Sunday, December 26, 2010

கிறிஸ்துவ அருட்சகோதரர் . (‘பிரதர்’ ) செய்த காரியத்தால் மாணவி தாயாகப் போகும் நிலை.

கிறிஸ்துவ அருட்சகோதரர் . (‘பிரதர்’ ) செய்த காரியத்தால் ‘பிரதர் , பிரதர்’ என்றே அழைத்து கொண்டிருக்கிற மாணவி தாயாகப் போகும் நிலை.

CHRISTIAN BROTHER


கிறிஸ்துவ அருட்சகோதரர் ஒருவர் செய்த காரியத்தால் கிறுகிறுத்துப் போய் இருக்கிறது தர்மபுரி மாவட்டம். அப்படி என்னதான் செய்தார் அருட்சகோதரர்?

பதினாறு வயது பள்ளி மாணவி ஒருத்தியைஅவர் மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். இன்னும் இரண்டொரு வாரங்களில், அந்த மாணவி தாயாகப் போகும் நிலையில், செய்தது பாவத்துக்காக ஜெயிலில் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அருட்சகோதரர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பக்கமுள்ள சின்னஞ்சிறு கிராமம் சாவடியூர். அங்கே வசிக்கும் அமலநாதன், மதலமேரி தம்பதியின் பதினாறு வயது மகள் சுமிதாமேரி. ‘நாம் ஒரு விவசாயக் கூலியாக இருந்தாலும் மகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விட வேண்டும்’ என்ற கனவுடன், அவளை நல்லம்பள்ளிக்கு அருகே உள்ள புனித தாமஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்திருந்தனர், அந்த ஏழைத் தம்பதியினர்.

முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அதே பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார் சுமிதாமேரி. முழு ஆண்டு விடுமுறையின்போது மட்டும்தான் அவர் ஊருக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு 8_ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, ஏப்ரல் மாதக் கடசியில் விடுமுறையக் கொண்டாட ஊருக்கு வந்திருந்தார் சுமிதாமேரி. அப்போதுதான் அந்த விபரீதம்.

சாவடியூர் பகுதியில் உள்ள அன்ன ஆரோக்கிய மாதா ஆலயத்தில் ஒரு மாத காலம் கட்டாய கிறிஸ்வ மதக்கல்வி கற்றுத் தரப்படுவது வழக்கம். ‘பிரதர்’ என்று அழைக்கப்படும் அருட்சகோதரர் ஒருவர்தான் மத நல்லொழுக்கம், ஞான, தேவ காரியங்கள் பற்றி சிறுவர், சிறுமிகளுக்கு அங்கே வகுப்பெடுப்பார்.

அந்த முறை தர்மபுரி மாவட்டம் தண்டல்பட்டி குருமடத்தில் (பாதிரியார் பயிற்சிப் பள்ளியில்) இருந்து அமலநாதன் என்ற பிரதர் வந்திருந்தார். இருபத்தாறு வயது இளங்காளையான அவர் வந்த முதல்நாளே சுமிதாமேரியின் மீது ஒரு கண் அல்ல, இரண்டு கண்களயும் வைத்து விட்டார். பதின்று வயதுக்குரிய பருவ வனப்புடன் திகழ்ந்த சுமிதாமேரியின் மீது எப்போதும் ஓர் ‘இது’வாகத் திரிய ஆரம்பித்திருக்கிறார் அமலநாதன். இவரது பெயரும், சுமிதாமேரியின் அப்பா பெயரும் ஒன்றுதான் என்பது இதில் ஒரு கொடுமயான விஷயம்.

அருட்சகோதரரின் பார்வை தன்மீ ஒருமாதிரியாகப் படிவதை அப்பாவி சுமிதாமேரி உணரவே இல்ல. கள்ளங்கபடமில்லாமல் அமலநாதன ‘பிரதர், பிரதர்’ என்றே அழைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் விடு முறைக்கால கிறிஸ்துவக் கல்வி பயிலும் சிறுவர், சிறுமிகளை பிக்னிக் கூட்டிச் சென்றிருக்கிறார் அமலநாதன். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் தும்பனஹள்ளி அணக்கட்டுப¢ பகுதி. மே மாதம் 24_ம்தேதி. சுமிதாமேரி உள்பட பல மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு தும்பனஹள்ளி சென்ற அமலநாதன், அங்கே சுமிதாமேரியத் தவிர மற்ற அனைவரையும் அங்கங்கே விளயாட அனுப்பிவிட்டு, சுமிதாமேரியை மட்டும் தன்னருகே நெருக்கமாக இருத்தி, பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பேச முயன்ற எதையும் பேதைப்பெண் சுமிதாமேரியால் புரிந்து கொள்ள முடியவில்ல. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமயிழந்த அமலநாதன், தான் ஓர் அருட்சகோதரர் என்பதையும் மறந்து சிறுமி சுமிதாமேரியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்திருக்கிறார்.

சுமிதாமேரி கூச்சல் போட முயன்றபோது, அவரது வாயப் பொத்தி அருகே இருந்த ஒரு மறைவிடத்க்குத் தூக்கிச் சென்றிருக்கிறார் அருட்சகோதரர். சுமிதாமேரியின் துப்பட்டாவப் பறித்து அவர கைகால்களைக் கட்டி தன் காமவெறியத் தணித்துக் கொண்டிருக்கிறார். ‘இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன்’ என்று அருட்சகோதரர் மிரட்டிய மிரட்டலால் பேசா மடந்தையாகி விட்டார் சுமிதாமேரி. அதன்பிறகு எதையோ பறிகொடுத்தவரைப்போல வெறித்த பார்வையுடன் வீட்டில் நடமாடி இருந்திருக்கிறார். அப்போதுகூட பெற்றோருக்கு எதுவும் தெரியவில்ல.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி விடுதியில் அவரைக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள் பெற்றோர். அங்கே அவரது உடலில் தெரிந்த மாற்றங்களால் சந்தேகமடைந்த விடுதிக் காப்பாளர், அருகிலிருந்த மருத்து வமனைக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். அப்போ ஓர் அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. ஆம். சுமிதா மேரி கர்ப்பம்.

பதறிப்போன பள்ளி நிர்வாகம், உடனே சுமிதா மேரியின் தாய் மதலமேரியை அழைத்து, இந்தத் தகவலக் கூறி, அவரது பள்ளியில் இருந்து நீக்கிவிடப்போவதாகக் கூறியிருக்கிறது. ‘கர்ப்பத்துக்குக் காரணம் யாருடி?’ என்று மதலமேரி அதட்டிய அதட்டலில் ஒரு கட்டத்துக்கு மேல் சுமிதாமேரியால் உண்மையை மறக்க முடியவில்லை.

அருட்சகோதரர் அமலநாதனின் பெயரைக் கூறிவிட்டார். இப்படியொரு டிவிஸ்ட பள்ளிநிர்வாகம் எதிர்பார்க்கவே இல்ல. விஷயம் வெளியே தெரிந்தால் விபரீதமாகி விடும் என்பதால், சுமிதாமேரியை புதுச்சேரியில் உள்ள ‘தியாகஜோதி சமுதாய மேம்பாட்டு மையம்’ என்ற கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் சில காலம் வைத்திருக்க, அவரது பெற்றோரைப் பணித்திருக்கிறது. அந்தத் தொண்டு நிறுவனத்தில் அருட் சகோதரர்கள் யாரும் இல்ல என்பதை உறுதி செய்து கொண்ட சுமிதாமேரியின் பெற்றோர், அந்த நிறுவனத்தின் பாதுகாப்பில் கடந்த நவம்பர் மாதம் சுமிதாமேரியை விட்டிருக்கிறார்கள்.

அதே வேகத்தில் தர்மபுரி மறமாவட்ட ஆயர் ஜோசப் ஆண்டனி இருதயராஜ அவர்கள் சந்தித்து, அருட்சகோதரர் மீது நடவடிக்க எடுக்கும்படி கேட் டிருக்கிறார்கள். ‘ஜனவரி 4_ம்தேதிக்குள் ஒரு நல்ல முடிவு எடுப்பதாகக்’ கூறிய ஆயர், அதைப்பற்றிக் கவலப்பட்டதாகவே தெரியவில்லை. இனிமேலும் பொறுத்துப் பயனில்லை என்ற நிலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்ராஜாவிடம் போயிருக்கிறார்கள் சுமிதாவின் பெற்றோர். புதுச்சேரியில் இருந்த சுமிதாவை வரவழைக்கச் சொன்ன செந்தில் ராஜா, சிறுமியையும் அவளது பெற்றோரயும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.நஜ்மல்ஹோடாவிடம் அழைத்துப் போயிருக்கிறார். அதிர்ந்து போன எஸ்.பி. உடனடியாக வழக்குப் பதிந்து அருட்சகோதரரைக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

அடுத்த இரண்டே மணிநேரத்தில் குண்டல்பட்டி குருமடத்தில் தங்கியிருந்த அமலநாதனைச் சுற்றி வளைத்த போலீஸ். காரியம் கைமீறிப்போய்விட்ட து தெரிந்ததும் வெலவெலத்துப் போன அருட்சகோதரர் யார், யாரையோ தொடர்புகொண்டு கைதிலிருந்து தப்ப முயற்சித்திருக்கிறார். ம்ஹ§ம். அவரை தர்மபுரிக்கு விசாரணக்குக் கூட்டி வந்த போலீஸார் கைது செய் து சிறையில் அடைத்து விட்டனர்.

சீரழிக்கப்பட்ட சிறுமி சுமிதாமேரியை நாம் சந்தித்துப் பேசினோம். ‘‘பிக்னிக்குக்காக தும்பனஹள்ளி டேமுக்கு எங்களை கூட்டிப்போன இடத்தில்தான் பிரதர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார். அங்கிருந்த ஒரு குடிசைக்குள் என்னைத் தூக்கிப்போய், துப்பட்டாவால் கை,காலைக் கட்டி என்னை என்னென்னவோ செய்துவிட்டார். ‘வெளியில் சொன்னால் கொலை செய்வேன்’ என்று மிரட்டினார். தப்பு நடந்தா குழந்தை பிறக்கும்னு எனக்குத் தெரியாது. நாளுக்கு நாள் என் வயிறு பெரிதாகிக் கொண்டே வந்தது. பீரியடும் தள்ளிப் போனது. ஆஸ்பத்திரியில் என்னைப் பரிசோதித்த பிறகுதான் என் வயிற்றில் பாப்பா இருக்குன்னு சொன்னாங்க’’ என்று இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் நம்மிடம் சொன்னார் சுமிதாமேரி. இன்னும் சில வாரங்களில் அவர் தாயாகப் போகிறார் என்பது மிகவும் நெருடலாக இருந்தது.

தன்னைச் சீரழித்த அமலநாதனை இன்னும் ‘பிரதர் , பிரதர்’ என்றே அழைத்து கொண்டிருக்கிறார் அந்தச் சிறுமி. அமலநாதனுக்கு சுமிதாமேரியத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது பெற்றோருக்குச் சுத்தமாக இல்லை. ‘‘இப்படியொரு காமக் கொடூரனிடம் எங்கள் பிள்ளயைகக் கொடுக்க மாட்டோம். என் மகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு அப்பன் தான்தான் என்று அமலநாதன் ஒப்புக்கொண்டால் போதும்’’ என்றனர் அவர்கள்.

தன்னச் சீரழித்தவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சென்டிமெண்ட் சுமிதாமேரியிடமும் இல்ல. ‘‘எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க ஆசை யில்ல. நான் நல்லாப் படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போகணும்’’ என்றார் அந்தச் சிறுமி.

சுமிதாமேரிக்காக களமிறங்கிய மக்கள் கண்காணிப்பகத்தின் தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் ராஜாவைச் சந்தித்ப் பேசினோம்.

‘‘சுமிதாமேரியின் பெற்றோர் போல ஒவ்வொரு பெற்றோரும் துணிந்து இப்படி புகார் கூற முன்வந்தால். மேலும் பல அமலநாதன்கள் உருவாவதைத் தவிர்க்க முடியும்’’ என்றார் அவர் பாஸிட்டிவ்வாக. உண்மைதானே?

http://www.kumudam.com/magazine/Reporter/2008-01-13/pg3.php KUMUDAM


No comments:

Post a Comment