Sunday, December 26, 2010

CSI சபைகளில் பிஷப்கள் அக்கிரமம்

Protect-Me-Jesus-Magnet-C11749799

http://devapriyaji.wordpress.com/page/35/

http://www.jamakaran.com/tam/2009/february/csi.htm

CSI சபைகளின் டையோசிஸ்களில் பெரும்பாலான பிஷப் தன் நெருங்கின சொந்தக்காரர்களைச் சரியான படிப்பு, தகுதி, பணிமூப்பு இல்லாதவர்களானாலும், சீனியாரிட்டி பார்க்காமலும் நிர்வாக கமிட்டியை கலந்தாலோசிக்காமலும், தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரமாக பிஷப் தன் சொந்தங்களை பதவியில் இருத்தி அவர்கள் மூலமாக பணக்கொள்ளையும், சபை, ஸ்தாபனம், கல்லூரி, நிலவிற்பனைகளைகளையும் எந்த எதிர்ப்பும் இன்றி நடத்தி பணக்கொள்ளையில் இறங்கியுள்ளார்கள். ஆந்திரா, கர்நாடகா, முக்கியமாக தமிழ்நாடு டையோசிஸ்களில் இப்படிப்பட்ட அக்கிரமம் சர்வ சாதாரணமாக அனைத்து மக்களும் கண்டுக்கொண்டுயிருக்க துணிகரமாக இக்காரியங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் இப்போது இரண்டு CSI டையோசிஸ் பிஷப்மார்களின் சொந்தங்களைக்குறித்து எனக்கு வந்த தகவலின்படி வெளியிடுகிறேன்.

மதுரை-இராமநாதபுரம் CSI டையோசிஸ்

பிஷப்.கிறிஸ்டோபர் ஆசீர் அவர்களின் உறவினர் வகிக்கும் பதவிகள்

பெயர் உறவின் முறை பதவி
1. Mrs.Jothi Sophia பிஷப்பின் மகள் நர்சிங் கல்லூரி முதல்வர்
2. Mr.Thavamani Christopher பிஷப்பின் மருமகன் அமெரிக்கன் கல்லூரியின் BARSAR
3. Mr.Joel பிஷப்பின் மகன் மதுரை அமெரிக்கன் High School ஆசிரியர்
4. Mr.Jeba பிஷப்பின் மகன் ?
5. Mr.Jenova பிஷப்; மருமகனின் தங்கை மதுரை OCPM High School Teacher
6. Mr.Novaraj பிஷப் மருமகனின் சித்தப்பா பள்ளிக்களுக்கான தனி அலுவலர்
7. Mr.Maduram பிஷப் மருமகனின் தகப்பனார் மதுரை CSI டையோசிஸ்ஸின் அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்டிட வேலைகளின் நிரந்தர காண்ட்ராக்டர்.

இந்த கணக்கெடுப்பு செய்தி தொகுப்பு 4 மாதத்துக்கு முந்தியது. இந்த நான்கு மாதத்தில் பிஷப்.ஆசீர் அவர்கள் இன்னும் சொந்தங்கள் எத்தனைப்பேர்களை தன் டையோசிஸ்ஸில் வேறு பல பதவிகளில் அமர்த்தியிருப்பாரோ அறியேன். இதன் இடையில் மேலே குறிப்பிட்டவர்களில் யாரையாவது மாற்றி வேறு சொந்தத்தையோ, வேறு யாரையோ நியமித்திருப்பாரோ நான் அறியேன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்சனை:

அநேக நூற்றாண்டுகளாக இந்தியாவில் பிரசித்திப்பெற்ற கல்லூரிதான் அமெரிக்கன் கல்லூரி. இங்கு படித்து நீதிபதிகளாகவும், மந்திரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், அரசாங்க உயர் அதிகாரிகளாகவும் ஆகியிருக்கும் நபர்கள் ஏராளம்! ஏராளம்! அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர்கள் என்றாலே மிக பெருமையாகவும், கவுரவமாகவும் என்னப்படுவார்கள். இங்கு படித்தவர்களுக்கு உலகெங்கும் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஒரு சொசைட்டி போர்டாக அந்த காலத்து மிஷனரிமார் ஏற்பாடு செய்து CSI டையோசிஸ்ஸின் அதிகாரத்துக்குட்படாத தனி Bபோர்டினால் இந்த கல்லூரி நடத்தப்பட்டு வந்தது. இதன் வளாகத்திலுள்ள Chapelலில் இரண்டுமுறை பல வருடங்களுக்கு முன் நான் பிரசங்கம் செய்து உள்ளேன். இந்த கல்லூரியைப்பற்றியும் இதன் ஆளுமைப்பற்றியும் 1965ம் வருடம் முதல் நான் அறிவேன்.

மதுரை CSI டையோசிஸ்ஸை எத்தனையோ பிஷப்மார் பொறுப்பெடுத்துள்ளனர். அந்த பிஷப்மார் யாரினாலும் இந்த கல்லூரிக்கு ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. அவர்களெல்லாம் டையோசிஸ் காரியங்களில்மட்டும் தலையிட்டு ஊழியம் நடத்தி வந்தனர். ஆனால் பிஷப்.ஆசீர் அவர்கள் மட்டும்தான் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டவுடன் அமெரிக்கன் கல்லூரியிலும், தன் அதிகாரம் செலுத்தி அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நீண்டு நெடுங்தூரம் உள்ள, மிஷனரிகள் வாங்கிபோட்ட நிலங்களை விற்று, அங்கு வியாபார Complex கட்டிடம் பணியும் திட்டமும் வேறு பல திட்டங்களும் இட்டு அதை நிறைவேற்ற சவுகரியமாய் தனக்கு சாதகமான நபரை பிரின்சிபாலாக நியமித்தார். அது சரிபட்டு வராததால், தன் மருமகனையும் Barsarஆக நியமித்தார். இப்போதுதான் பிரச்சனை எழும்பிற்று. அமெரிக்கன் கல்லூரி தனி Bபோர்டால் நடத்தப்படுகிறது. எல்லா நியமனங்களும் Bபோர்டில் உள்ள கமிட்டிதான் தீர்மானிக்க வேண்டும். அந்த கமிட்டிக்கு பிஷப் தலைமை தாங்கலாம் ஆனால் ஆளுகைகளில் தலையிட முடியாது. இப்போது பிரச்சனை அதிகமானது. பிஷப் தன் ஆட்களையும், குண்டர்களையும், சில ஆளும் கட்சி தலைவர்களின் துணையுடன் கல்லூரிக்குள் கூட்டிவந்து பிரச்சனை உண்டாக்கினார். உதவிக்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் உதவியை நாடினார். முடிவில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அதை தலித் பிரச்சனை என்று கூறி மத கலவரமாற்றினார்கள்.

அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, பட்டிமன்றங்கள் மூலம் பிரபலமாகிய Prof.Dr.சாலமன் பாப்பையா அவர்கள் அதே கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவராகும். அவர் வைராக்கியத்தோடு இதில் தலையிட்டார். அமெரிக்கன் கல்லூரி பற்றிய பத்திர ஒப்பந்தங்களை அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்து எல்லா அரசியல் தலைவர்களையும் கூட்டி மிஷனரிகள் எழுதிய அன்றைய ஒப்பந்தங்களை காட்டி விவரித்தார். அத்தனைப்பேரும் பிஷப்.ஆசீரின் செய்கைகளையும் பிழையான ஆக்கிரமிப்புகளையும் எச்சரித்தனர். அதற்கும் பிஷப் இணங்கவில்லை.

பிஷப்.ஆசீர் அவர்கள் கோர்ட்டுக்கு போனார். கோர்ட் பத்திர ஒப்பந்தங்களை நீதிபதி வாசித்து பிஷப்பை நீதிபதி கண்டித்து இனி அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று பிஷப்பை எச்சரித்து பிஷப் நியமித்த இரண்டு பிரின்சிபல்களையும் நீக்கிவிட்டு சீனியாரிட்டி பிரகாரம் அடுத்த நிலையில் உள்ளவரை பிரின்சிபல்லாக நியமித்து கட்டளையிட்டார். மதுரை கலெக்டர்போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியவர்கள் கல்லூரியின் இந்த புதிய ஏற்பாடுகளை தொடர்ந்து கவனித்து ரிப்போர்ட் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். இது பிஷப்.ஆசீர் அவர்களுக்கு பெருத்த அவமானமாகிப்போனது மட்டுமல்ல, மற்ற டையோசிஸ் பிஷப்மார்களுக்கு இந்த கோர்ட் தீர்ப்பு ஒரு பாடமாக ஆனது. இப்படி அதிகாரவெறியும், டையோசிஸ் சொத்து அபகரிப்பும், மதுரை டையோசிஸ் எங்கும் பலவிதங்களில் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. பசுமலை என்ற இடத்திலிருந்து காலகாலமாக வாழ்ந்த பலரை வீடுகளை காலிசெய்ய சொல்லி அவர்கள் கண்ணீரோடு எழுதிய கடிதங்கள் பல கதைகளை வெளிப்படுத்துகிறது. இத்தனைக்கும் இவர் மதுரைக்கான பிஷப் மாத்திரமல்ல, CSI முழுவதுக்கும் உதவி மாடரேட்டர் பதவியும் வகிக்கிறார். இவர் சபை குருவானவராக இருந்தபோது அன்று பிஷப்பாக இருந்த Rt.Rev.போத்திராஜிலு அவர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தவர். இவர் தொல்லை தாங்காமல் பிஷப்.போத்திராஜிலு அவர்களே பதவிகாலம் முடியும்முன் பிஷப் பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கிப்போனார்.

இப்படிப்பட்ட தெய்வபயம் அற்றவர்கள் பிஷப்பாகவும், உதவி மாடரேட்டராகவும் பதவி வகித்து அந்த பதவியின் கவுரவத்தை நாசப்படுத்தி அந்த பதவியை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருப்பது வேதனைக்குறியதாகும். பிஷப்.போத்திராஜிலுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து துண்டுபிரதிகளை அச்சடித்து 1994 சினாட் மீட்டிங்கில் உபயோகித்து சரித்திரம் படைத்தவர்.

உறவினர்களின் கையில் மற்றொரு CSI டையோசிஸ்

கோயமுத்தூர் CSI டையோசிஸ் பிஷப்.துரை அவர்களின் உறவினர்கள்

பிஷப் அவர்களின் உறவினர்கள் டையோசிஸ்ஸின் முக்கிய பதவிகளில் நிறைந்துள்ளனர். பிஷப் Rt.Rev.துரை அவர்களின் மனைவி Mrs.Rev.சூடாமணி துரை அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட பதவிகள் ஆவன.

1. Ann’s Human Resource Centre,
2. Mother.Jothi – Womens Empowerment
3. Sahayam – Leprosy Rehabilitation
4. Tree – Tribal Women – mowerment – 20 மாவட்டங்களில் நடக்கும் திட்டம்
5. Nesam- Prisoners Family Welfare,
6. Yuvathi- Grilcnild Programme
7. Casu – HIV/AIDS Care and Support,
8. Pasam – Senior Citizen’s Welfare
9. Thunai- Widows Welfare,
10. STC- Secretarial Training Centre
11. Tabitha Tailoring institute,
12. Sengithi – Care for Araramis.

இவைகளில் பெரும்பான்மையானவைகளுக்கு ஜெர்மனி தேசத்திலிருந்து உதவிகள் ஏராளமாக கிடைக்கிறது.

மேலே காணப்பட்ட ஸ்தாபனங்களுக்கு பணவுதவி அவசரமாக தேவை என்று ஜெர்மனி நாட்டில் உள்ள அனைத்து சபைகளுக்கும் உதவி கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

(ஜெர்மனியில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் இதை விசாரித்து இதற்குமுன் கோயமுத்தூர் டையோசிஸ்க்கு அனுப்பப்பட்ட உதவி பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டு மேற்கொண்டபின் மாத்திரமே உதவிகளை அனுப்பி இந்த நல்ல காரியங்களுக்கு உதவலாம். காரணம் இதுவரை பெற்ற உதவிகள் செலவழித்த கணக்குகளில் பல தவறுகள் நடந்துள்ளது என்று கேள்விப்படுகிறோம். ஜாமக்காரனை டொச் மொழியில் மொழிபெயர்த்து வளமையாக சபைத்தலைவருக்கு கொடுக்கும்போது இவ்விவரத்தையும் குறிப்பிட்டு இவைகளின் விவரம் தேவையானால் உங்கள் மூலமாகவே அவர்களை எழுதச்சொல்லுங்கள்).

சேலத்தில் மட்டும் 6 ஸ்தாபனங்களுக்கு பிஷப் அவர்களின் மனைவி தலைவி பதவியில் இருக்கிறார்.

ஆடிட்டர் கணக்குப்படி ஒருமுறை சேலம் வந்தால் 6 ஸ்தாபனங்களிலும் பிரயாண செலவு-உள்பட மற்ற செலவுகளுக்கான பெரும் தொகையாக தனித்தனியாக TA செலவு தொகையை ஒவ்வொரு ஸ்தாபனத்தின் பெயரிலும் பெற்றுக்கொள்வதாக செய்திகள் கூறுகிறது. ஆடிட்டர் அவர்களும் அதை ஆட்சேபித்து இருக்கிறார்.

கோயமுத்தூர் பிஷப்.துரை அவர்களின் உறவினர்களின் பதவி பட்டியல்
பெயர் உறவின் முறை பதவி
1. Mr.Murthi பிஷப்.துரையின் கூடபிறந்த தம்பி Erode CSI College Secretary
2. Mr.Dhanabalan பிஷப்.துரையின் கூடபிறந்த அண்ணன் CSI ஆரம்ப, தொடக்கப் பள்ளிகளுக்கும் Correspondent ஆக.
3. Mrs.Sudamanidurai பிஷப்.துரை அவர்களின் மனைவி கண் ஆஸ்பத்திரியின் தலைவர், மன
நலம் குன்றியவர்களின் விடுதி தலைவர்.
- Working Womens Hostel தலைவர்
- போதகசேகர Chief Executive Officer
4. Mr.Samuel Sargunam பிஷப்பின் அண்ணன் மகன் Treasurer – Visitor பதவி CSI Hr. Sec. Schools, Erode.
5. Mrs.Metila பிஷப்பின் அண்ணன் மகள் CSI Hr. Sec. School, Erode. இன்டர்வியூ இல்லாமலே சேர்க்கப்பட்டவர் இவருக்கு பள்ளி அலுவலக வேலை தெரியாததால் ரிட்டயர்ட் ஆன கிளார்க் தனக்கு உதவியாக தற்காலிக வேலையில் அமர்த்தி 4000 சம்பளமாக கொடுக்கிறார்களாம்.
6. Mr.Daniel Thangam பிஷப் அண்ணன் மகன் Paying Hostel Warden. ஏற்கனவே மூன்று இடங்களில் வேலைசெய்து பல குற்றச்சாட்டுகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறார்.
7. Mr.Godwin Santhosh பிஷப்பின் அண்ணன் மகன் உடற்கல்வி ஆசிரியர். இவருக்கு சீனியராக பலர் காத்திருக்க எந்தவித இன்டர்வியூயும் இல்லாமல் ஆசிரியர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
8. Mr.Edwin Santhosh பிஷப்பின் மற்றொரு அண்ணன் மகன் அப்பாசாமி கல்லூரியில் புரொபஸர் வேலை.
9. Mrs.Jaculin பிஷப் மனைவியின் தங்கை CSI (Salem) Hr. Sec. School BT ஆசிரியை பதவி
10. Isreal Uthaya Thangam பிஷப் அண்ணன் மகன் CSI விடுதி நோட், புக் சப்ளை செய்வது

பிஷப்.துரை அவர்களின் சொந்தங்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. மேலே உள்ள பதவி விவரங்களை தொகுத்தவர்கள் அதை எழுதும்போது மேலும் மீதியுள்ள உறவினர் இரண்டு பேர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலே வாசித்த விவரங்கள் எந்த அளவு உண்மையானது. இப்போது அவர்களில் எத்தனை பேர்களுக்கு வேறு புது பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனைபேர் பதவியில் இப்போது இல்லை என்ற விவரங்கள் எனக்கு தெரியாது.

இதில் பிஷப்.துரை அவர்களின் கூடப்பிறந்த தம்பியான மூர்த்தி என்பவருக்குதான் சுமார் 3 கோடி ரூபாய் 3 செக்குகளாக டையோசிஸ்ஸிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கோடிகளின் கணக்கின் விவரத்தை கோயமுத்தூர் இம்மானுவேல் ஆலய வெஸ்ட்ரியில் வைத்து சபைமக்கள் பிஷப்பிடம் கேள்வி கேட்டப்போதுதான் வாடா போடா என்ற ஏகவசனத்தில் கேள்வி கேட்டவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் வெகுண்ட மக்கள் பிஷப் காரையும், பிஷப் மகனின் காரையும் போகவிடாமல் சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

உறவினர் லிஸ்ட்டில் முதலாவதாக காணப்படும் நபர் Mr.மூர்த்தி அவர்கள் ஆவார். இவர் Erode CSI Christian Art College செயலாளராக இருந்தவர் இவர். பிஷப்.துரை அவர்களின் கூடபிறந்த சகோதரர் ஆவார்.

இவரும் முன்னாள் டையோசிஸ் பொருளாளருமான Mr.சுவாமிதாஸ் என்பவரும் மேற்படி கல்லூரி பேங்க் கணக்கில் Co-Signatoryயாக செயல்பட்டு Bank of Maharastra, Erode Branch A/c. CD 100361ல் நான்கு செக் உபயோகித்துள்ளார்.
1. Cheque No.254870 Date 10-08-2007 தொகை 50 லட்சம்
2. Cheque No.254871 Date 15-09-2007 தொகை 50 லட்சம்
3. Cheque No.254872 Date 25-10-2007 தொகை 45 லட்சம்
4. Cheque No.254873 Date 26-11-2007 தொகை 25 லட்சம்

ஒரு கோடியே எழுபது லட்சம் என்ற இந்த மொத்த தொகையானது கல்லூரியின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு வசதிக்காக என்று எழுதப்பட்ட அதற்காக செலவழிக்காமல் இவர்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் வெளியரங்கமான குற்றச்சாட்டு.

மேலும் இந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படி கோயமுத்தூர் டையோசிஸ் நீதி மற்றும் சொத்து பராமரிப்புக்காக ஒரு கமிட்டி உண்டு. அந்த கமிட்டியிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை அல்லது நிர்வாக கமிட்டியிடமாவது அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறைகோடுகளை அறிந்து சிலர் கல்லூரி நிர்வாகக் குழு, அலுவலக பொறுப்பாளர்களிடம் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. கிறிஸ்டியன் வெல்பேர் மூவ்மெண்ட் என்ற சபைக்காக பாடுபடும் நல்லெண்ண சங்கம் 26.8.2008ல் தினத்தந்தி என்ற தினசரி நாளிதழில் எச்சரிக்கை விடுத்தது. அதன்பின் பிஷப் சார்பில் வக்கீல் பதில் எழுதினார். அதன் முடிவு இதுநாள் வரை அறியவில்லை.

ஈரோடு பெண்கள் ஆசிரியர் பயிற்சியில் பள்ளியின் கரஸ்பான்ட்டாக இருக்கும் பிஷப் அவர்களின் உடன்பிறந்த தம்பி திரு.மூர்த்தி அவர்களிடம் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்க 80 லட்சம் கொடுக்கப்பட்டது. இதுவரை இதற்கான செலவு செய்ததின் காரணத்தையோ, கணக்கையோ காண்பிக்கவில்லை.

இதுபோல ஏராளமான பெரும்தொகைகளை கையாண்ட திரு.மூர்த்தி அதன் கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இதன் காரணமாக திரு.மூர்த்தி அவர்களுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ்ஸில் விவரம் அறிவிக்கப்பட்டு தேடுதல் ஏற்பாடு நடந்துள்ளதால் மூர்த்தி என்பவர் தேடப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

முன்காலத்தில் பிஷப்பாக பணி செய்தவர் யாவரும் இயேசுவின் வழியை பின்பற்றி நடந்தனர்.
நான் ஊழியம் கொள்ள வரவில்லை.
நான் ஊழியம் செய்யவே வந்தேன் என்று இயேசு கூறினார்.

ஆனால் இன்று பிஷப்மார் பதவி ஏற்றவுடன் ராஜாவைப்போல் பவனி வர மிக உயர்ந்த விலையுள்ள பல கார்களை டையோசிஸ் பணத்தில் வாங்கி பவனி வரவே ஆசைப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் பங்களாக்களும், பிளாட்களும், பினாமி பெயரில் சொத்துகளும் வாங்கி குவிக்கின்றனர். தன் சொந்தக்காரர்களை பணம் பெரும்பகுதிகளில் பதவி கொடுத்து அவர்கள் மூலமாக பணக்கொள்ளை அபாரமாக நடைபெறுகிறது. திருமண்டல பொறுப்பாளர்களுக்கும் இதில் பெரும்பங்கு செல்வதால் எல்லா தவறுகளுக்கும் பக்கபலமாக நிற்கின்றனர்.

இயேசுகிறிஸ்துவிடம் உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள். மத் 12:47.

இயேசுவின் குடும்பத்தினருக்கு ஏன் தன் தாய்க்குகூட எந்த ஒரு தனி சலுகையும் இயேசு கொடுக்கவில்லை. வசனம் சொல்கிறது. வெளியே நிற்கிறார்கள், பேச ஆசையோடு காத்திருக்கிறார்கள் என்று எழுதியுள்ளது.

ஆனால் இன்று தமிழ் CSI சபைகளில் உறவினர்கள் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். பதவிகளில் உயர்த்தப்படுகிறார்கள் எத்தனை வித்தியாசம் பாருங்கள்.

இன்று கோயமுத்தூர் டையோசிஸ் CSI பிஷப்.துரை அவர்களுக்கு 2007-2008 வருடத்துக்கான ஊதிய செலவுகளை ஆடிட்டர் அறியிக்கையின்படி அடுத்த பக்கத்தில் வாசியுங்கள்.

பிஷப்.துரை அவர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் 5,85,306.00
பிஷப்.துரை அவர்களின் வீடு மற்றும் கார் பராமரிப்பு 5,44,139.00
பிஷப்.துரை அவர்களின் கார் பிரயாண செலவு 66,415.00
பிஷப்.துரை அவர்களின் பிரயாண செலவு 83,067.00
பிஷப்.துரை அவர்களின் கார் பராமரிப்பு,பழுது நீக்குதல் 59,000.00
பிஷப்.துரை அவர்களின் செல்போன், அலுவலக போன், வீட்டு போன் பில் 2,05,052.00
நீதிமன்ற செலவுகள் 6,01,201.50

அன்பான வாசகர்களே! மேலே இரண்டு டையோசிஸ் விவரங்களை மட்டும் அதுவும் இவர்களின் தனிப்பட்ட மற்ற சொத்து விவரங்களை, குடும்ப விவரங்களையும், அப்படியே நான் இந்த குறிப்பிட்ட பிஷப்மார்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய தனிப்பட்ட என் கடிதங்களின் விவரம் - இவர்கள் எனக்கு எழுதிய பதில் கடிதங்களின் நகல்கள் எதுவும் நான் இதுவரை வெளியிடவில்லை.

பிஷப் பதவி எப்படி உறவினர்களுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இவ்விவரங்களை மட்டும் இங்கு எழுதியதால் இவர்களுக்கு நான் எழுதிய என் தனிப்பட்ட கடித விவரங்களை இங்கு வெளியிடவில்லை.

பிஷப் பதவி மூலம் உறவினர்களுக்கு விதிகளின்படி பதவி கொடுக்காமல், தன் பிஷப் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரமாக பிஷப் உறவினர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை பெற உரிமையுள்ளவர்கள் தங்கள் சீனியர்ட்டிப்படி பதவி அல்லது வேலை கிடைக்கும் என்று ஏக்கத்தோடு ஏராளமானவர்கள் இன்னும் இலவுகாத்த கிளிப்போல காத்துக் கிடக்கிறார்கள்.

அந்த நாளும் வந்திடாதோ?

2005ம் வருடம் என்று நினைக்கிறேன் மத்திய கேரளா (Central Kerala) டையோசிஸ்ஸில் இப்போதுள்ள பிஷப்.Rt.Rev.Thomas Samuel, MA., BD., MTh., STM., அவர்களின் ஒரு மாத போன் பில் 25,000 ரூபாயாக இருந்ததை அறிந்தபோது உடனே மறுநாள் 25,000 ரூபாய் கட்டுகளை டையோசிஸ் அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்து டெலிபோன் பில் இத்தனை அதிகம்கூட காரணம் என் பிள்ளைகள் அவர்கள் இன்டெர்நெட் மூலம் பேசியதால் ஏற்பட்டது. கடந்த மாதம் பிள்ளைகள் என் வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது அவர்களால் உண்டான செலவு ஆகும். ஆகவே அதை டையோசிஸ் பணத்திலிருந்து எடுக்கவேண்டாம் என்று 25,000 ரூபாய் கொடுத்த சாட்சியுள்ள செய்தி நான் கேள்விப்பட்டபோது, நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி டையோசிஸ்ஸின் பிஷப் அவர்களின் ஒரு மாத டெலிபோன்பில் 1 லட்சம் என்று குமுதம் ரிப்போர்டரில் 11.1.2009 பக்கம் 10ல் எழுதப்பட்டதை வாசித்தபோது என் உள்ளம் மனவேதனையடைந்தது. டையோசிஸ் மக்கள் பணம் எப்படி செலவவாகிறது என்பதை உலக மக்கள் அறியும் வண்ணம் குமுதம் ரிப்போர்டரில் வெளிவரும் அளவு டையோசிஸ்ஸின் கவுரவம் கீழ்நோக்கி போய்விட்டதே! என்ன சொல்ல?

பிஷப்மார்களின் அதிகார துஷ்பிரயோகம் இப்போது CSI சபையில் பெரும்பாலான மாவட்டங்களில், மாநிலங்களில் உள்ள டையோசிஸ்களில் சர்வ சாதாரணமாகவிட்டது. தேவபயம் இல்லாமல் போய்விட்டது.

இன்று தமிழ்நாட்டு அரசாங்கத்தில் முதல்வரின் குடும்ப உறவினர்கள் நடத்தும் ஆட்சிப்போல CSI டையோசிஸ்களிலும் பிஷப்பின் உறவினர்கள் பெரும்பாலான பதவிகளில் அமர்ந்துள்ளனர்.

சென்ட்ரல் கேரளா டையோசிஸ்: பிஷப்.MOOR, தனக்கு கொடுத்த சம்பளத்தில் ஒரு ரூபாய் போதும் மீதி டையோசிஸ் எடுத்துக்கொள்ளட்டும் என்றார். அந்த காலத்தில் 1 ரூபாய் சம்பளத்தில் திருமணம் ஆகாத நான் என்னை காப்பாற்றிக்கொள்ளமுடிந்தது என்றார்.

சென்ட்ரல் கேரளா டையோசிஸ்ஸில் தற்காலிக பிஷப்பாக Rt.Rev.BEKEN HAM WASH என்பவர் கல்கத்தாவிலிருந்து வந்தவர். இவர்தான் தன் கடைசி காலத்தை அமைதியாக ஊழியத்திலும் சமுதாய பணியிலும் செலவு செய்ய ஆசைப்பட்டு தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் தடாகம் என்ற இடத்தில் ஆஸ்ரமத்தையும், ஆஸ்பத்திரியையும் ஆரம்பித்தவர். இவர் ஆங்கிலிக்கன் சபையை சேர்ந்தவரானாலும் தடாகம் கமிட்டியில் டிரஸ்டியாக யாக்கோபையா சபையினரையும் சேர்த்திருந்தார். அதனால் தடாகம் ஆஸ்ரமம் யாக்கோபையா சபையின் ஆளுகையில் சென்றுவிட்டது. இந்த பிஷப் காலில் செருப்பு அணியாதவர் தனக்கென்று ஒன்றும் சேர்க்காதவர்.

வடக்கு கேரளா டையோசிஸ் பிஷப்.Rt.Rev.பெஞ்சமின் அவர்கள்தான் என்னை வடக்கு கேரளாவில் முதன்முதல் அறிமுகப்படுத்தி கன்வென்ஷன் நடத்தியவர். இன்றும் இவர் உயிரோடு இருக்கிறார். இப்போது இவர் வயது 102 வெறும் சைக்கிளில் சென்று ஊழியம் செய்தவர். இவரைக்குறித்து தெற்கு கேரளா பிஷப்பும், பலமுறை CSI மாடரேட்டராக இருந்தவரும், சாட்சியுள்ள மாடரேட்டருமான Most Rt.Rev.JESUDASAN அவர்கள் பிஷப்.பெஞ்சமினைக்குறித்து கூறும்போது இப்படி கூறுகிறார். பிஷப்.பெஞ்சமின் சபைகுருவானவராக தெற்கு கேரளா டையோசிஸ்ஸில் பணியாற்றும்போது சொற்ப சம்பளத்தில் ஊழியம் செய்தார். அப்போது டையோசிஸ் கமிட்டி இவருக்கு சம்பளத்தைக்கூட்டி கொடுக்க தீர்மானித்தது. ஆனால் இவரோ இப்போது எனக்கு கொடுக்கும் சம்பளம் போதும் என் சம்பளத்தை கூட்டவேண்டாம் என்று அறிவித்து எங்களையெல்லாம் ஆவிக்குரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் என்று குறிப்பிடுகிறார்.

பிஷப்.பெஞ்சமின் எழுதிய செய்தி: If you don’t have Ministry, You will go after money, But if you have a ministry, The money will come after you.

இவர்களைப்போல மாடரேட்டராகி ரிட்டயர்ட் ஆன தெற்கு கேரளா பிஷப் Most Rt.Rev.ஏசுதாசன் அவர்களும் பணத்துக்கு அடிமை ஆகாமல் சாட்சியுடன் ஜீவித்து இன்றுவரை இந்தியாவின் எல்லா டையோசிஸ்ஸியிலும் மிகவும் மதிக்கப்படும் பிஷப் ஆக உள்ளார்.

இப்படி பண ஆசையில்லாமல் பிஷப் ஊழியத்தை செய்த இவர்களையும், இப்போதுள்ள பண ஊழலில் விழுந்த பிஷப்மார்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களின் சாட்சியுள்ள ஜீவியம் எங்கே? இவர்களின் வருமானத்துக்கு மீறின பணசேமிப்பும், சொத்துக்களும் எங்கே? கர்த்தர் கவனிக்கிறார்.

அன்பானவர்களே! CSIயில் நடக்கும் இப்படிப்பட்ட மோசமான நிலைகளை சரிப்படுத்த முயற்சி எடுக்கும் பல சங்கங்கள் இப்போது சென்னையிலும், தமிழ்நாட்டிலும் எழும்பியிருப்பது சபைகளில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்று நம்பலாம்.

சென்னையில் ராணுவ உயர் அதிகாரியாக பணியாற்றிய மேஜர்.விக்டர் அவர்கள் பொறுப்பில் People’s Movement for the reformation of the CSI மூலம் CSIயில் நடக்கும் பல ஊழல்களை வெளிக்கொண்டு வரமுடிந்தது. சென்னை டையோசிஸ்க்காக இவரும் இவர் சகாக்களும் எடுக்கும் பல நல்ல முயற்சிகளை நான் அறிவேன். CSIயின் ஊழல்கள் பலவற்றை கோர்ட்வரை பல ஆயிரரூபாய்கள் செலவழித்து சரியான உண்மையான ஆதாரங்களை திரட்டி வாதாடி வருகிறார். இதன் செலவுகளுக்கு உண்மையான பல CSI கிறிஸ்தவர்கள் இவருக்கு உதவிவருகிறார்கள்.

சென்னையில் CSIயின் நன்மைக்காக வாதாடும் சுமார் 11 இயக்கங்கள், சங்கங்கள் உண்டு.
சென்னை பேராய பாதுகாப்பு மன்றம் – சென்னை
கிறிஸ்டியன் வெல்ஃபர் மூவ்மெண்ட் – ஈரோடு
லய்ட்டி அசோசியேஷன் – சென்னை.
மிஷன் ஆப் சர்ச் ரீபார்மேஷன்
கிளர்ஜீ லயட்டி வெல்பர் அசோசியோஷன் – வெல்லூர்
சமுதாய சிந்தனை – கன்னியாகுமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களுக்காக, தன் மற்ற சமூக பார்வையோடு, குமரி CSI சபைகளில் காணப்படும் தவறுகளை தைரியமாக இதன் ஆசிரியர்.Dr.D.PETER அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

ஜாமக்காரனும் தன் ஆவிக்குரிய சுவிசேஷ ஊழியத்தோடு தான் அங்கம் வகிக்கிற CSI சபைகள் எப்படியாவது வசனத்தில் வாழ்ந்து மனம்திரும்பின அனுபவத்தோடு வளரவேண்டும் என்ற பாரத்தில் செயல்படுகிறது. அப்படி எழுதும்போது தன் CSI சபையில் நடக்கும் ஊழல்களை களைய அறிவிப்பையும் எச்சரிப்பையும் வெளிப்படையாக கொடுக்கிறது. இப்படி கர்த்தர் தன் சபை மக்களை காப்பாற்ற பல்வேறு சங்கங்களை, ஸ்தாபனங்களை, பத்திரிக்கைகளை, ஊழியர்களை உபயோகிக்கிறார். ஆனால் அவரவர்கள் சபை நிறை-குறைகளை சுட்டிக்காட்டும்போது, சபை தலைவர்கள், குருமார்கள், சபை பொறுப்பாளர்களின் ஊழல்களை வெளியே கொண்டுவரும்போது அவைகளை என்ன நோக்கத்தோடு அப்படி எழுதுகிறோம் என்பது மிகமுக்கியம். சபைமேல் கொண்ட வெறுப்பு, சபை தலைவர்கள்மேல் கொண்ட வெறுப்பு, சபையில் எதிர்ப்பார்த்தது கிடைக்காததால் கொண்ட ஏமாற்றம் ஆகிய பல காரணங்களால் தங்கள் எழுத்துபணியை தவறாக பயன்படுத்தினால் கர்த்தர் சும்மாவிடமாட்டார் என்பதை மனதில் கொள்ளவேண்டும். காரணம் சபை கர்த்தருடையது. சபை மக்களும், ஊழியர்களும் கர்த்தருடையவர்கள். ஆகவே அபாண்டமாய் பொய்யான, ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை ஒருவரை களங்கப்படுத்தவேண்டி அவர்மீது சேற்றை அள்ளி வீசவேண்டி பத்திரிக்கையை பயன்படுத்தினால் அந்த ஊழியத்தில் தேவஆவியானவரின் பங்கு இருக்கவே இருக்காது. ஆகவே இப்படிப்பட்ட விழிப்புணர்வு சபைகளில் உண்டாக்கும் பணி பத்திரிக்கை மூலமாக, துண்டுபிரதி மூலமாக எல்லா டையோசிஸ்களிலும் தொடரவேண்டும். அப்போதுதான் ஊழல் செய்பவர்கள் கொஞ்சமாவது தவறுசெய்ய பயப்படுவார்கள், சபைமக்களும் ஊழல் செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். தேவன் தம்மை பரியாசம் பண்ண ஒட்டார்!

இதன் முககிய காரணம் வாசகர்கள் அறியவேண்டும். நம் சபைக்காக, சபை தலைவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம். நான் எல்லா பிஷப்மாரையும் பிழையானவர்கள் என்றும் எங்கும் கூறியதில்லை. ஒரு சில கருப்பு ஆடுகளால் பல நல்ல பிஷப்மார்களுக்கும் கெட்டபெயர் உண்டாகிறது. சபை தலைவர்கள் அல்லதபிஷப்மார்களின் தவறுகளுக்கு அரசாங்கம் தண்டனை கொடுக்க இயலாது என்பதால் பிஷப்மார்கள் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று அறிந்து தேவபயம் இல்லாமல், தன் பதவிக்கேற்ற கவுரவம் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளாமல் உலக மக்களைப்போல், ரவுடிகளின் தலைவர்களாக தங்களுக்கு எதிரானவர்களை, தங்களுக்கு எதிராக எழுதுகிறவர்களை தங்களுக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை பலவித உபாய தந்திரங்களால் அவர்களை சபையை விட்டு நீக்க திட்டம்இட்டு செயல்படுகின்றனர். ஒரு ஆளை சபையைவிட்டு நீக்கும் விஷயத்தில் பிஷப்மாரின் வானளாவிய அதிகாரம் கோர்ட்டில் செல்லுபடியாகவில்லை என்பதை பல நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அறியத்தருகிறது. அது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. எனவே ஜெபத்தோடு செயல்படுவோம்.//

As this Senior Pastor has exposed this th letter this Pastor ரேசிவேத்


csi001

csi005

No comments:

Post a Comment