Tuesday, March 22, 2011

வரலாறு மறந்த வடிவேலு வோட்டு கேட்டு வருகிறார்


வடிவேலு இன்று கருணாநிதியின் வீட்டு வாசலில் காலை வைப்பதற்கு முன் MGR பற்றி சற்று யோசனை செய்திருந்தால், தான் செய்துள்ள தவறை உணர்ந்திருப்பார். லட்ச்கனக்கான் அவரது MGR ரசிகர்கள் இன்றும் கருணாநிதி MGR க்கு செய்த துரோகத்தை மறக்கவில்லை. உயிர் உள்ளவரை MGR கருணாநிதியை தனது பக்கம் அண்ட விடவில்லை. இன்று வடிவேலு அதெல்லாம் மறந்துவிட்டு கருணாநிதிக்கு ஓட்டு பிச்சை எடுக்க கிளம்பிவிட்டார். அதன பயனை அவர் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவருக்கும் விஜய காந்துக்கும் உண்டான தனிப்பட்ட பிரச்சனயை அரசியலோடு தொடர்புறுத்தி, கருணாநிதி என்னும் தீய சக்திக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. மின் வெட்டு, வரலாறு காணாத விலை வாசி உயர்வு, பொது மக்கள் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, மக்கள் வரி பணத்தை விரயம் செய்து மாநாடுகள் நடத்துதல், எல்லாவற்றுக்கும் மேலாக spectrum ஊழலில் கோடி கோடியாக கொள்ளையடித்து தங்கள் குடும்ப நபர்களுக்கு வாரி வழங்கியது, இது போன்ற இன்னும் ஏராளமான புகார்கள் உள்ளன. மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், இன்னும் சொல்ல மறந்த பல அராஜகங்கள் கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளாகும். இப்படி பட்ட ஒரு அராஜக கட்சிக்கு வோட்டு கேட்டு வடிவேல் மக்களிடம் வருகிறார். மக்கள் வடிவேலுவிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.


No comments:

Post a Comment