Saturday, January 29, 2011

அப்துல்கலாம் காப்பாற்றப்பட்டார்


அரசியல்வாதிகளை பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் மிகவும் விழிப்போடு இருப்பார்கள். விழிப்புணர்வு இல்லாத அரசியல் வாதிகள் இந்தியாவின் முளை முடுக்குகளில் போய் தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள் இதை படிப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். தேசிய கீதத்தை கூட தப்பு இல்லாமல் பாடத் தெரியாத அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வா? இது என்ன இந்த ஆள் எதாவது பகல் கனவு கண்டு அது கலையாமலே பேசுகிறானா என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுய உணர்வோடு தான் பேசுகிறேன், எழுதுகிறேன்.

எந்ததொரு விஷயத்தையும் உடனடியாக தீர்த்து விட்டால் தங்களது பிழைப்பு நடக்காது என்பதில் நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வை பற்றி தான் சொல்கிறேனே தவிர எதோ அவர்களுக்கு பொருளாதாரம் சர்வதேச பிரச்சனைகள் சாக்கடையை ஒழித்து கட்டுவது போன்றவற்றில் விழிப்புணர்வு வந்துவிட்டதாக நான் கருதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


ஒரு நாற்பது, ஐம்பது வருஷயங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் தரையை பெருக்கும் அளவிற்கு தோளில் துண்டு போட்ட உடன்பிறப்புகள் வடக்கிலிருந்து இந்திமொழி வருகிறது, தமிழ் மொழியை கொன்றுவிட்டு தான் மத்திய அரசு மறு காரியம் பார்க்கும். தமிழை காப்பாற்றுவதற்கு கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை எங்களுக்கு ஒட்டு போடுங்கள், பதவியில் அமர்ந்தோமோ இல்லையோ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கொண்டு வந்துவிட்டு தான் மறுகாரியம் பார்ப்போம் என்றும் குதிகுதியென குதிப்பார்கள். கரகரப்பான கழகத்தின் பேச்சுக்கு அறிவை கடன் கொடுத்து ஒட்டுகளும் போட்டு விட்டோம். 1967-ல் அரியனை ஏறியவர்கள்

2010 முடிய போகும் இந்த காலம் வரை தமிழக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லையென்பது வேறு விஷயம், எங்கே தமிழ், எங்கே தமிழ் என்று தேட வைத்து விட்டார்கள்.

தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்த தானை தலைவர்கள், தனது பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு ஆனந்த கடலில் முழ்கி தத்தளிக்கின்றனர், ஒட்டு போட்ட அருமை தமிழனோ தங்களது பிள்ளைகளின் அறிவை ஆங்கில பீடத்தில் பலிகொடுத்து விட்டு மொழியற்ற அனாதையாக ஆக போவது கூடத் தெரியாமல் செம்மொழி மாநாட்டிற்கு வண்டியேறி கொண்டிருக்கிறார். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் பலநாட்டு அறிஞர்கள் வந்து நல்ல கருத்துக்களை சொல்வார்கள் அதை காதார கேட்போம் என்ற ஆசையினாலா? அல்லவே அல்ல. கழக கண்மணிகள் தமிழ் வளர்க்க ஊற்றி கொடுக்கும் மதுக் கோப்பைகளுக்காகவும், பிரியாணிக்காகவும் தான் எங்கள் ஊர் தமிழன் கொங்கு மண்டலம் புறப்படுகிறான்.

இந்தி தமிழகத்திற்குள் வந்தால் இங்கிருக்கும் நல்ல இயல்புகள் எல்லாம
போய்விடும். வடபுலத்து பண்பாரடுகள் கலச்சாரம் தமிழ் பண்பாட்டை சிதைத்துவிடும். தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது. தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமக்களாகி விடுவார்கள் தமிழக வளமெல்லாம் சுரண்டிக் கொண்டு போகப்பட்டு விடும். தமிழன் என்ற இனமே பூண்டற்று அழிந்துவிடும் என்று மேடை தோறும் பேசிய உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் தமிழனை தமிழ்மொழியை காப்பாற்ற தனிப்படை அமைப்போம் என்று நெற்றி நரம்பு புடைக்க கத்தினார்கள். அத்தோடு மட்டும் நின்றார்களா? இந்தி ஆதிகத்தை ஒழிக்க வேண்டுமென்றால் வடபுலத்து ஆக்கிர மிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தமிழன் தனிநாடு காண வேண்டுமென்று போர் முரசு கொட்டினார்கள்.


தின்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம் என்றார் ஒருவர். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றார் வேறொருவர். தமிழன் நம்பினான் எந்த காலத்திலும் நடைபெறவே முடியாத பச்சை பொய்களை கொட்டி வித்த வியாபார தலைவர்களை இன்றும் நம்புகிறான். நாளையும் நம்பி ஏமாறத் தயாராக இருக்கிறான். ஆடுகளே வந்து கழுத்தை நீட்டி என்னை வெட்டு என்று சொல்லும் போது கசாப்பு கடைக்காரன் என்ன செய்வான். பாவம் மேடை பேச்சாளர்களையும், திரைப்பட நடிகர்களையும். பகல் வேடதாரர்களையும் தங்களது ரச்சகர்கள் என்று தமிழன் நினைக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

ராஜ்வ் காந்தி அனுப்பிய இந்திய அமைதி காப்புபடை இலங்கையில் தமிழர்களை ரத்த சிந்த வைத்ததாம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவமானம் படுத்தியதாம் அதனால் அந்த படை அந்நிய நாட்டில் பணி முடித்து தாயகம் திரும்பிய போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திருக்குவளை தந்த திருமகனார் ராணுவத்தை வரவேற்க கூட போக மறுத்தார். நான் இந்திய அரசியல் சானத்திற்கு கட்டுப்பட்ட முதலமைச்சர் என்பதை விட சக தமிழனின் துயரத்தில் பங்கெடுத்து கொண்ட சாதாரண தமிழனாக இருப்பதே பெருமை என்பது போல் நடந்து கொண்டார்.

இன்று இலங்கையில் தமிழ்மக்கள் அனைவரும் நயவஞ்சக முறையில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். உரிமைக்கு குரல் கொடுத்த வீர மறவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது. லட்ச கணக்கான தமிழ் பிணங்கள் காக்கைக்கும் கழகுக்கும் இரையாக்கப்பட்டு விட்டன. பசியாலும் நோயாலும் பண்பாடுமிக்க தமிழர்கள் மிருகங்களை விட கேவலமாக முள்வேலிகளுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள் அமைதிப்படையை வரவேற்க மறுத்த, தமிழர்களுக்காகவே வாழ்வேன், தாழ்வேன் என்ற வீர உரையாற்றிய முதுபெரும் அரசியல் சாண்க்கியர் முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தனக்கு தானே பட்டம் வழங்கி கௌரவித்து கொண்ட தமிழகத்தின் முதல்வர் சினிமா கலை விழாக்களில் தன்னை மறந்து உறங்கி கொண்டிருக்கிறார்.
உறங்குபவனை எழுப்பாதே, அவன் அந்த நேரத்தில் மட்டுமாவது பாவம் செய்யாமல் இருப்பான் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஆனால் கலைஞர் அவர்கள் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தன் பதவிக்கும் இடைஞ்சல் வந்து விடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறார். அந்த அக்கறையின் வெளிபாடுத் தான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வயோதிக தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது ஆகாயவிமான நிலையத்திலே திருப்பியனுப்ப சாணக்கிய திட்டம் வகுத்தது.

தம்பி பிரபாகரனை வீரன், சூரன், தியாகி என்றுயெல்லாம் போற்றி புகழ்ந்தவர் விடுதலை புலிகளின் தனிநாடு கோக்கைக்கு போர் பரணி பாடியவர் புலி உறுப்பினர் இறந்த போது தனியொரு இரங்கற்பாவே வடித்துச் கொடுத்த சங்க தமிழ்றிஞர் தனது பதவிக்காக புலிகளின் போராட்டம் நியாமற்றது என்றதையும்

சிங்கள அரசுக்க அடி பணிவதில் தவறில்லை என்றதையும் காதார கேட்ட பின்பும் தமிழர்கள் இவரை தலைவர் என்று ஏற்று கொண்டிருப்பதும் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது.

இன்று கூட தமிழுக்காகவும், தமிழர்காகவும் அயராது பாடுபடுவதாக சொல்லும் கருணாநிதி நமக்காக என்ன செய்திருக்கிறார். என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட அனைகட்டுகள் எத்தனை தரமான பாலங்கள் எத்தனை, ஆயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் கூடங்கள் எத்தனை, புதிய பல்கலை கழகங்கள், கல்லுரிகள், பள்ளி கூடங்கள் எத்தனை நாற்பத்தி முன்று வருடங்களில் விரல் விட்டு எண்ணி விடலாம் முன்னேற்ற திட்டங்களின் பலனை.

புண்ணுக்கு புனகு புசுவது போல் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்படுகிறதே தவிர மற்றப்படி நடப்பதெல்லாம் வெறும் கேலி கூத்துகள் தான் காமராஜன் மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அது என்னவோ பெரிய கொடைவள்ளல் தனமாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர உண்மையா பலன் அதில் எதுவுமில்லை கலைஞர் புதிதாக கெட்டுபோன அரிசி சாதத்தில் வாரம் இரண்டு முட்டை தருகிறார். அந்த முட்டை சத்துணவு பொறுப்பாளர் ஆயா மற்றும் ஆசிரியர்களின் வயிற்றை நிரம்பிய பிறகு தான் குழந்தைகளின் தட்டுகளில் வந்து விழகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பெயளவில் விளம்பரம் உண்மையில் நடப்பது என்ன ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவருக்கு தான் இலவச சலுகை அதுவும் மின்சார இணைப்பு பெற வருட கணக்கில் காத்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வெல்ல கட்டிகளை கணக்கில்லாமல் கொடுத்தால் கூட விண்ணப்பம் நகராது. மேஜைக்கு மேஜை கப்பம் கட்டி கை சலித்து போன விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகமே தவிர உடனடியாக பலன் பெற்றது ஆயிரத்தில் ஒருவர் தான். இலவச மின்சாரம் என்பது எல்லாம் சரி வெயில் காலத்தில் வயிலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் எங்கே வருகிறது.

மின்சார தட்டுபாடு அதனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் கரண்ட் வரும் என்று மின்சார இலாக்கா அறிவிக்கிறது, வருடந்தோறும் இந்த அறிவிப்பை தான் பார்க்கிறோமே தவிர மின்சார உற்பத்தியை அதிகரிக்க இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை என்னவென்று சல்லடை போட்டு தேடினாலும் ஒன்றும்
கிடைக்கவில்லை மின்சார உற்பத்தியை தனியார் வசம் ஒப்படைக்க போகிறார்களாம். ஒரு அரசாங்கத்தாலேயே உற்பத்தியை அதிகக்க முடியாத போது தனியாரால் எப்படி முடியும்? முடியும். தனியாரிடம் ஒப்படைத்தால் தானே இவர்களின் மிக நீண்ட சட்டைப் பை நிரம்பும் அரசாங்க உற்பத்தி செய்தால் பரதேசி மக்கள் தானே பயணடைவார்கள் தமிழ்நாட்டிற்காக உயிரையும் கொடுக்க சித்தமாக இருக்கும் இந்த உத்தமர்களுக்கு என்ன பயன்.

இவையெல்லாம் கூட கிடக்கட்டும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக ஆட்சிக்கு வந்த இவர்கள் மொழி வளர்ச்சிக்காக செய்தது என்ன. தமிழ் கற்பிக்கும் பள்ளி கூடங்கள் வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேல் முடப்படுகிறது. தமிழை பயிற்று மொழியாக கொண்ட படித்த இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

சட்டம், மருத்துவம், பொறியியல், கணினிதுறை போன்றவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உள்ளது, தமிழ் குழந்தைகள் பச்சை நிற பென்சிலை எடுத்து வா என்றால் புரியாமல் விழித்து க்கிரின் (green) பென்சிலை எடு என்றால் மட்டுமே எடுக்க கூடிய அளவிற்கு மொழி தேய்ந்து கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது ஆனால் செம்மொழி தகுதியை தமிழ் பெற்று விட்டது என்று பல ஆயிரம் கோடியை கழக தமிழ் ஆர்வலர்கள் சுருட்டி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தது. அந்த விழாவிற்கு அப்துல்கலாமல் அழைக்கப்படவில்லை என்று சில அப்பாவிகள் வருத்தப்படுகிறார்கள். விஞ்ஞானி ஆனாலும் கூட தமிழை மறக்காத தூயவர் தமிழிலேயே பதவி பிராமணம் எடுத்துக் கொண்ட தலைமை குடிமகன் தமிழையும் தேசத்தையும் சுவாசமாக கொண்ட நல்லவர் தமிழக்கு செம்மொழி தகுதியை வாங்கித் தந்த உண்மை தொண்டர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தால்.

செவ்வாயழை தோட்டத்தில் சீட்டாடும் குரங்குகளான வாலி வைரமுத்து கூட்டத்தார்கள் இடையில், வட்டமிடும் கழகுகளான அழகிரி, தயாநிதிமாறன் கும்பலுக்கு மத்தியில், வாய்பிளந்து நிற்கும் ஒநாய்களான கனிமொழி, கயல்விழி போன்ற அரைவேக்காட்டு மேதாவிகளுக்கு இடையில் சுற்றி வளைக்கும் மலை பாம்புகளான ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் நெருக்குதலுக்கு இடையில் பாவம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடி போயிருப்பார், ஜெயலலிதா இரவோடு இரவாக கலைஞரை கைது செய்த போது ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று கத்தினாரே அதே போல அப்துல்கலாம் கத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை கலைஞர் புண்ணியத்தில் நல்லவர்களின் நகைப்பிற்கு இடம் தராமல் செத்து போன இலங்கை தமிழர்களின் சாபத்திற்கு ஆளாகாமல் செத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின் கோபத்திற்கு இறையாகாமல் அப்துல் கலாம் காப்பாற்றப்பட்டார். அதுவரையில் உலக தமிழர்களின் ஒரே தலைவருக்கு நன்றி.




இந்தியா பைத்தியகார நாடு...?

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். அழிவை பற்றி அக்கறை இல்லாமல் தனது ஆனந்தத்தை மட்டுமே பேணி பாதுகாக்கும் மனிதரை இப்படி சொல்வது வழக்கம். ஆனால் இன்றைய தலைவர்கள் பிடில் வாசிப்பதையெல்லாம் விட்டுவிட்டு அதை விட அதிகமான குரூரங்களில் ஈடுபட ஆரமித்துவிட்டார்கள். இதை இன்னும் விளக்கி சொல்ல வேண்டுமென்றால் சொந்த மகனை கழுத்தறுத்து வழியும் ரத்தத்தை மது கோப்பையில் பிடித்து ஆசை காதலிக்கு ஊட்டுவது போல என்றும் சொல்லலாம்.

அமெக்க அதிபர் இந்தியா வருகிறார் இந்தியா வளரும் நாடு அல்ல வளர்ந்த நாடு என பட்டையம் தருகிறார் இன்னும் பல நாடுகளில் இருந்து வருகை தரும் தலைவர்கள் இந்தியா புத்துயிர் பெற்று விட்டது, வளமையோடு எழுந்து நிற்கிறது என்று பட்டு கம்பளத்தில் நின்று பாராட்டு உரை படித்து விட்டு போகிறார்கள். சராசரி இந்தியன் ஒழுகும் ஓட்டை குடிசையில் ஒடிந்த கட்டிலில் உட்கார்ந்து இலவச வண்ண தொலைக்காட்சியில் இவைகளை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகிறான் .


கந்து வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் எங்காவது ஒரு மூலையில் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறான். ஆடு மாடுகள் நிறைந்த பூமியில் உதட்டில் ஈரம் பட ஒரு துளி பால் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு பதினைந்து குழந்தைகள் பட்டினியால் துடிதுடித்து சாகிறார்கள். போதிய போஷாக்கு இல்லாததால் தினசரி ரத்த சோகையில் ஏராளமான தாய்மார்கள் பாதிப்படைந்து கொண்டே வருகிறார்கள் வயல்வெளியில் பயிரை விட களைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல பொருட்களின் தரத்தை விட விலைவாசி பன்மடங்கு உயர்ந்து கிடக்கிறது. தொழிற்சாலை இயங்குவதற்கும் பயிர்களுக்கு உயிர் தண்ணி கொடுப்பதற்கும் குழந்தைகள் இரவில் படிப்பதற்கும் கூட மின்சாரம் கிடையாது. வயிற்றுவலி என்று அரசு மருத்துவமனை சென்றால் அப்பாவி இந்தியன் காலரா நோயால் செத்து போகிறான்.

உண்மையான நிலை இப்படி இருக்கும் போது கடல் கடந்து வந்த தலைவர்களும் இங்கே இருக்கும் உள்வீட்டு தலைவர்களும் இந்தியா முன்னேறிவிட்டது என்கிறார்களே. ஒருவேளை இந்த தலைவர்களுக்கு எதாவது பார்வை கோளாறா? அல்லது வறுமையை மட்டுமே பார்க்கும் நமக்கு எதாவது மூளை கோளாறா? என்ற சந்தேகம் வலுவாகவே வருகிறது.


1990-க்கு முன்பு இருந்த இந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தற்கால இந்தியா முன்னேறி இருப்பதாகவே தோன்றுகிறது. மக்களின் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. நிலத்தின் விலை ஆகாயத்தை தொட்டாலும் வீட்டு மனைகளை வாங்கி போடுபவன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆடம்பர பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பொருட்கள், நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஐந்து ரூபாய் நோட்டுக்கு ஏங்கி கிடந்தவன் கூட ஐநூறு ரூபாய் நோட்டை சுலபமாக எடுத்து மாற்றுகிறான். இவையெல்லாம் முன்னேற்றத்தின் அடையாளம் தானே என்று நாம் நினைக்க தோன்றுகிறது. தலைவர்கள் சொல்வது சரியாக இருக்க கூடுமோ என்று மயக்கமும் ஏற்படுகிறது.

சிங்கப்பூர், ஜப்பான், அமெக்க நாடுகளை போல இந்தியாவும் பணக்கார நாடாக ஆகிவிட்டதாக நம்புவதில் சில சிக்கல்கள் உள்ளன. சாலையோரங்களில் குடியிருப்போரின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. ஆயிரம் சட்டம் வந்தாலும், அனைவருக்கும் இலவச கல்வி என திட்டம் வந்தாலும் வேலைக்கு போகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. நெருக்கடி மிகுந்த பல சேரிப்பகுதிகளில் அடிப்படை சுகாதாரமும், மருத்துவ வசதியும் இன்று வரை கூட இல்லை. கிராமங்களில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைவலிக்கு மாத்திரையும் இல்லை. அதை தருவதற்கு மருத்துவரும் இல்லை. எனவே வளர்ந்து விட்ட இந்தியா என்று காட்டப்படும் சித்திரம் வீக்கமே தவிர வளர்ச்சியில்லை.
முன் எப்போதும் இல்லாததை விட இப்போது விவசாய தொழில் பெரிய பின்னடைவை எதிர் நோக்கி உள்ளது. பருவ நிலை மாற்றத்தால் ஒரு பகுதியில் அதிகப்படியான மழையும், இன்னொரு பகுதியில் மழையே இல்லாத நிலையும் விவசாய மகசூலை சீர்குலைக்கிறது. நீர் தேக்கங்களில் பராமரிப்பு சரிவரை இல்லை என்பதினால் தண்ணீர் தேவைக்கு குறைவாகவே கிடைக்கிறது.

அசுர வேகத்தில் ஆற்று மணல் படுகைகள் கொள்ளையடிக்கப்படுவதினால் நிலத்தடி நீருக்கும் பயங்கர பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. முறைப்படி தண்ணீர் விட முடியாமல் மின்சாரம் கழுத்தை அருக்கிறது. கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை. களத்துமேட்டு நெல்லு வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் உழைப்பவனின் உயிரில் பாதிப்போய் விடுகிறது. ஆனால் நமது மத்திய மாநில அரசுகள் இந்தியாவின் முதுகு எலும்பான விவசாயத்தை பற்றி கிஞ்சிதித்தும் கவலைப்படுவதில்லை.

அவர்களுடைய கவலைகள் புதிய திட்டங்கள் எதை எதை போட்டு எவ்வளவு நீதி ஒதுக்கீடு செய்து அதில் எத்தனை சதவிகிதம் கமிஷன் அடிக்கலாம் என்றும், எந்த பெரிய முதலாளிக்கு அரசாங்க ஒப்பந்தங்களை கொடுத்து எப்படி விசுவாசத்தை காட்டலாம் என்றும், அடுத்து வரும் தேர்தல்களில் எவ்வளவு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறலாம் என்றும் இருக்கிறதே தவிர மக்கள் நலம், நாட்டு வளர்ச்சி என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை. உண்மையில் இந்திய தலைவர்கள் மட்டும் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாக இருந்திருந்தால் அமெரிக்க நாட்டையே பொருளாதார பலத்தால் அச்சுறுத்தி அடக்கி வைக்கலாம். அந்தளவு செல்வங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கிறது. எடுத்து பயன்படுத்த தான் ஆட்கள் இல்லை.

நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதி படைத்த தலைவர்கள் இருந்திருந்தால் இன்று உலகமே கைகொட்டி சிரிக்கும் அலைகற்றை ஊழல் நடைபெற்றிருக்கவே முடியாது. 2 ஜி அலைகற்றைகளை வாங்கிய நிறுவனங்கள் சம்பாதித்த தொகையை முழுவதும் நாட்டு நல திட்டங்களில் செலவிடப்பட்டிருந்தால் பாதி இந்தியாவை ஜப்பானாக்கி இருக்கலாம்.


உதாரணமாக ஸ்வான்டெலிகாம் நிறுவனம் தான் வாங்கிய அலைகற்றையின் ரூ. 1500 கோடி உரிமத்தில் நாற்பத்தி ஐந்து சதவிகிதத்தை ஒரே வாரத்தில் விற்று 6000 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது. இதே போல யுனிடெக் நிறுவனம் 1658 கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திடம் பெற்ற உரிமத்தை சில நாட்களிலேயே 7442 கோடிக்கு விற்று உள்ளது. டாட்டா டெலிசர்வீஸ் நிறுவனம் 1667 கோடிக்கான உரிமத்தில் வெறும் இருபத்தி ஐந்து சதவிகிதத்தை டோக்கோமா நிறுவனத்திற்கு 13000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. ஒரே வாரத்திலேயே இத்தனை கோடி ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று தனியார் முதலாளிகளுக்கு தெரிந்த விஷயம் அரசு தலைவர்களுக்கு தெரியாது என்றால் அதை நம்புவதற்கு இந்தியர்கள் அனைவருமே மடையர்களாகத் தான் இருக்க வேண்டும்.

அலைகற்றை ஊழல் மட்டுமல்ல இந்திய தேசிய காங்கிரஸின் ஊழல் மகுடத்தில் இன்னொரு வைரமாக காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் அமைந்துள்ளது. பதினைந்து நாட்கள் மட்டுமே நடைபெற்ற ஒரு விளையாட்டு போட்டிக்கு அரசாங்கம் செலவிட்ட மக்கள் வரிப்பணம் ரூ. 70 ஆயிரம் கோடி ஆகும். இதே விளையாட்டு போட்டியை 2006-ல் ஆஸ்திரேலிய நாடு நடத்திய போது அங்கு செலவான தொகை 5200 கோடி மட்டும் தான். நான்கு ஆண்டுகளில் விலைவாசி உயர்வு நூறு சதவிகிதத்தை தாண்டி உயர்ந்து விட்டது எனக் கொண்டாலும் பத்தாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் மக்கள் வரிபணத்தில் 70000 கோடி ரூபாய் எடுத்து யார் யாரோ உண்டு கொழுத்து விட்டார்கள். மிக பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்ட பீரங்கி பேரல் ஊழல் கூட இப்போது நடந்திருக்கும் ஊழல் முன்னால் தூசுக்கு சமமாக ஆகாது.

இத்தகைய பெரிய ஊழல்களை ஆ. ராசா, சுரேஷ் கல்மாடி போன்ற தனிநபர்கள் மட்டுமே செய்தார்கள் என்பதை நம்புவது கடினம். பிரதமரின் அறிவுரையையும் மீறி ஊழல் நடந்ததாக சொல்வதை பார்க்கும் போது இந்தியாவின் அதிகார பீடம் பிரதமறிடம் இருக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

தேசிய அளவில் கருணாநிதி என்ற தனிநபரின் பலம் சுண்டக்காய் அளவு தான். மத்திய மனிதர்களின் அதிகார ஆசிர்வாதம் இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் மூட்டையை தனி ஒருவராக சுமந்து கொண்டு தமிழ் நாட்டிற்கு வந்திருக்க முடியாது. ஊழலில் பங்கு பெற்ற பயன்பெற்ற பலரில் கருணாநிதி குடும்பமும் ஒன்றாகயிருக்குமே தவிர அவர்களே முற்றிலும் சுவை பார்த்தவர்கள் என்பதை நம்புவது கடினம்.

பொதுவாழ்வில் நேர்மை, ஒழுக்கம் என்று வீராப்பு பேசும் நேரு குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த இரண்டு ஊழல்களும் நடைபெற்றிருக்கவே முடியாது. எனவே விசாரிக்க வேண்டியது தி.மு.க. வை மட்டுமல்ல சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் கூடவே தான்.


இந்த ஊழல் முன்னால் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசாரணை குழுக்கள் எதுவும் உருப்படியான செயலை செய்து விட இயலாது. இந்திய மக்கள் சக்தி தான் தவறுகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கும் குடும்பங்களின் அதிகார வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலும். அப்படி முடிவுக்கு வராத வரையில் இந்தியா வளர்ந்த நாடு அல்ல, வளரும் நாடும் அல்ல, பைத்தியகார நாடு.

Friday, January 28, 2011

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மக்களிடையே ஏகோபத்திய ஆதரவு இருப்பதாக நண்பர் ஒருவர் என்னிடம் பெருமையாகச் சொன்னார். அவரும் அந்தத் திட்டத்தால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறுவதாக நம்பினார். அவரிடம் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசியல், பொருளாதார பின்னணிகள் குறித்து உரையாடினேன். நான் பேசியதையடுத்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி அவர் கொண்டிருந்த மாயை உடைந்துபோனது. அவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று என்னைத் தூண்டியது.

இனி கட்டுரைக்குள் போகலாம்.

அண்மைக் காலமாக அமெரிக்காவில் மருத்துவமனைகளுக்குச் செல்வதில் அந்நாட்டு மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லையாம். சாதாரண உடல் உபாதைகள், உடல் நலக்கோளாறுகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த ஏற்கெனவே சாப்பிட்டு வந்த மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கிக் கொள்கிறார்களாம். இது ஏதோ கற்பனையில் கண்டுபிடித்து சொல்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். அண்மையில் அமெரிக்கா வுக்குச் சென்று வந்த என் தோழியின் சகோதரரனான கண் மருத்துவர்தான் இதை என்னிடம் சொன்னார்.

இந்தளவுக்கு அமெரிக்கர்கள் மருத்துவமனைகளை வெறுக்க என்ன காரணம் என்பதையும் அவரே என்னிடம் விளக்கினார்.

கண்மருத்துவ சேவையைத் தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்காதான் முன்னுதாரணம். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீட்டுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவை முற்றிலும் மறுக்கப்படுகிறது.

கண்காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளையால் அமெரிக்காவில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப் படுகின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவச் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதற்குக் காரணம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள்தான்.

காப்பீட்டு நிறுவனங்களின் களவாணித்தனம்

அமெரிக்கா மட்டுமல்ல வளர்ந்த (முதலாளிய) நாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அந்நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டு வசதிகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, அந்நாடுகளில் உள்ள பொதுமக்களும் ஆத்திர அவசரத்துக்கு உதவுமென்று மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்கிறார்கள். மொத்தத்தில், அந்நாடுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.

இவ்வாறு மருத்துவக் காப்பீடு பெற்றவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிகிச்சைக் கட்டணத்தைக் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மருத்துவ மனை பெற்றுக் கொள்ளும். பயனாளிகள் நேரடியாகப் பணம் செலுத்துவதில்லை என்பதை சாதக மாக்கிக் கொண்டு, வழக்கத்தைவிட கூடுதலாக மருத்துவக் கட்டணம் வசூலிப்பது அந்நாட்டில் வழக்க மாகிவிட்டது. சாதாரணமாக ஓர் அறுவைச் சிகிச்சைக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த அறுவை சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்வதற்கு இரண்டு மடங்காக 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திக் காட்டி காப்பீட்டு நிறுவனங்களிடம் மருத்து வமனை நிர்வாகம் வசூலித்து விடும்.

இதே நிலை தொடர் கதையாகி, சாதாரணமாக சிகிச் சைக்கு வரும் நோயாளிகளிடமும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் போது பெறப்படும் கட்டணமே வசூலிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால்தான், மருத்துவச் செலவு அங்கே அதிகரித்துவிட்டது” என்றார், அமெரிக்காவுக்குச் சென்று வந்த அந்த மருத்துவர். இந்நிலை அமெரிக் காவில் மட்டும்தான் என்று நினைத்து விட வேண்டாம். இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இதே நிலை உருவாகிவிட்டது.

அதற்குக் காரணம் யார்?

அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு

‘ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு’ என்ற பன்னாட்டு காப்பீட்டு நிறுவனத் திடம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டிய லிட்டிருக்கும் தனியார் மருத்துவ மனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதந்தோறும் 50 ரூபாய் வசூலித்து, காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இதன் மூலம் காப் பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப் படுத்தியுள்ளது.

உயிர்காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

அதே போல் உயிர் காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண் டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீட்டுத் தொகையாக ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி விடும். இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீட்டுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீட்டு நிறுவனம் கொண்டு வந்து விடும். அதன்பிறகு மருத்துவத் துறையில் அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்றாகி விடும். “காய்ச்சல் என்றால் ஆயிரம் கொடு” என்பார்கள். “சளி என்றால் பத்தாயிரம் கொடு” என்பார்கள். அப்புறம் என்ன? மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் அல்லது பணம் படைத்தவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்கிற ஆபத்தான நிலை (இப்போது அமெரிக்காவில் உள்ளது போல்) உருவாகிவிடும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்றைக்கு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகள், கட்டடத் தொழி லாளர்கள், தினக் கூலிகள், தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. (மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் இலவச மாக சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி யாற்றும் மத்திய அரசு நிறுவனம் செலுத்திவிடும். இங்கேயும் மருத்து வச் செலவைக் கூடுதலாகக் காட்டி அரசிடம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது)

பணம் கறக்கும் காப்பீட்டு நிறு வனங்கள், கார்ப்ரேட் மருத்துவ மனைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வருவோரிடம், “நோயாளியா பணம் தருகிறார், அரசு தானே தருகிறது” என்று தங்கள் விருப்பத்துக்கு மருத்துவச் செலவை உயர்த்திக் காட்டி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கும் இதே நிலைதான். இதனால், காலப் போக்கில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வசூலிக்கப் படும் தொகையே எல்லோரிடமும் வசூலிக்கும் நிலை உருவாகிவிடும். “மற்ற நோயாளிகள் வந்தால் என்ன? வராமல் போனால் என்ன? நமக்குக் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறதே” என்ற எண்ணத்தில் மருத்துவ மனைகள் செயல்படத் தொடங்கி விடும்.

அரசன் வழங்கிய பனிக்கட்டி!

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்டார் ஹெல்த் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத் திருப்பது ரூ. 628.20 கோடி! ஆனால், பல்வேறு அறுவை சிகிச்சை களுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டண மாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடி. மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவ மனைகள் ஒன்றும் இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை. பயனாளிகள் சார்பில் காப்பீட்டு நிறுவனம் மருத்தவமனைக்ளுக்கு செலுத்திய 415.43 கோடியில் மருத்துவமனைகளின் லாபப் பங்கு எவ்வளவு இருக்கும் என்பதை சிந்தியுங்கள்.

இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை ரூ. 750 கோடி. அரசன் வழங்கிய பனிக்கட்டி அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் என கைமாறி வருவதற்குள் கரைந்து விடுமே அதுபோல இந்தத் திட்டத்தின் பயன் மக்களை வந்து சேர்வதற்குள் மக்களின் வரிப் பணத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவ மனைகளும் தான் கொள்ளை லாபம் அடிக்கப்போகின்றன. அத்துடன், கூடுதல் பலனாக காலப்போக்கில் அரசு மருத்துவமனைகளும், இன்றைக்குக் கிடைத்து வரும் இலவச மருத்துவமும் முற்றிலும் அழிந்துவிடும். தமிழக கார்ப்ரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். அதை மறைத்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பதே மக்கள் நலன் திட்டம் போல் விளம்பரம் செய்து வருகிறார்கள். மக்களும் கேள்வி கேட்காமல் அறியாமையில் ஏமாறுகிறார்கள்.

மருந்து மாத்திரைக்கென்று, தனியாக காசு பிடுங்குகிறார்கள்!

தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல், இருமல் என்று போனாலே உயிர் பயத்தை ஏற்படுத்தி, ‘சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்‘ என எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக் கூடியவை. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பட்டிய லிட்டிருக்கும் மருத்துவமனைகள் எல்லாமே பணக்காரர்களுக்கான மருத்துவமனைகள்தான். இனி அந்த மருத்துவமனைகள், “காப்பீட்டுத் தொகை முழுவதும் அறுவை சிகிக்சைக்கே சரியாகிவிட்டது. மருந்து மாத்திரைகளுக்கு 5 ஆயிரம், 6 ஆயிரம் செலுத்துங்கள்” என்று பிடுங்கி விடுகிறார்கள். லட்சக் கணக்கில் ஆகவேண்டிய மருத்துவச் செலவில் சில ஆயிரங்கள் மருத்து செலவோடு போய்விட்டதே என்று சிலர் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் மருந்து மாத்திரைக்கு ஆகும் செலவை சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அப்படியென்றால் அரசு மருத்துவமனைகள் எதற்கு?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்குகிறது. பத்து ஆண்டுகளில் மக்கள் வரிப் பணம் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே சிகிச்சையை நையா பைசா செலவில்லாமல் அரசு மருத்துவ மனைகளில் செய்ய முடியும் தானே? அப்படியிருக்கும் போது, தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இந்த அரசே வழிவகை செய்ய என்ன காரணம்? உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலை சிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவ மனைகளிடம் அதனை ஒப்ப டைத்தது ஏன்?

நூறு கோடி ரூபாய் இருந்தால் அரசால் ஓர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையே கட்ட முடியும் என்கிற நிலையில், இவ்வளவு பெரிய தொகையை (ஆண்டுக்கு 750 கோடி ரூபாய்) தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். அப்படியென்றால், மருத்துவக் காப்பீட்டுக்குத் தனியாரிடம் ஒவ்வொராண்டும் போய்ச் சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர அரசு மருத்துவமனைகளைக் கட்ட முடியும்.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கு கின்றன. இவற்றை முறைப் படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவ மனைகளின் உள் கட்டமைப்பையும் நிர்வாகத் தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சை யினை அரசே தரமுடியும்.

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாதாரண மக்களும் உயர் சிகிச்சை பெறும் வசதியைச் செய்து விட்டதாகச் சொல்லும் தி.மு.க. அரசு, அதே சாதாரண மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இருக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் தருவது தண்டத்திற்காகவா?

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் வசூலிக்கும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் எதுவும் அரசிடம் இல்லையே, ஏன்?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத் துக்காக ஆண்டுக்கு 750 கோடியை ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு வழங்குகிறது. இத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு இந்தத் தொகையில் இருந்து மருத்துவக் கட்டணம் செலுத்தப் படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனமும் 50 சதவிகித லாப நோக்கு இல்லாமல் தொழிலில் இறங்காது. ஒவ்வொராண்டும் இந்தத் திட்டத்தின் மூலம் அந்நிறுவனம் பெறும் இலாபம் எவ்வளவு என்பதை அந் நிறுவனமோ அரசோ வெளியிடுமா?

‘இங்கே கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்’ என்று தனியார் மருத்துவமனைகள் விளம்பரம் செய்கின்றன. இதில் அவர்களுக்கு லாபம் இல்லை என்றால், விளம்பரம் செய்து மக்களை ஈர்க்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரே நேரத்தில் அரசு பணத்தில் (அதாவது மக்களின் வரிப் பணத்தில்) காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் கொள்ளை லாபம் ஈட்டும் போது இங்கே எப்படி முறையான நியாயமான மருத்துவம் கிடைக்கும்?

இது திட்டமிட்ட சதி

ஓரளவுக்கு நுகர்வோர் நலம் பாதுகாக்கப்படும் அமெரிக்கா விலேயே மருத்துவமனைகளின் கொள்ளை லாபத்தைத் தடுக்க முடியாத நிலையில், தி.மு.க. அரசு மக்கள் பக்கம் இருக்குமா? கொள்ளை லாபம் ஈட்டும் ஸ்டார் ஹெல்த் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் பக்கம் இருக்குமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ மனைகளின் பெருக்கத் தையடுத்து அரசு மருத்துவ மனைகளின் வீழ்ச்சி தொடங்கியது. இது திட்டமிட்டே உருவாக்கப் பட்டது. நடுத்தர மக்கள் எலும்பு முறிவு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்குப் போனால், “இங்கே ஆப்ரேஷன் செய்தால் இன்ஃபெக்சன் ஏற்படும். எனக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனை இருக்கிறது. அங்கே வாருங்கள், குறைந்த செலவில் சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து விடுகிறேன்” என்று மூளைச் சலவை செய்யும் வேலையை அரசு டாக்டர்கள் தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அரசு மருத்துவமனைகளை அழித்துக் கொண்டிருப்பது என்று நினைத் திருப்பார்கள் போலும். ஒரேயடியாக அரசு மருத்துவ மனைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, தனியார் மருத்துவ மனைகளை வளர்க்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது.

அழிவு விளிம்பில் அரசு மருத்துவமனைகள்!

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மறைமுக நோக்கம், அரசு மருத்துவமனைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்வதுதான்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதை அரசு நிறுத்திவிட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான வால்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் இப்போது இருப் பில்லை என்பது வேதனையான உண்மை.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஓராண்டு வழங்கப்படும் ரூ.750 கோடியை அரசு மருத்துவ மனைகளில் செலவிட்டால், அதன் தரம் உயர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். அரசு மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்பைச் செயல் படுத்தினால், நடுத்தர வர்க்க மக்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை -களை நாடி வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவற்றை எல்லாம் இந்த அரசு செய்யுமா? தனியார் நிறுவனங்கள் தூக்கிப் போடும் எலும்புத் தூண்டுகளுக்காக சொந்த மக்களைக் கொல்லக் கூடத் துணியும் என்பதற்கு போபால் விஷவாயு சம்பவத்தில் ஆண்டர்சனை தப்பிக்க விட்டது ஓர் உதாரணம். இப் போதும், அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறை வேற்றி அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கிறார்கள். அப்படி யான அரசுக்கு கங்காணி வேலை பார்க்கும் தி.மு.க. அரசும், அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்ளை போன்றவற்றில் இந்தியப் பேரரசை அடியொற்றி வருகிறது என்பதின் அடையாளமே உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)

சோனியாஜி அவர்களே! - நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

Sunday January 23, 2011

TSV Hari தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன்

TSV Hari அவர்களின் “Soniaji- Please tell us who you are really “on December 26, 2010 http://www.sanghparivar.org/forum/conspiracy-behind-unique-id-number-for-indian-citizens

ஆங்கிலக் கட்டுரையிலிருந்து

தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஸ்ரீ ஹரி (TSV Hari) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து முடிந்தவுடன் தமிழில் எடுத்துத் தொகுத்தவரின் முதல் பிரமிப்பு, இச் சொற்களில் உடனுக்குடனே விளைந்தது. பூந்து விளையாடி விட்டார், போங்கள்!

கனவிலும் நினைக்க முடியாத இடங்களிலிருந்து ஒரு கட்டுக்கோப்புடன் ஒருங்கே அடுத்தடுத்து முரண்பாடின்றி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் ஸ்ரீ ஹரி அவர்கள் எப்படித் தேடித் தேடித் தொகுத்துள்ளார் என அறியும் போது எனக்குள் மலைப்பு தான் மேலோங்கியது. இக்கட்டுரையை ஒரு முறைக்கு மறு முறையென இரு தடவை படித்துத் தெளிந்தேன். படிக்கும் போது கூட “James Bond 007” திரைப்படக் கதையை படிப்பது போல உணர்ந்தேன். படித்து முடித்தவுடன், இதைத் எல்லா தமிழ் மக்களும் அறிய வேண்டுமே எனும் பேராவல், என் பிடரியை பிடித்துத் தள்ளியது போல, என்னை உடன் தூண்டி விட்டது. மற்ற எல்லா அலுவல்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, உடனுக்குடன் இத்தமிழ் தொகுப்பில் என்னை ஈடுபடவும் வைத்துவிட்டது. ‘அரசியல் ராஜ தந்திர’ம் என்றால், (diplomacy) ‘நாடு விட்டு மற்றொரு நாட்டிலும் சென்று கொலை புரிய வைத்தல்’, இடையில் சரிவு ஏற்படாதவாறு மிகவும் கவனத்துடன் செயல்படுத்தி, எதிர்பாராமல் எதையும் தற்செயலாகக் கூட நடக்க விட்டுவதில்லை என்ற கருத்துடன் – அதாவது”தங்கள் திட்டங்களை முற்றிலும், கால் புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப் புள்ளி முதற்கொண்டு அத்தனையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்று வதில் வல்லமை படைத்தல்” எனும் மற்றொரு அங்கமும் உள்ளது என நான் இதுவரை அறியாத விவரத்தை இப்போது விலாவாரியாக நன்கு அறிந்து, தெளிவும் பெற்றேன்.

இனி, ஆங்கிலக் கட்டுரையில் உள்ளபடி செல்வோம்:

அன்றைய “எட்விகே அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனும் இன்றைய “சோனியா காந்தி!” அவர்களைப் பற்றிய முழு விபரங்களை இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் சில அடிப்படை கேள்விகள்::

• இத்தாலியில் பிறந்து இந்திய ‘ராஜீவ் 1968 இல், காதல் மணம் புரிந்தமையால், அவருக்காகப் பிரத்யேகமாக இறக்குமதி செய்யப் பட்டவரா? அல்லது

• நேரு வம்சத்தவர் என்பதால் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டு, காங்கிரஸ் கட்சியிலுள்ள “ஆமாஞ்சாமி” களால் அங்கீகரிக்கப்பட்டு காங்கிரஸ் மேலாண்மைத் தலைவரென என இந்தியாவில் கோலோச்சிக் கொண்டு இருப்பவரா? அல்லது

• உலகிலேயே மிகச் சிறந்த புராதன கலாச்சாரமான இந்திய நாட்டை எல்லாவிதத்திலும் அழித்து விட, கெட்ட எண்ணங்கொண்ட பகைவர்கள் தூண்டிக் கொடுத்தவாறு, நெடு நோக்கு-நுழைபுலத்துடன் ஒரு செயல் திட்டப்படி, நுழைக்கப்பட்டு இருப்பவரா? மேலும்

• அதே கொடு நோக்கு-பகைமை எண்ணத்துடன், ஹிந்துஸ்தானையே, நிர்மூலமாக்கி விட வேண்டுமென சங்கல்பம் செய்து கொண்டு இங்கு வந்தவரா?

இனி அவரைப்பற்றி மட்டுமே நன்கு பகுத்தறிவுக் கூறுபடித்தி விமர்சிப்போம்.

தந்தை ‘ஸ்டெஃபினோ’ தாய் பயோலா மைனோ

இவர் தந்தை ‘ஸ்டெஃபினோ’, தாய் பயோலா மைனோ ஆகியோருக்கு அருந்தவப் புதல்வியாக, ‘வெஸென்சா’ எனும் இத்தாலிய ஊரின் பக்கத்தில் 30 கி.மீ உள்ள “ஓர்பஸ்ஸானோ” (Orbassano) எனும் கத்தோலிக்கக் கிருஸ்தவ மிகச் சிறிய கிராமத்தில், டிஸம்பர் 9, 1947 இல் பிறந்தார்.

முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். காந்தி எனும் சிறப்புப் பெயரிட்டுக் கொண்ட நேரு வம்சத்தில், மூன்று நபர்கள், இதுவரை இயற்கையாக மரணத்தை அடையவில்லை. இந்தப் பட்டியலில் ‘மோகன் சந்த் கரம்சந்த் காந்தி’ யின் பெயர் சேர்க்கப்பட வேண்டியதில்லை. (MK Gandhi) ஏனெனில், ‘காந்தி’ என்ற பெயர், இவருக்கு உண்மையான குடும்பப் பெயர் (surname). ஆனால், இந்திரா காந்தி எனும் பெயரில் உள்ள காந்தி எனும் சொல், ‘கான்' எனும் முஸ்லிம் பெயருக்கு பதிலாக ‘காந்தி’ பெயர் முதன் முதலாக ஒட்டிக் கொள்ளப்பட்டது. இம்மூவரும் துர்மரணத்தையே அடைந்துள்ளனர்.

கீழே உள்ளவர்களெல்லாம் நேரு வம்சாவளியைச் சார்ந்தவர்கள்.

ஜவஹர்லால் நேரு – இந்திய முதல் பிரதம மந்திரி இவருக்கு காந்தி எனும் பெயர் சேர்க்கப்பட வில்லை. (அதனால் இவர் கொல்லப்படவில்லை போலும்!!)

இவர் மகள் இந்திரா காந்தி, பிரதம மந்திரியானார் - ‘பெஃரோஸ் கான்’ எனும் முஸ்லிமை மணம் புரிந்து, ‘கான்’ எனும் மூல குடும்பப் பெயரை மாற்றி ‘காந்தி’ என இந்திய மக்களை ஏமாற்றவே “கான்” என்ற இடத்தில், புதிதாக “காந்தி” என ஒட்டப் பட்டது. 1984இல், “Operation Blue star”க்குப் பின்னர் இந்திரா சீக்கியர்களால் மிகவும் வெறுக்கப் பட்டார். இவரும் கொலை செய்யப்பட்டார்.

இந்திரா காந்தி இரண்டாவது மகன் ‘சஞ்சய் காந்தி’ – அதாவது ‘சோனியா’வின் மைத்துனர். இவர், 1980இல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக வர, தேர்தல் சமயத்தில் அரும் பாடுபட்டவர். இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக இந்தியா நாட்டின் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

‘சஞ்சய்’ பெயருடன் ‘கான்’ எனும் பெயர் சேர்க்காமல், ‘காந்தி எனும் பெயர் ஒட்டப்பட்டது. இவரும் ஆகாய விமானதை ஓட்டும் போது 1980 இல் விபத்துக்குள்ளாகி துர் மரணமடைந்தார். இந்த துர் மரணமும், 1968இல், ராஜீவ்ஜி சோனியாவை மணந்த பின்னரே தான் உண்டானது.

இந்திரா காந்தி 1984 இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்திராஜியின் முதல் மகன் ‘ராஜீவ் காந்தி’ அதுவரை விமான ஓட்டியாக இருந்த வரை, நேரு-காந்தி வம்சாவளியில் வாரிசாக பிரதம மந்திரி பதவியில் பட்டம் கட்டிக் கொள்ள அழைக்கப் பட்டார்.

ராஜீவ்ஜியும் சோனியாவை மணந்த பின்னர்தான், விடுதலைப் புலிகளால் (LTTE) ஸ்ரீபெரும்பூதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

ஆக, ‘காந்தி’ எனும் பெயருக்கும், நேரு வசத்திற்குமே இதுவரை ராசியில்லை. ஏன்? இதற்கெல்லாம் பின்னணி என்ன சற்று ஆராய்வோமா?

சோனியாவின் தந்தை ‘ஸ்டெஃபினோ’, ஜெர்மனி சர்வாதிகாரியுடன் சேர்ந்த ‘பெனிட்டோ முஸ்ஸோலினி’ படையினருடன் இரண்டாவது உலகப் போரில் சண்டையிடும் போது உலகத்தை அன்று ஆட்டிப்படைத்த மிக பயங்கர “கேஜிபி” KGB [Komitet Gosudarstvennoy Bezopasnosti] எனும் ரஷ்ய உளவு நிறுவனத்தால், கைது செய்யப்பட்டார். இவர் ‘வ்லாடிமீர்’ ரஷ்ய சிறையில் சித்திரவதை செய்யப் பட்டதையடுத்து, தங்களுக்கு சாதகமாக உளவறிய ரஷ்யர்களால் ‘ஸ்டெஃபினோ’ சம்மதத்துடன் புதிதாக “கேஜிபி”யால் ஆள் சேர்க்கப்பட்டார். இன்னும் சிலர் இவர் இத்தாலிய மாஃபியாவைச் சேர்ந்தவர் (Mafia) என சொல்கிறார்கள். இன்னும் பலர் இவரை இன்று இந்தியாவைத் தன் உண்மையான தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், மாஃபியாவைச் சேர்ந்தவர் (Mafia) எனும் சொல்கிறார்கள். எந்த மாஃபியா அங்கத்தினரும் – “ஓமேர்ட்டா” (‘Omerta’) என்ற “பொன்னான மௌனம்” (golden silence) எனும் செயல்பாணியில் செயலாற்றுபவர்கள். இதை மீறுபவருக்கு விரும்பத்தகாதவாறு உடனுக்குடன் துர் மரணம் கட்டாயம் உண்டாகும் என்பது உலகறிந்த சமாச்சாரம். இவர்கள் செயல் திட்டம் மிக திறன் வாய்ந்தது. தங்கள் திட்டங்கள் முற்றிலும் நிறைவேற்றுவதில் இவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுபவர்கள் இவர்கள் எதிலும் தற்செயலாக எதிர்பாராமல் நடக்க விட்டுவதில்லை என உலகத்தாரால் சொல்லப்படுகிறது. இதன் பின்னணியை இன்னும் ஒரு முனைப்பாக ஆராய்வோம்.

1965இல், ராஜிவ்ஜி இங்கிலாந்து-லண்டனில் படிக்கும் போதே, முதன் முதலாக, ராஜீவ்ஜி அடிக்கடி செல்லும் ஒரு சிற்றுண்டி நிறுவனத்தில் ‘சோனியா’ பணி புரிந்திருக்கிறார். இந்த சிற்றுண்டி நிறுவனம் – பாகிஸ்தான் உளவுப்பிரிவு ISIஐச் சார்ந்த ‘சல்மான் டஸ்ஸிர்’ (Salman Thassir) என்பவருடையது. இங்கேதான் “சோனியா”-“ராஜீவ்ஜி” இருவருடைய காதல் பூத்து மலர்ந்தது (அல்லது “ ரஷ்ய கேஜிபி” KGBயால் மலரும்படி திட்டப்படி நடத்திக் காட்டப் பட்டதா?). இவர்கள் திருமணத்திற்கு சியாரிசு செயதவர்கள் இருவர்: 1) டி.என். கௌல் (T.N. Kaul) ரஷ்யாவில் இந்தியாவின் தூதராக பணி புரிந்தவர்;

2) இந்திய உளவு ஸ்தாபனமான RAW – Research and Development Wing இன் இயக்குனர் “ராமேஷ்வர் நாத் கௌ”. இவரும் ரஷ்ய “கேஜிபி” KGB க்கு மிக மிக நெருங்கியவர். இவரும் ரஷ்யர்களுடைய இந்தியப் பணிக்காக ஆள்சேர்க்கப் பட்டவர் என பெயர் பெற்றவர். டி.என். கௌல், “ராமேஷ்வர் நாத் கௌ” (Rameshwar Nath Kao); இவ்விருவரும் காஷ்மீர் பண்டிட் இனத்தவர். நேருவும் ஒரு காஷ்மீர் பண்டிட் தான்.

இங்கு மற்றொரு ரகசியம். ரஷ்யா சிறு சிறு நாடுகளாகச் சிதைத்த பின்னர், ரஷ்ய “கேஜிபி” KGB யின் இயக்குனர், “விக்டார் செப்ரிகோவ்” (Viktor Chebrikov), தன்னுடன் மிக மிக ரகசிய மூல ஆதார ஆவணங்களுடன், சொந்த நாட்டைவிட்டு மேலை நாடுகளுக்கு சமயம் பார்த்து ஓடிப்போனவர் / விலகியவர்.

இவருடைய பயங்கர வாக்குமூல ஆதாரங்கள் இன்றும் இருப்பினும், உண்மையில் இன்னமும் நிரூபிக்கப் படாமல் பல இருக்கின்றன. – அந்த ஆவண ஆதரத்தில் நேரு வம்சத்திற்கு சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்கப் பட்டதென உள்ள அமுங்கிக் கிடக்க்கும் வாக்கு வாக்குமூலம் ஒன்று இருக்கிறது.

இந்த “விக்டார் செப்ரிகோவ்” ஆவணங்கள் உண்மையானவை என ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிஞர் “யெவ்கினா அல்பாட்ஸ்” (Harvard scholar of Slav extraction Yevgenia Albats) உறுதியாகச் சொல்கிறார். “விக்டார் செப்ரிகோவ்” ஆவணங்கள் கீழ்க்கண்ட உளவு நிறுவனங்களில் இன்றும் இங்கே உள்ளது.

• அமெரிக்க CIA of USA

• Military Intelligence 6 or Secret Intelligence Service of the United Kingdom.

இந்த ஆவணங்களில் முன்னாள் சோவியத் நாட்டு [CPSU] politburo பல நாடுகளுக்கு சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்கும் மேலாண்மையின் கையொப்பமும் உள்ளது. இந்த ஆவணத்தில், இந்திராஜியில் ஆரம்பித்து, “சோனியா”வின் தாய், தந்தை, ராஜீவ்ஜி, சோனியாஜிக்கும் வழங்கப்பட்டதென உள்ளது. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய மற்றொரு ஆவணம், இதில் சோனியாஜியின் இளம் பிராய மகன் எனக் கண்டு இருக்கிறது. (வேறு யாராக இருக்க முடியும்? இவர் ஒரே மகனான அன்று 21 வயதிற்கு உட்பட்டவராக இருந்த, இனி வருங்கால பிரதமாக இன்று பயிற்சி அளிக்கப்படும், ராகுல் காந்தி தான்). இன்னொரு முக்கிய தகவல்: டிசம்பர் 1985 முன்னரும் சோவியத் நாட்டு [CPSU] politburo ஸ்தாபனத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது எனவும் இருகிறது.

கற்பனைக்கும் எட்டாத இத்தனை அதிக ரொக்கத்தை இவ்வளவு நாள் கணாமல் முதன் முதலில் நேரில் கண்டபின், குட்டிபோட்ட பூனையென, இந்தியாவிலும் மற்ற வெளி நாடுகளிலும் அடிக்கடி தகவல் துறைகளுக்கு சோனியாஜியின் தாய்-தந்தை (Stefano- Paola Maino) பேட்டியளித்தபடி, ராஜீவ்ஜியை சோனியாஜி மணந்ததால் தங்களுக்கு எவ்வித நிதி ஆதாயம் எதுவும் ஏற்பட்டுவிட வில்லை, மாறாக நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” யென ரகசியத் தகவலை கேட்காமலேயே இப்படி உளறிக்கொட்டுவது இன்னும் நம் சந்தேகத்தை வலுப் படுத்துகிறது. சோனியா காந்தியின் தாய் Paola Maino 1983 இறந்துவிட்டார்.

இந்திய மக்கள் மனதைப் புண்படுத்த, இன்னமும் சேதத்திற்குச் சேதமாக இந்த ஆவணங்கள் இன்று நிரூபிக்கின்றன.

மேற்கோள் குறிப்பீடுகளாக:

1. ரஷ்ய CPSU/CC/No 11228/3 dated 20 December 1985இல் உள்ளபடி கிஞ்சித்தும் ஐயமின்றி சோனியா காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் (தாய் தந்தை, மைனர் மகன் ராகுல் காந்தி) சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்க சோவியத் ரஷ்ய ஆணை உள்ளது. USSR Council of Ministers in Directive No 2633/Rs dated 20 December 1985. இது ரஷ்ய தணிக்கை மூலமாக உண்மையென CPSU/CC resolution No 11187/22 OP dated 10/12/1984 நிரூபிக்கும் சான்று ஆதாரம் உள்ளது. இதை மீண்டும் 1992இல், ரஷ்ய அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.

2. இதில் மற்றொரு ரகசியம்: இந்த சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்க ராஜீவ்ஜி 1992 மறைவுக்குப் பின்னரே ஆணையிடப்பட்டுள்ளது.

3. 1991இல், ஸ்விட்சர்லாந்தில் உள்ள சோனியாஜியின் மைனர் மகன் ராகுல் காந்தியின் பெயரால் திறக்கப்பட்ட ஒரு ரகசிய எண் வங்கிக் கணக்கில், US$ 2 billion – அதாவது 200 லட்ச அமெரிக்க டாலராக பாதுகாப்பு நிதியை வரவு வைக்கப்பட்டிருக்கிறது என ஸ்விஸ் அரசாங்க பத்திரிக்கையில் (Swiss magazine Schweizer Illustrierte) காணப்படுகிறது. தோண்டத்தோண்டக் கிடைக்கும் ‘ஆற்று மணல் ஊற்று’த் தண்ணிர் போன்று, தொடர்பான ஆவணங்களில் மற்றொன்று, செப்டம்பர், 21, 2005இல், ராகுல் காந்தியும் அவர், ஸ்பானிஷ் பெண் நண்பர், “வெரோரிக்” ஆகிய இருவருடன் (Rahul Gandhi and his Spanish girlfriend Veronique) பாஸ்டன் விமான நிலையதிலுள்ள அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவன ஆவணப்படி (Federal Bureau of Investigation), கணக்கில் வராத, அல்லது கணக்கு சொல்ல முடியாதபடி உள்ள அமெரிக்க டாலர் இரு லட்ச டாலர் (US$ 200,000) இவர்களிடம் ரொக்கமாக இருந்தாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டில்லி மேல் நீதி மன்றத்தில் உள்ள “பொதுமக்கள் சட்டப்படி உரிமை வழக்கு” (Public Interest Litigation [PIL] 2005இல் பதிவாகியுள்ளது. இவ்வழக்குக்கு இன்னும் தீர்ப்பளிக்கப் படவில்லை.

4. நான்காவது செய்கையாக, மற்றொரு நேரு-காந்தி வம்ச எரிச்சலூட்டும் நெருஞ்சி முள்ளான ‘சஞ்சய் காந்தி’யை விமான விபத்தில் துர் மரணம் என நமக்கு எண்பித்து, பின்னர், அவர் விதவை, ‘சீக்கியராக’ப் பிறந்த ‘மனேகா காந்தி’ யையும் அவள் கைக்குழந்தை ‘வருண் காந்தி’யையும் அரசியல் நாடகக் காட்சிப் பிரிவு போன்று, புகுந்த வீட்டிலிருந்தும் அகற்றப்பட்டார்.

இது பின்னர் ‘சீக்கியர் வணங்கும் பொற்கோவிலில் - Operation Bluestar in mid-1984இல், விளைந்தது. இதில் “அகால் தக்த்” எனும் சீக்கிய உலகியல் சார்ந்த அலுவலக கட்டமைப்பையும் “ஹர்மீந்தர் சாஹேப்” பும், நிர்மூலமாக்கப் பட்டது. இதுவும் டி.என். கௌல், “ராமேஷ்வர் நாத் கௌ” ஆகியோரின் அறிவுரைபடி, நடந்தேறியது. இதே இந்திராஜியால் மிகவும் ஆதரிக்கப்பட்ட சீக்கிய குண்டாவான கேடி- KD (Known Desperado) அரசியலில் மனித உருவிலுள்ள அரக்கன் (Frankenstein), ‘ஜெர்னைல் பிந்த்ரேன்வாலா’ வும் போட்டுத் தள்ளப்படார். இவரை இப்படி உண்டாக்கிவிட இந்திரா காந்தியிடம் முதன் முதலில் சிபாரிசு செய்தவர்கல் கௌல், கௌ ஆகிய இரட்டையர் தான்.

முன்னர் 1971 நடைபெற்ற பங்களாதேஷ் போரில், 92000 பாகிஸ்தான் போர்க்கைதிகளை யும் இவர்களுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் தளபதி, AAK Niaziயை கைது செய்தது மட்டுமல்லாமல், இப்போரில், தோளோடு தோள் கொடுத்து ஒன்றாகப் போரிட்ட இந்திய ராணுவத்தைச் சார்ந்த, “ஷன்பக் சிங்ஜியும், குல்தீப் சிங் ப்ரார் என்பவர்கள் இருவரும் Operation Blue star in mid-1984இல், எதிரும் புதிருமாக, போரிட நேர்ந்தது. ஷண்பக் சிங்ஜி சீக்கிய வன்முறையாளர்கள் சார்பிலும், குல்தீப் சிங் ப்ரார் இந்திய ராணுவத்தை தலைமையேற்றுப் போரிட்டனர். இது இந்திய ராணுவத்தினர் மீதே, பொதுவாக சீக்கியர்களிடம் ‘கெட்ட குருதி ஓட்டத்தை’ ஏற்படுத்த (bad blood) வேண்டுமென திணிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்திராஜி அவருடைய இரு மெய்க்காப்பாளரால் வீட்டுத் தோட்டத்திலேயே ‘ஸ்டென் துப்பாக்கிக் குண்டுகளால் (Sten-Gun) சரமாரியாக உடல் முழுதும் சல்லடையாகத் துளைத்து, கொலை செய்யப்பட்டார். இதனால் இந்திராஜியையும் சீக்கியர் மனதிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

[[[இங்கு நாம் ஒன்றை மனதில் இறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டுப் பற்றை நிரூபிக்க, சீக்கியர் எவருக்கும் எந்நாட்களிலும் குறைந்தவர்கள் அல்லவே அல்ல. சொல்லப் போனால், மிகவும் போற்றிப் புகழத் தக்கவர்கள். இவர்கள் அன்று, ஹிந்துக்களுக்காகப் போரிடாவிட்டால் இந்திய நாடே என்றோ, இஸ்லாமிய மயமாகி இருக்கும்]]].

சீக்கியர்களின் குரு கோபிந்த் சிங்ஜி, சீக்கியப் படைகள் என்றென்றும் ஹிந்துமத கொள்கைகளுக்காகவும் பிரிவினை யாக்கப்படாத இந்தியாவுக்குக் கேடையமாக இருப்பர் எனவும் கூறியுள்ளார். ஆக சீக்கிய “கால்சா” சித்தாந்தப்படி, சீக்கியர்களை ஆள்வது மக்கள் சரி நிகர் சமானமான (அபேதவாத) கொள்கையுடன் கூறு போடாத இந்தியாவில், வாழ வேண்டுமென ஆணையிட்டுள்ளார். இதன்படி அவர் சீக்கியர் களுக்கு போதித்தபடி, “கால்சா’ சித்தாந்தப்படியே தங்கள் ஆட்சியை செலுத்துவர். RAAJ KAREGAA KHALSA என்பதே சீக்கியர்களின் செயல் படுத்தப்படும் ஆரம்ப வார்த்தை. இது சஞ்ஜய்-மனேகா இருவரின் மகனான பெஃரோஸ் வருண் காந்தி ஆகியோரின் வருங்கால அரசியல் வாழ்க்கை, கேள்விக்குறி யாகவும், இன்று இவர்கள் வலது சாரி வன்முறையாளர்கள் எனவும் சித்தரிக்கப் படுகின்றனர்.

இந்திராஜி கொலை முடிந்த கையோடு, டில்லியில் அனேக சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இதில் சீக்கியர்கள் டில்லியிலேயே ஆயிரக்கணக்கில் படுகொலை கெய்யப்பட்டனர். இதை நடத்திக் காட்டிய பல காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுக்கும் நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டது.

இப்படி, தொலைவிலிருந்து செயலாற்றுபவர்களால், இந்திய அரசியல், கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால், முதலில், சஞ்சய், இந்திராஜி, என இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யப் பட்டனர்.

இந்திரா காந்தியின் மறைவினால் மக்கள் அளித்த அனுதாப அலையால் கிடைத்த பெரும் எண்ணிக்கையுடன் தேர்தலில் வென்று ராஜீவ்ஜி மீண்டும் அரசியல் நுழைந்தார். இதையும் ராணுவத்திற்காக “போஃபோர்” – Bofor பீரங்கி வாங்கும்போது நடந்த தில்லுமுல்லுகளால் விரயமாகப்பட்டது. இதன் இடைத் தரகரான சோனியாஜியிம் மிக நெருங்கிய “இத்தாலிய குட்ரௌச்சி” – Quattrochchi யும் இந்திய நாட்டு சட்டங்களை குப்பைத் தொட்டியில் துச்சமாக தூக்கி எறிந்தது போல இந்திய Central Bureau of intelligenceம் நடந்து கொள்கிறது (same side goal). முன்பே இதைப்பற்றி அங்கெங்கெனாதபடி எங்கும் விவாதிக்கப் படுவதால், மீண்டும் ஒருமுறை இங்கேயும் சொன்னதை திருப்பிச் சொல்லத் தேவையில்லை.

இதையடுத்து, ராஜிவ்ஜியின் அரசியல் முதிற்சி இன்மையால் படு முட்டாள்தனமாக விளைந்த, உடன்படிக்கையை ஸ்ரீலங்கா அதிபர் President J.R. Jayewardeneயுடன் செய்து கொண்டார். இதனால், LTTE தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முன்னளித்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை. ஸ்ரீலங்கா அதிபருடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, மேலாக லங்கா சிறு தீவான வட கிழக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும், தீயொழுக்கழ் செயல்களின் விளைவாக LTTE ராஜீவ்ஜியை மனித வெடி குண்டுவைத்து கொலை செய்தனர். LTTE யினருக்கு, சற்றும் மூளை இருந்ததாகத் தெரியவில்லை. இந்திய நாட்டு பிரதமராக இருந்தவரும், நேரு வம்ச வாரிசான ராஜீவ்ஜியை அரசியல் நெடு நோக்கின்றி போட்டுத் தள்ளியது தவறல்லவா? இதனால் LTTE யினரின் ‘ஈழமும்’ மனித வெடிகுண்டால் மண்ணொடு மண்ணாக சிதறி வெடித்தும் விட்டது.

ஆனால், ராஜீவ்ஜி கொலையுண்டது ஏன், எதற்காக? இதற்கு பல சாத்தியக் கூறுகள் உள்ளன!!.

• முதலில், சட்ட விரோத செயல்களுக்கான நிதியை நேரு-காந்தி வம்சத்திற்கு அல்லது குடும்பத்துக்கு நிதி அளிக்கப்பட்டதை குளிர்-சாதனப் பெட்டியில் வைத்துப் பூட்டி தாற்காலிகமாகப் போட்டு அடைத்து வைக்கவா?

• அடுத்து போஃபோர் ரகசியங்களை, உலக தகவல் துறைக்கு அவ்வப்போது வேண்டிய அளவு கசிய விட்ட (leak) “கேஜிபி” KGB தகவல்களைப் பற்றித் திசை திருப்ப செய்யப் பட்டதா? இவையனைத்துக்கும், வல்லரசுகளுக்கும், சோனியாஜிவுக்கு தெரிந்தே ஒரு நாடகமாக அரங்கேற்றப்பட்டதா?

• இதற்கடுத்து, இந்திய மேலாண்மையை தொலை தூரத்திலிருந்து கையாள மிகவும் செல்வக்குள்ளவர்களால் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டதா? (இவர்கள் யார்?)

இவைகள்தான் இக்கொலையில் விளைந்ததா? இவைகளில் எதெது உண்மையென இன்னும் புலப்பட வில்லை.

அடுத்தது, பிப்ரவரி 28, 1986இல் பொஃபோர் ரகசிய வெட்கக்கேடுகள் பற்றி எல்லாம் அறிந்த ஸ்வீடன் பிரதம மந்திரி, ஓல்ப் பால்மே (Olof Palme) வும் அரசியல் காரணங்களுக்காக வன்முறையில், ஸ்வீடன் நகரின் மத்திய ஸ்டாக்ஹோமில், ஒரு நடன நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, வீட்டிற்கு காலாற பிரதம மந்திரி நடந்தே (!) செல்லும்போது, வழியில் சதித் திட்டத்தால், கொல்லப்பட்டார்.

[[[இவருக்கு தன் மீதும் தன் மக்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை பாருங்கள். மக்கள் தலைவர் காமராஜர், கக்கன் எங்கே! (மந்திரி கக்கன் அரசு பேருந்தில் நின்றுகொண்டு சில்லரை கொடுத்து பயணம் செய்தவர்) கருணாநிதி எங்கே?, ஸ்டாலின் எங்கே? (மந்திரி என்ற ஆடம்பரம், சிவப்பு மின் விளக்கு போட்டு siren ஒலிக்க கூட குறைந்தது சுமார் 20 வாகனங்கள் முன் பின் தொடர செல்வது போலல்லாமல், சந்தடி ஏதுமில்லாமல், நடந்தே சென்றது பிரதம மந்திரி “ஓல்ப்பால்மே” யின் தவறு தானே!. (sitting duck) இந்த தொழில் நுட்பத்தை கழகத்தாரிடம் முன்னரே கற்றுக் கொண்டு இருந்தால், இந்த கொலை நடந்திருக்குமா?! பாவம் ஞான சூனியம்!!]]].

இவரைத் தொடர்ந்து, 1988இல், ஓல்ப் பால்மேயின் அரசியல் ஆதரவு பெற்ற Bernt Carlssonம் வன்முறையில் மர்மமாகக் சதியால் கொல்லப்பட்டார்.

இதற்கு கிரிஸ்டர் பீட்டர்சன் என்ற சிறு வெறி மயக்க (Drug seller & Addict) விற்பனையாளனும், இக் கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவன் என்ற முறையில், முதலில் கைது செய்யப்பட்டு, இரு வருடங்களுக்குப் பின், நாட்டு நீதி மன்றத்தில், முறையீடு செய்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான். மேலும் பெரிய இடத்து விஷயங்களல்லவா? ஒருவர் வழக்கில் மாட்டிக் கொள்ள ஆரம்பித்தால், இந்த சங்கிலித் தொடரில் யார் யார் வண்டவாளம் எப்படி எப்படி வெளிப்படுமோ!!

ஜூலை 1987இல் நம்பியா-அங்கோலாவில் நடந்த உள் நாட்டுப் போரை நிறுத்த, Bernt Carlssonம் ஐக்கிய நாடு சபையால் ஆணையராக (United Nations Commissioner) நியமிக்கப் பட்டு, பதவியேற்று, டிசம்பர் 21இல், 1988இல், ஸ்காட்லாண்ட் லாக்கர்பையில் (Lockerbie), Pan Am flight 103இல் போயங் 747-121 aircraft called Clipper Maid of the Seas, லிபியா வன்முறையாளர் கள் அவர் சென்ற விமானத்தில், வைத்த, வெடிகுண்டு வெடித்த விபத்தில் மாண்டு போனார். இந்த விமானம், லண்டன் ஹீத்ரோ விமான தளத்திலிருந்து 243 பயணிகளுடன் 16 விமான ஊழியர்க ளுடன் புறப்பட்டது.

Bernt Carlssonம் ந்யூ யார்க்கில் நிமிபியாவுக்கும் முழு சுதந்திர உடன்படிக்கையில் (UN) ஆணையர் என்ற பதவித் தகுதியால், சாட்சிக் கையொப்பமிட வந்துகொண்டிருந்தார். நிமிபியா சுதந்திர உடன்படிக்கையில் கையொப்பமிடுபவர்கள்: அங்கோலா, க்யூபா, தென் ஆப்பிரிக்கா. அங்கோலாவில் அன்று தென் ஆப்பிரிக்கா வெள்ளை நிற வெறியர்கள் தங்கள் காலனி ஆட்சியை நிலை நாட்டி அனேக ஆண்டுகளாக ரத்தச் சிகப்பு வைர சுரங்கத்தில் (blood diamond mines) சகட்டுமேனியாக அங்கோலா மக்கள் ரத்தத்தை உறிஞ்சி, கொள்ளையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தனர்.

இவ்விமான விபத்தை, அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவன ஆவணப்படி FBIம், பிரிட்டன் UK – Dumfries and Galloway Constabulary என இரு அமைப்புகளும் சேர்ந்து 3 வருடங்களுக்குப்

பிறகு, இரு ஆசாமிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது (Abdelbaset Ali al-Meghrahi and Lamin Khalifah Fhimah – Libyan intelligence officer and head of the oil rich north African nation’s airline LAA and its station manager based in Malta respectively).

விசேஷமாக ‘மால்டா’ எனும் நாடு உலக பெட்ரோலிய எண்ணையில் கிடைக்கும் சட்ட விரோத நிதியை வேண்டியவாறு மாற்றிக் கொடுக்கும் இடம்!!. இன்னொரு மிக முக்கியத் தகவல். இதே இடத்திலிருந்து தான் இந்திய நாட்டு பங்கு சந்தையை (Indian share market) வெகு தொலைவிலிருந்து எளிதாக மற்றவர் எவரும் புரிந்து கொள்ள முடியாத முறையில் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் (remote controls) வகையில் இன்றும் நிர்வாகம் செய்யப் படுகிறதாம்.

லாக்கர்பை (Lockerbie) வழக்கு 1991இல் ஆரம்பமானது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் இருவர். Abdelbaset Ali al-Meghrahi and Lamin Khalifah Fhimah. இவ்விருவரையும், இக்கொடூர செயலில் ஈடுபடவைத்தவன், பழிபாவத்திற்கு அஞ்சாத போக்கிரி லிபியா சர்வாதிகாரி, ‘க(ர்)னல் மௌமர் கஃட்டாஃபி’ யால் (‘Colonel’ Muammar Quadhafi) மேலை நாட்டு அதிகாரி களின் சட்டப்படி, நீதர்லாந்த் (Netherlands) தேசத்தில், 1998இல், ஒப்படைத்தான். இதில், Fhimah என்பவன் நீதி மன்றத்தில் மௌனத்தைக் கடைபிடித்தாலும், Meghrahi என்பவனுக்கு ஜனவரி 31, 2001இல், 27 வருடங்களுக்கு சிறை தண்டனை அளிக்கப் பட்டது.

இவனையும் Scottish Criminal Cases Review Committee, மனித இரக்க உணர்ச்சியாலும், மனித இன நலப்பற்று காரணமாக, நீதியில் தவறு நேர்ந்து விடாது இருக்க சிறை தண்டனையிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டது. இராஃக் சர்வாதிகாரி சத்தாம் ஹுஸ்ஸைனும் கூட நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக, தூக்கிலடப்பட்டான். ஆனால், இதில் அகில உலக ரௌடி, நீதி நெறிகளுக் கடங்காத அயோக்கியன், லிபியா சர்வாதிகாரி, ‘க(ர்)னல் மௌமர் கஃட்டாஃபி’ யால் (‘Colonel’ Muammar Quadhafi) இன்றும் எந்த தண்டனையையும் அனுபவிக்காமல் சுதந்திரமாக உலகில் நடமாடிக் கொண்டுதான் உள்ளான்.

இவனை எந்த சட்டமும், நீதியும் இன்னும் அணுக முடிய வில்லை. இவன்தான் இந்த கொலைத் திட்டத்திற்கு உண்மையில் சதித் திட்டத்தைத் தீட்டி, ஸ்வீடன் பிரதம மந்திரி, ஓல்ப் பால்மேவை (Olof Palme) கொலையையும் செய்ய வைத்தவன்.

[[[“அம்பை எய்தவனை விட்டு விட்டு, உயிர் உணர்ச்சியற்ற அம்புக்கு தண்டனை வழங்கி, இதனால் திருப்தி படுவது போல ஆகிவிட்டது”. ஒரு நாட்டு பிரதம மந்திரி, நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு சாமானியன் போல வீட்டிற்கு நடந்தே செல்லும் பணிவும், துணிவும், இவ்வளவு தன்நம்பிக்கை இருக்கவேண்டு மானால், மக்கள் மீது அவருக்கும், அவருக்கு மக்கள் மீதும் பரஸ்பரம் எவ்வளவு அன்பு இருந்திருக்க வேண்டும். இந்த அன்பு, உணர்ச்சி, மனித நேயம், ஆகியவைகளைப் பற்றி லிபியா சர்வாதிகாரி கஃட்டாஃபி’ (Quadhafi) என்ற மனித மிருகங்களிடம் எதிர்பார்க்கலாமா?]]].

ஓல்ப் பால்மே தன் நாட்டில் மிகவும் பிரசித்தமானவர். தன் நாட்டு மக்களிடம் மிகவும் அன்புள்ளவர். இவர் நாட்டு எல்லையிலிருந்து கடந்துவரும் வன்முறைகளை வெறுத்து அருவருப்பு அடைந்தவர். இவரிடம் நடு நிலையில் உள்ள (அமெரிக்க, ரஷ்ய நாடுகளைத் தவிர) மற்ற எல்லா நாடுகள் இவரிடம் மிக மதிப்பு கொண்டிருந்தனர். உலகைத் தங்கள் கட்டைவிரலடியில் என்றுமே இருக்க வேண்டுமென எண்ணங்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ரஷ்ய, அமெரிக்க பேரரசுகள் கனவுகாண்பதை முற்றிலும் அடியோடு வெறுத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இக்கருத்தை கூறுவதில் எந்த அச்சமும் இல்லாது, இவைகளையும் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டினார். இவர் சதிக்கொலை நடப்பதற்கு சில மாதங்க்களுக்கு முன்னரே, ஓல்ப் பால்மே ரஷ்யர்களுக்கு ஆதரவாக இருப்பதாயும், ஆனால் ரஷ்ய ராணுவத்தால், நாட்டுக்கு எதிர்பார்க்க வேண்டிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் கவனம் செலுத்தாது இருப்பது பற்றி இவர் மீது ஒரு விசித்திரமான அவதூறான பிரசாரம் இவரைக் குறிவைத்து நடத்தப்பட்டது.

இந்த சதிக்கொலை நடைபெறாது இருந்திருந்தால், ஓல்ப் பால்மே இன்னும் சில நாட்களில், ரஷ்ய நாட்டுடன் பாதுகாப்பு, இன்னும் இரு நாடுகளுக்கிடையே, பல்வேறு வகையில் நச்சரிப்பு, எரிச்சலூட்டும் கருத்துகளைக் களையவும், ஸ்வீடனையொட்டி உள்ள கடலோரத்தில் வடக்கு சமுத்திர பொருளாதார சுதந்திர பாதுகாப்பு மண்டலத்தில், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி சட்ட விரோதமாகவும் கள்ளத்தனத்துடன் நுழைவது பற்றியும் பேச ரஷ்யப் பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.

• மேலாக, பால்மே திரும்பத்திரும்ப அமெரிக்காவை ஆதரிக்கும் மேலை நாடுகளையும், ரஷ்ய நாட்டையும், வியட்னாம் போரில் இவர்கள் இருவருடைய அநாவசிய குறிக்கீடு, ஈடுபாடுகளை கடுமையாக கண்டித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவைகளைத் தவிர,

• இவ்விரு நாடுகள் தங்களுக்குள்ள அணு ஆற்றலால், அளவுக்கதிகமாக உலகையே அச்சுறுத்துவது பற்றியும்,

• ரஷ்ய நாட்டு அரசியலால், செக் (Czech) நட்டில் ‘பராக்’ எனும் இடத்தில் ரஷ்ய சேனையைகளை அனுப்பி, அங்கு நடந்த ரஷ்ய எதிர்ப்பு புரட்சிக் கலகத்தை கண்மூடித்தனமாக அடக்கியது பற்றியும்,

• ஸ்பானிஷ், தென் அமெரிக்க சர்வாதிகாரிகளான பஃராங்கோ, பினோசே (Franco and Pinochet) இருவரையும் சனியம்-பிடித்த கொலையாளிகள் (‘Satanic Murderers) எனவும்,

• Franco Pinochet

• தென் ஆப்ரிக்க நாட்டு, அரசியலில் இன ஒதுக்கி வைத்தல் (apartheid) எனும் கருத்தில் உலகை ஏமாற்றும் இரட்டை நியமங்கள் (double standards) அதாவது ஒருபக்கத்தில் உலகெங்கும் apartheid policyக்கு ஆதரவு தேடிக்கொண்டே, தென் ஆப்பிரிக்க நாட்டுக்குள், apartheid policyக்கு எதிராக ஆப்ரிக்க தேசீய காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தல்,

• El Salvador and Nicaragua.உள்ள FSLN தீவிரவாத சுதந்திர வீரர்களுக்கு மற்றொரு பயங்கர வன்முறையாளர்களான அரபு நாட்டிலுள்ள பாலஸ்தீனர்களின் ஆதரவு போன்றவைகளில்,

தன் கண்டனங்களை அடிக்கடி உலக மேடைகளில் பகிரங்கமாக பேசிவந்தார். ஆகையால், மேற்கூறிய சிந்தனை சொல், செயல் ஆகியவைகளுக்கு மேலை நாடுகள், ரஷ்ய ஆதரவு கிடைக்குமா? உலகெங்கும் இம்மாதிரி அமெரிக்க, ரஷ்ய நாடுகளின், உண்மை உருவம் பற்றித் தன் கருத்தை, அடிக்கடி அபிப்பிராயங்களாக தக்க சான்றுடன் பறைசாற்றி எப்போதும் தொந்திரவு கொடுக்கும் ஓல்ப் பால்மேயை மேலை நாடுகள் உயிருடன் தான் விட்டுவைப்பார்களா?

அவரவர்கள் செய்யும் குற்றங்களை பலரறிய மற்றொருவர் அடிக்கடி சொல்வதைக் கேட்டு அவைகளைப் பற்றி கவலைப்படாமல், குற்றம் புரிந்தவர் யாராவது அப்படியே விட்டு விடுவார்களா? ரஷ்ய இரும்புத் திரை சர்வாதிகாரத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகள் இவ்விரண்டையுமே ஒரே சமயத்தில் சாடி வந்திருக்கிறார். ஓல்ப் பால்மேவை அதுவரை உயிருடன் விட்டு வைத்ததே ஆச்சரியம் தான். இதன் விளைவுதான் ஓல்ப் பால்மேயின் உயிரைக் குடித்தது. அவர் செயத ஒரே தவறு எக்காலத்திலும் உண்மை பேசியது மட்டுமே. “யதார்த்தவாதி வெகு ஜன விரோதி” (यथार्थवादि बहु जन विरोधि) என்பது பழமொழி.

ஒழுக்க நிலையிலிருந்து விலகி, நேரிடையாக போரில் இறங்காது மற்றொரு நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பகை நிலையைச் சார்ந்த மேலை நாட்டு அட்லான்டிக் உடன்படிக்கை சங்கமான North Atlantic Treaty Organisation [NATO]வுடன், எது எப்படி இருந்தாலும், ஒல்ப் பால்மே, அதாவது (ஸ்வீடனும்) மாறாது, தொடர்பு கொண்டிருந்தது. இது இப்படியே இன்றும் கபட நாடகங்கள் உலகெங்கும் அரங்கேற்றப்படுகிறது.

மேகூறியவைகளாலும், “கேஜிபி” KGB தயவாலும் இக்குற்றத்திற்கான உண்மை குற்றவாளி இன்னமும் பிடிபட வில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது தானே!

இங்கு ஒரு விசித்திரமான கேள்வி எழுகிறது?

முதலில், சஞ்சய் காந்தி, பின்னர் இந்திரா காந்தி துர்மரணத்தைத் தழுவிய பின்னர், ஸ்டெஃபினோ-பயோலா மைனோவின் மாப்பிள்ளை, அதாவது “சோனியா”வின் இந்திய கணவர் ராஜீவ் காந்தியையும் அடுத்து பட்டத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் அவரையே LTTEயைக் கொண்டு சதிக் கொலை நடத்த வேண்டிய பரம ரகசியம் இப்போது தொடர் நிகழ்ச்சியாக நம் கண்முன்னே, சரியாக நிரூபிக்கும் (raison-d’être) வகையில் ஏன், எதற்காக என தெளிவாகிறது. இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் புரிகிறது. ஒன்றன்பின் ஒவ்வொரு கொலைக்குப் பின்னர், ஒன்றுவிடாமல் கவனமாக நிறைவேற்ற ஏதோ திட்டமிட்டு செய்தது போல தெரிகிறதல்லவா? இதெல்லாம் யாருக்காக? இன்னும் தெளிவுபட சொன்னால், திருமதி சோனியாவை ஐக்கிய முன்னணி நேசக்கட்சிகள் (UPA) மூலமாக இந்தியாவின் முடி சூடாத பட்டத்து ராணியாக முடிசூட்ட நடத்தப்பட்ட நாடக ஒத்திசை என நன்கு நமக்குத் தெளிவாகிறது.

இதற்கடுத்த நிகழ்ச்சியான சோனியாஜி பிரதம மந்திரியாக பதவித் தியாகம் செய்தது என்பதும் ஒரு நாடகமே! இதற்குக் காரணம்,

• சோகத்தால் பீடிக்கப்பட்ட விதவை சோனியாஜி தன் இந்திய கணவர் ராஜீவ்ஜி துர்மரணத்திற்குப்பின் அவர் உட்கார்ந்த அதே நாற்காலியில் உட்காராமல் இருப்பதே அவருக்கு ஒரு இத்தாலிய / இந்திய மனைவி செய்யும் கடமை என ஓங்கி, பரபரக்க பறைசாற்றவும்,

• ராஜீவ்ஜியின் கொலையில், LTTE, KGB ஆகியவர்களின் ரத்தக் கரை பங்குகளை மூடி மறைக்கவும், மற்றும்

• பல்லாயிரக்கணக்கான இந்திய உயிர்கள் பழிக்குப்பழி வாங்கியதை நியாயப்படுத்தி இதைப் பற்றி எழும் கருத்தை ஒரேயடியாக இழுத்து மூடி மறைத்து விடவும்,

• போஃபோர் லஞ்சம்,

• KGB செயல்பாடு தடத்தை மூடி வைக்கவும்

• ராஜீவ்ஜியின் கொலைக் குற்றத்திற்கு குற்றம் புரிவோர்க்கு ஊக்குவித்து, சம்பந்தப்பட்டு, நேரிடையாக தொடர்புகொண்டு இன்று சிறை தண்டனை அனுபவிக்கும் கைதியை விடுவிக்க முயற்சிகளும்,

• வருண் காந்தியின் அரசியல் வாழ்க்கையை முற்றுப்புள்ளியாக்கவும்

• ஓற்படி (ஒரே வீட்டில் முறையே இரு சகோதர்களை மணந்தவர்கள், சோனியா-ராஜிவ்ஜி, மனேகா-சஞ்ஜய்) மனேகா காந்தியின் அரசியல் வாழ்க்கையை கொடு நோக்குடன் கிரகணம் பீடிக்கப்பட செய்து,

• லண்டனில், ISI இடமான சிற்றுண்டி சாலையில் ராஜீவ்ஜியை சோனியா முதன் முதலில் சந்தித்தது, காதல் செய்ய வைத்தது,

• ராகுல் காந்தியும் இன்று கிளிப்பிள்ளை என பேசும், “இந்தியாவுக்குள் இருக்கும் ஹிந்து மத கோட்பாடுகள், அமெரிக்காவுக்குள் இருக்கும் இஸ்லாமிய மத கோட்பாடுகளைக் காட்டிலும் மிக பயங்கரமானது” என்ற நாடகப் பிரசாரமும்

• ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக சிந்தனை செய்தால், ISI குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு உடந்தையான இத்தாலிய ரஷ்ய குற்றக் கும்பல் ஆகியவர்களுக்கும், இந்திய நாட்டையே ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்து இவர்களுக்கு பலி பீட காணிக்கையாக அர்ப்பணம் செய்யத்தான் உலக அரசியல் மேடையில் நடத்தப்பட்ட நாடகம் என் மனசாட்சி சொல்கிறது.

சோனியாஜியே! அடுத்து ஒரு நேரிடையான கேள்வி உங்களுக்கு:

ISI – KGB ஆகியோர்களின் இந்தியப் பிரதிநிதி என எனக்குத் தோன்றுகிறதே! இக்கருத்து சரிதானா?

இல்லாவிட்டால், கீழ்க்கண்டவைகளுக்கு தயவு செய்து விளக்கமளிக்கவும்:

• ராஜீவ்ஜியின் கொலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட நளினி ஸ்ரீஹரன் எனபவருக்கு, ஒரு குழந்தையின் தாய் என்ற வகையில் தண்டனையை குறைக்கும்படி ஏன் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டும்?

• இத்தாலிய பூர்வீகம் கொண்ட மாரியா புஸோ (Mario Puzo) என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய மிகப் பிரசித்தி பெற்ற இத்தாலிய மாஃபியா பற்றி கற்பனை நவீனமான, “காட் பாஃதர்” (The Godfather) என்ற புத்தகத்தில் கொடு நோக்குடன் கூடிய பழிக்குப் பழி படலம் போன்று, விலாவாரியாக நிறைவேற்றத்தான் பல்லாயிரக் கணக்கான ஸ்ரீ லங்கா தமிழர்களை அழிக்கத் திட்டமிடப் பட்டதா? இத்தனை கொலைகளையும் அநாயாசமாக ஈவிரக்க மின்றி, செய்து முடித்துக் காட்டுவது என்பதே வழக்காமான இத்தாலிய மாபிஃயா செயல் முறையல்லவா? இச்செயல்பாணி, எதிலும் சாத்வீக முறைகளைப் பின்பற்றும் இந்தியர்கள் செயல் முறையல்லவே அல்ல! இது சத்தியம். இந்தியாவிலும் இத்தாலி முறை எப்படி, யாரால் இறக்குமதி செய்யப்பட்டது? (World famous phrase from Film “Godfather’– “Give them something by which they cannot refuse” = cold blooded murder)

• 2009 தேர்தல் நடப்பதற்கு சற்று முன்பாக, உங்கள் மகள் பிரியாங்கா காந்தி வாத்ரா ‘நளினி’யை எக்காலமும் மன்னிக்க மாட்டேன் என்று ஒரு காலத்தில் சூளுரைத்தவர், பின்னர் ஏன் அவரையே, வெல்லூர் சிறையில் சென்று சந்திக்க வேண்டும்?

• ராஜீவ்ஜி கொலையில் சம்பந்தப்பட்ட மற்ற தூக்கு தண்டனைக் கைதிகளை இன்னமும் தூக்கு மேடைக்கு ஏற்றாமல் இருப்பதற்கு இரண்டு ‘தொத்தல்’ காரணம் கூறப்படுகிறதே!.

1. முதலில் அனுபவமுள்ள தூக்குத் தூக்கி இந்தியாவிலேயே இல்லை எனவும்,

2. இரண்டாவதாக, இந்திய உள்துறை மந்திரி பி.சிதம்பரம் கூறுவது போல,

ஜனாதிபதி பிரதிபா படேல் அவர்களுக்கு உள்ள சில வேலை செயல் முறை

சார்ந்த பண்பு நயம் என்றும் கூறப்படுகிறதே! ஏன்?

• இந்திய பாராளுமன்ற படிகளில் நம் பாதுகாப்பு வீரர்களைக் கொன்று குவித்தவன், எவ்வளவோ முறை மன்னிப்பு மனுவை அனுப்பி அவைகள் எல்லாமே மறுக்கப்பட்டு, ஒன்பது வருடங்களாக திஹார் சிறையில் இருக்கும் தூக்கு தண்டனை பெற்ற மற்றொரு படுபயங்கரக் குற்றவாளியான அஃப்சல் குரு, இன்று சிறையில் ஒரு ராஜ குமாரன் போல அதே சிறையில் சகல வசதிகளுடன் வாழ்கிறானே அது எப்படியம்மா?

• பம்பாயில் 26/11 என்று பிரசித்தி பெற்ற பாகிஸ்தானின் இந்தியப் படுகொலையில் முக்கிய பங்கு கொண்டு அனேக இந்திய நிரபராதிகளை, டெலிவிஷன் காமிராக்களுக்கு முன்னர், கொன்று குவித்த “அஜ்மல் கசப்” நம் நீதி முறைமையை எள்ளி நகையாடும்படி தண்டனை வழங்காது வைத்திருப்பது சரிதானா?

மேற்கூறிய கேள்விகளனைத்துக்கும் உங்களிடம் நியாயமாக, பகுத்தறிவுக்குப் பொருந்தும் படி தக்க பதில் உங்களால் எளிதில் கூற இயலுமே!

அப்படி பதில் கூற முடியாவிட்டால், இந்தியனான எனக்கு மாறாத உரிமையுடன் கேட்க மற்றொரு

கடைசி கேள்விக்காவது தயவு செய்து பதிலளிக்கவும்:

சோனியாஜி அவர்களே! - நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

என்பதையாவது கூறவும்.




Copyright:thinnai.com 

சோனியாஜி அவர்களே! - நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

Sunday January 23, 2011

TSV Hari தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன்

TSV Hari அவர்களின் “Soniaji- Please tell us who you are really “on December 26, 2010 http://www.sanghparivar.org/forum/conspiracy-behind-unique-id-number-for-indian-citizens

ஆங்கிலக் கட்டுரையிலிருந்து

தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஸ்ரீ ஹரி (TSV Hari) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து முடிந்தவுடன் தமிழில் எடுத்துத் தொகுத்தவரின் முதல் பிரமிப்பு, இச் சொற்களில் உடனுக்குடனே விளைந்தது. பூந்து விளையாடி விட்டார், போங்கள்!

கனவிலும் நினைக்க முடியாத இடங்களிலிருந்து ஒரு கட்டுக்கோப்புடன் ஒருங்கே அடுத்தடுத்து முரண்பாடின்றி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் ஸ்ரீ ஹரி அவர்கள் எப்படித் தேடித் தேடித் தொகுத்துள்ளார் என அறியும் போது எனக்குள் மலைப்பு தான் மேலோங்கியது. இக்கட்டுரையை ஒரு முறைக்கு மறு முறையென இரு தடவை படித்துத் தெளிந்தேன். படிக்கும் போது கூட “James Bond 007” திரைப்படக் கதையை படிப்பது போல உணர்ந்தேன். படித்து முடித்தவுடன், இதைத் எல்லா தமிழ் மக்களும் அறிய வேண்டுமே எனும் பேராவல், என் பிடரியை பிடித்துத் தள்ளியது போல, என்னை உடன் தூண்டி விட்டது. மற்ற எல்லா அலுவல்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, உடனுக்குடன் இத்தமிழ் தொகுப்பில் என்னை ஈடுபடவும் வைத்துவிட்டது. ‘அரசியல் ராஜ தந்திர’ம் என்றால், (diplomacy) ‘நாடு விட்டு மற்றொரு நாட்டிலும் சென்று கொலை புரிய வைத்தல்’, இடையில் சரிவு ஏற்படாதவாறு மிகவும் கவனத்துடன் செயல்படுத்தி, எதிர்பாராமல் எதையும் தற்செயலாகக் கூட நடக்க விட்டுவதில்லை என்ற கருத்துடன் – அதாவது”தங்கள் திட்டங்களை முற்றிலும், கால் புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப் புள்ளி முதற்கொண்டு அத்தனையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்று வதில் வல்லமை படைத்தல்” எனும் மற்றொரு அங்கமும் உள்ளது என நான் இதுவரை அறியாத விவரத்தை இப்போது விலாவாரியாக நன்கு அறிந்து, தெளிவும் பெற்றேன்.

இனி, ஆங்கிலக் கட்டுரையில் உள்ளபடி செல்வோம்:

அன்றைய “எட்விகே அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனும் இன்றைய “சோனியா காந்தி!” அவர்களைப் பற்றிய முழு விபரங்களை இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் சில அடிப்படை கேள்விகள்::

• இத்தாலியில் பிறந்து இந்திய ‘ராஜீவ் 1968 இல், காதல் மணம் புரிந்தமையால், அவருக்காகப் பிரத்யேகமாக இறக்குமதி செய்யப் பட்டவரா? அல்லது

• நேரு வம்சத்தவர் என்பதால் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டு, காங்கிரஸ் கட்சியிலுள்ள “ஆமாஞ்சாமி” களால் அங்கீகரிக்கப்பட்டு காங்கிரஸ் மேலாண்மைத் தலைவரென என இந்தியாவில் கோலோச்சிக் கொண்டு இருப்பவரா? அல்லது

• உலகிலேயே மிகச் சிறந்த புராதன கலாச்சாரமான இந்திய நாட்டை எல்லாவிதத்திலும் அழித்து விட, கெட்ட எண்ணங்கொண்ட பகைவர்கள் தூண்டிக் கொடுத்தவாறு, நெடு நோக்கு-நுழைபுலத்துடன் ஒரு செயல் திட்டப்படி, நுழைக்கப்பட்டு இருப்பவரா? மேலும்

• அதே கொடு நோக்கு-பகைமை எண்ணத்துடன், ஹிந்துஸ்தானையே, நிர்மூலமாக்கி விட வேண்டுமென சங்கல்பம் செய்து கொண்டு இங்கு வந்தவரா?

இனி அவரைப்பற்றி மட்டுமே நன்கு பகுத்தறிவுக் கூறுபடித்தி விமர்சிப்போம்.

தந்தை ‘ஸ்டெஃபினோ’ தாய் பயோலா மைனோ

இவர் தந்தை ‘ஸ்டெஃபினோ’, தாய் பயோலா மைனோ ஆகியோருக்கு அருந்தவப் புதல்வியாக, ‘வெஸென்சா’ எனும் இத்தாலிய ஊரின் பக்கத்தில் 30 கி.மீ உள்ள “ஓர்பஸ்ஸானோ” (Orbassano) எனும் கத்தோலிக்கக் கிருஸ்தவ மிகச் சிறிய கிராமத்தில், டிஸம்பர் 9, 1947 இல் பிறந்தார்.

முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். காந்தி எனும் சிறப்புப் பெயரிட்டுக் கொண்ட நேரு வம்சத்தில், மூன்று நபர்கள், இதுவரை இயற்கையாக மரணத்தை அடையவில்லை. இந்தப் பட்டியலில் ‘மோகன் சந்த் கரம்சந்த் காந்தி’ யின் பெயர் சேர்க்கப்பட வேண்டியதில்லை. (MK Gandhi) ஏனெனில், ‘காந்தி’ என்ற பெயர், இவருக்கு உண்மையான குடும்பப் பெயர் (surname). ஆனால், இந்திரா காந்தி எனும் பெயரில் உள்ள காந்தி எனும் சொல், ‘கான்' எனும் முஸ்லிம் பெயருக்கு பதிலாக ‘காந்தி’ பெயர் முதன் முதலாக ஒட்டிக் கொள்ளப்பட்டது. இம்மூவரும் துர்மரணத்தையே அடைந்துள்ளனர்.

கீழே உள்ளவர்களெல்லாம் நேரு வம்சாவளியைச் சார்ந்தவர்கள்.

ஜவஹர்லால் நேரு – இந்திய முதல் பிரதம மந்திரி இவருக்கு காந்தி எனும் பெயர் சேர்க்கப்பட வில்லை. (அதனால் இவர் கொல்லப்படவில்லை போலும்!!)

இவர் மகள் இந்திரா காந்தி, பிரதம மந்திரியானார் - ‘பெஃரோஸ் கான்’ எனும் முஸ்லிமை மணம் புரிந்து, ‘கான்’ எனும் மூல குடும்பப் பெயரை மாற்றி ‘காந்தி’ என இந்திய மக்களை ஏமாற்றவே “கான்” என்ற இடத்தில், புதிதாக “காந்தி” என ஒட்டப் பட்டது. 1984இல், “Operation Blue star”க்குப் பின்னர் இந்திரா சீக்கியர்களால் மிகவும் வெறுக்கப் பட்டார். இவரும் கொலை செய்யப்பட்டார்.

இந்திரா காந்தி இரண்டாவது மகன் ‘சஞ்சய் காந்தி’ – அதாவது ‘சோனியா’வின் மைத்துனர். இவர், 1980இல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக வர, தேர்தல் சமயத்தில் அரும் பாடுபட்டவர். இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக இந்தியா நாட்டின் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

‘சஞ்சய்’ பெயருடன் ‘கான்’ எனும் பெயர் சேர்க்காமல், ‘காந்தி எனும் பெயர் ஒட்டப்பட்டது. இவரும் ஆகாய விமானதை ஓட்டும் போது 1980 இல் விபத்துக்குள்ளாகி துர் மரணமடைந்தார். இந்த துர் மரணமும், 1968இல், ராஜீவ்ஜி சோனியாவை மணந்த பின்னரே தான் உண்டானது.

இந்திரா காந்தி 1984 இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்திராஜியின் முதல் மகன் ‘ராஜீவ் காந்தி’ அதுவரை விமான ஓட்டியாக இருந்த வரை, நேரு-காந்தி வம்சாவளியில் வாரிசாக பிரதம மந்திரி பதவியில் பட்டம் கட்டிக் கொள்ள அழைக்கப் பட்டார்.

ராஜீவ்ஜியும் சோனியாவை மணந்த பின்னர்தான், விடுதலைப் புலிகளால் (LTTE) ஸ்ரீபெரும்பூதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

ஆக, ‘காந்தி’ எனும் பெயருக்கும், நேரு வசத்திற்குமே இதுவரை ராசியில்லை. ஏன்? இதற்கெல்லாம் பின்னணி என்ன சற்று ஆராய்வோமா?

சோனியாவின் தந்தை ‘ஸ்டெஃபினோ’, ஜெர்மனி சர்வாதிகாரியுடன் சேர்ந்த ‘பெனிட்டோ முஸ்ஸோலினி’ படையினருடன் இரண்டாவது உலகப் போரில் சண்டையிடும் போது உலகத்தை அன்று ஆட்டிப்படைத்த மிக பயங்கர “கேஜிபி” KGB [Komitet Gosudarstvennoy Bezopasnosti] எனும் ரஷ்ய உளவு நிறுவனத்தால், கைது செய்யப்பட்டார். இவர் ‘வ்லாடிமீர்’ ரஷ்ய சிறையில் சித்திரவதை செய்யப் பட்டதையடுத்து, தங்களுக்கு சாதகமாக உளவறிய ரஷ்யர்களால் ‘ஸ்டெஃபினோ’ சம்மதத்துடன் புதிதாக “கேஜிபி”யால் ஆள் சேர்க்கப்பட்டார். இன்னும் சிலர் இவர் இத்தாலிய மாஃபியாவைச் சேர்ந்தவர் (Mafia) என சொல்கிறார்கள். இன்னும் பலர் இவரை இன்று இந்தியாவைத் தன் உண்மையான தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், மாஃபியாவைச் சேர்ந்தவர் (Mafia) எனும் சொல்கிறார்கள். எந்த மாஃபியா அங்கத்தினரும் – “ஓமேர்ட்டா” (‘Omerta’) என்ற “பொன்னான மௌனம்” (golden silence) எனும் செயல்பாணியில் செயலாற்றுபவர்கள். இதை மீறுபவருக்கு விரும்பத்தகாதவாறு உடனுக்குடன் துர் மரணம் கட்டாயம் உண்டாகும் என்பது உலகறிந்த சமாச்சாரம். இவர்கள் செயல் திட்டம் மிக திறன் வாய்ந்தது. தங்கள் திட்டங்கள் முற்றிலும் நிறைவேற்றுவதில் இவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுபவர்கள் இவர்கள் எதிலும் தற்செயலாக எதிர்பாராமல் நடக்க விட்டுவதில்லை என உலகத்தாரால் சொல்லப்படுகிறது. இதன் பின்னணியை இன்னும் ஒரு முனைப்பாக ஆராய்வோம்.

1965இல், ராஜிவ்ஜி இங்கிலாந்து-லண்டனில் படிக்கும் போதே, முதன் முதலாக, ராஜீவ்ஜி அடிக்கடி செல்லும் ஒரு சிற்றுண்டி நிறுவனத்தில் ‘சோனியா’ பணி புரிந்திருக்கிறார். இந்த சிற்றுண்டி நிறுவனம் – பாகிஸ்தான் உளவுப்பிரிவு ISIஐச் சார்ந்த ‘சல்மான் டஸ்ஸிர்’ (Salman Thassir) என்பவருடையது. இங்கேதான் “சோனியா”-“ராஜீவ்ஜி” இருவருடைய காதல் பூத்து மலர்ந்தது (அல்லது “ ரஷ்ய கேஜிபி” KGBயால் மலரும்படி திட்டப்படி நடத்திக் காட்டப் பட்டதா?). இவர்கள் திருமணத்திற்கு சியாரிசு செயதவர்கள் இருவர்: 1) டி.என். கௌல் (T.N. Kaul) ரஷ்யாவில் இந்தியாவின் தூதராக பணி புரிந்தவர்;

2) இந்திய உளவு ஸ்தாபனமான RAW – Research and Development Wing இன் இயக்குனர் “ராமேஷ்வர் நாத் கௌ”. இவரும் ரஷ்ய “கேஜிபி” KGB க்கு மிக மிக நெருங்கியவர். இவரும் ரஷ்யர்களுடைய இந்தியப் பணிக்காக ஆள்சேர்க்கப் பட்டவர் என பெயர் பெற்றவர். டி.என். கௌல், “ராமேஷ்வர் நாத் கௌ” (Rameshwar Nath Kao); இவ்விருவரும் காஷ்மீர் பண்டிட் இனத்தவர். நேருவும் ஒரு காஷ்மீர் பண்டிட் தான்.

இங்கு மற்றொரு ரகசியம். ரஷ்யா சிறு சிறு நாடுகளாகச் சிதைத்த பின்னர், ரஷ்ய “கேஜிபி” KGB யின் இயக்குனர், “விக்டார் செப்ரிகோவ்” (Viktor Chebrikov), தன்னுடன் மிக மிக ரகசிய மூல ஆதார ஆவணங்களுடன், சொந்த நாட்டைவிட்டு மேலை நாடுகளுக்கு சமயம் பார்த்து ஓடிப்போனவர் / விலகியவர்.

இவருடைய பயங்கர வாக்குமூல ஆதாரங்கள் இன்றும் இருப்பினும், உண்மையில் இன்னமும் நிரூபிக்கப் படாமல் பல இருக்கின்றன. – அந்த ஆவண ஆதரத்தில் நேரு வம்சத்திற்கு சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்கப் பட்டதென உள்ள அமுங்கிக் கிடக்க்கும் வாக்கு வாக்குமூலம் ஒன்று இருக்கிறது.

இந்த “விக்டார் செப்ரிகோவ்” ஆவணங்கள் உண்மையானவை என ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிஞர் “யெவ்கினா அல்பாட்ஸ்” (Harvard scholar of Slav extraction Yevgenia Albats) உறுதியாகச் சொல்கிறார். “விக்டார் செப்ரிகோவ்” ஆவணங்கள் கீழ்க்கண்ட உளவு நிறுவனங்களில் இன்றும் இங்கே உள்ளது.

• அமெரிக்க CIA of USA

• Military Intelligence 6 or Secret Intelligence Service of the United Kingdom.

இந்த ஆவணங்களில் முன்னாள் சோவியத் நாட்டு [CPSU] politburo பல நாடுகளுக்கு சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்கும் மேலாண்மையின் கையொப்பமும் உள்ளது. இந்த ஆவணத்தில், இந்திராஜியில் ஆரம்பித்து, “சோனியா”வின் தாய், தந்தை, ராஜீவ்ஜி, சோனியாஜிக்கும் வழங்கப்பட்டதென உள்ளது. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய மற்றொரு ஆவணம், இதில் சோனியாஜியின் இளம் பிராய மகன் எனக் கண்டு இருக்கிறது. (வேறு யாராக இருக்க முடியும்? இவர் ஒரே மகனான அன்று 21 வயதிற்கு உட்பட்டவராக இருந்த, இனி வருங்கால பிரதமாக இன்று பயிற்சி அளிக்கப்படும், ராகுல் காந்தி தான்). இன்னொரு முக்கிய தகவல்: டிசம்பர் 1985 முன்னரும் சோவியத் நாட்டு [CPSU] politburo ஸ்தாபனத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது எனவும் இருகிறது.

கற்பனைக்கும் எட்டாத இத்தனை அதிக ரொக்கத்தை இவ்வளவு நாள் கணாமல் முதன் முதலில் நேரில் கண்டபின், குட்டிபோட்ட பூனையென, இந்தியாவிலும் மற்ற வெளி நாடுகளிலும் அடிக்கடி தகவல் துறைகளுக்கு சோனியாஜியின் தாய்-தந்தை (Stefano- Paola Maino) பேட்டியளித்தபடி, ராஜீவ்ஜியை சோனியாஜி மணந்ததால் தங்களுக்கு எவ்வித நிதி ஆதாயம் எதுவும் ஏற்பட்டுவிட வில்லை, மாறாக நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” யென ரகசியத் தகவலை கேட்காமலேயே இப்படி உளறிக்கொட்டுவது இன்னும் நம் சந்தேகத்தை வலுப் படுத்துகிறது. சோனியா காந்தியின் தாய் Paola Maino 1983 இறந்துவிட்டார்.

இந்திய மக்கள் மனதைப் புண்படுத்த, இன்னமும் சேதத்திற்குச் சேதமாக இந்த ஆவணங்கள் இன்று நிரூபிக்கின்றன.

மேற்கோள் குறிப்பீடுகளாக:

1. ரஷ்ய CPSU/CC/No 11228/3 dated 20 December 1985இல் உள்ளபடி கிஞ்சித்தும் ஐயமின்றி சோனியா காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் (தாய் தந்தை, மைனர் மகன் ராகுல் காந்தி) சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்க சோவியத் ரஷ்ய ஆணை உள்ளது. USSR Council of Ministers in Directive No 2633/Rs dated 20 December 1985. இது ரஷ்ய தணிக்கை மூலமாக உண்மையென CPSU/CC resolution No 11187/22 OP dated 10/12/1984 நிரூபிக்கும் சான்று ஆதாரம் உள்ளது. இதை மீண்டும் 1992இல், ரஷ்ய அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.

2. இதில் மற்றொரு ரகசியம்: இந்த சட்ட விரோத செயல்களுக்கான நிதி வழங்க ராஜீவ்ஜி 1992 மறைவுக்குப் பின்னரே ஆணையிடப்பட்டுள்ளது.

3. 1991இல், ஸ்விட்சர்லாந்தில் உள்ள சோனியாஜியின் மைனர் மகன் ராகுல் காந்தியின் பெயரால் திறக்கப்பட்ட ஒரு ரகசிய எண் வங்கிக் கணக்கில், US$ 2 billion – அதாவது 200 லட்ச அமெரிக்க டாலராக பாதுகாப்பு நிதியை வரவு வைக்கப்பட்டிருக்கிறது என ஸ்விஸ் அரசாங்க பத்திரிக்கையில் (Swiss magazine Schweizer Illustrierte) காணப்படுகிறது. தோண்டத்தோண்டக் கிடைக்கும் ‘ஆற்று மணல் ஊற்று’த் தண்ணிர் போன்று, தொடர்பான ஆவணங்களில் மற்றொன்று, செப்டம்பர், 21, 2005இல், ராகுல் காந்தியும் அவர், ஸ்பானிஷ் பெண் நண்பர், “வெரோரிக்” ஆகிய இருவருடன் (Rahul Gandhi and his Spanish girlfriend Veronique) பாஸ்டன் விமான நிலையதிலுள்ள அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவன ஆவணப்படி (Federal Bureau of Investigation), கணக்கில் வராத, அல்லது கணக்கு சொல்ல முடியாதபடி உள்ள அமெரிக்க டாலர் இரு லட்ச டாலர் (US$ 200,000) இவர்களிடம் ரொக்கமாக இருந்தாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டில்லி மேல் நீதி மன்றத்தில் உள்ள “பொதுமக்கள் சட்டப்படி உரிமை வழக்கு” (Public Interest Litigation [PIL] 2005இல் பதிவாகியுள்ளது. இவ்வழக்குக்கு இன்னும் தீர்ப்பளிக்கப் படவில்லை.

4. நான்காவது செய்கையாக, மற்றொரு நேரு-காந்தி வம்ச எரிச்சலூட்டும் நெருஞ்சி முள்ளான ‘சஞ்சய் காந்தி’யை விமான விபத்தில் துர் மரணம் என நமக்கு எண்பித்து, பின்னர், அவர் விதவை, ‘சீக்கியராக’ப் பிறந்த ‘மனேகா காந்தி’ யையும் அவள் கைக்குழந்தை ‘வருண் காந்தி’யையும் அரசியல் நாடகக் காட்சிப் பிரிவு போன்று, புகுந்த வீட்டிலிருந்தும் அகற்றப்பட்டார்.

இது பின்னர் ‘சீக்கியர் வணங்கும் பொற்கோவிலில் - Operation Bluestar in mid-1984இல், விளைந்தது. இதில் “அகால் தக்த்” எனும் சீக்கிய உலகியல் சார்ந்த அலுவலக கட்டமைப்பையும் “ஹர்மீந்தர் சாஹேப்” பும், நிர்மூலமாக்கப் பட்டது. இதுவும் டி.என். கௌல், “ராமேஷ்வர் நாத் கௌ” ஆகியோரின் அறிவுரைபடி, நடந்தேறியது. இதே இந்திராஜியால் மிகவும் ஆதரிக்கப்பட்ட சீக்கிய குண்டாவான கேடி- KD (Known Desperado) அரசியலில் மனித உருவிலுள்ள அரக்கன் (Frankenstein), ‘ஜெர்னைல் பிந்த்ரேன்வாலா’ வும் போட்டுத் தள்ளப்படார். இவரை இப்படி உண்டாக்கிவிட இந்திரா காந்தியிடம் முதன் முதலில் சிபாரிசு செய்தவர்கல் கௌல், கௌ ஆகிய இரட்டையர் தான்.

முன்னர் 1971 நடைபெற்ற பங்களாதேஷ் போரில், 92000 பாகிஸ்தான் போர்க்கைதிகளை யும் இவர்களுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் தளபதி, AAK Niaziயை கைது செய்தது மட்டுமல்லாமல், இப்போரில், தோளோடு தோள் கொடுத்து ஒன்றாகப் போரிட்ட இந்திய ராணுவத்தைச் சார்ந்த, “ஷன்பக் சிங்ஜியும், குல்தீப் சிங் ப்ரார் என்பவர்கள் இருவரும் Operation Blue star in mid-1984இல், எதிரும் புதிருமாக, போரிட நேர்ந்தது. ஷண்பக் சிங்ஜி சீக்கிய வன்முறையாளர்கள் சார்பிலும், குல்தீப் சிங் ப்ரார் இந்திய ராணுவத்தை தலைமையேற்றுப் போரிட்டனர். இது இந்திய ராணுவத்தினர் மீதே, பொதுவாக சீக்கியர்களிடம் ‘கெட்ட குருதி ஓட்டத்தை’ ஏற்படுத்த (bad blood) வேண்டுமென திணிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்திராஜி அவருடைய இரு மெய்க்காப்பாளரால் வீட்டுத் தோட்டத்திலேயே ‘ஸ்டென் துப்பாக்கிக் குண்டுகளால் (Sten-Gun) சரமாரியாக உடல் முழுதும் சல்லடையாகத் துளைத்து, கொலை செய்யப்பட்டார். இதனால் இந்திராஜியையும் சீக்கியர் மனதிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

[[[இங்கு நாம் ஒன்றை மனதில் இறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டுப் பற்றை நிரூபிக்க, சீக்கியர் எவருக்கும் எந்நாட்களிலும் குறைந்தவர்கள் அல்லவே அல்ல. சொல்லப் போனால், மிகவும் போற்றிப் புகழத் தக்கவர்கள். இவர்கள் அன்று, ஹிந்துக்களுக்காகப் போரிடாவிட்டால் இந்திய நாடே என்றோ, இஸ்லாமிய மயமாகி இருக்கும்]]].

சீக்கியர்களின் குரு கோபிந்த் சிங்ஜி, சீக்கியப் படைகள் என்றென்றும் ஹிந்துமத கொள்கைகளுக்காகவும் பிரிவினை யாக்கப்படாத இந்தியாவுக்குக் கேடையமாக இருப்பர் எனவும் கூறியுள்ளார். ஆக சீக்கிய “கால்சா” சித்தாந்தப்படி, சீக்கியர்களை ஆள்வது மக்கள் சரி நிகர் சமானமான (அபேதவாத) கொள்கையுடன் கூறு போடாத இந்தியாவில், வாழ வேண்டுமென ஆணையிட்டுள்ளார். இதன்படி அவர் சீக்கியர் களுக்கு போதித்தபடி, “கால்சா’ சித்தாந்தப்படியே தங்கள் ஆட்சியை செலுத்துவர். RAAJ KAREGAA KHALSA என்பதே சீக்கியர்களின் செயல் படுத்தப்படும் ஆரம்ப வார்த்தை. இது சஞ்ஜய்-மனேகா இருவரின் மகனான பெஃரோஸ் வருண் காந்தி ஆகியோரின் வருங்கால அரசியல் வாழ்க்கை, கேள்விக்குறி யாகவும், இன்று இவர்கள் வலது சாரி வன்முறையாளர்கள் எனவும் சித்தரிக்கப் படுகின்றனர்.

இந்திராஜி கொலை முடிந்த கையோடு, டில்லியில் அனேக சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இதில் சீக்கியர்கள் டில்லியிலேயே ஆயிரக்கணக்கில் படுகொலை கெய்யப்பட்டனர். இதை நடத்திக் காட்டிய பல காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுக்கும் நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டது.

இப்படி, தொலைவிலிருந்து செயலாற்றுபவர்களால், இந்திய அரசியல், கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால், முதலில், சஞ்சய், இந்திராஜி, என இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யப் பட்டனர்.

இந்திரா காந்தியின் மறைவினால் மக்கள் அளித்த அனுதாப அலையால் கிடைத்த பெரும் எண்ணிக்கையுடன் தேர்தலில் வென்று ராஜீவ்ஜி மீண்டும் அரசியல் நுழைந்தார். இதையும் ராணுவத்திற்காக “போஃபோர்” – Bofor பீரங்கி வாங்கும்போது நடந்த தில்லுமுல்லுகளால் விரயமாகப்பட்டது. இதன் இடைத் தரகரான சோனியாஜியிம் மிக நெருங்கிய “இத்தாலிய குட்ரௌச்சி” – Quattrochchi யும் இந்திய நாட்டு சட்டங்களை குப்பைத் தொட்டியில் துச்சமாக தூக்கி எறிந்தது போல இந்திய Central Bureau of intelligenceம் நடந்து கொள்கிறது (same side goal). முன்பே இதைப்பற்றி அங்கெங்கெனாதபடி எங்கும் விவாதிக்கப் படுவதால், மீண்டும் ஒருமுறை இங்கேயும் சொன்னதை திருப்பிச் சொல்லத் தேவையில்லை.

இதையடுத்து, ராஜிவ்ஜியின் அரசியல் முதிற்சி இன்மையால் படு முட்டாள்தனமாக விளைந்த, உடன்படிக்கையை ஸ்ரீலங்கா அதிபர் President J.R. Jayewardeneயுடன் செய்து கொண்டார். இதனால், LTTE தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முன்னளித்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை. ஸ்ரீலங்கா அதிபருடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, மேலாக லங்கா சிறு தீவான வட கிழக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும், தீயொழுக்கழ் செயல்களின் விளைவாக LTTE ராஜீவ்ஜியை மனித வெடி குண்டுவைத்து கொலை செய்தனர். LTTE யினருக்கு, சற்றும் மூளை இருந்ததாகத் தெரியவில்லை. இந்திய நாட்டு பிரதமராக இருந்தவரும், நேரு வம்ச வாரிசான ராஜீவ்ஜியை அரசியல் நெடு நோக்கின்றி போட்டுத் தள்ளியது தவறல்லவா? இதனால் LTTE யினரின் ‘ஈழமும்’ மனித வெடிகுண்டால் மண்ணொடு மண்ணாக சிதறி வெடித்தும் விட்டது.

ஆனால், ராஜீவ்ஜி கொலையுண்டது ஏன், எதற்காக? இதற்கு பல சாத்தியக் கூறுகள் உள்ளன!!.

• முதலில், சட்ட விரோத செயல்களுக்கான நிதியை நேரு-காந்தி வம்சத்திற்கு அல்லது குடும்பத்துக்கு நிதி அளிக்கப்பட்டதை குளிர்-சாதனப் பெட்டியில் வைத்துப் பூட்டி தாற்காலிகமாகப் போட்டு அடைத்து வைக்கவா?

• அடுத்து போஃபோர் ரகசியங்களை, உலக தகவல் துறைக்கு அவ்வப்போது வேண்டிய அளவு கசிய விட்ட (leak) “கேஜிபி” KGB தகவல்களைப் பற்றித் திசை திருப்ப செய்யப் பட்டதா? இவையனைத்துக்கும், வல்லரசுகளுக்கும், சோனியாஜிவுக்கு தெரிந்தே ஒரு நாடகமாக அரங்கேற்றப்பட்டதா?

• இதற்கடுத்து, இந்திய மேலாண்மையை தொலை தூரத்திலிருந்து கையாள மிகவும் செல்வக்குள்ளவர்களால் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டதா? (இவர்கள் யார்?)

இவைகள்தான் இக்கொலையில் விளைந்ததா? இவைகளில் எதெது உண்மையென இன்னும் புலப்பட வில்லை.

அடுத்தது, பிப்ரவரி 28, 1986இல் பொஃபோர் ரகசிய வெட்கக்கேடுகள் பற்றி எல்லாம் அறிந்த ஸ்வீடன் பிரதம மந்திரி, ஓல்ப் பால்மே (Olof Palme) வும் அரசியல் காரணங்களுக்காக வன்முறையில், ஸ்வீடன் நகரின் மத்திய ஸ்டாக்ஹோமில், ஒரு நடன நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, வீட்டிற்கு காலாற பிரதம மந்திரி நடந்தே (!) செல்லும்போது, வழியில் சதித் திட்டத்தால், கொல்லப்பட்டார்.

[[[இவருக்கு தன் மீதும் தன் மக்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை பாருங்கள். மக்கள் தலைவர் காமராஜர், கக்கன் எங்கே! (மந்திரி கக்கன் அரசு பேருந்தில் நின்றுகொண்டு சில்லரை கொடுத்து பயணம் செய்தவர்) கருணாநிதி எங்கே?, ஸ்டாலின் எங்கே? (மந்திரி என்ற ஆடம்பரம், சிவப்பு மின் விளக்கு போட்டு siren ஒலிக்க கூட குறைந்தது சுமார் 20 வாகனங்கள் முன் பின் தொடர செல்வது போலல்லாமல், சந்தடி ஏதுமில்லாமல், நடந்தே சென்றது பிரதம மந்திரி “ஓல்ப்பால்மே” யின் தவறு தானே!. (sitting duck) இந்த தொழில் நுட்பத்தை கழகத்தாரிடம் முன்னரே கற்றுக் கொண்டு இருந்தால், இந்த கொலை நடந்திருக்குமா?! பாவம் ஞான சூனியம்!!]]].

இவரைத் தொடர்ந்து, 1988இல், ஓல்ப் பால்மேயின் அரசியல் ஆதரவு பெற்ற Bernt Carlssonம் வன்முறையில் மர்மமாகக் சதியால் கொல்லப்பட்டார்.

இதற்கு கிரிஸ்டர் பீட்டர்சன் என்ற சிறு வெறி மயக்க (Drug seller & Addict) விற்பனையாளனும், இக் கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவன் என்ற முறையில், முதலில் கைது செய்யப்பட்டு, இரு வருடங்களுக்குப் பின், நாட்டு நீதி மன்றத்தில், முறையீடு செய்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான். மேலும் பெரிய இடத்து விஷயங்களல்லவா? ஒருவர் வழக்கில் மாட்டிக் கொள்ள ஆரம்பித்தால், இந்த சங்கிலித் தொடரில் யார் யார் வண்டவாளம் எப்படி எப்படி வெளிப்படுமோ!!

ஜூலை 1987இல் நம்பியா-அங்கோலாவில் நடந்த உள் நாட்டுப் போரை நிறுத்த, Bernt Carlssonம் ஐக்கிய நாடு சபையால் ஆணையராக (United Nations Commissioner) நியமிக்கப் பட்டு, பதவியேற்று, டிசம்பர் 21இல், 1988இல், ஸ்காட்லாண்ட் லாக்கர்பையில் (Lockerbie), Pan Am flight 103இல் போயங் 747-121 aircraft called Clipper Maid of the Seas, லிபியா வன்முறையாளர் கள் அவர் சென்ற விமானத்தில், வைத்த, வெடிகுண்டு வெடித்த விபத்தில் மாண்டு போனார். இந்த விமானம், லண்டன் ஹீத்ரோ விமான தளத்திலிருந்து 243 பயணிகளுடன் 16 விமான ஊழியர்க ளுடன் புறப்பட்டது.

Bernt Carlssonம் ந்யூ யார்க்கில் நிமிபியாவுக்கும் முழு சுதந்திர உடன்படிக்கையில் (UN) ஆணையர் என்ற பதவித் தகுதியால், சாட்சிக் கையொப்பமிட வந்துகொண்டிருந்தார். நிமிபியா சுதந்திர உடன்படிக்கையில் கையொப்பமிடுபவர்கள்: அங்கோலா, க்யூபா, தென் ஆப்பிரிக்கா. அங்கோலாவில் அன்று தென் ஆப்பிரிக்கா வெள்ளை நிற வெறியர்கள் தங்கள் காலனி ஆட்சியை நிலை நாட்டி அனேக ஆண்டுகளாக ரத்தச் சிகப்பு வைர சுரங்கத்தில் (blood diamond mines) சகட்டுமேனியாக அங்கோலா மக்கள் ரத்தத்தை உறிஞ்சி, கொள்ளையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தனர்.

இவ்விமான விபத்தை, அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவன ஆவணப்படி FBIம், பிரிட்டன் UK – Dumfries and Galloway Constabulary என இரு அமைப்புகளும் சேர்ந்து 3 வருடங்களுக்குப்

பிறகு, இரு ஆசாமிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது (Abdelbaset Ali al-Meghrahi and Lamin Khalifah Fhimah – Libyan intelligence officer and head of the oil rich north African nation’s airline LAA and its station manager based in Malta respectively).

விசேஷமாக ‘மால்டா’ எனும் நாடு உலக பெட்ரோலிய எண்ணையில் கிடைக்கும் சட்ட விரோத நிதியை வேண்டியவாறு மாற்றிக் கொடுக்கும் இடம்!!. இன்னொரு மிக முக்கியத் தகவல். இதே இடத்திலிருந்து தான் இந்திய நாட்டு பங்கு சந்தையை (Indian share market) வெகு தொலைவிலிருந்து எளிதாக மற்றவர் எவரும் புரிந்து கொள்ள முடியாத முறையில் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் (remote controls) வகையில் இன்றும் நிர்வாகம் செய்யப் படுகிறதாம்.

லாக்கர்பை (Lockerbie) வழக்கு 1991இல் ஆரம்பமானது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் இருவர். Abdelbaset Ali al-Meghrahi and Lamin Khalifah Fhimah. இவ்விருவரையும், இக்கொடூர செயலில் ஈடுபடவைத்தவன், பழிபாவத்திற்கு அஞ்சாத போக்கிரி லிபியா சர்வாதிகாரி, ‘க(ர்)னல் மௌமர் கஃட்டாஃபி’ யால் (‘Colonel’ Muammar Quadhafi) மேலை நாட்டு அதிகாரி களின் சட்டப்படி, நீதர்லாந்த் (Netherlands) தேசத்தில், 1998இல், ஒப்படைத்தான். இதில், Fhimah என்பவன் நீதி மன்றத்தில் மௌனத்தைக் கடைபிடித்தாலும், Meghrahi என்பவனுக்கு ஜனவரி 31, 2001இல், 27 வருடங்களுக்கு சிறை தண்டனை அளிக்கப் பட்டது.

இவனையும் Scottish Criminal Cases Review Committee, மனித இரக்க உணர்ச்சியாலும், மனித இன நலப்பற்று காரணமாக, நீதியில் தவறு நேர்ந்து விடாது இருக்க சிறை தண்டனையிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டது. இராஃக் சர்வாதிகாரி சத்தாம் ஹுஸ்ஸைனும் கூட நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக, தூக்கிலடப்பட்டான். ஆனால், இதில் அகில உலக ரௌடி, நீதி நெறிகளுக் கடங்காத அயோக்கியன், லிபியா சர்வாதிகாரி, ‘க(ர்)னல் மௌமர் கஃட்டாஃபி’ யால் (‘Colonel’ Muammar Quadhafi) இன்றும் எந்த தண்டனையையும் அனுபவிக்காமல் சுதந்திரமாக உலகில் நடமாடிக் கொண்டுதான் உள்ளான்.

இவனை எந்த சட்டமும், நீதியும் இன்னும் அணுக முடிய வில்லை. இவன்தான் இந்த கொலைத் திட்டத்திற்கு உண்மையில் சதித் திட்டத்தைத் தீட்டி, ஸ்வீடன் பிரதம மந்திரி, ஓல்ப் பால்மேவை (Olof Palme) கொலையையும் செய்ய வைத்தவன்.

[[[“அம்பை எய்தவனை விட்டு விட்டு, உயிர் உணர்ச்சியற்ற அம்புக்கு தண்டனை வழங்கி, இதனால் திருப்தி படுவது போல ஆகிவிட்டது”. ஒரு நாட்டு பிரதம மந்திரி, நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு சாமானியன் போல வீட்டிற்கு நடந்தே செல்லும் பணிவும், துணிவும், இவ்வளவு தன்நம்பிக்கை இருக்கவேண்டு மானால், மக்கள் மீது அவருக்கும், அவருக்கு மக்கள் மீதும் பரஸ்பரம் எவ்வளவு அன்பு இருந்திருக்க வேண்டும். இந்த அன்பு, உணர்ச்சி, மனித நேயம், ஆகியவைகளைப் பற்றி லிபியா சர்வாதிகாரி கஃட்டாஃபி’ (Quadhafi) என்ற மனித மிருகங்களிடம் எதிர்பார்க்கலாமா?]]].

ஓல்ப் பால்மே தன் நாட்டில் மிகவும் பிரசித்தமானவர். தன் நாட்டு மக்களிடம் மிகவும் அன்புள்ளவர். இவர் நாட்டு எல்லையிலிருந்து கடந்துவரும் வன்முறைகளை வெறுத்து அருவருப்பு அடைந்தவர். இவரிடம் நடு நிலையில் உள்ள (அமெரிக்க, ரஷ்ய நாடுகளைத் தவிர) மற்ற எல்லா நாடுகள் இவரிடம் மிக மதிப்பு கொண்டிருந்தனர். உலகைத் தங்கள் கட்டைவிரலடியில் என்றுமே இருக்க வேண்டுமென எண்ணங்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ரஷ்ய, அமெரிக்க பேரரசுகள் கனவுகாண்பதை முற்றிலும் அடியோடு வெறுத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இக்கருத்தை கூறுவதில் எந்த அச்சமும் இல்லாது, இவைகளையும் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டினார். இவர் சதிக்கொலை நடப்பதற்கு சில மாதங்க்களுக்கு முன்னரே, ஓல்ப் பால்மே ரஷ்யர்களுக்கு ஆதரவாக இருப்பதாயும், ஆனால் ரஷ்ய ராணுவத்தால், நாட்டுக்கு எதிர்பார்க்க வேண்டிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் கவனம் செலுத்தாது இருப்பது பற்றி இவர் மீது ஒரு விசித்திரமான அவதூறான பிரசாரம் இவரைக் குறிவைத்து நடத்தப்பட்டது.

இந்த சதிக்கொலை நடைபெறாது இருந்திருந்தால், ஓல்ப் பால்மே இன்னும் சில நாட்களில், ரஷ்ய நாட்டுடன் பாதுகாப்பு, இன்னும் இரு நாடுகளுக்கிடையே, பல்வேறு வகையில் நச்சரிப்பு, எரிச்சலூட்டும் கருத்துகளைக் களையவும், ஸ்வீடனையொட்டி உள்ள கடலோரத்தில் வடக்கு சமுத்திர பொருளாதார சுதந்திர பாதுகாப்பு மண்டலத்தில், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி சட்ட விரோதமாகவும் கள்ளத்தனத்துடன் நுழைவது பற்றியும் பேச ரஷ்யப் பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.

• மேலாக, பால்மே திரும்பத்திரும்ப அமெரிக்காவை ஆதரிக்கும் மேலை நாடுகளையும், ரஷ்ய நாட்டையும், வியட்னாம் போரில் இவர்கள் இருவருடைய அநாவசிய குறிக்கீடு, ஈடுபாடுகளை கடுமையாக கண்டித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவைகளைத் தவிர,

• இவ்விரு நாடுகள் தங்களுக்குள்ள அணு ஆற்றலால், அளவுக்கதிகமாக உலகையே அச்சுறுத்துவது பற்றியும்,

• ரஷ்ய நாட்டு அரசியலால், செக் (Czech) நட்டில் ‘பராக்’ எனும் இடத்தில் ரஷ்ய சேனையைகளை அனுப்பி, அங்கு நடந்த ரஷ்ய எதிர்ப்பு புரட்சிக் கலகத்தை கண்மூடித்தனமாக அடக்கியது பற்றியும்,

• ஸ்பானிஷ், தென் அமெரிக்க சர்வாதிகாரிகளான பஃராங்கோ, பினோசே (Franco and Pinochet) இருவரையும் சனியம்-பிடித்த கொலையாளிகள் (‘Satanic Murderers) எனவும்,

• Franco Pinochet

• தென் ஆப்ரிக்க நாட்டு, அரசியலில் இன ஒதுக்கி வைத்தல் (apartheid) எனும் கருத்தில் உலகை ஏமாற்றும் இரட்டை நியமங்கள் (double standards) அதாவது ஒருபக்கத்தில் உலகெங்கும் apartheid policyக்கு ஆதரவு தேடிக்கொண்டே, தென் ஆப்பிரிக்க நாட்டுக்குள், apartheid policyக்கு எதிராக ஆப்ரிக்க தேசீய காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தல்,

• El Salvador and Nicaragua.உள்ள FSLN தீவிரவாத சுதந்திர வீரர்களுக்கு மற்றொரு பயங்கர வன்முறையாளர்களான அரபு நாட்டிலுள்ள பாலஸ்தீனர்களின் ஆதரவு போன்றவைகளில்,

தன் கண்டனங்களை அடிக்கடி உலக மேடைகளில் பகிரங்கமாக பேசிவந்தார். ஆகையால், மேற்கூறிய சிந்தனை சொல், செயல் ஆகியவைகளுக்கு மேலை நாடுகள், ரஷ்ய ஆதரவு கிடைக்குமா? உலகெங்கும் இம்மாதிரி அமெரிக்க, ரஷ்ய நாடுகளின், உண்மை உருவம் பற்றித் தன் கருத்தை, அடிக்கடி அபிப்பிராயங்களாக தக்க சான்றுடன் பறைசாற்றி எப்போதும் தொந்திரவு கொடுக்கும் ஓல்ப் பால்மேயை மேலை நாடுகள் உயிருடன் தான் விட்டுவைப்பார்களா?

அவரவர்கள் செய்யும் குற்றங்களை பலரறிய மற்றொருவர் அடிக்கடி சொல்வதைக் கேட்டு அவைகளைப் பற்றி கவலைப்படாமல், குற்றம் புரிந்தவர் யாராவது அப்படியே விட்டு விடுவார்களா? ரஷ்ய இரும்புத் திரை சர்வாதிகாரத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகள் இவ்விரண்டையுமே ஒரே சமயத்தில் சாடி வந்திருக்கிறார். ஓல்ப் பால்மேவை அதுவரை உயிருடன் விட்டு வைத்ததே ஆச்சரியம் தான். இதன் விளைவுதான் ஓல்ப் பால்மேயின் உயிரைக் குடித்தது. அவர் செயத ஒரே தவறு எக்காலத்திலும் உண்மை பேசியது மட்டுமே. “யதார்த்தவாதி வெகு ஜன விரோதி” (यथार्थवादि बहु जन विरोधि) என்பது பழமொழி.

ஒழுக்க நிலையிலிருந்து விலகி, நேரிடையாக போரில் இறங்காது மற்றொரு நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பகை நிலையைச் சார்ந்த மேலை நாட்டு அட்லான்டிக் உடன்படிக்கை சங்கமான North Atlantic Treaty Organisation [NATO]வுடன், எது எப்படி இருந்தாலும், ஒல்ப் பால்மே, அதாவது (ஸ்வீடனும்) மாறாது, தொடர்பு கொண்டிருந்தது. இது இப்படியே இன்றும் கபட நாடகங்கள் உலகெங்கும் அரங்கேற்றப்படுகிறது.

மேகூறியவைகளாலும், “கேஜிபி” KGB தயவாலும் இக்குற்றத்திற்கான உண்மை குற்றவாளி இன்னமும் பிடிபட வில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது தானே!

இங்கு ஒரு விசித்திரமான கேள்வி எழுகிறது?

முதலில், சஞ்சய் காந்தி, பின்னர் இந்திரா காந்தி துர்மரணத்தைத் தழுவிய பின்னர், ஸ்டெஃபினோ-பயோலா மைனோவின் மாப்பிள்ளை, அதாவது “சோனியா”வின் இந்திய கணவர் ராஜீவ் காந்தியையும் அடுத்து பட்டத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் அவரையே LTTEயைக் கொண்டு சதிக் கொலை நடத்த வேண்டிய பரம ரகசியம் இப்போது தொடர் நிகழ்ச்சியாக நம் கண்முன்னே, சரியாக நிரூபிக்கும் (raison-d’être) வகையில் ஏன், எதற்காக என தெளிவாகிறது. இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் புரிகிறது. ஒன்றன்பின் ஒவ்வொரு கொலைக்குப் பின்னர், ஒன்றுவிடாமல் கவனமாக நிறைவேற்ற ஏதோ திட்டமிட்டு செய்தது போல தெரிகிறதல்லவா? இதெல்லாம் யாருக்காக? இன்னும் தெளிவுபட சொன்னால், திருமதி சோனியாவை ஐக்கிய முன்னணி நேசக்கட்சிகள் (UPA) மூலமாக இந்தியாவின் முடி சூடாத பட்டத்து ராணியாக முடிசூட்ட நடத்தப்பட்ட நாடக ஒத்திசை என நன்கு நமக்குத் தெளிவாகிறது.

இதற்கடுத்த நிகழ்ச்சியான சோனியாஜி பிரதம மந்திரியாக பதவித் தியாகம் செய்தது என்பதும் ஒரு நாடகமே! இதற்குக் காரணம்,

• சோகத்தால் பீடிக்கப்பட்ட விதவை சோனியாஜி தன் இந்திய கணவர் ராஜீவ்ஜி துர்மரணத்திற்குப்பின் அவர் உட்கார்ந்த அதே நாற்காலியில் உட்காராமல் இருப்பதே அவருக்கு ஒரு இத்தாலிய / இந்திய மனைவி செய்யும் கடமை என ஓங்கி, பரபரக்க பறைசாற்றவும்,

• ராஜீவ்ஜியின் கொலையில், LTTE, KGB ஆகியவர்களின் ரத்தக் கரை பங்குகளை மூடி மறைக்கவும், மற்றும்

• பல்லாயிரக்கணக்கான இந்திய உயிர்கள் பழிக்குப்பழி வாங்கியதை நியாயப்படுத்தி இதைப் பற்றி எழும் கருத்தை ஒரேயடியாக இழுத்து மூடி மறைத்து விடவும்,

• போஃபோர் லஞ்சம்,

• KGB செயல்பாடு தடத்தை மூடி வைக்கவும்

• ராஜீவ்ஜியின் கொலைக் குற்றத்திற்கு குற்றம் புரிவோர்க்கு ஊக்குவித்து, சம்பந்தப்பட்டு, நேரிடையாக தொடர்புகொண்டு இன்று சிறை தண்டனை அனுபவிக்கும் கைதியை விடுவிக்க முயற்சிகளும்,

• வருண் காந்தியின் அரசியல் வாழ்க்கையை முற்றுப்புள்ளியாக்கவும்

• ஓற்படி (ஒரே வீட்டில் முறையே இரு சகோதர்களை மணந்தவர்கள், சோனியா-ராஜிவ்ஜி, மனேகா-சஞ்ஜய்) மனேகா காந்தியின் அரசியல் வாழ்க்கையை கொடு நோக்குடன் கிரகணம் பீடிக்கப்பட செய்து,

• லண்டனில், ISI இடமான சிற்றுண்டி சாலையில் ராஜீவ்ஜியை சோனியா முதன் முதலில் சந்தித்தது, காதல் செய்ய வைத்தது,

• ராகுல் காந்தியும் இன்று கிளிப்பிள்ளை என பேசும், “இந்தியாவுக்குள் இருக்கும் ஹிந்து மத கோட்பாடுகள், அமெரிக்காவுக்குள் இருக்கும் இஸ்லாமிய மத கோட்பாடுகளைக் காட்டிலும் மிக பயங்கரமானது” என்ற நாடகப் பிரசாரமும்

• ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக சிந்தனை செய்தால், ISI குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு உடந்தையான இத்தாலிய ரஷ்ய குற்றக் கும்பல் ஆகியவர்களுக்கும், இந்திய நாட்டையே ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்து இவர்களுக்கு பலி பீட காணிக்கையாக அர்ப்பணம் செய்யத்தான் உலக அரசியல் மேடையில் நடத்தப்பட்ட நாடகம் என் மனசாட்சி சொல்கிறது.

சோனியாஜியே! அடுத்து ஒரு நேரிடையான கேள்வி உங்களுக்கு:

ISI – KGB ஆகியோர்களின் இந்தியப் பிரதிநிதி என எனக்குத் தோன்றுகிறதே! இக்கருத்து சரிதானா?

இல்லாவிட்டால், கீழ்க்கண்டவைகளுக்கு தயவு செய்து விளக்கமளிக்கவும்:

• ராஜீவ்ஜியின் கொலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட நளினி ஸ்ரீஹரன் எனபவருக்கு, ஒரு குழந்தையின் தாய் என்ற வகையில் தண்டனையை குறைக்கும்படி ஏன் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டும்?

• இத்தாலிய பூர்வீகம் கொண்ட மாரியா புஸோ (Mario Puzo) என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய மிகப் பிரசித்தி பெற்ற இத்தாலிய மாஃபியா பற்றி கற்பனை நவீனமான, “காட் பாஃதர்” (The Godfather) என்ற புத்தகத்தில் கொடு நோக்குடன் கூடிய பழிக்குப் பழி படலம் போன்று, விலாவாரியாக நிறைவேற்றத்தான் பல்லாயிரக் கணக்கான ஸ்ரீ லங்கா தமிழர்களை அழிக்கத் திட்டமிடப் பட்டதா? இத்தனை கொலைகளையும் அநாயாசமாக ஈவிரக்க மின்றி, செய்து முடித்துக் காட்டுவது என்பதே வழக்காமான இத்தாலிய மாபிஃயா செயல் முறையல்லவா? இச்செயல்பாணி, எதிலும் சாத்வீக முறைகளைப் பின்பற்றும் இந்தியர்கள் செயல் முறையல்லவே அல்ல! இது சத்தியம். இந்தியாவிலும் இத்தாலி முறை எப்படி, யாரால் இறக்குமதி செய்யப்பட்டது? (World famous phrase from Film “Godfather’– “Give them something by which they cannot refuse” = cold blooded murder)

• 2009 தேர்தல் நடப்பதற்கு சற்று முன்பாக, உங்கள் மகள் பிரியாங்கா காந்தி வாத்ரா ‘நளினி’யை எக்காலமும் மன்னிக்க மாட்டேன் என்று ஒரு காலத்தில் சூளுரைத்தவர், பின்னர் ஏன் அவரையே, வெல்லூர் சிறையில் சென்று சந்திக்க வேண்டும்?

• ராஜீவ்ஜி கொலையில் சம்பந்தப்பட்ட மற்ற தூக்கு தண்டனைக் கைதிகளை இன்னமும் தூக்கு மேடைக்கு ஏற்றாமல் இருப்பதற்கு இரண்டு ‘தொத்தல்’ காரணம் கூறப்படுகிறதே!.

1. முதலில் அனுபவமுள்ள தூக்குத் தூக்கி இந்தியாவிலேயே இல்லை எனவும்,

2. இரண்டாவதாக, இந்திய உள்துறை மந்திரி பி.சிதம்பரம் கூறுவது போல,

ஜனாதிபதி பிரதிபா படேல் அவர்களுக்கு உள்ள சில வேலை செயல் முறை

சார்ந்த பண்பு நயம் என்றும் கூறப்படுகிறதே! ஏன்?

• இந்திய பாராளுமன்ற படிகளில் நம் பாதுகாப்பு வீரர்களைக் கொன்று குவித்தவன், எவ்வளவோ முறை மன்னிப்பு மனுவை அனுப்பி அவைகள் எல்லாமே மறுக்கப்பட்டு, ஒன்பது வருடங்களாக திஹார் சிறையில் இருக்கும் தூக்கு தண்டனை பெற்ற மற்றொரு படுபயங்கரக் குற்றவாளியான அஃப்சல் குரு, இன்று சிறையில் ஒரு ராஜ குமாரன் போல அதே சிறையில் சகல வசதிகளுடன் வாழ்கிறானே அது எப்படியம்மா?

• பம்பாயில் 26/11 என்று பிரசித்தி பெற்ற பாகிஸ்தானின் இந்தியப் படுகொலையில் முக்கிய பங்கு கொண்டு அனேக இந்திய நிரபராதிகளை, டெலிவிஷன் காமிராக்களுக்கு முன்னர், கொன்று குவித்த “அஜ்மல் கசப்” நம் நீதி முறைமையை எள்ளி நகையாடும்படி தண்டனை வழங்காது வைத்திருப்பது சரிதானா?

மேற்கூறிய கேள்விகளனைத்துக்கும் உங்களிடம் நியாயமாக, பகுத்தறிவுக்குப் பொருந்தும் படி தக்க பதில் உங்களால் எளிதில் கூற இயலுமே!

அப்படி பதில் கூற முடியாவிட்டால், இந்தியனான எனக்கு மாறாத உரிமையுடன் கேட்க மற்றொரு

கடைசி கேள்விக்காவது தயவு செய்து பதிலளிக்கவும்:

சோனியாஜி அவர்களே! - நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

என்பதையாவது கூறவும்.




Copyright:thinnai.com