Tuesday, December 27, 2011




""புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது, பெட்ரோல் கொள்முதல் லாபத்தை அதிகரிக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்,'' என, தமிழக பெட்ரோல் வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:எண்ணெய் நிறுவனங்கள் அனாவசியமாக, ஆடம்பரமாக செலவு செய்கின்றன. இந்த செலவையெல்லாம் நஷ்ட கணக்கில் காட்டுகின்றன.

உண்மையில், கடந்த ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளன. இதை மறைத்து விட்டு, அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன.இதனால், பொதுமக்களும், பெட்ரோலிய வணிகர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோலிய பொருட்களுக்கு, 28 சதவீதம் மாநில அரசு வரி விதிக்கிறது. எனவே, எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வால் மாநில அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதில், மாநில அரசு குறிப்பிட்ட அளவு, வரியை குறைத்தால், லிட்டருக்கு 1.50 ரூபாய் வரை குறையும். ஆனால், மாநில அரசு வருவாயை கருத்தில் கொண்டு, வரியை குறைப்பதில்லை.

பெட்ரோல் வணிகர்களுக்கு, முதலீட்டில் 2.2 சதவீதம் தான், லாபம் கிடைக்கிறது. இந்த தொகையும் பல்வேறு காரணங்களால், எங்களது நஷ்டத்திற்கு காரணமாகிறது. எனவே, பெட்ரோல், டீசல் கொள்முதலில், 5 சதவீத லாபம் கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள சுதந்திரமாக விலை உயர்த்தும் முடிவை வாபஸ் பெற வேண்டும்.இது தவிர, இந்தியா முழுவதும், 12 ஆயிரம் புதிய பங்குகள் துவங்க, மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதனால், ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் பெட்ரோலிய வணிகர்கள், இன்னும் அதிக அளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய பங்குகளுக்கு அனுமதி தரக் கூடாது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள கொள்முதல் ஸ்டிரைக் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இதே போல், எப்போதெல்லாம் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், ஒரு நாள் ஸ்டிரைக் நடத்துவோம்.இவ்வாறு கண்ணன் கூறினார்.

Monday, December 19, 2011

ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு இருந்தால் தீட்டு பட்டுவிடுமா? (ஆர்.எஸ்.எஸ் தீண்டத்தகாத அமைப்பா?) இருக்கிற மத்திய அமைச்சர்களில் மொழி ஆளுமை அதிகம் கொண்டவர், உள்துற




ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு இருந்தால் தீட்டு பட்டுவிடுமா? (ஆர்.எஸ்.எஸ் தீண்டத்தகாத அமைப்பா?)

இருக்கிற மத்திய அமைச்சர்களில் மொழி ஆளுமை அதிகம் கொண்டவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். அதுவும், தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் வெளுத்துக் கட்டக் கூடியவர். தேர்ந்த வக்கீலான கபில் சிபலைப் போலவே, விஷய ஞானம் அதிகம் உள்ளவர் என்றும் சொல்லலாம். ஆனால், இவர்களின் ஞானமெல்லாம், குற்றம் செய்வதையே குல வழக்கமாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவே பயன்படுவதால், அனைத்தும், விழலுக்கு இறைந்த நீராகிவிடுகின்றன.

அப்படி, சமீபத்திலும் கொஞ்சம் நீர் இறைத்திருக்கிறார் சிதம்பரம். "யோகா குரு பாபா ராம்தேவின், ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தூண்டுதல் உள்ளது' என முத்து உதிர்த்திருக்கிறார். எந்தச்சாமானியனும், "மன்மோகன் சிங்குக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கிறது' என்ற ரீதியில் தான் புரிந்துகொள்வான். அத்தனை அதிர்ச்சி தரத்தக்க வார்த்தைப்பிரயோகம். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சின் தூண்டுதல் இருந்தால் என்ன; ஆறுமுகச்சாமியின் தூண்டுதல் இருந்தால் என்ன? ஊழல் என்பது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விஷயம் தானே! ஆர்.எஸ்.எஸ்.,சின் பின்னணி இருப்பதனாலேயே, அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, ஊழலைப் போற்றிப் பாட வேண்டுமா? அப்படி என்ன பயங்கரவாத செயலில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளது? இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் நேரடித்தொடர்பை நிரூபிக்கும் எந்தவொரு ஆதாரமாவது உண்டா? மாலேகாவ்ன் குண்டுவெடிப்பிலும், அஜ்மீர் ஷெரீஃப் குண்டுவெடிப்பிலும் ஒரு சில ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன. இவர்களில், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக் தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டார். தகவல் அறிந்த உடனே, அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்ட சங்கத்தின் மேலிடம், "போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார்' என பகிரங்கமாக அறிவித்தது. இதே வழக்குகளில், ஆர்.எஸ்.எஸ்.,சின் மத்திய செயற்குழு உறுப்பினர் இந்த்ரேஷ் குமார் பெயர், மீடியாக்களில் பெரிய அளவில் அலசப்பட்டது. என்னவென்று? தேவேந்திர குப்தாவுக்கும், இந்த்ரேஷ் குமாருக்கும் தொடர்பு என்று. ஒரே அமைப்பில் இருக்கும் இருவர், தொடர்புகொள்ள மாட்டார்களா, என்ன? இருந்தாலும், "அப்படி யாரையும் நாங்கள் விசாரிக்கவில்லை' என சி.பி.ஐ., இயக்குனரே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

"ஆர்.எஸ்.எஸ்.,சில் இருக்கும் இருவர் மீது புகார் எழுந்ததே, ஆர்.எஸ்.எஸ்., மீது குற்றம் சாட்டுவதற்குப் போதுமானது' எனக் கொண்டால், காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட வேண்டியவர் கல்மாடி அல்ல; அவரது கட்சித் தலைவர் சோனியா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட வேண்டியவர் ராஜா அல்ல; கருணாநிதி. இது ஒரு புறம் இருக்கட்டும். சிதம்பரம் சொன்னதைப் பின்தொடர்வோம்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., உயர்மட்டக் குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "ஊழலுக்கு எதிராக எந்தத் தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், அதற்கு ஆதரவு தர வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு அற்புதமான விஷயத்தை, எவ்வளவு பெரிய ஆபத்து போல சித்தரிக்கிறார், பாருங்கள். "ஊழலுக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரவு தரவேண்டும்' என்பதை, "தேசத்துக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரிக்க வேண்டும்' என்கிற தொணியில் திசை திருப்புகிறார். கர்நாடகா மாநிலம் புத்தூரில் நடந்த, அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

நாட்டில் தற்போது எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், ஊழலுக்கு எதிராகத் திரண்டுள்ள துணிச்சல் மிக்க தனி மனிதர்கள், நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், விழிப்புணர்வு மிக்க ஊடகங்கள், கண்கொத்திப் பாம்பாகச் செயல்படும் நீதித்துறை ஆகியவற்றின் முயற்சிகளை, இந்தச் சபை பாராட்டுகிறது. மேலும், இதுபோன்ற புனிதப் பணிகளில், இந்தத் தேசத்தின் அனைத்து குடிமக்களும், ஆத்ம சுத்தியோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு, தங்களது ஆக்கப்பூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இப்படி முடிகிறது அந்தத் தீர்மானம். இதில் எந்த வரி தேச விரோதமாக இருக்கிறது? சிதம்பரம், மேலும் சொல்கிறார்: ஊழல் எதிர்ப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ்., அறிவித்துள்ளதாம். அதில் ஒரு புரவலராக பாபா ராம்தேவ் இருக்கிறாராம். "இதைவிட ஒரு தேச விரோத காரியத்தை, யாராவது செய்ய முடியுமா' என கேட்பார் போல. காங்கிரஸ் என்னும் கொள்ளைக் கூட்டத்தில் இவர்கள் முக்கிய பிரமுகர்களாக இருப்பார்களாம்; இவர்களை எதிர்க்கும் முயற்சியில் ஒருவரும் ஈடுபடக் கூடாதாம். என்ன நியாயம் இது? ஊழலுக்கு எதிராக யார் திரண்டாலும், காங்கிரசுக்கு எதிராகத் திரண்டதாக, இவர்களே அர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அதற்கு நாமென்ன செய்ய முடியும்? பி.கு.,: சீனப்போரின்போது சிறப்பாக செயல்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, அப்போதைய பிரதமர் நேருவால் அழைக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.,

- ஆர்.ரங்கராஜ் பாண்டே - நன்றி : தினமலர் .....

Saturday, November 19, 2011

தமிழ் எண்கள் பட்டியல்

நம்மில் பலருக்கு தமிழ் எண்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் எண்களை பட்டியல்
ഠ = 0
௧= 1
௨= 2
௩= 3
௪= 4
௫ = 5
௬ = 6
௭= 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧= 11
௰௨= 12
௰௩= 13
௰௪= 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭= 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱= 100
௨௱= 200
௩௱= 300
௱௫௰௬ = 156
௲ =1000
௲௧= 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (பத்து லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (பத்து கோடி)
௱௱௱௲= 1,000,000,000 (நூறு கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲= 100,000,000,000,000 (கோடி கோடி)

http://vidhai2virutcham.wordpress.com/2011/11/19/

Sunday, October 2, 2011

இந்திய நாடாளுமன்றத்தில்...............

இந்திய நாடாளுமன்றத்தில் பன்றிகளும் பணந்தின்னிகளும்...!

தோழர் லெனின் அவர்கள் "பன்றிகளின் தொழுவம் நாடாளுமன்றம்" என்று முத்திரை பதித்த வார்த்தைகளை சொல்லி ஆண்டுகள் நூறு. இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இன்று, பன்றிகள் மட்டுமல்ல, கொலை, கொள்ளை போன்ற செயல்களை செய்பவரின் கூடாரம் ஆகியுள்ளது.

சாதி சங்கங்களை ஆரம்பித்து தான் இந்த சாதியை சார்ந்தவன், என் சாதிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளது. அதனால் எனக்கு இத்தனை தொகுதி வேண்டும் என்று சாதியின் பெயரால் கேட்டு தன் சாதி பெருமிதத்தை காட்டுகிற அவலம் இன்று வளர்ந்து உள்ளது. அதனால் என் சாதிக்காரன் தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று பேசும் நபர்களும் தலைவர்களும் அனைத்துக் கட்சியிலும் உண்டு. அதேபோல் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து செய்து தன்னை சமூகத்தில் பெரிய ரவுடியாக காட்டிக் கொள்பவன் தன்னை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றவாதியாகவும் உள்ளதை இன்று நாம் பார்க்க முடியும்.

இந்தியா மீதும் இந்திய நாடாளுமன்றத்தின் (சட்டமன்றம்) நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அதன் அதிகாரம் நம்மை நேரடியாக பாதிக்கும்போது அதை அம்பலப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அதனால் இந்திய பிரிட்டிஷ் காலணிவாதிகளிடமிருந்து விடுதலை பெற்று பார்ப்பன பனியா கும்பலிடம் ஆட்சி அதிகாரம் வந்த பின் அந்த அதிகார மையத்தில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட சில தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபட்ட அம்பேத்கர், மற்றும் பொதுவுடைமைத் தலைவர்கள், சமூக தளத்தில் பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்திலும் அந்த தேசத்தில் (மாநிலம்) உள்ள சட்டமன்றங்களில் அங்கம் வகித்து பல நன்மைகளை செய்து வந்ததை நாம் பார்க்க முடியும்.

ஆரம்ப கட்டத்தில் பணக்காரர்கள் தேர்தலில் பங்கு பெருவதற்கும் தடை விதித்த கட்சிகளும் உண்டு. காங்கிரஸ் போன்ற கட்சிகளை மிட்டா மிராசு பார்ப்பன பனியா அரசு என்று நேரடியாக பொதுவுடைமைக் கட்சிகள், சோசலிச கட்சிகள் சமூக நீதிக்காக போராடிய பல்வேறு தலைவர்கள் பரப்பல் செய்தனர். அதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் பண்ணைக்காரர்கள், பண முதலைகள் நேரடியாக களத்தில் இறங்கியது இல்லை. தமிழகத்தில் மூப்பனார் போன்றவர்கள் கூட கடைசி வரை மக்களை சந்தித்து வாக்கு கேட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை என்பது தெரியும்.

நேரு குடும்பம் இந்திய விடுதலைக்கு "ஆனந்த பவனை" கொடுத்து விட்டு இந்தியாவை தன் வீடு ஆக்கிக் கொண்டார் என்ற விமர்சனம் இன்றும் செய்யப்படுவதை நாம் பார்க்க முடியும். காங்கிரஸ் கட்சியில், காமராசு, கக்கன், நந்தலால், லால் பகதூர் சாஸ்திரி, பொதுவுடைமைக் கட்சியில் டி.கே.டி.தங்கமணி, ஜீவா போன்ற பல்வேறு தலைவர்களும் சமூக களத்தில் அம்பேத்கர், ராம் மோகன் லோகியா போன்றவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் பணி செய்தார்கள். செய்ய முயன்று தோற்று போனார்கள். இவர்களின் பெயரை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் படம் பெரிதாகப் பொறிக்கப்படும். இவர்கள் பெயரை வைத்து அரசியல் செய்வதும் இன்றும் நடந்தேறி வருகிறது.

இந்தியாவின் முதல் அமைச்சரவையில் டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி மீது ஊழல் வழக்கு அப்போது பேசப்பட்டது. அப்போது இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த நேரு அவரை உடனே பதவியிலிருந்து நீக்கினார். அதன் பின் நெருக்கடி நிலை புகழ் இரும்பு மங்கை என்று போற்றப்படுகின்ற இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் பெருக்கெடுத்தது. இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி நிழல் உலக அரசியல் செய்து வந்தார். அந்த ஊழல் எல்லாம் பேசப்பட்டாலும் அது பெரிய அளவில் மக்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று வந்தன.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை காலத்தின் மிக மோசமான ஒடுக்குமுறை காரணமாக காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திரா காந்தி அதிகார கோட்டை தகர்க்கப்பட்டது. ஆனாலும் அது நீடித்த ஆட்சியாக இருக்கவில்லை. அதன் பின் செல்வாக்கோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா காந்தி. அவரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராஜீவ்காந்தி, அவர் ஆட்சிக் காலத்தில் 60 கோடி போபர்ஸ் ஊழல் இந்தியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னிட்டு 1989இல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ராஜீவ் காந்தி பதவி இழந்தார். வி.பி.சிங் தலைமையமைச்சர் ஆனார். இந்த ஆட்சி 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அந்த ஆட்சியை சமூக நீதிக்காக போராடுபவர்கள் அவர் ஆட்சியை இன்றும் பெருமையாகப் பேசி வருகின்றனர். அவர் ஆட்சிக் காலத்தில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிசன் அறிக்கை தாக்கல் செய்தார். அதனால் சமூக நீதி இயக்கத்தார் அவரைக் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

இடைப்பட்ட காலங்களில் 1977 மொரார்ஜி தேசாய், 1989 வி.பி.சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சியாக இருந்தது. அதன் பின் மீண்டும் வந்த நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ஊழல் தலைவிரித்தாடிது. அவர் ஆட்சிக் காலத்தில் தொலை தொடர்பு மந்திரியாக இருந்த 'சுக்ராம்' மீது 400 கோடி ஊழல் பெரிதாகப் பேசப்பட்டது. அதன் பின் மந்திரி பதவி இழந்தார். அதேபோல் பங்கு சந்தையில் அர்சாத் மேத்தா 1000 கோடி ஊழல். அதில் பல காங்கிரஸ் கட்சி தலைவர் பங்கு பெற்றனர் என்றும் அப்போது பேசப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த பாரதிய சனதா ஆட்சி காலத்தில் பெரிய ஊழல் நடைபெறவில்லை. என்றாலும் வாஜ்பாய் வளர்ப்பு மகன் மற்றும் ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. குற்றச்சாட்டோடு அது மூடி மறைக்கப்பட்டது. தற்போது பாரதிய சனதா ஆட்சிக்காலத்தில் கார்கில் போரில் உயிரிழந்த இராணுவத்தினருக்கான வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இப்போது நடந்து வரும் ஆட்சியில் ஊழல் மிகுந்த ஆட்சியாக இந்தியாவை அலைக்கழித்து வருகிறது. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாட்டுத் தலைவராக இருந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் அவர்கள் அப்போது நிதி அமைச்சராகவும், இணை நிதி அமைச்சராகவும் இருந்தனர். சோனியாவை வெளிநாட்டுக்காரி அவரை இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆவதை எதிர்த்த காரணத்தால் உலக பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக விளங்கி வந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோர் தலைமை அமைச்சர் மற்றும் நிதி அமைசம்சர் பதவி ஏற்று இந்தியாவை நவகாலனியாக்கி விட்டனர் என்று இடதுசாரிகள் குற்றம் சுமத்துவதில் இருந்து நாம் அதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு இந்தியாவில் ஊழல் அற்ற ஆட்சியை நிறுவ முயற்சி எடுப்பேன் என்று மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி கொண்டு வருகிறார்கள்.

2007 இல் பங்கு சந்தையில் ப.சிதம்பரம் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை அடித்தார். நிதி அமைச்சர் என்ற போர்வையில், அதனால் அந்த கொள்ளைக்கு பின் பங்கு சந்தை சீர் செய்ய எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாது, அடைவதற்கு வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

2009 பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக தொகுதிகளில் வெற்றி பெற்றும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்கள் கிடைக்காததால் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அதற்கு அதிகமாக வாய்ப்புக் கிடைத்தது. அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அப்போது பதவி ஏற்கும்போது யாருக்கு என்ன இலாகா ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடித்தது. அதையெல்லாம் மீறி மன்மோகன் சிங் தலைமை அமைச்சர் ஆனார். அவர் பிரதமர் ஆன பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பிணக்கு வரத் தொடங்கின. ஆனாலும் அதை சரி செய்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மன்மோகன்.

இப்போது இந்தியாவையே புரட்டிப் போட்டு இருக்கும் அலைகற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல் இவையெல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முறை மக்களிடம் அம்பலப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சி நலன், மற்றும் மாநிலத்தில் நடைபெறும் ஊழலை மறைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டன. குறிப்பாக கர்நாடகாவில் பா.ச.க.வின் எடியூரப்பாவின் நில ஒதுக்கீடு ஊழல், ஒரிசாவில் பிஜு பட்நாயக் ஊழல், உ.பி. மாயாவதியின் ஊழல், ஜார்கண்ட் மது கோடாவின் ஊழல், தமிழகத்தில் செயலலிதா மீதான ஊழல், பீகார் லாலு பிரசாத் யாதவின் ஊழல் இந்தியா முழுக்க ஊழல் மிகுந்துள்ளது. இதை எல்லாம் மறைக்கவும் தங்கள் கட்சி நலன் சார்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன.

ஊழல் என்று வந்தால் அதற்கு காங்கிரஸ் மட்டும் இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு வாதத்தில் தொடர்புடையதாகவும், ஊழல் என்ற பெருங் கடலில் மூழ்கிக் களித்ததாகவும் இருந்திருக்கின்றனர். ஓரிருவர் எத்தகைய ஊழலிலும் தொடர்புடையவராக இல்லாமல் இருந்திருந்தால், அவர் எந்தவிதப் பதவிகளையும் ஏற்காதவராக இருந்திருப்பார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஊழல், இன்று காற்றைப் போல எங்கும் ஊழல் இந்திய நிர்வாகத்தில் நிரம்பியுள்ளது.

63 ஆண்டு விடுதலைப் பெற்ற இந்தியாவில் 51 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஊழலைப் பற்றி பேச என்ன நேர்மையுள்ளது என்கிற நியாயமான மக்கள் கேள்விக்கு சோனியாவும், மன்மோகனும் அவரின் கூட்டாளிகளும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு எழுகிறது. அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பேசிய மன்மோகன்சிங் தான் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு முன் நின்று 2ஜி அலைக்கற்றை விடயத்தில் பதில் அளிக்க அணியமாக உள்ளேன் என அறிவித்து, அங்கு கூடியுள்ள அனைத்து கொள்ளை ஊழல் பேர்வழி வழிமொழிந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தனக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்றும் தான் அய்யத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் பேசியதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு என்பது பா.ச.க. தலைவர் முரளி மனோகர் ஜோசி தலைமையில் இயங்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அவசியம் என்ன என்பது காங்கிரஸ் கட்சியின் கேள்வி. நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவுக்கு தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் விசாரிக்கும் உரிமை உண்டே தவிர, இதன் பின்னணி பற்றி விசாரிக்கவோ, தொடர்புடையவர்கள் என்று கருதுபவர்களை அழைத்து விசாரிக்கவோ உரிமை கிடையாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு என்பது அப்படிப்பட்டதல்ல. பிரச்சினையின் எல்லா பரிமாணங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றக் கூட்டுக் குழு. தேவைப்பட்டால் இந்த குழு தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஏன் சோனியா காந்தி, உள்ளிட்ட யாரையும் கூப்பிட்டு விசாரிக்கலாம். கேள்வி எழுப்பலாம். இத்தனைக்கும், நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பா.ச.கவைச் சார்ந்த முரளி மனோகர் ஜோசி. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படுமானால் அதன் தலைவர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். அப்படி இருந்தும் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க ஏன் தயங்குகிறது என்பதுதான் அய்யத்தை எழுப்புகிறது.

மன்மோகன் ஆட்சி ஏற்றுக் கொண்ட பின் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வாரி அரசின் சலுகை வழங்கப்படுகின்றன. இந்தியாவின் வட பகுதியில் குறிப்பாக சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் கிடைக்கும் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு அந்த மாநில அரசுகள் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்துக் கொடுத்து அங்கு வாழும் மக்களை வெளியேற்ற அரசுகள் முயன்று வருகின்றன. தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற பன்னாட்டு கொள்ளையர்களை எதிர்த்து அங்கு மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக பழங்குடிகள், மாவோயிஸ்ட் கட்சியினர் இந்த பன்னாட்டு கொள்ளையர்களை எதிர்த்து போராடி வருகின்றனர். தமிழகத்தில் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்களை அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தை முன்னால் முதல்வர் செயலலிதாவும் அவரின் தோழியின் குடும்பமும் சேர்ந்து கொள்ளை அடித்தன. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடந்தன. அதன்பின் 2006 இல் தமிழகத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க. கட்சியினர் இன்று தமிழகத்தை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதனால்தான் கருணாநிதி தன்னை இராசராசன் வாரிசு என்று தம்பட்டம் அடித்து தன்னை முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு மூன்று இளவரசர்களும் ஒரு இளவரசியும் சேர்ந்து இந்த தமிழகத்தை இவர்களின் சொர்க்க பூமியாக நினைத்து ஆண்டு வருகின்றனர். இந்த முடிசூடா மன்னனின் கீழ் பணிபுரியும் அமைச்சர்கள் தமிழகம் தாண்டி இந்தியாவில் தங்களை முடிசூடிக் கொள்ள முயன்று வருவதின் விளைவாக இன்று அலைகற்றை ஊழலில் ராசராசனை மிஞ்சிய மன்னனாக இன்று ஆ.ராசா பதவி ஏற்றுக் கொண்டார். ஏற்றுக் கொண்டு இந்த நாட்டின் தனி மன்னனாக கருதிக் கொண்டு செயல்பட்டதால் இன்று அவரின் மணிமகுடம் வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த மணி மகுடம் வீழ்வதற்கு இவரின் கொள்ளை பங்காளிகள்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, கனிமொழி, கருணாநிதி என இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு தொழில் அதிபர்கள், தொழில் போட்டிகள் மற்றும் இந்தியாவை வெளிநாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பின் விளைவுதான் இந்த அலைக்கற்றை ஊழலும் அது வெளிவந்த பின்னணியையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இன்று இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கட்சிகளிலும் ஊழல் மிகுந்துள்ளது. இந்த இந்தியாவை இனி யாரும் காப்பாற்ற முடியாது.

இந்த அலைக்கற்றை ஊழலில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நட்டம் பல கோடிகள். எதிர்க் கட்சிகள் இந்தச் சிக்கலை எழுப்பாமல் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் மன்றத்தை விழிப்படையாமல் வைத்திருந்தால், இந்த அரசு காதும் காதும் வைத்தாற் போல் முடித்து வைத்து இருப்பார்கள். இந்த ஊழலை பொறுக்க மாட்டேன் என்று திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றனர் மன்மோகனும் சோனியாவும். அதேபோல் தமிழகத்தை ஆண்டு வரும் இராசராசன் கருணாநிதி தனக்கு தனிப்பட்ட முறையில் பணம் ஏதும் இல்லை. எனக்கென்று இருந்த வீட்டையும் இந்த மக்களுக்காக ஒப்படைத்து விட்டேன் என கபட நாடகம் ஆடுகிறார். அதுமட்டுமல்ல, ஊழல்வாதி இராசாவை காப்பாற்ற "ஆரியர் திராவிடர்" போர் என்ற ஒரு கட்டுக்கதை அமைத்து ஒரு திரைக்கதை அமைத்து தமிழக மக்களை ஏமாற்ற எத்தனிக்கிறார். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சி என்று ஒன்றை கூட நாம் சுட்டிக் காட்ட முடியாது. அனைத்து தேர்தல் கட்சிகளும் ஊழல் மிகுந்த கட்சிகளாகத்தான் உள்ளது. எந்த கட்சிக்கும் வேறுபாடு இல்லை.

ஊழல் நிறைந்த இந்தியாவை தமிழகத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று மக்கள் மாற்று வழி தெரியாமல், திணறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மக்களை தேர்தல் வழி போலி சனநாயகத்தை ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆகையால் மாற்று அரசியலை எதிர்நோக்கி மீண்டும் போராட்ட களத்தை நோக்கி அணியமாகி களம் அமைக்க முயன்று கொண்டு வருகின்றனர். அந்தக் களத்தில் இந்த தேர்தல் கட்சிகளின் அரசியல் அயோக்கியத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது நம்மை போன்ற தமிழ் தேசிய இயக்கங்கள், மார்க்சிய லெனினிய இயக்கங்கள், மற்றும் சனநாயக ஆற்றல்களின் கடமையாகும். அதை நோக்கி அரசியல் விடுதலையை முன் நகர்த்துவோம். ஊழல்வாதிகள் மக்கள் விரோத அரசை தூக்கி எறிவோம்.

http://www.padukai.com/topic14243.html?sid=20b65ee65cc7b9c47e09789b9c706f81#p27790

Sunday, September 4, 2011

PATRIOTISM OF INDIAN Parliamentarians நமது எம்.பி.க்களின் தேசபக்தியைப் பாரீர்



கி.பி.2001 ஆம் ஆண்டில் நமது பாராளுமன்றக்கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது பாராளுமன்றத்தைத் தாக்கினர்.

அப்போது தனது உயிரைக்கொடுத்து நமது மக்கள் பிரதிநிதிகளை காத்தவர்கள் பாதுகாப்புப் படைவீரர்கள்!!!

அவர்களது நினைவஞ்சலிக்கு வருகைதந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 13.நமது பாராளுமன்றத்தின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 560!

ஆதாரம்:விஜயபாரதம் தேசிய வார இதழ்,பக்கம் 15,23.1.2009.
http://www.aanmigakkadal.com/2009/08/blog-post_710.html

Saturday, September 3, 2011

துன்பத்தையும் ரசியுங்கள்!

சந்திரவம்சத்தை சேர்ந்த மன்னன் ரந்திதேவன். பரம தயாளமூர்த்தியான இவனிடம், யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான். இவனது தேசத்தில் யாகங்கள் நடந்த வண்ணம் இருக்கும். மக்கள் பஞ்சமின்றி வாழ தேவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தயாகங்கள் செய்யப்பட்டன. யாகம் செய்தே இவனது கஜானா காலியாகியும் விட்டது.


நல்லவர்களைச் சோதித்து, அவர்களை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக்குவதற்காக ஆண்டவன் பல சோதனைகளைக் வைப்பான். ரந்திதேவன் விஷ்ணு பக்தன். அவனுக்கு அந்த மகாவிஷ்ணு கொடுத்த சோதனையின் அளவு எல்லை மீறியது. யாகம் செய்வதே பஞ்சம் வரக்கூடாது என்ற கராணத்துக்காகத் தான். ஆனால், ரந்திதேவனின் நாட்டில் பெரும் பஞ்சத்தை உண்டாக்கினான். எங்கும் பசி பசி என்ற ஓலம். ரந்தி
தேவன் அரண்மனைத் தானியக் களஞ்சியத்தில் இருந்த அத்தனை பொருட்களையும் மக்களுக்கு வழங்கினான். அதுவும் காலியானது. ராஜா, ராணி, பிள்ளைகளுக்கு கூட அரண்மனையில் உணவில்லை. அவர்கள் பசியில் தவித்தனர். மக்களுக்கு எப்படியோ இந்த விஷயம் தெரிந்து விட்டது. தங்கள் இல்லங்களில் இருந்த கொஞ்ச அரிசியைச் சேகரித்து கூழாகக் காய்ச்சி ராஜா வீட்டுக்கு வந்து, ""தாங்களும், ராணியும், பிள்ளைகளும் சாப்பிட்டு எங்களைக் காக்க வேண்டும். உங்களால் பலனடைந்த நாங்கள் இந்த நன்றிக்கடனைக் கூட செய்யாவிட்டால், உங்கள் பிரஜைகளாக வாழ்ந்ததில் அர்த்தமே இல்லை,'' என்றனர்.

மக்கள் சொல்லை மன்னன் தட்டவில்லை. வாங்கிக் கொண்டான். அவர்கள் சாப்பிட இருந்த வேளையில், ஒரு அந்தணர் அங்கே வந்தார். அவர் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணுவே தான்.

""ராஜா! பசி தாங்கவில்லை. ஏதாவது கொடுங்களேன்,'' என்றார். ராஜா மட்டுமல்ல, அந்த குடும்பத்தினர் அனைவருமே தாங்கள் குடிக்க இருந்த கஞ்சியில் ஒரு பகுதியை அவருக்கு கொடுத்தனர். அவர் குடித்துவிட்டு கிளம்பிவிட்டார். மீதியை குடிக்க இருந்த வேளையில் இன்னொருவன் வந்தான்.

""ராஜா பசி தாங்கலையே,'' என்றான். அவனுக்கும் ஒரு பகுதி தரப்பட்டது. இப்படியே மூன்றாமவன் ஒருவனுக்கும் கொடுத்தார்கள். மிச்சத்தை ராணியும், பிள்ளைகளும் குடித்து விட்டார்கள். ராஜா மட்டும் தன் பங்கைக் குடிக்கவில்லை. ஒருவேளை வேறு யாராவது வந்தால் "இல்லை' என்று சொல்லி, பாவத்தைச் சேர்க்க வேண்டி வருமே! மாலை வரை வராவிட்டால் குடிப்போம்,'' என எடுத்து வைத்திருந்த வேளையில், ஒரு வேட்டைக்காரன் சில நாய்களுடன் வந்தான்.

அவனை நாராயணனாகவே பார்த்த ராஜா அவனுக்கும், நாய்களுக்குமாக கஞ்சியைக் கொடுத்துவிட்டு மயக்க நிலையில் மகாவிஷ்ணுவிடம், ""பரந்தாமா! இங்கே வந்த எல்லாருமே ஏதோ ஒரு துன்பத்துடன் என்னை அணுகினார்கள். அவர்களைப் போல இந்த உலகில் கோடானு கோடி மனிதர்களும், பிற ஜீவராசிகளும் துன்பத்தால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களின் உள்ளம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கும்? அவர்களது உள்ளங்களுக்குள் என்னை அனுப்பி வை. நான் எல்லா ஜீவராசிகளின் துன்பத்தையும் எடுத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கிறேன். அந்த துன்பத்திடம் சரணடைகின்றேன் ,'' என்று உருக்கமாகப் பிரார்த்தித்தான். பின்னர். அங்கிருந்த ஒரு குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்தாவது உயிர் வாழலாம் என குடிக்க இருந்த வேளையிலும், பரந்தாமன் தன் லீலையைக் காட்டினான். அப்போதும், ஒருவன் வந்து "தாகமாயிருக்கிறது' என்று சொல்ல, அவனுக்கு அதை கொடுத்து விட்டான். அப்போது பரந்தாமனிடம்,""கேசவா! இவனுக்கு கொடுத்த இந்த தீர்த்தத்தை உனக்குக் கொடுத்ததாகக் கருதுகிறேன். நீயே இதைப் பருகியதாக நினைக்கிறேன். உன் தாகம் தீர்ந்தால் உலகத்தின் தாகமே தீர்ந்துவிடுமே,'' என்று
வணங்கினான். இந்த தியாகத்தைப் பார்த்து, பரமாத்மாவே அவன் முன் தோன்றி, அவனுக்கு பரமபதத்தை அருளினார்.

http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=900

Friday, August 19, 2011

நெருக்கடி நிலை ?

நெருக்கடி நிலை ? அச்சிடுக மின்-அஞ்சல்
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு
செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 19:04

5605168488_a49df5c585_b

1968ல் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 45 ஆண்டுகள் கடந்தும் சட்டமாகாமல் இருப்பது அன்னா ஹசாரேவின் குற்றமா ? இன்று காங்கிரஸ் சார்பாக பேட்டியளிக்கும் தலைவர்கள் சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை, அதை ஒரு பூங்காவில் போராட்டம் நடத்துவதன் மூலமாக முடிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்களே…. 1968 முதல் ஒரு 10 ஆண்டுகளைத் தவிர்த்து, தொடர்ந்து ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தானே ? என்ன செய்து கொண்டிருந்தார்கள் இத்தனை ஆண்டுகளாக ?

காங்கிரஸ் எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நாம் ஏற்கனவே பல முறை விவாதித்திருக்கிறோம். அதன் கோர வடிவத்தைத் தான் இப்போது பார்க்கிறோம். இந்திரா காந்தி கொல்லப் பட்ட பிறகு, டெல்லி வீதிகளில் 3000த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு காரணமான தலைவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் அளவுக்கு வக்கிர புத்தியுடையது காங்கிரஸ் கட்சி. அந்த வக்கிர புத்தியின் ஒரு வடிவமே இன்றைய கைது நடவடிக்கை.

ஏன் இந்த லோக் பால் மசோதாவைப் பார்த்து காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது ? ஏனென்றால், இந்த மசோதா சட்டமானால், பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிறைக்குள்ளே இருக்க வேண்டும் என்ற அச்சமே…. ஒவ்வொரு தேர்தலை சந்திப்பதற்கும், கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி, அதற்கு கை மாறாக, பதவிக்கு வந்ததும், கார்ப்பரேட்டுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இத்தனை ஆண்டுகளாக கட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த லோக்பால் மசோதா, பயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மசோதாவை சட்டமாக்காமல், அதற்கு பதிலாக வலுவற்ற ஒரு சட்டத்தை உருவாக்கும் தீய நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி அத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. மார்ச் மாதத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கிய போது, நாடு முழுவதும் திரண்ட ஆதரவைப் பார்த்து ஆடித்தான் போனது காங்கிரஸ் கட்சி. அந்த அச்சத்தின் காரணமாகத் தான், அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கலந்து ஆலோசனை நடத்தி சட்ட வரைவை உருவாக்குவது என்று முடிவெடுக்கப் பட்டது.

அரசு சார்பில், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல் மற்றும், சல்மான் குர்ஷீத் ஆகியோரும், மக்கள் சார்பாக சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே, அன்னா ஹசாரே, மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இருப்பது என்று முடிவெடுக்கப் பட்ட முதலாகவே, மக்கள் சார்பாக இருந்த குழுவை சிதைக்க அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் காங்கிரஸ் கட்சியினர். முதலில், தந்தையும் மகனும் ஒரு குழுவில் இருக்கக் கூடாது என்றனர். பின்னர் சாந்தி பூஷண் மீது குற்றம் சுமத்தும் வகையில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ உரையாடலை தயாரித்து, டெல்லி பத்திரிக்கைகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர். அந்த உரையாடல் பொய் என்று சாந்தி பூஷண் மறுத்ததும், ஒரு சோதனைக் கூடம், அதை சோதித்து உண்மையான சிடி என்று அறிக்கை வெளியிட வைத்தனர். பின்னர் சாந்தி பூஷண் நொய்டா மாகாணத்தில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்று ஒரு குற்றச் சாட்டுகளை சுமத்தினர். இந்த தந்திரங்கள் எதுவுமே பலிக்காமல் போனதும், இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிராகரித்து, பேச்சுவார்த்தையை முடிவுக்கு வந்தனர். பேச்சு வார்த்தை நடப்பதை அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என்று மக்கள் குழு கோரியதை, நிராகரித்து, அந்த பேச்சுவார்த்தைகளையும் ரகசியமாக நடத்தினர்.

இன்னும் ஒரு படி கீழே போய், அன்னா ஹசாரே ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் மீது ஏதேனும் குற்றச் சாட்டுகள் உள்ளதா என்று விசாரித்தார்கள். அன்னா ஹசாரே ராணுவத்தில் அப்பழுக்கில்லாமல் பணியாற்றினார் என்பது தெரிய வந்ததும் அதை கைவிட்டார்கள்.

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கபில் சிபலும், ப.சிதம்பரமும், ஒரு சிலவற்றைத் தவிர அன்னா ஹசாரே கேட்டுக் கொண்ட அத்தனை ஷரத்துக்களையும் உள்ளடக்கியே லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஒரு சில தானே முக்கியமானவை ?

மக்கள் மசோதா பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறது, அரசு மசோதா கூடாது என்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் அனுப்பும் புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று அரசு மசோதா கூறுகிறது. மக்கள் மசோதா, தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறது. லோக்பால் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்கிறது அரசு மசோதா. மக்கள் மசோதா, லோக் பால் அமைப்புக்கு வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் வழக்கை நடத்தவும் அதிகாரம் வேண்டும் என்கிறது. அரசு மசோதா, லோக்பாலுக்கு எப்ஐஆர் போடும் அதிகாரம் கூடாது என்கிறது. மக்கள் மசோதா, எப்ஐஆர் போடும் அதிகாரம் வேண்டும் என்கிறது. லோக்பால் அமைப்பு தனியாகவும், சிபிஐ தனியாகவும் வேண்டும் என்கிறது அரசு மசோதா. இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்கிறது மக்கள் மசோதா. குறைந்த பட்ச தண்டனை 6 மாதங்கள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 வருடங்கள் எனவும் கூறுகிறது அரசு மசோதா. குறைந்த பட்ச தண்டனை 10 வருடங்கள் எனவும், அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்றும் மக்கள் மசோதா கூறுகிறது.

இவைதான் ப.சிதம்பரம் குறிப்பிட்ட ‘ஒரு சில’. இந்த ஷரத்துக்கள் மொத்த சட்டத்தையுமே அல்லவா மாற்றி விடுகிறது ? அதிக பட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்று இப்போது உள்ள லஞ்ச ஒழிப்புச் சட்டமே சொல்கிறதே… பிறகு எதற்கு புதிய சட்டம் ? சிபிஐ போன்ற அமைப்புகளை தனியாக வைத்திருந்தால் தான், தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டவும், வேண்டியவர்களை குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்றவும் முடியும் என காங்கிரஸ் அரசு நினைப்பதே, சிபிஐ அமைப்பு தனியாக இருக்க வேண்டும் என்பது.

3528675790_d50293b1dc_z

காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களைப் போல பெரும்பான்மையான மக்கள் ஊழல் பேர்விழிகள் அல்ல என்பதே…. ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்களைப் பார்த்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நாட்டை சுரண்டும் இந்த ஊழலை ஒழிக்கும் காலம் வந்து விட்டதாகவே கருதுகிறார்கள். அதனால் தான் அன்னா ஹசாரே கைது செய்யப் பட்டவுடன், நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் அயோக்கியத்தனங்களை தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்று வீதிக்கு வந்து போராடும், மக்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். படித்த இளைஞர்கள். வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் இருந்து தன்னிச்சையாக போராட வீதிக்கு வந்து சிறைக்கும் செல்கிற இந்த இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை மன்னிக்க மாட்டார்கள் என்பதை உணரத் தவறியதே, இன்றைய அன்னா ஹசாரேவின் கைது நடவடிக்கை.

ar

உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த உடனேயே 5000 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் 3 நாளைக்கு மேல் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்றும் நடைமுறைச் சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்தால், யார்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில், வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக ஒரு போராட்டம் நடத்துவதை விட, வேறு எந்த முறை சிறந்த முறையாக இருக்க முடியும் ? இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தித் தானே காந்தி சுதந்திரம் பெற்றார் ? காந்தி தனது ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிரிட்டிஷாரிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பின்பா நடத்தினார் ? காந்தியின் பெயரை கூறிக் கொள்ளும் இந்த காங்கிரஸ் தலைவர்கள், இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைப்பது ஒரு வகையில், காங்கிரஸின் அசல் முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது. இது காங்கிரஸை தனிமைப் படுத்துவதற்கு உதவவே செய்யும்.

இந்தியாவையே மாற்றப் போகிறேன் என்று கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிய ராகுல் காந்தியின் கனத்த மவுனம், அவர் எப்படி மாற்றப் போகிறார் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.

கொள்கை மாறுபாடுகளை மறந்து, ஒரு நியாயமான நோக்கத்துக்காக, இடது சாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடிக் கட்சி மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் ஒன்றாக ஒரு அணியில் நின்று காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்கு ஆளாக்க முயன்றிருப்பது, வரவேற்கத் தக்க விஷயம். மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை அமலுக்கு கொண்டு வர முனையும் காங்கிரஸ் கட்சியை, ஒழித்துக் கட்டுவதற்கு, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை கருவறுக்கும் பணி, தமிழர்களாகிய நமக்கு கூடுதலாகவே இருக்கிறது.


Tuesday, August 16, 2011

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

இந்தப் படங்களை கொஞ்சம் பாருங்கள் ……

இது இந்தியா தான் …

இவர்கள் நம் மக்கள் தான் ….

ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத்
தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள்.

….

இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் -
புருஷன், பெண்டாட்டி, 3 பிள்ளைகள்
அடங்கிய – ஆக மொத்தம் 5 பேர் மட்டும்
கொண்ட ஒரு குடும்பத்திற்காக கட்டப்பட்டுள்ள
மாளிகை – 27 அடுக்கு மாடி வசந்த மாளிகை !

இதை எல்லாம் உள்ளே போய் பார்ப்பதற்கு
நமக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே
புகைப்படத்திலாவது பார்ப்போம் !!

வெளித்தோற்றம்

வெளி வராந்தா

இது பால் ரூம் …. !

இது பாத் ரூம்

இது டிரெடிஷனல் லவுஞ்ச் !

இது மாடர்ன் லவுஞ்ச்

இது ஹோம் தியேட்டர் !

(வீட்டுக்குள்ளேயே திரை அரங்கம் )

இது ஹெல்த் ப்ளேஸ் - நீச்சல் குளம், ஜிம் வகையறா

இது வாகனங்களை நிறுத்தும் இடம் …

எங்கே என்று கேட்கிறீர்களா ? 1 முதல் 6 மாடி வரை !

இது தான் கடைசி (மொட்டை) – 27 வது மாடி ..!!!!!!!!

மீண்டும் ஒரு முறை முழுசாக ஆசை தீர – பார்க்க …

இந்த மாளிகை யாருடையது என்கிறீர்களா ?

உங்களுக்கே ஓரளவு தெரிநதிருக்கும்


http://vimarisanam.wordpress.com/2011/08/12/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/

நிறைய இருக்கிறது சொல்ல -

- மீண்டும் சந்திப்போம் ……

Saturday, August 6, 2011

இத தவறாம படிங்க நண்பர்களே ....

மீடியாக்கள் மீதான கருணாநிதியின் கோபம்...
Mr. Karunanidhi, just Think before You blame Media - Tamil Poltics News Article

அன்பார்ந்த கருணாநிதி அவர்களே... தமிழாய்ந்த அறிஞராகிய நீங்கள் அறியாதது அல்ல. குறளோவியம் படைத்த உங்களுக்கா தெரியாது? தேரான் தெளிவும், தெளிந்தான் கண் அய்யுறவும் தீரா இடும்பையல்லவா தரும்... அந்த தீராத இடும்பில் தானே இன்று மீளாது ஆழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்?

உங்களைப் பற்றி எழுதி, எழுதி சளைத்துப் போய் விட்டது. ஆனாலும், உங்கள் கருத்துக்களும், செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல், அதை நியாயப்படுத்தி அடுத்தவர் மீது குற்றம் சுமத்தும் மனப்பாங்கும் மீண்டும் எழுதவே வைக்கின்றன. பேராசைப் பிடித்த உங்கள் அருமைப் பேரன் தயாநிதி மாறன் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி, பதவி விலக நேரிட்ட போது, அது பற்றி ஊடகங்கள் உங்களிடம் கருத்து கேட்ட போது, "உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல" என்று கூறினீர்களே... இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா ?

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த ஊடகங்கள் உங்கள் துதிபாடிக் கொண்டுதானே இருந்தன? தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில், ஊடகங்கள் சுதந்திரமாக எழுதும் நிலையில் இருந்தனவா? நீங்களும், உங்களின் உளவுத்துறையும் இந்த ஊடகங்களுக்குக் கொடுத்த நெருக்கடிகள் கொஞ்சமா நஞ்சமா? எத்தனை வழக்குகளைத் தொடுத்தீர்கள் இந்த ஊடகங்களின் மீது? எத்தனை பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டீர்கள்? உங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக எத்தனை பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்களை நிறுத்தினீர்கள்?

வட இந்திய ஊடகங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில், தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்பதாக செய்திகளை நீங்கள் வெளியிட வைக்க வில்லையா?

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கார் சிலை திறப்பு விழா பற்றிய அறிவிப்பு வந்தவுடன், சில வழக்கறிஞர்கள், கருணாநிதியை அழைக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்தவுடன், அதை செய்தியாக வெளியிட்ட காரணத்துக்காக, தினத்தந்தி முதலாளிக்கு காலை 5.30 மணிக்கு போன் செய்து அவரை கடிந்து கொள்ள வில்லையா?

உங்கள் குடும்பத்தினரைப் பற்றி செய்திக் கட்டுரை வெளியிட்டார்கள் என்ற காரணத்துக்காக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளேடுகளின் முதலாளி சோந்தாலியாவை நேரடியாக தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, கண்டித்த பிறகு, அந்த இரண்டு நாளேடுகளிலும் அரசு விளம்பரங்கள் அதிகமாகவும், அரசுக்கு எதிரான செய்திகள் குறைவாகவும் வரும் வகையில் நீங்கள் ஏற்பாடு செய்யவில்லையா?

பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையாக இருந்தால், அரசுக்கு எதிராக எழுதுவார்கள் என்ற காரணத்தால், பத்திரிக்கையாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாக்கவில்லையா? உங்களுக்கு ஜால்ரா அடித்து எழுதுகிறார் என்ற காரணத்துக்காக நக்கீரன் காமராஜின் மனைவிக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை ஒன்றேகால் கோடிக்கு ஒதுக்கீடு செய்யவில்லையா?

அடிக்கடி, நானே ஒரு பத்திரிக்கையாளன் என்று நீங்கள் பசப்பவில்லையா?

இப்போது என்ன திடீரென்று ஊடகங்களின் மீது கோபம்? 1991 முதல், 1996 வரை ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழலும், அராஜகமும் தலைவிரித்து ஆடிய போது, உங்களை திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிருகப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்த்தியது இதே ஊடகங்கள் தானே...? அந்த ஊடகங்களின் பலத்தை வைத்து, ஜெயலலிதாவை ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று, ஆதாரம் இல்லாத வழக்குகளிலும் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ததோடு அல்லாமல், என்னமோ உங்கள் குடும்பத்தில் அத்தனை பேரும், கஞ்சியும் கூழும் குடித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டும் தங்க அரியணையில் அமர்ந்திருப்பது போலவும் மீண்டும் மீண்டும் சித்தரித்தது தானே, உங்களை 2001 தேர்தலில் வீழ்த்தியது?

இதுதானே ஊடகங்களின் பலம்? அடக்கி, ஒடுக்கி, மிரட்டி, ஆசை காட்டி இன்று ஊடகங்களை பணிய வைத்தாலும், சமயம் கிடைக்கும் போது ஊடகங்கள் ஒன்று சேர்ந்து திருப்பி அடித்தால், தாங்க முடியாது என்பதை, இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளையும் விட, நீண்ட அனுபவம் பெற்ற நீங்கள் எப்படி உணராமல் போனீர்கள்?

உங்கள் குற்றச் சாட்டின் படியே வைத்துக் கொண்டாலும், ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஊடகங்களால் பழிவாங்கப்பட்டார் என்று நீங்கள் கூறும் உங்களின் பேரனின் தொலைக் காட்சியால் பழிவாங்கப் படாதவர்கள் இருக்க முடியுமா? எத்தனை முறை செய்தி போடுவதற்கும், போடாமல் இருப்பதற்கும், மிரட்டி பழிவாங்கியுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிக்கன் சாப்பிட்டால் புது வியாதி வரும் என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சன் டிவியில் செய்தியைப் போட்டு, அதனால் கோழிக்கறியின் விலை அதள பாதாளத்திற்கு வீழ்ந்து, நாமக்கல்லில் இருந்து மொத்த வியாபாரிகள், உங்கள் பேரனைச் சந்தித்து ஒரு பெரும் தொகையை கொடுத்துச் சென்றது உங்களுக்குத் தெரியுமா?

அவ்வளவு ஏன், உள்ளத்தளவில் உங்கள் மகன்களுக்குப் போட்டி என்று நன்றாகத் தெரிந்தும், மாறன் சகோதரர்களை நீங்கள் மீண்டும் இணைத்துக் கொண்டதற்குக் காரணம், அவர்களின் மீடியா பலம் அல்லாமல் வேறு என்ன? குடும்பம் பிரிந்திருந்த அந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசுக்கு எதிராக சன் டிவியும், தினகரனும் தொடர்ந்து செய்தி வெளியிட்டதைப் பார்த்து அஞ்சித் தானே நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? அன்று உங்களையே பதம் பார்த்த மாறனுக்காக நீங்கள் வக்காலத்து வாங்குவது காலத்தின் கோலமே...!!

நன்றாக யோசித்துப் பாருங்கள்... இன்று உங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் மீடியாவா?

தமிழின விரோதப் போக்கையே தனது முழு முதல் நோக்கமாகக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து உருவானதல்லவா திமுக? திமுக தொடங்கிய காலத்தில் பக்தவச்சலம் அரசால், கட்சி சந்தித்த நெருக்கடிகள் கொஞ்சமா நஞ்சமா? எத்தனை தொண்டர்கள் உயிரிழந்திருப்பார்கள்? எத்தனை தொண்டர்கள் தங்கள் சொத்தை இழந்திருப்பார்கள்? அதற்குப் பிறகும் நெருக்கடி நிலை காலத்தில், திமுக சந்தித்த அடக்குமுறைகள் தான் எத்தனை எத்தனை? சிட்டிபாபுவின் உயிரைப் பறித்தது தானே அந்த நெருக்கடி நிலை. இன்று வரை உங்கள் கட்சியில் "மிசா" என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டு பெருமையாக திரிபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி ஒரு கடுமையான சூழலை நெருக்கடி நிலையின் போது சந்தித்த நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? காங்கிரஸ் கட்சியை வேரடி மண்ணோடு தமிழகத்தில் தலை தூக்காமல் அழித்திருக்க வேண்டாமா? காங்கிரஸ் இருந்த இடத்தில் தமிழகத்தில் இன்று புல் முளைத்திருக்க வேண்டாமா ?

ஆனால், எந்த இந்திரா உங்களை கொடுமைக்கு ஆளாக்கினாரோ, அதே இந்திராவின் காலடியில் நீங்கள் சரணடையவில்லையா? அவ்வாறு சரணடைந்தது, தமிழகத்தின் நலனைக் காக்கவா? உங்களின் தடித்த தோலைக் காப்பாற்றிக் கொள்ளத் தானே? உங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்ளத் தானே? விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று உங்களை வர்ணித்த நீதிபதி சர்க்காரியா உங்கள் மீது அடுக்கடுக்காகச் சுமத்திய ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தானே...? அப்போது திராவிட இயக்கத்தின் மானத்தை இந்திராவின் காலடியில் அடமானம் வைத்த போது உங்களின் சுயநலத்தைத் தவிர வேறு எதைப் பற்றியாவது சிந்தித்தீர்களா ?

கோவையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என்று உங்களுக்கு மறந்திருக்கும். சவுக்கு நினைவூட்டுகிறது. "நான்கு பண்டாரங்கள் சேர்ந்து ஆரம்பித்த கட்சி" என்று தானே சொன்னீர்கள்? அந்த பண்டாரங்களின் கட்சியோடு கூட்டணி சேர்ந்தபோது எங்கே போனது உங்கள் சுயமரியாதை உணர்வு? வாயைத் திறந்தால் மூச்சுக்கு முன்னூறு முறை, அண்ணா காட்டிய வழி, தந்தை பெரியார் போட்ட ரோடு என்று வார்த்தை ஜாலம் காட்டுகிறீர்களே... தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், பார்ப்பன சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும், பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு சேரவா உங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்? இல்லாத ராமருக்கு கோயில் கட்டுவதற்காக, இருக்கும் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கும் ஒரு கட்சிக்காக வக்காலத்து வாங்க கற்றுக் கொடுத்தார்களா? பதவி வெறியும் அதிகார போதையும், திராவிட இயக்கத்தின் அடிநாதமான சுயமரியாதை உணர்வையே உங்களிடம் பட்டுப் போகச் செய்து விட்டது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா ?

உங்களின் அதிகார போதையும், மந்திரிப் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உங்களின் வெறியும், 2002ல் குஜராத்தில் இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட போது, "அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை" என்றல்லவா சொல்ல வைத்தது? உண்மையிலேயே சுயமரியாதைக்காரன் என்றால், நேர்மையான மனிதன் என்றால், இந்து என்றால் திருடன் என்று ஒரு பொருள் உண்டு என்ற உங்களின் முத்தான முத்தை பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் போதல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இந்த அரசு, சிறுபான்மையினர் நலன் காக்கவே இருக்கிறது, சிறுபான்மையினருக்காகவே நான் வாழ்கிறேன் என்று நீலாம்பரி ராகம் பாடும் நீங்கள், குஜராத்தில் அத்தனை இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களின் ஆசை மருமகன், முரசொலி மாறன் பேச்சைக் கேட்டுத்தானே ஆடிக் கொண்டிருந்தீர்கள்? முரசொலி மாறன் தானே உங்கள் சார்பாக, தொழில் அதிபர்களிடமும், மற்றவர்களிடமும் வசூலைப் பார்த்துக் கொண்டிருந்தார்? நீங்கள் சீட்டாட்டத்தில் தானே திளைத்துக் கொண்டிருந்தீர்கள்? அப்போதாவது நீங்கள் செல்லும் பாதை அழிவுப் பாதை என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா?

இந்திரா காந்தியாவது ஒரு ஆளுமை மிக்க தலைவர். சோனியா..? ராஜீவ் காந்தியை காதலித்து மணந்ததைத் தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது? உங்கள் மகள், அமேரிக்க குடிமகன் ஒருவரை காதலித்து மணம் புரிந்து கொண்டால், அமேரிக்க அதிபர் ஆகிவிட முடியுமா? எந்த நாட்டிலாவது இது சாத்தியமா? தமிழ்நாட்டிலேயே தமிழரல்லாதவர் முதலமைச்சர் ஆவதற்கு எத்தனை எதிர்ப்புகள் வருகின்றன? இதே எம்ஜிஆரை மலையாளி என்று விமர்சித்தவர்தானே நீங்கள்? மலையாளியான எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது, ஒரு இத்தாலியப் பெண்மணி இந்தியாவை ஆளலாமா?

ஒரு வேளை உங்களைப் போலவே சோனியாவும் அவர் குடும்பத்தை மட்டுமே நேசிப்பதால் அவரை தியாகத் திருவிளக்கு என்று வர்ணித்தீர்களா? என்ன தியாகத்தைச் செய்து விட்டார் சோனியா? பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டால், எப்படியும் கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தெரியாதவரா? அவருக்குத் தான் மன்மோகன் சிங் என்ற விசுவாசமான அடிமை இருக்கிறாரே... அவர் இருக்கும் போது, சோனியா எதற்காக பிரதமர் ஆக வேண்டும்? சோனியாவின் வார்த்தையை மீறி மன்மோகன் சிறுநீர் கூட கழிக்க மாட்டாரே...

சொக்கத் தங்கம் என்றீர்களேஉ அந்த சொக்கத் தங்கம் தான் இன்று உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது என்பதை எப்போதுதான் உணர்வீர்கள்?

முதன் முதலில் உங்கள் குடும்பம் மீது சிக்கல் எப்போது உருவானது என்பதை யோசித்துப் பாருங்கள். நீரா ராடியாவின் உரையாடல் முதன் முதலாக மே 2010ல் ராடியா உரையாடல்கள் வெளியான போதுதானே...? அந்த உரையாடல்கள் சோனியாவின் கண்ணசைவு இல்லாமல் வெளியாகியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தில் உளவுத்துறையால் பதிவு செய்யப்படும் இதுபோன்ற உரையாடல்கள் மிக மிக கவனமாக வைத்திருக்கப்படும். சாமான்யத்தில் இந்த உரையாடல்கள் வெளியாக வாய்ப்பில்லை. அப்படியே வெளியானாலும், எப்படி வெளியானது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஆனால் நீரா ராடியா உரையாடல்கள் வெளியானது குறித்து இது வரை மத்திய அரசு உருப்படியான விசாரணையை நடத்தியிருக்கிறதா?

இதற்குப் பிறகுதான் உங்களுக்கு பெரிய அதிர்ச்சி கிடைத்தது. முதலில் ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் பயனீர் உரையாடல் விபரங்களை வெளியிட்ட போது, ராடியாவுடனான ராசா மற்றும் கனிமொழியின் உரையாடல்கள் மட்டுமே வெளி வந்தன. நவம்பர் 2010ல் வெளி வந்த அவுட்லுக் மற்றும் ஓபன் வார இதழ்களில் வெளிவந்த உரையாடல்களே உங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது. டஜன் கணக்கில் வெளியான உரையாடல்கள், உங்களையும், உங்கள் குடும்பத்திரையும் நெளிய வைத்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அமைச்சர் பூங்கோதை, உங்கள் மகன் அழகிரியை "கட்த்ரோட் பொலிட்டீசியன்ஸ்" என்று வர்ணித்த போது, அதற்கு இரண்டு பெண்மணிகள் பேசிக் கொள்கிறார்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று பதில் கொடுத்தீர்கள் என்பதை மறந்திருக்க முடியாது. அப்போது வெளியான அந்த உரையாடல்கள், ராசா,கனிமொழி, மட்டுமல்லாது, உங்கள் துணைவி ராசாத்தியையும் சிக்கலில் இழுத்து விட்டது நினைவிருக்கிறதா?

அந்த உரையாடல்களெல்லாம் எப்ப வெளி வந்தது? மத்திய உளவுத்துறையின் கைங்கர்யம் இல்லாமல் வந்திருக்குமா? ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை மத்திய அரசின் உளவுத்துறையோடு கை கோர்த்து ஒடுக்கிய உங்களுக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் வல்லமை எங்களை விட நன்றாகவே தெரிந்திருக்கும்.

உங்களுக்கு சொக்கத் தங்கம் கொடுத்த அடுத்த அடி சிஏஜி அறிக்கை. அரசல் புரசலாக, 20 ஆயிரம் கோடி, 40 ஆயிரம் கோடி என்று பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் முதன் முறையாக ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற வடிவத்தை எடுத்தது, மத்திய கணக்காயரின் அறிக்கைக்குப் பிறகு தான். அந்த அறிக்கை வெளியான விதம் எப்படி என்பது நினைவிருக்கிறதா? சிஏஜி அறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே பொதுமக்களின் பார்வைக்கு வரும். அதுவரை அது ரகசிய ஆவணமாகவே கருதப்படும். சொல்லி வைத்தாற்போல, டெல்லி ஊடகங்களின் அத்தனை மேசைகளிலும், இந்த அறிக்கை ஒரே நாளில் இடம் பிடித்தது எப்படி என்பதை யோசித்திருக்கிறீர்களா? நீதிபதி பால் கமிசனின் அறிக்கையை திருடி, வெளியிட்டு, அதற்காக சிறைக்குப் போன உங்களுக்கு அறிக்கைகள் எப்படி வெளிவரும் என்பது நன்றாகவே தெரியும்.

நவம்பர் 2010ல் சிஏஜி அறிக்கை வெளியான பிறகு தான் ராசா மீதான நெருக்கடி மிகக் கடுமையாக ஆனது என்பதை நீங்கள் இன்னும் உணராவிட்டால் உங்களின் அறிவுக் கூர்மை மழுங்கி விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதற்குப் பிறகுதான் ராசா பதவி விலகினார். முதல் குற்றப் பத்திரிக்கை முடிவடைந்து ராசா கைது செய்யப்பட்டதும், உங்கள் மகள் கனிமொழி பற்றிய செய்தியை எப்படி திட்டமிட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள்.

ராசா கைது செய்யப்பட்டதும், அவசர அவசரமாக கலைஞர் டிவிக்காக வாங்கிய 200 கோடி ரூபாயை திருப்பி அளித்தீர்களே... கலைஞர் டிவி 200 கோடி ரூபாயை சாகித் பல்வாவிடம் வாங்கிய விவகாரம் முதலில் ஊடகத்தில் தானே வெளியானது? முதலில் எகனாமிக் டைம்ஸிலும், பிறகு லைவ் மின்டிலும் வெளியான பிறகு தானே கனிமொழி விவகாரமே சூடு பிடித்தது?

அதற்குப் பிறகு என் மகள் கனிமொழியை காப்பாற்றுங்கள் என்று நீங்கள் சொக்கத் தங்கத்திடம் மன்றாடிய போது, பத்திரிக்கைகளில் செய்தி பெரிதாக வந்து விட்டது, என்னால் எதுவும் செய்ய முடியாது என்றுதானே சோனியா கைவிரித்தார்? நீங்கள் எவ்வளவோ மன்றாடியும் கூட, உங்கள் மகளும், மனைவி தயாளுவும், உங்களின் கோட்டையான அறிவாலயத்திலேயே வைத்துத் தானே விசாரிக்கப் பட்டார்கள்?

தங்கள் குடும்ப நண்பர் குவாத்ரோச்சியை தப்ப வைத்து, அவர் லஞ்சமாக வாங்கி சேர்த்து வைத்திருந்த பணத்தையும் வெளிநாட்டு வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ள உதவுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட சொக்கத் தங்கம் சோனியாவால் உங்கள் மகளைக் காப்பாற்றியிருக்க முடியாதா என்ன? சோனியா நினைத்திருந்தால், இதே சிபிஐ, கலைஞர் டிவி பெற்ற 200 கோடி ரூபாய் வெறும் கடன் தான். அதையும் அவர்கள் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். 2ஜி விவகாரத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வைத்திருக்க முடியாதா என்ன?

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது கூட, காங்கிரஸ் கட்சி 63 இடங்களைக் கேட்கிறார்கள் என்றதும் கொதித்து எழுந்தீர்களே? 63 ஆ கேட்கிறாய் என்று ஆவேசப்பட்டீர்களே...? இறுதியில் உங்கள் மகளைக் காப்பாற்றுகிறோம் என்று வாக்களித்துத் தானே அதே 63ஐ பெற்றார்கள் காங்கிரஸ் கட்சியினர்? அப்போது இந்த சொக்கத் தங்கத்தை நம்பி நீங்கள் ஏமாந்ததற்கு ஊடகங்களா பொறுப்பு?

இது போல உங்களை நம்பவைத்து, கழுத்தறுத்து, உங்கள் குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்து, உங்கள் கட்சியை நடுத்தெருவில் நிறுத்தி, உங்களை கையறு நிலையில் புலம்ப வைத்தது சொக்கத் தங்கம் சோனியாவா? ஊடகங்களா?

2001ல் நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது, உங்கள் குடும்ப தொலைக்காட்சி தவிர்த்து, உங்கள் கைதைக் கண்டித்து எழுதி, இந்தியா முழுக்க உங்களுக்கு அனுதாபத்தை தேடித் தந்து, ஜெயலலிதாவின் ஆட்சி கலைக்கப்படும் அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது இதே ஊடகங்கள் தானே? அப்போது இந்த ஊடகங்கள் உங்களைப் பற்றி எழுதிய போது இனித்ததா? உங்களை கருவறுத்தது யார் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் மீது உங்கள் கோபத்தைக் காட்டுங்கள். ஊடகங்கள் மீது ஏன் பாய்கிறீர்கள்?


நன்றி: சவுக்கு

Friday, July 22, 2011

பெண்கள் பார்க்க தடை (something gruesome)

இந்த செய்தி பற்றி குறிப்பிட முன்னர் இந்த செய்தியினையோ அல்லது வீடியோவையோ தயவு செய்து சிறுவயதினரோ…பெண்களோ…கர்ப்பிணிகளோ…தயவு செய்து பார்க்கவேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். வெளியிட்டுள்ள புகைப்படங்களோ அல்லது வீடியோவே உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம்.

பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை நீங்களும் பாருங்கள்…!!

செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோசெய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோchirder, nude, murder, free sex, free porn, tamileelam, baby porn, செய்திகள், படைப்புகள்,  வீடியோ, படங்கள், கேலரி, ஜோதிடம, இலக்கியம, ஆன்மீகம, தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, சமையல் கலை, tamil news, tamil portal, movies, hollywood, tamil actors, tamil actresses, astrology, literature, recipes, religion, pictures, videos, bookmarks, photo gallery, kollywood, world news, indian politicsசெய்திகள், படைப்புகள்,  வீடியோ, படங்கள், கேலரி, ஜோதிடம, இலக்கியம, ஆன்மீகம, தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, சமையல் கலை, tamil news, tamil portal, movies, hollywood, tamil actors, tamil actresses, astrology, literature, recipes, religion, pictures, videos, bookmarks, photo gallery, kollywood, world news, indian politicstamilcnn,bogy,செய்திகள், படைப்புகள்,  வீடியோ, படங்கள், கேலரி, ஜோதிடம, இலக்கியம, ஆன்மீகம, தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, சமையல் கலை, tamil news, tamil portal, movies, hollywood, tamil actors, tamil actresses, astrology, literature, recipes, religion, pictures, videos, bookmarks, photo gallery, kollywood, world news, indian politics,xxx,

Friday, July 8, 2011

ஊழலில் கருணாநிதி - 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்…!!! ஜெயலலிதா

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்…!!! ஜெயலலிதா
சென்னை,பிப்.11: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஊழல் விஷயத்தில் 1969 முதல் இன்று வரை ஒரே மாதிரியான கொள்கையைந்க் கடைபிடித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி.

அவரது துணைவி தர்மா என்ற ராசாத்தியம்மாள், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் முதல் குறுக்குத் தெருவில் கதவு எண் 9-ல் உள்ள வீட்டினை வாங்கியது தொடர்பாக சர்க்காரியா விசாரணை ஆணையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதி சர்க்காரியாவுக்கு ஏற்பட்டது. இதற்காக அவர் மீது அனுதாபப்படத் தான் முடியும். எனவே, விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை.

2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞானப் பூர்வமான ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த “டைனமிக்ஸ் பால்வா’ என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட “ஸ்வான்’ டெலிகாம் நிறுவனத்துக்குகு, அரிதான 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு

விலையான ரூ.1,537 கோடிக்கு முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா அளித்துள்ளார். அதன் பிறகு, டைனமிக்ஸ் பால்வா நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த “எடிசலாட்’ நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்றது. இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் குருவான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் பால்வா லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் பணம் நேரடியாகக் கொடுக்கப்படவில்லையாம். வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை மொத்தம் ரூ.209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான “குசேகான் ஃப்ரூட்ஸ், வெஜிடெபிள்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு பால்வா மாற்றியிருக்கிறாராம்.

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ.206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாம்.

இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010-ம் ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பை பார்க்கும்போது, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோர் 80 சதவீத பங்குகளைப் பெற்றுள்ள கலைஞர் டி.வி.க்கு, உத்தரவாதமற்ற கடனாக ரூ. 206 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாம்.

முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் 2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்’ என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஊழலில் ஒரே மாதிரியான கொள்கையை கடைப்பிடிக்கிறார் கருணாநிதி…???
சென்னை, பிப்.11: விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வரும்போது 1969-ம் ஆண்டு முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு மாதிரியான கொள்கையை முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வருவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என்று வருகிற போது, 1969-ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி. ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மனைவி, திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல். விஸ்வாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ 57,000 விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் தர்மா. இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் தர்மா. இந்த வீட்டை வாங்கிய

டி.கே. கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார். அதே நாளன்று, டி.கே. கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்யம்!! இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது. 20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும் தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ. 57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தின்படி,

கடன் வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000/-, ரூ. 15,000/- மற்றும் ரூ. 10,000/- என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்து இட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்.!!

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத் தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது! எனவே, “விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

http://www.athirady.info/?p=154199&sess=129b860275e16ad0b113c1c05f78ecab

தலையங்கம்: ஆமாம், விதிவிலக்கல்ல!





எப்போதோ நடந்திருக்க வேண்டியது, காலதாமதமாக இப்போது நடந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை ஐயம்திரிபற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் செயல்பாடுகளில் இருந்த தவறை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகுதான் வேறு வழியே இல்லாமல் அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே தனது கடமையைப் பிரதமர் நன்கு செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க திமுக முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது, தயாநிதி மாறனுக்குத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி. அந்தப் பேராசைதான் இப்போது அந்தக் குடும்பத்தினர் ஒருவர்பின் ஒருவராக திகார் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட வழிகோலியிருக்கிறது.

அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி மாறன்? 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறத் தொடங்கியது. அதுவரை குறைந்த அளவிலான செல்பேசிகள் இருந்ததுபோய், ரிக்ஷா ஓட்டுநரும், காய்கறி வியாபாரியும், விவசாயியும், கட்டடத் தொழிலாளியும்கூட செல்பேசியும் கையுமாக இந்தியாவை ஒளிரச் செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.

1994-ல் செல்பேசி சேவையில் ஈடுபடத் தொடங்கிய சிவசங்கரன் என்பவரின் "ஏர்செல்' நிறுவனம் 1999 முதல் சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் சேவைக்காக உரிமம் பெற்றது. 2003-ல் சென்னையிலும் சேவையில் ஈடுபட உரிமம் பெற்றதுடன், 2004-ல் விண்ணப்பித்திருந்த இந்தியாவின் 10 வெவ்வேறு பகுதிகளில் 7 பகுதிகளுக்கான உரிமத்தையும் பெற்றது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தயாநிதி மாறன் 2004-ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகிறார்.

தான் விண்ணப்பித்திருந்த மீதமுள்ள 3 பகுதிகளுக்கு உரிமம் பெற தலைகீழாக நின்றும் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். ஏர்செல் நிறுவனம் மீதமுள்ள 3 உரிமங்களையும் பெற்றுவிட்டால் தொலைக்காட்சி டிடிஎச் சேவையைத் தொடங்கக்கூடும், அதனால் தங்களது குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் பாதிக்கப்படக்கூடும் என்பதுதான் தயாநிதி மாறனின் தயக்கத்துக்கான பின்னணி.

அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் பணியாற்றுவேன் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தயாநிதி மாறனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதைவிட மோசமானது. ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் இழுத்தடித்து சிவசங்கரனை உருட்டி மிரட்டி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்கிற நிறுவனத்துக்கு விற்றுவிடச் செய்திருக்கிறார் அமைச்சர் தயாநிதி மாறன்.

ரூ. 36,000 கோடி விலை மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கும் (74%), அப்போலோ குழுமத்துக்கும் (26%) வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டன. இந்த விற்பனை முடிந்ததுதான் தாமதம், முறையான கட்டணத்தைப் பெறுவதற்குக்கூட காத்திராமல் ஏர்செல் நிறுவனத்துக்கு மீதமுள்ள 3 உரிமங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 62 கோடி செல்பேசி வாடிக்கையாளர்களின் வியாபாரத்தைப் பெறும் வாய்ப்பை புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏர்செல் நிறுவனம் பெற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்கிற நிறுவனம் சன் குழுமத்தின் டிடிஎச் சேவையிலும் எப்எம் சேவையிலும் ரூ. 600 கோடி முதலீடு செய்திருக்கிறது என்பது சிவசங்கரனின் குற்றச்சாட்டு.

அத்துடன் நின்றுவிடவில்லை தயாநிதி மாறனின் முறைகேடுகள். 2006-ல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற நிதியமைச்சகத்தின் கருத்தைப் பிடிவாதமாக எதிர்த்து, அது தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்கிற முறையில் தனது தனிப்பட்ட உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார் தயாநிதி மாறன். ஒருவேளை, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

மாறன் சகோதரர்களின் முறைகேடான வியாபார வழிமுறைகள் என்றாவது ஒருநாள் அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பாராத ஒன்றும் நடந்திருக்கிறது. மாறன் சகோதரர்களின் தாத்தாவான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் விசித்திரமான வியாக்கியானம்தான் அது.

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும்தானே. காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது!