Sunday, December 26, 2010

மோகன் சி.லாசரஸ் - மோசடி கிறிஸ்துவ ஊழியர்


பொய்க்கு - பொய் சாட்சி

சகோ.மோகன் சி.லாசரஸ் (நாலுமாவடி) அவர்கள் அற்புத மனிதர் என்ற பெயரில் சகோ.D.G.S.தினகரன் அவர்களைப்பற்றி வெளியிட்ட VCD ஒன்றை நான் காண நேர்ந்தது.

சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் சகோ.தினகரனை இயேசுவுக்கு சமமாக்கி அவர் பாணியிலேயே சகோ.தினகரனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஆனால் இவர் தான் நடத்திய ஒரு கூட்டத்தில் HIVஎயிட்ஸ் வியாதியஸ்தனை தன் அருகில் இருக்கும் இயேசு மேடையிலிருந்து இறங்கிபோய் அவனை தொட்டு சுகமாக்கிவிட்டார் என்று ஜெபத்தில் ஒரு பெரிய பொய்யைக்கூறி, அந்த நபரையும் பெயர் சொல்லி மேடைக்கழைத்தார். அவனுக்கோ அந்த எயிட்ஸ்நோய் இப்போதும் சுகமாகாமல் அவன் அந்த வியாதியை சுமந்துக்கொண்டு, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறான். எயிட்ஸ் வியாதி இதுவரை சுகமாகியதாக உலக மெடிக்கல் ரிப்போர்ட்டில் இல்லை என்பதை பழைய ஜாமக்காரனில் ஆதாரத்துடன் எழுதினேன். இவர் மேடையில் கூறியது பொய்சாட்சி - இதைக்குறித்து இதுவரை சகோ.மோகன் சி.லாசரஸ்ஸிடம் பலர் எழுதியும் நேரிலும் கேள்வி கேட்டும் பதில் கூறவில்லை.

இப்போது உலகறிந்த ஒரு விஷயத்தை இவர் அந்த VCDயில் மூடிமறைத்து உலக மக்களை பொய் சொல்லி ஏமாற்றப்பார்க்கிறார். அந்த VCDயில் அவர் கூறிய முதல் பொய்.

சகோ.தினகரன் வியாதியில் சாகவில்லை என்றும் கர்த்தராக பார்த்து வியாதி மூலமாக சகோ.தினகரனை எடுத்துக்கொண்டார் என்பதாகும். அதே CDயில் சகோ.தினகரன் எத்தனைமுறை வியாதிபடுக்கையில் இருந்தார் என்றும், தான் அவரை மலர் ஆஸ்பத்திரியில் வியாதிபடுக்கையில் இருக்கும்போதுபோய் பார்த்து வந்ததையும் அப்போது அவர் பேச பெலனின்றி படுக்கையில் கிடந்ததாக அவர் குறிப்பிட்டுவிட்டு, மரிக்கும்முன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இரும்பமுடியாமல் தவிப்பதை அதேVCD படத்தில் சகோ.தினகரனைக்காட்டி, அந்த சூழ்நிலையில் தான் சென்று ஜெபித்து வந்த விவரத்தையும் அந்த விசிடியில் கூறி அறிவித்தார். இவ்வளவையும் கூறிவிட்டு சகோ.தினகரன் வியாதியில் சாகவில்லை என்று கூறுவது கேலிகூத்தாக தெரியவில்லை? இதற்கு தன் மனைவியின் சொப்பனத்தை சாட்சிக்காக இழுப்பது அபத்தம்.

அதுமட்டுமல்ல, சகோ.தினகரன் அவர்களுக்கு எத்தனைமுறை கிட்னி ஆப்ரேஷன் செய்யப்பட்டது. எத்தனைமுறை இருதய அறுவை சிகிச்சை நடந்தது என்பதை பலர் அறிவார்கள். அந்த ஆப்ரேஷனுக்காக ஒவ்வொருமுறை அமெரிக்கா சென்றபோதும் அவருக்கு சுகவீனம் ஒன்றுமில்லை என்று பகிரங்கமாக பொய் சொன்னார்கள். பிஷப்.சுந்தர் கிளார்க் அவர்கள் அமெரிக்கா சென்று படுக்கையில் கிடந்த அவரை கண்டு அதை அப்படியே இந்தியாவில் அறிவித்ததால் சகோ.தினகரன் குடும்பம் பிஷப் மேல் மிகவும் கோபப்பட்டார்கள்.

அதைவிட அந்த VCDயில் இவர் கூறியிருக்கும் பெரிய பொய் என்னவென்றால்அத்வானியையும், சங்கராச்சாரியாரையும் சகோ.தினகரன் அவர்கள் சந்தித்தது மிஷனரிகளை காப்பாற்றுவதற்காகத்தானாம்! இது கேட்க தமாஷாக இல்லை! இப்போதெல்லாம் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் பொய் இவர் வாயிலிருந்து சரளமாக வருகிறது. அங்கு சங்கராச்சரியாரோடு நடந்த பேச்சுவார்த்தையின்போது சகோ.தினகரன் அவர்கள் தன் கால் ஷூவை கழற்றவில்லை என்பதை பெரிய சிறப்பு செய்தியாக அந்த சிடியில் அறிவிக்கிறார். 1½ மணி நேரம் இயேசு தன்னை சந்தித்ததை சங்கராச்சாரியாரிடம் கூறி அவருக்கு சுவிசேஷம் அறிவிக்கவே போனார் என்று மோகன் சி.லாசரஸ் அவர்கள் துணிகரமாக பொய் செய்தியை தான் கூடவேயிருந்து பார்த்தைப்போல் அறிவிக்கிறார். இந்த சம்பவத்தில் ஒன்றை இவர் ஒத்துக் கொண்டார். அதாவது சகோ.தினகரன் சங்கராச்சாரியாருக்கு பரிசு கொடுத்தது உண்மை என்றும், ஆனால் அது பூஜை சாமான் அல்ல என்றும், அந்த பெட்டி பூஜைசம்பந்தப்பட்டதல்ல ஆனால் அது பணம்போடும் பெட்டி என்கிறார்.

இந்த விவரத்தை எப்படி அத்தனை தெளிவாக கூறுகிறீர்கள் என்று அவரிடமே வாசகர்கள் கேளுங்கள். அந்த விவரத்தை வழக்கம்போல் இயேசு மேடைக்கு உங்கள் அருகே வந்து காதில் சொன்னாரா? என்று கேட்டுப்பாருங்கள். அவர் கூறும் பதில் சகோ.தினகரனே என்னிடம் கூறினார் என்பதாகும். குற்றவாளியின் சாட்சி ஏற்புடையதா? மேலும் கூறுகிறார். பூஜை பொருள் கொடுத்ததாக பத்திரிக்கைக்காரர்கள்தான் தவறாக எழுதிவிட்டனர் என்றும், சில கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் அதை எடுத்து எழுதி அவரை அவமானப்படுத்த அந்த செய்தியை வெளியிட்டன என்றும் கூறி அந்த சிடியில் என்னையும் சாடியிருக்கிறார். சங்கராச்சாரியரை சந்தித்த விவரத்தை வெளியிட்ட 11 தினசரி பத்திரிக்கைகள் ஆங்கிலம்-இந்தி-குஜராத்தி பாஷைகளில் வெளியிட்ட பத்திரிக்கைகள் மஞ்சள் பத்திரிக்கையல்ல என்பதை வாசகர்கள் அறியவேண்டும். அவைகள் அரசாங்க அங்கீகாரம் பெற்ற, எல்லாராலும் மதிக்கப்படும் புகழ்ப்பெற்ற பத்திரிக்கைகள் ஆகும். மேலும் அந்த பத்திரிக்கைகள் செய்தியை மட்டுமல்லாமல் அதைப்பற்றிய புகைப்படத்தையும் ஆதாரத்தோடுவெளியிட்டது. அந்த புகைப்படம் மிகத்தெளிவாக சகோ.தினகரன் சங்கராச்சாரியருக்கு அளித்த பரிசு பொருள் வெள்ளியில் செய்த பூஜை பெட்டகம்தான் என்பதை காட்டும்போது, அதை பார்க்கும் நமது கண்கள்கூட பொய் சொல்லுமா? சினிமா நடிகர் S.V.சேகரும் அதைப்பற்றி விளக்கி கூறினாரே!

மோகன் சி.லாசரஸ்ஸின் அந்த VCDயை சங்கராச்சாரியாருக்கு அன்று பரிசளிக்கும்போது கூடநின்றவர்கள் கண்டால் கிறிஸ்தவ ஊழியர்கள் இவ்வளவு சின்னதனமாக இந்த விஷயத்தில் பொய் சொல்கிறார்களே என்று கேலியாக பேசமாட்டார்கள். காருண்யா கல்லூரியை யுனிவர்சிட்டியாக அதை மேம்படுத்த சங்கராச்சாரியாரின் சிபாரிசுக்காக சகோ.தினகரனும், பால் தினகரனும் சென்றதையும், மேற்கொண்டு இவர்கள் சங்கராச்சாரியரிடம் என்ன பேசினார்கள் என்பதையும் கூடவேயிருந்து இந்த கூடுகைக்கு ஏற்பாடு செய்து உதவிய நடிகர் S.V.சேகர் அவர்களை யாராவது கேட்டுப்பாருங்கள். இவ்வளவு தெளிவான படத்தோடுகூடிய ஒரு நிகழ்வுக்கு எயிட்ஸ் சுகமானது என்று தன் பாணியில் பொய்வெளிப்பாடு கூறியதுபோல மோகன்.சி.லாசரஸ் அந்த VCDயில் பொய்சாட்சி கூறியிருப்பது யாரை ஏமாற்ற? அல்லது யாரை திருப்திப்படுத்த இப்படி கூறுகிறார்? இதற்கு சாட்சியாக யாரை அழைக்கிறார் தெரியுமா? சகோ.தினகரனே என்னை அழைத்து அப்படி கூறினார் என்கிறார். இவர் கூறியது உண்மையா என்று இப்போது யார் சகோ.தினகரனை நேரில்போய் பார்த்து கேட்டு உறுதிப்படுத்துவது? அன்று சகோ.தினகரன் அவர்களே அதைக்குறித்து தன் பங்குக்கு பொய்யான தகவலை கொடுத்தார் என்பது நாடறியும். அவரிடம் கேட்டு சொல்லும் இவர் தகவலும் பொய்க்கு - பொய்சாட்சி சொல்லும் தகவலாகும். சகோ.தினகரன் இறந்த பிறகும் சகோ.தினகரனை மோகன் சி.லாசரஸ் அவர்கள் அந்த விசிடி மூலம் அவரை அவமானபடுத்துவது நல்லதல்ல. மக்கள் முன்புபோல அல்ல, விழித்துக்கொண்டார்கள்.

மேலும் சந்தடிசாக்கில் இவர் தன்னைப்பற்றி நாட்டுமக்களுக்கு ஒரு இரகசியம் கூறுகிறார். அதாவது எலிசாவுக்கு எலியாவிடமிருந்து இரட்டிப்பான வரம் கிடைத்ததை சுட்டிக்காட்டி சென்னைV.P.ஹாலில் தன்னை (மோகன் சி.லாசரஸை) சகோ.தினகரன் அழைத்து தலைமேல் கை வைத்து தீர்க்கதரிசனமாக இப்படி கூறினாராம். கர்த்தர்தாமே என்னைவிட ஊழியத்தில் இரண்டு மடங்குஇவரை (மோகன் சி.லாசரஸ்ஸை) உபயோகப்படுத்தும் என்று கூறியதாக விளம்பரப்படுத்தியுள்ளார். சகோ.தினகரனின் மகன் தம்பி.பால் தினகரனே அப்பாவைவிட தன்னை கர்த்தர்இரண்டு மடங்கு உபயோகிக்கப்போகிறார் என்று கூறியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சகோ.மோகன் சி.லாசரஸ் பால் தினகரனை முந்திக்கொண்டார் என்று நினைக்கிறேன். இனி எயிட்ஸ் வியாதி சுகம் ஆனது என்பதைப்போல் இரண்டு மடங்கு பொய்சாட்சிகளை மோகன் சி.லாசரஸ்ஸிமிடருந்து எதிர்ப்பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இனி லஞ்சமே இருக்காது என்று கூறிய தீர்க்கதரிசன VCD ஒன்றும் மோகன் சி.லாசரஸ் வெளியிட்டிருக்கிறார். இது எதில்போய் முடியுமோ? அந்த தீர்க்கதரிசன CDயில் கூறியிருப்பது எல்லாம் பொய். உதாரணத்துக்கு லஞ்சம்பற்றி கூறியதை மட்டும் இங்கு குறிப்பிட்டேன்.

இனிவரும் காலத்தில் உலகெங்கும் லஞ்சம் கூடுமே ஒழிய லஞ்சம் குறையாது. இவர் தான் யூகித்ததை தீர்க்;கதரிசனமாக கூறுவதால்தான் இந்த பொய் வெளிப்பாடுகள் இப்படி சரளமாக வருகிறது.பிசாசு இவர்களுக்கு உதவி செய்வான்.எரே 23:16.

உங்களுக்கு தெரியுமா?

சகோ.D.G.S.தினகரனின் வல்லமை முகாமில் பயிற்சி பெற்ற அனைவரும் இன்று பல இடங்களில் ஜெபத்தில் பெயர் அழைக்கிற பொய்யான ஊழியத்தை கற்றுக்கொண்டு அதை தங்கள் பிள்ளைகளுக்கும், தன்னோடுள்ள உடன் ஊழியருக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுக்காமல் போனாலும் கூட உள்ளவர்கள் ஜெபத்தில் பெயர் சொல்லும்முறையை கற்றுக்கொண்டு அவர்கள் எல்லாரும் தனி ஊழியம் தொடங்கிவிடுவார்கள். இப்போது சிலர் நாசூக்காய் ஜெபத்தில் பெயரை அழைக்காமல், வியாதியின் பெயரைமட்டுமே கூறுவார்கள். இப்போது இப்படிப்பட்ட ஊழியத்துக்குதான் மௌசு அதிகம்.

இப்படி எயிட்ஸ் கிருமிபோல் பரவிவிட்ட ஜெபத்தில் பெயர் சொல்லும் ஊழியத்தின் ஆரம்ப நாயகன் இந்தியாவில் D.G.S.தினகரன் மட்டுமே. இப்போது அவருடைய மகன் அதை தொடர்ந்து நடத்தி இன்னும் மீதியானவர்களுக்கும் ஜெபத்தில் பெயர் சொல்லி அழைப்பதை சொல்லிதருவார் என்று நினைக்கிறேன்.

இதற்கு TVயில் சென்னை சில்க், ஆச்சி மசாலாவுக்கு வரும் விளம்பரம்போல் கோயமுத்தூர்ஜவஹர் சாமுவேலை சாட்சி சொல்லவைத்து வல்லமை முகாமில் இவர் பெற்றவைகளை விளக்கும்படி TVயில் ஏற்பாடு செய்ய வைத்துள்ளனர்.

இவர்கள் எல்லாரும் அந்திக்கிறிஸ்துவுக்கு வழிகளை ஆயத்தம் செய்யும் கூட்டத்தினர்.

தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.

பொதுவாக இவர்கள் பிரசங்கங்களில் எல்லாம் பாவத்தை கண்டித்து பிரசங்கிக்கமாட்டார்கள். பாவம் செய்தவர்களின் பெயர்களை ஜெபத்தில் தீர்க்கதரிசனமாக இவர்கள் கூறமாட்டார்கள். இவர்கள் பிரசங்கம் முழுவதும் ஆறுதலைப்பற்றியும், செழிப்பின் உபதேசமாகவும் இருக்கும்.

வேதம் கூறுகிறது: உங்களுக்கு சமாதானமிருக்கும் என்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கிஉங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். எரே 23:17.

தமிழ்நாட்டின் பெயர் சொல்லி அழைக்கும் பிரபல ஊழியக்கார சகோதரி.பாப்பா சங்கரின்நிலை கண்டீர்களா? 2008 கடந்த ஜுன் மாதம் அவர்கள் வீட்டில் நடந்த கொலை சம்பவத்தை ஊழியர்கள் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

சகோ.D.G.S.தினகரனின் ஊழியத்தின் முடிவையும், அவரின் வாழ்க்கையின் முடிவையும், அவரின் மகள் கார் விபத்தில் மரித்த விவரங்களையும், தண்டனைகளையும் தயவுசெய்து மனதிலே வைத்து தவறான ஊழியத்தை திருத்திக்கொள்ளுங்கள்.

கர்த்தர் சொல்லாததை கர்த்தர் சொன்னார் என்று கூறும் சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.தினகரன், சகோ.பால் தினகரன் போன்று ஜெபத்தில் பெயர் அழைக்கும் அத்தனை ஊழியக்காரர்களுக்கும் கர்த்தரே அவர்களுக்கு விரோதியாக மாறுகிறார். எரே 23:31,32. கர்த்தர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இப்போது உங்களுக்காக எச்சரிக்கை செய்கிறார் நமது ஆண்டவர்.

பொய்:

கர்த்தர் வெறுக்கும் காரியங்களில் ஒன்று பொய் நாவு. நீதி 6:16,17.

பொய் சொல்லாதிருங்கள். கொலே 3:9.

பொய்யை விரும்பி அதன்படி செய்கிற யாவரும் (பரிசுத்த நகரத்துக்கு) புறம்பே இருப்பார்கள். வெளி 22:15.

இதோ தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் (கர்த்தர்) அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்கிறார். எரே 23:31.

என் ஜனத்தை ..... பெயர்களினாலும் ... கூறி மோசம் போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார் எரே 23:32.

http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34457068&page=1&sort=newestFirst

No comments:

Post a Comment