Tuesday, January 18, 2011

வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்

Author: அரவிந்தன் நீலகண்டன்

'இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. '

=டாக்டர் அம்பேத்கர் ( 'பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ' எனும் நூலிலிருந்து)

'வேற்றுமையில் ஒற்றுமை மூலம் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இது மதமாற்றத்துக்கு

தடையாக உள்ளது. '

-லொஸேன் உலக எவான்ஜலிக்கல் செயற்குழுவின் 'இந்திய சூழலில் ஆன்மீக போராட்டம் ' எனும் அறிக்கையிலிருந்து.

1. கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா ? அவர்கள் மகத்தான கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில்தானே ஈடுபடுகிறார்கள் ? இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதற்கு என்ன சான்றுகளை காட்ட முடியும் ? வேண்டுமானால் நீங்களும் அவர்களைப் போல சேவைகளில் ஈடுபடுங்கள்.

கிறிஸ்தவ அமைப்புகளின் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் மதமாற்றத்துக்கான வெறும் தூண்டில்தான் என்பதை இரட்சண்ய சேனை அமைப்பின் நிறுவனரான ஜெனரல் பூத் தெரிவித்துள்ளார். கல்கத்தாவின் காலம் சென்ற தெரசாஅம்மையாரும் சற்றேறக்குறைய இதே கருத்துகளை கூறியுள்ளார். கிறிஸ்தவத்தின் இந்த சேவைகளுக்கு போட்டியாக வேறெந்த சேவை அமைப்புகளும் வந்துவிடக்கூடாதெனபதில் கிறிஸ்தவ திருச்சபை மூர்க்கமாக உள்ளது. உதாரணமாக, கோவாவில் 'கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்புக்கு ஊறு விளைவிப்பதாக ' அப்பகுதியின் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை கத்தோலிக்க புனித விசாரணை அப்புறப்படுத்தியது. அண்மைக் காலங்களில் தெரசாவின் சேவையை மையமாக கொண்டு டாமினிக் லப்பயர் என்னும் கத்தோலிக்க எழுத்தாளர் (நம் மத சார்பற்ற வட்டாரங்களில் இவர் பெரிதும் மதிக்கப்படுபவர்) பாதி கற்பனையும் மீதி பிரச்சாரமுமான 'City of Joy ' எனும் நூலில் இராமகிருஷ்ண மிஷன் துறவிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து குழந்தைகளை இந்திய அரசு இயந்திர உதவியுடன் மும்பையில் விற்பனை செய்வதாக எழுதியிருந்தார். இவ்வாறு மேல் நாடுகளில் கிறிஸ்தவரற்ற இந்திய சேவை அமைப்புகளை பற்றி மிகவும் மட்டரக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுதான் இவர்கள் 'சேவையில் ' ஈடுபடுகின்றனர். மேலும் இவர்களது கல்வி அமைப்புகள் பெரும்பாலும் இந்திய அரசின் சலுகைகளும், நிர்வாக தலையீட்டின்மையும் கொண்டு நடத்தப்படுகின்றன. ஆனால் ஹிந்து கல்வி அமைப்புகளோ அரசின் நிர்வாகத் தலையீடும் சலுகைகளின்மையும் கொண்ட சூழலில் நடத்தப்படுகின்றன. மேற்கு வங்க அரசின் நிர்வாகத்தலையீடு காரணமாக ஸ்வாமி விவேகானந்தர் கண்ட இராம கிருஷ்ண சேவை அமைப்பு தன்னை ஹிந்துவற்ற சிறுபான்மை என அறிவிக்க கோரியது இந்த மதச்சார்பற்ற கேலி கூத்தின் கோரமான உச்ச கட்டம். இத்தனை சாதகமற்ற சூழலிலும் இன்று இந்தியாவின் மிக பரவலான கல்வி அமைப்பாக வித்யா பாரதி விளங்குவதும், ஓராசிரியர் கல்வி கூடங்கள் எனும் பொருளாதார திறமை கொண்ட அமைப்புகள் மூலம் தலித் மற்றும் வனவாசிகளுக்கு கல்வி அளிப்பதில் பெற்றுள்ள வெற்றிகளும் இந்திய தேசியத்தின் உள்ளார்ந்த முழுமைப் பார்வையின் வலிமையின் வெற்றியே.வனவாசிகளுக்கு மருத்துவசேவை புரிவதில் பெரும் வெற்றியும் சாதனையும் கண்ட விவேகானந்த வனவாசிகள் நல அமைப்பின் டாக்டர் சுதர்சனை கடத்தப்போவதாக வீரப்பன் அறிவித்ததும், வீரப்பன் ஆதரவு பிரசுரங்களுடன் கிறிஸ்தவ கன்யாஸ்திரி அண்மையில் கைது செய்யப்பட்டதும் ஞாபகமிருக்கலாம். கட்டாய மதமாற்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ சர்ச் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏராளம். ஐரோப்பாவை நடுநடுங்க வைத்த புனித விசாரணை எனும் Holy inquisition ஐ எடுத்துக் கொள்ளலாம்.உலகிலேயே மிக அதிக காலகட்டம் இந்த புனித விசாரணை நடத்தப்பட்டது இந்திய மண்ணில்தான்1. கோவா புனித விசாரணையின் போது பல ஹிந்துக்கள் மீது கட்டாய மதமாற்ற கொடுமை திணிக்கப்பட்டது என்ற போதிலும் இன்றும் கோவா ஹிந்து பெரும்பான்மையுடன் விளங்குகிறது என்றால் அது ஹிந்து மதத்தின் உள்ளார்ந்த வலிமையினால்தான். இந்தியாவின் இதர பாகங்களுக்கும் இது பொரூந்தும். கோவா புனித விசாரணைகள் 200ெ300 ஆண்டுகளுக்கு முன் நட்ந்த பழங்கதை இப்போது அப்படி அல்லவே எனும் கேள்வி எழலாம். ஆனால் இன்று மிசோ கிறிஸ்தவ அமைப்பு ' கிறிஸ்தவரல்லாதவர்கள் பிறப்பிலேயே பாவிகள் ' என கூறி பிரச்சாரம் செய்து வருகிறது. மதமாற மறுத்ததால் மிசோரமை சார்ந்த ரியாங்கு வனவாசிகள் 35,000 பேர் இன்று அகதிகளாக திரிபுராவில் வாழ்கின்றனர்2. மிக மோசமான சூழலில் நீர் மூலம் பரவும் நோய்களால் நாளைக்கு 15 ரியாங்குகள் இறப்பதாக திரிபுராவின் மருத்துவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. மிசோரம் முதலமைச்சர் இந்த இனத்துடைத்தெடுப்பை தேசிய ஊடகங்களில் நியாயப்படுத்தினார். எவ்வித கண்டனமும் எழவில்லை. கட்டாய மதமாற்றத்துக்கு உட்பட மறுத்த ஒரே காரணத்துக்காக இன்று தங்கள் இன அழிவினை வீடிழந்து, மானமிழந்து உடல் நலமிழந்து எதிநோக்குகின்றனர் ரியாங்குகள். கட்டாய மதமாற்றம் கிறிஸ்தவ நிறுவன மதத்தின் 2000 ஆண்டு பிரிக்க இயலாத உண்மை. மேலைக் கிறிஸ்தவ இறையியல் சிலுவையில் அறையப் பட்டிருக்கும் கிறிஸ்துவின் மனித நேய ஆன்மீக உயிர்த்தெழல் ஒருவேளை பாரதிய சுதேசி திருச்சபையின் மூலம் நிகழலாம். எதுவானாலும் கட்டாய மதமாற்றம் இன்றும் நிகழும் ஒரு உண்மையே.

2. தலித்களுக்கு எதிராக மேல் சாதி ஹிந்துக்கள் நடத்தும் கொடுமைகளால்தானே அவர்கள் மதம் மாறுகிறார்கள் ? கிறிஸ்தவ இஸ்லாமிய வரலாற்றில் இருக்கும் மானுட மதிப்பு ஹிந்து மதத்தில் இல்லையே. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் தலித்களுக்கும் வனவாசிகளுக்கும் பாதுகாப்பு உள்ளது. எனவே மதமாற்றத்தில் என்ன தவறு ?

மேல்சாதி ஹிந்துக்கள் தலித் மற்றும் வனவாசிகளுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. இதில் 'மேல் சாதி ஹிந்து ' வென முத்திரை குத்தபடும் கொடுமையாளர்கள் பொதுவாக ஒரே சாதியினர் அல்ல. இக் கொடுமைகளின் பின்னால் இருப்பது பெரும்பாலும் நிலத் தகராறுகள், தனிப்பட்ட விரோதங்கள், சாதி ஓட்டு வங்கி சார்ந்து எழும் மதச்சார்பற்ற கட்சி அரசியல் கூட காரணமாகலாம். மனு ஸ்மிருதியின் பிரதியைக் கூட பார்த்திராத, அவ்வார்த்தையையே கேட்டிராத சாதியினருக்கிடையே நடைபெறும் சமுதாய பிரச்சனைகளுக்கு மேல்சாதி/தலித் நிறம் பூசி பிரச்சாரம் செய்யும் 'நற் செய்தி ' அறிவிக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள், ஜிகாதிகள், மற்றும் 'குப்பை கூடைக்கு ஏற்றதாக ' அம்பேத்கர் கண்ட ஆரிய திராவிட இன வாதத்தை தம் மூளைக்குள் ஏந்திக் கொண்ட ஈவெரா வழி வந்த பகுத்தறிவுகள் ஒரு உண்மையை மறந்து விடுகின்றனர். பல்லாயிரக் கணக்கான தலித் மற்றும் வனவாசிகளின் சாவுக்கும் மானமிழப்புக்கும் அவர்கள் சந்திக்கும் தலைமுறைகளாகத் தொடரும் மானுடச் சோகங்களுக்கும் அதி முக்கிய காரணிகளாக திகழ்பவர்கள் ஜிகாதிகள், கிறிஸ்தவ மிஷினரிகள் சார்ந்த அமைப்பினர் மற்றும் போலி மதச்சார்பின்மையின் ஓட்டுவங்கி அரசியல்வாதிகளாவர்.

உதாரணமாக திரிபுராவில் மதம் மாறாத காரணத்தால், தம் வனவாசி பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிடாத காரணத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் ஜமாத்தியா வனவாசிகள். பாப்டிஸ்ட் திருச்சபையால் உருவாக்கி வளர்க்கப்பட்ட NLFT யினரால் பல ஜமாத்தியா சமுதாய சேவை மையங்கள் எரிக்கப்பட்டுள்ளன. குடும்பங்கள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளன. கூட்ட கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.3 ஆனால் கிறிஸ்தவர்கள் 'கொடுமைப்படுத்தப்படும் ' குஜராத்தை எடுத்துக் கொள்ளலாம். ஹிந்து தெய்வச்சிலைகள் மீது சிறுநீர் கழித்தல், பத்து வயது நிரம்பாத பள்ளிக் குழந்தைகளிடம் 'என் மீட்பர் கிறிஸ்து மட்டுமே என உணர்ந்து கொண்டேன் ' என எழுதி வாங்குதல் போன்ற நிகழ்வுகளின் எதிர்விளைவாக நிகழ்ந்த 'கொடுமை 'களில் ஒரு உயிர்பலி கூட ஏற்படவில்லை. ஆனால் முன்னால் குறிப்பிட்ட ரியாங்குகள் வனவாசிகள் இன்று விலங்குகளை விட கீழாக தம் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ வைத்திருப்பது கிறிஸ்தவ மதமாற்ற வெறியே. ஜிகாதிகளால் ஆகஸ்ட் 2000இல் கொல்லப்பட்ட படுகொலையில் உயிரிழந்த பீகாரின் நிலமற்ற கூலித் தொழிலாள ஹிந்துக்கள் தலித்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும்4. பீகாரில் இவர்களை வேட்டையாடுபவர்களோ மதச்சார்பின்மையின் தன்னிகரற்ற தனிப்பெரும் தலைவரான லல்லுவின் குண்டர்கள் மற்றும் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட சத்திரிய ஓட்டுவங்கியின் விளைவான ரண்வீர் சேனாவினர்.பங்களாதேஷில் அனைத்துவித அவமானங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டு தங்கள் கொஞ்ச நஞ்ச சொத்துகளையும் விட்டுவிட்டு ஓடிவரும் பெளத்த சக்மா வனவாசிகளை அகதிகளாக்கியது எது ? மேலும் எத்தனை தலித்கள் மதமாற மறுத்த ஒரே காரணத்தால் ஜிகாதிகளால் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டுள்ளனர்! இப்பதிவுகளின் அடிப்படையில் வனவாசிகள் மற்றும் தலித்களுக்கு எதிராக தெற்காசியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய அழிவாதிக்க சக்திகள் எவை என்பது கணிக்கப்பட வேண்டும். மதத்தின் அடிப்படையில் நம் தேசத்தின் நலிவுற்ற சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகள் மேலும் சமுதாய மேல்மட்ட அரசியல் வாதிகள் தம் ஓட்டு வங்கி அரசியல் இலாபத்திற்காக தலித்களுக்கு எதிராகவும் அவர்களை பயன்படுத்தியும் வாழும் கொடுமைகள் ஆகியவையும் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விராட ஹிந்து குடும்பத்தில் ஆயிரமாயிரமாண்டுகளாக எவ்வித ஊறுபாடுமின்றி பாதுகாக்கப் பட்டு வந்த தலித், வனவாசி வழிபாட்டுமுறைகளுக்கும் எதிராக மிகக் கேவலமான பிரச்சாரம் மேற்கில் இதே கூட்டத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.

சில ஸ்மிருதிகள் சமுதாய சமத்துவத்திற்கு எதிரான கருத்துகளை கூறியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவை ஸ்மிருதிகளே. அவை மாற்றப்படவும் ஏன் தூக்கி எறியப்படவும் செய்யலாம். மேடைகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான பரம் பூஜ்னீய பாளா சாகேப் தேவரஸ் அவர்கள் 'பெண்ணடிமை மற்றும் மானுடத்துவ ஒருமைக்கு எதிரான நூல்கள் மாற்றப்பட வேண்டும் அல்லது தூக்கி எறியப்பட வேண்டும். ' என கூறினார்5. ஆனால் இஸ்லாமில் 'இறக்கப்பட்ட 'தாகவும் எக்காலத்திற்கும் மாற்றங்கள் தேவைப்படாததாகவும் கருதப்படும் குர்ரான் அடிமை முறையினை அங்கீகரிப்பதையும், அவ்வாறே நால்வரின் அங்கீகரிக்கப்பட்ட 'பரிசுத்த நற்செய்திகள் ' அடங்கிய 'புதிய ஏற்பாடென்று ' கிறிஸ்தவர்களால் கருதப்படும் நூலும் அடிமை அமைப்பு அங்கீகரிக்கப்பதை காணலாம். இதன் அடிப்படையில் சர்வதேச அளவில் அடிமைகள் வர்த்தகத்தையும் கிறிஸ்தவ இஸ்லாமிய பேரரசுகள் நடத்தின. மொகலாய அரசுகளும் இந்தியர்களை ஐரோப்பியர்களுக்கு அடிமைகளாக விற்று வந்துள்ளனர்.6. இன்றைக்கும் அடிமை முறையினை முழுமையாக நடத்தும் ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளும்7 ஒப்பந்த அடிமைத்தன்மையினை இன்றைக்கும் 'விரும்பத்தகாதெனினும் இறை நீதிக்கு புறம்பானதல்ல ' என கூறும் கத்தோலிக்க திருச்சபையும்8 அவற்றிற்கு வழக்கறிஞர் ஊழியம் புரியும் மதச்சார்பற்ற கூலிப் பட்டாளமும் நேரான முகத்துடன் சமூக நீதி குறித்து பேச இயல்வது அதிசயமான விஷயம்தான். ஹிந்து சமுதாயம் முழுக்க முழுக்க குற்றம் குறையற்றதென்று கூற வரவில்லை. மாறாக பண்பாட்டு பன்மை வளம் காப்பு மற்றும் சமுதாய நீதி குறித்து உண்மையாக விழைவோர் இம்மண்ணின் உள்ளார்ந்த மதிப்பீடுகளின் மேல் தன் போராட்டத்தை அமைப்பதின் மூலம் மிகச் சிறந்த வெற்றிகளை பெற முடியும். குரு கோவிந்த சிங்கின் கல்சாவும், ஸ்ரீ நாராயண குருவின் குரு குலமும், ஐயா வழியின் அன்புக்கொடி எனும் காவிக்கொடியுடன் தலைப்பாகையும் ஏந்திய இயக்கமும், சங்கர வேதாந்தமும்,விவேகானந்தரின் அத்வைதமும், அம்பேத்கரின் சஙக சரணமும் பரிணமித்த இத்தேசத்தில் மகத்தான வெற்றி பெற்ற இவ்வியக்கங்களின் அடியொற்றியே நாமும் வெற்றி பெற முடியும். அடிமைத்தன்மையை தம் மூல நூல்கலிலிருந்து கூட களைய முடியாத ஆபிரகாமிய பரவு மதங்கள் நமக்குத் தேவையில்லை.

3. வத்திகான் II தெரியுமா உங்களுக்கு ? மற்ற மதங்களை மதிக்கும் தன்மை இன்று கிறிஸ்தவ திருச்சபையின் கோட்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளது. இந்நிலையில் ஏதோ மதமாற்றத்தின் மூலம் மத விரோதம் ஏற்பட்டுவிடும் என்பதெல்லாம் பழங்கதைதான்.

உண்மை என்னவென்றால் வத்திகான் II தான் இன்று பழங்கதை ஆகிவிட்டது. கார்டினல் ராட்சிங்கர் மற்றும் இன்றைய பாப்பரசர் இரண்டாம் ஜான் பால் ஆகியோர் 'மானுட மீட்பு கத்தோலிக்க திருச்சபைக்கு அப்பாலும் நிகழலாம் ' என்பதற்கான சாத்திய கூறுகளை கத்தோலிக்க இறையியலாளர்கள் விவாதிப்பதையே மறுதலிக்கும் 'டொமினியஸ் ஜீசஸ் ' எனும் திருச்சபையின் புனித ஆவணம் மூலம் வத்திகான் II உருவாக்கிய பன்மை சகிப்பு தன்மையின் எழுந்த சில சிறு துளிர்களையும் அழித்துவிட்டனர். குஜராத்தில் இறைப்பணி புரிந்த (காலம் சென்ற) அந்தோனி டி மெல்லாவினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய ஞான மரபுகளின் வரலாறு என்றேனும் பெரும் தொகுதிகளாக வெளி வருகையில் இந்த எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இம்மகத்தான மனிதர் அவற்றின் பக்கங்களில் கட்டாயம் முக்கிய இடம் பெறுவார். இவர் எழுதிய 'சாதனா ' எனும் கத்தோலிக்க துறவிகளூக்கான ஆன்மீக பயிற்சி நூல் மதங்களின் குறுகிய சுவர்கள் தாண்டி, அந்நூலை பயன்படுத்தும் எந்த மனிதருக்கும், அவர் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும் கூட வாழ்வினை வளப்படுத்தும் தன்மை கொண்டதாக திகழ்கிறது. இந்நூல் இன்று ாதவறு செய்ய இயலாதி கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பீடத்தால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது9. இது சமய நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள எந்த இந்தியனையும் வேதனைப்படுத்தக்கூடியது. இன்றைய கத்தோலிக்க தலைமைபீடம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தற்போது புனித விசாரணைக்கான (Holy Inquisition) அலுவலகத்தை திறந்துள்ளது. மேலும் பல மத்திய கால போக்குகளை மீநூடழ வைத்துள்ளது.

4. பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மற்றும் தலித் சமுதாயங்களின் சமுதாய மற்றும் ஆன்மீக தலைவர்கள், சமுதாய விடுதலை போராளிகள் மற்றும் அவதார புருஷர்கள் மத மாற்றம் குறித்து என்ன கூறுகிறார்கள் ?

ஜிகாதி ஆட்சியாளரின் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக தன் தலையையே கொடுத்து தர்மம் காத்தார் குரு தேஜ் பகதூர். சாதியத்தை நிராகரித்தெழுந்த கல்சா பந்த் நிறுவனரும் இறைவீரருமான சத்குரு கோவிந்த சிங் தன் இறுதி மூச்சு வரை கட்டாய மதமாற்றிகளை எதிர்த்து போராடினார். தென்கோடி குமரியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை அளித்த, அவதார புருஷராக வணங்கப்படும் வைகுண்ட ஸ்வாமி அவர்கள் சிலுவை வேதமும் தொப்பி வேதமும் (இஸ்லாம்) உலகெமெல்லாம் போட துடிப்பதை கண்டித்து தர்ம வழி நடக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீரவுரை வழங்கினார்10. அய்யன் காளி பல கிறிஸ்தவ போதகர்களுக்கு எதிராக வாதம் புரிந்து தம் மக்களை மதமாற்ற முனைந்தவர்களை தோற்கடித்தார்11. மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும் எதிர்த்தார். தமிழகத்திலும் சாதியத்தை எதிர்த்த சிறந்த சமுதாய மறுமலர்ச்சியாளரான ஸ்வாமி சித்பவானந்தரும் மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டுமென விரும்பினார்.

5. ஆனால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ' நான் ஹிந்துவாக சாக மாட்டேன் ' என சூளுரைத்து மதம் மாறியுள்ளாரே.

உண்மைதான். சவர்ண மதச் சார்பின்மையாளர்கள் மற்றும் ஸ்மிருதி அடிப்படைவாத பழமையாளர்கள் ஆகியோரை திருத்த முடியாதென்ற முடிவுக்கு வந்த பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், அத்தகையோரது பிடியில் ஹிந்து தர்மம் இருக்கும் போது தான் ஒரு ஹிந்துவாக இறக்கப் போவதில்லை என முடிவு செய்தார். அதற்கு மாற்றாக அவர் ஆபிரகாமிய மதங்களை தேர்ந்தெடுக்கவும் இல்லை, பகுத்தறிவு இல்லாமல் ஆரிய திராவிட இன வாதம் பேசவுமில்லை. மாறாக பெளத்த தர்மத்தை தேர்ந்தெடுத்தார். 'ஒடுக்கப்பட்டவர்களை அந்நியப்படுத்த தாம் விரும்பவில்லை ' என்றும் கூறினார். கிறிஸ்தவத்திற்கான மதமாற்றம் தலித்களை தங்கள் வேர்களிலிருந்து அறுத்துவிடுவதாகவும் அவர் கூறினார்12.

6. வளர்ந்த கிறிஸ்தவ நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பாருங்கள். அங்கிருக்கும் மத சுதந்திரத்தை பாருங்கள். வணக்கத்துக்குரிய பாப்பரசர் உரோமாபுரியின் அருட் தந்தை ஜான் பால் II அவர்கள் அனைத்து மதஙகளிடமும் காட்டும் அன்பினைப் பாருங்கள். பல்லாயிரமாண்டு பாரம்பரியம் பேசும் பாரத நாட்டில் இத்தகைய பரந்த மனப்பான்மை அல்லவா வேண்டும். அதற்கு பதிலாக இந்த மனித உரிமை பறிக்கும் மத மாற்றத் தடைச் சட்டம் எதற்கு ?

எந்த வளர்ந்த நாடும் தனது சமுதாய வகுப்பு நல்லிணக்கத்தை விட்டு கொடுத்து மத சுதந்திரத்தை ஆதரித்து விடவில்லை. உதாரணமாக ஆஸ்திரியா 1998 இல் இயற்றிய சட்ட அடிப்படையில் ஹரே கிருஷ்ண இயக்க நடவடிக்கைகளை தனிப்பட்ட வழிபாட்டளவிற்கு மட்டுமென கட்டுப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கத்தோலிக்கர்கள் ரஷ்ய பழம் திருச்சபையினரை மதமாற்ற தடைச் சட்டம் உள்ளது. கிரீஸ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக கூறுகிறது, 'தனிமனித மத சுதந்திரம் முழுமையாக அளிக்கப்படுகிறது. அதே சமயம் சமூக நல்லிணக்கத்தை கருதி மதமாற்றங்களைத் தடை செய்கிறது. ' அமெரிக்காவினைப் பொறுத்த வரை ஒவ்வொரு மதமாற்றமும் குடும்பத்தினரால் நீதிமன்றத்தில் 'மூளைச்சலவையால் செய்யப்பட்டதல்ல ' என நிரூபிக்கும் படி கேட்கப் படலாம். ஆனால் மதமாற்றத்தால் தன் குடும்ப நபர்களை இழக்கும் எத்தனை சராசரி இந்திய குடும்பங்கள் அத்தகைய நீதியினை பெற முடியும் ? இந்திய குழந்தைகள் மதமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு கூட்டங்களாக மேற்கத்திய மதமாற்ற நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள். 1992 இல் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்ட போப் ஜான் பால் II கத்தோலிக்கர்களை மதமாற்றும் புரோட்டஸ்டண்ட் மிஷினரிகளை 'ஓநாய்த்தனமாக ' நடப்பதாக வர்ணித்தார். இம்மதமாற்றங்களை கட்டுப்படுத்த கத்தோலிக்க அரசுகளுக்கு அழைப்பும் விடுத்தார்.

தொடர்ந்து வெனிசூலேய அரசு உட்பட பல இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க அரசுகள் மதமாற்றத்துக்கு சட்டரீதியான தடைகளை அமுலாக்கின. கத்தோலிக்கர்களை மதமாற்றும் மிஷினரிகளை 'ஓநாய்த்தனமுடையவையாக ' வர்ணித்த அதே போப் இந்தியாவில் தன் மிஷினரிகளை 'ஆசிய ஆன்மாக்களை அறுவடை செய்ய அழைப்பு ' விடுத்தார்.

இன்று பல வளரும் நாடுகளின் சராசரி வருமானங்களை விடக் கூடுதலான பல பில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவில் ஆன்ம அறுவடை பணி மேற்கொள்ளப் படுகிறது. வளரும் நாடுகளின் இறையியல் பன்மை வளத்தின் மீது தொடுக்கப்படும் காலனிய போரே இது. மாபெரும் மனித சோகங்களையே கட்டுப்பாடற்ற மதமாற்றங்கள் விளைவித்துள்ளன. இந்நிலையில் மதமாற்றத் தடை சட்டம் மனித உரிமை பறிக்கும் சட்டமல்ல, வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் சட்டமே இது.

***

குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்:

***

1.1774 இல் ஐரோப்பாவில் முடிந்த புனித விசாரணை கொலைகள் கோவாவில் 1560 முதல் 1812 வரை தொடர்ந்தன என்று கோவா வரலாற்றாசிரியர்அல்பெர்டோ டிமெல்லொ தெரிவிக்கிறார்.

2. The Observer, 08 பிப்ரவரி 1999

3. பிடிஐ செய்தி , 13 ஜனவரி 2002 மற்றும் பிபிசி செய்தி 14,18 ஏப்ரல் 2000

4. புதன் கிழமை, 2 ஆகஸ்ட், 2000, 07:39 GMT பிபிசி செய்தி, இதை போல பல கூட்ட கொலைகளில் தலித்களை ஜிகாதிகள் கொன்றுள்ளனர்.

5. ப.பூ. தேவரஸ்ஜி நிகழ்த்திய மே 1973 நாக்பூர் பேச்சு

6.டச்சு அரசுடனான சிவாஜியின் வணிக ஒப்பந்தம், 'இஸ்லாமிய ஆட்சியில் உங்களுக்கு கணக்கற்ற ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கும் அதிகாரம் இருந்தது. ஆனால் என் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்படுகிறது. இதை மீறி அடிமை வியாபாரத்தில் ஈடுபட துணிந்தால் என் வீரர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ' English records on Shivaji VolெI பக்கம் 137.

7. தெற்கு சூடானில் இஸ்லாமிய மதகுருக்களின் உதவியுடன் அடிமை வியாபாரம் இன்றும் நடக்கிறது. சவூதி அரேபியா மிகவும் அண்மைக்காலத்தில் தான் (1950 களுக்கு பின்) அடிமை அமைப்பினை நிராகரித்தது எனினும் அடிமை முறை மற்றும் கொத்தடிமை முறை சவூதியில் இன்னமும் நடைமுறையில் உள்ளதாகவே சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

8. 'இறையுளத்தால் மனிதர்கள் சிருஷ்டியிலேயே தராதரமுடைய வகுப்பினராக உருவாக்கப்படுகின்றனர். ' தவறுசெய இயலா போப்பின் அருளாணை: ] Expositio in librum , போப் கிரெகாரி I (கிபி 600), 1912இல் வெளியான கத்தோலிக்க கலைக் களஞ்சியம் 'அடிமை அமைப்பின் ஒழுக்கவியல் கூறுகள் ' என்ற தலைப்பில் வெளிட்ட கட்டுரை, அடிமைகளின் குழந்தைகளுக்கான உரிமை ஆண்டானிடம் இருப்பதற்கான ஒழுக்கவியல் நியாயம் குறித்த ஒரு கத்தோலிக்க ஒழுக்கவியலாளரின் மேற்கோளுடன் முடிகிறது. 1965 இன் இரண்டாம் வத்திகான் அடிமை அமைப்பினை கண்டித்தது. எனினும் இன்றுவரை கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பூர்வ கோட்பாட்டில் கொத்தடிமை முறையை விரும்பதகாததெனினும் பாவமாக ' கருதவில்லை. (பார்க்க:http://www.geocities.com/pharsea/Slavery.htm)

9. Notifications on the writings of Antony de Mella SJ, Congregation for Doctrine of the Faith, வெளியிடப்பட்ட நாள் : 24 ஜூன் 1998

10. அகிலத்திரட்டு, (203) 'ஒரு வேதம் சிலுவை உலகெமெல்லாம் போடு என்பான்/ஒரு வேதம் தொப்பி... '

11. 1904/1905 இல் அய்யன் காளி திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டுமென்று மனு கொடுத்தார். 1912 இல் தலித்களின் நெடுமங்காடு உரிமை போராட்டத்தில் அவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

12.டாக்டர் அம்பேத்கர் மேற்கோள் காட்டப்பட்ட நூல், 'Dalits and the Democratic Revolution: Dr Ambedkar and the Dalits in colonial India p. 230 ' ஆசிரியர் கையில் ஓம்விதத்.

Copyright:Thinnai.com 

சோனியா அக்காவின் கலக்கம்


வருண் வருகையும் சோனியா கலக்கமும்

பிலிபிட் - உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. இங்கே இந்திரா காந்தியின் மருமகளும், சஞ்சய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி 1996-ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சுயேச்சையாக இருந்து பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்தவர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தன் மகனான வருண் காந்தியை, தான் இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த பிலிபிட் தொகுதியில் தன் கட்சியின் அனுமதியுடன் வேட்பாளராக நியமித்துள்ளார்.

வருண் காந்தி, பட்டம் படித்தவர், மேற்படிப்புக்குச் சென்றவர்; நன்றாகக் கவிதையும், உரைநடையும் எழுத வல்லவர்; ஓரளவு திறமையான பேச்சாளரும் கூட. இருபத்து ஒன்பது வயதேயான இளைஞர். குழந்தைப் பருவத்திலேயே தந்தையான சஞ்சய் காந்தியைப் பறிகொடுத்தவர் ஆதலால், இவர் வளரும்போது, நேரு குடும்பத்திற்கே உரியதான, போலி மதச்சார்பின்மையும், ஹிந்து வெறுப்பும், வெளிநாட்டு மோகமும், இவரிடம் ஒட்டவில்லை. இவரது தாயார் மேனகா காந்தி சீக்கிய வம்சாவளியில் வந்த காரணத்தால் இவரை வீரம் உள்ளவராகவும், தைரியம் மிக்கவராகவும் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

வருண் காந்தி, தான் பிலிபிட் தொகுதி வேட்பாளர் என்பது உறுதியானவுடன், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தத் தொகுதி ஹிந்துக்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி. நேபாள எல்லையில் இருப்பதால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து நம் நாட்டிற்குள் புக வசதியாக இருக்கின்ற ஒரு தொகுதி. அவ்வாறு நம் எல்லைக்குள் வருகின்ற தீவிரவாதிகளுக்கு சில உள்ளூர் மதவாதிகள் இடமும் கொடுத்து உதவியும் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இத்தொகுதியில் பசு வதை, ஹிந்துப் பெண்கள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு, ஹிந்துக்கள் வீட்டில் கொள்ளை போன்ற பயங்கர சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக்கள் எப்போதும் ஒரு பயத்திலேயே உயிர் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். (இந்த உண்மைகளை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு தருண் விஜய் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளார்). உத்திரப் பிரதேசத்தை ஆண்டுவரும் முலாயம் (5 ஆண்டுகள்) மற்றும் மாயாவதி (2 ஆண்டுகள்) ஆகியோரின் போலி-மதச்சார்பின்மை அரசுகள் இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.

தொகுதியில் ஹிந்துக்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போன வருண் காந்தி, தன் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில், “ஹிந்துக்களுக்குத் துரோகம் இழைப்பவர் எவராயிருந்தாலும் அவர்களை அழிப்பேன். எவரேனும் ஹிந்துக்கள் மீது கை வைத்தால் அவர் கையை வெட்டுவேன். பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நபர்களையும், அவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் கூட, பகவத் கீதையில் சொன்னபடி அவர்களை அழிக்கத் தயங்க மாட்டேன்” என்று உணர்ச்சி மேலிட்டு முழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

அந்த வீடியோவில் இருப்பது தன் குரலல்ல என்று வருண் கூறியுள்ளார்.

தன் பேச்சில் அவர் முஸ்லீம்கள் என்று ஒரு சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவோ அல்லது அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவோ தெரியவில்லை. ஆனால் அப்படிப் பேசியதாக நாடெங்கும் உள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகள் பரப்பின. மத நல்லிணக்கத்திற்கு எதிராக, இரு மதத்தினரிடையே பகைமையை வளர்க்க, நாட்டின் அமைதியைக் கெடுக்கவேண்டி அவர் வேண்டுமென்றே பேசியதாக இவை விடாமல் கூறி வருகின்றன. போலி மதச்சார்பின்மை பேசி, எப்பொழுதும் ஹிந்துக்களுக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறிவரும் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்துக்கு மதிப்பளித்து, தேர்தல் ஆணையம், ‘இந்திய தண்டனைச் சட்டம்’ (IPC) 153A பிரிவின் கீழும். ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ (Representation of People Act) 125 பிரிவின் கீழும் வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு அளித்தது. அதன்படி அவர் காவல்துறைக்குப் புகார் அளிக்க, உத்திரப் பிரதேசக் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை தயார் செய்தது.

இங்கே நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ஊடகங்களின் விஷ(ம)ப் பிரச்சாரம். இரண்டாவது, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்.

முதலாவதாக, பல ஊடகங்கள் நேரு குடும்பத்தின் அடிவருடிகளாக இயங்குவது நமக்குப் புதிதல்ல. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை நேரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்துக்காக பாரதப் பிரதமராக்க வேண்டிப் படாத பாடுபட்ட ஊடகங்கள், இந்திய சட்டப்படி அது இயலாது என்று தெரிந்தவுடன், இந்திய மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு தேசத்துக் குடியுரிமையும் கொண்டுள்ள பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோரைப் பிரதமராக்கத் துடித்தன. பிரியங்காவும் தனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியை மக்கள் முன்னால் நிறுத்த அனைத்து முயற்சியும் எடுத்து வருகின்றன. உருப்படியான கல்வி அறிவு, நாட்டு நடப்புகளை கவனித்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும் திறன், பேச்சுத் திறன், எனப் பல தேவையான தகுதிகள் இல்லாததால் ராகுல் காந்தியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க இயலவில்லை.

அவரை முன்நிறுத்திப் பிரச்சாரம் செய்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், “இந்தியாவைக் கண்டுபிடித்தல்” (Discovering India) என்று அவர் நாடகத் தன்மையுடன் கூடிய ஒரு பிரயாணம் மேற்கொண்ட போது, அதன் மூலம் மக்கள் மனதில் அவர் இடம் பிடிக்க ஏதுவாக, அவர் தலித் மக்களுடன் ஒரு நாள் இரவு குடிசையில் தங்கியதையும், ஒரு நாள் மதிய உணவு அருந்தியதையும், தலித் குழந்தைகளுடன் ஒரே ஒரு நாள் விளையாடியதையும், பெரிதுபடுத்திக் காண்பித்து, அவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி மக்களிடையே ராகுல் காந்தியை “இந்தியாவின் இளவரசன்” என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றன ஊடகங்கள். இந்த முயற்சியிலும் தோற்றுப்போயின.

பின்னர் அவர் தன்னுடைய செயலர்கள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பாராளுமன்றத்தில் தட்டுத் தடவிப் படித்ததை ஒரு மாபெரும் சொற்பொழிவாகக் காட்ட முயற்சித்தன. அதிலும் அவை வெற்றி பெற முடியவில்லை. இந்த ஊடகங்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கின்றன என்றால், ராகுல் காந்தி காலையில் கண் விழிப்பதையும், பல் தேய்ப்பதையும், குளியலறை போவதையும் தான் முக்கியச் செய்தியாக (breaking news) போடுவதில்லை. மற்றபடி அவர் எது செய்தாலும் அது முக்கியச் செய்திதான்!

இவ்வாறு ராகுல் காந்தியை இந்திய மக்களின் மீது பிரதமராகத் திணிக்க ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் முயற்சி செய்யும் வேளையில், மேனகா காந்தியின் மைந்தர் வருண் காந்தி ஹிந்துக்களின் பிரதிநிதியாகவும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளராகவும், தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் நேரு குடும்பத்திலிருந்து ஓர் இளைஞர் இந்த தேசத்தின் உண்மையான பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், மத உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் பொருட்டு அரசியலில் இறங்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வருண் காந்தி ராகுல் காந்தியை அரசியல் களத்தில் எளிதில் தோற்கடித்து விடுவாரோ என்கிற அச்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்கள் வருண் காந்தி மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து வருவதன் காரணம் இதுதான்.

பிலிபிட் தொகுதியின் அதிகாரபூர்வ வேட்பாளராக வருண் காந்தி தேர்தல் ஆணையத்தினால் அங்கீகாரம் செய்யப்படாத நிலையில், மேலும் தன்னுடைய வேட்பு மனுவை அவர் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அது தன் எல்லையை மீறி நடந்துகொண்டுள்ளதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள். காவல்துறைக்கு மட்டுமே வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தற்போது அதிகாரம் இருக்கின்ற நிலையில், வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, காவல்துறையின் அறிக்கையின் படி தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்திருக்கலாம். அல்லது தேவையான நடவடிக்கைகளை அப்போது எடுத்திருக்கலாம்.

மேலும், வருண் காந்தி, தான் அவ்வாறு மத வெறியுடனோ, இரு மதத்தாரிடையே பகைமை ஏற்படுத்திக் கலவரம் ஏற்படும் விதமாகவோ பேசவில்லை என்றும், அந்த ஒலி/ஒளி மின்வட்டுக்கள் திருத்தம் செய்யப்பட்டவை என்றும், தனக்கு எதிராக நடந்த அரசியல் சதி என்றும் கூறியுள்ளதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யவில்லை. அவர் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதோடு நில்லாமல் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வருணை வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருப்பதும் ஒரு அதீதமான செயல்பாடு என்று கருத இடமிருக்கிறது. இதுவரை இந்தியாவில் நடந்திராத விதமாகத் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 20-ம் தேதி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி ஏற்கப் போகும் திரு நவீன் சாவ்லா அவர்களும், மற்றொரு ஆணையர் திரு கொரேசி அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதே. தற்போது உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கோபாலஸ்வாமி அவர்கள் திரு நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பலமுறை நடந்து கொண்டதாகவும் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் அரசியல் சாசனத்தின்படி பரிந்துரை அளித்ததை நாம் அறிவோம். மேலும், வருண் விஷயத்தில் தேர்தல் ஆணையம் அவசர கதியில் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நமக்குச் சந்தேகம் உறுதியாகிறது. அதாவது ராகுல் காந்திக்குப் போட்டியாக வருண் வந்துவிட்டால், ராகுலின் அரசியல் வாழ்வு அதோகதியாகிவிடும் என்கிற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவியும், நவீன் சாவ்லா மூலமாக வருணின் அரசியல் வாழ்க்கை தொடங்கு முன்னரே முடமாக்கிவிட முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன என்பதும் விளங்குகிறது.

இதனிடையே வழக்குகள் போடப்பட்டதால், தன்னுடைய முன்ஜாமீன் காலாவதியாகிவிட்ட நிலையில், நம் நாட்டு சட்டத்திற்கு மதிப்பளித்து, வருண் காந்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது அவருடன் வந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மீது காவல் துறை தடியடி, மற்றும் ரப்பர் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய நடவடிக்கை எடுத்து ஒரு கலவரம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல் வருண் மீது கொலை முயற்சி, கலவரம் ஏற்படுத்தியது, போன்ற பல பொய் வழக்குகள் போட்டுள்ளது மாயாவதி அரசு. அதோடு நிறுத்தாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது ஏவி விட்டிருக்கிறது. நம் நாட்டுச் சட்டப்படி சரண் அடைய நீதி மன்றத்திற்குச் சென்ற ஒருவரின் மீது, அபாண்டமான குற்றச்சாட்டுகள் சொல்லிப் பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாயாவதியும் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளைக் கண்டு பயப்படுகின்றார் என்பது தெரிகிறது. இவருக்கும் சோனியாவுக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை உள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், மற்ற போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் வருண் காந்தியின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொண்டு அவர் மீது சேற்றை வாரியிரைப்பதைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் ஹிந்துக்களின் சார்பாக யார் முன் வந்தாலும் அவர்களை மத வெறியர்களாகச் சித்தரித்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் போக்கு நன்றாகவே தெரிகிறது. அதாவது, இந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும்; சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கிகளாக வைத்துக் கொண்டு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, தமது சுயநல அரசியல் நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களது தாரக மந்திரமாக இருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, இந்த நாட்டின் இறையாண்மையைப் பற்றியும், பாதுகாப்பைப் பற்றியும், கலாசார சீரழிவைப் பற்றியும், பொருளாதார சீர்கேட்டைப் பற்றியும், துளியும் கவலைப் படாமல் நாட்டைக் குட்டிச் சுவராக்கும் இந்த அரசியல் வியாதிகள் இருப்பது நமக்குப் பெரும் அவமானமும் அபாயமும் ஆகும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

உதாரணத்திற்கு, தமிழக முதல் அமைச்சரான கருணாநிதி, தன்னுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சட்டசபையில் பொன்விழா கண்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் வாழ்க்கையில், 365 நாளும் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்துக் கோவில்கள், ஹிந்து மதம், ஹிந்து பழக்க வழக்கங்கள், ஹிந்து மத நூல்கள் என்று எல்லாவற்றின் மீதும் வசை பாடியே வாழ்ந்துள்ளார்! எந்த ஊடகமாவது அவரை விமரிசித்தது உண்டா? தேர்தல் ஆணையம் அவர் மேல் நடவடிக்கை எடுத்ததுண்டா? சமீபத்தில் கூட, ராமாயணத்தையும், ராமர் பாலத்தையும், ராமரையும், அசிங்கமாகப் பேசிப் பல கோடி ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசினாரே! தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? இதுவரை, ஒரு எச்சரிக்கை அறிக்கையாவது அவருக்கு அனுப்பியதுண்டா? கருணாநிதிக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

சோனியா தான் போகின்ற இடங்களிலெல்லாம், ஒவ்வொரு முறை பேசும்போதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ஹிந்துத் தீவிரவாதிகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவை ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தாக்கும் பேச்சு இல்லையா? கடந்த குஜராத் சட்ட மன்றத் தேர்தலின் போது ஹிந்துத் தலைவர்களை பொய்யர்கள், திருடர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றெல்லாம் பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன வழக்குப் போட்டது? சோனியா காந்திக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

அதே குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் “குஜராத்தில் உள்ள ஹிந்துக்கள் தீவிரவாதிகள்” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்தது? அவருக்கு ஒரு சட்டம், வருணுக்கு ஒரு சட்டமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேசிய மாநாடுக் கட்சியின் தலைவர் பாஃரூக் அப்துல்லா, பாராளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்காகப் பரிந்து பேசியபோது, “அவரைத் தூக்கிலிடுங்கள்! அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்! இந்த நாடு பற்றி எரியும்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை சீரழியும்! தண்டனை அளித்த நீதிபதிகள் கொல்லப் படுவார்கள்!” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது?

தற்போது கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதானியுடன் கூடிக் குலாவுகின்றனர்! மதானிக்கு எதிரான தடயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அங்கே எதிர்க்கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ் ஏன் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறது? ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லீம்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம், கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சட்டமா? மதானியை விடவா வருண் காந்தி மோசமாகப் போய்விட்டார்?

சமீபத்தில் சண்டிகார் நகரில் காங்கிரஸ் தலைவர் இம்ரான் கித்வாய் “நான் ஒரு முப்தியாக இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடுவது காபிஃர்களுடன் (ஹிந்துக்களை தரக்குறைவாகச் சொல்லும் வார்த்தை - காபிஃர்) நட்பு வைத்துக் கொள்வதற்கு சமம், என்று ஒரு பஃட்வா கொடுத்திருப்பேன். நான் முப்தியாக இல்லையே என்று வருந்துகிறேன்” என்று பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர்மீது பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. அவர் பேச்சு அடங்கிய ஒலி நாடாவையும் கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?

2007 ஜனவரி மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை உயிருடன் திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று சவால் விட்டனரே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர்! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? தௌஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாகர் சமீபத்தில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டத்தில் “வருண் காந்தி தமிழகம் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது” என்று பேசியுள்ளார். அது “வின்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டதே! என்ன செய்து கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்? அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் இல்லையா? அவர்களுக்கு ஒரு சட்டம் வருணுக்கு ஒரு சட்டமா?

இந்த மாதிரிப் பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது வருண் காந்தி மேல் போடப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் மேற்சொன்ன அத்தனைத் தலைவர்கள் மேலும் போட்டிருக்க வேண்டுமே!

இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்ன தெரிகிறது? ஹிந்துக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் செயல் படக்கூடாது; ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும். இவ்வுண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீய சக்திகளை இந்துக்கள் நிராகரிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.

http://thamizmani.blogspot.com/2009/04/blog-post_16.html

மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிணம் தின்று தான் ஆக வேண்டும் என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள். 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக்கொண்டு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடகங்கள் இந்தப் பழமொழியையே நினைவு படுத்துகின்றன.

raja-sibal

ஆண்டிமுத்து ராசாவை பின்னணியில் இருந்து இயக்கிய பெரு முதலாளிகளும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அடிப்படையான பல்லாயிரம் கோடி லஞ்சப் பணத்தைப் பெற்ற ஊழலின் வேரான தலைவர்களும், கடப்பாறையை விழுங்கியவர்கள் போல அமைதி காக்கிறார்கள். ஆனால், ராசாவுக்குப் பின் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் சிகாமணியான கபில் சிபலோ, ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’ என்று முழங்கி வருகிறார். என்னதான் திறமையான வழக்கறிஞராக இருத்தாலும், தப்பு செய்த கட்சிக்காரரைத் தப்புவிக்க எல்லா கோமாளி வேலைகளையும் செய்து தானே ஆக வேண்டும்?

மத்திய தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி) நேர்மையான அணுகுமுறை காரணமாகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து உச்சநீதி மன்றம் இவ்விவகாரத்தை கிளறத் துவங்கியது. மத்திய அரசையும் பிரதமரையும் உச்சநீதி மன்றம் கேட்ட தர்ம சங்கடமான கேள்விகளால் தான், மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) இவ்விவிகாரத்தில் வேறு வழியின்றி விசாரணையை முடுக்கியது. இறுதியில், கள்ளத்தனம் செய்த அமைச்சர் ராசா பதவி விலக வேண்டியதாயிற்று.

அப்போது, இத்துறை மீண்டும் தி.மு.க. வசமே வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக தொலைதொடர்புத் துறை ஒப்படைக்கப்பட்டது. உடனே, நமது ஊடகங்கள், ‘தி.மு.க.வுக்கு அடிபணியாத சோனியா’ என்று புளகாங்கிதத்துடன் செய்திகளைத் தீட்டின. இப்போது கபில் சிபல் நடத்திவரும் நாடகங்கள், ராசாவை விஞ்சுவதாக உள்ளபோது, அதே ஊடகங்கள் அர்த்தமுள்ள மௌனம் சாதிக்கின்றன.

பதவி இழந்த ஆ.ராசா, ”எனக்கு முன் அமைச்சராக இருந்தவர்களின் வழியிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தேன். இது குறித்து பிரதமருக்கு எல்லாமே தெரியும். இதில் எந்த ஊழலும் நடக்கவில்லை. இதனால் எந்த இழப்பும் அரசுக்கு ஏற்படவில்லை” என்றே கடைசிவரை கூறி வந்தார்; இப்போதும் கூறி வருகிறார். தற்போது ராசாவை குப்புறத் தள்ளி அவரது பீடத்தில் அமர்ந்திருக்கும் கபில் சிபலும் அதையேதான் கூறுகிறார். பிறகு எதற்காக ராசாவை அவசரமாக பதவி விலகுமாறு காங்கிரஸ் நிர்பந்தம் செய்தது?

இதில் வேடிக்கையான ஒற்றுமை என்னவென்றால், ஆ.ராசாவும் கபில் சிபலும் வழக்கறிஞர்கள் என்பதுதான். இருவருமே, ஊழலை மறைக்க எடுத்துவைக்கும் வாதங்கள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்த விழைபவையாகவே தோன்றுகின்றன.

வரும் பிப். 10 ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரித்து அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்ய வேண்டும். அநேகமாக, அந்த அறிக்கை தாக்கலின்போது, ராசா கைது செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இப்போதே, ராசாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி மற்றொரு வழக்கினை சுப்பிரமணியம் சாமி தொடுத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கபில் சிபல் கூறியிருப்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக இருக்கிறது.

கபில் சிபல் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருந்தால் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும்’ என்றார். அதன்படி, பல தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள் விதிமுறைப்படி சேவையைத் துவக்காமல் தாமதிப்பது குறித்து கேட்டபோது, அவை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபல் சொன்னார். பரவாயில்லையே என்று சிபலை பாராட்டிய நேரத்தில், ஓர் அதிரடியை நிகழ்த்தினார் கபில்.

உச்சநீதி மன்றத்தின் தொடர் கண்டனங்களை திசை திருப்ப, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக, கபில் சிபல் (டிச. 10) அறிவித்தார். 2009 முதலாக மட்டுமல்லாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலமான 2001 முதற்கொண்டே இக்குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணையைக் கோரிவரும் நிலையில், உச்சநீதி மன்றம் சி.பி.ஐ.இடம் கிடுக்கிப்பிடி போட்டுவந்த நிலையில், சிபல் இவ்வாறு அறிவித்தார்.

அதாவது, ராசா மட்டும் ஊழல் செய்யவில்லை; அதற்கு முன்னரே பா.ஜ.க. அமைச்சர்கள் காலத்திலும் ஊழல் நடந்திருக்கிறது என்பதுதான் சிபலின் கருத்தாக இருந்தது. எனினும், தனி நீதிபதி விசாரணையை முழு மனதுடன் வரவேற்பதாக பா.ஜ.க. அறிவித்தது; அதே சமயம், ஜே.பி.சி கோரிக்கையை முனை மழுங்கச் செய்ய மாட்டோம் என்று அருண் ஜெட்லி அறிவித்தார்.

அடுத்து, மீண்டும் முருங்கை மரம் ஏறினார் சிபல். தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு தொலைதொடர்பு நிறுவன உரிமையாளர்கள் சுனில் மிட்டல் (ஏர்டெல்), ரத்தன் டாடா (டாடா டெலிசர்வீஸ்), அணில் அம்பானி (ரிலையன்ஸ் கம்யூனிகேசன்) ஆகியோரை (டிச. 23) அழைத்துப் பேசிய அமைச்சர் சிபல், இந்த விவகாரத்தால் தொழில்துறை பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேற்குறிப்பிட்ட மூவருமே, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள். அவர்களையே அழைத்துப் பேசியதன் மூலமாக சிபலின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. நமது விழிப்புணர்வுள்ள ஊடகங்கள் தான் இதனை கண்டுகொள்ளவில்லை. பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டால் ஊடக உரிமையாளர்கள் எவ்வாறு கோடி கோடியாக சம்பாதிப்பதாம்?

வழக்கில் தொடர்புடையவர்களையே அமைச்சர் அழைத்துப் பேசிய பிறகு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசின் நிலையை சி.பி.ஐ.யோ, தனி நீதிபதியோ புரிந்துகொள்வது கடினமான ஒன்றல்ல.

இதனிடையே, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட ‘முதலில் வந்தவருக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையால் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் முழங்க ஆரம்பித்தனர். மதிய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சி. ஆகியோரைத் தொடர்ந்து கபில் சிபலும் அதே முழக்கத்தைத் தொடர்ந்தார். ஒரு பொய்யை பல முறை சொனால் அது உண்மையாகிவிடும் என்ற ‘கோயபல்ஸ்’ தந்திரம் இது. நமது ஊடகங்கள் கொஞ்சமும் தாமதிக்காமல் இந்தப் பொய்களை வெளியிட்டு பத்திரிகை தர்மம் காத்தன. ஒரு பத்திரிகையேனும், இத்தனை நாட்களாக இதனை ஏன் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது? என்று கேட்கவில்லை.

பா.ஜ.க.வை மட்டம் தட்டக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் தவறாமல் பயன்படுத்தும் காங்கிரஸ், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ரகசியத்தை ஏன் சொல்லவில்லை? ஜே.பி.சி கோரும் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தவும், ஊழலில் தான் மட்டுமா ஈடுபட்டேன் என்று நியாயப்படுத்தவுமே இந்த பொய்க் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

சி.பி.ஐ.யும் தனது வழக்கப்படி, அரசியல் எஜமானர்களின் உள்ளக்கிடக்கைகளைப் புரிந்துகொண்டு, 1998 முத்தாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரிக்க குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. ராசா பதவியில் இருந்த (2004) காலத்திற்கு விசாரணையைக் கொண்டுவர, ஆறு ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும் என்று சி.பி.ஐ. கணக்கிட்டிருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் ரத்து ஆகுமா?

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முற்றாக ரத்துசெய்யக் கோரும் மனு தொடர்பாக ஜன. 10 ல் மத்திய அரசு மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் உச்சநீதி மன்றம் அனுப்பியுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை என்று சாதிக்க ஆரம்பித்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல். இன்னொரு பக்கம், அபராதமாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு, முறை தவறிய நிறுவனங்களை அனுமதிக்க ஆரம்பித்துள்ளது அரசு. இவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

‘ஆ ராசா காலத்தில் நடந்த ஒட்டுமொத்த 2 ஜி அலைக்கற்றை ஏலத்தையுமே ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் விட வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் சரி செய்யப்பட வேண்டும்’ என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம், ‘ஆ.ராசா காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் உள்பட 122 லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று கேட்டு மத்திய அரசுக்கும் மத்திய தொலைதொடர்புத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, “குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உரிமங்களை மட்டும் ஏன் ரத்து செய்ய வேண்டும்? ஒட்டுமொத்த ஒதுக்கீடுமே முறையற்றது என தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியே கூறியுள்ளார். அதனால்தான் 122 லைசென்ஸ்களையுமே ரத்து செய்யச் சொல்கிறோம்” என்றார்.

இந்நிலையில், சி.ஏ.ஜி.யின் கணக்கீடே தவறு என்று முழங்கியிருக்கிறார் கபில் சிபல் (ஜன. 9). குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா தரப்புக்கான வழக்கறிஞராக இதன்மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார் அமைச்சர் சிபல். அவரது வாக்குமூலம் இதோ…

“2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை கணக்கிடுவதற்கு தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிக்கிறது. அவர் குறிப்பிட்ட இழப்பு தொகைக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.

அந்தப் புள்ளிவிவரம் முற்றிலும் தவறானது. உண்மையில் இந்த விவகாரத்தில் அரசு கஜானாவுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. இழப்பு தொடர்பாக ஊகமான புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக் கூடாது. இதன்மூலம் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தர்மசங்கடத்தை அவர் ஏற்படுத்திவிட்டார்.

கணக்கு தணிக்கை அதிகாரி தனது மனச்சாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார். எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமானிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுபோல், இழப்புக்கு காங்கிரஸ் காரணம் அல்ல. தொலைத் தொடர்பு துறையில் உரிமம் வழங்குவதற்கு, ‘முதலில் வருகிறவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் அறிமுகம் செய்தது.

கடந்த 1999-ம் ஆண்டில், அவர்களுடைய ஆட்சியின்போது நிலையான உரிமக் கட்டண முறை, வருவாயில் பங்கு அடிப்படையிலான கட்டண முறை கொள்கையாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ. 1.5 லட்சம் கோடியாகும். கடந்த 2002-ம் ஆண்டின் 10-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதே கொள்கையைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றியது. ஆயினும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சில மனித தவறுகள் நடந்து இருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலைதொடர்பு துறை சார்பில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார் கபில் சிபல்.

sibal_cartoon

திருடனின் கூட்டளியிடமே லாக்கப் சாவியைக் கொடுத்தது போல இருக்கிறது, கபில் சிபலின் பேச்சு.

சிபலின் கருத்துக்கு சி.ஏ.ஜி மறுப்பு தெரிவித்துள்ளது. ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சரியானது என்ற நிலையில் நாங்கள் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம்’ என்று சிஏஜி செய்தித் தொடர்பாளர் தில்லியில் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் சிபல் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ”பொது கணக்கு குழு விசாரணையிலுள்ள சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெளிப்படையாக கருத்து கூறுவது விசாரணையின் திசையை மாற்றும் முயற்சியாகும். தொலைத்தொடர்புத்துறையின் செயலர் ஆர். சந்திரசேகர் பொதுக் கணக்குக் குழுவின் முன்பாக ஆஜரானபோது, வருவாய் இழப்பு குறித்த சிஏஜி தகவல் தவறானது என்று கூறவில்லை. எனவே, கபில் சிபலின் கருத்துதான் தவறானது.அவருக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பொது கணக்கு குழு முன் ஆஜாராகி தனது கருத்தை தெரிவிக்கலாம்” என்றார் அவர்.

கபில் சிபல் கருத்தை ஏற்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதிகளும் அறிவித்துள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜன. 10 ல் வந்தபோது, பொதுநல வழக்கு மையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கபில் சிபல் கருத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால், நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.எஸ். கங்குலி ஆகியோர் கபில் சிபல் கருத்தை நிராகரித்துவிட்டனர். ‘உண்மையான இழப்பு என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினர்.

நாடு முழுவதும் கபில் சிபல் கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், காங்கிரஸ் தனது வாலைச் சுருட்டிக்கொண்டு, அடக்கமாக காட்சி தருகிறது. இவ்வளவு அவசரமாக கபில் சிபல் கருத்து தெரிவித்தது ராசாவைக் காப்பாற்ற மட்டுமல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர் யாரைக் காக்க முற்படுகிறார்? ராசா மூலமாக ரூ. 30 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காங்கிரஸ் தலைவி சோனியாவையா? இனிமேலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி புளுகிக் கொண்டிருப்பதை நம்ப, நாட்டு மக்கள் தயாரில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் வேண்டுமானால் அக்கட்சியுடன் சேர்ந்து தமது பங்கிற்கு புளுகட்டும்.

அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

ஆனால் ஒன்று. உண்மைக்கு யாரும் காப்பாளர் தேவையில்லை. உண்மைக்கு தன்னைத் தானே காத்துக் கொள்ளும் திறன் உள்ளது. பொய் மட்டுமே, தன்னைக் காக்க மேலும் மேலும் பொய்களை உற்பத்தி செய்யும். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் நாடகங்கள் இதனையே உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இறுதியில் சத்தியமே வெல்லும். இது நமது அரசின் முத்திரை வாக்கியம். இதை நமது மௌன சாமியார் பிரதமர் மறந்துவிடக் கூடாது.

www.tamilhindu.com

சபரிமலை விபத்து - தேவை விவேகம்


இடுக்கி/திருவனந்தபுரம்,ஜன.14: சபரிமலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 104 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்,50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த விபத்தில் சிக்கினர். விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.



இடுக்கி மாவட்டத்தில்:
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது. வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யாத்ரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டதாம். அதை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாம். ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.

ஆம்புலன்ஸ்கள் போக முடியவில்லை: மிகவும் குறுகலான பாதை என்பதால் ஆம்புலன்ஸ்களோ வேன்களோ செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 70 சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. செல்போன்களும் ஓலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வண்டிப்பெரியாறு போலீஸார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும், பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது. நெரிசலில் இறந்ததாக ஒரு வட்டாரமும், வாகனம் ஏறியதால் நசுங்கி இறந்ததாக மற்றொரு வட்டாரமும் தெரிவிக்கிறது.

சோகம் கப்பியது:
பொங்கல் விழாவில் பங்கேற்க வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள்தான் பெரும்பாலும் இறந்தனர் என்று தெரிகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் இந்த விபத்து குறித்த செய்தி பரவியதும் சோகம் கப்பியது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். உடன் மாநில அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். கேரள அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. பலியான 102 பேரில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் உதவி அனுப்ப உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவிப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியும் வழங்கப் படும் என்று அறிவித்தார்.

www.dinamani.com

Monday, January 17, 2011

கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

ஜனவரி 14, 15, 16 மற்றும் 17, 2010 தமிழர்களை ஆட்டும் விதம்:

இந்த தடவை, இத்தேதிகள் தமிழர்களை ஆட்டியது, வாட்டியது எனலாம். பொங்கல் தமிழர்களுக்கு கசப்பாகவே இருந்தது, ஏனெனில் விலைவாசி! நேற்று “M” போட்டு, பஸ் கட்டணத்தை வேறு ஏற்றிவிட்டார்கள்! போதாகுறைக்கு எல்லாமே “சொகுசு” வண்டிகள்தாம்! மக்கள் நிறையவே சாபம் இட்டுள்ளார்கள்! சோவின் மீட்டிங் வேறு! அசிங்கங்கள் அதிகமாகவே உள்ளன.

ஜனவரி 14 (வியாழன்) – தை அமாவாசை – பொங்கல் – கருணாநிதியின் தமிழ் புத்தாண்டு! சோ மீட்டிங்!

ஜனவரி 15 (வெள்ளி) – திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் – திருவள்ளுவர் ஆண்டு 2040 – சூரிய கிரகணம்!

ஜனவரி 16 (சனி) – உழவர் திருநாள்

ஜனவரி 17 (ஞாயிறு) – எம்ஜியார் பிறந்த நாள்

இப்படி நாளுக்கு நாள் பிறந்தநாள் தமிழ்நாட்டில்!

கருணாநிதியும் ஜெயலலிதாவும்:

இரு தமிழக அரசியல் தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்வதில் தமிழக மக்களுக்கும், குடிமக்களுக்கும் எந்தவிதத்திலும் நன்மையோ, லாபமோ இல்லை. அரிசி, பருப்பு விலை குறையப்போவதில்லை. காய்கறி, பால் விலை குறையப்போவதில்லை. இருவருமே குழாயடி சண்டைப்போட்டுக் கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை! ஆனால், ஜெயலலிதா சாக்கு வைத்துக் கொண்டு கருணாநிதி மற்றும் திமுகவினரைச் சேர்ந்தவர்கள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவது, அவமதிப்பது, ஜாதி துவேஷத்தை வளர்ப்பது, தூண்டிவிடுவது முதலிய காரியங்கள் ஏன் செய்யப்படுகின்றன என்பதை அந்த பொறுப்புள்ள வயதான மனிதர்[1] விளக்கியே ஆகவேண்டும். மற்றவர்களும் சிந்திக்கவேண்டும்.

ஊழலில் இருவருமே தலைசிறந்தவர்கள்:

ஊழலில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை, ஏனெனில் பாழாகிப் போவது தமிழ்நாட்டு மக்கள்தான். கோடிகளில் கொழுக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன பயனும் இல்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகள் (ஸ்பெக்ட்ரம்) சம்பாதித்தார்களே, அதனால் தமிழ்நாட்டிற்கு, இந்தியாவிற்கு என்ன லாபம்? இதில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் ஜாதிகள் ஒன்றும் செய்வதில்லை. பிராமணன், சூத்திரன் பார்த்து விலைகள் குறைவதில்லை. எப்பொழுதுமே பிரச்சினைகளில் சாவது எல்லோரும்தான் – எல்லா தமிழ்நாட்டு மாநில மக்கள்தாம். ஆகவே, கேள்விகள்-பதில்கள்[2] என்று வரும்போது ஏன் அத்தகைய நாகரிகம் இல்லாத, பிராமணர்களுக்கு எதிரான வார்த்தைகள், வசைவுகள், தூஷணங்கள் வரவேண்டும்?

தினமலர், தினமணி தாக்கப்படுவது:

ஊடகங்கள், குறிப்பாக இணைத்தளங்கள் மூலமாக திமுக-திக, எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள் தேவையில்லாமல் பிராமண துவேஷம் பாரட்டுகின்றனர். ஏதோ இந்த இரண்டு பத்திரிக்கைகள்தாம் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டு, இந்திய, ஏன் உலக அரசியல், பொருளாதாரம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது, இவைகள்தாம் மிகவும் பலமுள்ள பத்திரிக்கைகள் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. சமீபத்தை நிகழ்ச்சிகள் இதைக் காட்டுகின்றன. வைத்தியநாத ஐயரும், கிருஷ்ணமூர்த்தி ஐயரும் பயந்து விட்டார்கள் என்றே தெரிறது. நன்றாக மிரட்டிவிட்டார்கள் போலும், இருவரும் (இரண்டு பத்திரிக்கைகளும்) வரிந்து கட்டிக்கொண்டு கருவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்[3]. ஒருவேளை ஐராவதம் மஹாதேவன்[4] “வைத்து”க்கு சொல்லியிருக்கலாம். கிருஷ்ணமூர்த்திக்கு, முன்பு தனது மகன் மாட்டிக் கொண்டது நினைவு படுத்தி இருக்கலாம். போதாகுறைக்கு “புவனேஸ்வரி” பிரச்சினை வேறு! எது எப்படியாகிலும், மறுபடியும் கருணாநிதியால் பிராமண துவேஷம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.

“இந்துராம்” – “மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு” இழிவுபடுத்தப்படுவது:

பிராமணர்களுக்கே “ஹிந்து”வைப் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆப்படியிருக்கும்போது, அடிக்கொரு தடவை, பார்ப்பன இந்துராம் என்று துவேஷிப்பது ஜாதி அடிப்படையில்தான் உள்ளதே தவிர, சித்தாந்த ரீதியில் கூட இல்லை. அதாவது, ராம் ஒரு மார்க்ஸீயவாதி, கம்யூனிஸ்டுக்களின் நண்பன்………………..என்பதெல்லாம் தெரிந்த விஷயமே. இப்பொழுதைய சந்துரு, நீதிபதி சந்துரு, எப்படி நீதிபதியானார் என்றால், ராம்-கருணாநிதி பந்தம் ஒருபுறம், ராம்-சந்துரு காம்ரேட்-இணைப்பு மறுபுறம்! ராமும்-கருணாநிதியும் திருமண உறவினால் சம்பந்திகள் முறை வேறு! ஆகவே, ராமைத் திட்டுகிறோம் என்று, பிராமணர்களைத் திட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? உதாரணத்திற்கு சிதம்பரத்தை விமர்சிக்கும்போது, “செட்டியார்” என்று சொல்லி விமர்சிப்பது இல்லையே? இதே மாதிரி மற்றவர்களை முதலியார், பிள்ளை, ரெட்டி என்றெல்லாம் சாதிப்பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லையே? பிறகென்ன “பார்ப்பன ராம்”, “இந்து-ராம்” என்ற கூச்சல்கள்? புலிகள் ஆதரவாளர்கள் வேறு இதில் சேர்ந்து கொள்கிறர்கள் [வால் போஸ்டர்கள் ஒட்டுவது, மீட்டிங் போடுவது..........].

ராமும், கருணாநிதியும் உறவினர்கள்தாம் (பிராமண-சூத்திர பந்தம்):

திமுக ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கம் மூலம் “தி ஹிந்துவை” ஆட்டிப் படைத்துள்ளது. “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” என்று கருணாநிதி சொல்லி மிரட்டுவது, ராமஜெயத்திற்கு மட்டுமல்ல, 40-50 வருடங்களாக இந்து பத்திரிக்கையில் வேலை செய்த / செய்யும் கிழங்களுக்கும் நன்றாகவேத் தெரியும். பல நேரங்களில் ஜெயலலிதாவிற்கு எதிராக செய்திகள் வெளியிடுவது, முதலிய காரியங்களைச் செய்துள்ளது. ராமின் மச்சினி தயாநிதி மாறனின் மனைவி. பிரியா என்ற ஐய்யங்கார் ரங்கராஜனின் மகள்[5]. அதாவது பிராமணப் பெண் சூத்திரனின் மனைவி! இதே கதைதான், தம்பி கலாநிதி விஷயத்திலும்[6], ஏனெனில் அவரது மனைவி – காவேரியும் ஒரு பார்ப்பனச்சிதான்! முரசொலி மாறனின் பிராமண சம்பந்தம் அலாதியானது. அதை அவர்கள் பிள்ளைகளும் பின்பற்றுவது நன்றாகவே தெரிகின்றது. கனிமொழி விவாகரத்தாகி, சோகமாக, மனம் உடைந்திருந்த வேலையில், கொஞ்சம் மனம் “ரிலாக்ஸாக” இருக்க, இந்து பத்திரிக்கை அலவலகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அத்தகைய பிராமண-சூத்திர பந்தம் பிணைந்திருக்கும் போது, ஏன் கரு துவேஷம் கொண்டு இந்த வயதில் அலைகிறார்?

“சோ”வை அவதூறு பேசுவது:

சோ அரசியல் ரீதியில் திராவிடக் கழகங்களின் முரண்பாடுகளை, பிறழ்ச்சிகளை, பித்தலாட்டங்களை, மாய்மாலங்களை எடுத்துக் காட்டுகின்றார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரை வசை பாடுகின்றனர். அறிவுபூர்வமாக அவர் எழுதுவதை அறிவுபூர்வமாக ஆதாரங்களுடன் மறுப்பதைவிடுத்து “பார்ப்பன்”, ஐயர், அவாள், இவாள் என்று பாட்டை ஆரம்பித்து விடுகின்றனர். நேரிடையாக மோதாமல், திக-திமுக-மற்ற உதிரிகளைத் தூண்டிவிட்டு கலாட்டா செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள், சகிக்காதவர்கள், இவ்வாறு எம்ஜியார் சொன்னார் என்று பிராமணர்களை ஏன் திட்டவேண்டும்?

இன்று எம்ஜியாரைக் குறிப்பிட்டு ஜெயலலிதாவை தூஷிக்கும் கருணாநிதி எம்ஜியாரின் விரோதிதானே?

குறிப்பாக, எம்ஜியார் பிறந்ததினம் (17-01-2010) என்பதை மனத்தில் வத்துக் கொண்டு, இவ்வளவு துவேஷத்தைத் தூண்டி விடுகிறாரே, இவரென்ன எம்ஜியாரின் நலவிரும்பியா, அரசியல் நண்பரா, கூட்டுப்பங்குதாரரா இல்லையே? கூத்தாடி, ………………………..மளையாளி என்றெல்லாம் தூஷித்தது ஞாபகத்தில் உள்ளதே………………………பிறகென்ன, எம்ஜியார் பெயர் சொல்லி ஜெயலலிதாவை திட்டுவது? எம்ஜியார் ஜெயலலிதாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டுள்ளது உண்மையென்றால், அதே விமர்சனம் கருணாநிதிக்கும் பொருந்துமே? அதுமட்டுமா, கருணநிதியைப் பற்றியே அவரது அரசியல் நண்பர்கள், விமர்சகர்கள், விரோதிகள் பல நேரங்களில், பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் எல்லொருக்கும் தெரியுமே. அவர் சொன்னார்-இவர் சொன்னார் என்று யாரும் அவ்வாறு தூஷண வேலைகளில் ஈடுபடவில்லையே?

கருணாநிதியின் லீலைகள் தமிழக மக்களுக்குத் தெரியாதா?

திருக்குவலை கருணாநிதியைப் பற்றி தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். மனிதர் வயதாகி விட்டார், சொன்னால் நன்றாகயிருக்காது, என்பதால் கண்ணியத்தோடு நிறைய கிழங்கள் அமைதி காக்கின்றன. அவர்கள் எல்லாம் உண்மை சொல்ல ஆரம்பித்தால் நாறிவிடுமே? முன்பு எப்படி போட்டிப்போட்டர்கள், “வால் போஸ்டர்கள்” ஒட்டினார்கள் என்ற உண்மைகளை வெளியிட்டால், தண்டவாளம், வண்டவாளம் ஆகிவிடுமே? நடுராத்திரி, தொடர்ந்து அடுத்தநாள் காலை இரண்டு மணிவரை பேசிய பேச்சுகளை நினைவு படித்தினால்…………….., தமிழகப் பெண்கள் கூசி, கூனி …………….குனிவார்களே? அவர்கள்தாம் இப்பொழுது சட்டசபையில் பேசுகிறார்கள், இல்லை, சொன்னதாகப் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் பொன்னேடுகளில்[7] வைரத்தால் பொதித்து வைக்கலாமா?

எல்லோருக்கும், எல்லாமே தெரியும், ஆதலால் அவதூறு பேசவேண்டும் என்ற போக்குத் தேவையில்லை:

இருமனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டால், கண்ணியமாக, நாகரிகமாக அவ்வாறு முடியும் என்றால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்யட்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் சகதியை அள்ளிவீசுவோம் என்றாலும் தனியாக செய்து கொள்ளட்டும், ஆனால் ஊடகங்கள் வழியில் பாரபட்சமான முறையில் செய்யவேண்டாம். இன்றைய இளைஞர்கள் பார்த்து-படித்து-கேட்டுக் கொண்டிருக்கிறர்கள், நிச்சயமாக அவர்கள் உண்மை என்ன என்று அலச ஆரம்பித்து விடுவார்கள், உண்மை என்ன என்று ஆராய்ச்சி செய்து எடுத்து விடுவார்கள். அப்பொழுது, நிச்சயமாக நன்றாகயிருக்காது.

சாவியும், சேகரும்:

முன்பு சாவி – எஸ். விஸ்வநாதன் (பத்திரிக்கையாளர், தயாரிப்பாளர்) என்னசெய்து கொண்டிருந்தாரோ, அந்த வேலையைத்தான் எஸ். வி. சேகர் செய்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறது. உண்மையென்னவென்றால் கருணாநிதியின் பிராமண துவேஷம் சொல்லமாளாது, அது எல்லாவறையும் விட மிகப்பெரிய வெறி. என்னத்தான் படித்தவர்களாக இருக்கட்டும், வெளியே சிரித்தாலும், இரு பொருள் தொணிக்க பேசினாலும், மனத்தில் மட்டும் கருவிக் கொண்டே இருப்பார். இது தஞ்சாவூர்காரர்களுக்குத் தான் தெரியும். மூப்பனாருக்கு நன்றகவே தெரியும்! சமீபத்தில் ஒரு தஞ்சாவூர் பிராமணருக்கு பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்தபோது கூட அத்தகைய பேச்சு வந்தது. “பாப்பான் பேரில இருக்கிறத பாப்பனுக்கேக் கொடுத்தால் போயிற்று”, என்று கடைசியாக முடிவு எடுத்தாற்போல இருக்கிறது[8]. சாவியிடம் கருணாநிதி, “ஒரு நல்ல பிராமண பெண்ணை பாருங்கள், பார்த்து முடித்துவிடுவோம்”, என்றபோது, சாவி அவ்வாறேப் பார்த்துக் கொடுத்தார்[9]. இப்படி செய்யும் கருணாநிதி, வேறு நேரத்தில் கேவலப்படுத்துவது ஏன்?

கருணாநிதி நல்ல பேச்சாளர் என்று நன்றாகவே தெரியும்:

மத்திய அரசு தணிக்கை அறிக்கைகள், கருணாநிதி, நிதியை கருணையுடன், வேறு செலவினங்களுக்குத் திருப்பிவிட்டாரா அல்லது முதன்மந்திரியாக, பொறுப்பாக செலவிட்டாரா, கணக்கிட்டாரா என்பதெல்லாம் தாராளமாக செய்யலாம். எதிர்கட்சித் தலைவர் / தலைவி கெட்டால், தகுந்தமுறையில் பதில் சொல்லிவிட்டுபோகலாம். அதைவிடுத்து, கேலிபேசுவது, கிண்டலடிப்பது, அவதூறு பேசுவது……………………என்ற முறையில்தான் பதில் வரவேண்டிய தேவையில்லை. சட்டசபையில், நாகரிகமாக பேசமுடியவில்லை என்றல் அது, அங்குள்ளவர்களுக்கு மட்டும் அவமானம், அசிங்கம் இல்லை, அவர்களை அங்கு உட்காரவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கே கேவலம். இங்கு திமுக-அதிமுகவோ, பிராணன்-சூத்திரன் என்றோ யாரும் பார்க்கப் போவதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளை, ஏற்படுத்திக் கொடுக்கிறர்கள். அதில் அவர் தாராளமாகவே பேசிவருகிறார். அங்கும் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்ளும் / கொல்லும் வாலி, கமலஹாசன் முதலியோர்கள் உள்ளார்கள். அவர் அவ்வாறாகவே பேசி-மகிழ்ந்து-திளைக்கட்டும். ஆனால், இந்த ரீதியில் இறங்கவேண்டாம்!

நாங்கள் பார்ப்பனீயத்திற்கு எதிரி, ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரியல்ல!:

கருணாநிதி, இதுபோன்ற புருடாக்களை / பொய்களை அடிக்கடி அள்ளிவீசுவது உண்டு. “ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கும்” ரீதியில் இப்படி பேசும் பேச்சுகளுக்கு அர்ததமே இல்லை. சரித்திர ஆதாரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவெறி சித்தாந்தம் பேசிக் கொண்டு, ஆட்சி செய்யும் கட்சியாளர்கள் உலகத்திலேயே இந்தியாவில்தான் உள்ளார்கள் என்பது உண்மை. உலகத்திலேயே இனவெறி கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, தினமும் அத்தகைய இனவெறி பிடித்து பேசியலையும் கூட்டம் இங்குதான் உள்ளது. பிராமணர்கள் “ஆரியர்கள்”, நாங்கள் “திராவிடர்கள்” என்று பேசிக் கொண்டு துவேஷம் பேசும் கூட்டம் இங்குதான் உள்ளது. இத்தகைய வெறியாளர்களை யாரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரிம்தான்! அதனால்தான் “பேராசிரியர்” என்று சொல்லியலையும் அன்பழகன் பொன்றோரும், இன்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பேசியலைகின்றனர்!

பிராமணர்களுக்கு எச்சரிக்கை:

இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது. ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம். அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம். ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?

© வேதபிரகாஷ்


முதல்வருக்கு மீண்டும் எப்போது பாராட்டு விழா?

ரஜினி, அஜீத் ஆவேசப்பட்டது ஏன்?

திட்டமிட்டது ஒன்றாகவும் நடந்தது ஒன்றாகவுமாக மாறியிருக்கிறது முதல்வருக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சி.

முதல்வரை ஒரு அரசராக அமர வைத்து, அவரது தர்பாரில் துதி பாடிகளாக நடிகர் – நடிகைகள் நின்று, நடித்து, நடனமாடி, பாட்டுப்பாடி மகிழ்வித்து புதிய கோரிக்கைகளையும் சலுகைகளையும் முன்வைத்து கேட்டுப் பெறலாம் என்ற ஆசையோடு இருந்தவர்களுக்கு நேற்றைய நிகழ்வுகள் பெரும் எரிச்சலாக மாறியுள்ளன.

இந்த நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் அஜீத்தாக இருந்தாலும், அதனைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டவர்கள் விழாக் குழுவினரும் இன்றைய ஆட்சியாளர்களும்தான் என்கிறார்கள் திரையுலகினர்.

பொதுவாக தனிப்பட்ட விழாக்களாக இருந்தால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளுக்கு பணம் தரப்படுவதுண்டு. ஆனால் முக்கிய விருந்தினர்களாக வரும் ரஜினி, அஜீத், விஜய் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. இவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து போவதோடு சரி. அதனால் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியா, நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படுகிறதா என்று பார்ப்பதோடு சரி.

நடிகைகள் அனைவருக்குமே கணிசமாக பணம் தந்தாக வேண்டும். முன்னணி கவர்ச்சி நடிகைக்கு ரூ 7 லட்சம் வரை தரவேண்டும், ஒரு நிகழ்ச்சிக்கு வர. சும்மா தலைகாட்டிவிட்டுப் போக வேண்டும் என்றால்கூட லட்சத்தில்தான் சம்பளம் (சில நடிகைகளின் சம்பள விவரம் தெரியும் என்றாலும், அவற்றை வெளியிடுவது நேர்மையல்ல. காரணம் என்னை நம்பி அந்த விவரங்களைச் சொல்கிறார்கள்…)

ஆனால் முதல்வரைப் பாராட்டுகிற விழாவாக இருந்தால் அதில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் செய்யும் கலைஞர்களுக்கு நயா பைசா கிடையாது. நல்ல விருந்தோம்பல் கூட இல்லையாம். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு கட்டாயம் அனைத்துக் கலைஞர்கள் வந்தாக வேண்டும் என்று கூறுவதோடு நில்லாமல், மேலிடத்தில் இருப்பவர்களை வைத்து பிரஷர் கொடுப்பதும் நடக்கிறது. முதல்வர் அலுவலக அதிகாரிகளையும் கூட இதில் பயன்படுத்துகிறார்கள் (இது முதல்வருக்கு தெரிந்தே நடக்கிறதா என்று நமக்குத் தெரியாது!).

‘முதல்வரின் செயலாளர்கிட்டேயிருந்து பெரிய பிரஷர்ப்பா… நீ மட்டும் வரலேன்னா அப்புறம் விளைவுகளுக்கு நாங்க பொறுப்பேத்துக்க முடியாது’ என தயாரிப்பாளர்கள் சங்க, நடிகர்கள் சங்க, பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தரப்பிலிருந்து ஒவ்வொரு நிகழ்வுக்குமே சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நிகழ்ச்சி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே பிரஸ் மீட் வைப்பது, தங்களுக்கு வேண்டப்பட்ட நிருபரை விட்டு ரஜினி, கமலெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வருவாங்களா என்று கேட்க வைப்பது. உடனே சில சொத்தை ஆசாமிகள், ‘அவர்கள் வரலேன்னா அவ்வளவுதான்’ என்று வாய்சவடால் அடிப்பது… அந்த பப்ளிசிட்டியில் குளிர்காய்ந்து நினைப்பதைச் சாதிப்பது என்ற மலிவான டெக்னிக்கைத்தான் இன்றுவரை பயன்படுத்தி வருகிறார்கள், இந்த பஞ்சாயத்துப் பார்ட்டிகள்.

இதிலெல்லாம் முதல்வருக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்வி எழலாம். உண்மையில், நிகழ்ச்சி நிரல் தயாராவதே அவர் முன்னிலையில்தான என்கிறார்கள் முதல்வரின் ‘உள்வட்டத்தில்’ இருப்போர். இன்னார் இங்கே அமரவேண்டும், இந்த வரிசைப்படி பேச வேண்டும் என்ற ‘புரோட்டாக்கால்’ எல்லாம் அவரது அறிவுக்கெட்டியே நடக்கிறது.

குறிப்பாக நடிகைகள் விஷயத்தில் விழாக் குழுவினர் செய்யும் கெடுபிடிகள் கொஞ்சமல்ல. ஆடுவதே ஓசி டான்ஸ். இதில் இப்படி வறுத்தெடுத்தால் எப்படி என்ற சலிப்பு இல்லாமல் முதல்வருக்கு நடக்கும் விழாக்களுக்கு வரும் நடிகைகள் அநேகமாக யாரும் இல்லை என்பதே உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர்கள் லட்சங்களில் கொட்டித் தருகிறார்கள். டிவியில் ஒளிபரப்ப கணிசமாக பணம் தருகிறார்கள். ஆனால் அப்படி திரட்டப்பட்டும் பெரும் பணம் என்ன ஆகிறது என்ற குமுறல் அனைவர் மனதிலுமே உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், திரையுலக அமைப்பினர் இதற்கான விளக்கத்தையோ, வரவு செலவு கணக்கையோ ஒரு போதும் காட்டுவதில்லை.

‘நம்ம வேலை நடிப்பது. நாம செய்யறதும் ஒரு வேலைதான். விருப்பம், நேரம் இருந்தா வர்றேன். இல்லன்னா வற்புறுத்தாதீங்க’ என்பதுதான் அஜீத் வழக்கமாக சொல்லும் பதில்.

ஆனால் முதல்வருக்காக நடக்கும் விழாக்களில் அந்த வார்த்தைகளை அமுக்கிவிடுகின்றன, விழாக் குழுவினரின் பயமுறுத்தல்கள். அதன் விளைவுதான் நேற்றைய விழாவில் அஜீத் குமுறியது.

கிட்டத்தட்ட இதே மனநிலையில் இருப்பவர்தான் ரஜினி. அவரை வற்புறுத்திக் கூப்பிட்டால் வர விருப்பப்பட மாட்டார். அவருக்கே வரத் தோன்றினால் வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து உடனிருப்பவர்களையெல்லாம் சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

காரணம் யாரிடமிருந்தும் அவர் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை… தனக்கு தோன்றும் நேரத்தில் விருப்பப்பட்ட விதத்தில் மக்களுக்கு நன்மைகளைச் செய்வது அவர் பாணி. முன்பே சொன்னது போல ஒரு நிகழ்ச்சியின் நோக்கம், அதை நடத்துபவர்களின் நேர்மை இரண்டையும்தான் அவர் முக்கியமாகப் பார்ப்பார். எனவே அஜீத் தன் மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படுத்தியதற்கு எழுந்து நின்று கைதட்டி அவர் பாராட்டியதில் ஆச்சர்யமில்லை!

எவனுக்கும் பயப்பட மாட்டேன்… ஏன்?

முன்பு நடிகர் சங்கத்தின் நாடக விழாவில் ரஜினி நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றார்கள். அவர் பார்க்கலாம் என்றார். ஆனால் நடிக்கவில்லை. ஆனால் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு வந்து முழுக்க முழுக்க சக நடிகர்களோடு இருந்து சிறப்பித்துக் கொடுத்தார்.

அங்கும் அவர் ஒரு விஷயம் சொன்னார்: ‘ஸீ.. நிகழ்ச்சி நடத்தி வருமானம் பார்க்கறது உங்க விருப்பம். அதில் கலந்துகிட்டுத்தான் ஆகணும்னு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தானா விருப்பப்பட்டு செய்யறது அது!’ என்றார். ரஜினியின் அந்த மனநிலையையே இந்த மேடையில் பிரதிபலித்திருக்கிறார் அஜீத்.

ரஜினி இந்த நிகழ்ச்சியில் கொதித்ததற்கு முக்கிய காரணம், அரசு ஒதுக்கிய நிலத்தை பங்குபோடுவதில், ஒதுக்குவதில் திரையுலக அமைப்புகளின் நிர்வாகிகள் காட்டிவரும் சுய நலம் மற்றும் இப்போதே அதற்கு சிபாரிசு பிடிப்பதில் மும்முரம் காட்டும் சில பெரிய நடிகர்கள்தான்.

இந்த நிலம் ஒதுக்குவது குடும்பத்துக்கு ஒன்று என்ற அளவில் இல்லாமல், ஃபெப்ஸி மற்றும் திரையுலக சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்குமே என்ற நிலை உள்ளது.

இன்றைக்கு பெரும்பாலான திரைக் கலைஞர்களின் குடும்பங்கள் முழுக்க முழுக்க திரைத் தொழிலில்தான் ஈடுபட்டுள்ளன. வாரிசுகள் அனைவருமே அதே துறையில்தான் உள்ளனர். குடும்பத்தின் தலைவன் நடிகர், அவரது வாரிசுகள் அனைவரும் நடிகர் அல்லது தொழில் நுட்பக் கலைஞர்கள் என்ற நிலைதான் உள்ளது. இவர்கள் அனைவருமே இப்போது வீடு பெறுவதில் மும்முரம் காட்டுகிறார்கள். ஒரு குடும்பத்துக்கு குறைந்தது நான்கைந்து வீடுகள் என்ற நிலை.

உதாரணத்துக்கு விஜயகுமார் குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்… அவர்கள் வீட்டுக்கே 10 வீடுகள் தரவேண்டி வரும். இவர்கள் யாரும் ஏழைகள் அல்ல.. ஒரு நாளைக்கு 300 ரூபாய் பெறும் துணை நடிகர்களும் அல்ல.

சிவகுமார் வீட்டுக்கு 4 வீடுகள் தரவேண்டி வரும். இவர்கள் யாரும் அடிமட்டக் கலைஞர்கள் அல்ல. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர் விஜய் என இந்தப்பட்டியல் பெரியது. இவர்கள் அனைவருமே நன்கு வசதி படைத்தவர்கள்தான். இவர்களுக்கு எதற்கு பையனூரில் வீடு? அப்படியே வேண்டுமென்றாலும் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாமே… இவர்களைப் போன்ற வசதிபடைத்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், ஓசியில் கிடைக்கிறதே என்பதற்காக இந்த வீடுகளுக்காக கை நீட்டிவிடக் கூடாது என்பதே ரஜினியின் அந்த ஆவேசப் பேச்சுக்குக் காரணம். தனக்கு வேண்டப்பட்ட சக கலைஞர்களே கூட இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் ரஜினி, ‘யார் மனதையும் புண்படுத்த இப்படிச் சொல்லவில்லை’ என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

இந்த வீடுகள் மற்றும் வசதிகள், திரையுலகில் பல ஆண்டுகளாகக் கஷ்ட ஜீவனத்தில் தவிக்கும் துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், லைட் மேன்கள் போன்ற அடித்தட்டு வர்க்கத்தினருக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே ரஜினியின் இந்தப் பேச்சின் அடிநாதம். இதற்காக இந்தக் கலைஞர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

ஏன் இந்த நிலை வருகிறது… திரும்ப திரும்ப திரைக் கலைஞர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைப்பது, அதற்கு அவர் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வைப்பதால்தானே… இது மக்களுக்கும் கடும் எரிச்சலை மூட்டுகிறது. இது புரிந்ததால்தான், ‘எதுக்கெடுத்தாலும் முதல்வரைப் போய் தொந்தரவு செய்யாமல், முடிந்தவரை நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளலாம்’ என்றார் ரஜினி நாசூக்காய்.

ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாகத் திருந்திவிடும் திரையுலகம் என்றும் சொல்வதற்கில்லை!

-வினோ

என்வழி

http://www.envazhi.com/?p=15955

Sunday, January 16, 2011

இந்தியாவில் கிருத்துவம்

குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள் (1)!

vedaprakash எழுதியது

குழந்தைகள் காப்பகம் - கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

“தத்தெடுப்பு” என்ற போர்வையில் கிருத்துவர்களின் அடாத குற்றங்கள்: சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[1]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[2]. சேரிகளில், குடிசைகளில் வாழும் ஏழை மக்களின் குழந்தைகளை குறிவைத்துக் கொண்டு இவர்கள் முதலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் “உங்களைப் போன்ற குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் உங்களுடன் நண்பர்களாக இருக்க விரும்புவதாகவும்”, கூறு ஆசைகாட்டி வருவர். பரிசுகளைக் கொடுத்து அவர்களை மயக்குவர். படிப்பில்லாத அவர்களிடம், அவர்களுக்குத் தெரியாமல், தத்தெடுப்பு ஆவணங்களில் கையெழுத்து வாங்கி ஏமாற்றும் முறையும் கையாளப் படுகிறது. சிலர் கையெழுத்து போடு எனும்போது உஷாராகி அந்த ஆவணங்களை மற்றவர்களிடம் (தமக்கு வேண்டியவர்களிடம்) காண்பிக்கும்போது உண்மை வெளிப்படுகிறது. அந்நிலையில், அவர்கள் தாங்கள் தத்தெடுப்பது அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்குத் தான், அவ்வாறு செய்தால் அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோபிய, அமெரிக்க நாடுகளில் மற்ற குழந்தைகளைப் போல சந்தோஷமாக இருப்பர் என்று பல புகைப்படங்களையும் காட்டுவர்.

மேரி ரோஸான மாரியாத்தாளும், ஜேம்ஸாகிய மணிகண்டனும்:

பாருங்கள் முனுசாமியின் மகன் மணிகண்டன் இப்பொழுது ஜேம்ஸ் என்ற பெயரில் இவ்வாறு உள்ளான்”, என்று கோட்டு-சூட்டு போட்டிருக்கும் மணிகண்டனைக் காட்டுவர்! “பாருங்கள் கருப்பசாமியின் மகள் மாரியாத்தா இப்பொழுது மேரி ரோஸ் என்ற பெயரில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்”, என்று மாரியாத்தாளைக் காட்டுவர்! அந்நிலையில் எமாறுகிறவர்கள்தாம் அதிகம். சில ஆயிரங்களைக் கொடுத்து மயக்கி ஏமாற்றி கையெழுத்து வாங்கி அழைத்துச் செல்பவர்களும் உண்டு. இப்படி ஆயிரக்கணக்கான-லட்சக்கணக்கான குழந்தைகளை, சிறுவர், சிறுமியர்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்துள்ளனர். அனாதைகள் என்றால் சொல்லவே வேண்டாம், பணம் கொடுத்து வாங்கி விடுவர். ஆக இந்த தொழில் லட்சங்களை / கோடிகளை தரும் வியாபாரமாகவே ஆகிவிட்டது.

அரேபிய ஷேக்குகள் செய்வதை தத்தெடுப்பு என்ற பெயரில் கிருத்துவர்கள் செய்கின்றனர்: குறிப்பாக கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லங்கள் என்ற போர்வையில், ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான குழந்தைகளை திருடியும், திருடிய குழந்தைகளை வாங்கியும், கடத்தியும், இப்படி அடாத செயல்களை செய்து[3], குழந்தைகளை, சிறுவர்-சிறுமியர்களை பெற்று, வாங்கி, வளர்த்து அவர்களது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள உபயோகித்துக் கொள்கின்றனர்[4]. அரேபிய ஷேக்குகள் இந்த்யாவிற்கு வந்து, சிறுமியரை, பெண்களை திருமணம் செய்து கொண்டு வளைகுடா நாடுகளுக்குச் சென்றுவிடுவது வழக்காமாக இருந்து வருகிறது[5]. உண்மையில் பெற்றொர், ஒரு கனிசமான தொகையை வாங்கிக் கொண்டு திருமணம் என்ற போர்வையில் பெற்றோர், உறவினர் அல்லது ஏஜென்டுக்கள் அத்தகைய வியாபாரத்தைச் செய்து வருகின்றனர். இதற்கு முஸ்லீம்கள் அததகமாக வாழும் உ.பி, ஐதரபாத், மும்பை போன்ற இடங்களில் அத்தகைய “நிக்காஹ்க்கள்” நடைபெறும். ஆனால், வேலை வாங்கித் தருகிறோம் என்று ஆயிரக் கணக்கான பெண்கள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதில் பலரது நிலை தெரியாமலேயே உள்ளது. பொதுவாக அறியப்படும் புகார்கள், வழக்குகள், தப்பி வந்த பெண்கள் முதலியோர்களிடமிருந்து தெரியப்படுவதாவது, அப்பெண்கள் பகலில் வீட்டு வேலைக்காரியாகவும், இரவில் ஆசைநாயகியாகவும் இருப்பது தான் வேலையாக இருக்கிறது[6].

ஆஸ்திரேலியர் காமக் கொடூரர்கள்: ஆஸ்திரேலியாவும் இதில் சளைத்தது அல்ல[7]. பூரியில் ஆஸ்திரேலிய பாதிரிகள் குழந்தைகள் நிர்வாண கற்பழிப்பு, படமெடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[8]. விபச்சாரத்தைப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை, ஏனெனில், தினமும் மது அருந்துவது போல, பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்குக் குறிக்கோளாக இருக்கின்றது[9]. அதை ஆஸ்திரேலியாவில் சட்டப்படி அனுமதிக்கிறார்கள்[10]. அதுமட்டுமல்லாது அதற்கு சட்டரீதியாக உதவியும், ஆலோசனையும் கொடுக்கிறார்கள்[11]. இந்தியாவில் “சுற்றுலா செக்ஸ்” ரீதியில் செக்ஸ் கொண்டால் சட்டப்படிக் குற்றமாகும் போது, அவர்கள் அந்த சிறுமியர்களை வாங்கிக் கொண்டு / தத்தெடுத்துக் கொண்டு வைத்துக் கொண்டால், தமது நாட்டிலேயே எந்த பிரச்சினையும் இல்லாமல் அனுபவிக்கலாம் என்ற நிலையில் அவ்வாறே வாங்கிச் செல்கின்றனர். குழந்தைகளை வாங்கி விற்பதில் மலேசியன் சோஸியல் சர்வீஸஸ் என்ற நிறுவனம் இத்தகைய குற்ற்றங்களில் ஈடுபாட்டுள்ளது தெரியவந்துள்ளது[12]. இந்திய கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், மதக்குருக்கள் முதலியோரது செக்ஸ் பாலியல் மற்றும் நிர்வாண காமக்களியாட்டங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன[13]. ஒவ்வொரு மாதத்திலும்[14] தமிழகத்திலேயே இப்படி பல வழக்குகள் பதிவாகின்றன, செய்திகள் வருகின்றன, ஆனால், அவர்கள் தண்டிக்கப் படுகின்றனரா அல்லது தப்பித்து வெளியே வந்து மறுபடியும் அதே காரியங்களை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

முஸ்லீம்களை வெல்லும் ஐரோப்பிய காமுக மிருகங்கள்:

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அவர்களது புத்தி மாறவில்லை. அதாவது இடைக்காலத்தில் இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வந்தபோது, இதே மாதிரிதான் அவர்கள் இந்திய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொண்டு, இந்தோ-ஆங்கிலேயர் (Anglo-Indian) என்ற கலப்பு மக்களை உருவாக்கினர். அதாவது அவ்வாறு பிறந்த குழந்தைகளை அப்படி பெயரிட்டு வளர்த்து, ஒரு புதிய ஜாதியை உண்டாக்கினர்[15]. இது முகலாயர்களின் / முஸ்லீம்களின் ஹேரம் (Harem) என்பதைப் போன்றது. ஹேரம் என்றால் அந்தப்புரத்தைவிட மோசமானது. அதாவது நூற்றுக்கணக்கான பெண்கள் சுல்தானிற்கு நிர்வாணமாக நின்றுக் கொண்டு எல்லா சேவைகளையும் செய்து வருவர். சுல்தான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு ஒத்துழைத்து சுகடததைக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவர், அதாவது, பத்து ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ளச் செய்து துடி-துடிக்க இறக்கச் செய்து விடுவர். இது மற்ற பெண்களுக்கு முன்பாகவே அரங்கேறும், அதாவது பார்க்கும் பெண்களுக்கு அது ஒரு படிப்பினையாக அறிவுறுத்தப்படும். அப்பொழுது தமக்கு வேண்டிய சிறுமிகள், பெண்கள் என்று பலரை அடிமைகளாக வாங்குவர். அடிமை வியாபாரம் செய்பவர்கள் பல நாடுகளிலிருந்து சிறுமிகளை – பெண்களை கடத்திக் கொண்டு வருவர். அவர்களை குழந்தை காலத்திலிருந்தே வளர்த்து வருவர். ஏனெனில், அப்பொழுதுதான் அவர்கள் சொல்லியபடி, காம லீலைகளில் பங்கு கொள்வர்,வாங்கிய எஜமானனை முழுவதுமாகத் திருப்தி படுத்துவாள். அத்தகைய திறமைசாலியான அடிமைக்கு விலை அதிகம்.

http://christianityindia.wordpress.com/2010/10/14/christian-orphanages-phedophile-sex-rape-arrest-2/


மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?



உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.


உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும்
ஏற்பட்டது.

இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை
உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்
மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள்.

அங்கோலா 90%,
கிழக்கு தைமூர் 98%,
ஈக்டோரல் 94% ,
புருண்டி 78%,
மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%,
காங்கோ 62% ,
எத்தியோப்பியா 52%,
கபான் 79%,
லைபீரியா 68%,
நைஜீரியா 52%,
பிலிப்பைன்ஸ் 84%
தென் ஆப்பிரிக்கா 78% ,
உகாண்டா 70%
ஜையர் 90%.


இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய 4000 மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்களாக இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.

யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.

180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்
ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகி -க்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம் இருக்கும்.

சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.


1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

'மதமாற்றம் அது நடக்கும் இடங்களில் ஒரு ஆன்மிகத்தன்மையுடன் நடைபெறவில்லை. அவை வசதிகளுக்காக நடைபெறுகின்றன ' - காந்தியடிகள்


மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப் படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம் கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

யோசியுங்கள்...

இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதித்துப் பேசுகிறார்.


இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக. அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத் -தாண்டு காலத்துடன் இணைக்க முற்ப்படுகிறார்கள்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும் பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைக -ளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக் காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம் என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன் கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை..?

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும் வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில் நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின் வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் , பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள் தொகை பெருகினால் பரவாயில்லையாம்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

யோசியுங்கள்...

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார் என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும் அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழி -லாக நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.


இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும் அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

விபூதி குங்கும போன்ற மத அடையாளங்களை பூசிக்கொள்ள வெட்கப்படாதீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு இந்து தர்மம் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் முடிந்த வரை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்து மதப் பண்டிகைகளை ஆர்வத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடுங்கள்.

நமது கோவில்களை சீர்படுத்த நம்மால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள்.

ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.


இப்படி நம் சொந்த மதத்தை நாம் மதித்து பாதுகாக்க முற்ப்பட்டால் அடுத்த
தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தைக் கொண்டு போக முடியும். இல்லையேல் நம் கண்முன்னே நம் மண் நம்மிடமிருந்து பறிக்கப்படலாம்.

விழிப்புணர்வு தேவை.

யோசியுங்கள்.....

http://www.tamiltorrents.net/forums/general/tt-lounge/religion-politics/religion/49518-a.html