Sunday, December 26, 2010

ஓமலூர் பாத்திமா பெண்கள் பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டார்.

இறந்த பள்ளி மாணவியின் கருப்பையில் விந்து – பாதிரியார்கள் சிக்குகிறார்கள்?

Tuesday , 26th October 2010 07:44:43 AM

தர்மபுரி அருகே மர்மமாக இறந்த பள்ளி மாணவியின் கருப்பையில் இருந்த விந்து யாருடையது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் 8 பேருக்கு மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிரியார்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோளூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் சுகன்யா (வயது17). இவர் ஓமலூரில் உள்ள பாத்திமா மகளிர் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டு பள்ளியை சூறையாடினார்கள். ஆரம்பத்தில் ஓமலூர் போலீசார் இந்த வழக்கை விசாரித்தார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் மாற்றப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாணவி சுகன்யா மர்ம சாவு விவகாரத்தில் மீண்டும் தற்போது விசாரணை சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் மாணவி சுகன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சுகன்யாவின் கருப்பையில் விந்து இருப்பது தெரியவந்தது. எனவே மாணவியை பலாத்காரம் செய்தது யார்? என்ற கேள்வி எழுந்தது.

கருப்பையில் இருந்த விந்துக்கு உரியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகப்படும் 8 நபர்களிடம் மரபணுசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்கள் யார்? என்ற பட்டியலை ரகசியமாக எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் விந்து சோதனை செய்யப்படும்.

8 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 6 பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும் அதில் சில பாதிரியார்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளியின் விடுதிக்கு வந்து தங்கியவர்கள் மத்தியில் பீதி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மாணவி சுகன்யா வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/11/24/girl.html

ஓமலூர் விவகாரம்: சுகன்யா மரணம்

தினகரன்: (21-நவம்பர் 2006)


கடந்த 3-9-2006 அன்று அகில இந்திய செட்யூல்ட் இன இளைஞர் பேரவை மாநில செயலாளர் சங்கரன் தமிழக டி.ஜி.பி, சேலம் மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி இன்ஸ்பெக்டரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தாய், தந்தை இலாத மாணவிகள் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்கள் திடீரென காணாமல் போவது மட்டுமின்றி மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு யாருக்கும் தெரியாமல் பள்ளித் தோட்டத்தில் புதைந்துவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இதே போல ஒரு மாணவியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் வார்டன் இரவு காவலாளி உடந்தையாக இருக்கின்றனர். இறந்து போன மாணவியின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை நடத்த வேணும் என மனுவில் சங்கரன் குறிப்பிட்டிருந்ததாக தங்கம் (ஓமலூர் ஒன்றிய குழு உறுப்பினர்) கூறினார்.
ஓமலூர் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 86 பேரை இடமாற்றம் செய்த பின்னர் பள்ளி திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வகுப்புக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினா.

தினமலர் நவம்பர்-22-2006: திமுக அமைச்சருக்கு சேலம் பிஷப் பதிலடி

சேலம் நவ. 22: அமைச்சர் கூறியிருப்பது போல ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் 86 பேரையும் இடமாற்றம் செய்யமுடியாது. இது அரசு பள்ளியல்ல. தனியார் கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இருவரை மட்டுமே இடமாற்றம் செய்யமுடியும் என்று சேலம் மறைமாவட்ட பிஷப் சிங்கராயன் தெரிவித்தார்



இது பிஷப் பேட்டியில் இருந்து

* கேள்வி: வகுப்பறையில் இரத்தம், உடைந்த வளையல், பூ இருந்ததாக பள்ளி மாணவி ஒருவர் பேட்டி அளித்துள்ளாரே?
பூனை பெருச்சாளியை கடித்ததால் ஏற்பட்ட ரத்தம் அது. உடைந்த வளையல் இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பெண்கள் பள்ளி என்றால் பூ வளையல் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.

* உங்கள் பள்ளியில்தான் பெண்கள் பூ வைக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளதே. எப்படி பூ வந்தது?…பதில் இல்லை

* பள்ளிக்குள் மதுபான பாட்டில்க கைப்பற்றப்பட்டுள்ளது எப்படி?
இது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. இது தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

தினமலர், 22-நவம்பர்-2006) இன்றைய நிலை:


மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாரா? இது குறித்து பரிசோதனைக்கு சென்னை பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள குற்றவியல் பரிசோதனை சாலைகளுக்கு விவகாரம் சென்றது. சுகன்யா மர்மமான முறையில் இறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு வந்த பரிசோதனை அறிக்கைகள் அவர் மரணத்துக்கு முன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. இனியாவது அங்கிகளுக்குள் தங்கியிருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கிறது கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி. கடந்த நவம்பர் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா இப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தாள். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள்தான் சுகன்யா. ஓமலூர் பாத்திமா பள்ளி விடுதியில் தங்கி, அங்கு படித்துவந்த சுகன்யாவின் மர்ம மரணம் கிறிஸ்தவப் பாதிரிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டி யிருக்கிறது.

பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாக செய்தி பரவியதை அடுத்து, பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகுதான் இந்தக் கொடூரம் வெளியில் வந்திருக்கிறது.

இந்தப் பள்ளியில் மாணவிகள் இறப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள், அதுவும் அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் என்று ஓமலூரில் மக்கள் சாதாரண மாகப் பேசிக்கொள்கிறார்கள். “இந்தப் பள்ளியில் பல மாணவிகள் இறந்ததாகப் பேசிக்கொள்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் பல வருடங்களுக்கு முன்னாடி சின்னம்மா..அப்புறம் இந்திரா, காவேரி, இப்ப சுகன்யான்னு நாலு மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருக்காங்க. இதே ஸ்கூலில் படிக்கும் எம் பொண்ணு, தேவையில்லாத ஆண்கள், ஸ்கூலுக்கு வந்து போறதா சொல்லியிருக்கா. இனி என் மகளை இந்தஸ்கூலுக்கு அனுப்பறதா இல்லை” என்று பத்திரிகையாளர்களிடம் கோபத்துடன் பொங்கி யிருக்கிறார் அபிராமி என்ற பெண்மணி(`நக்கீரன்’ 25-11-06).

“15 வருஷத்துக்கு முன்ன எங்க மகள் சின்னம்மா அங்க படிச்சிக்கிட்டு இருந்தா. அவளை ஸ்கூல்ல ஒரு ரூமில் போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு ஓடினோம். கடைசியில் ஏரியில் பிணமாதான் கிடைச்சா. போலீஸில் அப்ப புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்கிறார் 15 வருடங்களுக்கு முன்பு இதே பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி சின்னம்மாவின் தாயார் பழனியம்மாள். இதேபோலவே கடந்த ஜூலை 29ம் தேதி காவேரி என்ற மாணவி தூக்கில் தொங்கினாள். “எந்தப் பிரச்சினையும் இல்லீங்க. திடீர்னு உங்க மகள் செத்துட்டான்னு சொன்னா எப்படி இருக்கும்? என்ன நடந்துச்சுன்னே தெரியலை. எங்க மகளை இழந்துட்டோம்” என கண்ணீருடன் பெருமூச்சு விட்டார் காவேரியின் அம்மா வளர்மதி.

நவம்பர் 16ம் தேதி வரை ஸ்கூலுக்கு வந்த சுகன்யா, அன்று மாலை ஹாஸ்டலுக்கு வரவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவள் ஹாஸ்டலுக்கு வரவில்லை என்ற தகவலை தோளூரில் உள்ள சுகன்யாவின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு என்ன நடந்ததோ? ஸ்கூலுக்குப் பின்புறம் உள்ள கிணற்றில் சுகன்யாவின் உடல் மிதக்கறதா சொல்றாங்க என்கிறார்கள் பாத்திமா பள்ளி மாணவிகள்.

ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிரோத் மற்றும் பீர் பாட்டில்கள்

Suganya.jpg

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்கூலுக்குள் இருக்கும் சர்ச்சில் பிரேயர் நடக்கும். அதில் வெளியிலிருந்து பல பாதிரிகள் வருவார்கள். பாதிரிகளுக்கு சேவை செய்தால் கடவுளின் கிருபை கிடைக்கும் என்று சிஸ்டர்ஸ் (கன்னியாஸ்திரிகள்) சொல்வாங்க. அதனால் அவங்களுக்கு டீ.,காபி டிபனெல்லாம் பரிமாறுவோம் என்கிறார்கள் மாணவிகள் அப்பாவியாக!

நவம்பர் 20ம் தேதி ஓமலூர் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய 8ம் வகுப்பு மாணவி கிரிஜா, “ஒரு நாள் எங்க வகுப்பறை சுவர் முழுக்க ரத்தக்கறையும் பூவும் இருந்தது. அந்தக் கறையை மாணவிகளான எங்களைக் கழுவி சுத்தம் பண்ண வச்சு, அதுக்கு காசும் கொடுத்தாங்க” என்ற `பகீர்’ குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பூட்டினாள்.

நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு பேட்டி அளிக்கும் அபிராமி

Suganya+1.jpg

இவ்வளவு நடந்த பிறகும், `இது தற்கொலைதான். கொலை அல்ல. பெருச்சாளி எலியை கடித்ததால் ஏற்பட்டது தான் அந்த ரத்தக் கறை’ என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார் சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன். கொலையை மறைக்க பல முயற்சிகளைப் பாதிரிகள் செய்து வருகின்றனர். இதற்காக போலீஸாரின் உதவியுடன் மாணவி சுகன்யாவின் உடலை சட்டத்திற்கு விரோதமாக எரிக்க வைத்துள்ளனர். `பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளியை வளர்க்க எங்கள் பள்ளிமீது அவதூறு பரப்புகிறார்’ என ஆசிரியைகள்மூலம் வதந்தியைப்பரப்பி விட்டுள்ளனர்பாதிரிகள். “எங்கள்பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி. அவர்களது சாதாரண பள்ளி. நான் எதற்கு அந்தப் பள்ளியை போட்டியாகக் கருதுகிறேன்” என்று இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு.

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் நவம்பர் 23ம் தேதி இந்தக் கொடூரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப் பூவதாகார்ரிவித்தார். ஆனால் சதாம் உசேனை விடுவிக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குக் கூட அனுமதி தரும் போலீசார், இதற்கு அனுமதி தரவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடவும் அனுமதிக்க வில்லை.போலீசார் பாதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையே இது காட்டுகிறது.

இப்போது ஆளும் கட்சி உதவியுடன் தப்பித்துக் கொள்ளபாதிரிகள் திட்டமிடுவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாதிரிகளுக்கு சாதகமாகவே வந்துள்ளது. மாணவி சுகன்யாவுக்குநீதி கிடைக்குமா? நீதி தேவதைக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(குறிப்பு: மாணவி சுகன்யா ஹிந்துவாகப் பிறந்த குற்றத்தினால் அவருக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்க வில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவுமில்லை)

கன்னியாஸ்திரிகளுடன் பாதிரிகள் உல்லாசம்!ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் தங்கும் அறைகளில் வெளிநாட்டு மது பாட்டில்களும், காண்டம்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இந்தப் பள்ளியில், வெளிமாநிலங்களிலிருந்து பாதிரிகள் வந்து வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சில நாட்களுக்கு தங்குவது வழக்கம். அந்த நேரத்தில் பாதிரிகள் கன்னியாஸ்திரிகளுடன் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பார்களாம். இப்படி உல்லாசமாக இருக்கும் பாதிரிகளுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்கும் அழகான மாணவிகள்தான் உணவு உள்ளிட்ட பொருட்களை (?) எடுத்துச் சென்று பரிமாறுவார்களாம்.

பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்?

பிளஸ் 1-ல் மாணவி சுகன்யா மூன்றாவது ரேங்க் எடுத்துள்ளார். ஆனால் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் சுகன்யா சரியாக படிக்கமாட்டார் என்று பேட்டி அளித்துள்ளார். சிங்கராயன் ஏன் பொய் சொல்கிறார்?

மாணவி சுகன்யாவின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வரை பேரம் பேசியதாக செய்தி வந்துள்ளது. ஏற்கனவே மர்மமான முறையில் இறந்த மாணவிகளின் பெற்றோருக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மர்ம மரணம் என்றால் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் மாணவி சுகன்யாவின் உடலை போலீசார் எரித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்?

பாத்திமா பள்ளியில் படிக்கும் மாணவிகள் பூ வைக்கவும், வளையல் அணியவும் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் பெண்கள் பள்ளி என்றால் பூ, வளையல் இருக்கத்தான் செய்யும் என்று பாதிரி சிங்கராயன் பேட்டி அளித்துள்ளார். அவர் ஏன் உண்மையை மறைக்கிறார்?

ஓமலூர் பாத்திமா பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளில் 15 மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

அழகான மாணவிகள் மட்டும் இறப்பது ஏன் என்று மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகம், போலீசாரின் பதில் என்ன?

240 மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்கு வெளி மாநிலங்களிலிருந்து வந்து பாதிரிகள் பலர் இரவு தங்குகிறார்களே எதற்காக? இது சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இது அரசுப் பள்ளி அல்ல. அதனால் இங்கு பணியிலிருக்கும் 86 பேரையும் மாற்றமுடியாது என்று சேலம் மறைமாவட்ட பிஷப் ஆணவமாக பேட்டி அளித்துள்ளார். எந்த தைரியத்தில் பிஷப் இப்படி பேசுகிறார்?

பொதுவாக குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளி எனக் கருதப்படுவோரை தங்க போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதிரிகள், சம்பந்தப்பட்ட பாத்திமா பள்ளியிலேயே தங்கியுள்ளனரே ஏன்?

மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளை இருதய நோயாளிகள் என்பதற்காக கைது செய்யவில்லை என்று சேலம் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இருதய நோயாளிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் விட்டுவிடுவார்களா? இல்லை கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு மட்டும் இந்த சலுகையா?

பா.ஜ.க தவிர மற்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றனரே ஏன்? கிறிஸ்தவர்களின் ஓட்டுகளுக்காக ஹிந்து மாணவி கற்பழிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்களா?

மாணவியர் விடுதியில் `கோஹினூர்’ காண்டம், `மார்கோபோலோ’ பீர் பாட்டில்

கிறிஸ்தவப் பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளி விடுதியில் ஏராளமான கோஹினூர் `காண்டம்’களும், `மார்கோபோலா’ பீர் பாட்டில் உட்பட வெளிநாட்டு மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆங்காங்கே பீர்பாட்டில்களும் காலி வெளிநாட்டு மது பாட்டில்களும் குவியல் குவியலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கன்னியாஸ்திரிகளுடன் பேட்டி அளிக்கும் பிஷப் சிங்கராயன்
suganya+2.jpg

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்…

மாணவி சுகன்யா மட்டுமல்ல 15-க்கும் மேற்பட்ட அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

அரசு உதவியுடன் நடந்து வரும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். அங்கு ஜெபம் என்ற பெயரில் நடக்கும் மதமாற்றத்தையும் தடுக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இறந்துபோன 15-க்கும் மேற்பட்ட மாணவிகளின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளி வரவழைக்க வேண்டும்.

இது கிறிஸ்தவப் பள்ளி. ஆசிரியர்களை இடமாற்றம் செய்யமுடியாது என்று ஆணவமாகப் பேசிய சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டில்லியில் பிரியதர்ஷிணி மட்டூவை கற்பழித்து கொலை செய்ததற்காக வழக்கறிஞர் சந்தோஷ் சிங்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதுபோல மாணவிகளைக் கற்பழித்து கொன்றதாகக் கூறப்படும் பாதிரிகளுக்கும் விசாரணை நடத்தி மரண தண்டனை விதிக்க வேண்டும்.

நாடுமுழுவதும் கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. எனவே நாடுமுழுவதும் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முழுமையாக ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர் உதவியுடன் பாதிரிகள் இந்த விஷயத்தை அமுக்கப் பார்ப்பதாக செய்திகள் வருகிறது. அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

http://indianschristians.wordpress.com/2010/11/10/omalur-fathima-student-suganya/

No comments:

Post a Comment