Saturday, February 25, 2012

The rise and rise of tomorrow’s Prime Minister Narendra Modi


o politician in independent India has been demonised in such a relentless, Goebbelsian manner as Narendra Modi, and no politician has withstood it with as much resilience and courage as him, notwithstanding the entire Central government, influential sections of the media machinery and civil society arraigned against him.

His dark patch started with the unfortunate Godhra train massacre and the ensuing communal riots in Gujarat in 2002, where several innocent people lost their lives. A train carrying non-violent harmless karsewaks were set on fire and nearly 60 persons were burnt to death. Understandably, but regrettably, this provoked retaliation and mayhem resulting in many innocent members of the minority community losing their lives and suffering other indignities. It is equally true that the desire for revenge did paralyse the will of some law enforcement agencies, including some prosecutors and judges. Serious steps had to be taken to restore the confidence of the victims of revenge in the legal and judicial system of the state.

Today, vast sections of civil society see in Narendra Modi the next Prime Minister of India. I hope he will plant more visible footprints on the international seashore. He has to speak of peace and a durable solution to the Kashmir problem with the rulers of Pakistan.

The most diabolical role was played by the Congress government at the Centre. A bogus commission was appointed to whitewash the Godhra tragedy to establish that the attack on the train was not the result of a conspiracy of some evil minded Muslims, but an accidental stove fire. This serious crime by the Congress government was fully exposed when a Special Investigation Team appointed by the Supreme Court made their own independent investigation and reiterated that the burning of the pilgrims was a concerted plan by those who must have known that it will inevitably lead to retaliation and atrocities against the minorities, a finding fortified by recent court judgments. Their evil calculations proved to be right. Obviously, the planners wanted India to get a bad name, its national unity and integrity shaken and its defence against scheming neighbours enfeebled.

The unfortunate riots were followed by the state elections, the results of which made the psephologists run for cover. One is reminded of a story, which may well be apocryphal, but is fairly apposite and bears repetition. The Viceroy of India, Lord Linlithgow, wanted to hold an open air reception in Simla and sought, and received, the assurance of the weather bureau that there wouldn't be any showers on that day. But while strolling on the mall, he encountered a farmer and his donkey. Proletarian as he pretended to be, he struck up a conversation with him and made the same enquiry. The farmer looked at his donkey and said, "Whenever my mate's ears shake the way they are doing now, it just pours." The Viceroy made light of the donkey signal, but his evening party was a big fiasco. In anger, he had the weather station removed to faraway Pune as punishment. I hope the media will never again mess with Narendra Modi or Gujarat elections. Modi won a landslide victory, which even he and his followers could not have imagined or hoped for. I congratulated him for his brilliant victory, but I sincerely advised him that he should wear a look of absolute humility; he should publicly own that something had seriously gone wrong and that he should loudly proclaim that India could never go forward and retain its independence and sovereignty unless Hindus and Muslims were locked in an embrace of love and mutual understanding. He must declare his firm resolve to bring back to the minorities a feeling of absolute security and an assurance of every kind of protection by the powers of the state. Modi thought out and reasoned his strategy and since then his stature has risen manifold to heights rarely attained before.

Today, vast sections of civil society see in him the next Prime Minister of India. I hope he will plant more visible footprints on the international seashore. He has to speak of peace and a durable solution to the Kashmir problem with the rulers of Pakistan. He must project himself as a great democratic leader of the world and a fighter for human rights and justice the world over. On the domestic front, I am proud to see him winning Muslim hearts by presenting to them the real Hindutva, which even the Supreme Court had to acknowledge and admire. Let not the real Hindutva be confused with its counterfeit version, which unfortunately gains currency during the course of electoral battles.

he policies and conduct of Narendra Modi may be compared with those of the late Rajiv Gandhi. The sad assassination of his mother led to what may accurately be described as a virtual genocide of the Sikhs. Armed bands of hooligans and murderers went around the streets and colonies of Delhi in search of innocent Sikhs, sought them out and slaughtered them mercilessly. We saw some Sikhs being burnt alive on public roads while crowds watched the heartrending scenes. Even the then Sikh President could not move a finger to help the unfortunate followers of Guru Nanak. I cannot forget those shameful days even now. All that the new Prime Minister Rajiv Gandhi had to say was a defiant, "When a big tree falls the earth must shake". Never did the Congress leadership apologise for the atrocities and the murders. It is the greatness of the Sikh community that they have forgiven the Congress.

In a corruption ridden country where the chief source of corruption is the Congress and its leaders, Narendra Modi shines for his impeccable integrity. He has focused his entire energy on building in Gujarat an able administration and good governance. He has achieved phenomenal development and economic growth, and at the same time bolstered social inclusiveness. Through these he has worked hard to regain the confidence of the minorities, even as the relentless and pervasive hate campaign against him has continued unabated in the electronic media, among the fashionable intellectuals and civil society activists, who have become the media sweethearts.

http://www.sunday-guardian.com/analysis/the-rise-and-rise-of-tomorrows-prime-minister-narendra-modi

Friend, father & philosopher of black money is Chidambaram


alaniappan Chidambaram, whom I shall for the sake of brevity call just Chidambaram, is best seen through black and white. And please don't get me wrong and accuse me of racism. I refer not to epidermis or mane, but to the economic colour of money. Some of his greatest contributions to the economy of India are his brilliant pioneering initiatives for changing the colour of money from black to white. And this passion has never left him.

Many of us have forgotten the Voluntary Disclosure of Income Scheme (VDIS) 1997, which he announced when he was Finance Minister with the United Front government, granting income-tax defaulters indefinite immunity from prosecution under the Foreign Exchange Regulation Act, 1973, Income Tax Act, 1961, Wealth Tax Act, 1957, and Companies Act, 1956, in exchange of self-valuation and disclosure of income and assets. The scheme was brilliantly conceived. While all schemes in the past valued declared assets at current prices, VDIS 1997 brought in an arbitrary date of 1 April 1987. Gold and silver hoarders, and large property holders got an exceptional bonanza on this valuation system. Further, proof of purchase was not insisted upon, which gave complete freedom to the confessors to fudge any date they wanted to their own financial advantage and further plunder of the country. So, even if gold was bought after 1987, it could be shown as having been bought before 1987, and it was a win-win game for all stakeholders to rake in the cuts. The Comptroller and Auditor General of India condemned the scheme in his report as abusive and a fraud on the genuine taxpayers of the country. But the issue was forgotten, and the illustrious career of Palaniappan Chidambaram rose to greater heights in the UPA regime.

Those were his innocent days. What a long way he has come since the era when he was cooking up VDISs, so utterly transparent, that the loopholes and avenues to give relief to the looters stared you in the face. The world economy was also then a little simpler than it is today, and his best achievement was getting caught about his investments in Fairgrowth, which was involved in the Securities Scam of 1992. Chidambaram had to resign for this utterly transparent investment in a company whose scam would have paid rich dividends. Unfortunately, he was not Finance Minister at the time and did not have the machinery to hush things up, and could only remotely control the markets, unlike his present capabilities as former Finance Minister and thereafter.

Being Finance Minister in the UPA government was his finest hour. He could fiddle around with share markets, capital markets, banks, financial instruments, such as, securities, participatory notes, tax treaties, not to speak of spectrum sale, and use his extraordinary innovative powers of black money magic to plunder our country with complete impunity. He assiduously cultivated the media with his clipped English accent (that led him down, now and then), occasional freebies, and sustained shadows of the Enforcement Directorate that he commanded.

hidambaram cannot get black money out of his blood. Dr Subramanian Swamy has clearly stated in his website, "I now have further information from my usually reliable sources in the Union Government that the tapping of Finance Minister Mr. Pranab Mukherjee and his close associate in the Ministry, enabled Mr. Robert Vadra the son-in-law of Ms. Sonia Gandhi and Mr. Karthik son of Mr. P. Chidambaram, to use the data thereby collected to manipulate and rig the Mumbai stock market. Earlier these data were directly provided by the then Finance Minister Mr. Chidambaram. I demand that the SEBI be asked by PM to initiate 'Insider Trading' investigation and prosecution of Mr. Vadra and Mr. Karthik."

If what is put out by Dr Subramanian Swamy is false why doesn't Chidambaram sue him?

The dark clouds of the 2G scam and the repeated evidence being given by A. Raja and other accused of his tacit involvement and other acts of omission and commission are menacingly closing in on Chidambaram. He is losing his cool, and more importantly, losing his carefully clipped English accent to its more indigenous roots more often. And like his colleague Digvijay Singh, his mind seems to be disintegrating to a stage where he has started talking gibberish. Take this, for example: in reply to the BJP demand for his resignation for his involvement in the 2G scam, Chidambaram claims that the BJP is targeting him since he initiated a probe by the NIA into Hindu terror. Can any rational person see the connection between the two?

Take also his comments regarding the recent Mumbai blasts. As Home Minister, instead of taking stock of the situation, and providing leadership, the only intelligent thing he could think of saying was, "No intelligence is not intelligence failure." Even a college debating society expects better logic. It's something like saying "illness is not a failure of health" or "impotence is not a failure of potency".

Chidambaram's special financial skills have diversified into electoral politics also. He has the distinction of having been declared defeated in the last Lok Sabha election, after which he galvanized his special skills and local machinery, in particular, a data entry operator, and doctored a marginal victory on the recount. That is quite a record for fraud. And can one forget how the Indian Bank was cleaned up and left with only non-performing assets thanks to him and his Tamil Maanila buddies?

Chidambaram's record as Home Minister has been disastrous. Neither has he made any impact on internal security, with the worst massacres of his own paramilitary forces taking place in his time, nor on terrorism, which carries on in complete complacency because there are neither effective preventive or punitive systems in place, nor political will and national legislation to combat terrorism. It is on record and in the public domain that the Home Ministry gave incorrect names of India's most wanted list of terrorists allegedly hiding in Pakistan, some of whom were tracked living in India or in custody. Is this a testament to his fabled efficiency and commitment?

What a laughing stock we must be before the world. It is almost as if India is determined that it shall not combat terrorism, shall not have enabling legislation as enacted by the US, such as the Homeland Security Act 2002, and the Prevention of Terrorism Act 2005 of UK and similar legislations in European governments. India is determined not to have an effective national agency on the lines of the Homeland Security Department of the US. The ramshackle National Investigation Agency showed itself as a complete failure during the recent Mumbai attacks. Understandable, because its only mandate appears to be to investigate "Hindu terror", the last refuge for failed and hopeless Congressmen like Chidambaram. The CCTNS, JIC, ARC, NTRO (presently in another scam), and NCTC remain effete, scattered and unmonitorable, even by the Home Ministry. With such an unequivocal determination by the UPA government not to address terrorism effectively, I can only grieve for my country.

http://www.sunday-guardian.com/analysis/friend-father-a-philosopher-of-black-money-is-chidambaram

அம்மா தாயே ஊழல் பிச்சை போடு...



பிரதமர் மன்மோகன் சிங் சாப்பாட்டு மேஜையில் சோகமாக அமர்ந்து சப்பாத்தியை ஆள்காட்டி விரலால் கிள்ளி கொண்டிருந்தார் அவர் எதிரே சாம்பார் சாதத்தை ஒரு பிடிபிடித்த திருப்தியோடு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சர் சிதம்பரம் எதிர்க்கட்சிகாரர்கள் கொடைச்சல் கொடுக்கிறார் என்று வருத்தபட்டால் நியாயம் இருக்கிறது சுப்ரமணிய சாமி ஆதாரத்தை கோர்டில் காட்டிவிடுவாரோ என்று பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது ஆனால் அந்த பயம் எல்லாம் கூட எனக்கு சட்டையில் ஒட்டிய தூசி தான் இந்த ராகுல் காந்தி பேசுவதை பார்த்தால் தான் தொடை நடுங்குகிறது என்று பிரதமரிடம் அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார்

நானும் அவர் பேசியதை பேப்பரில் படித்தேன் இவர் காட்டுகிற பூச்சாண்டியில் நமக்கு குலை நடுங்குகிறது ஊழல் வாதிக்கு காங்கிரசில் இடமில்லை என்கிறாரே ஒருவேளை சோனியாகாந்தியை கட்சியை விட்டு துரத்துவதற்கு சொந்த மகனே சதி செய்கிறாரோ என்றும் எண்ண தோன்றுகிறது அந்த ஆள் பேசியதை படித்த நேரமுதல் நிம்மதியாக மூச்சிவிட முடியவில்லை நிம்மதியாக ஒருகவளம் சாப்பிட முடியவில்லை எல்லாம் நம் தலையெழுத்து என்று பிரதமரும் தன்பாட்டிற்கு புலம்பி கொண்டிருந்தார்

அந்த நேரம் உள்ளே வந்த அதிகாரி ஒருவர் உங்கள் இருவரையும் சோனியா மேடம் அவசர ஆலோசனைக்கு கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார் அதை கேட்டவுடன் இருவர் முகமும் வியர்த்து விட்டது படபடப்பு அதிகரித்து இருப்பது அவர்கள் கைகள் நடுங்குவதிளிருந்து தெரிந்தது என்ன ஆலோசனையோ என்ன கூட்டமோ ஒன்றும் புரியவில்லை பிரதமர் பதவி விட்டு வீட்டுக்கு போ என்று சொல்லப்போகிறாரோ என்னவோ எதுவாக இருந்தாலும் நான் முன்னால் போகிறேன் நீங்கள் பின்னால் வாருங்கள் என்று சிதம்பரத்திடம் கூறிவிட்டு பிரதமர் அவசர அவசரமாக கிளம்பினார்


சோனியா காந்தி தனது இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த ஆரம்பித்தார் பிரதமர் மன்மோகன் சிங் சாப்பிட்ட கையை கழுவாமலே கூட்டத்துக்கு வந்தார் என்ன மிஸ்டர் மன்மோகன் கையை கழுவி விட்டு வரக்கூடாதா என்ற கேட்ட சோனியாவிடம் நீங்கள் கூப்பிட்டதாக சொன்னார்கள் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவசர அவசரமாக வந்து விட்டேன் என்று பிரதமர் அசடு வழிந்தார்

அப்போது தான் உள்ளே நுழைந்த உள்துறை மந்திரி சிதம்பரம் மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்கி நின்றார் அவரை பார்த்து என்ன சிதம்பரம் சார் பதட்டமா இருக்கீங்க என்று சோனியா கேட்கவும் ஒன்றும் இல்லை மேடம் எனக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் நீங்கள் ஆள் அனுப்பியிருக்கிறீர்கள் என்று கேள்வி பட்டேன் முகர்ஜி வருவதற்குள் நான் வரவில்லை என்றால் அவர் என்னை பற்றி எடாக்கூடமாக எதாவது போட்டு கொடுத்து விடுவார் நீங்களும் நம்பி விட்டீர்கள் என்றால் என்னை காப்பாற்ற யாருமே இல்லாமல் போய்விடுவார்கள் என்று தழுதழுத்த குரலில் சிதம்பரம் பதில் சொன்னார்


கவலை படாதீங்க நான் அவர் சொல்வதை நம்ப மாட்டேன் அவரென்ன வேறு யார் யாரை பற்றி புகார் சொன்னாலும் அதை நம்புவது இல்லை என்று உறுதியோடு இருக்கிறேன் புகார்களை எல்லாம் நம்பி நடவடிக்கை எடுத்தேன் என்று வைத்து கொள்ளுங்கள் நமக்கு நாலு காசு யார் தருவார் என்று சோனியா பதில் சொல்லவும் சிதம்பரம் மனது குளிர்ந்து போய் விட்டது

நீங்கள் சொல்வதை கேட்டால் சந்தோசமாக இருக்கிறது உங்கள் பிள்ளையாண்டான் பேசுகிற பேச்சை பார்த்தால் அடிவயிறு கலங்குகிறது மேடம் ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை என்கிறார் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என மிரட்டுகிறார் மிகவும் பயமாக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அழாத குறையாக பேசினார்

ஆமாம் மேடம் நம்ம பிரதமர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி ராகுல் காந்தி தீடிர் தீடிரென பற்றவைக்கும் அதிர் வேட்டுகள் இதையத்தை பிளந்து விடும் போல் இருக்கிறது ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் எங்கே போய் நிற்போம் எங்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் பரம்பரை பரம்பரையாக எங்களை காப்பாற்றுவது உங்கள் குடும்பம் தானே இது உங்கள் மகனுக்கு தெரியாதா? என்று சிதம்பரம் மெல்லிய குரலில் விண்ணப்பித்தார்


உங்கள் மாமியாருக்கு நாங்கள் காட்டிய விசுவாசம் உலகமே பாராட்டக்கூடியது அவர் மாருதி நிறுவனத்தில் கொள்ளையடித்த போது கூட இருந்து ஒத்தாசை புரிந்தது யார் சரி அதை விடுங்கள் உங்கள் வீட்டுக்காரர் பீரங்கி பேர ஊழலில் மாட்டிக்கொண்ட போது விசுவநாத் பிரதாப் சிங் கிழி கிழி என்று கிழித்தாரே அப்போது நாங்கள் இல்லை என்றால் உங்கள் புருஷன் கதி என்னாவாயிருக்கும் அதையெல்லாம் உங்கள் மகன் யோசிக்கவே இல்லையே இது பிரதமரின் புலம்பல்

அதை விடுங்கள் நரசிம்ம ராவ் என்ற கடுவன் பூனை பிரதமராக இருந்தது போது உங்களையே என்ன மிரட்டு மிரட்டினார் உங்கள் சொந்தகாரர் குத்துரோச்சியை விடாக்கண்டன் போல் மாட்டி விட்டாரே அப்போதெல்லாம் உங்கள் கூட இருந்தது யார் நாங்கள் தானே அந்த வரலாறு உங்கள் பிள்ளைக்கு மறந்து போய்விட்டதா இது சிதம்பரத்தின் அங்கலாய்ப்பு

காந்தி குல்லா போட்டுகிட்டு ஹசாரே உழலை ஒழிப்பேன் என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது ஹசாரேயிக்கு சொந்தமா கட்சியும் கிடையாது புடலங்காயும் கிடையாது தேர்தலுக்கு செலவு செய்ய ஊர்வலம் போய் கோடி பிடிக்க ஆள் அம்பு ரவடிகள் சேர்க்க பணம் தேவையில்லை நம்ம கதை அப்படியா எத்தனை மாநிலத்தில் தேர்தல் செலவை கவனிக்க வேண்டும் எம்.எல்.ஏ, எம்பிக்களை விலைகொடுத்து வாங்க வேண்டும் அதற்கெல்லாம் பணம் எப்படி வரும் நம்ம சம்பளத்தில் தான் அரசியல் நடத்த வேண்டுமென்றால் கட்சி என்னாவது தொண்டர்கள் என்னாவார்கள் அட நம் கதி தான் என்னவாகும் கொஞ்சம் யோசிங்க மேடம் இது பிரதமர்


சுப்ரமணிய சாமி அலைக்கற்றை உழலில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக கோர்டில் குதிக்கிறார் ஊழல் செய்தால் கட்சியை விட்டே தூக்கி விடுவேன் என்கிறார் உங்கள் மகன் சுவாமிக்கும் ராகுலுக்கும் வித்தியாசமே எனக்கு தெரியவில்லை இது சிதம்பரம்

கட்சியை விட்டு தூக்கினால் கூட வேறு எதாவது கட்சியில் சேர்ந்தோ புதிய கட்சி துவங்கியோ பிழைப்பு நடத்தி கொள்வோம் ஆனால் ராகுல் ஊழல் புரிந்தவருக்கு அரசியலில் எதிர்காலமே இல்லாமல் செய்து விடுவதாக மிரட்டுகிறார் வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியல் நடத்துவது எங்களுக்கு பழகி போச்சி இதை விட்டால் வேறு தொழில் எதுவும் தெரியாது ஓட்டலில் பெஞ்சி துடைக்க கூட எங்களை யாரும் சேர்த்தது கொள்ள மாட்டார்கள் இது பிரதமர்

மேடம் நீங்கள் எதுக்கு கூப்பிட்டீர்கள் ஏன் கூப்பிட்டீர்களோ அது தெரியாது காங்கிரஸ் கட்சியை அழித்த பெருமை ராகுல் காந்திக்கு வரவேண்டாம் அவரிடம் சொல்லி வையுங்கள் இப்படி எல்லாம் எங்களை மிரட்டினால் நாங்கள் அனைவரும் வேறு வழி இல்லாமல் செங்கோட்டையின் முன்னால் தூக்கில் தொங்கி விடுவோம் இது சிதம்பரம்

ஊழல்இல்லாமல் அரசியல் நடத்துவது ஒரு அரசியியல் ஆகுமா குருமா இல்லாமல் சப்பாத்தி சாப்பிடலாம் ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது எங்களை எல்லாம் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் உங்களை விட்டால் எங்களுக்கு கதி ஏது இது பிரதமர்

இத்தனை நேரம் அமைதியாக இருந்த சோனியா நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை ராகுல் காந்திக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியாதா என்ன விவரம் இல்லாமல் அவன் பேசவில்லை நம்நாட்டில் இது வரை யாருடைய ஊழலாவது நிருபிக்கபட்டுள்ளதா என்ன அப்படியே நிரூபித்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஏராளமான வழிகள் இருக்கிறது ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதிபடுத்த பட்டவர்களுக்கு மட்டும் தான் நமது கட்சியில் இடம் இல்லை என்று ராகுல் பேச்சுக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் நிரூபிப்பது தண்டனை பெறுவது எல்லாம் நடக்க கூடிய விஷயமா அப்படியே நடந்தாலும் உடனடியாக நடக்குமா? குறைந்த பட்சம் நூறு வருசமாவது ஆகாதா இது புரியாதா உங்களுக்கு நீங்கள் சின்ன பிள்ளைகளா கவலை படாதீர்கள் நான் இருக்கும் வரை உங்களை கைவிட மாட்டேன் என்றார்

சோனியாவின் இந்த பேச்சை கேட்டவுடன் தான் சிதம்பரத்திற்கும் பிரதமருக்கும் போன உயிர் திரும்பி வந்தது பிரதமருக்கு சாப்பிடாமல் விட்டுவந்த பாதி சப்பாத்தி நினைவுக்கு வரவே மேடம் நான் போய் உணவை முடித்து விட்டு கைகழுவி வரலாமா என்று உத்தரவு கேட்டார் சோனியாவும் பெருமையோடு போங்கள் என்று விரல் அசைத்தார்.

http://ujiladevi.blogspot.in/2012/01/blog-post_29.html

Friday, February 24, 2012

கருணாநிதியின் பார்ப்பன எதிர்ப்பு கோஷம்


தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத போதெல்லாம் ஆரிய-திராவிட பகை, பார்ப்பன சதி என்ற பிரசாரங்களில் இறங்கும் தன் வழக்கப்படி வேலூர் கோட்டை மைதானப் பேச்சிலும், சமீப கால அறிக்கைகளிலும் கருணாநிதி அதே உத்தியை மறுபடியும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் விஷ(ம)ப் பேச்சு என்பதில் சந்தேகமே இல்லை.

அவர் ஆரியர்கள் என்று கருதும் பிராமணர்கள் பலரின் உதவியோடும் கூட்டோடும்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று புலம்பியும், தன்னை விட்டுப் போனால் காங்கிரசுக்கு அதிக இழப்பு என்று மிரட்டியும் அவர் கூடவே வைத்துக் கொண்டிருக்க விரும்பும் காங்கிரசின் தலைமை காஷ்மீர் பிராமணர்களின் வாரிசுதான். கருணாநிதி குடும்பத்தின் அத்தனை தொழில்களிலும் பிராமணர்களின் பங்கு கணிசமாக இருக்கிறது. புதிய வருணாசிரமத்தில் உச்சியில் உட்கார்ந்திருக்கும் புதிய பார்ப்பனர் கருணாநிதிதான்.

எனவே அவர் காலாவதியாகிப் போன உத்தியை உதறிவிட்டு நேர்மையாக பிரச்சினையை எதிர்கொள்ள முன்வேண்டும். ‘ராசா தலித் என்பதனால் பாராளுமன்றத்தில் இவ்வளவு எதிர்ப்புக் கூச்சல் இதே டி.டி.கிருஷ்ணமாச்சாரியாக இருந்தபோது அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே அமைதியாகிவிட்டார்கள்’ என்று (சின்னக் குத்தூசி பாணியில் சொல்வதானால்) விஷ(ம)த்தைக் கக்கியிருக்கிறார் கருணாநிதி.

டி.டி.கே விவகாரம் என்ன ? ராசா விவகாரம் என்ன என்று பார்ப்போம். 1957ல் முந்த்ரா என்ற தொழிலதிபரின் பங்குகளை அரசுக்குச் சொந்தமான எல்.ஐ.சி நிறுவனம் வாங்கி நஷ்டமடைந்தது என்பதுதான் புகார். பங்குகளை வாங்க உத்தரவிட்டவர் நிதித்துறை செயலாளர் எச்.எம் பட்டேல். நிதி அமைச்சராக டி.டி.கே.இருந்தார். எல்.ஐ.சி இழந்தது ஒன்றரை கோடி ரூபாய். பதிலுக்கு காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு முந்த்ரா இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.கான்பூரில் முந்த்ராவின் மில்லை மூடினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதை மூடக் கூடாது என்று நிபந்தனை விதித்ததை முந்த்ரா ஏற்றுக் கொண்டார்.

முதலீட்டுக்குழு ஒப்புதல் இல்லாமல் முந்த்ராவின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கிய முறைகேட்டை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல. பிரதமராக இருந்த நேருவின் மருமகனும் இந்திராவின் கணவரும் ஆளுங்கட்சி எம்.பியுமான பெரோஸ் காந்திதான். எதிர்க்கட்சிகள் அவரோடு சேர்ந்துகொண்டன.

நேரு உடனடியாக மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி.சாக்ளாவை விசாரணை கமிஷனாக நியமித்தார். பங்குகளை வாங்க உத்தரவிட்டது நிதிச் செயலாளர்தான் என்றும் அதற்கான தார்மிகப் பொறுப்பு நிதி அமைச்சருடையது என்றும் சாக்ளா முடிவு செய்தார். தான் ‘ லுக் இண்ட்டு திஸ் மேட்டர்’ என்று சொன்னதாக டி.டி.கேவும், அதை பங்குகள் வாங்கச் சொன்னதாகப் புரிந்துகொண்டதாக பட்டேலும் சாட்சியத்தில் சொல்லியிருந்தார்கள். டி.டி.கே ராஜினாமா செய்தபோது நேரு உங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றாலும் நீங்கள் தார்மிக அடிப்படையில் விலகுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன் என்று சொன்னார்.

டிசம்பர் 16, 1957ல் பெரோஸ் காந்தி புகார் எழுப்பினார். ஜனவரி முதல் வாரத்தில் சாக்ளா கமிஷன் பகிரங்க விசாரணையைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 11 நாட்கள் விசாரித்த உடனே சாக்ளா அறிக்கை கொடுத்தார். அமைச்சர் ராஜினாமா செய்தார். எல்லாமே ஒரு மாதத்துக்குள் முடிந்துவிட்டது.முந்த்ரா போலிப்பங்குகளை விற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

கருணாநிதி அவர்களே, அப்புறம் எதற்காகத் தொடர்ந்து அவையில் யாரும் கூச்சல் எழுப்ப வேண்டும் ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. நேரு ஒரே வாரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க நியமித்தது போல மன்மோகன்சிங் ஏதாவது நியமித்தாரா ? கனிமொழி ராசா டேப் பதிவுகள் அம்பலமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. கருணாநிதி அதைப் பற்றி இன்னும் வாயையே திறக்கவில்லை. என்ன செய்வது ? பதிவு செய்த மெஷின் பார்ப்பான் கண்டுபிடித்த மெஷின் என்று சொல்ல முடியாதே.

பிரதமரின் மருமகனே அரசின் முறைகேட்டை வெளிப்படுத்தும் சூழல் நேரு காலத்தில் இருந்தது. ராசாவின் ஊழலை அவர் கட்சியையே சேர்ந்த எந்த தி.மு.க காரனாவது வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா ?கருணாநிதி காலத்தில் யாராவது எந்த ஊழலையாவது வெளிப்படுத்தினால் அவரால் கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் ஆராய்ச்சி மட்டும்தான் நடத்த முடியும்.

முந்த்ராவின் பங்குகளை எல்.ஐ.சியை வாங்கச் செய்து நஷ்டமடைந்தது தவறு என்று மட்டும்தான் சாக்ளா சொன்னார். அதில் யாருக்கும் பணம் கை மாறியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றார். விவான் போஸ் குழுதான் கட்சிக்கு பணம் தரப்பட்டதாக சொன்னது. நேரு தன் உளவுத் துறையை விசாரிக்கச் செய்தார். அமைச்சர், அதிகாரிகள் யாரும் பணம் பெறவில்லை என்று உளவுத் துறை கூறியது.

தவிர முந்த்ரா ஒரு மோசடிப் பேர்வழி என்பது முன்பே நேரு. டி.டி.கே பட்டேல் எல்லாருக்கும் தெரியும். முந்த்ரா பங்கு மார்க்கெட்டில் செய்துவரும் நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகளை டி.டி.கேவும் நேருவும் கோப்புகளில் முன்பே பதிவு செய்திருக்கிறார்கள். முந்த்ரா கம்பெனி திவாலானால் பங்கு மார்க்கெட்டில் சிக்கலும் முந்த்ராவுக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு சிக்கலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் வரும் என்பதால், தற்காலிகத் தீர்வாக முந்த்ரா பங்குகளை எல்.ஐ.சி வாங்குவதென்ற முடிவை நேரு அரசு எடுக்க வேண்டியிருந்தது. அது உண்மையில் பொருளாதார நெருக்கடி பற்றிய ஜட்ஜ்மெண்ட் எரர்தானே தவிர ஊழல் அல்ல.

ராசா செய்தது அப்பட்டமான மோசடி. ஸ்பெக்ட்ரம் விற்பனை விதிகளை, தேதிகளை மாற்றி அமைத்தது, அனுபவமில்லாத கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுத்தது, அவர்கள் அதை விற்று பல கோடி சம்பாதித்தது, நீரா ராடியாவுடன் பேரங்களில் ஈடுபட்டது, பிரதமர் சொன்னதைக் கேட்காதது எல்லாம் ஒரு சாதாரண பாராளுமன்றக் கூட்டுக் குழுவால் கூட விசாரிக்க முடியாமல் கருணாநிதி வகையறாக்களால் வருடக்கணக்கில் தடுக்கப் பட்டு வருகிறது. இதைக் கேள்வி கேட்டால் விஷத்தைக் கக்குகிறார் கருணாநிதி. பக்தவத்சலம் சொன்னது போல விஷக் கிருமிகள் பரவிவிட்டன. அவர் கருணாநிதி வகையறாக்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். தேர்தலின் போது சரியான மருந்து அடிக்கத் தவறினால் நாம்தான் மாண்டு போவோம்.

http://gnani.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

தலையங்கம்: துப்பாக்கியல்ல தீர்வு!

First Published : 25 Feb 2012 02:47:13 AM IST
Last Updated : 25 Feb 2012 03:50:12 AM IST

அன்னையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித வலுவான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாமல், ஐந்து பேரைக் குற்றவாளிகள் என்று காவல்துறையே தீர்மானித்து அவர்களைச் சுட்டும் கொன்றுவிட்டிருப்பதை, கடமையைச் செய்திருக்கிறது காவல்துறை என்று அங்கீகரிக்க முடியவில்லை.

வழக்கமாக எல்லா என்கவுன்டர் மரணங்களிலும் நடப்பதுபோல, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். கதவை உடைத்ததற்கான அடையாளமோ கொலையுண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பெரிய அளவிலான போராட்டம் நடந்ததற்கான அடையாளமோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் அவர்களே அல்ல என்று தேசியக் காட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வேறு காட்டுகின்றன.

வங்கிக் கொள்ளையும், அதில் தொடர்புள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதும் அல்ல பிரச்னை. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை அதற்குப் போதுமான ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல், அவர்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கு உண்டா இல்லையா என்பதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.

குற்றவாளிகள் என்று கருதப்படும் ஐந்து பேரில் ஒருவரையாவது உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி இருந்தால், காவல்துறை தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது, நம்முன் ஓடுகின்ற கேள்வி, அந்த ஐந்து பேரில் ஒருவர் அல்லது இருவர் இந்தக் கொள்ளையில் தொடர்பே இல்லாதவராக இருந்திருந்தால், விவரம் தெரியாமல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரும் கொல்லப்பட்டிருப்பாரே, அது எந்த வகையில் நியாயம் என்பதுதான்.

""சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோதக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இதுபோல சில அதிகார அத்துமீறல்களை அங்கீகரிப்பதால், சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும்'' என்பது காவல்துறையினரின் வாதமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கும் துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்க முடியாது.

தீவிரவாதிகள், தேசத் துரோகிகள், சதித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களிடத்தில் காவல்துறை கையாளும் அணுகுமுறையை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் கையாளக் கூடாது. காவல்துறை என்கவுன்டரைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது தெரிந்தால் இதுவரை கத்தி, கைத்துப்பாக்கி என்று மட்டுமே செயல்பட்டு வரும் குற்றவாளிகள் இனிமேல் ஏகே 47, வெடிகுண்டு என்று தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அப்போது, அவர்களை எதிர்கொள்ளவே முடியாத நிலைக்குப் பழைய ரைபிள்களை வைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை தள்ளப்படுமே, அதை யோசித்துப் பார்த்தார்களா?

காவல்துறை சட்ட-ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக விரோதிகளை ஒடுக்கவும் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது உண்மை. சமூக விரோதிகளில் பெரும்பாலோருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை. முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற காவல்துறையினரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்காக, நீதி பரிபாலனத்தைக் காவல்துறையே எடுத்துக் கொள்வதா என்ன?

குற்றவியல் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமே, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்கூடத் தவறில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதானே தவிர, நூறு நிரபராதிகள் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்காகக் கொலை செய்யப்படலாம் என்று சொல்லவில்லை. சட்டத்தை மக்கள் எப்படிக் கையில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதேபோலக் காவல்துறையும் நீதிபரிபாலனத்தை, இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவர்களுக்குத் தண்டனை பிறப்பிப்பதைத் தனது கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது.

சமூக விரோதிகளை அடக்குவதற்கும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அத்துமீறுவதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைக் காவல்துறை தீர்மானித்துத் தீர்ப்பளிக்க அனுமதித்துவிட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அந்தத் துறை செயல்பட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்கவோ, விமர்சனம் செய்யவோ, உரிமையே இல்லாத ஒரு சூழலுக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை நகர்த்திவிடக் கூடும்.

முதல்வரின் பிறந்த நாள் பரிசாகக் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, ஐந்து பேரை விசாரணையே இல்லாமல் சுட்டுத் தள்ளி சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததாகக் கூறிக்கொள்ளும் சென்னை மாநகரக் காவல்துறை ஆட்சிக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

குற்றவாளிகள் என்று கருதுவோரை காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவது அல்ல, பெருகிவரும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வு. காக்கிகளின் கையில் லத்தி இருப்பதையே மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறும்போது, காவல்துறையினர் துப்பாக்கித் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

Wednesday, February 22, 2012

ஆதிவாசிகளுடன் இத்தாலிய பாதிரிகள்

நினைவுகளின் சுவட்டில்- கலுங்கா


காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கும் மேலாக நிறையபேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள் எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள் என்றார் ஜார்ஜ்.

சரி வாங்க, காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில்தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன ஸ்டேஷன்தான். அதிகம் கிராமத்து ஏழை ஜனங்களின் நடமாட்டம்தான். ஸ்டேஷனில் உள்ள பொது இடங்களில், உள்ளே இருக்கும் கழிவறை, ப்ளாட்பாரத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாய் எதானாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பெரிய ஸ்டேஷன்களில்தான் அநாவசிய கெடுபிடி, அதிகாரத்தைக் காட்டும் பெருமைக்காகவே அதிகாரம் செலுத்துவார்கள். சாதாரணமாகவே ஒடியா மக்கள் சாது. கிராமத்து ஜனங்கள் படிப்பில்லதவர்கள். அதிலும் ஹிராகுட், கலுங்கா போன்ற ஆதிகுடிகள் வசிக்கும் இடங்களில் அவர்கள் சிநேகமாகவே இருப்பார்கள். சாது மக்களைப் பார்த்து நமக்கும் அதிகாரத் தோரணை மேலிட்டால் ஒழிய வம்பில்லை

எனக்கு இப்போது நினைவிலிருப்பது ஜார்ஜ் வழிகாட்ட சர்சுக்குப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் ஒரு பெரிய கன்னிமாடம் (nunnery) அதிலிருந்து நிறைய ஆதிவாசிப் பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த இடம் முழுதுமே சர்ச்சுக்குச் சொந்தமானதாக அதன் பராமரிப்பில் இருப்பதான தோற்றம் தந்தது. ஜார்ஜிடம் கேட்டதற்கு இந்த ஏரியாவிலேயே அது ஒரு பெரிய சர்ச் என்றும் இதாலிய கத்தோலிக்கப் (Roman Catholic) பாதிரிமார்களால் நடத்தப்படுவது என்றும் சொன்னார். அவருக்கு இதுதான் முதல் தடவை. ஆனால் இங்கு வரும்முன் அவருக்கு இந்த இடத்தைப் பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் அவரும் இந்த இடம் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முனைந்திருக்கிறார். சர்ச்சை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.

எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது- சர்ச்சில் பிரார்த்தனை நடக்கிறது. நானும் தேவசகாயம், ஜியார்ஜ், பஞ்சாட்சரம், மணி வேலு இத்யாதி எல்லோரும் சர்ச்சில். என்னவோ லத்தீன் மொழியில் நடக்கிறது. நாங்கள் மண்டியிட்டு கைகள் கூப்பி இருக்கிறோம். மற்றவர்கள் அவ்வப்போது என்னவோ ஆமென்–னோ என்னவோ சொல்கிறார்கள். நான் சும்மா மண்டியிட்டு கைகூப்பி இருந்தாலும், பாதிரியாரும் மற்றவர்களும் பார்க்க நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்று இருக்க வேண்டாமா? அந்த சர்ச்சில் அன்றைய பிரார்த்தனையில் சுமார் 150-லிருந்து 200 பேருக்குள்ளாக இருந்திருப்பார்கள். என் கண்களுக்கு வேறென்ன வேலை? சுற்றி மேய்வதுதானே? அதுவும் பாதிரியாரின் கண்கள் என்பக்கம் இல்லாதபோது. ஆனாலும் இந்தப் புதிய காட்சிகளின், சடங்குகள், கூட்டம் இவற்றின் புதுமையும் சுவாரஸ்யமும் வெகுநேரம் நீடிக்கவில்லை. மண்டியிட்டே பழக்கமில்லை. ஸ்கூலில் கூட பெஞ்ச் மேல் ஏறி நிற்கச் சொல்வார்கள். அது அதிகம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீளாது. இல்லையெனில் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்வார்கள். ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்தத் தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை. யாருக்குமே நேர்ந்ததில்லை. நான் ஒண்ணாங்கிளாசிலோ என்னவோ சேர்ந்தபோது ஒரு பையனுக்கு காலில் கட்டையொன்றைச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள். அவன் அதை இழுக்கமுடியாது இழுத்துக்கொண்டு நடப்பான், பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ஆனால் அது ஒரே ஒரு முறைதான். அந்த மாதிரி தண்டனை பின்னர் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது என்று நினைக்கிறேன். பள்ளி நாள்களில் இப்படி தண்டனை அனுபவிக்காத நான் இப்போது ஒரு சர்ச்சில் நடக்கும் ஈஸ்டர் பிரார்த்தனையில் மற்றவர்களோடு விரும்பிக் கலந்துகொண்டது ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு அனுபவிப்பது போலத்தான் தவித்தேன். சின்ன வயதில் ஒரு வேளை அரை மணி நேரம் மண்டியிடுவது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் காலை ஒன்பது ஒன்பதரை மணிக்கு சர்ச்சுக்குள் நுழைந்த நாங்கள் அதிக நேரம் உள்ளே நின்றிருக்கவில்லை. மண்டியிடும் நேரம் வெகு சீக்கிரம் வந்து விட்டதென்றே நினைக்கிறேன். அரை மணிக்கு மேல் தாங்கவில்லை. கால் கடுக்க ஆரம்பித்தது. பின் அது வேதனையாக மாறி சர்ச்சின் சடங்குகளில், பிரார்த்தனையில் மனம் கொள்ளாது முழங்கால் வலியிலேயே மனம் துன்பப்பட்டுக்கொண்டிருந்தது. எப்போடா இந்த பிரார்த்தனை முடியும், இந்த இடத்தை விட்டு வெளியே போவோம் என்றே எண்ணித் தவித்துக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அப்படி அவசரப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இனி ஜியார்ஜ் என்ன, யார் அழைத்தாலும் ஈஸ்டர் ப்ரேயர்ஸ்க்கு கட்டாயம் மறுத்து விடுவது, போனால் போகிறது நண்பர்களாயிற்றே என்று புது வருஷ பிரார்த்தனைக்கு வேண்டுமானால் ஷாமியானா எழுப்பி சம்பல்பூரில் நடந்தது போல நடக்குமானால் நண்பர்களுக்காக அதில் கலந்து கொள்ளலாம். தூக்கம் வந்தால் வெட்ட வெளியில் தூங்கவும் செய்யலாம் என்று மனம் சலித்துகொண்டிருந்தது.

அன்றைய என் வேதனை சொல்லி மாளாது. மற்ற நண்பர்களும் இப்படிக் கஷ்டப்பட்டார்களா, இல்லை மனதுக்குள் அடக்கிக் கொண்டுள்ளார்களா தெரியவில்லை. இப்படி நேரிடும்மென்று ஜியார்ஜோ இல்லை தேவசகாயமோ சொல்லியிருக்கலாம். ஒரு வேளை அவர்கள் சர்ச்சுகளில் இப்படி இருக்காதோ என்னவோ. ஒரு வழியாக இந்த அவஸ்தை 12.30 மணிக்கோ 1 மணிக்கோ நின்றது. வெளியில் வந்ததும் நான் என் வேதனையைச் சொன்னேன். அவர்கள் பாதி பச்சாதாபப்படுவதும் பாதி சிரிப்பதுமாகத்தான் இருந்தார்கள். பின்னர் பச்சாதாபம் நின்று சிரிப்பது மட்டுமே தொடர்ந்தது. சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பாதிரியாரைப் போய்ப் பார்க்கலாம் என்று ஜியார்ஜ் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதிக்க, நானும் அவர்களுடன் சென்றேன். மரியாதை நிமித்தம்தான். நாம் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம் நாம் எல்லோருமே கிறித்துவர்கள் இல்லை என்றும் அவருக்குச் சொன்னால் அவர் சந்தோஷப்படுவார் என்றார் ஜியார்ஜ். அப்படித்தான் நடந்தது. ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர் எங்களையெல்லாம் விசாரித்து, வந்தது பற்றித் தம் சந்தோஷத்தைத் தெரிவித்ததோடு கர்த்தர் எங்களை எந்த வித்தியாசமும் பாராட்டாது ரக்ஷிப்பார் என்று ஒரு ஆசீர்வாதமும் தர, பெற்று நாங்கள் வெளியே வந்தோம். ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது. பாதிரியார் ஒடியா இல்லை. இந்தியரும் இல்லை. இத்தாலியர். அவருடன் இருந்த மற்றவர்களும் இத்தாலியரே.

அங்குமிங்கும் ஓடி வேலை செய்தவர்கள்தான் ஒடியாக்கள். ஆதிவாசிகள். எங்களுடன் அவர் பேசியது ஆங்கிலத்தில். அவர்களுக்கு உதவிய சர்ச்சின் வேலையாட்களுடன் அவர் பேசியது ஆதி வாசிகளின் பாஷையில். ஒடியா கூட இல்லை. ஒடியாவில் எனக்கு ஒரு சில வார்த்தைகளுக்குமேல் தெரியாதென்றாலும், பேசுவது ஒடியாவென்றால் அது தெரிந்திருக்கும்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜியார்ஜ், தேவசகாயும் இன்னும் மற்றவர்களிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

“அவங்களுக்கு அத்தனை அக்கறை இருக்கு. கத்துக்கறாங்க. மதப் பிரசாரத்தோட அதுவும்தான்.. அவங்க பாஷையிலே பேசலைன்ன எப்படிப் பிரசாரம் செய்யறது?” என்று ஜியார்ஜ் சொன்னார்.

”நாம இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நமக்கு ஒடியா தெரியுமா? அவ்வளவுதான் நம்ம அக்கறை” என்று பஞ்சாட்சரமோ மணியோ சொன்னார்கள்.

“சாமிநாதனுக்கு நாலஞ்சு வார்த்தை தெரியும்” என்றார் தேவசகாயம்.

“அது தானா வந்ததுய்யா, நானா கத்துக்கிடலை” என்றேன்.

அன்று சாயந்திரம்வரை எங்கே போனோம், எங்கே சாப்பிட்டோம் எப்படிப் பொழுதுகழிந்தது என்பதெல்லாம் ஒன்றும் நினைவில் இல்லை. நினைவில் பளிச்சென்று மறையாமல் இருப்பது அன்று மாலை ஒரு திறந்த வெளியில் நாங்கள் தரையில் உட்கார்ந்திருக்க அங்கு கூடிய கூட்டம். மணி ஆறுக்கு மேல் இருக்கும். சூரியனின் தகிப்பு குறைந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும். அத் திறந்த வெளியில் நாலா பக்கங்களிலிருந்தும் நீண்ட கம்புகளோடு (இன்னம் வேறு ஏதும் ஆயுதம் இருந்ததா என்பது நினைவில் இல்லை. என் மனத்தில் பதிந்திருப்பது) கம்புகளோடு நிறைந்து வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான ஆதிவாசிகளின் கூட்டம். முந்தின தினம் இரவு ஸ்டேஷனில் இம்மாதிரி ஒரு பத்துப் பதினைந்து பேரைப் பார்த்து அடைந்த பயம் இப்போது இல்லை. ஆச்சரியத்துடன் பார்த்து இருக்கும் அதிசயமாக இருந்தது அது. சுமார் ஆயிரம் ஆயிரத்து ஐந்நூறு பேர் இருக்கலாம் அந்தக் கூட்டத்தில்.

கூட்டத்தின் நடுவில் ஒரு வட்டமான வெற்றிடம். மேடை ஏதும் இல்லை. இரவு சூழும் நேரத்தில் இத்தாலியப் பாதிரிமார்களும் அவர்களைச் சுற்றிய மற்றோரும் வந்தார்கள். சுற்றிக் குழுமியிருக்கும் கம்பும் கழியுமாக தூக்கிக் கச்சமாகக் கட்டிய அழுக்கு வேட்டிக் கூட்டத்தினிடையில் நீண்ட வெள்ளையும் சிகப்புமான அங்கியும் தரித்து இருக்கும் வெள்ளைப் பாதிரிமார்.

இதுவும் ஈஸ்டர் சடங்குகளில் ஒன்றோ என்னவோ. சர்ச்சுக்கு சர்ச்சு மாறுமோ என்னவோ. அவர்களிலும்தான் 10–12 வகைகள் இருக்கின்றனவே; நம்மில் இருக்கும் ஜாதிகள் போல. பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம் மாதிரியா அய்யர் வீட்டுக் கல்யாணமோ, நாயக்கர் வீட்டுக் கல்யாணமோ இருக்கும்?

நடந்தது எல்லாம் இலத்தீன் மொழியில். எனக்கோ ஜியார்ஜுக்குமோ இல்லை தேவசகயாத்துக்குமோ என்ன புரியும்?

ஹிந்தியில் இல்லை. ஒடியாவில் இல்லை. அந்த ஆதிவாசிகள் மொழியிலும் இல்லை. இலத்தீன் மொழியில். என்னமோ இரண்டு மணி நேரம் நடந்தது. எங்களுக்கு ஏதோ நாடகம் பார்ப்பது போல் இருந்தது. யாரும் மண்டியிடவில்லை. நானும் மண்டியிட வேண்டாம். அது ஒரு பெரிய ஆசுவாசம். அப்பாடா என்று இருந்தது. கூட்டத்தோடு நின்று கொண்டோ அல்லது முடிந்தால் பார்க்க சௌகரியம் இருதால் கூட்டத்துக்கு வெளியே நின்று கொண்டோ பார்த்தோம். அந்த ஆதிவாசிகள் கூட்டத்துக்கு என்ன புரிந்ததோ என்ன கிடைத்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கூட்டம் அனைத்தும் மிக சிரத்தையோடு ஆர்வத்தோடும் அதில் கலந்து கொண்டனர். அவ்வப்போது ”ஆமென்” சொன்னார்கள். நாம் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியை இட்டுக்கொண்டு எரியும் சூடத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டால் போதும் என்று இருக்கு இல்லியா அது போலத்தான்.

வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லை. இன்னமும் அது பற்றி யோசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் விஷயம்.. நாங்கள் கலுங்கா போனது 1952 அல்லது 1953-ல் ஒரு மார்ச் மாதம். கலுங்கா ஒரு காட்டுப் பிரதேசம். எங்கும் மின்சார இணைப்புகூடக் கிடையாது. ரயில் நிலையத்திலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் உள்ளே இருப்பவைதான் அந்த சர்ச்சும் கன்னிமாடமும் இன்னும் மற்ற அந்த சர்ச் சம்பந்தப்பட்ட கட்டடங்களும். சுற்றி உள்ள காட்டுப் பிரதேசத்தில் இந்த ஆதிவாசி கிராமங்கள். ஐம்பது வருஷங்களுக்கு முன்னோ, அல்லது அதற்கும் முன்னோ, அதாவது 20-ஆம் நூற்றாண்டுக்கு ஆரம்பத்தில் அல்லது சற்றுமுன் அவர்கள் இத்தாலியிலிருந்து போப்பின் கட்டளையின் பேரில், தங்கள் மதத்தைப் பரப்ப இங்கு வந்திருக்கிறார்கள். இந்தக் காட்டில். ரோமிலிருந்து இந்தக் காட்டுக்கு. இங்கு வந்து இந்த ஆதிவாசிகளுடன் பழகி, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுக்கு படிப்போ மருத்துவ உதவிகளோ ஏதோ செய்து அவர்களையும் கத்தோலிக்கர்களாக்கி… அதுவே எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்திருக்கும்! அந்த ஆதிவாசிகளுக்கு ஆதிகாலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும்.. வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? 1950-களின் ஆரம்ப வருடங்களில், ஒரிஸ்ஸாவின் ஒரு ஒதுங்கிய காட்டுப் பிரதேசத்தில். அப்போது அவர்கள் வந்து தங்களை அவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் ஸ்தாபித்துக்கொள்ள ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அந்த இத்தாலியப் பாதிரிமார்களுக்கு இது ஒரு வேலையா? சேவையா? அல்லது அர்ப்பண உணர்வா?

அதே சமயம் இப்போது கிட்டத்தட்ட மூன்று மாத காலமாகக் கூடங்குளத்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் நினைவுக்கு வராமல் இருப்பது சாத்தியமில்லை. இது என்ன வகையைச் சார்ந்தது? அரசியலா, பின்னிருக்கும் வர்த்தகப் பேராசை, மதப் போர்வை போர்த்துக் கொண்டுள்ளதா? இந்த பாதிரிமார்களுக்குப் பின்னிருப்பது மக்களா, இல்லை சர்ச்சா? சர்ச்சானால் அதன் பின்னிருப்பது எது?

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்தானா அங்கு கலுங்காவில் பார்த்ததும்?

vesa-150x1501வெங்கட் சாமிநாதன்

http://www.tamilhindu.com/2012/02/ninaivugalin-suvattil-kalunga/#comment-46836

Tuesday, February 21, 2012

Questioning the myth of Missionary charity

"Even if Missionaries are converting people by wrong means, how does it matter. Will a hungry person care for food or religion? Why do Hindus cry foul at Missionaries when they are helping the people. So what if they ask the ppl to convert to Christianity in return?"

This is the most common argument you hear in any discussion about the activities of Christian Missionaries. I have already discussed the national and moral implication of conversions earlier. In this topic I will try to focus on myth of Missionary Charity.

As they say, one fact talks louder than thousand opinions. So I will try to give more of facts, figures and media references. Let the facts speak for themselves.

The problem in dealing this question is that the bias against Hindu society is soo institutionalized in this regard that hardly anyone even realizes it. So our original question can be divided into three parts:

1. State control of Hindu money
2. Direct/Indirect state support to Missionaries
3. Media bias towards Christian missionaries and against Hindu charities.

1. I don’t know about the law in all of the states, but I can talk about Andhra, Karnataka and Tamil Nadu. Here the state govt controls all the temples in that state and all the money is directly handled by the respective state govts. In states like AP there is also a separate ministry called endowments ministry for the same.

And the revenue from these temples is not a small amount by any means. Tirupathi temples gets an annual revenue of 20 crores by just selling the hair offered by devotees. (yea it is the same temple which Amitabh Bacchan visited recently and gave 8 crores ). The total annual income just from the tirupathi temple itself runs into hundreds of crores. If this does not awe you, here are some more statistics:

"annual revenue from offerings alone, as TTD chairman T Subbirami Reddy says, is expected to cross Rs 800 crore this year... On an average, the temple gets 10 kg of gold (almost all in the form of ornaments) in its hundials. At the current market price of Rs 578 per gram for 22 carat gold , it amounts to Rs 57.8 lakhs per day. And it has another eight tonnes of gold ornaments studded with stones, lying in bank lockers, the value of which has not really been estimated." (link)

The state govt diverts most of the money to other governmental activities. Just to give an idea of how HUGE is the money involved is in these things, let me produce the rough translation of a recent news article in a telugu newspaper:

The Govt of Andhra Pradesh has decided to sell 7000 acres of land belonging to various temples in AP. The govt expects an income of 20 thousand crores <:o> by selling these lands. The govt has also not ruled out that the money generated from this may be in future diverted to other projects. (news link for those who can read telugu)

If you are thinking this is too much... wait. This is just the first stage. The total property is much large.

Now I really don’t have much problem with state controlling these properties. After all, it’s the same for me whether Hindu money is used for some god or for the needy in my country.

But lets not forget one things… it is HINDU MONEY. Atleast give the due credit to the hindus. Forget about other temples, if we just use the money from tirupathi temple and give money for buying souls, we can easily have double the numbers what Missionaries are having now.

Which makes me feel that Hindus are just being penalized for being good and not using their money for doing soul business but rather allowing the use of its money for developmental activities. And this is soo institutionalized that the nehruvian socialists come to Hindus and give them lectures about Missionaries giving the needy some money, even if it is a business.

2. The state in the name of minority institutions directly/indirectly helps the Missionaries.

India’s constitution has certain provisions whereby minorities are exempt from certain requirements in running their own institutions. (ref this article). Thus if a minority guy wants to set up a minority institution, say a school, the rules are much relaxed for him. While a Hindu school does not have any freedom in the subjects and constitution of the school, a Minority institution has the freedom to include some religious subjects. They also in many cases get funding from Minority commission of India. As the following analysis on the state of Educational institutions in Kerala reveals:

The education scenario is one of the major sectors where the organised strength of the minorities in Kerala (where Christians and Muslims constitute around 19% and 25% respectively) is used in a covert manner. In this sector the majority (Hindu) community as well as the government altogether controls only 11.11 per cent, on the other hand the church controls 55.55 per cent and Muslim religious organisations 33.33 percent of the total institutions. At present the professional education sector of Kerala is somewhat under the full control of the minorities. About 12,000 engineering seats and 300 medicine seats are in the minority institutions and they are fully controlling the admissions. At present 60 per cent of the seats of the paramedical courses are controlled by the organised minority religious leadership. (link)

The same trend is seen in other sectors as well. Sometimes govt does not directly spend some money on a developmental activity, but instead does so through some NGOs. Last year AP govt under the able leadership of CM, YSR Reddy (who BTW is a Christian convert) decided to use some of the money from tirupathi for providing medical services. And he selects Madras Medical Mission for doing that!!! .... the money belongs to Hindus, the state gives it to Missionaries to use it for conversions!!!

There are lot of such instances. See for example the following pioneer article:

It has, for instance, been claimed that, in 1997, the Karnataka Government received a revenue of Rs 52.35 crore from 2,64,000 temples. Of this, Rs 17.33 crore was returned to the temples for maintenance; Rs 9.25 crore allocated for madarsa development and Rs 3 crore for church development. The balance Rs 22.77 crore was diverted towards Government programmes. The situation was much the same in 1998.

However, in 1999, it is alleged, the State collected Rs 65.35 crore in revenue; gave Rs 15 crore for temple maintenance; and diverted Rs 27 crore to madarsa development and Haj subsidy and Rs 8 crore for church development. No details were available about the use of the balance Rs 17.35 crore.


In 2000, the temples generated a revenue of Rs 69.96 crore, but received only Rs 13.75 crore for maintenance. The madarsa-Haj subsidy rose to Rs 35 crore. In 2001, temple revenue further rose to Rs 71.60 crore, while maintenance grants shrank to Rs 11.50 crore, and madarsa development funds rose to Rs 45 crore. Church development received Rs 10 crore. In 2002, the State received Rs 72 crore as revenue, returned Rs 10 crore for temple maintenance, and granted Rs 50 crore for madarsas and Rs 10 crore for churches.
(link)

Money belongs to Hindus and the credit goes to Missionaries for their noble act of soul business!!!

3. Why is that the moment one talks about charity, only some Christian nun helping some poor guy come into the ppls mind? There are LOT many Hindus who dedicated their whole life to serving others. But how many even know their names… what makes their service inferior to that done by Mother Theresa? They too dedicated their complete lives for serving others.

There are many Hindu organizations like Sri Ramakrishna Math, Art of living, Seva Bharati, Aurobindo Ashram, RSS, Swadhyay Parivar, Sarada Math, Shri Swaminarayan Sanstha, Mata Amritanandamayi Math, Vanavasi Kalyan Ashram, Ramachandra Mission, Gayatri Parivar, Chinmaya Mission, Divine Life Society……..involved in various kinds of service activities. Anyhow they just limit themselves to service, and not to soul-Business.

But again, their positive aspects of condition-less service and silent work without any we-did-this propaganda are made their weakness and commies tell Hindus how the Missionaries are better coz they are doing business in the name of religion!!!

I can only conclude that this whole crap of Missionaries at least helping a poor guy, and Hindus doing nothing, but only crying foul about Missionaries is baseless. Thanks to the "Nehruvian Socialism" and Missionaries, the whole thing is so institutionalized that most Hindus themselves don’t realize it and remain silent when such crap arguments of "people convert out of hunger" are offered. Its true that people convert due to hunger, but Missionaries are not doing any act of charity. They are just taking the Hindu money, and giving it to ppl fashioning it to be their own... ie., Hindus are converted by Missionaries by using the Hindu money.

Monday, February 20, 2012

ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்


முந்தைய பகுதிகள்:

தொடர்ச்சி …

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன், ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மை என் சிந்தனை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹிந்துத்வம் என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? நான் ஹிந்துத்வத்தை எதிர்க்கிறேன் (என்று நினைக்கிறேன்). இது என்னவோ எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் ஒருவராலும் வரையறுக்க முடியாத விஷயம் போலிருக்கிறது”- சில வாரங்கள் முன்பு ஒரு கூகிள் குழும விவாதத்தில் ஒரு நண்பர் இப்படிக் கேட்டிருந்தார்.

சென்ற பகுதியில் இந்தக் கேள்வியுடன் நிறுத்தியிருந்தோம். அங்கிருந்து தொடங்குவோம்.

ஹிந்துத்துவம் என்பதற்கு ஒரு சமகாலத்திய பாடப்புத்தக வரையறை தரவேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம் -

ஹிந்துப் பண்பாட்டில் வேர்கொண்ட கலாசார-தேசியவாத, சமூக, அரசியல் சித்தாந்தம்.

இந்த வரையறையில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதற்கு முன்பு ஹிந்து என்ற சொல்லிற்கு நான் அளித்திருந்த பொது வரையறையும் இங்கு நினைவூட்டுகிறேன் -

ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture), தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது.

இரண்டையும் இணைத்து, ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள உறவும், அவற்றின் தனித்தன்மைகளும் புலப்படும்.

ஹிந்துத்துவம் என்ற சொல்லை உருவாக்கியவர் வீர சாவர்க்கர். அந்தமான் கடுஞ்சிறையில் வாடிய பொழுதும் தேசத்தையும் தர்மத்தையும் பற்றிய சிந்தனைகள் கனலாக அவரது உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்தன. 1921ம் ஆண்டு அவரது விடுதலைக்குப் பின் ஹிந்துத்துவம் என்ற பெயரில் அவை நூல் வடிவில் வெளிவந்தன. இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் அஸ்திவாரத்தின் மீது கட்டப் பட்ட, புத்துயிரும் புது மலர்ச்சியும் கொண்ட நவீன இந்து தேசியத்திற்குக் கட்டியம் கூறியது இந்த நூல். இந்த நூலின் முகப்பில் காணப்படும் சுலோகத்தையும் சாவர்க்கரே இயற்றினார் -

ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா |
பித்ருபூ: புண்யபூஸ் சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத: ||

சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள்.

ஹிந்துத்துவம் என்பதை பண்பாடும் தேசியமும் இரண்டறக் கலந்த ஒரு கருத்தாக்கமாகவே சாவர்க்கர் முன்வைக்கிறார். தனது வாதங்களுக்கு உரம் சேர்க்க ரிக்வேதம் தொடங்கி, அர்த்த சாஸ்திரம், புராணங்கள், மத்திய கால இந்து, இஸ்லாமிய ஆவணங்கள் என்று பல வரலாற்றுச் சான்றுகளையும் இந்த நூலில் அளித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும் (idea of nation-state), இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பகுப்பாய்வு செய்கிறார்கள். இதைப் பிடித்துக் கொண்டு இன்னும் ஒரு சாரார் ஹிந்துத்துவத்தின் வேர் இந்திய சிந்தனையில் இல்லை, ஐரோப்பிய சிந்தனையில் தான் உள்ளது, எனவே அது ஆசாரக் குறைவு என்று தீர்ப்பு வழங்கத் துடிக்கிறார்கள்.

நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் எல்லா தேசபக்த சிந்தனையாளர்களும், புரட்சியாளர்களும் மாஜினி, கரிபால்டி, பிஸ்மார்க் போன்ற நவீன ஐரோப்பிய தேசிய நாயகர்களை ஆதர்ச வீரர்களாகக் கருதினார்கள். அது இயல்பானதே. அர்ஜுனனும், ராமனும், கண்ணனும், சிவாஜியும், குரு கோவிந்தரும் போன்ற புராண, சரித்திர வீரர்கள் மட்டுமல்ல, தங்கள் நாட்டுக்காகப் போராடி வென்ற சுதந்திர வீரர்களின் சமகால உதாரணங்களும் அவர்களுக்குத் தேவைப் பட்டன. ஆங்கிலக் கல்வி மூலம் கற்ற சரித்திரம் ஐரோப்பிய தேசியவாத சிந்தனைகளையும் அவர்கள் மனங்களில் விதைத்தது. மகாகவி பாரதி கூட மாஜினியின் பிரதிக்கினை குறித்தும், பெல்ஜியத்தை வாழ்த்தியும் கவிதை எழுதியிருக்கிறார். எனவே இதற்கு சாவர்க்கர் மட்டும் விதிவிலக்கல்ல.

சாவர்க்கர் மாஜினியை ஆதர்ச தியாக வீரராகக் கருதினார் என்பது உண்மை தான். ஆனால் ஐரோப்பிய தேசியவாதத்தின் பக்க விளைவுகளான இனவெறி, அதிகாரப் பரவல், ராணுவ ஆக்கிரமிப்பு, சர்வாதிகாரம் ஆகிய குறுக்கல்வாத அணுகுமுறைகளை அவர் முற்றகவே நிராகரித்தார். இன்றைக்கு ஊடகங்களிலும், கல்விப் புலங்களிலும் இந்துத்துவத்தைக் கட்டுடைப்பதாகக் கூறி இந்துத்துவத்தை இந்த எதிர்மறை சித்தாந்தங்களுடன் தொடர்பு படுத்திப் பேசும் கருத்தாக்கங்கள் உள்நோக்கம் கொண்ட திரிபுவாதங்கள் அன்றி வேறில்லை (பார்க்க: பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்).

தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர் சாவர்க்கர். அவரது குடும்பமே இந்திய தேச விடுதலை வேள்வியில் தன்னை முழுமையாக ஆகுதியாக அர்ப்பணித்த பெருமைக்குரியது. ஹிந்துப் பண்பாட்டை பெரிதும் மதித்த சாவர்கள் மத ரீதியாக ஒரு நாத்திகர். தனது மரணத்திற்குப் பிறகு வைதீக சடங்கு எதுவும் செய்யப் படக்கூடாது என்று உயில் எழுதியவர். தலித்துகளின் உரிமைப் போரை மிகப் பெருமளவில் முன்னெடுத்து ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று அம்பேத்கரால் பாராட்டப் பட்டவர்.

உலகம் இனவாதப் பேயின் குரூர கிருத்யங்களுக்கு சாட்சியாக நின்ற 1920களிலும் 30களிலும் எழுதப் பட்ட சாவர்க்கரின் கீழ்க்கண்ட வரிகளே அவரது மானுட சமத்துவப் பார்வையின் விசாலத்திற்குச் சான்று பகரும் -

“சொல்லப் போனால், உலகெங்கும் ஒரே இனம் தான், மனித இனம். ஒரே மனித ரத்தம் தான் அதை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறது. மற்ற எல்லா வாதங்களும் காரிய வாதமாகச் சொல்லப் படுபவையே. தற்காலிகமாகவோ அல்லது சார்பு நிலை கொண்டோ கூறப்படுபவையே. ஒரு இனத்திற்கும் வேறோர் இனத்திற்கும் இடையில் செயற்கையாக நீங்கள் எழுப்பும் தடைகளை எல்லாம் இயற்கை இடையறாது தகர்த்தெறிந்து கொண்டே தான் இருக்கிறது. ரத்தக் கலப்பை விதிமுறைகள் போட்டுத் தடுப்பது என்பது மணல் மேல் கோட்டை கட்டுவது போல. பாலியல் ஈர்ப்பு என்பது எல்லா இறைத்தூதர்களும் போடும் கட்டளைகளை விடவும் வலிமை வாய்ந்தது என்பது தொடர்ந்து நிரூபிக்கப் பட்டு வந்திருக்கிறது.. ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும். வட துருவம் முதல் தென் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒருமையே சத்தியமானது. மற்றவை அனைத்தும் சார்பு நிலை கொண்டவைகளே.”

- ஹிந்துத்துவம், இரண்டாம் அத்தியாயம்.

ஹிந்துத்துவத்தை ஒரு உறுதியான சித்தாந்த கட்டுமானமாக சாவர்க்கர் முன்வைத்தார்; ஆனால் அதற்கான விதை நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் போதே ஆழமாக ஊன்றப் பட்டு விட்டிருந்தது. சாவர்க்கருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் குறிப்பிடத்தக்கவர்கள் – சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர். இந்த மகான்களின் பெயரை வேண்டுமென்றே நான் உள்ளிழுக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஹிந்துத்துவத்தை சித்தாந்த ரீதியாக எதிர்மறையாக விமர்சித்து பேராசியர் ஜ்யோதிர்மய சர்மா எழுதிய Hindutva என்ற நூலில் (2004) இந்த நால்வரின் கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் எடுத்து விரிவாக அலசுகிறார். இன்றைய ஹிந்துத்துவ அரசியல் கொள்கைகளின் மைய கருத்தாக்கங்கள் அனைத்திற்கும் மூலம் இந்த நால்வரின் சிந்தனைகளில் தான் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழகத்தில் மகாகவி பாரதி, வ.வே.சு ஐயர்,சுப்பிரமணிய சிவா போன்றோர் இதே சிந்தனைகளை எதிரொலித்தவர்கள். காந்தி, தாகூர், திலகர், அம்பேத்கர், மதன் மோஹன் மாளவியா, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல் ஆகியோரது அரசியல்,சமூக கொள்கைகளிலும் பல ஹிந்துத்துவ கூறுகளை நாம் காணமுடியும்.

1920களில் வீர சாவர்க்கர் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியின் தலைவராகி தனது சிந்தனைகளுக்கு அரசியல் ரீதியாக செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினார். தமிழகத்தில் பல இடங்களில் அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். ஹிந்து மகா சபையை முழுமையாக ஆதரித்தவர்களில் வ.வே.சு ஐயர், சேலம் விஜயராகவாச்சாரியார், தலித் தலைவர் எம்.சி.ராஜா, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் அடங்குவர். ஹிந்துத்துவத்தின் மையக் கருத்துக்கள் தேசபக்தி, தெய்வ பக்தி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுடன் முற்றிலும் இயைந்திருந்தது என்று இந்தப் பெரியோர்கள் கருதியதே அவர்கள் ஹிந்து மகா சபைக்கு ஆதரவளித்ததற்குக் காரணம்.

1925ல் டாக்டர் ஹெக்டேவார் தொடங்கிய ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம், ஹிந்துத்துவத்தை செயல்முறை அளவில் பாரத நாடெங்கும் எடுத்துச் சென்ற மாபெரும் இயக்கமாகும். சங்கத்தின் இரண்டாவது தலைவராகிய குருஜி கோல்வல்கர் அந்த அமைப்பின் இயங்கு தளங்களை மிகப் பரந்த அளவில் விரிவு படுத்தி சங்க பரிவாரம் எனப்படும் சகோதர அமைப்புகளை உருவாக்கினார். மாணவர் அமைப்பு, தொழிற் சங்கம், துறவியர் பேரவை, பக்தர் பேரவை என்று பல்வேறு வகைப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் நீண்டகால அளவில் இந்த அமைப்புகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்து வருகின்றன. கல்வி, மருத்துவம், சமூக சேவை, வனவாசிகள் மேம்பாடு, இயற்கைப் பேரிடர் நிவாரணம் என்று பல தளங்களிலும் தன்னலமின்றிப் பணியாற்றும் ஏராளமான காரிய கர்த்தர்களை சங்கபரிவார அமைப்புகள் மிகப் பெரிய அளவில் உருவாக்கியுள்ளன.

சியாமா பிரசாத் முகர்ஜி

1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி நிறுவிய பாரதீய ஜன சங்கம், சுதந்திர இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக சூழலில் ஹிந்துத்துவ கோட்பாடுகளை மையப் படுத்தி உருவான அரசியல் கட்சி ஆகும். சிறந்த சமூக சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாயாவின் வழிகாட்டுதலில் அந்தக் கட்சி வளர்ந்து பின்னர் 1980களில் பாரதீய ஜனதா கட்சியாக வடிவம் கொண்டது. தீனதயாள் உபாத்யாயா 1960களில் உருவாக்கிய ஒருங்கிணைந்த மானுடவாதம் (Integral Humanism) என்ற சித்தாந்தத்தையே பா.ஜ.க அதிகாரபூர்வமாக இன்றும் தனது அரசியல் கொள்கையாக ஏற்றுள்ளது. சில காந்திய சமூக, பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச அளவில் பொதுவான மானுட அறம் சார்ந்த மதிப்பீடுகளை வலியுறுத்திய Humanism கருத்தாக்கங்களையும் ஹிந்துத்துவ கோட்பாட்டுடன் இணைக்கும் முயற்சியே தீனதயாள் உபாத்யாய உருவாக்கிய சித்தாந்தம் ஆகும். தொடக்கத்திலிருந்தே நேருவிய சமூக, பொருளாதாரக் கொள்கைகளை ஹிந்துத்துவ அரசியல் தரப்பு கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகளின் இந்து விரோதப் போக்கு, போலி மதச்சார்பின்மை, சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் ஆகிய கொள்கைகளையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

ஒரு பறவைப் பார்வையில் ஹிந்துத்துவ கண்ணோட்டம் என்பதை சுருக்கமாக இவ்வாறு பட்டியலிடலாம்.

>>> கலாசார தேசியவாதம்: இந்தியாவின் சமூக, பிரதேச, மொழி சார்ந்த பன்முகத் தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியாவை ஒரே தேசமாகப் பிணைக்கும் கலாசார பண்பாட்டுச் சரடு உள்ளது. அதை வலுப்படுத்துவதே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் இயல்பாகவே எல்லாவிதங்களிலும் இந்தச் சரடில் பொருந்துபவை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அன்னியமானவை. வழிபாட்டு ரீதியாக அன்னிய மதங்களைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக இந்தியாவையே தாய்நாடாகக் கொண்ட இந்திய கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்ற வேண்டும். அதனை மறுதலிக்கவோ, அதற்கு எதிராகச் செயல்படவோ கூடாது.

>>> காலனியத் தாக்க நீக்கம் (Decolonization): பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும், மெகாலே கல்வி முறையின் மூலமாகவும் பீடிக்கப் பட்டுள்ள இந்தியாவின் சிந்தனை அந்தத் தளைகளை அறுத்து இந்தியாவின் சுயமான தேசியப் பண்பாட்டு வேர்களைக் கணடடைய வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமல்ல, இந்தியாவின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பும், இஸ்லாமிய ஆட்சியும் கூட இந்தியப் பண்பாட்டை உருக்குலைத்து, சீரழித்த காலனிய ஆக்கிரமிப்பு தான். அந்த ஆக்கிரமிப்பின் தாக்கங்களிலிருந்தும் வெளிவர வேண்டும்.

>>> இந்துப் பெருமிதம்: இந்து ம்தமும், பண்பாடும் உலகின் வேறெந்த மதத்தையும் பண்பாட்டையும் போலவே பெருமையும், உயர்வும் மிக்கது. காலனியம் விளைவித்த தாழ்வுணர்ச்சிகளாலேயே அந்தப் பெருமைகளை உணராதிருந்தோம். அந்தத் தாழ்வுணர்ச்சியைக் கைவிட்டு இந்து ஆன்மிகம், அறிவியல், கலைகள், வரலாறு ஆகியவற்றை பெருமித உணர்வுடன் பறைசாற்ற வேண்டும்.

>>> இந்து சமூக ஒற்றுமை: பல உன்னதங்களைக் கொண்டிருந்த போதும், இந்து சமுதாயம் தொடர்ந்து அடிமைப் பட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்கு சமூக ஒற்றுமையின்மையே முக்கிய காரணம். இந்து சமுதாயத்தின் சமுதாயப் பிரிவுகள் தம்மளவில் சக்தியும், அதிகாரமும் பெற்றால் மட்டும் போதாது. அது ஒட்டுமொத்த இந்து சமுதாய சக்தியாகவும், அரசியல் அதிகாரமாகவும் பரிணமிக்க வேண்டும்.

>>> சமுதாய சமத்துவம்: உலகின் மற்ற சமுதாயங்கள் போலவே இந்து சமுதாயத்திலும் சுரண்டலுக்கு ஆட்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களைக் கைதூக்கி விடுதலும், சம உரிமைகளை அளித்தலும் அனைத்து இந்துக்களின் தார்மீகக் கடமை. அது இந்து ஒற்றுமையை மேன்மேலும் வளர்க்கும் செயல்பாடும் ஆகும். இந்து சமுதாயத்தின் எல்லா பிரிவினருக்கும் உரிய அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் அளிக்கப் படவேண்டும்.

>>> இந்து உரிமைகள்: சுதந்திர இந்தியாவின் நேருவிய போலி மதச்சார்பின்மைக் கொள்கைகள் இந்திய அரசு அமைப்பின் ஒரு பகுதியாகவே மாறி, தொடர்ச்சியாக இந்துக்களின் உரிமை இழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்துக்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு துரத்தப்படுவது, ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்றங்கள், சிறுபான்மையினர் என்ற பெயரில் பிற மதத்தினருக்கு கல்வி போன்ற துறைகளில் வழங்கப் படும் சலுகைகள் என்று பல உதாரணங்களைக் கூறலாம். ஜனநாயக ரீதியாக இந்த பிரசினைகளை வலியுறுத்திப் போராட வேண்டும். இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளிலும் இந்துக்கள் உரிமை இழப்புகளுக்கும், கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆளாகின்றனர். உலகளவில் இந்த பிரசினைகள் கவனப் படுத்தப் பட்டு தீர்வு காணப் பட வேண்டும்.

இது ஒரு பொதுவான கோட்டுச் சித்திரம். மற்றபடி ஹிந்துத்துவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தரப்புகளுக்கு உள்ளாக பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்கள் உள்ளன. பல்வேறு இயக்கங்களும், இயக்கங்கள் எதையும் சாராத தன்னிச்சையான சிந்தனையாளர்களும் உள்ளனர்.

உதாரணமாக, பிற மதங்கள் பற்றிய விமர்சனப் பார்வை. சங்க பரிவார் இதனை தேசியத்துடன் தொடர்புடைய பிரசினையாக மட்டுமே பார்க்கிறது. மதமாற்றத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வரை கிறிஸ்தவ மதத்தைப் பற்றி நமக்குக் கவலையில்லை, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள அவசியமும் இல்லை என்பதே இந்த நிலைப்பாடு. கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து விமர்சிப்பதோ, பைபிளில் உள்ள முரண்களை வெளிக் கொணர்வதோ, கிறிஸ்தவ வரலாற்றின் இருண்ட பக்கங்களை எடுத்துக் காட்டுவதோ, கிறிஸ்தவ மதக் கொள்கைகள் குறைபாடுள்ளவை என்று நிறுவுவதோ எதுவும் இதில் கிடையாது. பொதுவாக இவற்றை செய்பவர்கள் சங்க பரிவாரத்துடன் தொடர்பில்லாத தனிப்பட்ட சிந்தனையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாம் ஹிந்துத்துவம் என்றே ஒருகுடைக் கீழ் கொண்டு வரப்படுகிறது. அது போக, இந்த விஷயங்களைப் பற்றி நடுநிலையுடன் யாராவது பேசினால் கூட, உடனடியாக அவர்களை ஹிந்துத்துவர்கள் என்று முத்திரை குத்துதலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ரீதியில் ஆயுர்வேத மருத்துவத்தின் மேன்மை பற்றிய சொற்பொழிவுகளையும், ஏழாம் அறிவு திரைப்படத்தையும் கூட ஹிந்துத்துவம் என்று சொல்லலாம் (“ஏழாம் அறிவில்” கடைசியில் வரும் நீண்ட வசனத்தில் மதமாற்றம் பற்றியும் ஒரு சிறுகுறிப்பு வருகிறது). பழைய இந்தியக் கல்விமுறை பற்றி உருவாக்கப் பட்டிருந்த பொது அபிப்பிராயங்களைத் தகர்த்து, அதன் உண்மையான சிறப்பம்சங்களை எடுத்துரைத்த காந்திய அறிஞர் தரம்பால் அவர்களின் புத்தகங்களையே கூட ஹிந்துத்துவ பிரசாரம் என்று சொல்லி விடலாம்.

உண்மையில், இந்து விரோதிகள் அதைத் தான் செய்கிறார்கள். சாதாரண மக்களிடம் பொதுவாக எழும் நியாயமான, இயல்பான ஹிந்து உணர்வைக் கூட ஹிந்துத்துவ அரசியல் இயக்கங்களின் நிலைப்பாடுகளோடும், சில உதிரிக் குழுக்கள் (பஜ்ரங் தள், ராம் சேனா) செய்யும் அடாவடிகளோடும் மீண்டும் மீண்டும் சம்பந்தப் படுத்திப் பேசுவதன் மூலம், அந்த இயல்பான ஹிந்து உணர்வு கூட வரவிடாமல் செய்ய முயல்கிறார்கள்.

சமீபத்தில் சென்னை நண்பர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம். அவர் சார்ந்திருக்கும் ஆன்மீக அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் நகரில் பல இடங்களில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று பஜனைகள் நடத்துவது, பக்தி புத்தகங்களை வினியோகிப்பது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர். வழக்கமாக நகர் மையத்திலிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் போகவேண்டுமா , ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களுக்கும் செல்லலாமே என்று அந்தக் குழுவில் உள்ளவர் ஒருவர் யோசனை கூற, அதன்படி தலித் மக்கள் வாழும் பேட்டைகளிலும் குப்பங்களிலும் உள்ள அம்மன் கோயில், முனீஸ்வரன் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். அப்படி ஒரு முறை அம்மன் கோயில் ஒன்றில் அவர்கள் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பத்துப் பதினைந்து பேர் அங்கு வந்து கூச்சல் போட ஆரம்பித்தார்கள். அங்கு கூடியிருந்த மக்களிடம் “இவர்கள் தான் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்றார்கள்; கலவரம் செய்தார்கள். ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவ கன்யாஸ்திரீகளை தாக்கினார்கள்” என்று முஷ்டியை உயர்த்தி சுட்டிக் காட்டினார்கள். “பார்ப்பனீய சக்திகளே வெளியேறுங்கள்!” என்று கோஷம் வேறு. பஜனைக் கார இளைஞர்களும், யுவதிகளும் வெலவெலத்துப் போய்விட்டனர். அவர்களுக்கு தலை கால் எதுவும் புரியவில்லை. அங்கிருந்த பொதுமக்களில் சிலர் கூச்சல் போட்டவர்களை விலக்கி விட்டு, இளைஞர் குழுவினரையும் அமைதிப் படுத்தினார்களாம். கூச்சல் போட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்று பின்னர் தெரிய வந்ததாக நண்பர் கூறினார்.

இந்த உண்மை சம்பவத்தின் மூலம் புலப்படுவது என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

ஏன் ஹிந்துத்துவ தரப்பு கூறும் பல விஷயங்கள் எதிர்வினைத் தன்மை கொண்டவையாக (reactionary) உள்ளன என்று பொதுவாகக் கேட்கப் படுகிறது. ஏனென்றால் ஹிந்துத்துவம் சமகால யதார்த்தத்தை தயங்காமல் துணிவுடன் எதிர்கொள்ளும் ஒரு சித்தாந்தம். அதைப் பார்த்து கண்மூடிக் கொண்டு போகும் சித்தாந்தமல்ல. ஹிந்துத்துவம் பேசும் நியாயமான பிரசினைகளைக் கூட புறந்தள்ளும், மறைத்து மூடும் அல்லது விவாதிக்கத் தயங்கும் போக்கு துரதிர்ஷ்டவசமாக நமது சூழலில் உருவாகி விட்டது. எனவே யாராவது அதைச் சொல்லும்போது தீவிரமான எதிர்மறைக் கருத்து போலத் தோற்றமளிக்கிறது. “கடந்த காலத்தின் பெருமிதங்களையும், நிகழ்காலத்தின் வலிகளையும், எதிர்காலத்தின் கனவுகளையும் சுமக்கும் இளைஞர்களே ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வார்கள்” என்ற ஸ்ரீஅரவிந்தரின் வார்த்தைகளை இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹிந்துத்துவம் அடிப்படையில் இந்திய தேசியத்துடன் தொடர்புடையது; அரசியல் ரீதியானது. எனவே வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்கும் அதற்கும் தொடர்பு என்ன என்று கேட்கலாம். அது நியாயமான கேள்வியே. அதனால் தான் தொடக்கத்தில் நான் அளித்த “ஹிந்து” என்பதற்கான வரையறையில் தேசியம் பற்றிய குறிப்பு இல்லை. “ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம்” என்று தன்னை தேசிய இயக்கமாகவே இந்தியாவில் அழைத்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். உலகின் பல நாடுகளில் உள்ள அதன் கிளை அமைப்புகள் “ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்” என்றே தங்களை அழைத்துக் கொள்கின்ற்ன. ஆனால் இந்தியாவில் வாழும் ஹிந்துக்களின் அரசியல், சமூக பிரசினைகள் ஒருவிதத்தில் உலகெங்கும் வாழும் ஹிந்துக்களின் வாழ்க்கையில் கட்டாயம் தாக்கம் செலுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. அவர்கள் மிக சமீபகாலத்தில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஹிந்துக்களானாலும் சரி. பாகிஸ்தான், பங்களாதேஷ், பாலித் தீவுகள், மலேசியா அல்லது இலங்கையில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் இந்துக்களானாலும் சரி. தாங்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் பிரசினைகளை கையாள்வதற்கான சில வழிமுறைகளையாவது ஹிந்துத்துவ கருத்தியலில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மேலும் உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான். அவ்வகையிலும் இந்தியாவின் ஹிந்துத்துவ அரசியல் உலக அளவில் முக்கியமானது.

ஆரம்பத்தில் நண்பர் எழுப்பிய கேள்விக்கு வருவோம். ஹிந்துத்துவம் குறித்த அவரது தயக்கம் பெரும்பாலும் அது சார்ந்து உருவாக்கப் பட்டிருக்கும் எதிர்மறையான பிம்பங்கள் சார்ந்ததே என்று எண்ணத் தோன்றுகிறது. ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று அடிக்கோடிட்டு வெளிவந்த அரவிந்தன் நீலகண்டனின் நம்பக் கூடாத கடவுள் புத்தகத்தைப் படித்த பெண் ஒருத்தி “இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று என்னிடம் அடித்துக் கூறினாள். முந்தா நாள் வரை தன்னை ஹிந்துத்துவ எதிர்ப்பாளர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவள் அவள்.

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன்.. என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று நண்பர் சொல்கிறார். ஆனால் 1960களிலோ அல்லது 80களிலோ இப்படிச் சொல்வதற்கே அவர் பயங்கரமாகத் தயங்கியிருப்பார்.

1960களில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை பற்றி ஆய்வு செய்த ராஜ் கிருஷ்ணா என்ற பேராசிரியர், அப்போது மந்தகதியில், 2-3% விகிதத்தில் ஊர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தைக் குறிக்க “ஹிந்து வளர்ச்சி விகிதம்” (Hindu Rate of growth) என்ற சொல்லாடலை அறிமுகப் படுத்தினார். இந்தச் சொல்லாடல் இன்றும் நமது பாடப்புத்தகங்களில் பொருளாதாரத் தேக்க நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. உண்மையில் அந்தத் தேக்க நிலைக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அந்த நிலைக்கு முழுக் காரணமும் நேருவின் சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளே. “நேருவிய வளர்ச்சி விகிதம்” என்பது தான் அதற்கு மிகப் பொருத்தமான பெயராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேருவியம் உருவாக்கிய இந்து-இழிவு நோக்கு மனப்பான்மையின் காரணமாக, வேண்டுமென்றே இந்து என்ற முத்திரை பயன்படுத்தப் பட்டது. இதை அருண் ஷோரி தனது நூல் ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவ அரசியல் தான் ஆட்சி நடத்துகிறது. எனவே 12% பொருளாதார வளர்ச்சிப் பாய்ச்சலுக்கு “ஹிந்துத்துவ வளர்ச்சி விகிதம்” என்று நியாயமாகவே பெயர் சூட்டலாம் தானே? ஒருவேளை அப்போது தயக்கங்கள் அகலுமோ என்னவோ?

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற சூத்திரம் நினைவு வருகிறது. கூடவே ஆலிஸின் உரையாடலும்.

“The question is”, said Alice, “whether you *can* make words mean so many different things”.

“The question is”, said Humtpy Dumpty, “which is to be the master – that’s all”.

(முற்றும்)

http://www.tamilhindu.com/2011/12/hindutva-an-outlook/

ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

-

தொடர்ச்சி…

இன்றைக்கும் தங்கள் ஹிந்து அடையாளத்தின் மீது பலவகையான ஹிந்துக்களுக்கும் ஒருவித சுய விலகலும் ஒவ்வாமையும் சங்கடமும் இருப்பதைக் காண முடியும். ஒரு கிறிஸ்தவரால், இஸ்லாமியரால் தன்னை இயல்பாக தன் மதத்தின் பெயருடன் பொதுத் தளங்களில் அடையாளப் படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, ஹிந்து என்ற தங்கள் அடையாளத்தை மிகுந்த தயக்கத்துடனேயே இந்துக்கள் முன்வைக்க வேண்டியுள்ளது. இன்றும் இந்து மனதில் நீடித்து வரும் பிரிட்டிஷ் காலனிய கருதுகோள்களும், அதைத் தொடர்ந்து வந்த நேருவிய, போலி மதச்சார்பின்மைக் கொள்கைகள் செலுத்திய தாக்கமும் தான் இந்த நிலையை உருவாக்கியுள்ளன.

பிரிட்டிஷ் காலனியம் இந்தியாவில் வேரூன்றிக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்த ஆங்கில ஆவணங்கள் எல்லாவற்றிலும் Hindoo என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. இந்தச் சொல் அதன் பயன்பாட்டிலேயே ஒரு கீழான நாகரிகத்தை, மக்களை, சமுதாயத்தைக் குறித்தது (ஏறக்குறைய nigger என்ற சொல்லைப் போல). கிறிஸ்துவ மிஷநரிகள் இந்தியாவையும் இந்து மதத்தையும் குறித்து உருவாக்கியிருந்த வக்கிரமான மனப்பிம்பங்களே உலகெங்கிலும் அப்போது அறியப் பட்டிருந்தன. இது 1860கள் வரை நீடித்தது.

1857ம் வருடத்திய முதல் சுதந்திரப் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசாட்சியின் போது தான் திறந்த மனத்துடன் இந்துப் பண்பாட்டை அறியும் முயற்சிகளை வில்லியம் ஜோன்ஸ் போன்ற சில மேற்கத்திய அறிஞர்கள் மேற்கொண்டார்கள். சம்ஸ்கிருத மொழி மீதும் இந்து நூல்கள் மீதும் பெரும் ஆர்வம் மேற்குலகில் ஏற்பட்டது. இந்தத் திருப்பத்தின் போது Hindoo என்ற சொல் மிக வேகமாக வழக்கொழிந்து, அதற்குப் பதிலாக Hindu என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தச் சொல் இழிசொல்லாக அல்ல, மாறாக இந்துப் பண்பாட்டை மேற்குலகம் புரிந்து கொள்ள உதவும் ஒரு திறவுகோலாக, வாயிலாகவே அமைந்தது.

இன்றைய இணையத் தொழில்நுட்பம் இத்தகைய சொல்லாராய்ச்சிகளை மிகவும் எளிமையாக்கியிருக்கிறது. Google Ngram என்ற கூகிள் மென்பொருளின் உதவியால் 1790 முதல் 2010 வரை பதிப்பிக்கப் பட்ட ஆங்கில நூல்களில் Hindoo, Hindu ஆகிய சொற்களின் பயன்பாடு எப்படி மாறிவருகிறது என்பது குறித்த கீழே உள்ள வரைபடத்தை ஒரு நொடியில் பெற முடிகிறது!

(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

(இந்த வரைபடம் கூகிளின் புத்தகக் களஞ்சியமான Google Booksக்கு உள்ளே உள்ள புத்தகங்களை மட்டுமே கணக்கில் கொண்டு அவை பதிப்பிக்கப் பட்ட வருடங்களின் அடிப்படையில் தேடிப் பெறப்பட்டது. உலகின் அனைத்து நூலகங்களையும் அலசித் தேடினாலும் இந்த வரைபடம் குறிப்பிடும் பொதுப் போக்கில் மாற்றமிருக்காது)

வரைபடத்தைக் கவனித்தால் சில முக்கியமான விஷயங்கள் புலப்படும். 1840களில் இந்துமதத்தைக் குறிக்கும் இரண்டு சொற்களுமே ஆங்கில நூல்களில் குறைவதற்குக் காரணம், பிரிட்டிஷார் இந்தியாவின் மீதான தங்களது அதிகாரம் உறுதியாகி விட்டது என்று கருதியது தான். ஆனால் 1857 போர் அந்த எண்ணத்தைத் தகர்த்து விட்டதால், அதன் பின்வந்த காலகட்டங்களில் ஆங்கில நூல்களில் மேலும் மேலும் அதிகமாக இந்து மதம் பற்றி எழுதப் படுவது தெரியவருகிறது. 1860 தொடங்கி 1960 வரை ஏறத்தாழ நூறாண்டுகள் இது நீடிக்கிறது. மேற்குலகம் இந்துமதத்தைத் தீவிரமாக கவனித்து, கண்காணித்து புரிந்து கொள்ள முயன்ற காலகட்டம் இது. 1960ல் தொடங்கி குறிப்பாக 1980களில் இந்து என்ற சொல்லின் பயன்பாடு பெரிதும் குறைய ஆரம்பிக்கிறது. இவ்வாறு குறைவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம் – இந்து என்ற சொல்லின் பரவலான பொருள் குறுகிக் கொண்டே வந்தது, இந்து குருமார்கள் மீது பல உள்நோக்கம் கொண்ட அவதூறுகள் சுமத்தப் பட்டது, இந்துமதம் பற்றிய ஆய்வுகள் கல்விப்புலங்களில் உலக அளவில் குறைவது, இந்து ஞானத்தின் ஒரு சில அம்சங்களை ரீபேக்கேஜ் செய்யும் புதுயுக ஆன்மிக குருமார்கள் தங்கள் சொல்லாடல்களில் Hindu என்ற சொல்லை கவனமாகத் தவிர்ப்பது இத்யாதி இத்யாதி.

(வரைபடத்தையும் அது குறித்த புரிதல்களையும் அளித்த Manasatarangini வலைப்பதிவிற்கு நன்றி).

இன்றைய சூழலில் ஹிந்து அடையாளத்தை மறுதலிக்கும் இரண்டு கருதுகோள்களை பொதுவாகக் காணமுடிகிறது. ஒன்று ஹிந்து அடையாளமின்மை வாதம் (Negation of Hindu identity), மற்றது ஹிந்துத் தாக்க நீக்கம் (De-hinduization). இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

ஹிந்து என்ற பொது அடையாளம் ஒன்று வரலாற்று ரீதியாக இல்லவே இல்லை. இந்து மதத்தின், சமுதாயத்தின் உறுப்புகளாக உள்ள ஒவ்வொன்றும் தனிப்பட்டவை. இவற்றை “ஒற்றை பொது அடையாளத்துக்குள்” கொண்டு வருவது கருத்தியல் வன்முறை என்பது முதலாவது வாதம்.

ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையான அம்சங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றின் ஹிந்து இயல்பை மறுதலித்து, அவற்றை தனித்தனியாக முன்னிறுத்துவது இரண்டாவது வாதம். அதோடு விட்டுவிடாமல், இந்து சமுதாயத்தில் உள்ள எல்லா சீர்கேடுகளையும் மூட்டை கட்டி அதற்குத் தவறாமல் “இந்து” என்ற லேபிளை ஒட்டுவதும் இந்த வாதத்தின் இன்னொரு பரிமாணம். உதாரணமாக, யோகம் இந்து அறிவியலேயே அல்ல. அது உருவாகும்போதே மதத் தீட்டு எதுவும் இல்லாமல் சுத்திகரிக்கப் பட்டு “பொது” சொத்தாகவே பிறந்தது என்று இத்தரப்பினர் ஒரு கருதுகோளை முன்வைப்பார்கள். பதஞ்சலியின் யோக சூத்திரமும், பகவத்கீதையும் இல்லாமல் ஏது யோகம்? அவை இந்து நூல்கள் இல்லாமல் கிறிஸ்தவ நூல்களா என்ன? என்று எதிர்க்கேள்வி வந்தால், உடனே பதஞ்சலியும் இந்து அல்ல, பகவத்கீதையும் இந்து அல்ல என்று தங்களது அடுத்த கருதுகோளை எடுத்து வைப்பார்கள். இன்னொரு சாரார், பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல, தமிழர் திருநாள் என்று ஒரு ஜல்லியை எடுத்து விட்டு, பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவம் லாகவமாகத் திருட வழிவகுப்பார்கள். இந்த வாதத்தின் படி பரதமும், கதகளியும், ஆயுர்வேதமும், பாரம்பரிய சிற்பக் கலையும், யோகமும், காந்தியமும் எல்லாம் ”இந்து” கிடையாது, அவை எல்லாம் வேறு ஏதோ ஒரு ஜந்து! ஆனால் இந்தியாவின் ஏழ்மை, சாதியம், சில பெண்ணடிமை செயல்பாடுகள், சில மூட நம்பிக்கைகள் எல்லாம் சந்தேகமே இல்லாமல் ”இந்து” தான்.

மேற்சொன்ன ஹிந்து அடையாள மறுப்பு வாதங்களை வைப்பவர்கள் உலகின் மற்ற பூதாகாரமான “ஒற்றை பொது அடையாளங்கள்” எவற்றையும் இது போன்று கேள்விக்கு உட்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றின் ஆக்கிரமிப்புகளையும், நேரடி வன்முறையையும் நியாயப் படுத்துபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண் நகை.

******

சைவம், வைணவம், சாக்தம் ஆகியவை சமயப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். சாதிகள், குலங்கள் ஆகியவை சமூகப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். தமிழர், தெலுங்கர், வங்காளி, மலையாளி போன்றவை மொழி/பிரதேசம் சார்ந்த அடையாளங்கள். இவை அனைத்தும் ஹிந்து என்ற பொது அடையாளத்திற்கு எந்த வகையிலும் விரோதமானவை அல்ல, மாறாக அதன் உள் அடங்கியவை. ஹிந்து அடையாளம் என்பது இவற்றை அழித்து உருவானதல்ல, தொகுத்து உருவானது. இந்தியர், இலங்கையர், அமெரிக்கர், ஆஸ்திரேலியர் போன்ற தேசிய அடையாளங்களும் ஹிந்து அடையாளத்திற்கு முரணானவை அல்ல, சார்பு நிலை கொண்டவை.

மேலும் இவை ஒவ்வொன்றுமே தங்களுக்குள் இவற்றை விட குறுகிய அடையாளங்களைத் தொகுத்து உள் அடக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அலைகடலெனத் திரண்டு வருமாறு அறைகூவி புஜபலம் காட்டும் யாதவர், வேளாளர், நாடார், வன்னியர் போன்ற எல்லா சாதி அடையாளங்களும் இவ்வாறு உருவானவையே. பல உபசாதிகள் ஒன்று கூடி ஒரு பொது சாதி அடையாளத்துடன் முன் நிற்பது இந்திய, தமிழக சமூக வரலாற்றில் நெடுகக் காணக் கிடைப்பது, இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது. இதே போலத் தான் சமயப் பிரிவுகள் தங்களுக்குள் திரண்டு அதைவிடப் பெரிய சமயப் பிரிவுக்குள் இணைகின்றன. காணாபத்யமும், கௌமாரமும் தத்துவ ரீதியாக சைவத்துள் அடங்கும். சைதன்யரின் கௌடிய மரபும், மாத்வரின் துவைதமும், ராமானுஜ சித்தாந்தமும் எல்லாம் வைணவத்துக்குள் அடங்கும். அதே விதிகளின் படி சைவமும், வைணவமும் இந்துமதத்துள் அடங்கும்.

உலகெங்கும் சமய,சமூக,கலாசாரப் பொது அடையாளங்கள் இவ்வாறு தான் அடுக்கு முறையில் உருவாகித் திரள்கின்றன.

இந்த சமூக இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல், ஹிந்து என்ற அடையாளம் அடித்தளமற்றது என்று கூறி, அந்த பொது அடையாளத்தைத் துறந்து உட்பிரிவு அடையாளங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்கு ஒப்பான செயல். இந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல் அது. இதைத் தான் இந்திய தேசிய விரோதிகளும், மார்க்சிஸ்டுகளும், இந்தியாவை “கட்டுடைக்கும்” மேற்கத்திய அறிவுஜீவிகளும் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரத்தில் மதிமயங்கும் ஹிந்துக்கள் தங்களுக்கும் தங்கள் சந்ததியினருக்கும் பெரும் தீமையையே கொண்டு வருகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முதலாவது நைஜீரியா. நைஜீரியப் படுகொலைகள் குறித்து ஜெயமோகன் எழுதுகிறார் -

”நைஜீரியாவில் இருந்த தொன்மையான மதத்தையும் பண்பாட்டையும் எப்படி விவரிக்கலாம்? வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது. அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள்.

அங்கே பலதெய்வக் கோட்பாடு வலுவாக திகழ்ந்தது. அவற்றில் பல இனக்குழுக்கள் உயர்ந்த நாகரீகத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவே தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தெய்வம் இன்னொரு இனக்குழுவுக்குச் செல்ல முடியும். இருபது நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் நிகழ்ந்தது அதுவே.

இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது..”

இஸ்லாமிய ஆதிக்கத்திற்குப் பின்பு, கிறிஸ்தவ மிஷனரிகளும் காலனியாதிக்காவும் நைஜீரியாவைச் சூறையாட, இன்றைக்கு அமைதிக்கான எல்லாக் கதவுகளும் அடைபட்டு ரத்தவிளாறாகி நிற்கிறது அந்த தேசம். அது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை என்றும் ஜெயமோகன் வார்த்தைகளிலேயே கேட்போம் -

”.. இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான். ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.

அவ்வாறு இந்து,பௌத்த,சமண மதங்கள் செய்தது பெரும் வரலாற்றுப்பிழை என்று இப்போது மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகள் உருவாக்குகிறார்கள். கருத்தரங்குகள் நிகழ்த்துகிறார்கள். இந்தியப்பண்பாட்டின் வேர்களை அழித்துவிட்டார்களாம். சொல்லாமல் இருப்பார்களா என்ன?”

அடுத்த உதாரணம் இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவு. இந்தத் தீவில் வாழும் பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரை விவரிக்கிறது. இந்தப் பழங்குடியினர் இயற்கை வழிபாட்டையும், குறிசொல்லுதல் போன்ற சடங்குகளையும் கைக் கொண்டவர்கள். இவர்களுக்கு இந்து புராணங்களையோ, சிவன், விஷ்ணு,சக்தி போன்ற தெய்வங்களையோ பற்றி எதுவும் தெரியாது. இவர்கள் எப்படி இந்துக்களாவார்கள்? இந்தோனேசிய அரசு இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், இந்துமதம் ஆகிய பெருமதங்களையே அங்கீகரிக்கிறது; உதிரியான பழங்குடி நம்பிக்கைகளுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடையாது; இவர்கள் ஏதாவது ஒரு பெருமதத்துடன் தங்களை இணைத்துக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயம். எனவே தங்களை இந்துமதப் பிரிவாக அழைத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் தங்கள் சுதந்திரத்தையும் கலாசாரத்தையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் இழக்கவில்லை என்பதே. மற்ற ஆபிரகாமிய மதங்களுக்கு மாறுவது பொருளாதார ரீதியாக அவர்கள் முழுவதும் சுரண்டப் படுவதற்கே வழிவகுத்திருக்கும். தங்கள் மரபையும் தனித்துவத்தையும் முற்றாகவே இழந்து ஒரு தீராத ரணத்தையும், நிரந்தர வடுவையும் சுமக்கும் நிலைக்கு அவர்கள் ஆட்பட்டிருப்பார்கள்.

கிறிஸ்தவ மிஷநரிகள் எங்கள் சமுதாயத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்து அதை அடிமைப் படுத்தத் துடித்தார்கள். அப்போது இந்தோனேசியாவின் மற்ற இந்துக்கள் தான் எங்களுக்கு ஆதர்சமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள் என்று இந்த பழங்குடி சமுதாயத்தின் குலகுரு கூறுகிறார். சந்தர்ப்பவாதம் தங்களை ஹிந்துக்களாகியது என்பதை மறுக்கிறார் அவர். “பல நூற்றாண்டுகளாக நாங்கள் இந்துக்களாகத் தான் இருந்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக, 20-30 ஆண்டுகளாகத் தான் அதை அறிந்து கொண்டோம்” என்கிறார். Dayak என்ற அந்தப் பழங்குடியினர் பின்பற்றும் சமயம் 4ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்தோனேசியாவிற்கு வந்த இந்து மதத்தின் ஆதார நம்பிக்கைகளில் இருந்து தான் உருவானது என்று வரலாற்று ஆதாரங்களையும் அவர் அளிக்கிறார்.

மொத்தத்தில் ஹிந்துமதமே தங்கள் சமூக, ஆன்மிக விடுதலைக்கும், உரிமைகளுக்கும் அரணாக நின்று காக்க வல்லது என்பதில் அந்தப் பழங்குடியினர் சமூகம் மிக உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவின் மற்றொரு பகுதியான பாலித் தீவின் இந்துக்கள் ராமாயணம், மகாபாரதம், கோயில்கள்,பூஜைகள்,விரதங்கள் ஆகிய கூறுகள் கொண்ட புராண இந்துமதத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இந்த இரண்டு தீவுகளிலும் வாழும் இந்துக்களுடையே இணக்கமான கலாசாரப் பரிவர்த்தனைகளும் நடந்து வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இன்னும் சில வருடங்களில் Kaharingan பிரிவினர் தங்கள் மரபிலிருந்தே சிவலிங்க வழிபாட்டுக்குள் வரக் கூடும். தங்களுக்கான ராமாயணத்தைக் கண்டடைந்து அதை நாடகமாக நடிக்கவும் கூடும்!

மற்றொரு உதாரணம் ஐரோப்பிய யூனியன். இரண்டாம் உலகப் போரில் தங்களை ஜன்ம விரோதிகளாகக் கருதி ரத்தக் களறியில் ஈடுபட்ட தேசங்கள், இன்று ”ஐரோப்பிய யூனியன்” என்ற பெயரில் அரசியல், பொருளாதார, வர்த்தக லாபங்களைக் கருதி ஒன்றிணைந்து நிற்கின்றன. இன்றைய உலகில் இந்த அடையாளம் ஒரு மாபெரும் வலிமையையும் பாதுகாப்பையும் அந்த தேசங்களுக்கு அளிக்கிறது. ஐரோப்பிய யூனியனின் உருவாக்கத்திற்கு என்ன “வரலாற்று நியாயம்” உள்ளது என்று எந்த மேதாவியும் வாயைத் திறப்பதில்லை. ஆனால் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப் படும் “இன மோதல்களின்” அடிப்படையில் தான் இந்தியாவும், இந்து மதமும் என்றென்றும் இயங்க வேண்டும் என்று இவர்கள் உபதேசம் செய்கிறார்கள். இது என்ன நியாயமோ?

இந்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோம்? உலகளாவிய சூழலில் நம்மை பகாசுர சக்திகள் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு ஈடாக அவற்றை விழுங்காவிட்டாலும், சமமாக நின்று போரிடும் அளவுக்கு வலிமையுள்ள பீமசேனனாக ஆவது தான் நாம் வாழும் வழியே தவிர, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அவற்றிற்குத் தீனியாக ஆகிக் கொண்டிருப்பதல்ல.

ஹவாய் தீவுகள் முதல் நியூசிலாந்து தீவுகள் வரை உலகின் 92 நாடுகளில் இந்துக்கள் வசிக்கிறார்கள். உலக அளவில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 100 கோடி (1 பில்லியன்). எண்ணிக்கை அளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. இந்த மாபெரும் உலகளாவிய அடையாளம் அளிக்கும் வலிமையும்,பெருமிதமும் சாமானியமானதா என்ன? தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு இந்து, ஏதோ கிறுக்கர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தனது இந்து அடையாளத்தை மறுதலிப்பது என்பது உலகளவில் தனக்கான இடத்தை ஒரு மாபெரும் வட்டத்திலிருந்து ஒரு சிறு புள்ளிக்கு நகர்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அத்தகைய புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி.

அதனால் தான் ”திருப்பெருந்துறையுறை சிவபெருமானே” என்று பாட ஆரம்பித்த மாணிக்கவாசகர் அங்கேயே நின்றுவிடவில்லை. “தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை” என்றும், “தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக் கூவாய்” என்றும், “தென்னாடுடைய சிவனே போற்றி” என்றும், ”கயிலை மலையானே போற்றி” என்றும் பாடி, இறுதியில் “என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று முடிக்கிறார். ”சேர வாரும் செகத்தீரே” என்று தான் திருச்சிக்காரர் தாயுமானவர் அறைகூவுகிறார். பாண்டிச்சேரியில் கனகலிங்கம் வசித்த தாழ்த்தப் பட்டவர் குடியிருப்புக்குச் சென்ற மகாகவி பாரதி, அங்குள்ள முத்துமாரி அம்மனைக் கண்டு மெய்மறந்து “உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா” என்று பாடினார்; ”உள்ளூர் தெய்வமே” என்று பாடவில்லை.

ஹிந்து மதம் உலக மதம்.
ஹிந்து அடையாளம் தனித்துவமிக்கதொரு உலக அடையாளம்.
அதனை மறுக்காதிருப்போம்.
மறவாதிருப்போம்.

*******

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன், ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மை என் சிந்தனை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹிந்துத்வம் என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? நான் ஹிந்துத்வத்தை எதிர்க்கிறேன் (என்று நினைக்கிறேன்). இது என்னவோ எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் ஒருவராலும் வரையறுக்க முடியாத விஷயம் போலிருக்கிறது”- சில வாரங்கள் முன்பு ஒரு கூகிள் குழும விவாதத்தில் நண்பர் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்.

அந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

http://www.tamilhindu.com/2011/11/hindu_identity_what_and_why_2/