Saturday, March 3, 2012

SHARIA FOR HIND

Ennapadam Panchajanya

CURRENT ARTICLES OF V. SUNDARAM (JANUARY 2010 ONWARDS)

Tuesday, February 28, 2012

sharia4hind

SHARIA FOR HIND


By V. SUNDARAM I.A.S

All India General Secretary (Ideology) Janata party


With the process of Assembly Elections set in motion in Uttar Pradesh, Punjab, Uttaranchal etc, my analysis is that the election managers of the anti-Hindu and virulently pro-Islamic Sonia Congress Party seems to have extended an invitation to the British Islamist Anjem Choudary to visit New Delhi to address a mass rally on 3rd March 2012, which marks the 88th Anniversary of the end of Islamic Caliphate in Turkey. The Congress continues to nurture this hope that by pandering to the basest anti-Hindu instincts of Islamic fanatics the Muslims would feel obliged to vote for the Congress Party in Utter Pradesh and other States where Assembly Elections are being held.

Anjem Choudary who has referred to Osama bin Laden as his “ameer” has said “I do not believe in Indian law, so there is no question of seeking any permission from the authorities there. We have organized a video conferencing on March 2 with Sheikh Omar Bakri Muhammad who is based in Lebanon. My visa application is under process with the Indian High Commission here and I expect to get it... We hope to arrive a day ahead of our press conference. But in case we are not given the visa, we will broadcast our address to the demonstration.’’ On his website www.anjemchoudary.com, he says: “I am not amongst those who believe in the false Gods of Democracy and Freedom or who worship Presidents, Kings and Prime Ministers by obeying them or who submits to any man made law as opposed to the divine law (i.e. the Shari’ah).”

British Islamist Anjem Choudary and Omar Muhammad Bakri have launched an organization called Shariah for Hind to advance their agenda for establishing a virulent Talibanic form of Islamic rule in India.

The website of Sharia for Hind is http://shariah4hind.com/. It declares emphatically that it is anti national and proudly Fascist. “Indian Political Parties Have Preyed on the Muslim Community, As the Wolf Preys a Lamb; They Have Divided Us with Nationalism and Poisoned Us with Democracy”.

The Shariah for Hind project for Islamization of India draws its religious sanction from the Consensus among All Muslim Scholars that it is not permitted for Non-Muslims to have authority over Muslims. But isn’t that why we had a Partition of the Akhand Bharat?

They make this treasonable appeal to Muslims: “We Therefore Call Upon All Muslims to Rise on the 3rd of March 2012 (the 88th Anniversary of the Destruction of the Last Islamic State) in New Delhi in a Public Demonstration and Demand… to Establish the Khilafah [Islamic Rule]”. PEOPLE IN OTHER ASIAN COUNTRIES OFTEN GET SHOT FOR APPEALS, WHICH ARE FAR LESS TREASONABLE.

Do you want to know the detailed plans of these Muslim fanatics?

The Hindus or Sikhs or Other Non-Muslims…
Must Not build any new temples nor start to sell them and buy new ones.
Must Not do any public gathering like celebrating Diwali or Christmas.
Must Not show their religious symbols publicly like crosses or idols.
Must Not raise their houses above those of Muslims. (Be submissive.)

The Hindus or Sikhs or Other Non-Muslims…
Must pay the Jizya under humiliating conditions.
Must receive travelling Muslims as guests if they are travelling. (This means that Muslims can come to non-Muslim houses and demand food and sex with the girls in that family.)
Must be distinguished by their clothes so that Muslims know who they are (for being singled out for oppression).

There will be no more Bollywood.

In 1946 the Mayor of Calcutta Mohammed Usman had given a call for waging jihad against Hindus through another inflammatory leaflet titled, "MUNAJAT FOR JIHAD", reminding the Muslims of the glorious victory in the famous Battle of Badr. In that battle “kaffirs" were annihilated by a small army of soldiers of Islam. Its contents were highly provocative and expressed its determination to pursue its goal of establishment of an Islamic state in India as the agenda of radical Islam.

Justice Gopal Das Khosla I.C.S (a former Chief Justice of Punjab) in his seminal research paper titled ‘STERN RECKONING’ reproduced the instructions issued by the Muslim League of Mohammad Ali Jinnah to the Muslim marauders in the Twenty-three Point printed Circular.

The Muslim League of Jinnah had made elaborate plans for acquiring and storing weapons for attacking Hindus and Sikhs, looting their shops and factories, mounting attacks on temples and even for kidnapping, raping and converting hapless Hindu women, on the eve of Indian Independence, is evident from the contents of the Twenty-three Point printed Circular. The blood-curdling exhortations in the Circular became known to the police after their crackdown on the Muslim League following the massive Muslim violence during and after the Direct Action Day on 16th August, 1946.

The contents of the Twenty-three Point Circular can be found at my blog http://ennapadampanchajanya.blogspot.in/2010/07/government-of-indias-muslim-police.html

Unfortunately the Congress leadership under Mahatma Gandhi in whom the Hindus had reposed immense faith had long before surrendered to the pan-Islamist terrorist agenda by joining the Khilafat Movement as early as in 1921. Gandhiji was keenly aware of the extra-territorial loyalties of the Muslims. However, Gandhiji naively thought that he could obtain the support of the Muslim fanatics only if he supported their pan-Islamist cause of restoration of the Khilafa in Turkey. Maulana Mohammad Ali and Maulana Shaukat Ali wanted India to be brought under Muslim rule soon after the restoration of the Khilafa. Gandhiji’s enthusiastic participation in the Khilafat Movement created a misunderstanding among the Muslims that Swaraj meant a willing and voluntary Hindu submission to the establishment of Muslim Rule in India. The disastrous consequences of this political blunder on the part of Gandhi led first to the savage pogrom of Hindus of Malabar by the local Moplah Muslims in what came to be known as the 1921 Moplah Rebellion.

The steadfast refusal of the Congress Party to condemn in unequivocal terms the Islamic savagery on the unarmed and hapless Hindus in 1921 in Malabar emboldened the Muslim fanatics and thus inaugurated a new era of a fresh wave of riots by Muslims culminating in the world’s biggest genocide leading to the bloody partition of India.

On 22nd February 2012, the Delhi Police received a complaint from one Anil Kumar Yadav that sharia4hind was organizing a march in the city. On the same day, the Delhi High Court heard a petition filed by Tajinder Pal Singh Bagga, President of the Bhagat Singh Kranti Sena — which sought a ban on the march stating that the website brings constitution of India and its secular feature into disrespect and disrepute. “Extreme Islamic groups are planning to organize a huge rally in Delhi propagating Islamisation of Indian subcontinent and enforcement of Shariah law all over India and hence this may result into communal clashes and disruption of public peace and order in State of Delhi and other parts of India.” Appearing for Tajinder Pal Singh Bagga, Advocate Vikas Padora also sought that the Central and State Governments be directed to include sharia4hind into the list of banned organizations, “as the group works against the integrity and sovereignty of India”.

A Delhi High Court Bench of Acting Chief Justice A.K. Sikri and Justice Rajiv Shah Endlaw directed Delhi Police Commissioner to submit the report on website www.shariah4hind.com within a week. In the mean time, Navaid Hamid, a Member of the National Integration Council, too wrote to Home Minister P Chidambaram seeking a ban on the proposed Islamic supremacist march in New Delhi and urged him to ask the Telecom Ministry to block the website.

The website www.sharia4hind.com has since been blocked in India and the Delhi Police have alerted hotels against hosting any individual connected to the proposed march or the “highly inflammatory” website.

When I look at the Islamic agenda announced by Anjem Choudary for destruction of Hindu India, I am reminded of the following brilliant quotation of Sir Winston Churchill drawn from his book called ‘River War’ published in 1899 in which he describes Muslims he apparently observed during Lord Kitchener's campaign in Sudan in 1898.

“How dreadful are the curses which Mohammedanism lays on its votaries! Besides the fanatical frenzy, which is as dangerous in a man as hydrophobia in a dog, there is this fearful fatalistic apathy. The effects are apparent in many countries. Improvident habits, slovenly systems of agriculture, sluggish methods of commerce, and insecurity of property exist wherever the followers of the Prophet rule or live. A degraded sensualism deprives this life of its grace and refinement; the next of its dignity and sanctity. The fact that in Mohammedan law every woman must belong to some man as his absolute property - either as a child, a wife, or a concubine - must delay the final extinction of slavery until the faith of Islam has ceased to be a great power among men. No stronger retrograde force exists in the world. Far from being moribund, Mohammedanism is a militant and proselytizing faith.”

The Congress Party under Gandhi had neither any plans nor any Political will to fight back against the Islamic jihadi assault on India. The Congress leadership today is no different, except that it is now led by a foreigner with loyalty only towards the Vatican and nothing but total contempt towards all the Hindus.

Despite Delhi High Court's strict order to the contrary, UK based Islamic radical and Hinduphobic bigot Anjem Choudary and his fellow Islamic fundamentalists have been given Indian visa by the UPA Government.

According to Dr Subramanian Swamy, the present Home Minister P. Chidambaram overruled the officials of the Ministry of External Affairs and ordered issue of visa to Anjum Chaudhary because one Arab government paid £100,000 to the Anushka, a sister of Sonia Gandhi, the Italian born Fascist Dictator in New Delhi. It has been reliably understood that the highly influential Jewish lobby is very upset with this deal. There is also a buzz that USA is now tacitly backing the public ‘war against’ Sonia ‘corruption’.

There is a rumour that the Firangi Memsahib Sonia Gandhi is suffering from terminal cancer of the pancreas, the same disease that brought down Steve Jobs. Sonia Gandhi is presently out of the country.

The BJP and VHP should take action on a war footing to organize a mass political counter rally in New Delhi with more than 1 Million Hindus participating in it. They have done it before and they can do it again and in far greater numbers. The top leaders of the BJP should understand that there is no greater political blunder than to suppose that appeasements, platitudes, smooth words, and timid policies offer a path to safety against the terrorist activities of the Islamic barbarians.



http://ennapadampanchajanya.blogspot.in/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=6



வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்


‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

0

ஹரன் பிரசன்னா

http://www.tamilpaper.net/?p=5561

Friday, March 2, 2012

Congress 'family looting' of India spreads beyond Gandhi family


02/03/2012 15:26:46 With Media Inputs

What is common between P Chidambaram and Vayalar Ravi? They both are senior congress party members, they both are ministers in central government…anything more?

Yes, their sons are partners in a business. As per BJP’s allegation, they are into the business of looting this country. Ziqitza Health Care Limited was co-founded by Ravi Krishna, whose father Vayalar Ravi is the Minister for Overseas Indian Affairs. On its board of directors is Karti Chidambaram, whose father P Chidambaram is the Home Minister.

Ziqitza was hired by Rajasthan government in 2009 to run ‘108 ambulance service’ to ensure help for emergency patients in poor and remote areas. This comes under National Rural Health Mission lead by Central government and the scheme was started by the then health minister Anbumani Ramadoss.

At a press conference, BJP has raised allegation against Ziqitza that the company has been looting the state for crores of rupees and released many documentary evidences to support this claim. The BJP alleges that Ziqitza was hired in 2009 in "a non-transparent manner" and the contract awarded only because the promoters are heavy weights, it has been over paid in crores of rupees even to ambulances which exists only on paper.

When contacted, Rajasthan's Health Minister Aimaduddin Ahmad said after the irregularities were noticed the government has deducted Rs. 10 crore from Ziqitza's bills
It is interesting to note that in Dec 2009, Supreme court had intervened in this scheme and told states to be more transparent on this deal.Ziqitza's operations in Rajasthan were studied by Rajasthan's financial advisor (NHRM) and the state health department because their records seemed problematic.

For instance, the financial advisor had objected to Ziqitza showing 55,000 ambulance trips in September, 2011 while the actual trips found by vigilance officials were 37,000. In the same month, the company billed the government for 50 ambulances which were "off-road" or not in use. Between March and September last year, according to the records, the company over-billed the government by 3.5 crores, a discrepancy first pointed out by the financial advisor to the state government.

The BJP alleges that in December, the Chief Secretary of the state intervened and stopped the matter from being probed.

Facilities like Ziqitza's ambulance services in Rajasthan are funded by the National Rural Health Mission (NRHM) - the centre sends huge funds to the state to improve health services in poor and under-developed parts of the country.

http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=15507&SKIN=B

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் விழா

இலங்கையில் சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா

சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் சுவாமிஜி அவர்கள் ஹிந்து வேதாந்தக் கருத்துக்களை சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததுடன் ஒரே நாளில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அதை தொடர்ந்து 4 வருடங்கள் அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஹிந்து தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய போது அவர் முதலில் காலடி வைத்தது இலங்கை கொழும்பு நகரத்தில்தான்.

ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு உலகெங்கிலும் இருக்கின்ற ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள், ஹிந்து ஆன்மீக இயக்கங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திடத் துவங்கியுள்ளன. இந்நிகழ்ச்சிகள் இவ்வருடம் முழுவதும் நடைபெற இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகின்ற 2013-14 ஆம் ஆண்டில் சுவாமிஜியின் 150 வது ஜெயந்தியை மிகப் பிரம்மாண்டமான அளவில் நடத்திடத்திட்டமிட்டு வருகிறது.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிற இயக்கமாகும். இலங்கையில் கடந்த 10௦ ஆண்டுகளாக ஹிந்துஸ்வயம் சேவக இயக்கம் அந்நாட்டு ஹிந்துக்களிடையே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடிட அகில இலங்கை விழாக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் தலைவராக இருக்கின்றார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அக்குழுவில் இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஹிந்து சமுதாயப் பெரியோர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இலங்கை முழுவதிலுமிருந்து இக்குழுவில் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இலங்கை முழுவதும் அக்குழுவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த வருடத்தினை மிக சிறப்பாகக் கொண்டாடித் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொழும்பில் கடந்த பிப்ரவரி 26 அன்று துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கொழும்பு நகரில் இருக்கின்ற புகழ்பெற்ற சரஸ்வதி திருமண மண்டபத்தில் இவ்விழா பிப்ரவரி 26 அன்று மாலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 500௦௦க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் தவிர மீதமுள்ள 24 மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இலங்கை முழுவதிலிமிருந்து இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டது பலருக்கு பெரும் மகிழ்ச்சியை மட்டுமல்ல பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது. பலர் இதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி மாலை 5.30 ௦க்கு சரியாகத் துவங்கி இரவு 7.30 க்கு நிறைவு பெற்றது. இதுவும் கூட பலருக்கு வியப்பை அளித்தது.

விழாவினை கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவி சுவாமி ஸ்வருபானந்த மகராஜ் மங்கள விளக்கு ஏற்றி வைத்தார். பிறகு அதை தொடர்ந்து சுமார் 125 சிறுவர்கள் சிறுமியர்கள் பங்கேற்ற யோகசாப் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் துவங்கிய நிகழ்ச்சியில் இலங்கை ஹிந்து சேவா சங்கத்தின் சேவைப் பணிகளின் பொறுப்பாளர் கொழும்பு நகரைச் சார்ந்த திரு.திருச்செல்வன் அனைவரையும் வரவேற்று, விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.

அடுத்து சுவாமி சர்வரூபானந்த அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார்கள். அவர்தனது உரையில் ஏழ்மையில் இருக்கின்ற மனிதனுக்கு கடவுளைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும். எனவே முதலில் பசிப்பிணியை அகற்றிட நாம் முனைந்திட வேண்டும். சுவாமி விவேகானந்தரும் இதைத் தான் வலியுறுத்தி இருக்கின்றார் என்று கூறினார் சுவாமி சர்வரூபானந்தா.

விழாக்குழுவின் தலைவர் திரு.டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தனது தலைமை உரையில் சுவாமிஜி அவர்கள் சிகாகோவிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பி வந்தபோது முதலில் அவர் காலடி எடுத்து வைத்தது கொழும்பு நகரில்தான் என்பதை நினைவுபடுத்தினார். அப்போது மாபெரும் வரவேற்பு ஒன்று கொழும்பு நகர் ஹிந்துக்களால் சுவாமிஜி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.

இலங்கை அரசின் ஹிந்து சமய தினைக்களத்தின் செயலாளர் திரு சாந்தி திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். விஜயபாரதம் வார இதழின் முன்னாள் ஆசிரியர் திரு.நா.சடகோபன் அவர்கள் சிறப்புரையில் “சுவாமி விவேகானதருக்கும் தமிழகத்திற்கும், தமிழக இளைஞர்களுக்கும் இருத்த நெருக்கத்தினையும் தொடர்பினையும் எடுத்துக்கூறினார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது மட்டுமின்றி அவர் சிகாகோ செல்வதற்கான நிதியை சேகரித்துக் கொடுத்ததில் சென்னை நகரின் இளைஞர்கள் மாபெரும் தொண்டாற்றியுள்ளனர்.

சுவாமி மீது அபாரமான பக்தி செலுத்தி வந்த அளசிங்கப் பெருமாள் என்கிற
இளைஞருடன் சுவாமி விவேகானந்தர் மிக நெருக்கமாக இருந்தார். அத்துடன் அந்த இளைஞர் குழுவில் இருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார், ரங்காச்சாரி, பிலிகிரி ஐயங்கார், என அனைவருடனும் சுவாமிஜி அவர்கள் நெருங்கிய தொடர்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

சுவாமி விவேகானந்தரையும் தமிழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சுவாமிஜி பிறந்த வங்கத்தைக் காட்டிலும் அதிகமான பெயரும் புகழும் தமிழகத்தில் காணப்படுகிறது. சுவாமி விவேகானந்தரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற சீடர்கள் மற்றும் பக்தர்களால் நூற்றுக்கணக்கான தொண்டுக் காரியங்கள் இன்றும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

நாட்டினைப் பற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் முழு அக்கறை கொண்டிருந்தவர் சுவாமி விவேகானந்தர், எனவே சுவாமிஜின் 150 வது பிறந்த வருடத்தினை முன்னிட்டு அவரது கருத்துக்களை இலங்கை முழுவதும் இருக்கின்ற ஹிந்துக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது நோக்கமாக இருக்கவேண்டும்” என்று பேசினார்.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணப்பாளர் திரு.சௌமித்ர கோகலே அவர்கள் தனது சிறப்புரையில் உலக அளவில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் செய்து வருகின்ற பல பணிகளைப் பற்றி பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் காணொளி வாயிலாக பார்வையாளர்களுக்கு விளக்கினார். மேற்கத்திய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஹிந்து பண்பாட்டின் தாக்கம் எப்படி இருந்து வருகிறது என்பது பற்றி அவர் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் வேத மந்திரங்களை துல்லியமான உச்சரிப்புடன் மிக அழகாக சொல்லும் இங்கிலாந்து நாட்டு சிறுவர், சிறுமியர்கள், மற்றும் ஆப்ரிக்க நாட்டு சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் இருகரம் கூப்பி நமஸ்தே என்று சொல்வதின் உள் அர்த்தத்தையும் அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்துரைப்பதும் அதைத் தொடர்ந்து சர்ச்சுக்கு வந்திருந்த அனைவரும் கைகூப்பி ஒரே குரலில் நமஸ்தே என்று சொல்லும் காட்சி உட்பட, காணொளிக் காட்சிகள் அனைத்தும் விழாவிற்கு வந்திருந்த அனைவரது மனதிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

சர்வதேச அளவில் சுவாமிஜி அவர்களின் 150 வது பிறந்த வருடத்தினை நடைபெற இருக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றியும் சௌமித்ர கோகலே தனது உரையில் எடுத்துரைத்தார்.

அகில இலங்கை ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் இணைச் செயலாளர் திரு.எஸ்.கே.தேவன் அவர்கள் நன்றி கூற, இறைவணக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இலங்கையில் சுவாமி விவேகானந்தரது 150வது பிறந்த வருடத்தில் நாடெங்கிலும் குறைந்தது 150 நிகழ்ச்சிகளாவது நடத்திட வேண்டுமென ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர்.

http://hindusanghaseidhi.net/?p=1691

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)

March 2, 2012

பல காரணங்களால் இந்து மதத்தை விட்டு வெளியே பிற மதங்களுக்கு மாறியவர்கள், திரும்ப தாய் மதம் திரும்ப முடியுமா? என்ற கேள்வி இனி எழாது. ஹிந்து மதத்தின் மேன்மை, அதன் பரந்த சுதந்திர வெளி இருட்சுவர் சூழ்ந்த மதங்களில் இருப்பவர்களுக்கு விடுதலையாக அமைவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். பல நாளிதழ்களிலும் அவ்வப்போது இது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரிசாவில் கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப் பட்ட மலைவாழ் மக்கள் சுமார் மூவாயிரம் பேர், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் டாக்டர். பிரவீன் தொகாடியா அவர்கள் தலைமையில் ஹிந்து மதத்துக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியில் திரு. தொகாடியா அவர்கள் பேசும்போது “விஸ்வ ஹிந்து பரிஷத் மலைவாழ் மக்களுக்காக அரும்பாடு பட்டு வருகிறது. நாடெங்கும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் நாற்பதாயிரம் பள்ளிகள், ஆயிரம் மருத்துவ விடுதிகள் ஆகியவை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவில் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்கள் படித்து முன்னேறி மேன்மை அடையவேண்டும் அதே சமயத்தில் அவர்கள் பண்பாட்டு கலாசார அம்சங்களை இழந்து விடக்கூடாது” என்று கூறினார்.

என்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். இதில் திரளான இந்துக்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் இந்தியாவில் இருந்து சென்ற பக்தர்களும் பங்கேற்றனர். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். நம்மூரில் சல்மான்கான் கூட மகாசிவராத்திரி விரதம் இருந்ததாகவும் தகவல். இதோடு இன்னொரு மகிழச் செய்யும் தகவல் பாகிஸ்தானில் 1500 வருடம் பழமை வாய்ந்த பஞ்சமுக ஹனுமான் ஆலயம் புனருத்தாரணம் செய்யப் படவிருக்கிறதாம்.

பகவத் கீதையை உருது மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார் ஒருவர். இவரும் ஒரு முஸ்லிமா என்கிறீர்களா? அது தான் இல்லை. வேங்கட அப்பளச் சாரி என்பவர், சுமார் எழுநூறு ‘உருது சுலோகங்களில்’ பகவத் கீதையை மொழிபெயர்த்துள்ளார். எண்பது வயதான இவர், ஒரே வருடத்தில் மொழி பெயர்த்து விட்டாராம். முகலாயர் காலத்தில் கீதை மொழிபெயர்க்கப் பட்டது. பின்னர் சமீபத்திலும் சிலர் முயற்சித்துள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் விட என்னுடையது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த பகவத் கீதை மொழிபெயர்ப்பை உருது மொழியில் இருப்பதால் வலமிருந்து இடமாகத் தான் படிக்க முடியும்!

இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, பரமபதம், பராசக்தி போன்ற வார்த்தைகளுக்கு இணையான உருது வார்த்தைகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாம். மொழிபெயர்ப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் கீதை போன்ற இலக்கியச்சுவையும், தத்துவ ஆழமும் கொண்ட நூலை எளிதாக மொழியாக்கம் செய்வது இன்னும் கடினம்.

பெரிய பெரிய பத்திரிகைகளில் வேலை பார்க்கும் ஆசாமிகள் கூட பிரபலங்களை பேட்டி எடுத்த விவரத்தை வெளியிடும்போது சொன்னது ஒன்று, வெளிவந்தது வேறு ஒன்று என்று செய்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த பிரபலம் தான் அப்படி சொல்லவில்லை என்று படாத பாடு படவேண்டி இருக்கிறது. பொது மக்கள் முதலில் வந்த செய்தியை நம்புவதே வழக்கம். ஆகவே ஒன்று அந்த பிரபலம் சம்பந்தப் பட்ட பத்திரிக்கையை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் இல்லாவிட்டால் கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டியது தான். அந்த பத்திரிக்கையாளரோ சற்றும் கவலைப் படமாட்டார், தவறு நிகழ்ந்துவிட்டது என்று எடுத்துக் காட்டினாலும் வருத்தம் தெரிவிக்க மாட்டார். இன்றைக்கு பத்திரிகை தர்மம் அப்படி ஆகிவிட்டது. அச்சுப் பத்திரிக்கைகளிலேயே இப்படி என்றால் இணைய இதழ்களில் கேட்கவா வேண்டும்?

அண்மையில் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் பேசும் போது சுதந்திரம் வாங்கிய பின் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்டபோது இருந்ததை விட சுரண்டல் பலமடங்கு அதிகமாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை “பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் இந்தியா எங்கேயோ போயிருக்குமே – ஆர்.எஸ்.எஸ். ஆதங்கம்” என்று தலைப்பிட்டு வெப்துனியா.காம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் மோகன் பாகவத் அவர்கள் சொன்னது “After Independence, the dominance of rich and powerful people in politics and rising inflation have worsened the country’s situation, which is worse than what it was during the British rule” என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி இப்படி இருக்க இதில் இந்தியா எங்கோ போயிருக்கும் என்பதை கண்டுபிடிக்க கொஞ்ச நஞ்சமல்ல எக்கசக்கம் திரிசமன் வேண்டும்.

சில செய்திகள் திரித்து வெளியிடப் படுகின்றன. சில செய்திகள் வெளியே வருவதே இல்லை. ஒரு குற்றம் நிகழும் பொது, அதில் ஈடுபட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவரோ அதற்கு தகுந்த மாதிரி செய்தி வெளிவருகிறது. சம்பந்தப் பட்டவர் “சிறுபான்மை” மதமாக இருந்தால் அந்த செய்தி அப்படியே அமுக்கப் படுகிறது. அப்படியும் சில செய்திகள் வெளியே வந்து விடுகின்றன. அப்படி நமக்கு கிடைத்த செய்தி தான் இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக வந்த செய்தி. கேரளா அரசாங்கம் இந்த விசாரணையில் முடிவு எதுவும் எடுத்து விடக் கூடாது என்று கிருத்துவர்கள் முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது. முக்கியமாக கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் ஆலன்செர்ரி என்பவர் இந்திய மீனவர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தில் இத்தாலிய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதை கேரளா பா.ஜ.க. வன்மையாக கண்டனம் செய்துள்ளது. ஒரு வியாபாரக் கப்பலில் இத்தாலிய ராணுவ வீரர்களுக்கு என்ன வேலை? சோமாலியாவில் இருப்பது போல இங்கே எந்த கடற்கொள்ளையர்கள் இருக்கிறார்கள்? இவ்வாறு ராணுவம் வருவது இது தான் முதல்முறையா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

கேரளாவில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிற (அதிசயம்!) பிரவம் பகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இப்போது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கையில் கூட அந்த ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருப்பது கூட அந்த இடைத்தேர்தல் வரை தானோ என்று தோன்றுகிறது. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்துக்கள் பெருமளவு வாழ்கிற பகுதியாக இருந்தாலும் நிறுத்தப் பட்டிருக்கிற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவருமே கிருத்துவர்கள்!

ஆபிரகாமிய மதங்கள் வேறொரு நாட்டில் மையம் கொண்டிருப்பதே, இங்கே அவை தேச விரோத நடவடிக்கைகளிலும், மதமாற்ற நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட காரணமாகிறது. அவற்றின் இதயம் வேறு எங்கோ துடிக்கிறது. இங்கே அதனால் தானோ என்னவோ இங்கே இதயமற்று நடந்து கொள்கிறார்கள். இவர்களை நம்பி அப்பாவிகள் பலியாகிறார்கள். சில பள்ளிக் கூடங்களில் பகிரங்கமாகவே மதமாற்றம் நடைபெறுகிறது. பள்ளிக்கு படிக்க வருகிற இளம் பிஞ்சு உள்ளங்களை கிருத்துவ மத போதனையில் மூழ்கடித்து அவர்களை அறியாமல் மதமாற்றம் செய்கிறார்கள். இப்படி திண்டுக்கல்லை அடுத்த நத்தம் முசுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியரும், வேறொரு ஆசிரியருமாக சேர்ந்து ‘மதமாற்ற வேலை’யில் ஈடுபட்டிருந்த போது, செல்போன் கேமராவில் படம்பிடித்து விட்ட அப்பகுதி மக்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் அதை ஆதாரமாகக் காட்டி புகார் செய்ய அந்த ஆசிரியர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இதே போல சிலநாட்கள் முன்பு சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை கேலி செய்தது பற்றி தமிழ் ஹிந்துவில் இந்த பகுதியில் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இன்னும் எத்தனை பள்ளிகளில் என்னென்ன நடக்கிறதோ என்ற கவலை எழுகிறது.

ஹிந்துக்களின் கடவுள்களை “சாத்தான்கள்” என்று அழைத்து அவமதித்து, சட்ட விரோதமான மதமாற்றத்தில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவது ஆபிரகாமிய மத அமைப்புகளின் வழக்கம். இதற்குத் தப்பாமல், புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இம்மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் இயக்கங்களை தமிழ்நாடு காவல் துறையினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரி முரசு இதழில் செய்தி வெளியாகி உள்ளது.

கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே கூறி வருகிறோம். இப்போது கையும் களவுமாக ஓர் “உளவாளி” பிடிபட்டிருக்கிறார். இன்னும் பத்துப் பதினைந்து அரசு சாரா அமைப்புகளை புலன்விசாரணை செய்யுமாறு இந்திய அரசு சி.பி.ஐயிடம் கோரியிருக்கிறது. எதற்கும் வாயைத் திறக்காத நமது பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த விஷயத்தில் அமெரிக்க என்.ஜி.ஓக்கள் பின்னணியில் செயல்படுவதாக கூறியிருக்கிறார்.

வஹாபிகளின் எண்ணைப் பணமும், எண்ணற்ற வெளிநாட்டு கிறித்தவ மிசனரிகளிடம் இருந்து ‘நன்கொடைகளும்’ தீவிரவாதத்திற்கும், கட்டாய மதமாற்றத்துக்குமாக கணக்கின்றி திணிக்கப் படுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடந்த பதினேழு ஆண்டுகளில் மட்டும் இந்திய என்.ஜி.ஓக்கள் எனப்படும் தனியார் சமூக சேவை அமைப்புகளுக்கு 97,000 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. இதில் நன்கொடை தரும் வெளிநாட்டு அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, இந்தியாவில் அவற்றைப் பெரும் அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, முதலாவதாக நிற்பவை கிறிஸ்தவ மிஷனரி, மதமாற்ற நிறுவனங்கள். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை, பல காலமாக இந்துத்துவ தரப்புகள் சொல்லி வரும் விஷயம் தான் இது. இப்போது தான் போலி மதச்சார்பின்மை சேற்றில் ஊறிய இந்திய அரசியல் கட்சிகளுக்கும், பொதுஜனத்தீற்கும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல இது உறைக்க ஆரம்பித்துள்ளது. கூடங்குளம் எதிர்ப்பு கோஷ்டிக்கு உண்மையில் நாம் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

http://www.tamilhindu.com/2012/03/news-this-week-mar-2-2012/

Thursday, March 1, 2012

Man with Blue Turban


Nostradamus predicted that the world would be destroyed by a man in a blue turban. We all thought it'd be Osama or Saddam, but had to reject them since they didn't wear a blue turban

But lo and behold - the man to destroy India is already here -- none other than our blue turbaned PM, who has now publicly stated that Muslims in India must get "first preference to national resources"

This man must be removed from office before he sells whatever's left of the nation to someone else
.....

http://vivekajyoti.blogspot.in/2011/12/apartheid-in-india-against-hindus-as.html

‘Hindu Roti and Shiksha Bachao Agitation’ 

REPORT-1

Source: Organiser - Weekly Date: 1/1/2012 10:13:43 AM

VHP launches nationwide campaign against Muslim reservation

Demands withdrawal of 4.5 per cent Muslim quota that deprives the OBC entitlement 

By Pramod Kumar


$img_titleDescribing the Government’s hurried move to grant 4.5 per cent quota to Muslims from the OBC’s 27 per cent reservation a blatant violation of the Constitution and an attempt to destroy the majority’s democratic rights, the Vishwa Hindu Parishad (VHP) has launched a nationwide agitation. Named as ‘Hindu Roti and Shiksha Bachao Andolan’ the agitation began from December 23. Under this agitation many activities including awareness drive through dharnas, demonstrations, rallies, symposiums, internet sites, etc.are being conducted to educate the people. The youth and women wings will also conduct some separate programmes at their own levels.

International working president of VHP Dr Pravin Togadia appealed to all Hindus to stand united as one irrespective of their caste, region, language, etc against such a dangerous move that can wipeout Hindus and democracy from Bharat. He said the key line for the agitation is ‘first withdraw Muslim reservation and only then ask for Hindu votes’. He said the agitation would continue until Muslim reservations are withdrawn completely and the Government apologises to the nation for its vote-greedy anti-constitutional move.

Under the campaign, Delhi unit of the VHP along with many Hindu organisations staged a strong protest at Jantar Mantar on December 27. The protest was led by prominent saints and Hindu leaders. Terming the reservation to Muslims and Christians as unconstitutional they demanded its immediate rollback. Senior VHP leader Shri BL Sharma ‘Prem’ said the Congress is leading the nation to another Partition on religious grounds. The VHP leaders also submitted a memorandum to President Smt Pratibha Patil demanding immediate recall of the reservation based on religion. Swami Pragyanand, Mahant Naval Kishore Das, Mahant Surendra Nath Avadhoot and others also addressed the protesters.

Briefing the mediapersons in New Delhi about the agitation, Dr Togadia warned that the VHP would not allow any job or school/college seat of OBC to be given to Muslims. “By giving 4.5 per cent quota to Muslims within the 27 per cent reservations meant for the OBCs, Government has snatched educational seats, jobs, bank loans and other facilities which were meant entirely for the real deserving OBCs. It will not stop here. It will lead to giving quota to Muslims and Christians from extremely backward Scheduled Castes. Reservations meant for Scheduled Tribes are already being grabbed by Christians. For vote bank, this will go up to constitutional amendment to give separate reservations to Muslims because India’s Constitution does not permit religion-based reservations, snatching open merit category, Hindus jobs and education,” said Dr Togadia.

The VHP demanded immediate withdrawal of the quota given to Muslims and Christians from any existing reservations meant for OBCs, SCs, STs and NTs. “The VHP also warns the government not to snatch educational seats, jobs, bank loans, etc either of these poor or of Hindus from open merit category. Some erstwhile castes of Muslims are already included and getting benefit from OBC list. These castes should immediately be removed from OBC list. Government should immediately reject the biased and unfounded reports of Justice Rajender Sachar Committee and Rangnath Misra Commission quoting which various post holders from the Union Government, the Prime Minister, Law Minister, etc as well as Muslim leaders claim that Muslims are poor and therefore they ‘deserve’ special facilities and reservations. VHP will not allow this or Christian reservation from SC quota,” Dr Togadia said in a statement issued in New Delhi.

The VHP warned that those who demand, support, propagate and give reservations to Muslims and Christians would have to face the democratic wrath of the majority Hindus in the upcoming elections. It also demanded a case of treason against all people who demand, support, propagate and give religion-based reservations as this very act is unconstitutional.

Elaborating on the major decisions taken at the recent Central Board of Trustees meeting in Kochi, Dr Togadia said the VHP has decided to expand the organisation to over one lakh villages and consolidate on urban level by November 2015 for well-being and empowerment of Hindus. He said the VHP would focus on Hindu empowerment all the way right from the village level to district, state level and on wider issues impacting the Hindus nationally.

He said the VHP would also expand its service network in Vanvasi areas thereby ensuring better education, health and empowerment to SCs/STs, OBCs and Nomadic Tribes (NTs). He said the VHP already has 46,347 service projects including 2,062 schools, 2,501 medical facilities, 27,010 single teacher schools and over 1,500 SHGs. The VHP now aims to double these figures by the year 2015.

Dr Togadia said the VHP has also decided to free over one lakh temples, which are presently in the clutches of various governments which misuse millions of rupees offered in the temples by the devotees. He alleged that this money is being misused by the government to hurt the Hindus by giving facilities and subsidies to minorities whereas not even the basic care of the temples and Hindus is done.

Apart from demanding a strong anti-conversion law, the VHP has also demanded a strong anti-terror law to completely wipeout Islamic terror supported either by overseas forces or by local modules. For this objective Dr Togadia announced to start ‘Nation Against Terror’ movement. He also demanded a Hindu Youth Job Security Bill for all castes, like the Food Security Bill or Right to Education Bill.

For the protection of human rights of Hindus abroad Dr Togadia said the VHP would create a strong system to handle the violation of Hindu human rights from Malaysia to Sri Lanka and from Indonesia to America, Australia, Russia, etc. He said any Hindu persecuted in any other country and back to Bharat is the responsibility of all Hindus. The VHP aims to start specific systems for this as well as demand an international law to prevent such persecution of Hindus from any country.

http://organiser.org/Encyc/2012/1/1/REPORT-1.aspx?NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=

Tuesday, February 28, 2012

Sonia: So secretive, still in public life!

$img_titleFirst it was her religion, then her relatives and then her illness and now her income tax returns. Sonia Gandhi has consistently refused to reveal details regarding these.

The latest first. According to a report in The Times of India, Sonia Gandhi refused to provide the details of her income-tax returns of the past ten years, demanded by V Gopalakrishnan, an RTI activist from Chennai. She claimed that this information, submitted to the IT office was confidential and disclosure of this would amount to “unwarranted invasion” of the individual’s privacy. She even cited security reasons for not furnishing the details.

She had earlier refused to reveal her religion, claiming it was a personal matter and need not be made public. This, when the government routinely has this column in all the forms. Even in nursery school admissions, one has to mention the religion. Her educational qualifications (if any) too are closely guarded secrets.

When Sonia Gandhi “fell ill” and went abroad allegedly for treatment apparently on government expense, any information was denied to the public on the ground that we must respect her “privacy.” The media played along in such reverential obedience. If public money had been spent on her, it has to be accounted for and the citizens of the country have a right to know how much and why the money was spent; if the treatment she received abroad was not available in India etc.

Some time ago, a RTI had been raised demanding to know the foreign relatives who are staying with Sonia Gandhi in her official residence and their periods of stay in India. The issue was suppressed, taking the plea that it was a “private issue.”

Subramanyan Swami, who has constantly sought to bring to light the several instances of abuse of power by Sonia Gandhi has been rebuffed time and again by the courts and other agencies. On 23 February the CBI, before whom Swamy’s plea for investigating Sonia Gandhi’s role in Bofors scandal was pending, dismissed it saying that a closure report has been filed in the case and it cannot be reopened. The CBI also gave a clean chit to her saying “no connection whatsoever” was found between the case and Mrs Gandhi.

Not only she, but all her immediate relatives enjoy amnesty from law. The police did not carry any investigation worth its name into the cases of unnatural death of at least three family members of Sonia Gandhi’s son-in-law Robert Vadhera. His brother, sister and father died untimely and unexplained. The matter was hushed up with even our blood-hound media maintaining silence.

All these things raise the valid question: Is Sonia Gandhi above the Indian law? (FOC)

http://organiser.org//Encyc/2012/2/25/Sonia--So-secretive,-still-in-public-life!%EF%BB%BF.aspx?NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=

Monday, February 27, 2012

கருணாநிதியும் ஜாதியும்


ல்லாததைப் பற்றி பெருமையடிப்பதில் மனிதனுக்கு ஒரு தனி சுகம். மதம், ஜாதி என்பவைகள் இல்லாத ஒன்றை, இருக்கின்றது என்றுச் சொல்லி, மனிதர்களுக்கு அதன் முலம் மனக்கோட்டை கட்டி பெருமைப்பட்டு சுய இன்ப சந்தோஷப்படுவதற்கு வகைச்செய்கிறது.

பெருந்தலைவர் காமராஜரை, நாடார் சங்கத் தலைவராக உருமாற்றிய பெருமைக்கு சொந்தக்காரரான ஒரு “அண்ணாச்சி”யை சந்திக்க நேர்ந்தது. சந்திப்பின் போது அவரின், அத்தருணத்தின், அவரின் ஜாதி பெருமை “மீட்டார்” பற்றி வினவியபோது “கருணாநிதி நம்மாளு” என்று அவரின் “பெருமை” சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு ஆச்சரியமுட்டினார். அதனால் அந்த பெருமையின் வேரை தேடி ஒடவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

விஷயம் இதுதான். சி.பி.ஐ கனிமொழி மீது கூடுதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்ததை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது, கருணாநிதி இப்படிப் போட்டு தாக்கினார் - கனிமொழி நாடார் ஜாதியை சேர்ந்தவர். மாலைமுரசு, மாலை மலர் போன்ற பத்திரிக்கைகளின் முதலாளிகள் நாடார் ஜாதியை சேர்ந்தவர்கள் அவ்வாறிருக்கையில் நாடார் ஜாதியை சேர்ந்த கனிமொழியை நாடார் முதலாளிகள் இழிவுப்படுத்துவது நியாயமா??????

மேற்கூறிய சாரம்சத்தை வைத்து கருணாநிதி தன்னுடைய “இன”த்தை சார்ந்தவர் என்று அண்ணாச்சி புரிந்துக்கொண்டு சந்தோஷமடைந்து பெருமைபட்டுள்ளார். கருணாநிதியின் வசனம் சிறுவசனமாக இருந்தாலும் அது பெரிய வஷயங்களை நமக்கு உணர்த்துகின்றது.

கருணாநிதி இசை வேளாளர் ஜாதியை சேர்ந்தவர் என்பதை அவரே பலமுறை உணர்த்தியுள்ளார். ஆனால் சிலரோ அவரை தெலுங்கர் என்கிறார்கள். அதனால் கருணாநிதி முலம் கனிமொழி நாடாராக வாய்பில்லை. அவரின் தாயார் இராஜாத்தியம்மாள் முலம் தான் நாடாராக ஆகியிருக்க முடியும்.

நம் நாட்டில் ஜாதி அடிப்படிடையில் நடக்க வேண்டிய காரயங்களில் தலையாய அவிழ்க்க வேண்டிய முடிச்சு, பிரச்சனை, கலப்புத் திருமணத்தின் முலம் பிறக்கும் குழந்தைகளை எந்த ஜாதியில் சேர்ப்பது என்பது இந்த விஷயத்தில் அரசாங்கம் தங்கள் கடமைகளை ஆற்றாமல் மௌனசாமிகளாக இருந்த காரணத்தினால் நீதிமன்றங்கள் தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

நமது உச்ச நீதிமன்ற இந்த விஷயத்தில் என்னச் சொல்லுகின்றது என்றால் கலப்பு திருமணத்தின் முலம் பிறந்த குழந்தைகளை எந்தச் சாதி முறையில் வளர்க்கப்பட்டதோ, அந்தச் சாதியை சார்ந்ததாக கருதப்படும். ஜாதி சான்றிதழ் பற்றி விசாரிக்க, அளிக்க மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி விசாரணை கமிட்டி என்ற பல வழிமுறைகளை அறிவித்துள்ளது. நீதிமன்றம் தீர்ப்புகளின் எளிதாக்கம் தான் மேற்சொன்னது. ஆனால் அதில் பல சிக்கலான விஷயங்கள் இருக்கின்றன.

இதன்முலம் அறிவது ராஜாத்தியம்மாள் முறையில் தான் கனிமொழி வளர்க்கபட்டாள். அப்பாவழி, அதுவும் திராவிட வழியில் வளர்க்கப்படவில்லை. அதனால் கனிமொழிக்கு அப்பாவின் தந்திரம் போதாமல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். ஆனாலும் அப்பாவைப் பார்த்துதான் பின்பற்றிதான் வளர்ந்ததாக கனிமொழி கூறுகின்றார். திராவிடம், அண்ணா, பெரியார் வழியில் கனிமொழியை கருணாநிதி வளர்க்கவில்லை என உறுதியாக தெரிகிறது. கருணாநிதிக்கு தனது அரசியல் சாணக்கியததன விளையாட்டில். ஜாதியும் ஒரு அங்கம்.

கருணாநிதியின் கூற்றுப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குற்றவாளிக்கும் அவரவர் ஜாதி மக்கள் அவரை குற்றமற்றவர் என நம்பி அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டும், மற்ற ஜாதியினர் அவரை குற்றபுரிந்தவர் என நம்பி எதிர்க்கவேண்டும் ஜாதி படுத்தும்பாடு இருக்கே…….. சே……. வருத்தம் என்னவென்றால் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன், அப்பழுக்கற்ற ஊழலற்ற அரசியல்வாதி, தப்பே செய்யாத குடிமகன். தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒப்பற்ற நாயகன், சோழ, சேர, பாண்டிய வம்ச மன்னர்கள் போல் கருணாநிதி வம்சம் என்று உருவாக்கிய ஒப்பற்ற மனிதன், தன் வாழ்நாளில் நான்கு முறை சீறிய முறையில் தமிழினத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் தொண்டு செய்தும் ஜாதியை தமிழினத்திலிருந்து ஒழிக்க முடியவில்லை.
தன் மகள் தனித்துவிடபட்டுவிட்டார் என்ற எண்ணத்தில் அவளுக்கு ஒரு குழுவுடன் ஐக்கியப்படுத்தினால் பாதுகாப்பு இருக்கும் என்ற பொய்யான எண்ணம் ஏற்பட, கனிமொழி விஷயத்தில் ஜாதியை கருணாநிதி கையாண்டாரோ என தோன்றுகிறது.
கருணாநிதி தமிழ் இன தலைவராக இருப்பதாலும், திராவிட கொள்கையின் கிடங்காக இருப்பதாலும், பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு “கனிமொழி ஒரு தமிழர், மாலை முரசு மற்றும் மலர் பத்திரிக்கை முதலாளிகள் தமிழர்கள், ஒரு தமிழரை தமிழர்கள் அவதூறுச் செய்யலாமா என்று, மட்டையை அடித்திருந்தால், அவர் பின்பற்றும் ஆரிய திராவிட கொள்கைக்கு பொருந்தியிருக்கும். என்னச் செய்வது புத்திரி பாசம் ஒரு இனத் தலைவனை என்னவெல்லோமோ பேசச் செய்கிறது.

ஜாதியின் தரத்திரம் ஆடும் ஆட்டம்தான் என்ன…

http://narenpaarvai.blogspot.in/2011/10/blog-post.html

ஜாதிகள் உள்ளதடி பாப்பா


ஆர்.ரங்கராஜ் பாண்டே

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

"ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த' இனமானத் தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தில் ஒளிந்திருந்த விஷயம், தன்னையும் மீறி அவரை வெளிப்படுத்திவிட்டது.

கடந்த 21ம் தேதி, சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா. தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், விழா நாயகராக முதல்வர் கருணாநிதி தான் இருப்பார் என்பது, கடந்த நாலரை ஆண்டு நாட்டு நடப்புகளை கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த விழாவுக்கும் அவரே சிறப்பு அழைப்பாளர்.

தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இடம் அல்லது நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவரோடு தன்னை எப்படியாவது தொடர்புபடுத்திக் கொள்வது முதல்வரின் பாணி. "முதல்வர் என்பதற்காகத் தான் அழைத்தார்கள்' என்றாகிவிடக் கூடாதாம்.

பூந்தமல்லிக்குச் சென்றால், "என் திரைப்படங்களின் ஒன்றின் நாயகிக்கு பூவிருந்தவல்லி என்று தான் பெயர் வைத்தேன்' என்பார். தூத்துக்குடிக்குச் சென்றால், "இங்கு தான் முதன் முதலில் கொடியேற்றினேன்.' திருச்சிக்குச் சென்றால், "குளித்தலையில் தான் நான் முதல் முதலில் போட்டியிட்டேன்.'

"கோவையில் தான் கதை, வசனம் எழுதக் குடியிருந்தேன்; சைதாப்பேட்டை வேட்பாளரை வெற்றி பெற வைத்து தங்க மோதிரம் வாங்கினேன்' என, அந்தப் பட்டியல் சென்றுகொண்டே இருக்கும். டெல்டா மாவட்டங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். "எனக்குத் தெரியாமல் அங்கு எந்தத் தெருவும் கிடையாது' என்பார். அப்படிப்பட்டவர், ஜெமினி கணேசனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எப்படி?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றொரு புரட்சிப் பெண். பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்த முதல் பெண். இந்தியாவிலேயே எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் கூட. அவர், ஜெமினி கணேசனுக்கு அத்தை முறை. அவரை முதல்வர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள் :

ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவர், குழந்தைக்காக, இரண்டாம் தாரமாக, "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' சந்திரம்மா என்ற பெண்ணை மணந்தார். சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.

தலைவரின் தொடர்பைக் கவனித்தீர்களா? இதுவரை முத்துலட்சுமி ரெட்டியைப் பெருமைப்படுத்தியவர்கள் யாரும், அவருடைய ஜாதியைக் கேட்டறிந்ததில்லை. அதை எடுத்துச் சொன்னதும் இல்லை. முத்துலட்சுமி சேர்த்துக்கொண்ட பரிசுகளும், பட்டங்களும், சிறப்புகளும், அவருடைய உழைப்புக் கிடைத்தனவே அன்றி, அவருடைய ஜாதிப் பின்னணிக்கு கிடைத்தவை அல்ல. அந்த வகையில், முத்துலட்சுமி ரெட்டியை ஒரு ஜாதி வளையத்துக்குள் சுருக்கிய பெருமை, தலைவரைத் தான் சேரும்.

முதல்வருக்கு, தான் பிறந்த ஜாதி மீது பற்றும், பாசமும் இருப்பதால் தானே, "இசை வேளாளர் சமுதாயத்தில் பிறந்த' என்று கூட குறிப்பிடாமல், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். இவரை விட, தமிழகத்தையே சமத்துவபுரமாகக் காண விழையும் தலைவர், வேறு யாராக இருக்க முடியும்? அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் சொல்கிறார்:

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டுமென்றால், ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி. எனவே, எனக்கும் ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை, வாலியோ அல்லது பாலச்சந்தரோ பிரித்துப் பார்த்து, "உனக்கு சொந்தம் இல்லை' என்று சொல்ல முடியாது அல்லவா?' என்கிறார். முத்துலட்சுமி ரெட்டியை மட்டுமின்றி, ஜெமினி, வாலி, பாலச்சந்தர் என மூன்று ஜாம்பவான்களையும் ஜாதி வளையத்துக்குள் அடக்குகிறார். மூவரும் ஒரே ஜாதி என அடையாளம் காட்டுகிறார்.

விழா தொடர்பான விஷயங்கள் தவிர, இதுவரை எங்குமே, எதுவுமே பேசியிராத பாலச்சந்தர் ஏன், "உனக்கு சொந்தமில்லை' என சொல்லப்போகிறார்? கலைஞரை வாழ்த்துவதைத் தவிர தொழில் வேறில்லை என வாழ்ந்துவரும் வாலி ஏன் கேட்கப்போகிறார்? இவர்களின் ஜாதியைச் சுட்டிக்காட்டுவதன்றி, முதல்வருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடும் என என்னால் யூகிக்க முடியவில்லை.

இந்த ஒரு நிகழ்ச்சி தான் என்றில்லை. "தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி நான்; பரிதிமாற் கலைஞர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவராக இருப்பதால் தான் "ஸ்பெக்ட்ரம்' ராஜா மீது புகார் சொல்லப்படுகிறது; பிற்படுத்தப்பட்டவனாக பிறந்தது தான் நான் செய்த பாவமா?' என, எவரை எடுத்தாலும், எதை எடுத்தாலும், ஜாதியைச் சொல்லி அடையாளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

"நீ யார்?' என்று நம்மை யாரேனும் கேட்டால், "நான் முதலியார்; ரெட்டியார்; நாயுடு; தேவர் என்றெல்லாம் சொல்லாமல், "நான் தமிழன்' என தலைநிமிர்ந்து சொல்லும் காலம் வரவேண்டும்' என அடிக்கடி சொல்லி வருகிறார், துணை முதல்வர் ஸ்டாலின்.

இதை முதல்வர் படித்ததில்லையோ?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=132174&Print=1

Sunday, February 26, 2012

மக்களைக் காப்பது விளையாட்டல்ல…

February 25, 2012
-
அச்சிட அச்சிட

சென்னையில் அண்மையில் ஒரு மாத காலத்துக்குள் இருவேறு வங்கிகளில் பகல் நேரத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இவற்றில் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிமாநிலத்தைச் சார்ந்த ஐந்து கொள்ளையர்கள் வேளச்சேரி அருகே பிப். 23 அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த பிப். 20 ல் திருப்பூரில் காவல் நிலையம் எதிரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இரவில் புகுந்த திருடர்கள் சாவதானமாக 38 கிலோ நகையைத் திருடிச் சென்றிருக்கின்றனர். திருடர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைத் தேடி காவலர் தனிப்படைகள் அலைகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதே திருப்பூரில் ஒரு பிரபல நகை அடகுக் கடையில் கொள்ளை நடந்தது; ஆயினும் காவல்துறையின் புலனாய்வால் குற்றவாளிகள் சிக்கினர்.வள்ளியூரில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி பிப். 23 ம் தேதி நடந்துள்ளது. இது போல மாநிலத்தின் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது அதிகரித்து வருவதை மாலைமலர் பத்திரிகை படித்தாலே உணர முடிகிறது.

இது போன்ற நிகழ்வுகள் தற்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. குற்றம் நடந்த பின்னர் காவல்துறை திறமையாகச் செயலாற்றி வருவது திருப்தியே. எனினும், குற்றம் நடக்காமல் தடுப்பதில் தான் ஒரு அரசின் சிறப்பு இருக்க முடியும். அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது. அதற்காகவே காவல்துறை இயங்குகிறது. குற்றம் நிகழாமல் தடுப்பதே இதன் முதன்மைப்பணி. குற்றம் நிகழும் தருணங்களில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் அரசின் கடமை. அப்போது தான் குற்றம் புரிய அஞ்சும் நிலை உறுதியாகும்.

எனவே தான், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என்ற இரு பிரதானப் பிரிவுகள் செயல்படுகின்றன. சட்டம் ஒழுங்குப் பிரிவின் கடமை, சமுதாயத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாப்பதும், குற்றம் நிகழாமல் தடுப்பதுமே. குற்றவாளிகளை முடக்குவதும் குற்றங்களைப் புலனாய்வதும் குற்றப்பிரிவின் பணி. ஆக, இவ்விரு பிரிவுகளில் சட்டம் ஒழுங்கே முதன்மையானது என்பது விளங்கும்.

இதில் முதன்மைப் பணியில் கோட்டை விட்டுவிட்டு, கொள்ளையர்களை சுட்டுக் கொல்வதில் பயனில்லை. ஏனெனில் கொள்ளையில் இழந்த பொருளின் பெரும் பகுதி மீட்கப்பட வாய்ப்பில்லாமலே போகக் கூடும்; தவிர, கொள்ளையில் தொடர்புடைய பலர் தப்பிக்கவும் உதவக்கூடும். உண்மையில், குற்றவாளிகளைப் பிடிப்பதோ, கொல்வதோ, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலத் தான் கருதப்படும். ஆகவே, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை. ஆனால், நமது அரசு என்ன செய்கிறது?

கடந்த ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் மூன்றாவது முறையாக அதிமுக அரசு அமைந்தபோது தமிழகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. திமுக அரசின் குடும்ப அரசியலும், அராஜகங்களும், கரைகாணாத ஊழல்களும் மக்களுக்கு ஏற்படுத்திய அதிருப்தியே அதிமுகவின் வெற்றிக்குக் காரணமானது. புதிய அரசால் தமிழகம் பொலிவு பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அதிமுக அரசின் பல நடவடிக்கைகளும் பலத்த எதிர்ப்பையும் நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தன. சமச்சீர் கல்வி, கிராம நலப் பணியாளர்கள் பதவி நீக்கம், பேருந்துக் கட்டண உயர்வு, அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் இடமாற்றம், கடுமையான மின்வெட்டு,… என அரசின் சொதப்பல்கள் தொடர்ந்தன.

ஜெயலலிதா முதல்வரானவுடன், ‘மாநிலத்தில் நிலவும் கொள்ளைச் சம்பவங்கள் கட்டுக்குள் வருமா?’ என்று செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உலாவிய கொள்ளையர்கள் (யாரையோ சொல்லி இருக்கிறார். அவர்கள் யார்?) ஆந்திராவுக்குத் தப்பிவிட்டார்கள்’ என்றார்! ஆனால், இப்போது மாதந்தோறும் மாநிலத்தின் ஏதாவதொரு பகுதியில் கொள்ளைகள், கொலைகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மின்வெட்டைக் காரணமாக மக்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.

ஆனால் அரசோ, இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலப்பறிப்பு வழக்குகள் தொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறது. முந்தைய ஆட்சியில் திமுகவினர் நடத்திய அராஜகங்களில், அப்பாவிகளிடம் மிரட்டி நிலங்களைப் பறித்தது மாபெரும் குற்றம்; அதில் சந்தேகமில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீதான பல வழக்குகள் இட்டுக் கட்டப்பட்டவையாக இருப்பதைக் காணும்போது, இந்த நிலப்பறிப்பு வழக்குகளே வீணாகிவிடுமோ என்ற கவலையும் எழுகிறது.

ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்; அரசின் செயல்பாடு பழிவாங்கும் போக்காக கருதப்பட்டுவிடும் என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். அவருக்கே 1996 ல் இதே போன்ற நிலையை திமுகவினர் ஏற்படுத்தியதை மறந்திருக்க மாட்டார்.

ஜெயலலிதாவை முடக்க கருணாநிதி நடத்திய சட்ட விளையாட்டுகளால் தான், அவர் மீது மக்களுக்கு மீண்டும் பரிவுணர்ச்சி வந்தது. அதே போன்ற சூழலை திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுக அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. தவிர, செத்த பாம்பை அடிப்பதில் எந்த வீரமும் இல்லை.

அடுத்து, தனது முன்னாள் உயிர்த்தோழி சசிகலாவைத் துரத்திய பிறகு, அவருடன் தொடர்புள்ளவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்படுகிறார்கள். ராவணன், திவாகரன், நடராஜன், என ஜெயலலிதாவின் முன்னாள் நண்பர்கள் பலரும் இப்போது சிறைக்குள் இருக்கிறார்கள். இதற்காகவும் நமது காவல்துறை மெனக்கெடுகிறது; பல வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன; பல புதிய புகார்கள் பதிவாகின்றன. இதனால், கட்சிக்குள்ளும் நம்பகமற்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

சசிகலா கும்பலுடன் தொடர்பு கொண்டவர் என்று உளவுத்துறையால் சுட்டிக் காட்டப்படும் அதிகாரிகளும், அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அதிகார மையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்கள். இந்த இசை நாற்காலி விளையாட்டுக்கு உதவுவதற்கே காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இவ்வாறாக, அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பொருளாதாரச் சீரழிவின் எதிரொலியாக கொள்ளையர்கள் தமிழகத்தில் வேட்டை நடத்தி வருகின்றனர். அதைத் தடுக்கும் ஆற்றலின்றி கையைப் பிசைகிறது காவல்துறை. அதன் சக்தி ஒருமுகப்படாமல் விழலுக்கு இறைக்கப்படுவதே காரணம் என்பதை இனியேனும் நமது முதல்வர் உணர வேண்டும்.

காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் அதன் முக்கியத்துவத்தை அறியாதவர் அல்ல. துணிச்சலான பெண்மணி, தேசநலனில் விட்டுக் கொடுக்காதவர், காவல்துறை சுயமாக இயங்கச் செய்பவர்,.. என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறப்பட்டதுண்டு. அந்தக் கருத்துக்கள் பொய்யாகாமல் காக்க வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கே உண்டு.

http://www.tamilhindu.com/2012/02/tn-law-and-order-and-crimes/