Tuesday, September 18, 2012


Brief Accounts of Brahmins, India..!

Contributions of the Brahmin community

Politics


During the Indian independence movement, many Brahmins, including Mangal Pandey, Nana Sahib Peshwa, Rani Laxmibai of Jhansi, Tatya Tope, Baikuntha Shukla, Chandrashekar Azad, Yogendra Shukla, Womesh Chandra Bonnerjee, Swami Sahajanand Saraswati, Adyakrantikarak Vasudev Balvant Phadke, Chaphekar Brothers, Anant Kanhere, Vinayak Deshapande, Vishwanath Vaishampayan (famous as "Bacchan", worked with Bhagat Singh, Chandrashekhar Azad, Basawon Singh (Sinha), Balgangadhar Tilak, Gopal Krishna Gokhale, (Rajguru, Ramprasad Bismil,Chandrashekhar Azad,Vanchinathan, Vinayak Damodar Savarkar, Ganesh Damodar Savarkar C. Rajagopalachari, Sri Krishna Sinha, Gobind Ballabh Pant, Kamalapati Tripathi, Sheel Bhadra Yajee, Ravishankar Shukla, Kailashnath Katju, Sir Tej Bahadur Sapru, Motilal Nehru, Shyama Prasad Mukherjee and others were at the forefront of the struggle for freedom and later Indian politics. Jawaharlal Nehru, the first Prime Minister of India and Sarvapalli Radhakrishnan, the first Vice President of India, were also Brahmins. Communist leaders like E.M.S. Namboodiripad, Hiren Mukherjee, S. A. Dange, P.C.Joshi, Acharya P. K. Atre and many others were Brahmins.


Brahmins who became Prime Ministers of India include Morarji Desai, P.V. Narasimha Rao and Atal Behari Vajpayee. Brahmin Presidents of India include V. V. Giri, R. Venkataraman, S. Radhakrisnan and Shankar Dayal Sharma.


Military


Several chiefs of the Indian Army have been brahmins, including General Krishnaswamy Sundarji, General T.N. Raina, General Bipin Chandra Joshi, General Sundararajan Padmanabhan,General V. N. Sharma.


In the Indian Air Force too, brahmins have reached the apex rank of Air Chief. Among these, are Air Marshal Subroto Mukherjee, Air Chief Marshal Swaroop Krishan Kaul, Air Chief Marshal Srinivasapuram Krishnaswamy, Air Chief Marshal S.P. Tyagi. India's first and only cosmonaut, Wing Commander Rakesh Sharma is also a brahmin.


In the Indian Navy, Admiral A.K. Chaterji, and Admiral J.G. Nadkarni are brahmins who rose to the heights of their service. Captain Mahendra Nath Mulla, a Kashmiri Pandit, commander of the INS Khukri received the Maha Vir Chakra during the Indo-Pakistan war of 1971, for his gallantry at the helm of his stricken ship.


Scholars and Writers


Among Brahmin scholars and writers are Panini,Satyabrata Nath, Patanjali, Kalidas,Satya Sandhani Haridutta Dash Chanakya, Banabhatta, Goswami Tulsidas, Sur Das, Keshav das, Behari Saint Dnyaneshwar, Eknath, Samarth Ramdas. Nobel laureate Rabindranath Tagore and others like Mahapandit Rahul Sankrityayan, Ramdhari Singh 'Dinkar', Jiddu Krishnamurthy, Hazariprasad Dwivedi, Sumitranandan Pant, Subramanya Bharathy, Tarashankar Bandopadhyay, Ramvriksh Benipuri, Caitanya MahaprabhuSuryakant Tripathi Nirala, Sarat Chandra Chattopadhyay, A. C. Bhaktivedanta Swami Prabhupada, Bankim Chandra Chatterjee, Srilal Shukla and Manohar Shyam Joshi. Other Brahmin scholars include Pandurang Vaman Kane, Ram Sharan Sharma and Debiprasad Chattopadhyaya. Modern writers include R. K. Narayan, as well as the famous cartoonist R. K. Laxman.

Sciences
Scientists from the Brahmin fold include Aryabhatta, Varahamihira, Brahmagupta, Nobel Laureates Sir C.V.Raman and his nephew Subrahmanyan Chandrasekhar, the agricultural scientist M. S. Swaminathan, the ethno-sociologist M. N. Srinivas, and the modern genius of mathematics Srinivasa Ramanujan, Shakuntala Devi and C. P. Ramanujam. Raja Ramanna, who was instrumental in making India a nuclear weapons state, was also a Brahmin.

Sports

In sports, major names include Sachin Tendulkar, Sunil Gavaskar, Ravi Shastri, Saurav Ganguly, Rahul Dravid, VVS Laxman, Anil Kumble, Rohit Sharma, Ishant Sharma, Krishnamachari Srikkanth and many more; the world chess champion Vishwanathan Anand, Ajit Agarkar, Hrishikesh Kanitkar.


Arts


Saint musicians include Thyagaraja, Muthuswami Dikshitar and Shyama Sastri. In entertainment, Lata Mangeshkar, Usha Uthup, Kavita Krishnamurthy, Hrishikesh Mukherjee, Hema Malini, Basu Chatterjee, Sudhir PhaDke, Balgandharva, Dr. Vasantrao Deshpande,Ashok Kumar, Kishore Kumar, Udit Narayan, Shantanu Mukherjee (Shaan), Abhijeet, Alka Yagnik, Madhuri Dixit, Amrita Rao, Sharmila Tagore, Padmini Kolhapuri Deepika Padukone, Aditi Govitrikar, Gayatri Joshi, Sonali Bendre, Rani Mukherjee, A. C. Bhaktivedanta Swami Prabhupada,Kajol, A. C. Bhaktivedanta Swami Prabhupada, Vidya Balan, Sonali Kulkarni, Sadhana Saragan (original surname is 'Ghanekar') are prominent names. Tansen, Baiju Bawra the musician of Akbar's court was born a Brahmin. Anupam Kher, Arjun Rampal, Rati Agnihotri, Apurva Agnihotri,Sanjay Dutt, Hrithik Roshan, Kamal Hassan, Mausumi Chatterji, Chunki Pande, Rekha and Meenakshi Sheshadri are also Brahmins.


Saints


Brahmin saints include Adi Shankaracharya, Madhwacharya, Mandana Mishra,Chaitanya Mahaprabhu,Dnyaneshwar, A. C. Bhaktivedanta Swami Prabhupada, Ramakrishna Paramhansa, Swami Vivekananda and Ramana Maharshi. Modern business leaders include the founder of Infosys, N. R. Narayana Murthy, Dr. Gururaj "Desh" Deshpande, the founder of the Deshpande Center for Technological Innovation at MIT..


Several notable names in Indian classical music belong to the Brahmin community, such as Bhimsen Joshi, Pandit Ravi Shankar, M. S. Subbulakshmi, Veena Doreswamy Iyengar, Mangalampalli Balamurali Krishna (popularly Dr. Balamurali Krishna), Pandit Jasraj, Shivkumar Sharma etc.


Source :- wikipedia..

Read more: http://www.unp.me/f15/brahmin-br-hma-a-64527/#ixzz26sOwKF7y

Saturday, July 28, 2012

வேடிக்கை பார்த்தது போதும்!



First Published : 28 Jul 2012 01:27:50 AM IST

Last Updated : 28 Jul 2012 01:30:45 AM IST
இந்தியாவின் வடகிழக்கு மூலையில் போடோ பழங்குடியினத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் கடந்த ஒரு வார காலமாகவே நீடித்து வருகிறது. கலவரத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே வருகிறது.  பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம். ஆனால், மத்திய, மாநில அரசுகளால் இந்தக் கலவரத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.  போடோ பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் நடைபெறுவது இது நான்காவது முறை. 1952, 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பல மாதங்கள் நீடித்த முந்தைய கலவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.  இப்போது நான்காவது முறையாக இந்த இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இதுவரை 44 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.  தற்போதைய கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மாநில அரசு என்பது வெளிப்படை. ஜூன் 30-ம் தேதி, ஒரு முஸ்லிம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், அதற்கு போடோ பழங்குடியினர் காரணம் எனக்கூறி, ஊர்வலம் நடத்தியதும் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து, காமதபூர் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 2 போடோ இளைஞர்கள் ஜூலை 5-ம் தேதி பதிலடியாகக் கொல்லப்பட்டவுடனேயே அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். களத்தில் இறங்கியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது. அதன் விளைவாக, ஜூலை 19-ம் தேதி மேலும் 4 போடோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே மேலும் 3 பேர் கொலை. கலவரம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது.  போடோ பழங்குடி மக்கள், அசாம் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகளில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். தேயிலைத் தோட்டங்கள் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறத் தொடங்கியபோது, இங்கு பல்வேறு துணைத்தொழில்களுடன் அசாம் மாநிலத்துக்கு வந்த வங்க மாநிலத்தவர் சொத்துகள் வாங்குவதும், நிறுவனங்கள் அமைப்பதும் நடந்தன. இதனால், போடோ பழங்குடியினர் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர்.  தேயிலைத் தோட்டத்தில் வேலை தேடி வங்காளமொழி பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் வங்க தேசத்திலிருந்து ஊடுருவினர். எல்லை கடந்து வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடியது. இவர்களைக் கணக்கெடுக்கவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் என்று பட்டியலிடவோ அசாம் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் போடோ இனத்தவரைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமானது. இவர்களை வாக்கு வங்கிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்தான் இதற்குக் காரணம்.  இந்நிலையில், "அசாம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்லிக்கொள்கிறது சீனா. இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு மாவோயிஸ்ட்டுகள் மறைமுகமாக ஊக்கம் தந்து, ஆயுதங்களும் தந்துகொண்டிருக்கிறார்கள்.  கடந்த மே மாதம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பேட்டியில், "உல்பா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டார். இதை அசாம் முதல்வர் தருண் கோகோய் மறுத்தார். "உல்பா-வை ஆயுதங்களால் பலப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறினார்.  அதைத் தொடர்ந்து, பெயர் வெளிவர விரும்பாத மத்திய உளவுத் துறை அதிகாரி கூறியதாகப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளிலும்கூட, உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் மியான்மரில் மறைந்து வாழ்வதாகவும், மாவோயிஸ்ட்டுகள் உல்பாவுக்கு சீன ஆயுதங்களை வழங்கி, அவர்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் எழுதின. ஆனால், மத்திய அரசு இத்தகைய கவலைதரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.  இதுவரை நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் தீவிரவாதிகளோ அல்லது நவீன ஆயுதங்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் கையாளும் கத்தி போன்ற சாதாரண ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இந்தக் கலவரங்கள் பொருளாதார சமன்குலைவால் நேரிட்டவை என்றுதான் கருத வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.  இருப்பினும், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்கும் தீவிரவாதிகள், மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கலவரத்தைத் தூண்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மக்களை மக்களுடன் மோதிச் சாகச் செய்வதைவிட வேறு என்ன பாதகத்தை தீவிரவாதம் உண்டுபண்ண முடியும்?  வேண்டுமென்றே தொடர்ந்து சில போடோ பழங்குடிகளைக் கொன்று, முஸ்லிம்கள் மீதான கோபத்தை வெடிக்கச் செய்யும் உத்தியாக இது ஏன் இருக்கக்கூடாது? மத்திய அரசின் புலனாய்வுத் துறை இது பற்றியும் யோசிக்க வேண்டாமா?  கலவரம் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனேயே அங்கே ராணுவம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கலவரம் மிகப் பெரியதாக வெடித்த பிறகுதான் ராணுவம் அங்கே சென்றுள்ளது. இதை வெறும் இனக்கலவரமாகக் கருத முடியவில்லை. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் புரிதல் இல்லாமல், இந்த விவகாரத்தை அணுகினால் தீர்வு கிடைப்பது அரிது.  அரசியல் ஆதாயத்துக்காகவும், தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வங்க தேச அகதிகளை அதிக அளவில் அசாமில் குடியேறச் செய்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவின் குறுகிய கண்ணோட்டம்தான் இன்று ஓர் இனக்கலவரமாக வெடித்து, தீவிரவாதிகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைக் களமிறக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கும் என்பது மட்டும் உறுதி!    


Monday, May 14, 2012

மறுபடியும் இந்திய ஜனாதிபதியாக அப்துல் கலாம்.? இணையதளத்தில் பெருகும் பொது மக்கள் ஆதரவு அவரை பதவியில் உட்கார வைக்குமா?





அடுத்த ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவது பிரணாப் முகர்ஜியையா? அல்லது ஹமீது அன்சாரியையா? என்ற கேள்விகள் எழுந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியாக பிரணாப் முகர்ஜிக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் மக்களின் ஆதரவாளராக ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம்தான் உள்ளார். அப்துல் கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்துல் கலாமுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 'அப்துல்கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'. 'ஜனாதிபதியாக அப்துல் கலாம்' என்ற பெயர்களில் சிலர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். இந்திய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குரல் கொடுப்பது இதுவே முதல்முறை ஆகும்.
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-
ஜனாதிபதி பதவிக்கான குறைந்தபட்ச தகுதியை நிறைவு செய்யக்கூடிய ஒரே நபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மட்டுமே என்று சுமித் நக்பால் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக படித்தவர், பண்பாளர், பணிவானவர் மற்றும் மக்களின் ஜனாதிபதி என்று பலர் எழுதியுள்ளனர். அப்துல்கலாம் ஒரு மாபெரும் தலைவர். அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்பதால் உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் என நாகார்ஜுன் ஷெட்டி என்பவர் சொல்லி இருக்கிறார்.
வெளிநாடு சுற்றுப் பயணத்தில் கூட்டத்தையே தன்னுடன் அழைத்து செல்ல கலாமுக்கு ஒரு குடும்பம் கிடையாது. நில மோசடி செய்யவில்லை. எனவே அவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று தற்கால நிகழ்வுகளை கிண்டல் செய்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவர்கள் போன்று ஏராளமானோர் அப்துல்கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு பொது மக்களை கலாம் விசுவாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Monday, May 7, 2012

அழகாய் அழகர் வராரு….


மாட்டுவண்டி பயணம், சர்க்கரை சொம்பில் சூட தரிசனம், சவ் மிட்டாய் என, மாறாத மண் மணத்துடன் நடக்கும், மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது.
மே 2ல், நடக்கும் திருக்கல்யாணமாகட்டும், மே 3ம் தேதி நடக்கும் தேரோட்டமாகட்டும், மே 6ம் தேதி நடக்கும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவாகட்டும், மதுரையே பக்தி கோலம் பூண்டு விடும்.
திருவிழா தொடர்பான எத்தனை, எத்தனையோ கதைகள், அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து வந்தாலும், அது எதைப் பற்றியும் கவலை இல்லாத மதுரை மக்கள், பத்து நாட்கள், தாயே மீனாட்சி என்று, மீனாட்சியை வித விதமான வாகனங்களில் பார்த்து வணங்குவர், திருக்கல்யாண கோலத்தில் பார்த்து பரவசம் அடைவர், தேரில் வைத்து பார்த்து மகிழ்ந்து மனம் உருகுவர். 

அதன்பின், அடுத்த பத்து நாளைக்கு வண்டி கட்டி, அழகர் மலையில் உள்ள அழகரை, கள்ளழகர் வாகனத்தில் கிளப்பி விடுவர், அவர் மதுரை நோக்கி வரும் வழியில், மண்டபகப்படிகள் அமைத்து, தங்க வைத்து அழகு பார்ப்பர், பின், மதுரைக்குள் நுழையும் போது, அவரை எதிர்கொண்டு வரவேற்று சேவித்து, எதிர் சேவையில் மகிழ்வர்,

எதிர்சேவை நிகழ்ச்சியென்பது, பார்ப்போரை, பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் கொண்டு சென்று விடும். அழகர் வேடமணிந்த துருத்தி நீர் தெளிப்போர், திரியெடுத்து ஆடுவோர், முத்துசோலிப்பல்வரிசை கட்டி ஆடுவோர் பலரும் தப்பும், தவிலும் வைத்து ஆடி வருவர். ஒரு பெருங்கூட்டமே அவர்களோடு ஆடி வரும். நகரத்து இளைஞர்களும், அவர்களோடு சேர்ந்து ஆடி மகிழ்வர். ஆடாத கால்களும், அன்று லேசாக ஆடும்.

குதிரை வாகனத்தில், அழகர் பெருமாள் கோவிலை விட்டு வந்ததும், தண்ணீரை அவர்மேல் பீய்ச்சி மகிழ்வர். அப்படியே குதிரை மிதந்து வருவது போலிருக்கும். அழகரை தூக்கி வரும் சீர்பாதம்தாங்கிகள், சில இடங்களில், அப்படியே சாமியை தண்டியலோடு வைத்து குலுக்குவர். பார்க்கவே கொண்டாட்டமாக இருக்கும். குதிரை, குலுங்க குலுங்க, மதுரையே குலுங்கும். “கோவிந்தோ!’ குரல்கள், வானை பிளக்கும்.

அன்று இரவு, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் அவருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூட்டி மகிழ்வர், அப்படியே ஆயிரம் பொன் சப்பரத்தில் ஏற்றி, வைகை கரை வரை கொண்டுவந்த பின், அம்சமே உருவான தங்கக் குதிரை வாகனத்தில், அழகே உருவான அழகரை பட்டுடுத்தி, “பிடியுங்கள் கடிவாளத்தை…’ என்று, தங்க குதிரையின் கடிவாளத்தை அழகரின் கையில் கொடுத்து இறக்கி விடுவர்.

இந்த காட்சியைக் காணத்தானே திரண்டு வந்தோம் என்பது போல, பரந்து விரிந்து வைகை ஆறு முழுவதையும் நிறைத்தபடி, லட்சக்கணக்கான பக்தர்கள், தங்களது கைகளில் வைத்திருக்கும் சுக்கு கலந்த, நாட்டு சர்க்கரை சொம்பின் மீது, சூடம் ஏற்றி காண்பித்து, கூடுதலாக, “கோவிந்தா கோவிந்தா’ கோஷமிட்டு மெய்சிலிர்த்து வணங்கி மகிழ்வர்.

அதன் பின், வெளியூர் கூட்டம் பஸ் பிடித்து சென்றாலும், உள்ளூர் பக்தர்கள், அழகரை வண்டியூர் கொண்டு சென்று, ஓய்வு எடுக்க விட்டு, மறுநாள் விடிய, விடிய தசாவதார கோலத்தில் பார்த்து மகிழ்வர். பின், பூப்பல்லக்கில் ஏற்றி பிரியாவிடை கொடுத்து, மீண்டும் அழகரை மலைக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு, அதன்பின் தான் அடுத்த வேலையை பார்ப்பர்.

இந்த திருவிழா நாட்களை மையப்படுத்தி வரும் விருந்தினர்களை, வரவேற்கும் மதுரை மக்களின் விருந்தோம்பல் எங்கும் காண முடியாதது, “அண்ணே வாங்கண்ணே…’ என்று எல்லாரையும் மனதார வரவேற்று, இப்ப, “சாமி எங்கேயிருக்கு?’ என்று விசாரித்து, தரிசிக்க வைத்து பார்க்கும் அன்பு என்றும் வற்றாதது.

அப்படியே பொருட்காட்சிக்கு கூட்டிப்போய், டில்லி அப்பளம் வாங்கிக் கொடுத்து, ஜிகிர்தண்டா குடிக்க வைத்து, நடுராத்திரினாலும் எட்டு வகை சட்னியோடு இட்லி வாங்கிக் கொடுத்து, ரொம்பவே கவனிச்சிருவாங்க.

அப்புறமென்ன கிளம்பிர வேண்டியதுதான்!
http://senthilvayal.wordpress.com/2012/05/07/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/http://senthilvayal.wordpress.com/2012/05/07/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/

Thursday, May 3, 2012

My reactions to the articles on President Pratibha Patil

http://hildaraja.wordpress.com/2012/04/

This month I received two articles on Pratibha Patil and her tenure as president. These were not only factual but revealed a sordid state of affairs .w.w.w..Sandeep web .com titled the article ‘Shame on you Madam. The fact is it should have been in the plural because there is more than one Madam involved for this state of affairs. The second article –on open letter addressed to the President (author name not given) contoured other dimensions of the President’s affairs. To me these two articles showed how low we have fallen and how hurt we Indians are to have a person in the name of Pratibha Patel thrust down our throats as a President. What have we done to be so shabbily treated? These two madams will go down in Indian history as having harmed and fleeced the nation more than the foreign invaders had.

Does India-this great nation not deserve a better candidate as President than Partibha Devising Patel? Should all these postings from top to bottom be distributed by St Manio as though she brought these as part of her Italian dowry? We the people have a say and we have a democracy which Mrs Sonia Gandhi has thrown out, shredded and fabricated into an unrecognizable dynasty polity. With no governance but only a supreme power which she holds. It is a pity that the millions of Indians are tolerating this power centre- this abuse and misuse of power. After all, Mrs Sonia Gandhi is just the president of a political party (and we know how and why she became the President of the Congress party) and an MP. The fact that she occupies No 10 Janpath itself is a travesty of justice. She should be allotted an MP’s bungalow and nothing more. All the assets-the moveable and the immoveable assets belong to the people of India.So what claim has she to No 10 Janpath? It this unjust claim and unjust occupancy that is an exteriority of an unjust power centre. This enables her to distribute assets and positions at her whims and fancies. This must stop .This is a prelude to the present President’s occupancy and kind of life style. This is because of Mrs Sonia Gandhi and hence ‘shame on you madam must be first directed against her.

Never in India’s history had we such a person as Pratibha Patel a president who was least worthy of the chair. Her record of performance/rather non performance is there to testify. Yet she had no qualms to straight away hike her salary 300 times. This when she is fully aware of the discussion on fixing the Poverty line at 32 Rs per day. What justification is there when millions are below the PL for her to hike her salary300 times. Is the 22.3 crores not sufficient for her that she had to go in for a salary hike?.Is she sweating it out-What is her performance record? This mind you when the PL is at Rs 32.No single person with some sort of a conscience would give herself such a hefty salary hike.
We are morons watching all this and more. What rationale is there for her to go an a spending spree holidaying in resorts and in any fanciful place she wishes when people are slogging-sweating and yet find no solace to sit back and have a rest? Why had she to tax us a whopping 106 crores for her foreign trips? Is it not sinful? Why had she to race towards breaking the record of all the previous Presidents in this area? What did she achieve?

Why had she to occupy Rashtrapati Bhavan with her extended family? Why was it renovated at the cost of the tax payers’ money by a few crores. All this comes easily to her because she has no conscience. Yes I repeat she has no conscience. One with a conscience would think twice and would not misuse the Presidency and abuse it this way .It does not matter whether she was a good cook or not and it does not matter if she was the kitchen maid for Indira Gandhi.But if this is her only qualification then it matters. If her only credit score is that she was a faithful server of Mrs Sonia and the family then it must hurt us for being so grievously sinned against.

But all this again simmers down when one thinks of her callousness in grabbing the Defence land of 2,61,000 square feet allotted to build houses for the armed forces .One would think that she as the chief of the Armed forced would be delighted to at least perform this one single task and see that the poor jawans guarding her and the country would have decent houses .No she had to snatch that too because she was living by the pavements before she became the President and now after her presidency is over the poor woman has to go back to the pavements. Is that not an insult to the people of India hence she wanted a palatial bungalow with over 2 lakh square feet fortified for her use. After all no one would grudge her a modest bungalow but not this avarice in grabbing defense land at the cost of the jawans who have no say. Is this the way we treat them- reward them?

All this goes to show that Pratibha Patel was most ill suited to occupy the chair of the President. She was like a spoilt brat let loose in Disney land running hither and thither wanting to go down to bottom of the sea and fly high above in the most modern/sophisticated jet. She was using her power just to satiate her selfish, childish desires. Unmindful of the cost and unmindful of the sacred post she holds.

Did she pause one moment and realize that she has to reflect the India that she represents? This is an aspect of her personality that will reveal a most selfish-vested interest person. She as a woman did not have an iota of empathy to the millions of women of this country. She as woman did not feel the sensitivity of hunger-starvation, lack of basic needs, orphans and cripples that crowd our streets highways and byways. She did not have the least qualm to spent money on her vanity and grandeur at the cost of these dumb people-voiceless and powerless. This is the sinfulness of her person. It is a shame that we had her as a president. And the basic cause for this is Mrs Sonia Gandhi and hence I dare to say shame on her for treating the India citizens this way and shame on Pratibha Patil for misusing the position. This is a breach of trust-a travesty of justice and a betrayal of the nation-Will the two madams then not be called upon to account for these sins against the nation ?

Cry my beloved country.
Dr Mrs Hilda Raja,
Vadodara

Friday, April 27, 2012

சரஸ்வதி வீணை

சை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனை இசைய வைக்கிற, அமைதியடைய வைக்கிற அருமையான விஷயம் இசை.
“இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்”

என்று இசையை பற்றிய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. இசையை தரும் இசைக்கருவி களில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, வீணை. இது ஒருவகை நரம்பு இசைக்கருவி.

வீணை இசைக்கருவி பண்டையகாலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும் கி.பி.17-ம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. இது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரின் காலத்தில் தான் நிகழ்ந்தது.
வீணை என்றாலே தஞ்சை தான் நினைவுக்கு வரும். தஞ்சாவூர் வீணை தான் பிரசித்தி பெற்றவையாக இன்னும் விளங்கி வருகிறது.

வீணைகள் பலா மரத்தினால் செய்யப்படுகிறது. அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை.
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
தஞ்சை வீணையின் குடத்தின் வெளிப்புறத்தில் 24 தெரணை கோடுகள் நாபுக்கள் கீறப்பட்டு இருக்கும். வீணையில் பல வகை உண்டு. இதில் ஒரே மரத்துண்டில் தண்டியும், குடமும் குடைந்து செய்யப்பட்டு உள்ள வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர். வீணை குடத்தின் மேல் பல வகை களில் பல ஒலித்துளைகள் வட்டமாக போடப்பட்டு இருக்கும். இந்த துளை நாதத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவும்.
வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.
***

வீணையின் வகைகள்

வீணைகளில் சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன. ஒரு வீணை தயாரிக்க ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. முன்பு வீணை தயாரிக்க அதிக நாட்கள் ஆனது. தற்போது 3, 4 பேர் வேலையை பிரித்து செய்வதால், 20 நாட்களில் ஒரு வீணையை பூர்த்தி செய்துவிடுகிறார்கள். வீணைக்கு தேவையான பலாமரங்கள் பண்ருட்டியில் இருந்தும், கம்பிகள் மும்பையில் இருந்தும், பைபர் (சுரக்குடுவை) சென்னையில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 141/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும்.
தஞ்சையில் 3-வது தலைமுறையாக வீணை தயாரிக்கும் சகோதரர்களான வெங்கடேசன், அனந்தநாராயணன் ஆகியோர் சொல்கிறார்கள்..
“நாங்கள் மரத்திலான வீணைகள் மட்டுமின்றி வெள்ளி வீணை, தோல் வீணை, எலக்ட்ரானிக் வீணை, எப்.எம். வீணை, பைபர் வீணை போன்றவைகளையும் தயார் செய்கிறோம். இதில் எப்.எம். வீணையை அது இசைக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்குள் எப்.எம்.மூலம் கேட்கலாம். தற்போது 50 குடும்பங்கள் இந்த வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
முந்தைய காலங்களில் வீணை குடத்தை அலங் கரிக்க யானை தந்தத்தை தகடுகளாக அறுத்து பூவேலைப்பாடுகளுடன் பயன்படுத்தினார்கள். பின்பு மான் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பூ வேலைப்பாடுகளை மரத்திலும், பிளாஸ்டிக் தகடுகளிலும் செய்கிறார்கள். இதை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்துவதில்லை.
ருத்திர வீணை என்பது அரிதாகிவிட்டது. விசித்திர வீணையும் அரிதாகிவிட்டது. இந்த வீணையில் மெழுகுசட்டம், 24 மெட்டு போன்றவை இருக்காது. மேல் பகுதியில் 4 கம்பிகளும், 4 தாள கம்பிகளும், உட்பகுதியில் 12 தாளக்கம்பிகளும் இருக்கும். தற்போது வீணை அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் தயாரிப்பு குறைவாக உள்ளது. தஞ்சையில் செய்யும் வீணை தான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது” என்று அவர்கள் கூறினார்கள்.

http://senthilvayal.wordpress.com/2012/04/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88/

Monday, April 16, 2012

சித்திரையில் முத்திரை பதித்த ஆட்சி!

பழ. கருப்பையா
First Published : 13 Apr 2012 05:17:27 AM IST


தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாண்டு காலமாய் சித்திரையிலேதான் தொடங்கியது. இடையில் சிறிது குழப்பம்; இந்தக் குழப்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உண்டானது! இப்போது மீண்டும் வண்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிட்டது!

கருணாநிதி தையில்தான் தமிழாண்டு தொடங்குகிறது என்று போட்ட சட்டம் தலைமைச் செயலகத்தைத் தாண்டி தலையை நீட்ட முடியவில்லை.

சட்டமன்றம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை போதாமையை ஈடுகட்டுவதற்கு குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்; ஒரு சட்டம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் கடல்கூட நூறு அடி உள்வாங்கி விடும் என்று நம்பியவர் கருணாநிதி! அதிகாரத்தின் தன்மை அதுதான்! அது மெல்ல மெல்ல ஒரு மனிதனைக் கடவுளாக்கிவிடும்; இரணியர்கள் இப்படித்தான் உண்டானார்கள்!

ஆனால், மக்கள் வழக்கம்போல் தை முதல்நாளை அறுவடை நாள் மற்றும் தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகவும் தொடர்ந்து கொண்டாடி வருவதில் உள்நுழைந்து கருணாநிதியின் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!

சித்திரைப் புத்தாண்டு அன்று இரவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழுடைத் தெய்வமான அம்மனோ சாமியோ குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அருள்பாலிப்பது வழக்கம். இரவு முழுவதும் நாகசுரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்று ஊரைத் தூங்க விடாமல் கிறங்க அடிக்கும்!

இதில் போய் குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அவ்வாறு குறுக்குசால் ஓட்டுவதற்கு அவர் மறைமலை அடிகளையும் உழவர் குழுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

"தமிழ் விடுதலைதான் தமிழரின் விடுதலை' என்பதைப் புரிய வைத்தவர்கள் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரையிலானவர்கள்! மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் உழவர்கள் மட்டத்திலேயே தேங்கி விடாமல், அண்ணா அதை மக்கள் இயக்கமாக்கினார்.

1920-ல் தொடங்கி 1970 வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலம்! ஒவ்வொரு இளையோனும் இளையோளும் தங்கள் பெயர்களை இளம்வழுதி, இளவழகன், செழியன், செங்குட்டுவன்,தேன்மொழி, கயல்விழி என்றெல்லாம் மாற்றிக்கொண்ட காலம்! சங்க இலக்கியம் போற்றப்பட்ட காலம்; சிலப்பதிகாரம் முன்னிறுத்தப்பட்ட காலம்; வள்ளுவன்தான் தமிழரின் முகம் என்று வலியுறுத்தப்பட்ட காலம்! அது தமிழரின் பொற்காலம்! பொற்காலத்தைச் சமைக்க ஓர் இயக்கம் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. பக்தி இயக்கம், சித்தர்களின் கழகம் என்று தமிழ்நாட்டு வரலாற்றில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் தோற்றுவித்தவர்கள் ஆளும்தரப்பினர்களாக இருந்ததில்லை.

"அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் எம்.ஜி.ஆரின் இனஉணர்வுப் பாடல் 1970-க்கு முந்தியது.

"முஸ்தபா முஸ்தபா; டோன்ட் ஒர்ரி முஸ்தபா' என்பது 1970-க்குப் பிந்தியது.

நரேஷ், சுரேஷ், சந்தோஷ், ப்ரியா, அனுஷா என்பவைதாம் இன்றைய தமிழர்களின் பெயர்கள்!

காங்கிரஸ் தலையாட்டி பொம்மைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு நாடாண்ட கருணாநிதி இவர்களை ஒழுங்காகப் பெயர் வைத்துக்கொள்ளச் சொல்லியும் ஒரு சட்டம் போட்டிருக்கலாம். மறைமலை அடிகளின் பெயரால் இதையும் செய்திருக்கலாம்!

இவை அனைத்துமே அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடுகள்.

1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க., க. சுப்பிரமணிய பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் தமிழருக்கென ஒரு "தனி ஆண்டு' தேவை என்று திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்வது என்றும், ஆண்டின் தொடக்கமாக தை முதல்நாளைக் கொள்வது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் அந்த அறிஞர் குழு எடுத்த முடிவுக்குத்தான் தான் சட்டவடிவம் கொடுத்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் வடமொழி ஆண்டுமுறை அவர்களுக்குரியது இல்லை. வடமொழி ஆண்டுமுறை மிகவும் குழப்பமானது. சித்திரபானு ஆண்டு ஒரு மன்னன் பிறந்தான் என்று சொன்னால் எந்த சித்திரபானு என்று கண்டறிய முடியாது. 3000 ஆண்டுகளில் 50 சித்திரபானு வந்து சென்றிருக்கும்.

ஆகவே, அந்த ஆண்டு முறை குழப்பமானது என்பதாலும் அது தமிழர்க்கு உரியது அன்று என்பதாலும் அந்த ஆண்டு முறையை ஒழித்துக்கட்ட அறிஞர் குழு எண்ணியது என்பது சரியானதே!

வள்ளுவன்தான் தமிழர்களை அடையாளப்படுத்தவந்த முகம் என்பதனால் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான அந்த வள்ளுவன் பெயரில் ஒரு தொடர் ஆண்டு முறையை அமைப்பதென அறிஞர் குழு முடிவெடுத்ததும் மிகச்சரியானதே.

ஆனால், அதே மறைமலை அடிகள் தலைமையிலான குழுதானே தை முதல்நாள் தான் வள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லியிருக்கிறது; அதுமட்டும் கசக்கிறதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்பார்!

500 புலவர்கள் கூடியெடுத்த முடிவு என்னும் ஒன்றே கருணாநிதி தான் எடுத்த நிலைப்பாட்டுக்குப் போதுமானது என்று கருதுகிறார்.

500 புலவர்களும் நிகரற்றவர்கள்தாம்; ஆனாலும் 6 கோடித் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று கொண்டிருப்பதை புலவர்கள் கருத்தில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

சித்திரபானு, சுபானு, பார்த்திப என்பவை வடமொழி ஆண்டுகள்தாம்; ஆனால், சித்திரையும், வைகாசியும் வடமொழி மாதங்களா? அவை தமிழ் மாதங்கள் இல்லையா?

ஆண்டு முறை தமிழர்க்கு இருந்ததை நம்மால் அறிய முடியவில்லை. ஆனி, ஆடி என்று மாதமுறையும் ஞாயிறு, திங்கள் என்னும் கிழமை முறையுமா தமிழர்க்கு இல்லாமல் போய்விட்டது?

திருவள்ளுவர் ஆண்டு சித்திரையில் தொடங்குகிறது என்று பழைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் பழக்கத்தைக் கருத்தில்கொண்டும் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும்!

ஆனால், அந்த அறிஞர் குழு அறிவார்ந்த மக்களை உள்ளடக்கியதுதான்! வடமொழி ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை என்று அன்றுவரை நம்பப்பட்டது!

காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்த ஆறாச்சினத்தின் காரணமாக, வடமொழியோடு சேர்த்துச் சித்திரையையும் புறந்தள்ளிவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

மறைமலை அடிகள் தலைமையிலான அந்த அறிஞர் குழு தொன்றுதொட்ட நடைமுறையையும் மக்களிடையே ஆழமாக வேரோடி இருக்கும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று அறிவித்ததால் திருவள்ளுவராண்டு மக்களிடையே புழக்கத்திற்கு வராமலேயே போய்விட்டது!

கருணாநிதிதான் இதற்குச் சட்டம்போட்டுப் பார்த்தாரே; கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தச் சட்டத்திற்குப் பயந்து எந்த மக்களாவது திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்களா? அது மக்கள் நினைப்பிலாவது இருக்கிறதா? குறைந்தது அவர் போட்ட சட்டத்திற்கு எ.வ. வேலுவாவது, பேரன் உதயநிதியாவது பயந்ததாகக் காட்டிக்கொண்டாவது கடைப்பிடித்ததுண்டா?

மறைமலை அடிகள் தொடங்கிய தமிழ் இயக்கம் வெல்ல முடிந்தது; திருவள்ளுவர் ஆண்டு முறை மட்டும் வெல்லவில்லையே, ஏன்? சித்திரையை மாற்றித் தை என்று அறிவித்த நெருடல்தான் அதற்குக் காரணம்.

கதிரவன் மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அதனின்று வெளியேறும் வரையிலான காலத்தை பழந்தமிழர்கள் சித்திரை மாதமாகக் கொண்டார்கள் என்று தெளிவான காலக்கணிதத்தை முன்வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள்.

இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது!

பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.

சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே?

"பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே?

பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது!

ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்!

ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்!

தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும்.

ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.

திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்?

ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு?

திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்!

சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்!

நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்!

"காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=581324&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF!

தலையங்கம்: கனவு மெய்ப்பட வேண்டும்!


First Published :
14 Apr 2012 05:48:07 AM IST

Last Updated : 14 Apr 2012 05:49:47 AM IST

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பு இன்று முதலாகவே நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தை ஏற்று அறிவித்திருப்பதோடு, எப்படிச் செயலாற்ற வேண்டும் என்கிற விதிமுறைகளையும் ஏற்படுத்திவிட்டது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை.

ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் ஏழை மாணவர்கள் தகுதியைப் பெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் பதவிகள் மூலம் நெருக்கடி தந்து இந்த 25% விழுக்காட்டினைப் பெற்றுப் பயனடைதல் சாத்தியமில்லை.

இருப்பினும், ஒரு பள்ளியில் 25%க்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் "ரேண்டம்' முறையில் தீர்மானிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த "ரேண்டம்' முறைத் தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த "ரேண்டம்' முறை பள்ளி வளாகத்தில் பொது இடத்தில் வைத்து, விண்ணப்பித்த அனைத்துப் பெற்றோரின் முன்னிலையில் நடத்தப்பட்டால் மட்டுமே, இதில் ஊழல் இல்லாத நிலையை உருவாக்க முடியும். இல்லாவிட்டால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள் தலையீட்டால் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடக்கும்.

25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டால் தங்கள் லாபம் குறைந்துவிடும் என்று முணுமுணுக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம் இருக்க, அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை மேலும் குறைந்துவிடும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்புகளும்கூட எதிர்ப்புத் தெரிவித்தன. அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணி தரமாக நடைபெற்றால் நிச்சயமாக மாணவர்கள் வரவே செய்வார்கள் என்பதை ஆசிரியர் சங்கங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசு அறிவிக்கை வெளியான போதிலும்கூட, இன்னும் சில நடைமுறைகளை அரசு விரிவாகச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்தச் சட்டம் 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே. அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதைக் காரணமாகக் காட்டி பிளஸ் 2 படிப்பில் கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தை நாடும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்த 25% ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்பதை ஆணித்தரமாக அறிவித்து, இதுதொடர்பாகத் தடையுத்தரவு கோரும் மனுக்களை விசாரிக்கும் முன்பாக, தமிழக அரசிடம் கருத்தறிய வேண்டும் என்றும் "கேவியட்' தொடுத்து வைப்பது அவசியம்.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் மட்டும் நிர்வாகத்துக்குத் தரப்படவுள்ளது. இந்த இடஒதுக்கீட்டில் படிக்க வரும் மாணவர்களிடம் கற்பித்தல் மற்றும் வகுப்பறைச் சூழலில் எந்தவித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்பதை இந்த அறிவிக்கை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இலவசமாகத்தான் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான ஷூக்கள், டை, வண்ண உடைகள், உடற்பயிற்சி வகுப்பு நாளில் வெள்ளை உடை மற்றும் கேன்வாஸ் ஷு என்று பல வகை உடைகளை நிர்ணயித்து லாபம் பார்த்து வருகின்றன. அங்கே சேரும் இந்த ஏழை மாணவர்கள் இந்தச் செலவுகளை எப்படி ஏற்க முடியும்? அதனால், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரேவிதமான சீருடையை மாணவ - மாணவியருக்கு அறிவுறுத்துவதும் அவசியம்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் மற்றொரு வருவாய், பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரும் பேருந்துக் கட்டணத்தால் கிடைக்கிறது. ஏழைக் குழந்தைகளால் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. தற்போதுள்ள நடைமுறைப்படி தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் கிடைப்பதில்லை. 25% இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதலாகவே அமலுக்கு வரும் என்ற நிலையில், இத்தகைய இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எந்தத் தனியார் பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ் வழங்குவதை இப்போதே உறுதி செய்யவும் வேண்டும்.

தனியார் பள்ளியில் படிக்கும் உயர் வருவாய்ப் பிரிவினரின் குழந்தைகளுக்கு இணையாக இந்த ஏழைக் குழந்தைகளும் படிப்பில், தேர்வில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதற்காகத்தான் இந்தச் சட்டத்தில், இத்தகைய குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையான அறிவுத்திறன் பெறும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சி இல்லாவிட்டால், ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும். ஆகவே, சிறப்புப் பயிற்சியை ஏழை மாணவர்களுக்கு உறுதி செய்வது மிகமிக அவசியம்.

பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தீர்ப்பு வருவதற்கு முன்பே அவசர அவசரமாக முடிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. 2012-13 நிதியாண்டில் 25% மாணவர் ஒதுக்கீடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தும்கூட இந்த மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டிருப்பது, அரசுக்கு நெருக்கடி தந்து, இந்த 25%க்குக் கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டிக்கொள்ளலாம் என்ற (கல்வி அதிகாரிகள் கொடுத்த) தைரியம்தான், வேறென்ன!

நல்லதொரு சட்டம் இயற்றப்பட்டு, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டிருக்கிறது. இதை நடைமுறைச் சாத்தியமாக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. சட்டம் செயலாக்கப்பட்டாலே போதும், கல்வி குடிசைகளைப் போய்ச் சேரத் தொடங்கிவிடும்!

Thursday, April 12, 2012

காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க !

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.

காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.

குடும்பத்திற்கான நாள்

இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.

நோ மிஸ்டு கால்

என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.

இன்ப அதிர்ச்சி

வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.

அன்பார்ந்த பரிசுப்பொருள்

தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.

சின்ன சின்ன உதவிகள்

வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.

senthilvayal.wordpress.com/


Wednesday, April 11, 2012

காங்கிரசாருக்கு கள்ளவாக்குகளை சேகரிப்பது ஒன்றும் புதிதல்ல.

TIME என்ற அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிக்கை உலகில் சக்தி வாய்ந்த

100 மனிதர்கள் யார் என்பதை தெரிவு செய்ய ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இரு நாட்கள் முன்னர் வரை குஜராத் நரேந்திரமோடி முன்னிலையில் நின்றார்.

அப்போதுதான் காங்கிரசாருக்கு ஞாபகம் வந்தது. ரூம்போட்டு யோசித்தார்கள்.

உடனே ஒரு அலுவலகம் திறந்து, அதற்கெதிராக இரவு பகலாக ஆட்களை பணியமர்த்தி அவருக்கு எதிராக வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.

காங்கிரசாருக்கு கள்ளவாக்குகளை சேகரிப்பது ஒன்றும் புதிதல்ல. இதில் என்ன புதுமை என்னவென்றால் ஒரேமணி நேரத்தில் மோடிக்கு

எதிராக வாக்கு போடவைத்துள்ளனர். மோடிக்கு எதிரான

சிறுபான்மையினரைஎல்லாம் தூண்டி அவருக்கெதிராக வாக்களிக்க

வைத்துள்ளனர். இதற்காக தனி அலுவலகமே செயல்படுகிறதாம்.

என்ன கொடுமை! அதுமட்டுமல்ல தற்போது முன்னிலையில் இருப்பவர்

பெயர் தெரியாத ஒருவர். இரண்டாவதாக இருப்பவர் எரிக்மார்ட்டின்.

(அவரும் யாரென்று தெரியாது)

இந்திய வரலாற்றில் ஒருதலைவரை குறிவைத்து பத்து ஆண்டுகளுக்கு

மேலாக எதிர்பிரச்சாரம் செய்வது அநேகமாக மோடியை எதிர்த்து தானிருக்கும்.

அவர் மீது மட்டும் ஏன் இந்தத் தாக்குதல்?

பயம் தான்....

யாருக்கு ?

காங்கிரசாருக்குத்தான்....

நரேந்திர மோடி இருக்கும் வரை ராகுல் பிரதமர் என்பது பகல் கனவாகத்தானிருக்கும்.

ஆகவே எப்படியாவது அவரை வீழ்த்த வேண்டுமென்பதே இவர்களது பணி.

அதற்காக மத்திய அரசாங்கமே மோடியை எதிர்க்க காங்கிரசின் பின் நிற்கிறது.

பாவம் தோற்கப்போவது காங்கிரஸ்தான்.

அமெரிக்காவில் உள்ள அறிவுசார்ந் இந்தியர்கள் அமைப்பு TIME பத்திரிக்கைக்கு எழுதிய கடிதம் இந்தியப் பத்திரிகைகளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் இதோ:

Declare 2012 Time poll as Null and Void
08/04/2012 04:07:57 INDIAN AMERICAN INTELLECTUALS FORUM

LETTER TO THE EDITOR, TIME REQUESTING HIM TO DECLARE THE 2012 TIME 100 POLL AS NULL AND VOID

The Editor
Time Life Building
Rockefeller Center
New York, New York 10020
April 6, 2012

Sub: Declare the 2012 Time 100 Poll as null and void and Disqualify Anonymous and Erik Martin from the Number One and Number Two positions

Sir:

We are stunned and appalled at the manner in which your website on the 2012 Time 100 Poll was rigged and hacked by Anonymous and Erik Martin under your nose. Your staff seems to have stood mute. According to the final results, Anonymous secured 395,793, Erik Martin 264,193 and Narendra Modi 256,792 yes votes.

As reported by http://mashable.com/2012/04/06/anonymous-tops-time-100-poll/ “Anonymous has been accumulating around 14,000 votes per hour, jumping from approximately 40,000 votes by midday Thursday to more than 380,000 votes by midday Friday!.”

The manner in which these two groups rigged and manipulated the results to their advantage is a matter of great disgrace not only to the reputation of the Time Magazine but also to the civil society which wanted to exercise its rights in accordance with the rules laid down by your esteemed Magazine.

These two groups have made a mockery of The Time Polls 2012. They have tarnished your credibility, brought ignominy to your standing, and made your august magazine a laughing stock in the eyes of the world at large and your loyal customers.

People are saying these Polls are unfair and unjustified. They smack of hoax, scam and deception.

A fraud of colossal magnitude has been perpetrated on the credulous masses who believe in fair play and justice. We feel badly mauled and cheated. If this issue is not settled in an equitable manner, we would be compelled to urge 1.3 billion Indians all over the world to boycott Time.

We request you to thoroughly investigate this matter. We will also appreciate it very much if you will declare the 2012 Time Poll as null and void and disqualify the above two entities from number one and two positions for brazen violation of your contest rules and those of universal fair play.

Very truly yours,


Narain Kataria

With Wishes,

Dharmaboopathy arumugham

President,VISWASS,Vishwakarma Welfare Association

Vice President, Pollachi Vishwabramma chamooka kalyana mantapa sthapana arakkattalai

11,Vijayaraghavan St,Mahalingapuram, Pollachi 642002

Hello: +91 9443913064 +91 04259 224697