Tuesday, December 28, 2010

ரஜினி அண்ணே - வாய்ஸ் கொடுப்பிங்களா இந்த தேர்தல்ல ...? அபப தான் நீங்க ஒரு நேர்மையான மனிதர்ன்னு ...


"கீழே விழுந்தும் மீசைல மண் ஓட்டலை" என்பது போல், ராஜா ராஜினாமா செய்தும் (செய்யபட்டும்) நீங்க அடங்கலை பாருங்க. ஆமாம் இந்த அறிக்கைகுதான் நேற்று மாமல்லபுரம் ரிசார்ட் போனீரோ?

எங்கே போனார் இந்த ரஜினி! தமிழ் நாடை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாதுன்னு சொன்னார் முன்பு ஒருமுறை. இப்போது இந்தியாவையே காப்பாத்த முடியாம போய்டும் போல இருக்கு. இப்போ என்ன சொல்ல போகிறார்? ஏதாவது சொல்ல தைரியம் இருக்கிறதா ரஜினி அண்ணே?. இறைவா இந்த கொள்ளை கூட்டங்களிடமிருந்து இருந்து எங்களை காப்பாற்று!

ஒரு நல்ல குடிமகனாக, இந்த கேடுகெட்ட அரசியல் வியாதிகளிடம் இருந்து நமது நாட்டை காக்கவேண்டிய கடமை நமக்கு நிச்சயம் உள்ளது. ஆகவே இந்த முறை நிச்சயம் "திருடர் முன்னேற்ற கழகங்களுக்கு" எதிராக "நிச்சயம் ஓட்டு போடுவோம்" என்று படித்த புத்திசாலியான நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்! வாழ்க பாரதம்!.

இந்த கொள்ளை கூட்டத்துக்கு ஒரு பாராட்டுவிழா கண்டிப்பாக எடுக்கணும்.....தமிழ் நட்டு மக்களுக்கு எப்பதான் புத்தி வருமோ.

திரு மு. தான் இந்த தமிழ் சமுதாயத்தின் இழி நிலைக்கு காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் தமிழனுக்கு எதிராகவே செயல்பட்டு தன் குடும்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்தவர் கருணா என்கிற ஆக்டோபுஸ். இரண்டு தலைமுறை மக்களை சிந்திக்க விடாமல் செய்து தமிழகத்தை இருபது ஆண்டு காலம் பின்னுக்கு தள்ளியவர் இந்த புண்ணிய தலைவர். தமிழன் விழிக்க வேண்டிய நேரம் இது. தமிழா விழித்திரு! இந்த ஆக்டோபஸ் குடும்பதிலிருந்து தமிழகத்தை கைப்பற்றுவது உன்னிடம் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்.

ஐயோ சாமி எனக்கு காதுல ரத்தம் வருது பேசாம இரு தாத்தா .. உன் வாரிசுகள் எல்லாம் indas no 1 கோடீஸ்வரர்கள் .

தாத்தாவின் latest புலம்பல்-ஜெயலலிதா & சுப்பிரமணியசாமி பார்பணர்கள், ராஜா தலித் சூழ்ச்சி செய்து வெளியேற்றி விட்டார்கள். தலைவரின் கடைசி ஆயுதம் ஜாதி - அதையும் வீசிவிட்டார். தென்னையைபெற்றால் இளநீறு, பிள்ளையை பெற்றால் கண்ணீரு. பிள்ளைகளுக்காக கோடி கோடி சேர்த்து இப்போ அழுது புலம்புகிறார், பாவம்.

மிகப் பெரிய உண்மை ஐயா, தாங்கள் சொல்வது. எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி பொய்,புரட்டு,பித்தலாட்டம் செய்யும் ஊழல் ராணியை கண்டதே இல்லை. அனைவரும் கை கொட்டி சிரிக்கிறார்கள்!!

கரெக்டா சொன்னிங்க தலைவரே, ஆனால் உங்களைவிட பெரிய கொள்ளை கூட்டதை இந்த நாடு இதுவரை பார்த்ததே இல்லை என்பதையும், இப்படி மோசடி செய்யும் குடும்ப கொள்ளையர்களையும் இந்த நாடு தாங்காது என்பதையும் கொஞ்சம் அழுத்தி சொல்லுங்க. ஒட்டு மொத்த தமிழர்களின் தன்மானத்தையும் வீரத்தையும் அடமானம் வைத்து குடும்பத்தை வளர்த்துக்கொண்ட கயவனே வாய மூடிக்கோ அதான் மரியாதை.

ஜெயலலிதா 3 கோடியிலிருந்து 66 கோடி. கருணாநிதி மஞ்ச பையிலிருந்து 200000 கோடி. யார் யோகியன்? 66 பெரிசா 200000 பெரிசா.

அவர் அடித்த 62 கோடிக்கு கேஸ் நடக்கிறது!உங்கள் குடும்பத்தில் [மூன்று தலைமுறைகள்] உள்ள பணத்திற்கு ,என்ன கணக்கு? எப்படி வந்தது! ஒரு கேஸ் கூட இல்லையே!எப்படி சமாளிக்கிறீர்கள்! ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? சென்னை நகரத்தில் மட்டும் எத்தனை வீடுகள் [பினாமி உள்பட ],சொல்லுங்கள்!!

எம்ஜியார் ஆட்சிக்கு பிறகு ஒரு மிகப்பெரிய அடியை ஜெயா கருணாநிதிக்கு கொடுத்துள்ளார். அது ஆல் இந்தியா லெவெலில், எதிர் கட்சியாக இருந்து கொண்டு, ஜெயா இவர் பெயரை நார் நாராக கிழித்தது தான். தற்போது இந்தியாவில் மூளை முடுக்குகளெல்லாம் கருணாநிதியின் பெயர் "ஊழலின் ஊற்று கண்" என்று குழந்தைகளுக்கு கூட தெரியும் அளவுக்கு ஜெயா பரப்பியுள்ளார். எனவே இது கருணாவின் விரக்தியின் உச்ச கட்டம். பரிதாப படுவதை தவிர வேறு வழி இல்லை.

சாத்தன் வேதம் ஓதுது. ராஜாவை காப்பற்ற எனவெல்லாம் புலம்புறார் இந்த கிழவர். நல்ல குடும்பம்டா சாமி.

உனக்கு 65 கோடி, எனக்கு 1.76 கோடி. நல்லா இருங்கடா.

ராஜா கைய வெச்சா...அது ராங்கா போனதில்ல..!!....இந்தியாவுக்கே வச்சுட்டான்டா ஆப்பு....!!....கூட சேர்ந்து தின்றவன் எல்லாம் இன்னும் ஓஹோன்னு நூறு வருஷம் உசுரோடதான் இருக்கானுவ....கொலகாரப்பாவிகளா..!! ஒருநாளைக்கு ஒரு இலச்ச ரூபா செலவளிச்சாலும் 4782 வருசத்துக்கு செலவளிக்கலாம்.....உலகத்திலே மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கு....எவ்வளவு பெரிய பின்னணி தொடர்பிருந்தால் இவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்கும்?...மன வேதனையில் சொல்கிறேன் இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்...வேதனைப்படுகிறேன்....!!.

ராசாவுக்கான செக் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே வைக்கப் பட்டு விட்டது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை தருவதில்லை என்று காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு, கருணாநிதியை கடும் கோபம் அடையச் செய்தது. அதனால்தான், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் கோபித்துக் கொண்டு திரும்பினார். பிறகு தனது பிடிவாதத்தால் .ராசாவுக்கே தொலைத் தொடர்புத் துறையை பெற்றார். இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் கட்சிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

இரண்டாவது முறை பதவி ஏற்றவுடனேயே, ராசாவின் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டு ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. ஒரு அமைச்சரின் துறை அலுவலகத்தில், அதுவும் தலைமை அலுவலகத்தில் அவர் பதவி வகிக்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சோதனையிட்டு ஆவணங்களை பறிமுதல் செய்கிறது என்றால், ராசாவுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று கருணாநிதியும் ராசாவும் பிடிவாதம் பிடித்ததற்கு காரணம், மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல..

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் சொந்தமாக தீவு வாங்கும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலேயே சம்பாதித்து விட்டார்கள். இரண்டாவது முறை இந்தத் துறைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது, மாட்டிக் கொள்ளாமல் இருக்க. விசாரணை என்று தொடங்கினால், அது அங்கே போய், இங்கே போய், கடைசியில் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து நிற்கும் என்பது கருணாநிதி அறியாததல்ல..

இந்த திட்டத்திற்கு கலைஞர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிட்டு திட்டம் என பெயர் வைக்க வேண்டுகோள் வைக்கிறேன்.

பாம்பின் கால் பாம்பறியும், அதுவும் நீ என்ன சாதா பாம்பா, அனகொண்டாவாச்சே.

மு . என்ன மு.. இது. "நீ 66 கோடி சொத்து சேர்த்த...... நாங்க 1.76 லட்சம் கோடி ஊழல் பண்ணினோம். ரெண்டுக்கும் சரியாய் போச்சு" அப்படிங்கற மாதிரி பேசுறிங்க...... உங்களுக்கு கணக்கு தெரியாதா.... இந்த பணத்த வச்சு...கங்கைல இருந்து தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொரு கெனத்துக்கும் அண்டர் கிரௌன்ட்ல வாய்கால் கட்டி தானி கொண்டு வரலாம்... சும்மா தண்ணிய போட்டு உளறாதிங்க.

கொஞ்சம் பொறு தலைவா ! தேர்தல் வருகிறது ! உனக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காமல், குடும்பத்தோட வீட்டுக்கு போக ரெடியா இருங்க.

"தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், மீடியாக்கள் போல வடஇந்திய பத்திரிகைகள் இல்லை. அவர்கள் பிரதமரையே நோண்டி நொங்கு எடுக்கிறார்கள். திமுக எல்லாம் அவர்கள் தலை மயிருக்கு சமம் போல் தெரிகிறது. ஆனால் அனைத்தும் உண்மை. அனைத்து இந்திய மக்களிடமும் "Times Now "CNN -IBN போன்ற செய்தி தொலைகாட்சிகள் கடந்த சில நாட்களில் மிக பெரிய இடம் பிடித்துள்ளனர்.

தமிழன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி மஞ்சள்துண்டு குடும்பம் தமிழ் மக்களையே ஏமாற்றும் விசயத்தை தமிழ் பத்திரிகைகள் வெளியிடாமல் வட இந்திய ஆங்கில பத்திரிகைகள் வெளியிடுவது தமிழ் பத்திரிகைகளுக்கு மிக பெரிய அவமானம். புதிய சட்டமன்ற கட்டிடத்தில் நான்காவது தூணான பத்திரிகைகளுக்கு சரியான இடம் அளிக்காத போதே பத்திரிகைகள் மஞ்சள் துண்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவது பெரிய வருத்தம் அளிக்கிறது..

http://www.saveondish.com/forum/archive/index.php/thread-30773.html


No comments:

Post a Comment