Monday, October 10, 2016

காவிரியும் - மோசடி அரசியலும் !




காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ஆம் தேதி நீதிமன்றம் கூறியபோதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது இப்படி கர்நாடகத்துடன் சேர்ந்து நியாயம் பேசுவது என்ன அறம்? பொது மருத்துவத் தேர்வுக்கு (நீட்) உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உடனடியாக ஓராண்டு காலத்துக்கு தள்ளி வைக்க அவசரச் சட்டம் உருவாக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, தமிழக மக்களின் நலனுக்காக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாதா என்ன?
இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பகிர்வுப் பிரச்னையில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றால், மத்திய அரசே ஏன் நேரடியாகக் களம் இறங்கியிருக்கக் கூடாது? பிரதமரை தலைவராகவும், காவிரி தொடர்புடைய மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையம் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைத்திருக்கலாமே, ஏன் மத்திய அரசு செயல்படவில்லை?
பிப்ரவரி 5, 2007-இல் வெளியான நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைக்க தமிழக அரசு போராடியது. அதன் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் கர்நாடக அரசு முட்டுக்கட்டைப் போடுவதும், நீதிமன்றத்தை நாடுவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதும் வழக்கமாகி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய மத்திய அரசோ, கடந்த 10 ஆண்டுகளாகக் காலம் கடத்திவருகிறது.
அதுமட்டுமல்ல, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரை மட்டுமே. இதனை ஏற்பதும், ஏற்காததும் மத்திய அரசின் விருப்புரிமை சார்ந்தது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைவிட, நேரடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடத் தேவையில்லை என்றே மத்திய அரசு சொல்லியிருக்கலாம். காவிரியில் தமிழ்நாட்டுக்கு பங்கு கிடையாது என்றும் கூறியிருக்கலாம். கர்நாடகம் எந்தெந்த வாதங்களை முன் வைக்கிறதோ அதே வாதங்களை மத்திய அரசும் முன்மொழியுமேயானால், இறையாண்மை என்பதற்கு என்னதான் அர்த்தம்?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். இதில் ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 25 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி. தரப்பட்டால்தான், இந்த நான்கு மாதங்களில் காவிரி டெல்டா பகுதி முழுவதிலும் நெல் சாகுபடி செய்ய இயலும். ஆனால் கடந்த இரு மாதங்களாகத் தண்ணீரை நிறுத்தி வைத்தது கர்நாடகம். பற்றாக்குறைக் காலங்களில், தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட அளவுகளின் விகிதத்துக்கு ஏற்ப தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நடுவர் மன்றத்தின் தெளிவான தீர்ப்பு.
செப்டம்பர் 5 முதல் 30 வரை கர்நாடகம் நமக்கு அளித்ததாக சொல்லப்படும் நீர் 17.5 டி.எம்.சி. ஆனால் தமிழகம் பெற்றதாக சொல்லப்படும் அளவு 16.9 டி.எம்.சி. செப்டம்பர் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய 40 டி.எம்.சி.யில் பாதிகூட கிடைக்கவில்லை. அக்டோபர் 1 முதல் 6 தேதி வரை 3 டி.எம்.சி. தண்ணீர் தருகிறோம் என்று உறுதி கூறுகிறார்கள்.
"மன காவிரி' என்கிற கர்நாடகம், காவிரி நதியை சுருட்டி வைத்துக்கொள்ள முடியுமானால் அதையும் மத்திய அரசு அனுமதிக்கும். அப்படித்தான் மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது. கர்நாடகம் ஹேரங்கி அணை கட்டுவதற்குத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மத்திய அரசு தலையிடவில்லை. கர்நாடகம் கட்டி முடித்தது. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட தமிழகம் எதிர்த்தாலும், அதையும் அனுமதிப்பார்கள். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அணை கட்டி, தேக்கி, தேக்கி, ஒரு சொட்டு நீர்கூட மேட்டூருக்கு கிடைக்காமல் செய்ய கர்நாடகத்தை மத்திய அரசு அனுமதிக்கும்.
இதற்குப் பின்னால் இருப்பது முழுக்க முழுக்க அரசியல். தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மத்திய ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சி நினைத்து செயல்பட்டால், கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்துவிடும். நியாயம் வழங்கியதற்காக, தமிழகம் ஆதரவு அளிக்குமா என்றால் அளிக்காது. இதுதான் நாம் வஞ்சிக்கப்படுவதற்குக் காரணம். 2004 - 2009இல் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தி.மு.க.வின் தயவில் இருந்தபோது அழுத்தம் கொடுத்திருந்தால் ஒருவேளை மேலாண்மை வாரியம் அமைத்திருக்க முடியும். இனிமேல் அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி வெறும் கானல்நீர்தான். நடைமுறைக்கு வரவே வராது. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் மாபெரும் துரோகம் இது. காலத்தால் மறையாத வடுவாக இது தமிழர் மனங்களில் நீடித்திருக்கும். அப்படி நீடித்திருக்கும்வரை "இந்தியன்' என்கிற பெருமிதத்துடன் தமிழன் இந்திய தேசத்துடன் ஒன்றமாட்டான்!
http://www.dinamani.com/editorial/2016/oct/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2576075.html?pm=340

Tuesday, April 14, 2015

குழந்தை பாலியல் பலாத்காரம்

படவுன், ஏப். 14-

பாலியல் குற்றங்கள் அன்றாட நடைமுறையாகி விட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், 18 மாதப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மிருகங்களை விடவும் கொடூரமானவர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

படவுன் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் நேற்றிரவு, 18 மாத குழந்தையை கடத்திச்சென்ற நந்தா என்கிற காமக்கொடூரன், மறைவான இடத்தில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அந்த சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விட்டான்.

இரவெல்லாம் அந்த பச்சிளம் குழந்தை வலியால் அழுது கொண்டே இருந்தது. சந்தேகமடைந்த பெற்றோர்கள் இன்று காலை மருத்துவர்களிடம் அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் தெரிவித்த தகவலைக்கேட்டு குழந்தையின் பெற்றோரின் இதயமே நின்று விட்டது. துளியும் மனிதத்தன்மை இல்லாத ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்.

உடனடியாக காவல் துறையில் அவர்கள் புகாரளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட சஞ்சீவ் ஜோஷி (எ) நந்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2015/04/14163239/18-month-old-girl-molested.html

Sunday, January 4, 2015

நண்பர்களுக்கோர் பணிவான வேண்டுகோள்:

கோவையில் வசிக்கும் எனது மூத்த சகோதரர் கே. ராமகிருஷ்ணன் அவர்களின் மகன், (கோவை எஸ்.என். எஸ். பொறியியல் கல்லூரியில் B.E இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார்)  ஆர். சந்தோஷ் குமார் (வயது 21) கோவை சிங்காநல்லூர் அருகே  கடந்த 31.12.2014 ஆம் தேதி நள்ளிரவு 1:15 (01.01.2015 அதிகாலை) தமது இரு சக்கர வாகனத்தில் அவரது நண்பருடன் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த - போது   எதிர்பாராவிதமாக, எதிரே வந்துகொண்டிருந்த லாரி  மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

அவரது அகால மரணம் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த எனது அன்னாரின் மகன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தமது இரு சக்கர வாகனத்தை சற்று வேகமாக இயக்கி வந்துகொண்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே, விபத்து நேரிட்டது எனவும் கூறப்படுகின்றது. என்றுமே, எப்பொழுதுமே தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்லும் பழக்கம் கொண்ட அவர், அன்று ஏனோ தலைக்கவசத்தை அணிந்துகொண்டு செல்ல மறுத்து விட்டார். தலைக்கவசம் அணிந்துகொண்டு சென்றிருந்தால், ஒரு வேளை, விபத்தில் சிக்கியிருந்தாலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிட்டியிருக்கலாம்.

புத்தாண்டு கொண்டாட்ட ஆர்ப்பாட்டம்
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது
அதி வேகமாக வாகனத்தை ஓட்டுவது

போன்ற பல் வேறு காரணங்களால், இது போன்ற விபத்துக்கள் வருடம் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

படித்து முடித்து தகுதியான ஒரு வேலையில் சேர்ந்து, தனக்கும் தனது குடும்பத்திற்கும் பயன் தர வேண்டிய சந்தர்ப்பத்தில், விலை மதிப்பில்லா உயிரை துச்சமென மதித்து, இது போன்ற ஆபத்து நிறைந்த முயற்சிகளிலும், மகிழ்ச்சியிலும் ஈடுபட்டு, உயிரை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும், இனியாவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள தங்களது பொறுப்புகளை உணர்ந்து, விபத்தில்லா பண்டிகைகள், வருடப்பிறப்புகள் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இதை வாசிக்கும் நண்பர்கள் தங்களது குடும்பத்தில் யாரேனும் இது போன்ற ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் விதமாக, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களின் ஒளிமிகு எதிர்காலத்தை முன்னிட்டு, கல்லூரிக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை பயன் படுத்தாமல், கல்லூரி பேருந்துகளிலோ, அல்லது பொது பேருந்துகளிலோ செல்ல, அவர்களிடம் அன்புடன் வேண்டிக்கொள்ளுங்கள்.

மறுத்தால் சற்று கண்டிப்பு காட்டினாலும் தவறில்லை.

வேண்டாம் இது போன்ற  விபரீதம்   >>> உயிர் விலை மதிப்பற்றது !!!

அதை விட குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் பாசமும் பல மடங்கு விலை உயர்ந்தது. !!!



http://www.maalaimalar.com/2015/01/01103037/2-died-in-accident-while-new-y.html
       



Wednesday, February 26, 2014

மக்கள் தலைவர் ந-மோவின் அதிரடி திட்டம் :


வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார மையமாக மாற்ற திட்டம்: மோடி

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் முக்கியப் பொருளாதார மையமாக மாற்றுவதற்குத் திட்டம் வகுத்துக் கொடுக்கும்படி பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தனது ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, தில்லியில் பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி, வடகிழக்கு மாநிலங்களில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கடந்த வாரம் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகத்தை மீண்டும் சீரமைத்து அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் நீர் வளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விதமான திட்டம் ஒன்றைத் தீட்டும்படி தனது ஆலோசகர்களிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நரேந்திர மோடி பேசுகையில், ""வடகிழக்கு மாநிலங்களின் நீர் மேலாண்மைத் திட்டம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையாக உள்ளது. இதனால் நீண்டகால வெள்ளப் பெருக்கு பிரச்னை தீர்க்கப்படுவது மட்டுமின்றி, மின் பற்றாக்குறையையும் தீர்க்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, இந்த மாநிலங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாகவும், இந்த மாநிலத்தவர்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பெண் காவலர்களை குஜராத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மோடி பேச்சுக்கு சீனா கருத்து: அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில்," சீனா தனது நாட்டை விரிவுபடுத்தும் கொள்கையைக் கைவிட்டு இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொண்டு அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' புதன்கிழமை வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் தேர்தலுக்கு முந்தைய சீன எதிர்ப்புப் பேச்சால் இருநாட்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/india/2014/02/27/வடகிழக்கு-மாநிலங்களை-பொருள/article2079437.ece

Na-Mo vision - A leader people trust & will vote for !!!


Modi to think tanks: make North East the next economic hub

In his latest bid to woo voters, BJP's prime ministerial candidate Narendra Modi has asked his think tanks to draw up a comprehensive plan to make the North East one of the economic hubs of the country.


Modi, who has accused the UPA government of neglecting the North East, made a couple of trips to the region part of his election campaign, is exploring setting up an expert group to advise him on how to revamp the Ministry of DONER (Development of North East Region) if NDA comes to power. 


Sources said the Gujarat Chief Minister has asked his think tanks to draw up a comprehensive plan to tap the potential of the huge water resources in the region. 

"North East water management is the need of the hour which will not only solve the perennial flood problem but will also solve the power crisis of the country," Modi had said at his one of the rallies in the region on Saturday. 


At a recent meeting of the Chief Ministers of the North East states, Modi had proposed sending 16,000 women police personnel to Gujarat so that they could create awareness about people on the region's rich culture and heritage, which in turn, would boost the tourism industry there. Modi had also asked party units in the North Eastern states to focus on the aspirations of more than 400 insular ethnic groups in the region, which has 25 Lok Sabha seats of which UPA holds 21. 


The DONER ministry, which was set up by the Vajpayee government, is responsible for matters relating to the planning, execution and monitoring of development schemes and projects in the North Eastern region.

Read more at: http://www.firstpost.com/politics/modi-to-think-tanks-make-north-east-the-next-economic-hub-1409325.html?utm_source=ref_article

Tuesday, February 25, 2014

பணியாற்றும் பெண்களுக்கு தேவை எச்சரிக்கை !!!


சாஃப்ட்வேர் என்ஜினீயர் கொலை: வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னை அருகே பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் உமா மகேஸ்வரி, சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்காக மேடவாக்கத்தில் ஒரு வீட்டில் தனது தோழிகளுடன் உமா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு சென்ற உமா, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இது குறித்து உமாவின் தந்தை பாலசுப்பிரமணியம் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உமாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் இருந்து உமா மகேஸ்வரி அழுகிய நிலையில் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார். போலீஸார் விசாரணையில் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச் சம்பவம், குறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர்.

இதற்கிடையே டி.ஜி.பி.ராமானுஜம், உமா மகேஸ்வரியின் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை குறித்து சரியான தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கொலையாளிகள் கைது: சம்பவம் நடந்த இடம், உமா பணியாற்றிய இடம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பல தடயங்கள் கிடைத்தன.

மேலும் ஆளில்லாத விமானம் மூலம் அந்த பகுதி முழுவதையும் போலீஸார் புகைப்படம் எடுத்து, அந்தப் பகுதியின் அமைப்பை தெரிந்துகொண்டனர். அதேபோல உமா, கடந்த ஓர் ஆண்டாக செல்போனில் யார், யாருடன் பேசியுள்ளார், யாருடன் அதிகம் பேசியுள்ளார் போன்ற தகவல்களைச் சேகரித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் தீவிர விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரும்தான் உமாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் உமா வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து உமாவின் செல்போன், கிரேடிட் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை மாலை விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

துப்பு துலக்க உதவிய செல்போன், கிரடிட் கார்டு: உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை துப்பு துலக்க செல்போன் உதவியாக இருந்துள்ளது. அதே சமயம் கொலையாளிகளைக் கைது செய்வதற்கு கிரேடிட் கார்டு பயன்பட்டுள்ளது.

கொலையாளிகள் உமாவிடம் இருந்து செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த செல்போன், கிரடிட் கார்டு குறித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் கொலையாளிகள் அந்த செல்போனில் வேறு சிம்கார்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதை ஐ.எம்.இ. எண் மூலம் கண்டறிந்த போலீஸார், ஓரளவுக்கு கொலையாளிகளை நெருங்கினர்.

இதையடுத்து ஐ.எம்.இ. எண் கொடுத்த சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த வளாகத்தில் கட்டுமான வேலையில் ஈடுப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு செல்லாமல் இருந்ததும், அவர்கள் தங்குமிடத்துக்கும் வராமல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேர் குறித்து அங்கு இருந்த பிற கட்டட தொழிலாளர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும், உமாவை கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த கிரடிட் கார்டு மூலம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரையும் போலீஸார் கல்பாக்கம் அருகே கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: நாங்கள் சிப்காட் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் வேலை செய்து வருகிறோம். சம்பவத்தன்று இரவு சிப்காட் வளாகம் வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் உமா பணம் எடுத்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த நாங்கள் 4 பேரும் அவரை அங்குள்ள புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவர் வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டோம் என்று அவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்துக்குப் பின்னர் தங்களுக்கு பயம் ஏற்பட்டதால் தலைமறைவாக இருந்ததாக கூறினர். இதில் நால்வரில் இருவர் ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு தப்பியோடியதாக போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தப்பியோடிய இருவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கு வங்கத்துக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/02/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/article2078224.ece







இந்திய வரலாற்றில் முதல் முறையாக 11 பிரதமர்கள் !!!


11 பிரதமர்கள் ஓரணியில் !!!

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சி கூட்டணி


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின், கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், "ஆட்சியிலிருந்து காங்கிரûஸ அகற்றும் நேரம் வந்து விட்டது. அதேபோல், பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
நாட்டில் விலைவாசி உயர்வு, ஊழல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம். பாஜகவின் ஊழல்கள், காங்கிரஸின் ஊழல்களை விட மோசமானவை. வகுப்புவாத அரசியலை முன்னெடுத்துச் செல்லும் பாஜக, நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். காங்கிரஸýம், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
இந்த இரு கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிக்க புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அணி முயற்சி வெற்றி பெற எங்களுடன் மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும் என்று காரத் கூறினார்.
அப்போது, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவெ கெளடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 தொகுதிகளில் காங்கிரஸ் அல்லது பாஜக வெற்றி பெறாவிட்டால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, "அதற்கு வாய்ப்பே இல்லை' என்று நிதீஷ் குமார் பதில் அளித்தார்.
புதிய அணி குறித்து முலாயம் சிங் கூறுகையில், "11 கட்சிகள் கொண்ட புதிய அணி விரைவில் 15 கட்சிகள் அடங்கிய அணியாக உருவெடுக்கும்.
அதனால், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் ஆதரவு தேவையில்லை' என்றார்.
முக்கியமான கட்டத்தில் காங்கிரûஸ நீங்கள் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, "காங்கிரûஸ மக்களவையில் பல முறை எதிர்த்துள்ளேன்' என்று முலாயம் தெரிவித்தார். புதிய மாற்று அணியின் பிரதமர் பதவி வேட்பாளர் குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்குப் பின் அது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரகாஷ் காரத்தும், முலாயம் சிங்கும் இணைந்து பதில் அளித்தனர்.
"மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், ஹெச்.டி. தேவெ கெளடா, ஐ.கே. குஜரால் ஆகியோர் தேர்தலுக்குப் பிறகு ஒருமனதாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டனர்' என்று முலாயம் நினைவுகூர்ந்தார்.
என்சிபி வரவேற்பு: இதனிடையே, 11 கட்சிகள் அடங்கிய புதிய அணியை வரவேற்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.பி. திரிபாதி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இடதுசாரிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் என்சிபி பங்கேற்றது.
ஆனால், புதிய அணியில் இணைவது குறித்து என்சிபி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், புதிய அணியை என்சிபி வரவேற்றுள்ளதால், அக்கட்சியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது
http://www.dinamani.com/india/2014/02/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/article2078296.ece