த்து அதான் எஸ்.வி.சேகர் என்று வயலார் ரவி புரிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். 'புதுசாக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு ஸீட் தரக் கூடாது’ என்று நாமக்கல் ஜெயக்குமார் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தாராம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. ஆகி, பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய், அங்கு இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த செல்வப் பெருந்தகைக்கு செங்கம் தொகுதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, பி.ஜே.பி-யில் இருந்து வந்த திருநாவுக்கரசருக்கு, அறந்தாங்கி தொகுதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் சொல்லிப் புலம்புகிறது எஸ்.வி.சேகர் கோஷ்டி.

''தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்று, அவரைக் கவிழ்ப்பதற்காக எதிர் எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்த தங்கபாலுவும், ஜி.கே.வாசனும் கரம் கோத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள்!'' என்கிறார்கள்.

''சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலை வைத்துக்கூட படுக்காதவர்களுக்கும் ஸீட். கிரிமினல் வழக்கில் பேசப்பட்ட ஒருவர் ஸீட் வாங்க 1.50 கோடி 'கை’ மாறியதாம். வேட்பாளர் தேர்வில் நடந்த முயற்சியில் ஒரு செல்போன் உரையாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வேட்பாளரின் அழகைப்பற்றி வர்ணிக்கிறார்கள். 'நைஸ் லுக்கிங் லேடி’ என்று போகும் அந்த உரையாடல் ஆபாச ரகம். இதை எல்லாம் டெல்லியில் சொல்லி ஸீட் வாங்கி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டதுதான் கொடுமை. இப்போது ஸீட் வாங்கியவர்களில் முக்கியமான சிலர்தான் ஜெயிப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, 'கருணாநிதி காங்கிரஸ்’ கோஷ்டி ஒன்று செயல்படுகிறது. அவர்களை எப்படியும் வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது. மெஜாரிட்டிக்கு நெருக்கத்தில் போட்டியிடும் தி.மு.க. எப்படியும் அறுதிப்பெரும்பான்மை பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், கருணாநிதி காங்கிரஸ் கோஷ்டியினர் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களைவைத்து ஆட்சி அமைக்க வசதியாக இருக்கும் என்று தி.மு.க. நினைக்கிறது!'' என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் கூட்டமாக நின்று பேசுகிறார்கள்.

காங்கிரஸின் சீனியர்கள் சிலர், ''பெருந்​தலைவர் காமராஜ், 'கட்சிப் பணிக்கு மூத்தவர்கள் வர வேண்டும். அரசியல் பதவிகள் புதியவர்​களுக்குத் தர வேண்டும்’ என்று அறிவித்து முதல்வர் பதவியை துறந்தார். இதுதான் காமராஜரின் 'கே பிளான்.’ ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு, தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களுக்குதான் ஸீட்களை வாரி வழங்குகிறார்கள். யசோதா நான்கு ஐந்து முறை எம்.எல்.ஏ. அதோடு, சில தேர்தல்களில் போட்டி​யிட்டு தோல்வியும் அடைந்தார். கே.ஆர்.ராமசாமி 1989 முதல் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். வேலூர் ஞானசேகரன், 1991-ல் இருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ. இவர்களுக்கு இப்போதும் ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். ஜெயந்தி தங்கபாலு, அருள் அன்பரசு, விஷ்ணு பிரசாத் என்று வாரிசுகளுக்கு ஸீட்களை வாரி வழங்கி இருப்பதைவைத்தே காங்கிரஸ் கட்சி சல்லடையாகப் போய்க்கொண்டு இருக்கிறது!'' என்று சலிப்போடு சொன்னார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப்பற்றியும், அவர்களின் பின்னணிபற்றியும் நிலவும் அதிருப்தியை வி.ஐ.பி. புள்ளிகள் என்ன சொல்கிறார்கள்?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கேட்டோம். ''உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நிச்சயமாக ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே, எம்.எல்.ஏ-வாக இருந்த ராணி வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நான் பரிந்துரை செய்த யாருக்கும் ஸீட் கிடைக்கவில்லை. எனது வருத்தம், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஸீட் கிடைக்கவில்லை என்பதுதான். தங்கபாலு தன் குடும்பத்தினரும் எடுபிடிகளும் போட்டியிட வழி செய்திருக்கிறார். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் ஏன் இவற்றைத் தட்டிக் கேட்கவில்லை என்று தெரியவில்லை?'' என்றார் காட்டத்துடன்.

''அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு? சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்!'' என்கிறார் எஸ்.வி.சேகர்.

கராத்தே தியாகராஜனை சந்தித்தோம். ''மயிலாப்பூரில் மட்டும் இளைஞர் காங்கிரஸுக்காக 5,000 பேரை சேர்த்தோம். ஓர் உறுப்பினரைக்கூட சேர்க்காத ஜெயந்திக்கு ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் ப.சிதம்பரத்தை வைத்து பட்ஜெட் விளக்கக் கூட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கூட்டம், கடந்த எம்.பி. தேர்தலில் தீவுத் திடலில் கூட்ட ஏற்பாடு, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுலுக்கு வரவேற்பு என்று கட்சியை வளர்ப்பதற்காக எத்தனையோ வேலைகளைச் செய்திருக்கிறோம். கொடி கட்டவும், போஸ்டர் ஒட்டவும், மேடை போடவும் மட்டும் நாங்களா? எங்கள் உழைப்பைச் சுரண்டி, அதில் அவர் மனைவிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்திருக்கும் உழைப்புத் திருடர்தான் தங்கபாலு. அவரது செல்போனைத் தூக்கிக்கொண்டு வரும் தாமோதரனும், அவருக்கு கார் கதவைத் திறந்துவிடும் சிவலிங்கமும் வேட்பாளர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்றார் சீற்றத்துடன்.

இதில் எத்தனை பேர் தேறுவார்​களோ?

http://www.thedipaar.com/news/news.php?id=26078



Tuesday, March 22, 2011

வரலாறு மறந்த வடிவேலு வோட்டு கேட்டு வருகிறார்


வடிவேலு இன்று கருணாநிதியின் வீட்டு வாசலில் காலை வைப்பதற்கு முன் MGR பற்றி சற்று யோசனை செய்திருந்தால், தான் செய்துள்ள தவறை உணர்ந்திருப்பார். லட்ச்கனக்கான் அவரது MGR ரசிகர்கள் இன்றும் கருணாநிதி MGR க்கு செய்த துரோகத்தை மறக்கவில்லை. உயிர் உள்ளவரை MGR கருணாநிதியை தனது பக்கம் அண்ட விடவில்லை. இன்று வடிவேலு அதெல்லாம் மறந்துவிட்டு கருணாநிதிக்கு ஓட்டு பிச்சை எடுக்க கிளம்பிவிட்டார். அதன பயனை அவர் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவருக்கும் விஜய காந்துக்கும் உண்டான தனிப்பட்ட பிரச்சனயை அரசியலோடு தொடர்புறுத்தி, கருணாநிதி என்னும் தீய சக்திக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. மின் வெட்டு, வரலாறு காணாத விலை வாசி உயர்வு, பொது மக்கள் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, மக்கள் வரி பணத்தை விரயம் செய்து மாநாடுகள் நடத்துதல், எல்லாவற்றுக்கும் மேலாக spectrum ஊழலில் கோடி கோடியாக கொள்ளையடித்து தங்கள் குடும்ப நபர்களுக்கு வாரி வழங்கியது, இது போன்ற இன்னும் ஏராளமான புகார்கள் உள்ளன. மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், இன்னும் சொல்ல மறந்த பல அராஜகங்கள் கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளாகும். இப்படி பட்ட ஒரு அராஜக கட்சிக்கு வோட்டு கேட்டு வடிவேல் மக்களிடம் வருகிறார். மக்கள் வடிவேலுவிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.


எட்டாவது வள்ளல் MGR


அவன் மயிலுக்குப் போர்வை! இவன் மனுஷிக்குப் போர்வை!

10-10-1972 ல் நம் வள்ளல் தி.மு.க. வில் இருந்து நீக்கப்படுகிறார். 16-10-1972 ல் நம் வள்ளல் அ.தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்குகிறார். 22-5-1973ல் தமிழகத்தின்தலையெழுத்தையே மாற்றி அமைத்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல்! முப்பிறவி கண்ட வள்ளல், மூன்றாவது கட்டப் பிரச்சாரத்திற்குச் செல்கிறார். வள்ளல் இயக்கி, நடித்து தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற ஒப்பற்ற காவியத்தை ஓட விடாமல் செய்த விடலாம் என்று சவால் விடுகிறார்கள். சட்டம்கூட தீட்டுகிறார்கள். ஏன் வள்ளலின் மூச்சை நிறுத்தி விடலாம் என்றெல்லாம்; எதிரிகள் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் நம் முடி சூடா மன்னன் அத்தனைபேரையும் முறியடித்துக் காட்டுகிறார்.

சென்னையிலிருந்து புறப்பட்ட வள்ளல், ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்குப் பிறகும் செல்லும் வழியை மாற்றி, வாகனத்தை மாற்றி, மாற்றி பயணம் செய்கிறார். காலத்தை வென்ற அந்தக் காவிய நாயகன், காரில் செல்கிறாரா, வேனில் செல்கிறாரா, லாரியில் செல்கிறாரா என்று எதிரிகள், திக்குமுக்காடிப் போகிறார்கள்.

மணப்பாறையைத் தாண்டும் பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில், மாட்டு வண்டியில் தர்மத்தின் தலைவன் தலைப்பாகை சகிதமாய்ச் சென்றதை எதிரிகள் தெரிந்துகொள்கிறார்கள். புத்தாந்ததம் என்ற ஊரைத் தாண்டியவுடன் போட்டுத் தள்ளி விடலாம் என்று தீர்மானம் போடுகிறார்கள்.

புத்தாந்த்தத்தை வண்டி தாண்டுகிறது. எதிரிகள் மாட்டுவண்டியைச் சூழ்ந்து ஆயுதங்களுடன் வழிமறிக்கின்றனர். ஆனால் வள்ளல் மாட்டு வண்டியில் இல்லை. எதிரிகள் ஏமாந்து நிற்பதை புன்முறுவல் பூக்க வேனில் சென்ற பொன்மனச் செம்மல், மாட்டு வண்டியைக் கடந்து செல்கிறார். இப்படி வள்ளல் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பயணத்தைத் தொடர்கிறார். மணி நள்ளிரவு பன்னிரெண்டாகிவிட்டது. விடிந்து பயணத்தைத் தொடரலாம் என்று புரட்சித்தலைவர் முடிவெடுக்கிறார்.

வேனை ரோட்டோரப் புதரில் நிற்கவைத்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள், அந்தப் பொற்பாதம் நடக்கிறது. நடுக்காட்டில் பாய்விரித்துப் படுக்கிறார். பரங்கிமலை மன்னன் எத்தனை பேருக்குப் பட்டுமெத்தை விரித்த, நம் எட்டாவது வள்ளல் கட்டாந்தரையிலா?

உடன் சென்ற தொண்ர்கள் சுற்றி நின்று, காவல் காக்கிறோம் என்பதை மறந்து அந்த அவதாரக் குழந்தை உறங்கும் அழகை, உற்றுப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சூரியன் ஒருநாளும் பொன்மனச் செம்மலைத் தொட்டு எழுப்பியதில்லை. அவர் எழுந்த பிறகுதான் சூரியன் எழும் என்பதுதான் வரலாறு. அன்றும் அதிகாலை ஐந்து மணிக்கு வள்ளல் கண்விழித்துப்பார்க்கிறார்.

எதிரில் ஒரு வயதான மூதாட்டி இரண்டு அலுமினிய சட்டியுடன் தன் கால்மாட்டில், காத்துக் கிடப்பதைப்பார்த்த வள்ளல் திகைக்கிறார்! யார் இந்த மூதாட்டி? எப்படி இந்த அடர்ந்த காட்டுக்குள் இவ்வளவு அதிகாலையில் வர முடிந்தது? ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? வள்ளலுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளவே வாய் மலர்கிறார்.

“தாயே உங்களுக்கு என்ன வேண்டும்? எங்கிருந்து வருகிறீர்கள்!”

“எனக்கு ஒண்ணும் வேணாம். நான் வாங்க வரவில்லை. மகனே! நான் உனக்கு கொடுக வந்திருக்கிறேன்.”

கொடுத்துச் சிவந்த கரத்துக்கு, கொடுக்க வந்த மூதாட்டியைப்பார்த்து,

“எனக்கு என்ன கொடுக்கப் போறீங்க?”

“இதுல சோறு இருக்கு. இதுல உனக்குப் பிடிச்ச வெடக்கோழி கொழம்பு இருக்கு. சாப்பிடு மகராசா என்றார்.

குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை வாரி அணைத்து,

“இங்கே நான் இருக்கிறது உங்களுக்கு எப்படித்தெரியும்?”

“என் பேரன்தான், நீ இங்கே தங்கி இருக்கிறதை இட்டறைப்பாதையில் நின்னு பார்த்திட்டு வந்து பயந்து போய் சொன்னான். அப்புறம்தான் ஒரு கோழியைப் பிடிச்சு நசுக்கி, என் பேரனை வாட்டித் தரச்சொல்லி கோழம்பு வச்சு, சோறாக்கி கொண்டு வந்தேன். நீ எதுக்காகய்யா பதுங்கி இருக்கணும். உன்னை தொட்டு மீள இந்த உலகத்துல, எவன் பொறந்திருக்கான். ஏன்ய்யா, எங்காச்சும் நெருப்பை கரையான் அரிச்ச அதிசயம் உண்டாய்யா? உன் நிழலை நெருங்க, எவனுக்குயா தைரியம் இருக்கு?”

புரட்சித் தலைவர் இரண்டு பாத்திரத்தையும் வேனில் ஏற்றச் சொல்கிறார். புறப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியிடம், வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார்.

“அதோ தெரியுதே! அதுதான் என் வீடு. எப்பவும் அந்த ஓட்டுத் திண்ணையிலேதான் படுத்திருப்பேன். நீ இந்தப்பக்கம் எப்ப வந்தாலும் ஒரு குரல் குடுத்தா போதும், ஓடி வந்துடுவேன். என்கிறார். வாழ்த்திய மூதாட்டியை வள்ளல் வணங்கிப்புறப்படுகிறார்.

திண்டுக்கல்லில் இரவு ஒரு மணி வரை பிரச்சாரம் செய்துவிட்டு ணசென்னை திரும்புகிறார் வள்ளல். காரில் வந்தவர்களெல்லாம் உறங்குகிறார்கள். வள்ளல் மட்டும் விழித்துக்கொண்டே வருகிறார். நேற்று இரவு தங்கிய இடம் வந்தவுடன் காரை நிறுத்தச்சொல்கிறார். ஒருவரைத்தட்டி எழுப்பி “மதியம் நான் வாங்கிட்டு வரச்சொன்ன போர்வையை எடு” என்கிறார்.

தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் அவர், போர்வை உள்ள பார்சலை வள்ளலிடம் கொடுக்க, வள்ளல் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடக்கிறார். ஒன்றும் புரியாமல், உடன் அவர்களும் நடக்கிறார்கள்.

நேராக பாட்டி சொன்ன அந்தக் கூரைவிட்டு ஒட்டுத் திண்ணக்கு செல்கிறார். குளிரில் வாடிக்கொண்டிருந்த மூதாட்டியின் உடலில் அந்தக்ககம்பளிப் போர்வையைப்போர்த்துகிறார். தட்டி எழுப்பி கையில் ஆயிரம் ரூபாயை சாதாரணமாக கொடுக்கவில்லை. அன்பால், திணிக்கிறார். திகைத்துப்போன மூதாட்டியால் பேசமுடியவில்லை. விடை பெறுகிறார் வள்ளல். மழையால் வாடிய மயிலுக்குப் போர்வை கொடுத்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவனான பேகன் என்ற மன்னன். பொன்மனச் செம்மலே நீ ஒரு மனுஷிக்கு போர்வை கொடுத்து கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாக மட்டுமல்லாமல், வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக அல்லவா அன்னை வரலாறு குறித்துக்கொண்டது.

தோட்டம் காக்க போட்டவேலி
பயிரைத்தின்பதா! – அதை
கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதா?
நானொரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலிதானென்று
போகப்போக காட்டுகிறேன்!

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/

MGR 20 ஆம் நூற்றாண்டு கண்ட உத்தம தலைவன்


கைபட்ட இடத்தைக் கழுவ மனமில்லை…

பொன்மனச் செம்மலால் சாப விமோசனம் பெற்றது மதுரை மாவட்டம். அன்று வள்ளல் மட்டும் அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடாதிருந்திருப்பாரே யானால், ‘அத்திப்பட்டி கிராமம் மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் தண்ணீர் என்பது உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும். அன்று மட்டும் வெற்றி சூடாதிருந்திருப்பாரேயானால் நெல்லுச்சோறு என்பது தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் சாப்பிடப்படும். அதிசய உணவாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும். முப்பிறவி கண்ட நாயகன் மட்டும் முதல்வராக முடி சூட்டப்படாமல் இருந்திருந்தால், அந்தப் பாமர மக்களின் பிள்ளைகள் சத்துணவு கிடைக்காமல் மழைக்காக கூட, பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டார்கள். அதுவரை வறட்சி, நிவாரணப் பணி வேலைகள் மட்டுமே நடந்து வந்த தமிழகத்தில் வள்ளல் முதல்வராக வாகை சூடியவுடன் தான் வெள்ள நிவாரணப் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி தெற்குத் திசையையே மாற்றியமைத்த வள்ளல், அந்தக் கரிசல் பூமிக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்தச் செய்தி தென்மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவி, அரசு விடுமுறை போல், அத்தனை பாட்டாளி விவசாயப் பெருங்குடி மக்களும், அவரவர் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு, வள்ளல் எந்த வழியில் வருவார் என்று திக்கு நோக்கி, கண்கள் பூக்க காத்துக் கிடக்கிறார்கள்.

அன்று வீரபாண்டித் திருவிழா வேறு, வள்ளலின் வருகைக்காக வானம் கூட , மழை தூவி வரவேற்கிறது. வள்ளலின் கார் தேனியில் இருந்து கிளம்பி, முத்துத் தேவன்பட்டியைத் தாண்டி வீரபாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, என்கிற விபரம் திருவிழாக்கூட்டத்திற்குத் தெரிந்து விடுகிறது,. வீரபாண்டி தேர், வீதி உலாவர புறப்படத் தயாராகிறது. ஆனால் அந்தக் கண நேரத்தில், ஆடு வெட்டி பொங்கல் வைக்க வந்த லட்சத்தற்கும் மேற்பட்ட அத்தனை பக்தர்களும், அந்த இடத்தில் இல்லை, கோயில் வளாகமே வெறிச்சோடிக் கிடக்கிறது. குழம்பிப்போன தர்மகர்த்தாக்கள், கோயில் வளாகத்திறகு வெளியே வந்து பார்க்கிறார்கள். வீரபாண்டித் தேரைச் சுற்றி நிற்க வேண்டிய பக்தர்களெல்லாம் ரோட்டில், வள்ளலின் காரைச் சுற்றி வணங்கி நின்ற காட்சியைப் பார்க்கிறார்கள். வீரபாண்டிக் கோயிலே இடம்பெயர்ந்து போன அதிசயம், அங்கே நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் வள்ளல் மட்டும், தான் தவறிழைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் ,தான் வேறு வழியாக வந்திருக்கலாம் என்று திரும்பத் திரும்ப விசனப்படுகிறார். அந்தப் பாசமிகு பக்தர்களிடம் இருந்து எப்படி விடைபெறுவது? காவல்துறை தன் முழு பலத்தையும் பிரயோகித்து, வள்ளல் செல்ல வழியமைக்கப் பார்க்கிறார்கள். முடியவில்லை. அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வள்ளல் ஒரு முடிவுக்கு வந்து, தான் வந்த வேன் மீது ஏறி, “வீரபாண்டித் திருவிழா என்னால் பாதிக்கப்பட்டு விட்டது, என்ற பழி என் மீது வராதிருக்க வேண்டுமானால், நீங்கள் எல்லோரும் கலைந்து, கோயிலுக்குச் செல்லுங்கள்” என்று அன்புக் கட்டளையிடுகிறார்.

இப்பொழுது சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களைப் போலத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஏக்கத்துடன் சத்தமில்லாமல் செல்லும் பக்தர்களைப் பார்த்து, கையசைத்து விடைபெறுகிறார், வள்ளல்.

வள்ளலின் கார் வயல்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை அதிசயங்களும் அற்புதங்களும் இங்கே நடப்பதை கொஞ்சமும் அறியாத பஞ்சவர்ணம் என்ற பத்து வயதுப் பெண், வயலில் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் பருத்தி எடுத்தக் கொண்டிருந்த பெரியாத்தா என்ற தோழி, எலே பஞ்சு “உனக்கு விஷயம் தெரியுமாழ” எம்.ஜி.ஆர் தேனிக்கு வந்திருக்கிறாராம். இப்பத்தான் எங்க அப்பன் எங்கிட்ட சொன்னாரு” என்று பஞ்சவர்ணத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வயலை ஒட்டிய வண்டிப்பாதையில், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க! பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்க’ என்ற கோஷங்களுடன் கார்கள் வரிசையாகப் பறந்து கொண்டிருக்கிறது.

அவ்வளவுதான், மடியில் பறித்து வைத்திருந்த பருத்தியை ஆகாயத்தில் வீசி விட்டு, இருவரும் கார்கள் செல்லும் திசை நோக்கி, அந்தக் கரம்பைக் காட்டில், கால்கள் பின்னக்கு இழுக்க கஷ்டப்ப்ட்டு ஓடி வருகிறார்கள். தன் மீது அம்பு வீசினாலும் சரி, அன்பு வீசினாலும் சரி, நேரடியாகச் சந்திக்கிற சரித்திர நாயகன், நம சந்தனக் தலைவன். இந்த இரண்டு பெண்களும் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு காரை, நிறுத்தச் சொல்கிறார். அதனை கார்களும், ஒன்றன் பின் ஒன்றாக ரெயில் பெட்டியைப் போல் வளைந்து நிற்கிறது.

வள்ளல் காரைவிட்டு இறங்கி, அந்தக் கரிசல் பூமியில் கால் பதித்து நிற்கிறார். மூச்சிறைக்க ஓடி வந்த பெண்களுக்கு, முதலில் தான் வைத்திருந்த பழச் சாற்றைக் கொடுத்து, மூச்சு வாங்கச் செய்கிறார்.

“நீங்க வர்றது இந்த ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கு. இந்த ரெண்டு கூமுட்டைகளுக்கு மட்டும்தான் தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா, இந்த அஞ்சு ரூபா காசுக்காக வேலை செஞ்சுட்டு இருப்போமா?” என்று படபடவென்று; பேசுகிறாள் பஞ்சவர்ணம். நிதானத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வள்ளல், இருவர் கைகளிலும் ஆளுக்கு நூறு ரூபாய் நோட்டைத் திணிக்கிறார். “நாங்களென்ன காசுக்காகவா உங்களைப்பார்க்க, பரக்க பரக்க ஓடி வந்தோம். கருணை தெய்வத்தைக் கண்குளிரப் பார்த்தாலே போதும், என்றுதான் ஓடி வந்தோம்” என்கிற தோரணையில் அவர்களின் பார்வை இருந்தது. அந்தப் பரங்கிமலை மன்னனுக்கு புரிந்தது. “ஒரு அண்ணன், தங்கைக்குத் திருவிழாச் செலவுக்கு கொடுத்தது போல், நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி புறப்படுகிறார்.

அதோடு பஞ்சவர்ணம் பருத்தி எடுக்கவில்லை. வீட்டுக்குச் சென்று விடுகிறாள். சோறும் கறியும் தட்டில் போட்டு வைக்கிறார் உடன் பிறந்த அக்காள். பஞ்சவர்ணம் “பசியில்லை” என்கிறாள். பொங்கல் வைக்கத்தான் வீரபாண்டி கோயிலுக்கு வரலை சட்டுபுட்டுன்னு சாப்பிட்டியினா, பொழுது சாய திருவிழா பார்க்கவாவது போகலாம்ல்ல. வரவை கோறும் கோயிலுக்கும் வேண்டாம். இரவும் அதே பதில். மறுநாள் காலையில் கண்மாய்க்குக் குளிக்கச் செல்லவில்லையா? என்று பாட்டி கேட்கிறாள். “உடம்புக்குச் சரியில்லை” என்று பஞ்சவர்ணம் சொல்கிறாள். கும்பாவில் கூழும், கும்பாவின் வெளிப்புற விளிம்பில் துவையலையும் ஒட்ட வைத்துக் கொண்டு, “போவட்டும் கையையாவது கழுவிட்டு கரைத்துக்குடி” என்று மீண்டும் அக்கா வலியுறுத்துகிறார்.

“ஊட்டி விடு, இல்லாட்டி கரைத்து லோட்டா சொம்பில் கொடு. கடகடவென்று குடித்து விடுகிறேன்” என்கிறாள் பஞ்சவர்ணம். இப்படிப் பஞ்சவர்ணம் பிரமை பிடித்தவள் போல் பேசியதால், அக்கா பயந்து போய்,

“ஏலே உனக்கு என்னாச்சுடி பணம் கொடுக்கிறபோது, அவரின் தங்கக்கரம் தன் கையில் பட்டுவிட்டது என்றும், இந்தச சாதாரண பக்தைக்குத் தெய்வம் கரம் தொட்ட இடம் தண்ணீர் பட்டால் அழிந்துவிடும் என்று பயந்துதான் குளிக்காமல், சாப்பிடாமல் இருந்தேன்” என்கிறாள். இப்பொழுதுதான் நிம்மதி அடைந்தனர் பெற்றோர்கள்.

இப்படி ஆறு வயதில் இருந்து அறுபது வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பொன்மச் செம்மல் மீது வைத்திருந்த அன்பை, மூட நம்பிக்கையென்றும், சினிமாக் கவர்ச்சியென்றும் கேலி செய்தனர். சிலர் உலக அரங்கில் சர்வாதிகாரி என்றும், கொடுங்கோலன் என்றும் வர்ணிக்கபட்ட அடால்ப் ஹிட்லர், ஒருமுறை வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஏழை பெண்மணிகள் தோள்களில் கைபோட்டு நடந்து சென்றிருக்கிறார். அந்த நிமிடத்தில் இருந்து, அந்த சக்கரவர்த்தியின் கைகள் பட்ட தோள்களில் தண்ணீர்பட்டால், அவனின் கைத்தடம் அழிந்துவிடும் என்று, தன் வாழ்நாள் முழுவதும், குளிக்காமலேயே இருதிருக்கிறார்கள்.

கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்டவனின் கரங்களுக்குகே அவ்வளவு மவுசு என்றால், கொடுத்துச் சிவந்த நம் கொற்றவன் கரங்களுக்கு எவ்வளவு மவுசு இருந்திருக்கும். சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள். சில பேர் பொன்னுக்கு அடிமையாவார்கள். சிலர் பெண்ணுக்கு அடிமையாவார்கள். ஆனால் கொடுப்பதற்கு அடிமையான ஒரே கருணை வள்ளல், கண் முன் கண்ட கலங்கரை விளக்கம் நம் காவிய நாயகன் ராமாவரத் தோட்டத்தில் கொலு வீற்றிருந்த பொன்மனச் செம்மல் ஒருவர்தான்.. அப்படிப்பட்ட புண்ணியவானை புழுதி வாரித் தூற்றியவர்கள், பொல்லாங்கு பேசியவர்கள் பலரை, மக்கள் தண்டித்து விட்டார்கள். சிலரை சட்டம் தண்டித்துவிட்டது.

மற்ற சினிமாக்காரர்கள் மீது இல்லாத பக்தி, இவர் மீது மட்டும் ஏன் எப்படி வந்தது? அவர்கள் எல்லோரும் தன்னுடைய நடிப்பு என்கிற வித்தைக்குக் கைத்தட்டினாலே போதும், நாலு காசு சம்பாதித்தால் போதும் தன் சந்ததிகள் வாழ்ந்தால் போதும். என்கிற அளவில் மட்டும் இருந்து விட்டார்கள். ஆனால் வள்ளல் ஒருவர்தான், உங்களால் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். என் அளவுக்கு உடலை உறுதியாக வைத்திருங்கள். உழைத்து வாழுங்கள். உண்மையாக இருங்கள். சத்தியத்தை நம்புங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இப்படி நடிப்பில் மட்டுமல்ல; நடப்பிலும் செய்து காட்டியவர். அதனால்தான் அந்தத் தலைவன் மீது அதிசயத் தக்க அதீத பக்தி செலுத்தினார்கள் என்று, அன்று கொச்சைப்படுத்தியவர்களெல்லாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது.

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/


என்றும் எம்.ஜி.ஆர் NO 1


காகித அம்புகள்…

நம் காவிய நாயகன், கல்வெட்டு என்று தெரியாமலேயே, தன்னுடைய காகித அம்புகளால் தகர்த்து விடலாம் என்று நினைத்து, தாங்களே தகர்ந்து போனார்கள். மக்களின் இதய சிம்மாசனத்தில் மட்டுமே வீற்றிருந்த வள்ளல், அரசு சிம்மாசனத்தில் அமராத நேரமது. புதுக் கட்சித் தொடங்கி, புறப்பட்டு புயலாய் புறப்பட்ட நேரம் அது.

அன்று மேலும் எம்.எல்.ஏ. இல்லத்திருமணம். இரவு எட்டு மணி வாக்கில் ராமாவரம் தோட்டத்தில் இருபது கார்கள் பின்தொடர நம் வள்ளல் காரில் ஏறிப் புறப்படுகிற நேரத்தில், கசங்கிய சட்டையுடனும், கலங்கிய மனதுடனும் வள்ளலுக்கு அருகில் ஒருவர் வருகிறார்.

“வள்ளலே, உங்களின் பாதம், அந்தப் பாவியின் வாசலை மிதித்து, களங்கப்ப்ட வேண்டாம். கட்சியின் பெயரால் காலித்தனம் செய்து வரும் அந்த எம்.எல்.ஏ. பல குடும்பங்களை பரிதவிக்கவிட்டவன்.. அங்கு நீங்கள் போகாதீர்கள்.

ஊரை ஏய்க்கும் அந்த ஊதாறி வீட்டுக்கு உத்தமத் தலைவன் நீ சென்றால், ஊர் உன்னை பழிக்கும்” என்று அந்த சாமான்யத் தொண்டர், சரித்திர நாயகனிடம் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொள்கிறார் வள்ளல். அந்தத் தொண்டனின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா? அதே நேரத்தில் தீர விசாரிக்காமல், நீதி வழங்குவதும் நியாயமாகாது. என்பதை உணர்ந்த வள்ளல், “நீ தோட்டத்திலேயே இரு. திருமணத்திற்குப் போய்விட்டு வந்த பிறகு, இது பற்றி பரிசீலிக்கிறேன்” என்று வள்ளல் புறப்படுகிறார்.

இரவு நேரத்தில் கார் சென்று கொண்டிருந்தாலும், அந்தத் தொண்டனின் குமுறலே வள்ளலின் நினைவிலே வந்து போய்க் கொண்டிருக்கிறது. தன் அருகில் அமர்ந்திருந்த, அழைக்க வந்த, வேலூர் கட்சிக்காரரிடம், எம்.எல்.ஏ. வின் செயல்பாடுகள் பற்றி, விசாரணை நடத்துகிறார்; வள்ளல்.

“அந்தத் தொண்டன் சொன்னதெல்லாம் உண்மைதான். தங்களின் பெயரை வைத்துக்கொண்டும், கட்சியின் பெயரை வைத்துக்கொண்டும், கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது பொய்யில்லை” என்று ஊர்ஜிதப்படுத்துகிறார் கட்சிக்காரர். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்ட வள்ளல், எந்தவித சலனமும் இல்லாமல், மீண்டும் மௌனமாக பயணத்தைத் தொடர்கிறார்.

கார் ஆற்காட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காரின் இடது பக்கம் கண்களை படரவிடுகிறார் வள்ளல், அந்த அர்த்த ராத்திரி இருட்டில் தார் ரோட்டிற்கு அப்பால், இடது புறத்தில் வயல் வெளியைத் தாண்டிய பொட்டல்காடு, அதற்கும் அப்பால் தொலை தூரத்தில், ஒரு குடிசையின் முகட்டில் இரட்டை இலை சீரியல் பல்பு ஜோடனையுடன், ஜொலிக்கும் ஒளி மட்டும் திருவண்ணாமலை தீபமாய் தெரிந்தது.

“பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ, ஊர்வலம் நடக்கிறது”

நினைத்ததை முடிக்கும் நம் நீதியின் நாயகன் பாடல் அது. அந்த நிசப்த இரவில், அந்தக் குக்கிராமத்தில் இருந்து வயல் வரப்பைத் தாண்டி தோப்பு துரவு தாண்டி, வந்து, வள்ளலின் காதுகளில் அந்த பாடல் தென்றலாய், திகட்டாத தேனாய் விழுகிறது. நம்மை பூஜித்து மகிழ்கிற சாதாரணத் தொண்டன் வீட்டுத் திருமணம் என்பதை, அந்தச் சீரியல் பல்பும், ஒலித்த பாடல்களும் உறுதி செய்கிறது.

சட்டென காரை நிறுத்தச் சொல்கிறார் வள்ளல், அப்படியே பின்னோக்கி வரச் சொல்கிறார். ஏன், எதற்கு என்று கேள்வி ஏதும் கேட்காமலேயே, கார் பின்னோக்கி வருகிறது. இந்த அனிச்சைச் செயல், கலியுகக் கர்ணனின் காரோட்டிக்குப் புதிதல்ல.

அப்படியே இடதுபுறம் இருக்கும் கற்றாழை முட்கள் மண்டிக்கிடக்கும் கரடு முரடான வண்டிப் பாதையைக் காட்டி, அதில் காரை, செலுத்து என்கிறார். வள்ளல் சொன்ன வண்டிப்பாதையில், இருபது கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக புழுதியைக் கிளப்பிக்கொண்டு செல்கிறது. பகல் வேளையில் ஊருக்குள் ஒரு கார் நுழைந்தாலே ஊரே கூடி வேடிக்கை பார்க்கும் அந்தக் கிராமத்தில், அந்த ராத்திரி நேரத்தில், ஒரே நேரத்தில் இருபது கார்கள் ஒளி வெள்ளத்தில் வரிசையாய் வருவதை, மக்கள் பீதியுடன் பார்க்கிறார்கள். அந்த ஓலைக் குடிசையின் வாசலில், வயலில் இருபது கார்களும் நிற்கின்றன.

கார் மேகத்தைக் கிழித்துக்கொண்டு பால் நிலவு வெளிக் கிளம்புவது போல, கார் கதவைத் திறந்துகொண்டு, உறையில் இருந்து கழற்றப்பட்ட தங்க வாளாய், நம் தங்கத் தலைவன் காரை விட்டு திருமண வீட்டு வாசலில் ஜோதி மயமாய் இறங்குகிறார்.

வள்ளல் வந்த செய்தி, காட்டுத் தீயாய் சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவுகிறது. கேட்டவர்களும் இதை நம்பவில்லை. நேரில் பார்த்தவர்களும், இதை நம்பவில்லை. வானத்து தேவர்கள் வாசல் தேடி வருவது, எப்படி சாத்தியம்! தேவதூதன் நம் தெருவுக்கு வந்திருக்கிறாரா?. தனக்குத்தானே தங்களைக் கிள்ளிக்கொள்கிறார்கள். எப்படி இந்த அவதார புருஷன், இங்கு வந்தான். யார் இந்த தேவமைந்தனை அழைத்து வந்தது. நெஞ்சில் மட்டுமே நினைத்து நினைத்து நெகிழ்ந்த இந்தத் தொண்டன் வீட்டு வாசலுக்கு, வட்ட நிலா வழிய வந்த நிற்கிறதே. இப்படிக் கணப்பொழுதில் நடந்த அற்புத்ததில் இருந்து , அவர்கள் மீள இயலவில்லை. காரை விட்டு இறங்கிய வள்ளல், உள்ளூர்க்காரர்களே போட்ட பனை ஓலை பந்தலின் ஓரத்தில் கிடந்த , துருப்பிடித்த ஸ்டீல் சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு சம்பந்தி வீட்டுக்காரரைப் போல், சட்டமாக உட்காருகிறார்.

ஊர்க்காரர்களும், உறவுக்காரர்களும் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ்விடாமல், அப்படியே வள்ளலை அள்ளி விழுங்கி விடலாமா? என்று அருகில் ஓடிவந்து, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடிந்தால் திருமணம். நலுங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும், வள்ளலின் வரவு அதிர்ச்சியையும், சித்த பிரமை பிடித்தவர்கள் போல், சிலையாக மணமக்கள் இருவரும் வந்து நிற்கிறார்கள்.

வள்ளல் ஜிப்பாவை மேலே தூக்கி, வேஷ்டி மடிப்பில் சொருகி இருந்த இரண்டு ஐந்து பவுன் சங்கிலியை எடுத்து, (இந்த இரண்டு சங்கிலிகளும் எம்.எல்.ஏ இல்ல மணமக்களுக்காக வாங்கி வந்தது) மணமகன் கழுத்தில் ஒன்றையும், மணப்பெண் கழுத்தில் ஒன்றையும் அணிவிக்கிறார்; வள்ளல்.

தேவரும், மூவரும் சேர்ந்து வந்து வாழ்த்தினால் கூட அவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது. ஆனால் காலமெல்லாம், கனவிலும் நினைவிலும் சுமந்து வணங்கப்பட்ட தன் தலைவனே, தன்னைத் தேடி வந்து வாழ்த்தியபோது, அந்த மணமகன் மனதெல்லாம், மத்தாப்பாய் மகிழ்கிறான்.

சுதாரித்துக்கொண்ட அந்த மணமகன், வள்ளலை இரண்டு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு, இரண்டு மாலைகளுடனும் தாலியுடனும் வந்து,

“வள்ளலே, விடிந்தால்தான் மூகூர்த்த நேரம் என்று பஞ்சாங்கம் கணித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வந்த நேரமே எங்களுக்கு முகூர்த்த நேரம்; என்று, மாலையையும் தாலியையும் ஆசீர்வதித்துக் கொடுங்கள். உங்கள் முன்னிலையிலேயே திருமணத்தை முடித்துக் கொள்கிறோம்” என்று நிற்கிறார், மணமகன்.

“பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த முகூர்த்த நேரத்தில் மணம் முடிப்பதுதான் முறை. உணர்ச்சி வசப்பட்டு, மரபை மாற்றக்கூடாது” என்று வள்ளல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்டுக்கொள்ளாத மாப்பிள்ளை,

“நீங்கள் மறுத்தால் நான் தற்கொலை செய்து கொள்ளக்கூடத் தயங்க மாட்டேன்” என்று அடம் பிடிக்கவே, வள்ளல் தாலி எடுத்துக்கொடுக்கிறார்.

எமனைக கூட ஏழெட்டுத் தடவை எட்டி உதைத்து பந்தாடிய வள்ளலின் முன்பு ராகுகாலம், எமகண்டமெல்லாம் எம்மாத்திரம்!

மணம் முடித்து வைத்த வள்ளல், வேலூர் செல்லவில்லை. மீண்டும் ராமாவரம் தோட்டத்திற்கே வந்து விடுகிறார்.,

ஏழையின் சிரிப்பில் அல்ல! ஏழையின் வாசலுக்கே அல்லவா, இறைவன் இறங்கி வந்திருக்கிறான்.

“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர இல்லையா- பிறர்
தேவையறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை யல்லவா!”

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/

இல்லை என்ற சொல்லை இல்லாமலாக்கியவர்! MGR

நடிகர்தானே! நாலாங்கிளாஸ் வரை படிக்காதவர்தானே என்று புரட்சித் தலைவரைப் பற்றி சிலர் நாக்கூசாமல் எள்ளி நகையாடிய நேரம் அது. புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக்கழகமாய் தன்னை மாற்றிக்கொண்டவர்.

அதனால்தான் அந்த வள்ளல் பெருந்தகை, சென்னை தியாகராயர் கலைக்கல்லூரியின் சேர்மனாக சிம்மாசனத்தில் அமர முடிந்தது.

பொன்மச் செம்மல் வாரிக்கொடுக்கிற வள்ளல் மட்டுமல்ல. தன் வாசல் தேடி வந்தவன், வானவில்லைக் கேட்டால்கூட, வளைத்துக் கொடுக்கிற வல்லமை பெற்றவர். அன்று ஏ.வி.எம்மில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கார் வாசலை நெருங்கும்போது, திடீரென்று டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்கிறார். கார் கண்ணாடியை இறக்கி,

“ஹலோ செல்வம்”

அந்தப் பெயருக்குரியவர் திகைத்துப் போய், கார் அருகே வருகிறார்.

“உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்கிறார் சினிமா மக்கள் தொடர்பாளர் சினிநியூஸ் செல்வம்.

“என்ன வேண்டும் சொல்லுங்கள்!”

“என் நண்பரின் தம்பிக்கு தியாகராய கல்லூரியில் இடம் வேண்டும். பர்ஸ்ட் லிஸ்ட், செகண்ட் லிஸ்ட்டெல்லாம் போட்டாகிவிட்டது”

பெயர், தகுதியெல்லாம் கேட்கிறார்; வள்ளல் அருகில் இருந்த திருப்பதிசாமி, எல்லாவற்றையும் குறித்துக் கொள்கிறார்.

தன் வாழ்நாளில் “முடியாது” “இல்லை” என்கிற இரண்டு வார்த்தைகளையும், தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள், என்று அப்புறப்படுத்தியவர் பொன்மனச் செம்மல்.

அதனால்தான், அவரால் மட்டுமே ஒரு அவதார புருஷனைப்போல் என்ன வேண்டும்? நானிருக்கிறேன், நான் பார்த்துக்கொள்கிறேன், கலங்காதீர்கள் கவலைப்படாதீர்கள், கண்ணீரை நான் துடைக்கிறேன்” என்றெல்லாம் சொல்லி செயல்பட முடிந்தது.

இரண்டு நாள் கழித்து, சத்யா ஸ்டுடியோவில் புரட்சித் தலைவரை காலேஜ் சீட் விஷயமாக விபரம் கேடக்ச் செல்கிறார் செல்வம்.

தான் யாரென்ற குறிப்புடன் ஸ்லிப், உள்ளே செல்கிறது. ஆனால், புரட்சித் தலைவரைப் பார்க்க இயலாது என்று, அவரின் பார்வைக்கே செல்லாமல் திருப்பதிசாமி என்பவரால், ஸ்லிப் திருப்பி அனுப்பப்படுகிறது.

தான்அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக, வேதனையுடன் செல்வம் திரும்புகிறபொழுது, சொல்லி வைத்தாற்போல் சூட்டிங்கை முடித்துக் கொண்டு, செட்டை விட்டு வெளியில் வந்த கொண்டிருந்த வள்ளல், செல்வத்தைப் பார்த்து விடுகிறார்.

“ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டு, என்னை ஏன் பார்க்காமல் செல்கிறீர்கள்?”

நடந்தவைகளைச் சொல்கிறார் செல்வம். திருப்பதிசாமி திருதிருவென்று விழிக்கிறா. மீண்டும் சொல்கிறார்

“நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தைரியமாக புறப்படுங்கள்”

நாளை கடைசி நாள் நம்பிக்கை இழந்து செல்கிறார் செல்வம்.

மறுநாள் ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்களுடைய மகன் சரவணனின் திருமணம். வாழ்த்த வந்த வள்ளல், மண்டப ஓரமாக இருந்த புல்தரையில் வட்ட வரிசையில் போடப்பட்டிருந்த சேரில், பத்திரிகை நண்பர்களுடனும், திரையுலக பிரமுகர்களுடனும் பேசிக் கொண்டிருக்கிறார். தாமதமாக வந்த செல்வம். உட்காரச் சேர் இல்லாமல், சுற்றி வருகிறார்.. இதைப் பார்த்த வள்ளல்.

“சீட் கிடைக்கலேன்னு டென்ஷன் ஆகாதீங்க செல்வம்.. நான் சீட் தர்றேன்” என்று தான் உட்கார்ந்திருந்த சேரிலேயே நகர்ந்து உட்கார்ந்து, இடமளிக்கிறார் வள்ளல். இரு பொருளில் பேசிய வள்ளலின் போக்கு, அப்பொழுது கூட செல்வம் அவர்களுக்கு புரிந்தும், புரியாமல் இருந்தது.

மறுநாள் காலையில், சீட் கேட்ட நண்பருக்கு போன் செய்து,

“உன் தம்பியின் சீட் விஷயம் என்னாச்சு?” என்று செல்வம் கேட்கிறார்.

“இன்றிலிருந்து தம்பி காலேஜூக்குப் போகிறான். இதைச் சொல்ல இரண்டு நாளா ட்ரை பன்றேன். உங்களை பார்க்க முடியல” என்ற நண்பரிடன் இருந்து பதில் வருகிறது. செல்வம் சிந்தை குளிர்ந்து போகிறார்.

வள்ளல் நிகழ்த்திய அற்புதங்களில் இதுவும் ஒன்றோ! என்று சிலகித்துப்போன சினி நியூஸ் செல்வம், நேற்று இருபொருளில் வள்ளல் பேசியதைப் புரிந்துகொண்டு, ராமாவரம் தோட்டத்தை நோக்கி, நன்றி சொல்லக் கிளம்பினார்.

“பத்துத் திங்கள் சுமந்தாளே – அவள்
பெருமைப்பட வேண்டும் – உன்னை
பெற்றதனால் அவள் மற்றவராலே
போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக – தனி
இடமும் தரவேண்டும் – உன்
கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்”

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/

MGR சில நினைவுகள்


என்ன வேண்டும் என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?

முப்பது ஆண்டுகளுக்கு முன்…

சத்யா ஸ்டுடியோ வாசல்…….

பளபளக்கும் சிவப்பு நிற சில்க் சட்டை,பழுப்பேறிய வெள்ளை வேஷ்டி சகிதமாய், எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீவிய தலை, தான் அணிந்திருந்த சில்க் சட்டைக் காலருக்குள் எண்ணெயும் தண்ணீரும் கலந்த கசடு இறங்கி விடாமல் இருக்க கழுத்தைச்சுற்றிக் கைக்குட்டைத் தூவாளை இப்படி சுத்தமான கிராமத்து மண்வாசணை மணக்க நின்ற அந்த இருபது வயது இளைஞன் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையைத் தேடும் ஒரு தகப்பனைப் போலவும், ஆபரேஷன் தியேட்டருக்குள் ஆசை மனைவியை அனுப்பி வைத்து விட்டு, வராந்தாவில் காத்துக் கிடக்கும் அன்புக் கணவனைப் போலவும், ஸ்ரீரங்க சொர்க்கவாசலில் ரங்கநாத பெருமாளின் தரிசனத்துக்காக காத்து நிற்கும் பக்தனைப் போலவும், ஸ்டுடியோ வாசலுக்குள் நுழையும் கார்களுக்குள் கண்களை நுழைத்துத் துருவிப் பார்ப்பதும், துழாவிப் பார்ப்பதும் பிறகு தலைகவிழ்ந்து சோகப்பட்டும், அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

கோடி மின்னலை குழைத்தெடுத்த அந்த குளிர் நிலவு, கோமேதகப் பெட்டகம், பெட்டகம். குற்றால அருவி, குறிவஞ்சிப்பாட்டு, அகம்கொண்ட எதிரிகளை புறம் கண்ட எரிமலை, வாரிக் கொடுக்கிற கார்மேகம், கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்தகடைசி வள்ளலான எம் மன்னன் எந்த காரில் வருவார். என்று எதிரில் தென்பட்டவர்களிடமெல்லாம் ஒரு பிச்சைக்காரனைப்போல் யாசித்து, விசாரித்து, எல்லோருக்கும் அவன் வேடிக்கைப் பொருளானான்.

அதில் ஒரு இரக்கவான் மட்டும், நீ நேசிக்கற நினைத்ததை முடிக்கும் நீதியின் நாயகன், பச்சை நிற அம்பாசிடரில்தான் வருவார் என்று, சீதைக்கு அனுமன், ராமனின் கணையாழியைக் காட்டி அடையாளம் சொன்னதைப் போல் கூறியவுடன், அந்தச் சீதையை விட, ஆயிரம் மடங்கு ஆனந்தம் அடைந்தான்; அந்த இளைஞன்.

இனி பச்சை நிறத்தில் எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவதென்ற தீர்மானத்துடன், அந்த இளைஞன் நின்றான். நீண்ட நேர பதட்டத்துக்குப் பிறகு, தொலை தூரத்தில் ஒருபசுமை தென்பட்டது. ஆம் அது நம் கலியுக கர்ண்னின் தேர்தான். நம் காவிய நாயகனின் பச்சைநிறக் கார்தான். பச்சை நிறத்தில் மின்னலா? ஓ.. காருக்குள் இருப்பது ஒளிவீசும் பகலவனாயிற்றே! பரவசம் தாளவில்லை. அந்தப் பச்சை நிறக் கார் சர்ரென்று வாசலை கிழித்து நுழைய, அனும் குறுக்கேபாய, கார் கன அடி பிசகி நின்று, பிறகு பின்னோக்கி வருகிறது. எப்படிப் பயமில்லாமல் விழுந்தானோ, அதே வேகத்தில் எழுந்து காரின் கண்ணாடிப் பக்கம் ஓடிவந்து நின்று கொண்டான் அந்த இளைஞன்.

பால்! நிலவை மூடியிருந்த, மேகப் பனி மூட்டம் துளித்துளியாய்க் கரைவது போலவும், பளிங்கு மாளிகையின் மணிமண்டப பட்டுத் திரைச் சேலை மெல்ல, மெல்ல இறங்குவது போலவும், காரின் கண்ணாடிக் கதவுகள் மெதுவாக இறங்குகிறது. அவனுடைய முகமெல்லாம் வியர்வைத்துளிகள்.முதலில் நம் வெற்றித் திருமகனின் நெற்றி மட்டும் தெரிகிறது. பிறகு ஈரமும், வீரமும கலந்த இருவிழிகள் தெரிகிறது. பிறகு வடிவான மூக்குத் தெரிகிறது. பிறகு, தாமரை மலரின் இரண்டு இதழ்களை பிய்த்து பதித்தது போன்ற செம்பவள வாய் தெரிகிறது. இப்பொழுது வட்ட வடிவமான முழு சந்திர பிம்ப முகத்தைப் பார்க்கிறான்.

இப்படி ஒரு பிறைநிலவு மெல்ல, மெல்ல முழு நிலவாய் மாறுகிற அதிசயத்தை ஒருமொட்டு முழு மலராக மலர்ந்து விரிகின்ற, அதிசயத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாக பார்த்து அனுபவிக்கிறான். ஒரு தாயின் மணி வயிற்றில் உருவான கரு, அழகிய சிசுவாக மாறுகிற அதிசயத்தை அப்படியே அவன் மட்டும் பார்த்ததாக ஆனந்தப்படுகிறான். இப்படி பார்த்து, பார்த்து, அப்படியே அவன் மூர்ச்சையாகிப் போனான். அவனுக்குப்பேச்சு வரவில்லை. இப்பொழுது பொன்மனச் செம்மலின் பொற்கரம் சன்னலுக்கு வெளியே வந்து, அவனது புழுதி மண் தோளை தொட்டு மட்டும் உலக்கிற்றது. சிலிர்க்கிறான்.

தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தும், தனக்கு நினைவே தெரியாமல் நோய்வாய்ப்பட்ட போதும், அந்த வீரத் திருமகனை! வாரிக்கொடுக்கிற அந்த வள்ளலை! வந்து சந்தித்தாலும், வேதமொழியாக முதலில் அவர்களிடம் கேட்கும் விசாரிப்பை, அந்த இளைஞனிடமும் அவதாரத் திருமகனான நம் வள்ளல், கேட்கிறார்-

“உனக்கு என்ன வேண்டும்? என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?-பக்தன் பதறிப்போனான்.

“ஒன்றும் வேண்டாம்”

“ஆபத்து காலத்தில் என்னிடம் வா. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்ன ஏசுபிரானுக்குப்பிறகு,

“எல்லாம் நானே” “நான் பார்த்துக்கொள்கிறே” என்று கீதை சொன்ன கண்ணனுக்குப் பிறகு, நபிகள் நாயகத்துக்குப் பிறகு- இந்த வேத வார்த்தையை வள்ளல் சொன்னவுடன், இளைஞனின் இதயம் கனத்து, கண்களில் நீர் மட்டும் வழிகிறது. வள்ளலன் வலதுகரம் அந்த வியர்வை ஜாதியின் முகம் தொட்டு துடைத்து விடுகிறது. அந்த வித்தக விரல்களின் ஸ்பரிசத்தில், அந்த இளைஞனுக்கு தைரியம் பிறக்கிறது.

“எனக்குத் திருமணம் செய்து வைக்க, இரண்டு வருடங்களாக என் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். செய்தால் உங்கள் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி இரண்டு வருடங்களாக உங்களைச் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இன்றுதான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

“எந்தத் தேதியில் உன் திருமணம்?”

“நீங்க சொல்ற தேதியில தான்”

“இல்லே…இல்லே…திருமணங்கறது பெரியவங்க பார்த்து வைக்கிற தேதி, அவுங்க நிச்சயத்த தேதியோட வா!”

இரண்டு கால்களில் நடந்து வந்த அந்த இளைஞன், இப்பொழுது, இரண்டு இறக்கைகளோடு போரூருக்கு அருகில் உள்ள தன் கிராமத்திறகுப் பறந்து செல்கிறான்.

மூன்று நாள் கழித்து திருமணப் பத்திரிக்கையுடன் சத்யா ஸ்டுடியோ வாசலில் அந்த இளைஞன் நிற்கிறான்.

இப்பொழுது வாட்சுமேனே வரவேற்று வாஞ்சையுடன், அந்த இளைஞனை, “உழைத்து வாழ வேண்டும்” படப்பிடிப்பில் வாள் வீச்சில் இருந்த வள்ளலிடம் அழைத்துச் செல்கிறார். அடையாளம் கண்டு கொண்ட வள்ளல், அருகில் வரச் சொல்கிறார்.

இளைஞன் மெல்லியதான குரலில், “வருகிற ஒன்பதாம் தேதி, ஒன்பதரை மணிக்குக் கல்யாணம்”

பத்திரிகையை வாங்கிய வள்ளல் தன்னுடைய மேக்கப் பெட்டிக்குள் சொருகிக்கொண்டே, பக்கத்தில் நின்ற உதவியாளரிடன், ஒன்பதாம் தேதியை ஞாபகப்படுத்தச்சொல்கிறார்.

ஒன்பதாம் தேதி மணி ஒன்பதேகால். அந்தத் திருமணப் பந்தலில் ‘குய்யோ முறையோ’ என்று ஒரே கூச்சல்.

“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா நீ அவருக்குச் சொந்தமா பந்தமா? இல்லை நீ வட்டமா? மாவட்டமா? இல்லை நீ எம்.எல்.ஏவா, எம்.பி.யா? உன்னை மாதிரி சாதாரண ரசிகன் வீட்டுத் திருமணத்துக்கெல்லாம் அவர் வர்றதுக்கு” என்று பெற்றோர்கள் பேசித் தீர்த்தார்கள்.

மூகூர்த்தம் நெருங்கி விட்டதால், உறவுக்காரர்கள் மாப்பிள்ளையை மணவறையில் அமர்ந்து தாலி கட்டச் சொல்கிறார்கள். ஆனால் இளைஞன், வள்ளல் வந்தால்தான் தாலி கட்டுவேன் என்று மறுக்கிறான். ஆனால் ஊர்க்காரர்கள் மாப்பிள்ளையை குண்டுகட்டாகத் தூக்கி, மணவறையில் உட்கார வைக்கிறார்கள் ஆனால் எகிறிப் பாய்ந்து , அந்த இளைஞன் தாலி கட்டமாட்டேன். நானே நேரில் போய் தலைவரைப் பார்க்கிறேன்” என்று ஓட்டமும் நடையுமாய் பஸ் பிடித்து, சத்யா ஸ்டுடியோ நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.!

அதே நேரத்தில்,சத்யா ஸ்டுடியோ உழைக்கும் கரங்கள் படப்பிடிப்பில் மேக்கப்பை சரி செய்ய, பொன்மனச் செம்மல் மேக்கப் அறைக்கு வருகிறார். அப்பொழுதுதான் மேக்கப் பெட்டியில் துருத்திக்கொண்டு தெரிந்த கல்யாணப் பத்திரிக்கை வள்ளலின் கண்களில் படுகிறது. பிரித்துப் பார்க்கிறார். பதறிப்போய்விடுகிறார் வள்ளல்! அருகில் இருந்த உதவியாளரிடம், “ஏன் ஞாபகப்படுத்தவில்லை; என்று ஏசுகிறார். டிரைவரை கூப்பிட்டு காரை எடு” என்கிறார். தார்பாச்சி ஸ்டைலில் கட்டிய வேஷ்டி , ஜிப்பா சகிதமாய் மேக்கப்பைக்கூட கலைக்காமல் காரில் ஏறுகிறார். கார் பறக்கிறது. போரூரைத் தாண்டி, அந்த இளைஞனின் கிராமத்தை விசாரிக்க்கிறார். வள்ளல். அந்த ஊருக்கு கார் போக வழியில்லை என்கிறார்கள்.

காரை விட்டு இறங்குகிறார்; வள்ளல். அந்த உச்சி வெய்யிலில் கால் முளைத்த சூரிய பிம்பமாய் உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி வர, ஒரு கிலோமீட்டர் தூரம் வீர நடை போடுகிறார்; வள்ளல்.

வானத்து தேவகுமாரனே தரை இறங்கி வந்தது போல், நம் கருணை வள்ளலின் கால் மலர்கள், அந்தக் கிராமத்துக்குள் பட்டவுடன் , அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மை மறந்து திகைத்து நின்றார்கள்.

பொன்மனச் செம்மல் மண மேடைக்குச் செல்கிறார். அங்கே மணப்பெண் இருக்கிறாள் ஆனால் மணமகனைக் காணவில்லை. எங்கே? என்று கேட்கிறார் வள்ளல்.

உங்களைத் தான் தேடி ஓடி விட்டான்” என்று ஊரார் சொல்கிறார்கள்.

உடனே வள்ளல் அந்த இளைஞனை அழைத்து வர காரை அனுப்புகிறார். சத்யா ஸ்டுடியோ வாசலை நெருங்கிக் கொண்டிருந்த இளைஞனை காரில் தூக்கிப் போடுகிறார்கள்.

மாப்பிள்ளை மணவறைக்கு வந்தாகிவிட்டது. மக்கள் திலகம் மாங்கல்யம் எடுத்துத் தருகிறார். திருமணம் இனிதாக முடிந்த பிறகு, தன் ஜிப்பா பாக்கெட்டுக்களில் இருந்து இரண்டு நோட்டுக் கட்டுக்களை கையில் கொடுத்து, மாப்பிள்ளையின் காதில் ஏதோ சொல்லிவிட்டு, வள்ளல் கைகூப்பி விடைபெற்றுச் செல்கிறார்.

மறுநாள் அதே சத்யா ஸ்டுடியோ! அதே படப்பிடிப்பு. அங்கு பணியாற்றிய அத்தனை பேரிடமும், மதியம் என் செலவில் விருந்து என்கறார், நம் வள்ளல்.

மதியம் ஒரு மணியாகிவிட்டது. ஷாமியானா பந்தலில் மூன்று சிம்மாசனம் போன்ற சேர். மூன்று சேர் யாருக்காக? எதற்காக இந்த விருந்து? என்று எவருக்குமே புரியவில்லை.

சரியாக ஒரு மணிக்கு ஷாமியானா பந்தலை ஒட்டி ஒரு கார் வந்து நிற்கிறது. நேற்று திருமணமான அதே தம்பதியர், காரில் இருந்து இறங்குகிறார்கள். நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் தான் உட்கார்ந்து கொண்டு, இடதுபுறம் மணமகளையும், வலதுபுறம் மணமகனையும், உட்கார வைத்து, உண்ண வைத்து அழகு பார்க்கிறார் சத்துணவு தந்த நாயகன் நம் வள்ளல். விருந்து முடிகிறது. ஒரு வேன் வந்து நிறகிறது. அதில் கட்டில்,பீரோ, பாத்திரங்கள், இப்பொழுதான் யூனிட்டில் இருந்தவர்களுக்குப் புரிந்தது. வள்ளல் நேற்று மணமேடையில் மாப்பிள்ளையின் காதில் விருந்துக்கு, வரச்சொன்ன விஷயம்.

பொன்மனச் செம்மல் சம்பந்தி விருந்துண்ட அந்த இளைஞன் யார்?

அந்த இளைஞன்தான, வள்ளல் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, வள்ளல் மீண்டும் உயிர் பெற தீ மிதித்து, தன்னுடை ஒரு கையை வெட்டிக்கொண்டான் என்று பத்திரிகையில், பரப்பரப்பாகப் பேசப்பட்டவன்!

வள்ளலே! இன்றைக்கு மக்களின் மனதில் இடம் பிடிக்க, மார்க்கம் தெரியாமல் அகநானூறு, புறநானூற்றில் இருந்து அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் வரை கரைத்துக் குடித்துவிட்டேன் என்கிற தகுதியோடு, மேடைகளில் பேசிக் கைதட்டல் மட்டும் வாங்கியவர்களெல்லாம், இன்று உனது திசை நோக்கி வாழ்கிறார்கள். அதனால் தான் கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாய், எட்டாவது வள்ளல் என்று இன்று வரலாறு உன்னை இணைத்துக்கொண்டது.

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு.

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/