Monday, April 4, 2011

குமுதம் ரிப்போர்டர் பிரத்யேக சர்வே முடிவுகள்.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது, யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிய 60,000 பேரிடம் ஒரு மெகா சர்வேயை நடத்தினோம். கடந்த இதழின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

சர்வே முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களைத் தந்துள்ளது. பணமும் இலவசங்களும் ஆட்சியைத் தக்க வைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ உதவப்போவதில்லை என்பது சர்வே கொடுக்கும் ரிசல்ட். ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் அறிவித்த இலவசத் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளால், ஆளும் கட்சியினருக்கே அவை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதும் மக்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 11 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஓட்டுக்காக ஆளுங்கட்சி சார்பில் அதிக பணம் விளையாடியதும் அனைவரும் அறிந்தது தான். இதேபோல் வரும் பொதுத்தேர்தலிலும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என ஆளுங்கட்சி நினைக்கிறது. ஆனால், மக்களின் மனநிலை இதற்கு மாறாக இருப்பது ஆச்சரியம்.

அதேபோல விலைவாசி உயர்வும் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கிராமங்களிலும் மக்கள் பேசுகின்றனர். மின்வெட்டு கிராமங்களில் அரசுக்கு எதிராக மக்களை வாக்களிக்க வைக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள், சிறு தொழிலதிபர்கள் மத்தியில் மின்வெட்டு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க. மீது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியைக் காண முடிந்தது. அவர்கள்கூட ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை ரிசல்ட் சொல்கிறது. இதையெல்லாம்விட தி.மு.க.வின் ஓட்டு வங்கியாக இருந்த சிறுபான்மையினர் மத்தியிலும் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு வாக்களிக்காத சிறுபான்மையின மக்கள் இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட சதவிகிதம் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்.


01a
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஷெயலலிதா முதல்வராக வருவதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று சொல்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், படித்த வர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதை கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது.

சர்வேயில் அ.தி.மு.க.வுக்கு 58 சதவிகிதம் பேரும், தி.மு.க.வுக்கு 33 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, அ.தி.மு.க. அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பது தீர்க்கமாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்னையாக எது இருக்கும்? என்ற கேள்விக்கு விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, ஸ்பெக்ட்ரம், மின்வெட்டு ஆகிய நான்கு சாய்ஸ் கொடுக்கப்பட்டது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 57 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வே முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறியிருந்தனர். அடுத்தபடியாக ஸ்பெக்ட் ரமும், மின்வெட்டும் உள்ளது. இந்த இரண்டும் தி.மு.க. வெற்றியை பாதிக்கும் என்று தலா 15 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை 13 சதவிகிதம் பேர் மட்டுமே முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட ஆண்களில் 55 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வையும், 19 சதவிகிதம் பேர் ஸ்பெக்ட்ரத்தை யும், 17 சதவிகிதம் பேர் மின்வெட் டையும், 16 சதவிகிதம் பேர் சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் கூறுகின்றனர்.

01b

பெண்களில் 60 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வை தலையாய பிரச்னையாகக் கருதுகின்றனர். 17 சதவிகிதம் பேர் மின்வெட்டையும், 15 சதவிகிதம் பேர் ஸ்பெக்ட்ரத் தையும், 13 சதவிகிதம் பேர் சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் சொல்கின்றனர்.

படிக்காதவர்களில் 60 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று சொல்லியுள்ளனர். அடுத்த இடத்தில் மின்வெட்டு இருக்கிறது. 21 சதவிகிதம் பேர் மின்வெட்டுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லியுள்ளனர். ஸ்பெக்ட்ரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தலா பதினொரு சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐந்தாண்டுகால தி.மு.க. ஆட்சி மன நிறைவைத் தருகிறதா? என்ற கேள்விக்கு மனநிறைவைத் தருகிறது என்று 25 சதவிகிதம் பேரும், மனநிறைவைத் தரவில்லை என்று 54 சதவிகிதம் பேரும் சொல்லியிருந்தனர். 21 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

தி.மு.க. ஆட்சி மனநிறைவு தருவதாக ஆண்களில் 27 சதவிகிதம் பேரும், பெண்களில் 22 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். மனநிறைவைத் தரவில்லை என்று சொன்ன வர்களில் ஆண்கள் 53 சதவிகிதம், பெண்கள் 54 சதவிகிதம். இந்த ஆட்சி மனநிறைவு தருகிறது என்று படிக்காதவர்களில் 26 சதவிகிதம் பேரும், அதே அளவில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மனநிறைவைத் தரவில்லை என்று படிக்காதவர்களில் 61 சதவிகிதம் பேர் சொல்லியுள்ளனர். படித்தவர்களில் 49 சதவிகிதம் பேர் மட்டுமே மனநிறைவு தரவில்லை என்று சொல்லியுள்ளனர்.

அரசு ஊழியர்களில் 35 சதவிகிதம் பேர் மனநிறைவைத் தந்தது என்றும், 42 சதவிகிதம் பேர் மனநிறைவைத் தரவில்லை என்றும் கருத்துச் சொல்லியுள்ளனர். கிராமப்புறங்களில் 24 சதவிகிதம் பேரும், நகர்ப்பகுதிகளில் 26 சதவிகிதம் பேரும் மனநிறைவு தருவதாகச் சொல்கிறார்கள். மனநிறைவு தரவில்லை என்று கிராமப்பகுதிகளில் 55 சதவிகிதம் பேரும், நகர்ப்பகுதிகளில் 54 சதவிகிதம் பேரும் கருத்துச் சொல்லியுள்ளனர்.

01d

எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அ.தி.மு.க. அணிக்கு 58 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க. அணிக்கு 33 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அணிக்கு 9 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆண்களில் 58 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வுக்கும், 34 சதவிகிதம் பேர் தி.மு.க.வுக்கும், 8 சதவிகிதம் பேர் மூன்றாவது அணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களில் 59 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வுக்கும், 32 சதவிகிதம் பேர் தி.மு.க.வுக்கும் 9 சதவிகிதம் பேர் மூன்றாவது அணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கிராமப் பகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 58 சதவிகிதம் பேரும், நகர்ப்பகுதிகளில் 59 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 34 சதவிகித ஆதரவும் நகர்ப் பகுதிகளில் 32 சதவிகித ஆதரவும் இருக்கிறது. வழக்கமாக நகர்ப்பகுதிகளில் தி.மு.க.வுக்கு கூடுதலாக ஆதரவு இருக்கும். இந்த முறை ஏனோ குறைந்திருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு கிறிஸ்துவர்களில் 46 சதவிகிதம் பேரும், இஸ்லாமியர்களில் 63 சதவிகிதம் பேரும் ஆதரவாக உள்ளனர். கடந்த தேர்தலில் இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வினருக்கு கிறிஸ்துவர் களின் ஆதரவு 44 சதவிகிதமும், இஸ்லாமியர்க ளின் ஆதரவு 40 சதவிகிதமுமே இருக்கிறது. இந்துக் களின் ஓட்டு 60 சதவிகிதம் அ.தி.மு.க.வுக்கும் 32 சதவிகிதம் தி.மு.க.வுக்கும் இருக்கிறது.

யார் முதல்வராக வரவேண்டும் என்று கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு 60 சதவிகிதம் பேர் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று சொல்லியுள்ளனர். கரு ணாநிதிக்கு 24 சதவிகிதம் பேரும் ஸ்டாலினுக்கு 16 சதவிகிதம் பேரும் முதல்வராக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இருவரது ஆதரவு சதவிகிதத்தை கூட்டினாலும் 40 சதவிகிதம்தான் வருகிறது. எனவே, பெரும் பான்மை மக்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வரு வதை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
01c
ஆண்களில் 59 சதவிகிதம் பேர் ஜெய லலிதாவுக்கும், 25 சதவிகிதம் பேர் கருணா நிதிக்கும், 12 சதவிகிதம் ஸ்டாலினுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களில் 60 சதவிகிதம் பேர் ஜெயலலிதாவுக்கும், 20 சதவிகிதம் பேர் கருணாநிதிக்கும் 13 சதவிகிதம் பேர் ஸ்டா லினுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 55 வயது வரை உள்ள வர்களிடம் ஜெயலலிதாவுக்கு 60 சதவிகித ஆதரவு இருக்கிறது. அதற்கு மேல் வயதுடையவர்களிடம் 55 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.

படிக்காதவர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு 65 சதவிகித ஆதரவு இருக்கிறது. பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் மத்தியில் ஜெய லலிதாவுக்கு ஆதரவு 61 சதவிகித மாகவும், பட்டப்படிப்பு படித்தவர்கள் மத்தியில் 55 சதவிகிதமாகவும் உள்ளது. படிக்காதவர்கள் மத்தி யில் கருணாநிதிக்கு 25 சதவிகித ஆதரவும், பள்ளிப் படிப்பு முடித்த வர்கள் மத்தியில் 23 சதவிகித ஆதரவும் கல்லூரி படித்தவர்கள் மத்தியில் 26 சதவிகித ஆதரவும் உள்ளது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

No comments:

Post a Comment