Friday, December 31, 2010

ஆங்கில புத்தாண்டு இரவு கொண்டாட்டம்

தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!

vedaprakash எழுதியது

தீபாவளிக்கு 10 மணிக்கு மேல் கொண்டாடக் கூடாது, ஆனால், ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு ஒன்றரைக்கு வரை கொண்டாடலாமாம்!

இந்தியக் கூலிகளின் / அடிமைகளின் கொண்டாட்டம்: குடிப்பது, கூத்தடிப்பது, கண்ட பெண்களுடன் / ஆண்களுடன் ஆடுவது, விபச்சாரம் செய்வது, கண்டபடி அலைந்து திரிவது……………..இதுதான் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் லட்சணம். ஸ்டார் மற்றும் இதர ஹோட்டல்கள் லட்சக்கணக்கில் பணத்தை அள்ள இந்த அசிங்க-ஆபாச-வேசித்தனக் கூத்துகளை ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காகவே, விபச்சாரிகளை, விலைமாதர்களை, கால்கேர்ள்களை தயாராக வைத்திருக்கிறார்கள். அவரவர் வசதி, தகுதி, எல்லோவற்றிற்கும் மேலாக பணத்திற்கு ஏற்றபடி எல்லாமே தரப்படும், அனுபவிக்கலாம். இதில் உள்ள அசிங்கங்களை மறைக்க நாகரிக முகமூடி வேறு!

பெண்கள் ஹோட்டல்களில் இரவு 9 மணிக்கு மேலே இருக்கக் கூடாது என்று ஆணையிடுவதுதானே? சென்ற வருடம் இத்தனை பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள், புத்தாண்டு கூத்துகளில் சிக்கவைத்து பாதிப்பு அடைந்தார்கள், சீரழிந்தார்கள், கெட்டுப் போனனர்கள் என்று லிஸ்ட் வைத்துக் கொண்டு, பெண்கள் ஒன்பது மணிக்கு மேலே இந்த ஹோட்டல்களில் இருக்கக் கூடாது என்று ஆணையிடுவதுதானே? செய்யமாட்டார்களே! ஆக எல்லோருமே இதற்கெல்லாம் அடிமைகள் போலத்தான் செயல்படுகிறார்கள். ஆனால், நீச்சல்குளத்திற்கு மட்டும் கட்டுப்பாடு வந்துவிட்டது!

திராவிட அரசு ஒன்றரை மாதத்து சரக்கை கூட்டி வைத்துள்ளதாம்! வெட்கங்கெட்ட திராவிட அரசு சரக்கை விற்பதில்தான் கவனம் செல்லுத்துகிறது. இதில் கோடிகளில் விற்பனையென்றால், ல்ட்சங்களில் கமிஷன் செல்கிறதாம். கணக்கில் வராத சரக்கையும் இதில் சேர்த்து விற்று கொள்லை லாபம் அடிக்கிறார்களாம்! முன்பு “உள்ள சூத்திர அரசைக் காப்போம்”, என்று என்று வால்போஸ்டர்கள் ஒட்டுவார்கள்! இப்பொழுது உள்ள சரக்கு-அரசை காப்போம் என்று ஒட்டுவார்களா?

தமிழ் போராளிகள் எங்கே? தமிழ், செந்தமிழ் என்றெல்லாம் வாய் கிழிய பேசும் சூராதி சூரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இப்பொழுது மட்டும் தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு எல்லாம் பேச மாட்டார்களா? பெண்களின் கற்பு விலை போவதை கண்டு கொள்ளமல் பார்ப்பார்களா, இல்லை பங்கு போட்டுக் கொள்வார்களா? இல்லை காம்பிளிமென்டரி டிக்கெட் ஏதாவது கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார்களா?.

ஆண், பெண் என பாகுபாடில்லாமல் அனைவரும் கூடுவர்:. “ஓட்டல்களில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. ஈவ்டீசிங், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், பைக்ரேஸ் ஆகியவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார். புத்தாண்டையொட்டி, ஆண்டு தோறும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டும். சுற்றுலா மையங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இளைய தலைமுறையினர் புத்தாண்டை வரவேற்பர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுவிற்கும், கேளிக்கைகளுக்கும் பஞ்சமிருக்காது. கடற்கரைகளில் ஆண், பெண் என பாகுபாடில்லாமல் அனைவரும் கூடுவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், நீச்சல் தொட்டி மீது போடப்பட்டிருந்த மேடை சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஓட்டல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 2011ம் புத்தாண்டை, சந்தோஷமான, அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டாக வரவேற்கும் முயற்சியில், சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஓட்டல் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இரவு 8:30 மணிக்கு மேல், நீச்சல்குளங்களில் யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது: கூட்ட முடிவில், சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களின் பிரதிநிதிகள் 100 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், ஓட்டல்களில் இரவு 8:30 மணிக்கு மேல், நீச்சல்குளங்களில் யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு ஒன்றரை மணிக்கு மேல் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் பட்டாசு வெடிப்பது, வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது கூடாது.ஓட்டல்களில் மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்த விரும்பினால், அந்தந்த பகுதி துணை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். புத்தாண்டு நிகழ்வின் போது, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மது அருந்தி வாகனம் ஓட்டுதல், ஈவ்டீசிங் செய்தல், வாகன ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கடற்கரை சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வரும் 31ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரையில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், ஈவ்டீசிங் செய்தல், வாகன ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டல்களில் வெளிநாட்டினர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தும் போது, அவர்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார். பேட்டியின் போது, கூடுதல் கமிஷனர்கள் ஷகீல் அக்தர், சஞ்சய் அரோரா மற்றும் தென் மண்டல இணை கமிஷனர் சக்திவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

குடிமகன்களுக்கு 15 டிரைவர்கள்! போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓட்டல் பிரதிநிதிதகளில், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கலந்துகொள்ளும் பெரும்பாலானவர்கள் மது அருந்துவர். சிலர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தால், அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க மாட்டோம். அவர்களை வீட்டில் விடுவதற்காக நாங்கள் 15 கார் டிரைவர்களை ஸ்பெஷலாக நியமித்துள்ளோம். டிரைவர்கள் அந்த வாடிக்கையாளரை அவரது வீட்டில் சென்று விட்டுவிடுவர். மறுநாள் வந்து அவர்களின் வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம்,” என்றார்.

குடிமகன்களுக்கு சரி, கூத்தடிப்பவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்வார்கள்? முன்பெல்லாம் கார்களில் வருபவர்கள் கார் சாவியை மாற்றிக் கொள்வார்களாம், அதாவது காரிலுள்ள பெண்களை மாற்றிக் கொள்வார்களாம். இப்பொழுது டிரைவர்களை மாற்றுகிறார்கள் போலும்! சில ஹோட்டல்களில் சீட்டு குலுக்கிப் போட்டு, நெம்பர்களுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்வார்களாம்! மேலே சொல்லியபடி, பெண்கள் விவகாரத்திலும் அவ்வாறே ஏற்பாடு செய்து கொடுப்பார்களா?

ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசகலைக்கு இலக்காவது ஏன்?

எஸ். குருமூர்த்தி

பிள்ளையார் சுழி போடுவதுபோல தொடக்கத்திலேயே எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை.

எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரிகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரை.

இங்கு சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆபாசத்துக்கு மன்னிப்புக் கோரி… பிரச்னையின் மையம் இதோ. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சியை ஓர் ஓவியர் வரைந்தால் அது எப்படி இருக்கும்? அவருடைய கைகள் சிலுவையின் இருபக்கமும், கால்கள் சிலுவையின் அடிபாகத்திலும் வைத்து ஆணி அடிக்கப்பட்டு அவரது உடலிலிருந்து ரத்தம் சிந்துவதும்தானே அந்தச் சித்திரத்தின் மையம்.

ஆனால் இப்போதைய நவீன ஓவியர்கள் இந்த மையக் காட்சியை அரைகுறை ஓவியமாகவே கருதுகிறார்கள். மேலும் தங்களுடைய கற்பனையினால் எப்படி ஏசுவை சிலுவையில் அறைந்து சித்திரத்தை முழுமையான கலைச்சின்னமாக்குகிறார்கள் பாருங்கள்.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் துயிலுரியப்பட்டு – ஆம் நம்புங்கள்! முழு நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு – அவருடைய ஆண்குறியிலிருந்து விந்துகள் சிந்தி ஆச்சரியப்படாதீர்கள், அதோடு மட்டும் நிற்கவில்லை – அந்த விந்து துளிகள் அந்தச் சிலுவைக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஓட்டையில் விழுவதுபோலவும், அந்த டாய்லெட் அடியில் மீன்கள் இருப்பதுபோலவும், அந்த மீன்கள் அந்த விந்துகளை விழுங்குவதுபோலவும்… வக்கிரமான கற்பனையின் உச்சாணிக்குச் சென்று ஆபாசத்தைக் கலையாக்கிச் சித்திரித்து சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட “அரைகுறை’ ஓவியத்தை முழுமையாக்குவதுதான் நவீன ஓவியம் (ம்ர்க்ங்ழ்ய் ஹழ்ற்). நம்புங்கள்; இது கற்பனையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். இது நடந்தது குஜராத்தில். ஆனால் செய்தது நரேந்திர மோடி அல்ல. அவர் இந்தக் கேவலத்தைத் தடுக்கத்தான் செய்தார். ஆனால் இதைத்தான் அற்புதமான ஓவியம்; அந்த ஓவியரின் சுதந்திரம் புனிதமானது என்று கூறுகிறார்கள் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகளில் சிலரும், பத்திரிகையாளர்களில் பலரும்.

இத்தோடு முடியவில்லை இந்த வக்கிரம்; இது ஓர் ஆரம்பம்தான். மேலும் பாருங்கள்; ஒரு பெரிய ஓவியத்தில் முழு நிர்வாணமான ஒரு பெண்.

இது அந்த ஓவியத்தின் முன்னுரை, முடிவல்ல. அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்து ஒரு சிசு துடித்து வெளியில் வர முயற்சி செய்வதுபோல அமைகிறது அந்த ஓவியத்தின் அருவருப்பான அடுத்தகட்டம். இப்போதும் முழுமையடையவில்லை அந்த ஓவியரின் அந்தப் படைப்பு. கடைசியில நிர்வாணமாக எல்லோரும் பார்க்கும்படி குழந்தை பெறும் அந்தப் பெண் “துர்க்கை அம்மன்’ என்று எழுதி அந்த ஓவியத்தை முடிக்கிறார் அந்த ஓவியர். அப்படி அநாகரிகமாக சித்திரிக்கப்பட்ட பெண்தான் துர்க்கை!

இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாகரிகமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôரிடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தனர்.

போலீஸ் நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிஷம் நாடு முழுதும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் மற்றவர்களும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலப் பத்திரிகைகளும் குஜராத் முதல்வர் நரேந்தி மோடியைக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். அவர் சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்வதாகவும் கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

“சுதந்திரமில்லையென்றால், கலைக்கு உயிரில்லை’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் மும்பையிலும் தில்லியிலும்.

ஆனால் அப்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாங்கள் எந்தவிதமான ஓவியக்கலையையும், எந்த ரகமான ஓவியங்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்பதைக் கூறவும் இல்லை; அவர்களை யாரும் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. தைரியமிருந்தால் அவர்கள் எந்தவிதமான சித்திரங்களை வரையும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.

வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்ட ஏசுநாதர் ஓவியத்தையும், பெண்ணை கீழ்த்தரமாக்கி துர்க்கை என்று எழுதப்பட்ட அந்த ஓவியத்தையும் மக்கள் முன்னால் வைத்து “”இந்த ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தால் என்ன தவறு?” என்று நாணயமாக மக்களைக் கேட்டிருக்க வேண்டும் அவர்கள்.

ஆனால் அப்படிச் செய்ய அவர்களுக்குத் துணிவு கிடையாது. அவர்கள் அப்படிச் செய்தால், பரோடாவில் நியாயமாகத்தான் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர் என்கிற “குட்டு’ வெளியாகிவிடுமே! என்ன கலை என்பதை மறைத்து எல்லா பத்திரிகைகளும் “கலை சுதந்திரம் பறிபோகிறது’ என்று ஒப்பாரி வைத்தன.

ஆனால் எந்த மாதிரி கலை, எந்த மாதிரி படங்கள் பரோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன என்பதை எந்தப் பத்திரிகையும் நாணயமாக வெளியிடவில்லை. காரணம் ஆபாசத்தை எப்படி வெளியிடுவது என்பதுதான். பின் எப்படி ஆபாசம் கலையாக முடியும்? அதுமட்டுமல்ல; பரோடாவில் ஓவியக் கண்காட்சி நடத்துபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது ஏசுநாதரை அப்படி கீழ்த்தரமாகச் சித்திரித்ததால் மனம் புண்பட்ட ஒரு கிறிஸ்தவர். இந்த உண்மைகளைக் கூட வெளியிடாமல், ஹிந்து வெறியர்கள் கண்காட்சியை எதிர்க்கின்றனர் என்று கூசாமல் பொய் கூறின பத்திரிகைகள்! இன்று வரை உண்மையை எழுதவில்லை எந்தப் பத்திரிகையும்.

ஹிந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திரிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.

ஹிந்துக்களின் எல்லா தெய்வங்களை – ஏன் எல்லோருக்கும் பொதுவான, பாரதியார் போற்றிய பாரத அன்னையையும்கூட துயிலுரிந்து, நிர்வாணமாகச் சித்திரித்த அற்புதமான கலைஞர் அவர். பதிவிரதையான சீதை நிர்வாணமாக பிரம்மசாரியான அனுமனின் வாலின் நுனியில் அமர்ந்திருப்பதுபோல ஓவியம் தீட்டினார் இந்த பிருகஸ்பதி!

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதுபோல ஏன் இப்படி ஹிந்து தெய்வங்களை மட்டும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் சித்திரித்து ஓவியம் தீட்டுகிறார்கள் இவர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் புரிந்ததே.

ஹிந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்திரித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ஹிந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா? மற்ற மதத்தினரிடம் இப்படி விளையாடிப் பாருங்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தோ அல்லது சங்கராச்சாரியர்களோ சவால் விடவில்லை. இப்படிக் கூறியது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கபூர்.

2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபாசமான படங்களை வரைந்ததற்காக ஓவியர் உசேனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்தது, உசேன் மனுவைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி கபூர்.

கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைக் கேவலப்படுத்தினால் அதனால் அந்த மக்களுடைய மத உணர்வுகள் புண்படுகின்றன. அதுமட்டுமல்ல; மதங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவுகளையும் அது பாதிக்கிறது. அதுபோன்ற சித்திரங்களை கலையென்று சிலர் கூறினாலும் வழிபடப்படும் தெய்வங்களை நிர்வாணமாக்கிச் சித்திரிப்பதால், அது மதநம்பிக்கை உள்ள மக்களின் மனத்தை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல் என்பதை மறக்க முடியாது. கலை சுதந்திரம் என்கிற போர்வையில் மதஉணர்வுகளை நோக அடிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. இது வேற்றுமதத்தைச் சேர்ந்த மனுதாரராருக்கு (உசேன்) இன்னும் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்.

தெய்வங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை (உசேன்) மனுதாரர் சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால், அவர் சார்ந்த மதக் கடவுளையோ அல்லது வேறு மதத் தெய்வங்களையோ இதுபோன்ற கலைக்கண்ணோட்டத்தோடு வரைந்து தன் கைவரிசையை காட்டிப் பார்க்கட்டும்”. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

நீதிபதி கபூர் கூறியுள்ளதுபோல, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் உசேன் போன்றவர்கள் ஹிந்து அல்லாத மற்ற மததெய்வங்களிடத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்று கூறுவார்களா? அவர்கள் ஏன் கூறுவார்கள்? நீதிபதி கபூர் கொடுத்த தீர்ப்பையை அவர்கள் பிரசுரிக்கவில்லையே!

ஜெர்மனி, ருஷ்யா போன்ற மேலை நாடுகளில் யதேச்சாதிகாரம் கோலோச்சிய போது அரசு, ஒரு கலைஞன் எதை படைப்புக்கருவாக கொள்ள வேண்டும் என்னும் திட்டத்தையும் செயற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை. அதன் காரணமாக, ஓவியர்கள் வேறு நாடுகளுக்கு ஓடியதும் உண்மை. கட்டுரை ஆசிரியர் இங்கும் -அதாவது பாரதத்திலும்- அதை நடைமுறைபடுத்த விரும்புகிறாரா?

ஊடகங்களின் மூலம் வீட்டினுள் வன்முறையும், ஆபாசமும், தங்கு தடையின்றி நுழைந்து அவர் குறிப்பிடும் கலாசாரத்தையும் சமுதாயக் கட்டுப் பாட்டையும் நாசமாக்கிக் கொண்டுள்ளனவே! அங்கெல்லாம் அவர்கள் கண்கள் மூடிக்கொண்டு விடுமா?

படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரம் என்பது சுய கட்டுப்பாடுகளுடன் தான் இயங்குகிறது. படைப்பை விமர்சிப்பது படைப்பளியின் வளர்ச்சிக்கு உதவும். படைப்பாளியை வன்முறையாக விமர்சிப்பது என்பது நாகரீகமான வழியல்ல. எல்லாவற்றையும் அரசியலுக்குள் இழுத்துச்செல்வது ஆபத்தான எதிர் காலத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் விதிவசமாக அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக்கல்லூரியில் பல ஆண்டுகளாக குழுச்சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதையும், இந்த சலசலப்பும் அதன் விளைவுதான் என்பதையும் ஒரு செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

http://bsubra.wordpress.com/category/glamour/

புத்தாண்டு தினமா? போக்கிரி தினமா?

வழக்கம் போல் 2011, ஜனவரி 1 வந்துவிட்டதுதான். ஆனாலும் இந்த வருடப் பிறப்பின் போது நடந்த பல்வேறு அநாகரீகமான செயல்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.

250 ஆண்டுகளாக வெள்ளையர்களிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்ததன் விளைவாக ஏற்பட்ட கொடுமைகளைக் கண்ட பாரதி, `என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?' என்று கூறியதோடு நின்றுவிடாமல் நம்மவர்கள் வெள்ளையர்களாக நடை உடை பாவனைகளில் மாற முயலும் இழிநிலையைக் கண்டு மனம் நொந்து, `என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என்று கொதித்தார்.

விடுதலையாகி 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நடக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினம் முதலிய செயல்கள், அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததன் அவமானச் சின்னமாகவே தொடர்கின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது அந்நியருக்கானது என்பதையும், அதை நாம் கொண்டாடுவது வெட்கக் கேடு என்பதையும் நம்மவர்கள் மறந்து போனார்கள்.

நம் பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் சிறிதேனும் ஏலாத இந்தப் புத்தாண்டினை நாம் கொண்டாடுவது, அந்நியரின் மோகம் நம்மிடம் அதிகரித்திருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற இந்தக் கொண்டாட்டங்கள், இப்பொழுது நாடு முழுவதும் பரவி வருகின்றன. இது மிகவும் அபாயகரமானது.

இந்தப் புத்தாண்டு மதிமயக்கத்தில் மக்கள் மூழ்கியிருப்பதைக் கண்டுகொண்ட பல்வேறு வணிக நிறுவனங்கள், `புத்தாண்டு தள்ளுபடி', `புத்தாண்டு விற்பனை', `புத்தாண்டு ஆஃபர்' என விளம்பரம் செய்து புத்தாண்டு கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் புகுத்தி பணம் பறிக்க முற்படுகின்றன.

இனி, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடக்கும் ஓட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றில் அரங்கேறும் அநாகரீகமான ஆட்டபாட்டங்களைக் காணும் அறிவுள்ள எவனும் அவற்றில் கலந்து கொள்ள போகமாட்டான்.

நமது புராணங்கள் அசுரர்களையும் அரக்கர்களையும் `நிசிசரர்கள்' என்று குறிப்பிடுகின்றன. நிசி என்றால் நடு இரவு; சரன் - சஞ்சரிப்பவன்; உலாவுபவன்; ஓய்வு எடுக்க வேண்டிய நடு இரவில் உலவுவதுதான் அசுரர்களின் இயல்பு. நம் இளைஞர்கள் நிசிசரர்களாய் மாறிவருகின்றனர்.

நம் பண்பாட்டில் நடு இரவில் கொண்டாடுவது என்பது அறவே விலக்கப்பட்ட ஒன்று. உடலும் உள்ளமும் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் உலாவுவது மேற்கத்திய நாட்டவரின் வழக்கம்.

நமக்கென்று உயர்ந்த பண்பாடுகள், உன்னதமான பண்டிகைகள் உள்ளன. சித்திரை வருடப் பிறப்பு நமக்குரியது. நமது பண்டிகைகள் பெரியவர்களை வணங்கி ஆசிபெறுவது, கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது, முடிந்த அளவு பிறருக்கு தானம் செய்வது, சுவையான பண்டங்களைச் செய்து ஆண்டவனுக்கு படைத்து தாமும் உண்டு அண்டை வீட்டாருடனும் பகிர்ந்து கொள்வது போன்ற உயர்ந்த செயல்களை உள்ளடக்கியன.

ஆனால், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றவுடன் நம் கண்முன் வருவது, மது அருந்திய வெறியில் மாதுக்களுடன் குத்தாட்டம் போடுவது; பெண்களை மானபங்கப்படுத்துவது; சாலையில் செல்வோரைத் துன்புறுத்துவது; ஒன்றுக்கும் உதவாமல் நிசிசரர்களாய் இரவு முழுவதும் திரிவது; காவல்துறைக்கும் பெற்றோருக்கும் முடிந்த அளவு தொல்லைகள் கொடுப்பது என்பவைதான்.

புத்தாண்டு தினம் கொண்டாடுபவர்களைச் சமாளிக்க அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, சென்னையில் மட்டும் 5,000 போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறதல்லவா, இது புத்தாண்டு தினமல்ல போக்கிரிகள் தினம் என்று?

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நட்சத்திர ஓட்டல்களில் அநாகரீகத்துடன் புத்தாண்டு கொண்டாடப் படுவதிலிருந்தே இது நமக்கு சம்பந்தமில்லாதது என்று புரிந்துவிடும். மேற்கத்திய கலாசார சீரழிவுகள் நாட்டினுள்ளே புகுந்து நமது ஆன்மாவை அரிக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறியே இம்மாதிரியான புத்தாண்டு அலங்கோலங்கள்.

ஹிந்து மக்கள் கொண்டாடும் உன்னதமான பண்டிகைகளுக்கெல்லாம் பகுத்தறிவைக் காரணம் காட்டி வாய்திறவாத முதல்வர், இதுபோன்ற கலாசாரச் சீரழிவு தினங்களுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லத் தவறுவதில்லை.

http://nellaichokkar.blogspot.com/2009/04/2008-1.html

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?


ஒரு திரைப்படப் பாடல் "கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிரபல நடிகர் நடித்த அத்திரைப்படத்தில் (இந்தியன்) ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றபோது, கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் ஊரோடு சேர்ந்து பாடும் காட்சியாக அது அமைந்திருந்தது.

ஆனால், நம் நாட்டை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களோ, பிரெஞ்ச்காரர்களோ இந்த நாட்டில் விட்டுச் சென்ற பல்வேறு எச்சங்களை நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம் என்பது கவலை தரும் விஷயம்.

''இரவில் வாங்கினோம் சுதந்திரம்... இன்னும் விடியவே இல்லை'' என்னும்படியாக மேலைநாட்டவனின் அடிமைப்படுத்தும் அடையாளங்களை இன்னும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலேயரின் நடை, உடை, பாவனையில் தங்களை வெளிப்படுத்துவதில் நாம் மகிழ்வடைகிறோம். ஆங்கில மொழியோடு தமிழ் கலந்து 'தங்க்லீஷ்' பேசுவதை கௌரவமாகக் காண்கிறோம். ஆங்கில உரையாடலில் தவறு நேர்ந்தால் வருத்தப்படும் தமிழ் மேதாவிகள், தமிழில் பிழையுடன் பேசினால் சிறிதும் வருந்துவது இல்லை.

"நேற்று: இங்கு ஹிந்தி கற்று தரப்படும்;
இன்று: இங்கு ஆங்கிலம் கற்று தரப்படும்;
நாளை: இங்கு தமிழ் கற்று தரப்படும்."

-மேற்கண்ட விளம்பரப் பலகைகளைக் காணும் நிலை, நமது செம்மொழியாம் தமிழ் அன்னைக்கு வந்துவிடக் கூடுமோ?

மேலும் தமிழகத்தில் மட்டுமே ஒரு விசித்திரமான போக்கைக் காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது. என்ன அது? சற்று யோசிப்போம்...

தமிழகத்தில் நான்கு வகையான புத்தாண்டு கொண்டாடும் அதிர்ஷ்டம் தமிழர்களாகிய (?) நமக்குக் கிட்டியுள்ளது:

1 . ஆயிரக் கணக்கான வருடங்களாக நமது முன்னோர்களால் விஞ்ஞானத்தின் படி கொண்டாடப்படும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு.

2. தமிழ் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட தைப் புத்தாண்டு.

3. கிறிஸ்துவர்கள் ஜன. 1 ல் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு.

4. இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஹிஜ்ரி புத்தாண்டு.

- இதில் எது நமது சுதேசி வாழ்வியலுக்கு வலுவூட்டும் புத்தாண்டு? உங்களது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

இன்னொன்றும் இங்கே குறிப்பிட அவசியமாகிறது. மேலைநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்தால் டிச. 31 ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பல அநாகரீக நிகழ்வுகள் மெல்ல நமது இளைஞர் சமுதாயத்தை அடிமைப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

பல நட்சத்திர விடுதிகளில் இரவு முழுதும் மது அருந்துதல், இளம் பெண்களும் ஆண்களும் கூடி நடனம் ஆடுதல், கேளிக்கைக் கூத்துகள் என்றெல்லாம் எதிர்கால வாழ்க்கையை வரவேற்கிறார்கள்.

போதைக்கு அடிமையாவதும் ஆபாச எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுப்பதும் இன்றைய இளைய தலைமுறைக்கு சகஜமாகி வருவதையும் காண்கிறோம். இதற்கு அரசாங்கமும் துணைபோவதுதான் வெட்கக்கேடு.

பண்டிகைகளும், விழாக்களும் நமது முன்னோர்களால் வாழ்வில் மக்களை ஒன்றிணைக்கவும் உறவுகளை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டவை. அவை சமுதாயத்தின் பலமாக இருந்தன. இன்றோ, அது தலைகீழாக மாறிப் போனது. உலகிற்கே வழிகாட்டும் பண்பாடும் கலாச்சாரமும் கொண்ட நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்?

மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்ற பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

-ம.கொ.சி.ராஜேந்திரன்

http://desamaedeivam.blogspot.com/2011/01/blog-post.html

Thursday, December 30, 2010

சில வழிபாட்டு முறைகள்

அர்த்தமுள்ள இந்து மதம்

அம்பிகையை காய்கறிகளால் அலங்கரிப்பது ஏன்?

மண்ணில் விளைபவை யாவும் அந்த மகேஸ்வரியின் படைப்பே அதனால் அவளுக்கு நன்றி சொல்லும் விதமாக காய் கறிகளால் அலங்கரிக்கிறார்கள். இதற்கு புராணக்கதை ஒன்றும் உண்டு. துர்க்கமன் என்கிற அரக்கன், மண் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நேரம். அவனது அட்டூழியம் தாங்காமல், பூமிதேவியே வாடிப்போனாள். அதனால், விளைச்சலே இல்லாமல் பசி, பஞ்சம், பட்டினியால் வாடினார்கள் மக்கள். அந்தப் பசி மயக்கத்திலும் அம்பிகையைத் துதித்தார்கள். அரக்கனை அழிக்க உரிய காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அம்பிகை. அதே சமயம், அதுவரை உலக உயிர்கள் பசித்திருப்பதை விரும்பாத தேவி, தன் அம்சமான ஒரு தேவியைப் படைத்து, உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும்படி சொன்னாள்.

அப்படி வந்த அன்னையே சாகம்பரி தேவி. அவளது அருளால்தான், இன்றும் பயிர்கள் யாவும் விளைவதாக ஐதிகம். நவராத்திரி காலத்தில்தான் துர்க்கமன் என்ற அசுரனையும் அழித்தாள் தேவி. அதனாலேயே அவள் துர்க்கையானாள். பயிர்வளரச் செய்து உயிர்காப்பவள் என்பதால் அவளுக்குக் காய்கறிகளாலேயே அலங்காரம் செய்து சாகம்பரி எனத் துதிக்கும் வழக்கம் வந்தது.

பிள்ளையாரை கரைப்பது ஏன்?

பஞ்சபூதத்திற்கு என தனித்தனி தெய்வங்கள் உண்டு. ஆகாயத்திற்கு சிவன்; வாயுவிற்கு - சக்தி; அக்னிக்கு - சூரியன்; நீருக்கு - விஷ்ணு; மண்ணிற்கு கணபதி. பூமியாகிய மண்ணிற்கு தெய்வம் கணபதி என்பதால், அவரை பூஜித்து முடித்ததும் நீரில் கரைத்தும் மீண்டும் பூமியில் சேர்த்து விடுகிறார்கள்.

ஆண்டவனை பூஜிக்க பூ, பழங்களைப் படைப்பதன் தத்துவம் என்ன?

மலர்கள் அழகானவை. பல வண்ணங்களில், பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் அவற்றின் வாழ்க்கையோ மிகவும் குறுகியது. தம்மிடமுள்ள தேனை அது வண்டுகளுக்குக் கொடுத்துவிடுகின்றன. மலர்கள், குறுகிய கால வாழ்விலும் பிறருக்கு இனிமை தந்து தியாக உணர்வுடன் சேவை செய்கின்றன. அதேபோல, பழங்களும் தம்மிடமுள்ள சத்துகளை மனிதனும், பறவைகளும், விலங்குகளும் வாழ உணவாகக் கொடுக்கின்றன. பழத்தைப் பறிக்காமல் விட்டு விட்டாலும் அது கனிந்து, உதிர்ந்து மண்ணுடன் கலந்து தனது சதையை புழு, பூச்சிகளுக்கும்; வித்தை மண்ணில் மீண்டும் உயிர்ப்பிக்கவும் கொடுத்து உதவுகிறது. இயற்கையின் வடிவங்களில் தியாக உணர்வைக் காட்டும் அற்புதமான சின்னங்களாக மலர்களும், கனிகளும் விளங்குவதால், ஆண்டவனுக்கு மிகவும் உகந்தவையாக அவை கருதப்படுகின்றன.

ஹோம அக்னியில் பட்டுப்புடவை, ரத்தினம், நெல் போன்றவற்றைப் போடுவது, விரயமாகாதா?

வயலில் நெல் விதையை அள்ளி வீசி விதைப்பதன் தத்துவம் புரியாத ஒருவன், சூஅருமையான நெல் மணிகளை சேற்றில் வீசி வீணடிக்கிறார்கள்' என்றுதான் சொல்வான். விவசாயி செய்யும் செயலால் ஒவ்வொரு நெல்லும் பலநூறு நெல் மணிகளைக் கொடுக்கும்; அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது, அந்த விவசாயிக்கும், விஷயம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். "அக்னி முகேந தேவா' என்று சொல்வார்கள். நமக்கு மழையைக் கொடுத்து, வெப்பத்தையும் தந்து, வளமையும் செழுமையும் அருளும் தேவர்களுக்கு நாம் அந்த அருளை வேண்டிச் செய்யும் பிரார்த்தனைதான் ஹோமம். அதில் நாம் வேண்டிக்கொள்ளும் செல்வங்களை பாவனையாக இடும்போது, அது பல மடங்காக நமக்கு பிரதிபலனை அளிக்கிறது. எனவே அது விரயமும் ஆகாது; வீணாக்குவதும் ஆகாது.

நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை அம்பாளாக பாவிப்பது ஏன்?

நவராத்திரியின் ஆரம்பநாளில்தான், சகல தேவர்களின் அம்சங்களும் கொண்டவளாக அம்பிகை அவதரித்தாள். மஹாசக்தியான அவள், ஒன்பது நாட்கள் தவம் இருந்து அசுரர்களை அழித்து, முடிவில் மகிஷாசுரனை மாய்த்தாள். நவராத்திரி நாளில்தான் அம்பிகை பிறந்தாள் என்பதால், அவளை அந்த நாட்களில் சிறுமியாகவே பாவித்து பூஜிப்பது சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நவராத்திரி நாட்களில், முதல்நாள் தொடங்கி பத்தாம்நாள் வரை குறிப்பிட்ட வயதுள்ள பெண் குழந்தைகளை, குறிப்பிட்ட பெயர்களில் அழைத்து, அலங்கரித்து பூஜிக்க வேண்டும் என்ற பூஜாவிதியும் உண்டு. இரண்டு வயதுக் குழந்தையை முதல் நாள் அழைத்து குமாரீ என்றும்; மறுநாள் மூன்று வயதுக் குழந்தையை த்ரிமூர்த்திதேவியாக பாவித்தும்; மூன்றாம் நாளில் கல்யாணீ என்ற திருநாமத்தால் நான்கு வயதுக் குழந்தையையும் பூஜிக்க வேண்டும். இந்த வரிசையில் நான்காம் நாளில் ஐந்து வயதுக்குழந்தையை ரோகிணிதேவி எனவும்; ஐந்தாம் நாள், ஆறுவயதுக் குழந்தையை காளிகா தேவியாக பாவித்தும்; ஆறாம்நாள் ஏழுவயதுக் குழந்தையை சண்டிகையாகப் போற்றியும்; ஏழாவது நாளில் எட்டு வயதுக் குழந்தையை சாம்பவி என அழைத்தும்; எட்டாம் நாளில் ஒன்பது வயதுக் குழந்தையை துர்க்கையாக பாவித்தும் வணங்கிடல் வேண்டும். பத்தாம் நாளான விஜயதசமியன்று, பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராதேவியாக பாவித்து வழிபடுவது மிகமிகச்சிறப்பானது. குழந்தையும் தெய்வமும் கூடி நிற்கும் காலம், நவராத்திரி. அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் குழந்தையும், அம்பிகையின் வடிவமே!

வன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா?

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை சில ஆலயங்களில் காணலாம். இம் மரத்தை வணங்கி வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே! பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தார்களாம். உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்தனூர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.

விநாயகர் யானை முகம் கொண்டதேன்? அவர் அமர்ந்துள்ள மூஞ்சுறு, தலையை நிமிர்த்தி விநாயகரைப் பார்ப்பதேன்.

ஆத்ம விசாரணையில் முக்கியமானது வேதாந்தக் கருத்துகளைக் கேட்பது. (சிரவணம்) அவற்றைத் தனியே அமர்ந்து சிந்தித்து ஆராய்வது (மனம்) ஆகியவையாகும். கணபதியின் பெரிய காதுகள் இவற்றை உணர்த்துகிறது. அப்படி அளவில்லா ஞானம் பெற்றிருந்தாலும் அதை புத்திசாலித்தனமாக உபயோகிக்க வேண்டும் ஞானத்தில் சூட்சுமம், வெளிப்படை என இரண்டும் உண்டு. சூட்டிலிருந்து குளிர்ச்சியையும், இருட்டிலிருந்து வெளிச்சத்தையும் பிரித்து உணர்வது, வெளிப்படை ஞானம். தீமையிலிருந்து நன்மையையும் பொய்யிலிருந்து உண்மையையும் புரிந்து கொள்வது சூட்சும ஞானம். யானை தனது துதிக்கையால் மரத்தையும் அசைத்துப் பிடுங்கும்; நுட்பமான ஊசியையும் பொறுக்கி எடுக்கும். சூட்சுமம், வெளிப்படையான ஆற்றல் இரண்டுமே அதற்கு உண்டு. எனவே, கணபதி யானை முகம் கொண்டார்.

அவரது திருமுன் பழங்கள், பலகாரங்கள் இருந்தாலும் மூஞ்சுறு அதைச் சாப்பிட முயலுவதில்லை; தன் ஆசைகளை அடக்கி கணபதியின் உத்தரவிற்காக நிமிர்ந்து பார்க்கிறது. பக்தர்கள் புலன்களை அடக்கி கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

கடவுளை அனைவரும் வழிபடுகிறோம். ஆனால் மிகவும் சிலருக்கே பூரண ஆன்ம ஞானம் கிடைக்கிறது? இது ஏன்?

ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் பழுக்கின்றன. அதன் பயன் அதன் கொட்ட யிலிருந்து மற்றொரு மரம் தோன்றத்தான். ஆனால் ஒவ்வொரு மரத்திலிருந்தும் தோன்றும் அத்தனை பழங்களிலும் உள்ள எல்லா வித்துக்களும் மரமானால், உலகில் வேறு எதற்கும் இடம் இருக்காது ஒரு மரத்தில் கிடைக்கும் நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானாலும் நாம் திருப்தியடைகிறோம். மற்ற வித்துகள் வீணானதைப் பற்றி வருத்தப்படுவதில்லை. அதுபோல, நம்மில் கோடிக்கணக்கானவர்கள் ஆத்ம நலம் பெறாமல் போனாலும் யாராவது ஒரே ஒருவரின் ஆன்மா பூரணத்துவம் பெற்றால் அதுவே, மக்கள் அனைவரையும் காக்கும்.

உறியடி உற்சவத்தின் போது பலர் சறுக்கு மரத்தில் ஏறிச்சறுக்கினாலும் ஒருவன் எப்படியோ ஏறிவிடுவான். அப்படி ஒருவன் ஏறவே பலர் பிரயாசைப்பட்டு அந்த உற்சவத்தை நடத்துகிறார்கள். நம் உலக விளையாட்டும் அவ்வாறே. எத்தனை முறை சறுக்கினாலும் சறுக்கு மரத்தில் திரும்பத் திரும்ப ஏற முயல்வதைப் போல பூரணத்துவம் பெற முயன்று கொண்டே இருப்போம். கடவுள் யாருக்குக் கை கொடுத்து பூரணத்துவம் தர நினைக்கிறாரோ, அவரை பூரணமாக ஆக்கிவிடுவார். அதுவே நம் எல்லோரது முயற்சிக்குமான பலனாகும்.

நன்றி-குமுதம் பக்தி

ஊழலின் சிகரம் தொட்ட தி.மு.க.

2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம் இதுவரை வரலாறு காணாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் தலையாய குற்றப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் நடவடிக்கைகளில் தனது அதிருப்தியை வெளிப்படையாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அலைக்கற்றை ஊழல் குறித்து கடந்த 16 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதோ, அதிகாரிகள் மீதோ இதுவரை எடுக்காதது ஏன் - என்ற கேள்வியை முதலில் எழுப்பியது. இவ்வாறு செய்யவிடாமல் சி.பி.ஐ.யைத் தடுத்தது யார் - என்றும் கேட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் எதையும் சி.பி.ஐ.யால் தெரிவிக்க முடியவில்லை.

இறுதியாக 16-12-10 அன்று உச்ச நீதிமன்றம் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தவேண்டும். 2001-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை விசாரணை நடத்த வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? தகுதியில்லாத நிறுவனங்களுக்கு உரிமைகொடுக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பனவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2ஜி அலைக்கற்றை அனுமதி குறித்த அறிவிப்பு 19-10-2007-ல் வெளியான நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்தும், அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெருமளவில் கடன் வழங்கியுள்ளது குறித்தும் விசாரிக்க வேண்டும். எத்தகைய நபரும், அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவரோ அல்லது ஏதாவதொரு அமைப்போ விசாரணையில் தலையிட சி.பி.ஐ. இடம் கொடுக்கக்கூடாது.

மேற்கண்ட ஆணைகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை, சி.பி.ஐ.யின் செயல்பாடுகளில் திருப்தியில்லாததால் பிறப்பிக்கப்பட்ட ஆணை மட்டுமல்ல, மத்திய அரசின் செயல்பாடுகளுக்குச் சாட்டையடி கொடுத்த ஆணையுமாகும்.

சி.பி.ஐ. அமைப்பு மத்திய உள்துறை அமைச்சரான ப. சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகும். 16 மாதங்களாக சி.பி.ஐ. சரிவர விசாரணை நடத்தவில்லை என்றால் அதற்குத் தடையாக இருந்தது யார் - என்ற கேள்விக்கு நேரடியாக உள்துறை அமைச்சரே பதில்கூறக் கடமைப்பட்டவர். அது மட்டுமல்ல, அவர் கண்காணிப்பில் சி.பி.ஐ. இயங்குவதிலிருந்து மாற்றி நேரடியாக தனது கண்காணிப்புக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.

உள்துறை அமைச்சர் மீது மட்டுமல்ல, பிரதமர் மீதும் உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லையே தவிர, அதன் ஆணைகளின் பொருள் அதுதான். இந்த ஆணை வெளிவந்தவுடனேயே பிரதமர், உள்துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சி.பி.ஐ.யைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை என்பது மதிப்பிழந்துபோய் நீண்டகாலமாகிவிட்டது. அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், அச்சமூட்டிப் பணியவைக்கவும் ஆளுங்கட்சி யினரால் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பாகத்தான் சி.பி.ஐ. இயங்கி வருகிறது. நேர்மையும் துணிவும் நிறைந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இருந்தபோது, சில நடவடிக்கைகள் ஒழுங்கானமுறையில் எடுக்கப்பட்டுள்ளன.

1994-ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் என்பவர் "அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்' என்ற நிறுவனத்துக்கு,ரூ. 1.68 கோடிக்கு அனுமதி அளித்துச் சலுகைகாட்டினார். இதன்மீது புகார்கள் எழுப்பப்பட்டபோதிலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவராக இருந்ததால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1995-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ.யின் இயக்குநராக ஜோகிந்தர் சிங் பொறுப்பேற்றார். அப்போது இது சம்பந்தமான கோப்புகளை அவர் ஆராய்ந்தபோது, சுக்ராம் தவறான முறையில் செயல்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. எனவே, அப்போது பிரதமராக இருந்த தேவகவுடாவின் கவனத்துக்கு அவர் இதை எடுத்துச் சென்றார். ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவகவுடா காங்கிரஸ் ஆதரவுடன் பதவியில் இருந்தபோதிலும் மேற்கொண்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் அனுமதி கொடுத்தார். அதற்கிணங்க தில்லியில் இருந்த முன்னாள் அமைச்சர் சுக்ராம் வீட்டில் 2.45 கோடி ரூபாய்களும், மண்டி என்ற ஊரில் இருந்த அவரது வீட்டில் 1.6 கோடி ரூபாய்களும் ஆக 4.05 கோடி ரூபாய்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் சுக்ராம் லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். ஆனாலும் 48 மணிநேரத்தில் அவர் நாடு திரும்பாவிட்டால் அவரது கடவுச் சீட்டு ரத்து செய்யப்படும் என சி.பி.ஐ. எச்சரித்தது. அதற்குப்பிறகே அவர் நாடு திரும்பினார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஆனால் அதே தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா கையாண்ட முறைகளின் விளைவாக மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட பிறகும், அதைப் பொதுக்கணக்குத்துறை சுட்டிக்காட்டிய பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் இப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பி, நாடாளுமன்றத்தை முடக்கியபிறகும் பிரதமர் அசையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சில தன்னார்வ நிறுவனங்களும் சுப்பிரமணியன் சுவாமியும் வழக்குகள் தொடுத்தபிறகு உச்ச நீதிமன்றம் இப் பிரச்னையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு அமைச்சர் ராசாவுக்குப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை ராசா அலட்சியப்படுத்தியதோடு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அட்டார்னி ஜெனரலின் ஆலோசனையும் பெறவேண்டும் என சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்து தொடர்பாகப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "நியாயமற்றது, பாரபட்சமானது, தன்னிச்சையானது' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியதன் மூலம் பிரதமரையே ராசா அவமதித்திருக்கிறார் என்று உச்ச நீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்தது.

ஆனால், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட ராசா மீது எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பிரதமர் பதுங்கிக்கொண்டது ஏன்? பிரதமருக்கும் மேலான சக்திகள் ராசாவுக்கு ஆதரவாகத் தலையிட்டனவா? பிரதமரையே அலட்சியம் செய்யும் துணிவு ராசாவுக்கு வந்த பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

2 ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையில் பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே வைத்திருந்த போலி நிறுவனங்கள் ஆகும். அலைக்கற்றை உரிமத்தை வாங்கும் நிறுவனம் அதை மூன்றாண்டுகளுக்கு யாருக்கும் விற்கக்கூடாது என்பது தொலைத்தொடர்புத்துறை விதித்த நிபந்தனையாகும். அந்த நிபந்தனைகளை இந்த நிறுவனங்கள் தூக்கியெறிந்துவிட்டு, தங்கள் பங்குகளில் 45 முதல் 60 சதவீதம் வரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, பல ஆயிரம் கோடிகளை ஆதாயமாக அடைந்தன. இந்த விதிமீறல்களைப் பார்த்தும் பார்க்காததுபோல தொலைத்தொடர்புத்துறை கண்ணை மூடிக்கொண்டது ஏன்?

அமைச்சர் ராசா பதவி விலகியபிறகு, அந்தப் பொறுப்பை ஏற்ற கபில்சிபல் அந்தத்துறையில் ராசாவின் வலதுகரமாகத் திகழ்ந்த அதிகாரிகளை - சந்தோலியா, ஏ.கே. ஸ்ரீவஸ்தவா ஆகியோரையும் சட்ட ஆலோசகரான சந்தோக்சிங் என்பவரையும் உடனடியாக தொலைத்தொடர்புத் துறையிலிருந்து தூக்கியடித்தது ஏன்? ராசாவின் ஊழல்களுக்கு இவர்கள் துணையாக இருந்தார்கள் என்பதுதானே இந்த நடவடிக்கைக்குப் பொருளாகும். இவ்வளவு நடந்தபின்னாலும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் போராடியபோது, கூட்டம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை என மத்திய அரசு பிடிவாதமாக நடந்துகொண்டதன் மூலம், ஜனநாயகத்தின் ஆணிவேரை ஊழல் கத்தியைக்கொண்டு அறுக்க முயன்றது மன்னிக்க முடியாததாகும்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டால், பிரதமர் உள்பட உயர்நிலைப் பதவிகள் வகிக்கும் பலரும் அதன் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். எனவே அதைத் தவிர்த்ததாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

1992-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 93-ம் ஆண்டு டிசம்பர் வரை வங்கிப் பணபரிமாற்றங்களிலும் முதலீடுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அப்போது மத்திய அரசில் நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன்னால் ஆஜராக மறுக்கவில்லை. 2002-ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சராக இருந்த கட்டத்திலும் அவர் பங்குச் சந்தை ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு முன்னால் ஆஜராகி சாட்சியம் வழங்கத் தயங்கவில்லை. ஆனால் இப்போது ஏன் பின்வாங்குகிறார்? நேர்மையாளர் எனப் பெயர்பெற்ற பிரதமரை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு எதிர்நிலை எடுக்கவைத்ததற்குப் பின்னணியில் இருந்த சக்திகள் எவை?

இன்னமும் பிரச்னையைத் திசைதிருப்பவே மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான சிவராஜ் பாட்டீல் என்பவரை 2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை நடத்தும்படி நியமித்துள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நேரடியாக இந்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும்போது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்துவது மரபுகளுக்கு மட்டுமல்ல, நீதிக்கும் எதிரானதாகும். பிரச்னையைத் திசைதிருப்பவும், காலம்கடத்தவுமே இது பயன்படுமே தவிர, இதனால் முழு உண்மையும் வெளிவராது.

ராசாவை இனி மத்திய அரசு காப்பாற்றாது என்னும் நிலை வந்தபிறகு, அவரது கட்சியின் தலைவரான மு. கருணாநிதி அவரைக் காப்பாற்றவும் தனது குடும்பத்தினரைப் பாதுகாக்கவும் படாதபாடு படுகிறார். லஞ்சம் ஊழலுக்கு எதிரான நெருப்புப் போன்றவன் தான் எனக் கூறி, தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொள்கிறார்.

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்' என்பது பழமொழி. முதல்வராக இருந்து தமிழகத்தில் இவர் நடத்திய ஊழல்கள் குறித்து மத்திய அரசு 1975-ம் ஆண்டு சர்க்காரியா கமிஷனை அமைத்து விசாரணை நடத்தியது. எடுத்துக்காட்டாக, வீராணம் திட்டத்திலும், கூவம்நதியை மணக்க வைக்கும் திட்டத்திலும் இவரது அரசு நடத்திய ஊழல் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என சர்க்காரியா கமிஷன் குற்றம்சாட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த ஊழல்கள் சில கோடி பெறுமானவை மட்டுமே. நாளடைவில் தி.மு.க.வின் ஊழல் பெருகி, நூறு கோடிகளாகவும், ஆயிரம் கோடிகளாகவும் விரிவடைந்து கருணாநிதியின் சீடர் ராசாவின் காலத்தில் ஊழலின் சிகரத்தையே தொட்டுவிட்டது.

கழகத்தில் ராசாவைவிட மூத்தவர்கள், பாடுபட்டவர்கள் பலர் இருந்தபோதும், அவர்களைப் புறந்தள்ளி அனைவருக்கும் இளையவரான ராசாவுக்குக் கோடிகோடியாகப் பணம்புரளும் தொலைத்தொடர்புத்துறையைப் பெற்றுக்கொடுக்க கருணாநிதியும் அவரது குடும்பத்தில் சிலரும் போராடியதன் பின்னணி பளிச்செனப் புரிகிறது. நீரா ராடியா என்ற அரசியல் தரகரின் ஒலிப்பதிவுகள் இந்த உண்மையை அம்பலப்படுத்துகின்றன.

காலங்கடந்தேனும் உச்ச நீதிமன்றம் தனது நேரடியான கண்காணிப்பில் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவதன்மூலம், உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பலாம். ஆனாலும் இந்த ஊழலுக்குப் பின்னணியில் மறைந்து செயல்படும் நிழல் குற்றவாளிகளையும் கண்டுபிடித்துக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டும்.

சுதந்திர இந்தியாவில், இதுவரை நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் மிகப்பெரிய ஊழல் அலைக்கற்றை ஊழல்தான். தமிழக அளவில் ஊழல் புரிந்த தி.மு.க. இந்திய அளவிலும் ஊழல் செய்து இமாலய சாதனை புரிந்துவிட்டது.

http://dinamani.com/edition

இன்றைய பெண்

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காக -வோ அல்லது குறை கூறுவதற்காக -வோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவு படுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத் -துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.


தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?


பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!


இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.


விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.


ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.



பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!



ஊழல்களை மறந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..வெற்று கோசங்கள்

அண்மையில் நடந்து முடிந்து இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம்.இந்த கூட்டம் ஒரு வெட்க கேட்டை உருவாக்கி உள்ளது .இந்த கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் வறுமையை ஒழிப்போம் என்று ஒரு வழக்கமான கூக்கிரலோடு முடித்து இருக்கிறார்கள் .

இந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ளவர்களான கட்சித் தலைவி சோனியா காந்தி,​​ பொதுச்செயலர் ராகுல் காந்தி,​​ பிரதமர் மன்மோகன் சிங் மூவருமே சமீபகாலமாக மக்கள் மன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்பெக்ட்ரம்,​​ ஆதர்ஷ்,​​ காமன்வெல்த் போன்ற மகா ஊழல்கள் பற்றியே பேசாமல்,​​ எளிய மக்கள் ​(ஆம்ஆத்மி)​ பற்றியும் ஏழைகளுக்கான நலஉதவித் திட்டங்கள் பற்றியும்தான் பேசினார்கள்.​ ஊழலை ஒரு பிரச்னையாகவே இவர்கள் கருதவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.​ ​

இந்தியாவில் அறிவுஜீவிகள் முதல் டீக்கடையில் அமர்ந்திருக்கும் சாதாரண மக்கள் உள்பட பேசுகிற மூன்று முக்கிய ஊழல்கள்,​​ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்,​​ ஸ்பெக்ட்ரம் ஊழல்,​​ மும்பையில் நடைபெற்றுள்ள வீடுகட்டும் நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிர அமைச்சர்களுக்கும் தொடர்புடைய நிலஒதுக்கீடு முறைகேடுகள்.​ இந்த மூன்றிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லாமல் இல்லை.​ ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.

காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழலுக்கு முக்கிய காரணம் கல்மாதி என்றாலும் அவர் வெறும் பினாமிதான்.​மகாராஷ்டிர மாநில ஊழலிலும்கூட தற்போது அம்மாநில முதலமைச்சர் சவாணுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.​ சவானை பதவி விலக செய்து நியாயமான முறையில் விசாரணை நடத்த படவேண்டும் என்பது குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை .

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்,​​ கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர் ஆ.​ ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ இதில் காங்கிரஸ் தன்னை கறைபடியாத கையாகக் காட்டிக் கொண்டாலும்,​​ அமைச்சர் ராசா ஒரு பேட்டியின் போது ஆத்திரத்துடன் குறிப்பிட்டதைப் போல,​​ பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்பதில் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்காங்கிரஸ் என்பது வெறும் சாதாரணக் கட்சி அல்ல.​ காங்கிரஸ் கட்சிதான் நவீன இந்தியாவை உருவாக்கியது.​ காங்கிரஸ் போன்ற சிறந்த கட்சி இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது.​ காங்கிரஸ் எந்த அளவுக்கு வலிமை பெறுகிறதோ அந்த அளவுக்கு தேசம் வலிமை பெறும்.

இதன் அர்த்தம் எப்படி கொள்வது, காங்கிரஸ் எவளவு ஊழல் செய்கிறதோ அந்த அளவு வலிமை பெறும்? தேசம் எங்கு வலிமை பெறபோகிறது?110 கோடி மக்கள் தொகையில் 45 .10 கோடி மக்கள் வறுமை கோட்டின் கீழ் உள்ளார்கள் .35 வருடங்களுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது .அப்படி என்றால் இந்த நிலைமைக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தானே ?இதற்க்கு முன்னால் நடந்துள்ள ஊழல்கள் மற்றும் இப்போது நடந்துள்ள
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் மற்றும் மும்பை அடுக்கு மாடி ஊழல் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தானே நடந்துள்ளது .

இந்த மூன்று பெரும் ஊழல்களிலும் காங்கிரஸ் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.​ இது யாருடைய தவறு,​​ இதனால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்ன,​​ இதை எப்படிப் போக்குவது,​​ கூட்டணிக் கட்சிகளால் தாங்கள் சுமக்க நேரும் சிலுவைகள் உண்டென்றால் அதற்குத் தீர்வு என்ன,​​ இதற்காக ஆட்சியை இழக்கவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதைச் செயற்குழுவில் பேசி,​​ கொள்கை முடிவுகள் காணப்பட்டிருக்க வேண்டும்.​ ​

ஆனால் எதை பற்றியும் சிந்திக்காமல் மக்களை ஏமாற்றும் விதமாக வெற்று கோசங்களை எழுப்பியே தனது கடைமையை முடித்து இருக்கிறது ....காரிய
கமிட்டி கூட்டம்......

http://karuthusuthanthiram.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D

ஜே .பி .சி ( நாடாளுமன்ற கூட்டு குழு) என்றால் என்ன ?

ஒரு நாட்டின் முதுகெலும்பானபாராளுமன்றம் முடங்கிகிடக்கிறது. முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்பெறவேண்டிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.ஆனால் ஜனநாயகமே கேலிகூத்தாக்கும் வகையில் அரசியல் கட்சிகளின்செயல்பாடுகள் உள்ளன.

காங்கிரஸ்அரசின் ஊழல் கறையாக தகவல் அலை கீற்று ஒதுக்கீட்டு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ,கார்கில் வீடு ஒதுக்கீடு ஊழல் ஆகியவை சந்து சிரிக்கவைத்து கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் தற்போது கிளம்பியிக்கும் பா.ஜ .க முதல்வர் எடியூரப்பாவின் 5000 கோடி ரூபாய் நில ஒதுக்கீட்டு ஊழல் போன்றவையால்சாதாரண மனிதன் மிகவும் ஆச்சரியமுடன் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவனாய் பார்க்கிறான் . அன்று முந்த்ரா ஊழலில் தனது துறை தவறு செய்துவிட்டது என்று அன்றைய நிதி அமைச்சர் டி .டி .கிருஷ்ணமாச்சாரி யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதுபோல் 1956 அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமாசெய்தார். அப்போது இருந்த அரசியல்வாதிகள் தன்னலம் கருதாதவர்கள் பிறர்நலம் பேணிய மகான்கள் .

சரி ..இதற்கெல்லாம் விடிவுகாலம் தான் எப்போது ?காலம் தான் பதில் சொல்லவேண்டும். எதிர்கட்சிகள் தகவல் இரண்டாம் தலைமுறை அலை கீற்றுஒதுக்கீட்டு ஊழலை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அன்றாடநாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வருகிறார்கள் .இந்நிலையில்நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை என்றால் என்ன ?இதற்க்கு முன்னால்அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைகள் என்ன ?என்பது பற்றிபார்ப்போம்.
.
ஜே.பி.சி., என்றால் என்ன?

அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள் அனைத்திற்கும், பார்லிமென்ட் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகாண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப் பளுவை குறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பல்வேறு கமிட்டிகளை அமைக்கிறது.இந்த கமிட்டிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பார்லிமென்ட் நிலைக் குழுக்கள் என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழுக்கள் (எச்.ஓ.சி.,) என்றும் அழைக்கப்படுகிறது. பார்லிமெண்ட் நிலைக் குழுக்கள் ஆண்டுதோறும் அமைக்கப்படும். ஆனால், எச்.ஓ.சி., எனப்படும் தற்காலிக பார்லிமென்ட் கூட்டுக்குழுக்கள் (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.


ஜே.பி.சி., அமைக்கப்படும் முறை :

ஜே.பி.சி., அமைப்பதற்கு பார்லிமென்டின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்க மசோதா நிறைவேற்றப் பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெறவேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசி முடிவு எட்டப்படும். பார்லிமென்டில் கட்சிகளின் எம்.பி.,க்களின் பலத்தை அடிப்படையாக கொண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யும் நடைமுறைகடைபிடிக்கப்படுகிறது. தவிர, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள்லோக்சபாவிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்தும் 2:1 என்றவிகிதத்தில் நியமிக்கப்படுவர்.

ஜே.பி.சி.,யின் விசாரணை நடைமுறை :

ஜே.பி.சி., அமைக்கப்பட்டவுடன்அதற்கென சில விதிகள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்படும். அதன்படிஜே.பி.சி., செயல்படும். மேலும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்று கொள்ளலாம். இதற்காக சிறப்பு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவர்.ஜே.பி.சி.,யி ன் விசாரணை மிகவும் ரகசியமாக நடைபெறும். ஆனால், விசாரணையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போதுபத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்.

போபர்ஸ் ஊழல்:

கடந்த 1987ம் ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய ஊழலாக கூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின. இதனால், பார்லிமென்ட் அலுவல்கள் பலநாட்கள் ஸ்தம்பித்தன.மேலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் வி.பி.சிங், ஜே.பி.சி., அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்கஒப்புக் கொண்டது. நாட்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட இந்த ஜே.பி.சி., பெரும் சர்ச்சையில் சிக்கியது. மத்திய அரசு அமைத்த ஜே.பி.சி.,யில், காங்கிரஸ்எம்.பி.,க்களே அதிகம் இடம் பெற்றிருந்தனர். எனவே, ஜே.பி.சி.,யை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், ஜே.பி.சி., விசாரணை நியாயமாக நடக்கவில்லை என்று கூறி, விசாரணை அறிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்கமறுத்தன. இதனால், போபர்ஸ் ஊழல் குறித்து அமைக்கப்பட்ட ஜே.பி.சி., பயனற்று போனது.

பங்கு சந்தை ஊழல்:

கடந்த 1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குவர்த்தகத்தில் ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட பங்கு சந்தை தரகர்கள் 1,000 கோடிரூபாய் அளவிற்கு மோசடி செய்தனர். இதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தைவர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தக துறையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய இந்த மெகா ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்திஅறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சிறப்புகோர்ட் அமைத்து விசாரணை துவங்க ஐந்து ஆண்டு காலம் பிடித்தது. மேலும், விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இதுவே, பங்கு சந்தை வர்த்தகத்தில் அடுத்து ஒருமெகா மோசடி நடக்க காரணமாக அமைந்தது. மும்பையை சேர்ந்த பங்கு சந்தைதரகர் கேதன் பரேக்,கடந்த 1999 முதல் 2001 வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி மோசடி செய்தான்.இதனால், இந்திய பங்கு சந்தை வர்த்தகதில் பலத்த அடிவிழுந்தது. இந்த மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த மூன்றாவதுமுறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. பங்கு சந்தை தரகர் கேதனுக்கும், வங்கிமற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துவிசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், மூன்றாவது ஜே.பி.சி., அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தியதால், பங்குவர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பங்கு வர்த்தகதுறையில் ஜே.பி.சி.,யின் பரிந்துரைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால், மூன்றாவது ஜே.பி.சி., விசாரணையிலும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

கோலா ஊழல்:

இதற்கடுத்து, கடந்த 2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்குதீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. புகார் பற்றி விரிவாக ஆய்வு நடத்திய ஜே.பி.சி., கமிட்டி, 2004ம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதில் குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கலந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதை உறுதி செய்தது. மேலும், குளிர்பான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நடைமுறைகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இது புரியாதபுதிராகவே உள்ளது. எனவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்துஜே.பி.சி., விசாரணை நடத்தினாலும், அதில் எதிர்பார்க்கும் அளவுக்கு தீர்வுகள்எட்டப்படுமா? இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மவுனமே பதிலாகிறது.

http://karuthusuthanthiram.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

தமிழ் நாட்டில் மறைமுகமான பேருந்து கட்டண உயர்வு ...

தமிழ் நாட்டில் ஒரு புத்திசாலிதனமானபஸ் கட்டண உயர்வை செய்துவிட்டுநமது முதல் அமைச்சர் அழகாக ஒருபேட்டி கொடுத்து இருக்கிறார்.அதில் டீசல்பெட்ரோல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பஸ் கட்டண உயர்வு இல்லைஎன்று.சென்னையில் தற்போது ஓடிகொண்டிருக்கும் சொகுசு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணமே ஐந்துரூபாய்.பெரும்பாலான பேருந்துகள் இந்த சொகுசு பேருந்துகளே.ஐந்து சொகுசுபேருந்து வந்தால் ஒரு சாதாரண பேருந்து வருகிறது .அவசரமாக அலுவலகம்செல்ல வேண்டிய சாதாரண நடுத்தர வகுப்பு பயணிகள் என்ன செய்வார்கள்வேறு வழி இல்லாமல் இந்த சொகுசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்இப்படியெல்லாம் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்திவிட்டு என்னபேட்டி வேண்டியிருக்கு ?

சும்மா பேருக்குத்தான் இவை சொகுசு பேருந்துகள்.இவை சாதாரண பேருந்துகள்போல் நெரிசலுடன் எல்லா நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன.ஆனால்நமது முதல்வரின் புத்திசாலித்தனமான கவிதைதனமான பதில்கள் எப்படிபாமரனுக்கு புரிய போகிறது.புரிந்தாலும் இவர்கள் அவனை பணம் கொடுத்துவாங்கி விடுவார்கள் .

இவர்களிடம் இதுபற்றி கேட்டால் அடுத்த மாநிலத்தை ஒப்பீடுசெய்கிறார்கள்.அந்த மாநிலத்தின் மக்கள் வருமானம் வேறு அவர்கள் வாழ்க்கைமுறை வேறு.அந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் வேறு.அந்த மாநிலத்தில்டாஸ்க்மாக் வருமானம் கொட்டவில்லை .ஆகையால் ஆட்சியாளர்கள்இங்கிருக்கும் சாதாரண மக்களின் நிலையை சிந்தித்து பார்க்கவேண்டும்சென்னை நகர பேருந்துகள் இப்படி என்றால் வெளியூர் பேருந்துகளை பற்றிசொல்லேவே வேண்டாம்.அந்த அளவிற்கு படுமோசமான பேருந்துகளை இயக்கிவருகிறது அரசு விரைவு பேருந்து கழகம் .மார்த்தாண்டம் மற்றும் சென்னைக்குஅரசு விரைவு பேருந்து கழகம் அல்ட்ரா டீலக்ஸ் ,சூப்பர் டீலக்ஸ் மற்றும்குளிர்சாதன பேருந்து என இயக்கி வருகிறது.

இதில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு குளிசாதன பேருந்தில் பயணம்செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியது.

பேருந்துகட்டணம் அறுநூற்றி நாற்பது ரூபாய்.பராமரிப்பு இல்லாததால்இருக்கைகளில் முழுக்க தூசி.பேருந்து ஓட ஆரம்பித்ததும் ஒரே குலுக்கலுடன்பயணிக்க ஆரம்பித்தது .சொகுசு பயணம் என்று நினைத்த எனக்கு அன்றையபயணம் முழுதும் நரக பயணம் என்று ஆகி விட்டது.இவ்வளவு அதிக பயணகட்டணம் கொடுத்து இதில் பயணம் செய்வதற்கு பதில் சாதாரண பேருந்தில்பயணம் செய்யலாம்.இவர்கள் இரவு உணவிற்காக நிறுத்தும் சிற்றுண்டிசாலைகளின் நிலையை சொல்வே வேண்டாம்.இருப்பதிலே மட்டமானசிற்றுண்டி சாலைகளில் நிறுத்துகிறார்கள்.அதிகமாக ரூபாய் செலவு செய்துசுகாதாரமற்ற உணவை சாபிடுவதோடு நோய்களுக்கும் ஆளாகின்றனர்பயணிகள்.

சரி எல்லாம் இருக்கட்டும்,சரியான நேரத்திற்கு சென்னைக்கு வந்து சேருகிறதா? அதுவும் இல்லை.சாதாரணமாக புறவழி சாலையில் பயணிக்க வேண்டிய இந்தவிரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் எல்லா ஊர் பேருந்து நிலையங்களுக்கும்சென்று சாதாரண பேருந்துகளில் ஆள் ஏற்றுவதுபோல் கூவி கூவிஅழைகிறார்கள்.இதனால் பயண நேரம் அதிகமாவதோடு திட்டமிட்டபடிநேரத்திற்கு வந்து சேர முடியவில்லை.

இந்த லட்சணத்தில் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று சொல்லி பேருந்துகட்டணத்தை உயர்த்துவதாக முதல்வர் சொல்லி இருந்தால் வரும் தேர்தலில்காணமல் போயிருப்பார்.எனவே இருக்கின்ற பேருந்துகளை சரியானபராமரிப்பில் இயக்கினாலே மக்கள் மனம் குளிரும் ..... .

http://karuthusuthanthiram.blogspot.com/2010/07/blog-post.html

Tuesday, December 28, 2010

ரஜினி அண்ணே - வாய்ஸ் கொடுப்பிங்களா இந்த தேர்தல்ல ...? அபப தான் நீங்க ஒரு நேர்மையான மனிதர்ன்னு ...


"கீழே விழுந்தும் மீசைல மண் ஓட்டலை" என்பது போல், ராஜா ராஜினாமா செய்தும் (செய்யபட்டும்) நீங்க அடங்கலை பாருங்க. ஆமாம் இந்த அறிக்கைகுதான் நேற்று மாமல்லபுரம் ரிசார்ட் போனீரோ?

எங்கே போனார் இந்த ரஜினி! தமிழ் நாடை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாதுன்னு சொன்னார் முன்பு ஒருமுறை. இப்போது இந்தியாவையே காப்பாத்த முடியாம போய்டும் போல இருக்கு. இப்போ என்ன சொல்ல போகிறார்? ஏதாவது சொல்ல தைரியம் இருக்கிறதா ரஜினி அண்ணே?. இறைவா இந்த கொள்ளை கூட்டங்களிடமிருந்து இருந்து எங்களை காப்பாற்று!

ஒரு நல்ல குடிமகனாக, இந்த கேடுகெட்ட அரசியல் வியாதிகளிடம் இருந்து நமது நாட்டை காக்கவேண்டிய கடமை நமக்கு நிச்சயம் உள்ளது. ஆகவே இந்த முறை நிச்சயம் "திருடர் முன்னேற்ற கழகங்களுக்கு" எதிராக "நிச்சயம் ஓட்டு போடுவோம்" என்று படித்த புத்திசாலியான நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்! வாழ்க பாரதம்!.

இந்த கொள்ளை கூட்டத்துக்கு ஒரு பாராட்டுவிழா கண்டிப்பாக எடுக்கணும்.....தமிழ் நட்டு மக்களுக்கு எப்பதான் புத்தி வருமோ.

திரு மு. தான் இந்த தமிழ் சமுதாயத்தின் இழி நிலைக்கு காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் தமிழனுக்கு எதிராகவே செயல்பட்டு தன் குடும்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்தவர் கருணா என்கிற ஆக்டோபுஸ். இரண்டு தலைமுறை மக்களை சிந்திக்க விடாமல் செய்து தமிழகத்தை இருபது ஆண்டு காலம் பின்னுக்கு தள்ளியவர் இந்த புண்ணிய தலைவர். தமிழன் விழிக்க வேண்டிய நேரம் இது. தமிழா விழித்திரு! இந்த ஆக்டோபஸ் குடும்பதிலிருந்து தமிழகத்தை கைப்பற்றுவது உன்னிடம் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்.

ஐயோ சாமி எனக்கு காதுல ரத்தம் வருது பேசாம இரு தாத்தா .. உன் வாரிசுகள் எல்லாம் indas no 1 கோடீஸ்வரர்கள் .

தாத்தாவின் latest புலம்பல்-ஜெயலலிதா & சுப்பிரமணியசாமி பார்பணர்கள், ராஜா தலித் சூழ்ச்சி செய்து வெளியேற்றி விட்டார்கள். தலைவரின் கடைசி ஆயுதம் ஜாதி - அதையும் வீசிவிட்டார். தென்னையைபெற்றால் இளநீறு, பிள்ளையை பெற்றால் கண்ணீரு. பிள்ளைகளுக்காக கோடி கோடி சேர்த்து இப்போ அழுது புலம்புகிறார், பாவம்.

மிகப் பெரிய உண்மை ஐயா, தாங்கள் சொல்வது. எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி பொய்,புரட்டு,பித்தலாட்டம் செய்யும் ஊழல் ராணியை கண்டதே இல்லை. அனைவரும் கை கொட்டி சிரிக்கிறார்கள்!!

கரெக்டா சொன்னிங்க தலைவரே, ஆனால் உங்களைவிட பெரிய கொள்ளை கூட்டதை இந்த நாடு இதுவரை பார்த்ததே இல்லை என்பதையும், இப்படி மோசடி செய்யும் குடும்ப கொள்ளையர்களையும் இந்த நாடு தாங்காது என்பதையும் கொஞ்சம் அழுத்தி சொல்லுங்க. ஒட்டு மொத்த தமிழர்களின் தன்மானத்தையும் வீரத்தையும் அடமானம் வைத்து குடும்பத்தை வளர்த்துக்கொண்ட கயவனே வாய மூடிக்கோ அதான் மரியாதை.

ஜெயலலிதா 3 கோடியிலிருந்து 66 கோடி. கருணாநிதி மஞ்ச பையிலிருந்து 200000 கோடி. யார் யோகியன்? 66 பெரிசா 200000 பெரிசா.

அவர் அடித்த 62 கோடிக்கு கேஸ் நடக்கிறது!உங்கள் குடும்பத்தில் [மூன்று தலைமுறைகள்] உள்ள பணத்திற்கு ,என்ன கணக்கு? எப்படி வந்தது! ஒரு கேஸ் கூட இல்லையே!எப்படி சமாளிக்கிறீர்கள்! ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? சென்னை நகரத்தில் மட்டும் எத்தனை வீடுகள் [பினாமி உள்பட ],சொல்லுங்கள்!!

எம்ஜியார் ஆட்சிக்கு பிறகு ஒரு மிகப்பெரிய அடியை ஜெயா கருணாநிதிக்கு கொடுத்துள்ளார். அது ஆல் இந்தியா லெவெலில், எதிர் கட்சியாக இருந்து கொண்டு, ஜெயா இவர் பெயரை நார் நாராக கிழித்தது தான். தற்போது இந்தியாவில் மூளை முடுக்குகளெல்லாம் கருணாநிதியின் பெயர் "ஊழலின் ஊற்று கண்" என்று குழந்தைகளுக்கு கூட தெரியும் அளவுக்கு ஜெயா பரப்பியுள்ளார். எனவே இது கருணாவின் விரக்தியின் உச்ச கட்டம். பரிதாப படுவதை தவிர வேறு வழி இல்லை.

சாத்தன் வேதம் ஓதுது. ராஜாவை காப்பற்ற எனவெல்லாம் புலம்புறார் இந்த கிழவர். நல்ல குடும்பம்டா சாமி.

உனக்கு 65 கோடி, எனக்கு 1.76 கோடி. நல்லா இருங்கடா.

ராஜா கைய வெச்சா...அது ராங்கா போனதில்ல..!!....இந்தியாவுக்கே வச்சுட்டான்டா ஆப்பு....!!....கூட சேர்ந்து தின்றவன் எல்லாம் இன்னும் ஓஹோன்னு நூறு வருஷம் உசுரோடதான் இருக்கானுவ....கொலகாரப்பாவிகளா..!! ஒருநாளைக்கு ஒரு இலச்ச ரூபா செலவளிச்சாலும் 4782 வருசத்துக்கு செலவளிக்கலாம்.....உலகத்திலே மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கு....எவ்வளவு பெரிய பின்னணி தொடர்பிருந்தால் இவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்கும்?...மன வேதனையில் சொல்கிறேன் இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்...வேதனைப்படுகிறேன்....!!.

ராசாவுக்கான செக் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே வைக்கப் பட்டு விட்டது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை தருவதில்லை என்று காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு, கருணாநிதியை கடும் கோபம் அடையச் செய்தது. அதனால்தான், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் கோபித்துக் கொண்டு திரும்பினார். பிறகு தனது பிடிவாதத்தால் .ராசாவுக்கே தொலைத் தொடர்புத் துறையை பெற்றார். இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் கட்சிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே, ராசாவின் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டு ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. ஒரு அமைச்சரின் துறை அலுவலகத்தில், அதுவும் தலைமை அலுவலகத்தில் அவர் பதவி வகிக்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சோதனையிட்டு ஆவணங்களை பறிமுதல் செய்கிறது என்றால், ராசாவுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று கருணாநிதியும் ராசாவும் பிடிவாதம் பிடித்ததற்கு காரணம், மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல..

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் சொந்தமாக தீவு வாங்கும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலேயே சம்பாதித்து விட்டார்கள். இரண்டாவது முறை இந்தத் துறைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது, மாட்டிக் கொள்ளாமல் இருக்க. விசாரணை என்று தொடங்கினால், அது அங்கே போய், இங்கே போய், கடைசியில் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து நிற்கும் என்பது கருணாநிதி அறியாததல்ல..

இந்த திட்டத்திற்கு கலைஞர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிட்டு திட்டம் என பெயர் வைக்க வேண்டுகோள் வைக்கிறேன்.

பாம்பின் கால் பாம்பறியும், அதுவும் நீ என்ன சாதா பாம்பா, அனகொண்டாவாச்சே.

மு . என்ன மு.. இது. "நீ 66 கோடி சொத்து சேர்த்த...... நாங்க 1.76 லட்சம் கோடி ஊழல் பண்ணினோம். ரெண்டுக்கும் சரியாய் போச்சு" அப்படிங்கற மாதிரி பேசுறிங்க...... உங்களுக்கு கணக்கு தெரியாதா.... இந்த பணத்த வச்சு...கங்கைல இருந்து தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொரு கெனத்துக்கும் அண்டர் கிரௌன்ட்ல வாய்கால் கட்டி தானி கொண்டு வரலாம்... சும்மா தண்ணிய போட்டு உளறாதிங்க.

கொஞ்சம் பொறு தலைவா ! தேர்தல் வருகிறது ! உனக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காமல், குடும்பத்தோட வீட்டுக்கு போக ரெடியா இருங்க.

"தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், மீடியாக்கள் போல வடஇந்திய பத்திரிகைகள் இல்லை. அவர்கள் பிரதமரையே நோண்டி நொங்கு எடுக்கிறார்கள். திமுக எல்லாம் அவர்கள் தலை மயிருக்கு சமம் போல் தெரிகிறது. ஆனால் அனைத்தும் உண்மை. அனைத்து இந்திய மக்களிடமும் "Times Now "CNN -IBN போன்ற செய்தி தொலைகாட்சிகள் கடந்த சில நாட்களில் மிக பெரிய இடம் பிடித்துள்ளனர்.

தமிழன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி மஞ்சள்துண்டு குடும்பம் தமிழ் மக்களையே ஏமாற்றும் விசயத்தை தமிழ் பத்திரிகைகள் வெளியிடாமல் வட இந்திய ஆங்கில பத்திரிகைகள் வெளியிடுவது தமிழ் பத்திரிகைகளுக்கு மிக பெரிய அவமானம். புதிய சட்டமன்ற கட்டிடத்தில் நான்காவது தூணான பத்திரிகைகளுக்கு சரியான இடம் அளிக்காத போதே பத்திரிகைகள் மஞ்சள் துண்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவது பெரிய வருத்தம் அளிக்கிறது..

http://www.saveondish.com/forum/archive/index.php/thread-30773.html