Sunday, December 26, 2010

மாணவிகள் பலாத்காரம் - ஒரு தொடர்கதை தானா...?

நேற்று ஓமலூர் சுகன்யா! இன்று கடலூர் ஆனந்தவள்ளி! நாளை....?

http://puduvaisaravanan.blogspot.com/2007/10/blog-post_1475.html

கடந்த 18-11-2006 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த சுகன்யா என்ற மாணவி பாதிரிகளால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்தச் சம்பவத்தால் கொதித்துப்போன பொதுமக்கள் பாத்திமா பள்ளியை முற்றுகையிட்டு தாக்கினார்கள். போலீஸ் விசாரணையிலும், பிரேத பரிசோதணையிலும் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் சம்பந்தப்பட்ட பாதிரிகள் மீது அந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக பொதுமக்களின் ஆவேசத்தால் சேதமான பள்ளியை சீரமைக்க கருணாநிதி அரசு நிதி உதவி அளித்தது.

இப்படி ஒர் இளம் பிஞ்சை கற்பழித்துக் கொன்றவர்களுக்கு கருணை காட்டியதன் விளைவு இன்று கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவு ஆனந்தவள்ளி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஆனந்தவள்ளி கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி சமுட்டிக்குப்பத்தை சேர்ந்த முந்திரி ஏற்றுமதியாளர் ராதாகிருஷ்ணின் மகள்.


தினந்தந்தி சென்னை பதிப்பில்(23-10-2007) வந்த செய்தி. பெரிதாக்கி படிக்கவும்


தினமலர் புதுச்சேரி பதிப்பில்(23-10-2007) வந்த செய்தி பெரிதாக்கி படிக்கவும்


ஓமலூர் சுகன்யாவைப் போலவே ஆனந்தவள்ளியும் விடுதியில் தங்கி படித்துள்ளார். சுகன்யா கிணற்றில் பிணமாக மிதந்தார். ஆனந்தவள்ளி பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கினார். இதுபற்றி முழுவிவரங்கள் தெரியவில்லை. முழு விவரங்கள் சேகரித்ததும் இங்கே பதிவிடுகிறேன். இந்த நேரத்தில் சேலம் ஓமலூர் சுகன்யா படுகொலை பற்றி 8-12-2006 விஜயபாரதம் இதழில் நான் எழுதிய கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளேன். கிறிஸ்தவ பாதிரிகளால் நம் இந்து மொட்டுகள் கருக்கப்படுவதைப் பாருங்கள்.


தூக்கில் பிணமாத மாணவி ஆனந்தவள்ளி(தினகரன், பாண்டிச்சேரி (23-10-2007))








பள்ளி நிர்வாகத்தை(பாதிரிகளை) கண்டித்து சாலை மறியல் செய்யும் பொதுமக்கள்(தினகரன், பாண்டிச்சேரி(23-10-2007)


மாணவிக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் பள்ளிக்கு பாதுகாப்பு


சக மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் பள்ளி வாயில் முன்பு மாணவிகள்


No comments:

Post a Comment