Saturday, July 17, 2010

Alert Hindus' solidarity pays rich dividend:

Work on flyover harming Hindu sentiments stalled

A unique Bandh that was total and without any untoward incidents was held on May 28, 2010 at Erode, the hometown of atheist leader E V Ramaswamy Naicker. The Bandh call was given by a struggle group 'Movement for Retrieving Periya Mariyamman Temple Land' comprising devotees of a Kali temple centrally located in the bustling commercial town. The demands of the Movement include retrieval of more than 15 acres of temple land that Church of South India (CSI) possesses illegally. The land was snatched from Hindus and handed over by Britishers to London Mission. Adding to this, the Highways Department started work on a flyover running above the centuries old temple. The 'Movement for Retrieving Periya Mariyamman Temple' submitted a memorandum to the Mayor of Erode Municipal Corporation requesting to drop the proceedings initiated. Signatures of the Ward Councillors of the town were submitted along the Memorandum. 30 Ward Councillors of various parties – accounting for three-fourth of the Council strength - have signed the memorandum. Based on this Memorandum, the Highways Department has stopped the work on a flyover running above the temple. The expert opinion is that instead of the Rs 19 crore flyover projects there, the government would do well to ask the CSI to vacate the temple land that would pave the way for an unfinished 80 feet road to be completed at the cost of a few lakhs to ease traffic snarl. It was on this sensible demand backed by the mighty unity of the devotees that the Councillors were prompted to sign the memo.

http://rsschennai.blogspot.com/

Justice to Hindu students - BJP staged demonstration in Erode

R–ZL†‡¥ TÖWˆV ^]RÖ Lyp Byp AÛU‹ÚR ˆ£• DÚWÖyz¥ SP‹R BŸTÖyP†‡¥ ÙTÖÁ.WÖRÖf£ÐQÁ ÚTor

DÚWÖ|, ^ØÛX.18- R–ZL†‡¥ TÖWˆV ^]RÖ Lyp Byp AÛU‹ÚR ˆ£• GÁ¿ DÚWÖyz¥ SP‹R BŸTÖyP†‡¥ ÙTÖÁ.WÖRÖf£ÐQÁ ÚTp]ÖŸ.


BŸTÖyP•

C‹‡VÖ«¥ ˜Í¦•-f½ÍRY U¼¿• p¿TÖÁÛU›] UÖQY-UÖQ«Lºeh YZjLT|• L¥« ER«†ÙRÖÛLÛV ÚTÖX, C‹‰ UÖQY-UÖQ«Lºeh• L¥« ER«†ÙRÖÛL YZjL ÚY|• GÁ\ ÚLÖ¡eÛLÛV Y¦¿†‡ TÖWˆV ^]RÖ Lyp NÖŸ‘¥ DÚWÖ| –ÁNÖW YÖ¡V A¨YXL• ˜Á ÚS¼¿ BŸTÖyP• SP‹R‰. BŸTÖyP†‡¥ R–ZL TÖWˆV ^]RÖ Lyp›Á UÖŒX RÛXYŸ ÙTÖÁ.WÖRÖf£ÐQÁ LX‹‰ ÙLց|, ÚTp]ÖŸ. AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

p¿TÖÁÛU URjL·

C‹‡VÖ«¥ TÖŸp, “†R•, qefV•, f½ÍRY•, ˜Í¦• BfV 5 URjL· p¿TÖÁÛU URjL· GÁ¿ A½«eLTy| E·[]. TyzV¦¥ E·[ TÖŸp, “†R•, qefV• BfV 3 URjLº• R–²SÖyz¥ C¥ÛX. CjÚL C£TÛY f½ÍRY˜•, ˜Í¦•Lº•RÖÁ. G]ÚY R–²SÖyz¥ p¿TÖÁÛU›]Ÿ GÁ¿ i½eÙLց| C‹R 2 UR†‡]£eh• R–ZL AWr L¥« ER«†ÙRÖÛL YZjf Y£f\‰. HÁ? GÁ\Ö¥ G¥XÖ• Ky|eLÖL†RÖÁ. 100 ¤TÖš NeLW˜•, J£ hYÖŸyP£•, ÙRÖy|eÙLÖ·[ F¿L֝• ÙLÖ|†RÖ¥ G‹R Lypeh• Ky|ÚTÖ|YÖÁ C‹‰ HÛZ GÁ¿ R–ZL ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡•, LÖjfWÍ RÛXYŸ ÚNÖÂVÖLÖ‹‡• ŒÛ]ef\ÖŸL·.

XypV UÂRŸL·

B]Ö¥ SÛPÙT\ C£ef\ ÚRŸR¦¥ ‡.˜.L.-LÖjfWÍ LypL· ÚRÖ¥«ÛV N‹‡eL ÚTÖfÁ\]. G‹R UÂRWÖL C£‹RÖ¨• AYŸL¸Á pÛXeh U¡VÖÛR ÙLÖ|TYÁ A¥X SÖÁ. B]Ö¥ A‹R ÙT¡V UÂRŸL¸Á XypVjLÛ[, AYŸL· G‹R XypV†‰eLÖL C‹R U‚¥ YÖ²‹R, C‹R U‚¥ XypV†‰eLÖL RjLÛ[ AŸT‚†R... ULÖ†UÖ LÖ‹‡VzL·, LTÚXÖyzV R–ZÁ Y.E.p, rTÖÐ N‹‡WÚTÖÍ, Tr•ÙTÖÁ ˜†‰WÖU¦jL ÚRYŸ ÙT£ULÁ, LÖUWÖ^Ÿ, PÖePŸ A•ÚT†LÖŸ BfÚVÖ¡Á YÖ²eÛLÛV AzÙVÖ¼½ SPT‰RÖÁ AYŸLºeh ÙNš• EÛUVÖ] AtN¦ GÁ¿ ŒÛ]TYÁ SÖÁ.


LÖUWÖ^Ÿ

LÖUWÖ^Ÿ R–ZL†‡Á ˜R¥-AÛUoNWÖL ÙTÖ¿ÚT¼\ÚTÖ‰ R–²SÖyz¥ 18 B›W• T·¸eiPjL· C£‹R]. T·¸eiPjL¸¥ UÖQYŸL· TzeL Y£Y‡¥ÛX. CR]Ö¥ Bp¡VŸLºeh N•T[• ÙLÖ|eL ˜zV«¥ÛX. AWr SÐP†‡¥ CVjf Y£f\‰ G]ÚY T·¸eiPjLÛ[ ™z«P ÚY|• GÁ\ÖŸL· A‡LÖ¡L·. B]Ö¥, L¥« LyPQ• ÙN¨†R ˜zVÖRRÖ¥RÖÁ UÖQYŸL· T·¸eiP• YW ˜zV«¥ÛX GÁTÛR A½‹R LÖUWÖ^Ÿ, L¥« LyPQ†ÛR W†‰ ÙNšRÖŸ. AÛ]Y£eh• CXYN L¥« ÙLց| Y‹RYŸ LŸU®WŸ LÖUWÖ^Ÿ. A‰ÚTÖX, UÖQY-UÖQ«L· A‚• EÛPL¸¥ EVŸ°-RÖ²° H¼TPeiPÖ‰ GÁ¿ q£ÛPÛV ÙLց| Y‹RYŸ LÖUWÖ^Ÿ. B]Ö¥ LÖUWÖ^ÛW LypÛV «y| ŠefV‰PÁ, AY£ÛPV ÙLÖ·ÛLLÛ[• hÛT›¥ ÚTÖy| «yP]Ÿ LÖjfWNÖŸ.

Byp AÛU‹ÚR ˆ£•

1967-¥ UÖQYŸLÛ[ ÛUVT|†‡ ÚTÖWÖyPjL· SP†‡V ‡.˜.L. BypÛV ‘z†R‰. C‹‡ G‡Ÿ“ ÚTÖWÖyP†‡Á ÚTÖ‰, ÚTÖWÖz ®WUWQ• AÛP‹R UÖQYŸLÛ[ LÖyz Bypeh Y‹R ‡.˜.L. CÚTÖ‰, AÁ¿ AYŸL· Bypeh YW ÚTÖWÖzV UÖQYŸL¸Á hZ‹ÛRLºeh CÁ¿ L¥« ER«†ÙRÖÛL YZjLÖU¥ ‰ÚWÖL• ÙNš‰ Y£f\‰. ATzTyP ‡.˜.L.ÛY Byp›¥ C£‹‰ «WyP ÚY|•. LŸSÖPLÖ«¥ TÖWˆV ^]RÖ Byp AÛU‹R‰ÚTÖX R–ZL†‡¥ TÖWˆV ^]RÖ Lyp›Á Byp AÛU‹ÚR ˆ£•. CªYÖ¿ TÖWˆV ^]RÖ Lyp UÖŒX RÛXYŸ ÙTÖÁ.WÖRÖf£ÐQÁ ÚTp]ÖŸ.

ÚLÖcjL·

BŸTÖyP†‰eh DÚWÖ| ÙR¼h UÖYyP RÛXYŸ ÙTÖÁ.WÖÚ^ÍhUÖŸ RÛXÛU RÖjf]ÖŸ. YPeh UÖYyP RÛXYŸ ‘.È.ÚUÖLÁhUÖŸ ˜ÁÂÛX Yf†RÖŸ. C‹‰ UÖQY- UÖQ«Lºeh AWpÁ L¥« ER«†ÙRÖÛL YZjL ÚY|• GÁ¿ ÚLÖcjL· GµTTyP]. BŸTÖyP†‡¥, UÖŒX ÙTÖ‰o ÙNVXÖ[Ÿ BzyPŸ H.WÚUÐ, UÖŒX ÙTÖ£[Ö[Ÿ K.ÚLÖ«‹RhUÖŸ, ‘WoNÖW A‚ RÛXYŸ H.NWYQÁ, UÖŒX ÙNV¼hµ E¿‘]ŸL· GÁ.‘.TZÂNÖ–, ÚY.ÛYWÚY¨, UÖŒX UL¸Ÿ A‚ RÛX« R–ZWp E·TP HWÖ[UÖ]YŸL· LX‹‰ ÙLցP]Ÿ. DÚWÖ| SLW† RÛXYŸ GÍ.H.pÁ]†R•‘ SÁ½ i½]ÖŸ.

Source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=581055&disdate=7/18/2010&advt=2

Friday, July 16, 2010

Siva Vishnu Temple + Kodumudi

F¼º¬øˆîôƒèœ

ªè£ƒ° ´ˆ îô‹

F¼Šð£‡®‚ªè£´º®

ªè£´º®

𣶠ñ‚èœ 'ªè£´º®' â¡Á õöƒ°A¡øù˜. F¼„C - ß«ó£´ Þ¼Š¹Š ð£¬îJ™ àœ÷ å¼ G¬ôò‹.

߫󣆮L¼‰¶ ªê™ô «ð¼‰¶ õêF àœ÷¶. (߫󣆮L¼‰¶ 39 A.e) ²ò‹¹Í˜ˆF îô‹ - F¼Šð£‡®‚ ªè£´º® «è£J™ - è¬øΘ. "èŸøõ˜ ªî£¿«îˆ¶‹ Y˜è‚¬ø»KŸ 𣇮‚ ªè£´º®" â¡ð¶ F¼º¬øˆ ªî£ì˜.

Þ¬øõ¡ - ñ°«ìvõó˜, ªè£´º®ï£î˜. (虪õ†®™ 'ñ¬ô‚ªè£¿‰bê˜' â¡ø ªðò¼œ÷¶.)

Þ¬øM - ñ¶óð£SE, FK¹ó²‰îK, ð‡ªñ£Nï£òA, õ®¾¬ìï£òA.

b˜ˆî‹ - «îõb˜ˆî‹, Hóñb˜ˆî‹, è£MK.

îôñó‹ - õ¡Q.

Íõ˜ ð£ì™ ªðŸø îô‹. ð‚èˆF™ è£MK àœ÷¶. ªè£ƒ° ®™ Íõ˜ ð£ì½‹ ªðŸø îô‹ Þçªî£¡«øò£‹.

ÝF«êì‚°‹ õ£»¾‚°‹ ïì‰î «ð£†®J™ ÝF«êû¡ ²ŸPò «ñ¼M¡ ÝJó‹ CèóƒèÀœ å¡Á, 䉶 ñEè÷£è à¬ìð†´„ CîPò¶.

ÜõŸÁœ CõŠ¹ñE F¼õ‡í£ñ¬ôò£è¾‹, ñóèî‹ ßƒ«è£Œ ñ¬ôò£è¾‹, ñ£E‚è‹ F¼õ£†«ð£‚Aòî£è¾‹, cô‹ ªð£F¬èò£è¾‹, ¬õó‹ ªè£´º®ò£è¾‹ ÝJù â¡ð¶ îô¹ó£í‹.

«ñ¼ñ¬ôJ¡ å¼ ªè£´º® (Cèó‹) Þƒ° i›‰î¬ñò£™ ÞŠªðò˜ õ‰î¶ â¡ð¶ õóô£Á. ܶ«õ CõLƒèñ£è àœ÷¶. CõLƒè‹ I辋 °†¬ìò£ù¶. Cèó õ®M™ àœ÷¶. ÜèˆFò˜ î¿Mò Mó™ î¿‹¹ «ñ«ô àœ÷¶. ê¶ódì‹. 𣇮ò ñ¡ùQ¡ M˜ õ÷˜‰¶ °¬ø b˜‰î îôñ£îL¡ '𣇮‚ªè£´º®' â¡ø£JŸÁ (܃èõ˜ˆîù¹ó‹) ðóˆõ£ü˜, ÜèˆFò˜ õNð†ì îô‹.

²‰îó͘ˆF ²õ£Ièœ ïñCõ£òˆ F¼ŠðFè‹ ð£®ò¼Oò îô‹.

Þˆîôˆ¬î õNð†ì£™ Cõ¡, Mwµ, Hóñ¡ ÝAò Íõ¼¬ìò îKêù‹ A¬ì‚Aø¶ - ͋͘ˆFˆîô‹.

ÞˆF¼‚«è£JL™ Üöè£ù àŸêõ ͘ˆFèœ àœ÷ù. Þ¬õè¬÷Š ð£¶è£Šð£è ¬õˆ¶œ÷ù˜.

CˆF¬ó ªð÷˜íIJ™ ðóˆõ£ü¼‚° ïìù‚裆C î‰î °…Cîð£î ïìó£ü˜ ºòôè¡ Þ™ô£ñ™ G¡Á 궘ºèˆî£‡ìõ ïìùI´õî£è ܬñ‰¶œ÷ ͘ˆî‹. Þ¶«ð£™ 裇ð¶ ÜK¶. 2) Hþ£ìù˜ 3) ê‰Fó«êèó˜ 4) àñ£ñ«èvõó˜ 5) FK¹óê‹ý£ó ͘ˆF - G¡øG¬ô. àœHóè£óˆF™ õ˜ ê‰GFèÀ‹ ªî£ì˜‰¶ ÜÁðˆ¶Íõ˜ F¼«ñQèÀ‹ àœ÷ù.

Þƒ°œ÷ î†Cí£Í˜ˆFJ¡ W› ºòôè¡ õ®õº‹ êùè£F õ˜èÀ‚°Š ðFô£è å¼õ¼¬ìò õ®õº«ñ àœ÷¶.

î†Cí£Í˜ˆF‚°„ ê죺® àœ÷¶. Kûð‹ àœ÷¶. è£MK è‡ì Mï£òè˜ ê‰GF àœ÷¶. Ý®Šªð¼‚° ÞˆîôˆF½‹ M«êû‹. àœ²ŸP™ èüô†²I, àñ£ñ«èvõó˜, ²ŠHóñEò˜ ê‰GFèœ àœ÷ù. ²ŠHóñEò¬óˆ °‹ ñJ™ õö‚èˆFŸ° ñ£ø£è âF˜ˆ F¬ê¬òŠ 𣘈î õ‡í‹ àœ÷¶. ªð¼ñ£Q¡ ð¡Q¼¬èèO½‹ Ý»îƒèœ àœ÷ù. ïìó£ü˜, Cõè£ñ²‰îK ê‰GF Iè Üö°.

܋𣜠ê‰GF îQ«ò àœ÷¶. Hó£è£óˆF™ êŠîñ£î˜ à¼õƒèœ è™L™ àœ÷ù. êóvõF ê‰GF àœ÷¶.

«è£J½œ ªõO„²ŸP™ IèŠ ªðKò õ¡Q ñó‹ àœ÷¶. Iè õòî£ù ñó‹, W«ö Hó‹ñ£ (èŸC¬ô) 3 ºèƒè«÷£´ 裆C î¼Aø£˜. õ¡Q ñóˆ¬î«ò 强èñ£èŠ (îõ…ªêŒ¶) ªðŸø£˜ â¡ð¶ õóô£Á. Í¡Á b˜ˆîƒèœ àœ÷ù. ¶ô£ vï£ù‹ Þƒ°„ ªêŒõ¶ èƒè£vï£ùˆFŸ°„ êñ‹ â¡Â‹ °PŠ¹ «ê¶ ¹ó£íˆF™ àœ÷¶. Hó‹ñ£¾‚°Š ð‚èˆF™ Ý…ê«ïò˜ ê‰GF àœ÷¶. ªð¼ñ£œ (ióï£ó£òíŠ ªð¼ñ£œ) ñè£ô†²Iˆî£ò£¼ì¡ 裆Cˆ î¼Aø£˜. êmvõó˜, è£ô¬ðóõ˜ ê‰GFèÀ‹ àœ÷ù.

²‰îó𣇮ò¡ «èêK è£ôˆFò 虪õ†´‚èœ Þ‚«è£JL™ àœ÷ù. Þƒ°œ÷ è£MKJ¡ ï´M½œ÷ 'ÜèˆFò˜ ð£¬øJ™', ÜèˆFòK¡ èñ‡ìô c¬ó‚ è£è‹ ༂ªè£‡´ Mï£òè˜ èM›ˆî G蛄C ïì‰îªî¡ð˜. CˆF¬óJ™ ªð¼Mö£ ï¬ìªðÁAø¶.

"ªð‡íñ˜ «ñQJù£¼‹ H¬ø¹‚° ªê…ê¬ìò£¼‹

è‡íñ˜ ªïŸPJù£¼ƒ è£îñ¼ƒ °¬öò£¼‹

â‡íñ¼ƒ °íˆî£¼‹ Þ¬ñòõ«óˆîG¡ø£¼‹

ð‡íñ˜ ð£ìLù£¼‹ 𣇮‚ªè£´ º®ò£«ó" (ê‹ð‰î˜)

"C†ì¬ù„ Cõ¬ù„ ªê¿…«ê£F¬ò

܆ì ͘ˆF¬ò ÝôGöôñ˜

ð†ì¬ùˆ F¼Šð£‡®‚ ªè£´º®

ï†ì¬ùˆ ªî£öï‹ M¬ù ï£ê«ñ" (ÜŠð˜)

"ñŸÁŠ ðŸªøù‚A¡P G¡ F¼Šð£î«ñ ñù‹ð£Mˆ«î¡

ªðŸø½‹ Hø‰«îQQŠ Høõ£î ñ õ‰ªîŒF«ù¡

èŸøõ˜ ªî£¿«îˆ¶… Y˜‚è¬øÎKŸð£‡®‚ ªè£´º®

ïŸøõ£ à¬ù ñø‚AÂ… ªê£™½ï£ ïñ„Cõ£ò«õ" (²‰îó˜)

F¼Š¹è›

Þ¼M¬ùŠ HøM‚ èì™Í›A

Þì˜èœð†ì¬ôòŠ ¹°î£«î

F¼õ¼†è¼¬íŠ Šó¬ðò£«ô

Fóªñù‚èF¬òŠ ªðÁ«õ«ù£

ÜKò òŸèPîŸ èKò£«ù

Ü®òõ˜‚ªèOòŸ ¹î«ïò£

°¼ªõù„ Cõ‚ 輜«ð£î£

ªè£®º®‚ °ñóŠ ªð¼ñ£«÷.

-"î¡Qò¼œ

«õ‡®‚ ªè£´º®ò£ «ñ¡¬ñªðÁ ñ£îõ˜Å›

𣇮‚ ªè£´º®JŸ ð‡ñò«ñ" (ܼ†ð£)

Thanks to: http://www.kamakoti.org/tamil/tirumurai234.htm

List of Hindu Service Centers

இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:

  1. சேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  2. ஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்
  3. மாதா அம்ருதானந்தமயி மடம் - சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  4. சத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  5. ஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்
  6. வாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  7. ஸ்ரீராமகிருஷ்ண மடம் - சென்னை, இந்திய கேந்திரங்கள்
  8. சின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  9. அக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்
  10. அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)
  11. வித்யா பாரதி :கல்வி
  12. வனவாசி கல்யாண் அமைப்புகள் - 1, 2

தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:

  1. அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை
  2. ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)
  3. இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’
  4. காஞ்சி காமகோடி பீடம்
  5. சிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)
  6. ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
  7. வேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)
  8. கிராம கோயில் பூசாரிகள் பேரவை
  9. சேவாலயா, சென்னை
  10. ஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)
  11. இளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)
  12. அமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)

பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:

  1. விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி - அருணாசலப் பிரதேசம்
  2. ஹிந்து சேவா பிரதிஷ்டானம் - கர்நாடகம்

இந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:

  1. India Development and Relief Fund
  2. Sewa International

இந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:

  1. திருமலை திருப்பதி தேவஸ்தானம்
  2. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
  3. பழனி முருகன் ஆலயம்
  4. சித்திவிநாயகர் ஆலயம், மும்பை
  5. மஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்
  6. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு
Thanks to Tamil Hindu: http://www.tamilhindu.com/2008/06/hindu-service-orgs-list-1/

Oust DMK regime, BJP urges parties

The Bharatiya Janata Party has appealed to all political parties in the State to join hands for the Assembly elections to dethrone the Dravida Munnetra Kazhagam (DMK) government, “in the interests of Tamils.”

At a press conference, BJP State unit president Pon. Radhakrishnan said the DMK must be ousted for safeguarding freedom and democracy as the ruling party workers and police personnel continued to attack Opposition leaders and writers showing dissent.

Accusing the DMK of trying to hide its mistakes by indulging in violence, he appealed for effective co-ordination among political parties in the run-up to the Assembly elections scheduled for May 2011 to throw out the DMK.

“Democracy is at a crossroads because of the ruling party's cash for vote approach in elections.”

Extending the BJP's invitation for an alliance in the Assembly elections, Mr. Radhakrishnan said alliances could not be predicted. But, the present times, which resembled the Emergency period, demanded that parties unite in the interests of people.

Noting that leaders of both the BJP and the Left parties were attacked during the nation-wide bandh on Monday, he alleged that the ruling party was steadfast in stifling the voice of Opposition.

As part of its State-wide struggle for extension of the Centrally-sponsored scheme of pre-matric scholarship for students belonging to minority communities to the Hindus as well, the BJP will organise a protest in front of Memorial Hall here on Wednesday, he said.

Source: http://www.thehindu.com/news/states/tamil-nadu/article503160.ece


Overseas friends of BJP



The Bharatiya Janata Party (BJP) a direct successor of erstwhile Bharatiya Jana Sangh (BJS) founded in 1980. BJP is a major political party in India. The Bharatiya Jana Sangh was founded in 1951 by Syama Prasad Mookerjee, a nationalist leader, former Union Minister and freedom-fighter. The party advocates welfare social policies, self reliance, robust economic growth, foreign policy driven by a nationalist agenda, and strong national defense.

The BJP is pledged to build up India as a strong and prosperous nation, which is modern, progressive and enlightened in outlook and which proudly draws inspiration from India's ancient culture and values and thus is able to emerge as a great world power playing an effective role in the comity of Nations for the establishment of world peace and a just international order. The Party aims at establishing a democratic state which guarantees to all citizens irrespective of caste, creed or sex, political, social and economic justice, equality of opportunity and liberty of faith and expression. The Party shall bear true faith and allegiance to the Constitution of India as by law established and to the principles of socialism, secularism and democracy and would uphold the sovereignty, unity and integrity of India.

The BJP stands for strong national defense, small government and free-market economic policies. Integral humanism has been its core philosophy and identity ever since its inception.

BJP beleives in the following


Food Security
Strong Economy
Employment Generation
Development To All
Border Security
Strong Military
Tough on Terrorism
Energy Security
Strong Society
Appeasement To None

The Congress Govt has let India down due to its weak actions in dealing with Terrorism.

NRI's have always given back to Mother India be it through official forums like Pravas Bharatiya Mantralaya or informally in individual or group capacities, NRI's have given back in one form or the other to India.

The unabated spate of Terrorist strikes against India pains NRIs more than anything else. Though, India is fighting a cold war with Pakistan backed Jihadi organizations, NRI's root for a strong and permanent response to such external threats.

The Congress Government is completely failed in its response to a horrific incident of the magnitude of 26/11.

Having seen how the US has successfully framed Laws and brought in a Homeland Security Department after Sept 11th, the NRI groups that support BJP feel that the NDA will be the ONLY real coalition which will make a sincere effort to build institutions and Laws that will safeguard India from external and insurgent threats.

NRI's who are making a living outside India and who support BJP cannot live in peace when their brethren are at risk. We want the Indian public to elect Shri. Advani as the PM and help the BJP lay the foundation for a SAFE and SECURE INDIA.

NRI's support BJP because BJP stands for Economic, political and internal security.

An Economist PM and FM couldnt predict the economic and financial downturn India is facing today. They claim that India is saved to a large extent due to INDIRA GANDHIs policy of Bank Nationalization.

ONLY A BJP Govt will guarantee a prosperous and efficient INDIA because BJP will evolve an INDIAN custom built ECONOMIC ORDER. INDIA will reclaim its spot in the world as a real economy only when the SWADESHI PRINCIPLES are married with a blend of the best principles from the outside India.

INDIA WILL CONTINUE TO BE THE MELTING POT OF SEVERAL CULTURES, ECONOMIC PRINCIPLES AND WILL BECOME A STRONG AND SECURE NATION only under the capable and experienced leadership of Shri. Advani and his impeccable team

Goals

1. Making India a Developed Nation and a Great Power by 2020, and creating an unshakeable national resolve to achieve this goal.

2. Further strengthening national security both external and internal -- to overcome present and future challenges.

3. Further broadening and deepening of economic reforms, based on a self-reliant approach, for sustained double-digit GDP growth rate to achieve complete eradication of poverty and unemployment; end of regional and social disparities; and bridging the urban-rural divide.

4. Achieving a quantum improvement in the quality of life of all Indians by fulfilling their basic needs in education, healthcare, nutrition, drinking water, housing, sanitation, and cultural development.

5. Launching the Second Green Revolution to unleash the tremendous growth potential in Indian agriculture and agro-based industries, eliminating waste in the food chain, and to ensure doubling of income of even a marginal farmer by 2010.

6. Bringing vibrancy to small-scale industries, cottage enterprises and activities of rural artisans; revitalization of traditional industries like textiles; and giving due recognition and full encouragement to the informal sector of the economy.

7. Giving India a world-class infrastructure in power, telecom and IT, roads, railways, air travel, ports, shipping and inland navigation, markets and the financial sector.

8. Making India a major exporting nation, a global manufacturing hub; a preferred service provider to the world; a preferred country for higher education and healthcare; a leading creator of R&D; putting India at the centre of the Knowledge Economy; and making India a major tourist destination in the world.

9. Preparing India for the momentous shift taking place in the world economy, in which low-cost economies can score a big march over high-cost economies by building competitive strengths in manufacturing and services; enriching our human resources and reforming our economy towards this end, and turning our young population into a huge opportunity in the era of globalisation.

10. Dealing with the challenge of water on a war-footing with a three-pronged approach: Launch of the River-Linking Project; Massive encouragement for micro initiatives such as watershed management, checkdams, rainwater harvesting, drip irrigation, etc; Cleaning up of rivers and traditional water bodies.

11. A massive rural development programme based on the concept of an Ideal Indian Village.

12. A massive urban renewal programme, based on the concept of an Ideal Indian City.

13. Comprehensive Good Governance Reforms, encompassing administrative reforms, judicial reforms, electoral reforms, devolution of powers to States and effective empowerment of Panchayati Raj Institutions and urban local bodies.

14. Commitment to construction of a magnificent Ram Mandir at Ayodhya; Amicable resolution of the issue through dialogue for starting a new chapter in Hindu-Muslim relations;

15. Educational development, economic upliftment, and empowerment of minorities; and ending the majority-minority distinction in politics.

16. Vigorous pursuit of the ideals of social justice, economic justice and empowerment of the Scheduled Castes, Scheduled Tribes, Nomadic and Denotified Tribes, OBCs, and the poor among the Forward Classes.

17. Ban on religious conversions through fraudulent and coercive means.

18. Intensification of the peace and development process in Jammu & Kashmir and the North-East. Ensuring early return of Kashmiri Pandits and other displaced people to their native places.

19. Commitment to women's all-round empowerment; the BJP is ready to back any consensus formula to ensure early legislation for women's reservation in Parliament and State Legislatures.

20. Legislation to ensure that important offices of the Indian State can be occupied only by those who are India's natural citizens by their Indian origin.

21. Empowerment of the Civil Society to promote people's participation in development at all levels and for creating effective dispute resolution mechanisms outside the realm of the government and the judiciary.

22. Making population control a people's movement, with non-coercive disincentives for a two-child norm, and incentives for a girl child.

23. Preservation and propagation of India's rich cultural heritage.

24. Unleashing 'Yuva Shakti' and making India a major sports power in the world.

25. Intensifying dialogue with Pakistan to find a lasting solution to all bilateral issues; working for a multi-polar world, with India as one of the poles; further raising India's standing in the world; and securing for India a meaningful and steadily growing role in international affairs.

Source: http://www.ofbjp.org/aboutus.php

Thursday, July 15, 2010

I salute the National flag


Vande Mataram

வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!


இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தே மாதரம்: மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும் நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: - ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: - கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: - ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: - கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: - ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: - ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: - ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: - லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: - ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: - வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: - தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையை சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, ருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து. இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன - வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

- ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்” என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!

வந்தே மாதரம்!

Source: http://www.tamilhindu.com/2009/11/vande-mataram-soul-of-nationalism/

"AADI"

ஆடி பர்ச்சேஸுக்கு கிளம்புவோமா!

ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு போன்ற முக்கிய விழாக்கள் கொண்டாடப்படும்போது தங்கம்,வெள்ளி, நவரத்தினக்கற்கள், ஆடைகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் வாங்குவர். ஆடிப் பதினெட்டாம் பெருக்கும் பொருள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகும். இவ்வாண்டு ஆடி 11ம் தேதி (ஜூலை 27) வாஸ்துநாள் வருகிறது. அன்றைய தினம் கட்டுமானப் பணிகளுக்கான பூஜை செய்வது நல்லது. பூப்புனித நீராடல், காதுகுத்துதல் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் நடத்தவும் இம்மாதத்தில் தடையில்லை. தீபாவளி இன்னும் சில மாதங்களில் வருகிறது. அதற்குரிய புத்தாடைகளை ஆடிக்கழிவில் வாங்குவதால், பணம் மிச்சப்படும். மேலும், "டிவி', பிரிட்ஜ், "ஏசி', வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவைப்படும் மின்சாதனப் பொருட்களுக்கும் ஆடித்தள்ளுபடி வழங்குவது வழக்கம். ஆடிமாதத்தில் சுபநிகழ்வுகள் நடப்பது குறைவு என்பதால் தங்கத்தின் விலையும் ஓரளவு குறைவதற்கு வாய்ப்பிருக்கும். இதைப் பயன்படுத்தி, சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கிக் கொள்ளலாம்.

விவசாயத்திற்கு ஏற்ற மாதமும் ஆடி:

"ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. நவீன விவசாயத்தில் டிராக்டர் மற்றும் நவீன உழவுக்கருவிகளையும், உரம், பூச்சிமருந்து வகைகளையும் வாங்கி பயனடையலாம். வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித் துள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளிக் கிழமைகளில் வாகனம் வாங்கலாம். இது தெய்வ வழிபாட்டுக்குரிய மாதம். இம்மாதத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு வாகனங்கள் அதிகமாக புக் ஆகாது என்பதால், டிராவல்ஸ் நிறுவனங்களிடம் வாகனங்கள் எளிதாக வாடகைக்கு கிடைக்கும். இதைப் பயன்படுத்தி சுற்றுலாக்கள் சென்று வர ஏற்பாடு செய்து கொள்ளலாம். குறிப்பாக, அம்மன் ஸ்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது.

காவிரி தாய்க்கு மரியாதை:

திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை ஆடிப்பெருக்கு. ஆடி18ம் நாளில் இவ்விழா நடத்தப்படும். காவிரியாற்றில் இம்மாதத்தில் தண்ணீர் பெருக்கெடுத்துஓடும். இந்நாளில் மக்கள் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை, கல்கண்டு சாத வகைகளுடன், ஆற்றங்கரைக்குச் செல்வர். வளம் தரும் காவிரித்தாயை வழிபடும் விதமாக காதோலை, கருகமணி போன்ற மங்கலப்பொருட்கள் போன்றவற்றை அர்ப்பணிக்கும் விதமாக ஆற்றில் விடுவர். சிறு குழந்தைகள் ஆற்றுமணலில் சிறுவீடுகட்டியும், சிறுதேர் செய்து நீரில் மிதக்கவிட்டும் விளையாடுவார்கள். உண்ண உணவும், குடிக்க நீரும் தரும் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கன்று நகை வாங்குங்கள்:

ஆடி பதினெட்டாம் பெருக்கினை மிக சுபநாளாகக்கருதுவர். இந்நாளில் துவங்கும் செயல்கள் நன்மை தரும் என்பது நம்பிக்கை. நகை மற்றும் பொருட்களை இந்நாளில் வாங்கினால் மேலும் பொருட்கள் வந்து சேரும். விவசாயிகள் இந்நாளில் ஆடிப்பட்டம் தேடிவிதை என்னும் பழமொழிக் கேற்ப வயலில் விதைப்பது வழக்கம். வீட்டுத் தோட்டத்தில் அவரை, பீர்க்கு, பூசணி விதைகள், பூஜைக்குரிய மலர்ச்செடிகளை இந்த நாளில் நடலாம்.

ஆடியில் செல்ல வேண்டிய கோயில்கள்:

ஆடி மாதத்தில் நீங்கள் சென்று வரவேண்டிய அம்மன் கோயில்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆடி வெள்ளி:

ஆடி வெள்ளிக் கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன், மாங்காடு காமாட்சி, திருவேற்காடு கருமாரி, மயிலாப்பூர் முண்டகக் கண்ணி, பாரீஸ் காளிகாம்பாள், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் மாரியம்மன், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்களுக்கு சென்று வரலாம்.

ஆடி செவ்வாய்:

ஆடி செவ்வாயில் நாகர்கோவில் அருகிலுள்ள அவ்வையார் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் அருகிலுள்ள துளசியார்பட்டி கோயில்களிலுள்ள அவ்வையாரை தரிசித்து வரலாம். ஆடி சனிக்கிழமைகளில் தேனி அருகே குச்சனூரில் உள்ள பிரபலமான சனீஸ்வரர் கோயிலில் விழா நடக்கும்.

ஆடி கிருத்திகை:

முருகப்பெருமானுக்குரிய ஆடிக்கிருத்திகை ஆகஸ்ட் 4ல் கொண்டாடப்படுகிறது. திருத்தணி, திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, சோலைமலை, சென்னை கந்தகோட்டம், வடபழநி உள்ளிட்ட அனைத்து முருகன் தலங்களிலும் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், பூஜை நடக்கும்.

ஆடி அமாவாசை:

ஆகஸ்ட்9ல், ஆடி அமாவாசை தினமாகும். அன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் திருமறைநாதர் கோயில், கோடியக்கரை சிவாலயம், தேனி அருகிலுள்ள சுருளி தீர்த்தம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில், காரையார் சொரிமுத்தையனார் கோயில் களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

ஆடிப்பூரம்:

ஆகஸ்ட்12 ல் ஆடிப்பூர திருநாள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அன்று தேரோட்டம் காண வேண்டும்.மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்பாளுக்கு ருது வைபவம் அன்று எளிய முறையில் நடத்தப்படும். இந்த நாளில் அம்மனையும் வழிபட்டு வரலாம். ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பாடிய "வாரணமாயிரம்' பாராயணம் செய்தால் விரைவில் திருமணபாக்கியமும், நன்மக்கட்பேறும் உண்டாகும். பெரிய கோயில்களில் இவ்விழா முளைக்கொட்டு உற்ஸவமாக கொண்டாடப்படும்.

கருட பஞ்சமி:

ஆகஸ்ட்14ல் நிகழும் கருட பஞ்சமியன்று, காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயில், விழுப்புரம் திருநாவலூர் நாவலேஸ்வரர், கும்பகோணம் அருகில் குடவாசலில் உள்ள கோணே ஸ்வரர், ஸ்ரீரங்கநாதர் கோயிலிலுள்ள அமுதகலச கருடாழ்வார்ஆகியோரைத் தரிசித்து வரலாம்.

ஆடிப்பெருக்கு:

ஆக.3ல் நிகழும் ஆடிப் பெருக்கு நன்னாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காவிரிக்கரைக்கு எழுந்தருளி, காவிரிக்கு சீர் தரும் வைபவத்தை தரிசிக்கலாம். திருச்சி மலைக் கோட்டை தாயுமானசுவாமி, மைசூரு அருகிலுள்ள ஸ்ரீரங்கப் பட்டினம் மற்றும் ரங்கநாதர் கோயில்களுக்கு சென்று வரலாம். மற்றும் உங்கள் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருவது வாழ்க்கையைச் செழிப்பாக்கும்.

ஆடித்தபசு:

ஜூலை25ல் நடக்கும் ஆடித்தபசு நாளில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் சங்கரநாராயணர் கோயில்களுக்குச் சென்று வரலாம்.

Source: http://www.dinamalar.com/ - 16.7.2010

Tuesday, July 13, 2010

Erode Peria Mariamman Kovil Temple - Land retrieval

ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!

ந்த வருடம் மே மாதக் கடைசியில் நீங்கள் ஈரோடு நகரையே ஸ்தம்பிக்கச் செய்த மாபெரும் பந்த் பற்றிப் படித்திருக்கலாம்.

மேம்பாலம் கட்டுவதற்காக ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் இடிக்கப் படலாம் என்று அரசு அறிவிப்பு வந்ததை எதிர்த்து, இந்தப் போராட்டம் வெடித்தது என்று கூறும் செய்திகள், இதன் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூறவில்லை.

ஈரோடு நகரைச் சார்ந்த கனிவை சீனு அவர்கள் நமக்கு அளித்த முழுமையான செய்திகளை, அவரது வார்த்தைகளிலேயே இங்கே தருகிறோம். தொடர்புறுத்திய விஜயபாரதம் இதழுக்கு நன்றி.

erode-hindu-bandh-pictureஅன்று மே 28ம் தேதி. பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் என்ற செய்தி கண்ணில் பட்டது.

’ஆளும் கட்சியே பந்த் நடத்தி எதையும் அசைக்க முடியவில்லை. இதுல இந்து இயக்கம் எல்லாம் பந்த் நடத்த வந்துட்டாங்கப்பா’ என்று எண்ணிக் கொண்டே செய்தித் தாளைப் புரட்டி முடித்து விட்டு டீக்கடையை நோக்கி நடந்தேன். டீக்கடையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது கடையின் கதவில்… இன்று பந்த் - கடை விடுமுறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்தது. ஒருவேளை இந்தக் கடைக்காரர் இயக்கத்துக் காரராக அல்லது அம்மன் பக்தராக இருக்கலாம், அதனால் லீவு விட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பைக்கில் ஏறி நகரத்துக்குள் சென்றேன். போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். சந்து, பொந்து, மூலை, முடுக்கு என எந்தப் பகுதியிலும் ஒரு சிறிய பெட்டிக் கடை கூட திறக்கப் படவில்லை. ஈரோட்டைச் சுற்றி 15 கிமீ. சுற்றளவுக்கு இதே நிலைதான் எனக் கேள்விப் பட்டேன். உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.

என்னால் இதை நம்ப முடியவில்லை. பெரிய பெரிய அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் சாதிக்க முடியாததை ஒரு இந்து ஆன்மிக அமைப்பு சாதித்திருக்கிறது என்பதைக் கண்டு வியந்து போனேன். 120க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களின் ஆதரவோடு, பஸ் ஸ்டாண்டு கடைகள், காய்கறி மார்க்கெட், மாநில அளவில் கிளை பரப்பியுள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த பந்திற்கு ஆதரவு என்றால், அந்த பந்த் நடத்தும் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் உண்டாகாது?

ஒரு நண்பர் மூலமாக அந்த அமைப்பின் செயலாளர்களில் ஒருவரைச் சந்தித்தேன். கடந்த 1999ஆம் வருடம் மூன்று பேருடன் தொடங்கிய பயணம் இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று இயக்கம் தொடங்கப் பட்டதன் பின்னணியை அவர் விவரித்தார்.

கொங்கு நாட்டின் குலதெய்வமாக விளங்கி, அனைத்து மக்களாலும் போற்றப் படும் தெய்வம் ஸ்ரீ பெரிய மாரியம்மன். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் 45 லட்சம் ரூபாய் ஆகும். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். இவ்வளவு சிறப்புப் பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை தென் இந்திய கிறிஸ்தவ சபை (CSI) நிர்வாகம் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறது. 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பொங்கல் வைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் போலீசாரல் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப் படுவார்கள். இந்தப் பொங்கல் வைக்கும் போராட்டம் முதலில் 3 பேருடன் துவங்கி, வருடத்திற்கு வருடம் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. 2008ஆம் ஆண்டு இதற்கென ஊர்ப் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒரு இயக்கத்தைத் துவக்க முடிவு செய்து “ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம்” என்ற பெயரில் உள்ளூர்ப் பெரியவர்களையும், இந்து இயக்க பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப் பட்டது.

erode-mariyamman-kovilஇயக்கத்தினர் அறவழியில் ஆட்சியாளர்களுக்கு மனுகொடுத்தல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணி, பொங்கல் வைக்க முயற்சி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் இடிக்கப்படும் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுபான்மையினர் என்ற போர்வையில் அரசு எந்த அளவிற்கு கிறிஸ்தவர்களுக்கு சலுகை காட்டுகிறது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் ஈரோடு இந்து மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டனர். ”பெரும்பான்மை சமுதாயத்தினர் ஓட்டுப் போட்டு, அதனால் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மாநகரத்தில் உள்ள 45 கவுன்சிலர்கள் (முருகன் என்ற 40வது வார்டு கவுன்சிலரைத் தவிர), மாநகர மேயர், மாவட்ட ஆட்சியர், தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி உட்பட எவரும் எங்களுக்கு ஆதரவோ, கோரிக்கைகளுக்குப் பரிந்து பேசவோ, காதுகொடுத்துக் கேட்கவோ கூட மறுத்து விட்டனர்” என்று வேதனையுடனும், கோபத்துடனும் நிலமீட்பு இயக்கத்தைச் சேர்ந்த அந்த சகோதரர் தெரிவித்தார்.

இனி யாரை நம்பியும் பயனில்லை. கோயிலை அகற்ற நினைக்கும் இந்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என முடிவு செய்தது நிலமீட்பு இயக்கம். அதனால் வர்த்தக சங்கங்களின் ஆதரவை நாடி பந்த் நடத்த முடிவு செய்தது. நேர்மையான, உண்மையான, நியாயமான இந்தக் கோரிக்கைகளை அனைத்துத் தரப்பு பொதுமக்களும் ஏற்றுக் கொண்டு, இந்த பந்த் 100 சதவீதம் வெற்றியடைய ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

இந்த நிலமீட்பு இயக்கம் துவங்கப்பட்ட போது 15.11.2008 அன்று தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ. கோவை) மேலாளர் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூலம் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் கொடுக்கப் பட்டது. அந்த விளம்பர நகலில் 12.66 ஏக்கர் சி.எஸ்.ஐ வசம் கிரையமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 12.66 ஏக்கர் மட்டுமே கிரையம் பெற்றதாகக் கூறும் சி.எஸ்.ஐ. இன்று 27.84 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஏகபோகமாக அனுபவித்து வருகிறது.

ஆக்கிரமிப்பு வரலாறு:

1804ஆம் ஆண்டுக்கு முன் பவானி நகரம் தான் ஈரோடு தாலுகாவின் தலைநகரமாக இருந்தது. 1864ஆம் ஆண்டில் தான் ஈரோடு நகரில் மந்தைவெளி பகுதியில் தற்சமயம் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைந்துள்ள இடத்தை ஒட்டி அரசு அலுவலகங்கள் தோற்றுவிக்கப் பட்டன. அவ்வாறு ஏற்படுத்தப் பட்ட அலுவலகங்களைச் சுற்றியுள்ள 40 ஏக்கர் நிலம் முழுவதும் அன்றைய அன்னிய ஆங்கிலேய கிறிஸ்தவ அதிகாரிகளின் துணை கொண்டு கிறிஸ்தவ மிஷநரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

இதில் 3.5 விஸ்தீர்ணம் எஸ்.எஃப் 412பி, 584 (தற்சமயம் பிளாக் எண் 3, டி.எஸ்.எண் 3,4) மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான யாத்ரீகர்கள் விடுதி, கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சி.எஸ்.ஐ. மருத்துவமனையாகவும், சி.எஸ்.ஐ. வணிக வளாகமாகவும் உள்ளது.

1905ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி ஆங்கிலேய அரசிடமிருந்து 12.66 ஏக்கர் நிலம், ஈரோடு லண்டன் மிஷன் சொஸைட்டிக்கு ரூ.12-11-0 அணாவுக்கு வருடாந்திர வாடகைக்கு பத்திரம் தயார் செய்யப் பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் பேனா மூலம் கையில் எழுதும் முறையே வழக்கத்தில் இருந்தது, இதை வைத்து, அதில் இரண்டாம் பக்கத்தில் நடுப்பகுதியில் 12.910 ரூபாய்க்கு விற்கப்பட்டது போல் எழுதப் பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் திரித்து இந்த விஷயத்தை பிரசாரம் செய்கின்றனர்.

சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் எவ்வித ஆவணங்களும் இன்றி கோயில் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சுதந்திரமாக அனுபவித்து வர, மண்ணின் மக்கள் நீதிக்காக, உரிமையை மீட்க எத்தனை ஆண்டுகள் தான் போராடுவது? எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? அந்த எல்லையை நெருங்கிவிட்டது நிலமீட்பு இயக்கம். விரைவில் அரசாங்கம் நிலத்தை மீட்டுக் கொடுக்காவிட்டால், மக்களே எடுத்துக் கொள்வார்கள், அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மாரியம்மனுக்காக மக்கள் நடத்தும் இந்தப் போராட்டம் சற்று வித்தியாசமானாலும், வீரியம் மிக்கது என்பது புரிந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்ற பழமொழி நினைவிற்கு வந்தது. ஊர்கூடி தேர் இழுத்தால் நகராதா என்ன? ஊர் கூடிவிட்டது, தேரைப் பிடித்தாகிவிட்டது. தேர் இனி நிலைசேராமல் நடுவழியில் நிற்காது.

அம்மன் கோவில் நிலத்தை மீட்கவும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து திரண்டெழுந்து போராடும் ஈரோடு இந்து சகோதர, சகோதரிகளை எண்ணி நமக்குப் பெருமிதம் ஏற்படுகிறது.

அன்னை மகாசக்தி அவர்கள் தோள்களுக்கு வலிமையளிக்கட்டும். அவர்களது போராட்டம் வெல்லட்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க, இப்போராட்டம் ஒரு ஆதர்சமாக அமையட்டும்.

http://www.tamilhindu.com/2010/07/erode-hindus-fight-to-save-amman-temple/

Guiding Goddesses Devi

அழைத்து அருள் தரும் தேவி

மெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரப்பட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில் “இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம். நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்” என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது.

vaishno-devi-temple

ஜம்மூவிலிருந்து 50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே. ‘தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்’ என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி (வைஷ்ணவி) கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயில -ருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்.

இமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200 அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும். இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷ¤யுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் கவுண்ட்டர் கணினிமயமாக்பபட்டிருப்பதால் பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள். அதிகபட்சம் 22000 பேர் தான் மலையில் இருக்கமுடியுமா தலா -ல் தரிசனம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே புதிய அனுமதி சீட்டுகள் வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின் நடந்தோ, குதிரையிலோ, பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது.

பெரும்பாலான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள், குடும்பங்கள், உரசிக்கொண்டு போகும் குதிரைகள் இவர்களுக்கிடையே நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்க -ளும் கீழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாயாசமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள். கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனா -லயங்களில் மலிவான விலையில் சாப்பாடு ஓய்வெடுக்க கூடங்கள் என பல வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்டர் வசதியிருப்பது என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும் படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது.

ma-vaishno-deviசிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும், தவத்தை கலைக்க முயற்சித்த பைரவ நாத் என்பவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம். இறுதியின் பைரவ நாத் தேவியின் திருவருளால் முக்தியடைந்து விடுகிறான். பிரதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் “சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது. எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன் அந்த பிண்டிகளை கவனமாக பாருங்கள்” என்ற அறிவிப்பு காணப்படும்.

அந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட 6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும் சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதி சீட்டிற்கான குரூப் எண்ணைப் பெற்று வரிசையில் காத்திருக்கிருக்கும் போது தான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்ட் சர்க்யூட் டிவியில் காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதிக்கு அனுமதிக்க பட்டிருக்கிறது என்பது தெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். வரிசையிட்டுச் செல்லும் வழியின் இறுதியில் கண்னாடி சுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை.

vaishno-devi-wallpaperசில காலம் முன் வரை தவழ்ந்து செல்லவேண்டிய குகையாக இருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன் சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.

அந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை, அதில்தான் சன்னதி. அடுத்தவரின் கழுத்து இடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்த சில வினாடிகளுக்குள் அவசரப் படுத்துகிறார்கள். சரியாகப் பார்ப்பதற்குள் நமது தலையில் கையை வைத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பி விடுகிறார்கள். நுழைந்த மாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம்.

“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது. ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம் வழியிலுள்ள பைரவ நாத் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் ஒரு பக்தர். பைரவ நாதரையும் தரிசித்துவிட்டு மற்றோர் பாதைவழியாக கத்ரா திரும்புகிறோம்.

jammu-katra-palaceகத்ராவிலிருந்து ஜம்முவிற்கு வந்து நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த சிலை நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம். நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை. 1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது.

அதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும், காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது.

throne-in-jammu-palaceஅரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான டாக்டர் கரன்சிங் (முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார். ஒரு அறக்கட்டளை நிர்வகிக்கும் இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம். அரச குடும்பத்தின் தலைமுறைகள் சேர்த்த பலவையான அற்புதமான ஓவியங்களும் அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன. தர்பார் ஹாலில் மன்னர் குடும்ப படங்களைத்தவிர, மினியெச்சர் என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல் காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக் கண்டு வியந்துபோகிறோம்.

60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வச் செழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது. முதல் தளத்தில் 25000 புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷிய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது. “மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள்” என்ற வாசகம் நினைவிற்கு வந்தது.

Source: http://www.tamilhindu.com/2010/07/ma-vaishno-devi-temple-visit/