Saturday, September 4, 2010

Dummy information in between the good News

நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

சினிமா தகவல் 1:

ஒரு தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவி பைக் மெக்கானிக்கைக் காதலிக்கிறாள். அவனை சந்திக்க தன்னுடைய ஸ்கூட்டியை வேண்டுமென்றே ரிப்பேர் செய்துகொள்கிறாள். அப்போது பக்கத்தில் இருக்கும் அவள் தோழி சொல்லும் வசனம்:

“உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா”

சினிமா தகவல் 2:

அந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்தபின் புனிதமான பெயரைக் கொண்ட எங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரை இந்தப் படம் கெடுத்துவிட்டது என்று பிரச்சினை செய்ததால் படம் மீண்டும் ஸென்ஸார் செய்யப்பட்டது.

சினிமா தகவல் 3:

இந்துத் தெய்வங்களைக் கேலி செய்தும், கிராமத்து உயர்நாகரீகத்தை மட்டம்தட்டியும், இந்துக்களின் பழக்கவழக்கங்களை இகழ்ந்தும் வருவதால் ஒரு நடிகருக்கு (?) பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

தெரிந்தும் புரியாத தகவல்கள்:

1. கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி

2. செக்யூலரிசத்திற்காக என்று சொல்லிக்கொண்டு ஏற்படும் கூட்டணிகளில் எப்போதும் இடம் பெறும் கட்சி ஒன்றின் பெயர் “முஸ்லீம் லீக்”.

3. சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

4. இந்தியாவில் மிக மிக மிக மிக மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ஸிகளும், யூதர்களும் சிறுபான்மை அந்தஸ்து கோராவிட்டாலும் உயர்ந்த நிலைகளில் இருக்கின்றனர்.

5. இந்துக்களின் அன்பிற்கு மட்டுமல்ல மரியாதைக்கும் உரியவர்களான பார்ஸிகளும், யூதர்களும் “ஐயோ கொல்றாங்களே” வசனம் பேசாமல், “இந்துக்கள் எங்கள்மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்று சொல்லுகிறார்கள். தங்களின் உழைப்பால் உயருகிறார்கள். அடுத்தவர் வரிப்பணத்திற்கு ஆசைப்படுவதில்லை.

6. இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.

சமீபத்திய நற்செய்தி:

karuna_award

கத்தோலிக்க பிஷப் அமைப்பு தரும் “வாழ்நாள் சாதனை” விருது பெறும் கருணாநிதி

2009 தேர்தலுக்கு முன், இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:

பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் அறிந்ததும், அதிகம் தெரியாததும்:

பல இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள், ஆஸிட் வீச்சுக்கள், கொலைகள், கொள்ளைகள் இவற்றின் மூலமாகவும் “அமைதி மார்க்கம்” இந்தியர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. அமைதி மார்க்கத்தின் தீவிரவாதத்தால் அழிந்துபோன வங்கதேச மக்களைப் பற்றி, காஷ்மீரத்து மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், ”அன்பு மார்க்கம்”?

”அன்பே சிவம்” உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் கிருத்துவ கன்னியாஸ்த்ரீகள் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை உருக்கிக் கொள்வதாகக் காட்டப்படுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கிருத்துவர்கள் கிருத்துவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும் என்று ஒரு கிருத்துவக் கட்சி வேண்டுகோள் விடுப்பது முதலில் விசித்திரமாகவும், பின்னர் ஏளனமாகவும் தோன்றலாம். ஒரு சில கிருத்துவர்களின் தனிப்பட்ட வேலையாகத் தெரியலாம். தீர்மானத்தை நிறைவேற்றிய கூட்டம் கீழ்ப்பாக்கத்தில் நடந்திருப்பது ஞாபகம் வரலாம். கிருத்துவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது என்றும் நாம் நினைக்கலாம். சோனியா காந்தியின் தலைமையில் கிருத்துவர்களை எம்.பிக்களாக்க வேண்டும் என்று இந்தியாவெங்கும் வைக்கப்பட்ட ப்ரம்மாண்டமான கட்-அவுட்கள் புறக்கணிக்கத் தக்கவையாகத் தெரியலாம்.

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மதத்தின் ஆக்கிரமிப்பு முகம் நமக்குத் தெரியாது என்பதே.

அறிந்த தகவல் 2:

பத்திரிக்கைகள் என்பவை லாபத்திற்காக நடத்தப்படும் கார்ப்பரேட்டு கம்பெனிகள். மண்கலங்கள் உடைந்து போவது போன்ற உப்புச் சப்பில்லாத செய்திகளை அவை வெளியிடுவதில்லை.

அறிந்த தகவல் 3:

தென்னிந்தியாவில் பா.ஜ.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த மாநிலம் கர்நாடகம். அக்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிக்கைகள் வெங்கலப் பானைகள் உடைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அறிந்த தகவல் 4:

என்டர் தி எட்டியூரப்பா.

பா.ஜ.க ஆட்சியின்போது கர்நாடகாவில் சர்ச்சுகள்மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன. vandalised, vandalism போன்ற வார்த்தைகள் பக்கங்களை நிறைத்தன. சர்ச்சுகள்மீது கல்லெறியப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனராம். பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்களில் சேதாரங்களைக் காட்டும் பாதிரியாரும், பாதிரியாரின் விரலும், விரலை வேடிக்கை பார்க்கும் பேஜ்3 பிரபலங்களும் தெரிந்தனர். சேதாரங்கள் தெரியவில்லை.

அறியாத தகவல் 1:

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மத ஆக்கிரமிப்பின் கொடூரம் நமக்குத் தெரியாது.

அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம் யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுவும் நமக்குத் தெரியாது.

நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில் நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.

இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.

திரிபுராவில் இந்துக் கோயில்கள் அனைத்தும் மூடியே இருக்கின்றன. இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களையும், கோயில் பூசாரிகளையும் திரிபுரா தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள். அந்தத் தீவிரவாதிகளை வெளிப்படையாகவே சர்ச்சுகள் ஆதரிக்கின்றன.

நேபாளத்தில் இருந்து ஆந்திராவரை பரவியுள்ள நக்ஸலைட்டு அமைப்புகள் சீன அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துவ சர்ச்சினால் நடத்தப்படுபவை என்பதும் நமக்குத் தெரியாது.

நாகலாந்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களை அந்த மாநிலத்தை எப்போதும் ஆண்டுகொண்டிருக்கும் மந்திரிகள்தான் நடத்திவருகிறார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. இந்தக் குழுக்களில் மிகக் கொடிய தீவிரவாதக் குழுவின் சின்னம் சிலுவை. அவர்களின் கோஷம் “நாகலாந்தை கிருத்துவத்திற்கு மீட்போம்” என்பதை ஒத்தது.


ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.

இதுபோன்ற சூனியக்காரி வேட்டையை ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்து மகிழும் நமக்கு இதன் தீவிரம் தெரிவதில்லை. இந்துக்கள் அனைவரையும் சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.

இந்துத் தெய்வ வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று கிருத்துவமும் இஸ்லாமும் போதிக்கின்றன. எனவே, கிருத்துவர்கள் தமிழ் இந்துக்களையும் சைத்தானை வழிபடுபவர்களாகத்தான் கருதுகிறார்கள். இவர்களின் கைப்பாவையாக இருக்கிற திராவிட கட்சிகளின் தலைவர்கள் மஞ்சள் துண்டு அணிவது, கோயிலுக்குப் போவது என்று சாத்தானின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டு இருப்பதால் இப்போது இவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்துவதோடு, தங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை ஆட்சிபீடத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளார்கள்.

பைபிள் தகவல்கள்:

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

வெளி 20:7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,…

தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்.

கவனிக்கப்படாத தகவல்:

ஒரிஸ்ஸா காடுகளில் பரிதாபகரமாக எரித்துக்கொல்லப்பட்ட ஒரு கிருத்துவ போதகரின் மனைவிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வாங்கிய பின்னர் எனது கணவரது பணியைத் தொடர்ந்து செய்வேன் என்று சொல்லிவிட்டு அம்மையார் ஆஸ்திரேலியா போய்விட்டார்.

தகவல் இல்லாத தகவல்:

இந்தியாவில் கிருத்துவப் போதகராக இருந்த ஒருவரின்மேல் ஆஸ்திரேலியாவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்லப்படும் செய்திகளை யாரும் மறுக்கவோ, ஆதரிக்கவோ, நிறுவவோ இல்லை.

கிசுகிசு தகவல்:

இந்துப் பெயரை வைத்துக்கொண்டு, ஆனால், இந்துக்களையும், இந்துத் தெய்வங்களையும், இந்திய கிராமத்துப் பழக்கங்களையும் ஏளனம் செய்து பிழைப்பவரின் தாயார் தன் இளவயதில் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்.

மற்றொரு சினிமாக்காரர் பற்றிய தகவல்:

இலங்கைத் தமிழர்களுக்காக சிறைக்குப் போவதாகக் காட்டிக்கொள்ளும் சீமானின் உண்மையான பெயர் சைமன் என்று சொல்லப்படுவதை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். ஆனால், அவர் எப்போதும் சட்டையில் காட்டும் சே குவாராவின் தேசத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மதம் கிருத்துவம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சர்ச்சுகள் நிறைந்த க்யூபாவில் ஒரு மசூதிகூட கிடையாது. அரசாங்க நிலைப்பாடு நாத்திகம் என்று காட்டிக்கொண்டாலும், சர்ச்சுகள் மிகச் செழிப்பாக மந்தைகளை மேய்க்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோவால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதிலிருந்து தப்ப யூதர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஆனால், அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார் போப்பாண்டவர்.

பழையவர் பற்றிய தகவல் 4:

விமானத்தில் இறங்கிய உடன் அந்த நாட்டு மண்ணை குனிந்து முத்தமிடுவது அவரின் கட்டுப்படுத்த முடியாத பழக்கம். க்யூபாவிற்குச் சென்றபோது அவருக்கு வயதாகிவிட்டது. குனிந்து முத்தமிட முடியாது என்பதால் க்யூபா நாட்டு மண்ணை ஒரு சட்டியில் போட்டு அவர் முத்தமிட ஏதுவாக உயர்த்தினார்கள். க்யூபா நாட்டு மண் கிருத்துவத்தின் வாய்க்குப் போனது.

தென்கொரியாவில் “வளர்ச்சி” பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)

தென்கொரியாவில் வளர்ச்சி பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)

அனைவரும் மறந்துபோன தகவல்:

இந்தியா வந்திருந்த போப்பாண்டவர் இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் மற்ற இந்தியர்களை கிருத்துவ மதத்திற்கு அறுவடை செய்யச் சொன்னார்.

புதியவர் பற்றிய சமீபத்திய தகவல் 1:

கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப்.

YAOUNDE, Cameroon – போப் பெனடிக்ட் XVI சொன்னார் இவ்வாறு: எய்ட்ஸ் என்கிற ஆட்கொல்லி நோய்க்கு காண்டம்களால் பதில் சொல்ல முடியாது. உலகம் முழுவதும் 2007ம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு எய்ட்ஸ் வந்து இறந்த ஆப்பிரிக்கர்களால் ஏற்பட்டது. ஏறத்தாழ 22 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”எய்ட்ஸ் வியாதியை காண்டம்கள் வழங்குவதன் மூலம் தடுத்துவிட முடியாது”

The pope told reporters aboard the Al italia plane heading to Yaounde. ”அதற்கு மாறாக, காண்டம்கள் இந்த பிரச்சினையை அதிகரிக்கின்றன.”

Treatment Action Campaign in South Africaஐச் சேர்ந்த Rebecca Hodes இது குறித்துப் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: எய்ட்ஸ் வியாதியை தவிர்க்க உதவும் காண்டம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாமல், “அதற்கு மாறாக, காண்டம்களுக்கு எதிராக அவர் பேசி வருவது ஆப்பிரிக்கர்களின் உயிரைவிட அவருடைய மதக் கொள்கை அவருக்கு அதிக முக்கியம் என்பதையே காட்டுகிறது.”

”காண்டம்களை உபயோகப்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸை முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்பது உண்மையாக இருப்பினும், தற்போது எய்ட்ஸ் என்கிற இந்தக் கொடூரமான ஆட்கொல்லி வியாதியைத் தவிர்க்க வேறு எந்த வழிகளாலும் முடியவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை” என்று Rebecca Hodes சொன்னார்.

1982ல் இருந்து காமரூனை சர்வதிகாரியாக ஆண்டு வரும் ஜனாதிபதி Paul Biya போப்பாண்டவரை அரசு மரியாதைகளோடு வரவேற்றார். இவர் தனக்கு மாறான கருத்துச் சொல்பவர்களை அழித்துவிடுகிறார் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக் குறை சொல்லியுள்ளது. காமரூனில் நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து போப் நேரடியாக எதுவும் இதுவரை பேசவில்லை. ஆனால்,”நற்கதி அளிக்கும் நமது புனித நூலின் நற்செய்தியானது மிக உரக்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்கப்படுமானால் கிருஸ்துவின் ஒளியானது இருண்டுகிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்டும்” Benedict said as the president and other political leaders looked on.

இந்த நற்செய்தி உலகெங்கும் விமர்சனங்களை உருவாக்கிய வேளையில், ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் நற்செய்தி பரப்ப தனது ஒருவார பயணத்தைத் தொடர்ந்தார் போப்.

மருத்துவ வரலாற்றுத் தகவல்:

அம்மை, காலரா, மலேரியா, ப்ளேக் முதலான ஆட்கொல்லி வியாதிகள் காலனி ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலகட்டங்களில் ஏற்படவில்லை. காலனி ஆதிக்கத்திற்குப் பின்பே அடிமையாக்கப் பட்ட மக்களுக்கு இவை பரவின.

Aztec smallpox victims

Aztec smallpox victims

தென்னமெரிக்க இன்கா இன மக்கள் அனைவரும் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த ஸ்பானிஷ்களிடம் இருந்து பரவிய இந்த வியாதிகளால் முற்றிலுமாக அழிந்தனர். சிகப்பு இந்திய பழங்குடிகளுக்கு சேவை செய்த கிருத்துவப் பாதிரிகள் அவர்களுக்குப் போர்வைகளைப் பரிசாக வழங்கினர். திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது.

“15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் நன்னம்பிக்கை முனையில் இருந்து மலபார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். உருவ வழிபாட்டு நம்பிக்கையாளர்களான பழங்குடியினரிடையே கிருத்துவத்தின் ஆசிகளை வழங்குவதே அவர்களுடைய மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்தப் புனிதமான நன்மைதரக்கூடிய மத சேவையை செய்ய ஒரு பாப்பல் புல் (போப்பாண்டவரின் புனிதக் கட்டளை) வழங்கப்பட்டிருந்தது. இந்த யூரோப்பிய ஊடுருவலின் முதல் விளைவாக ரத்தத்தைச் சிதறவைத்த போர்களும், வெறுத்து ஒதுக்கவேண்டிய வியாதிகளும் ஆசிய கண்டத்திற்கு ஏற்பட்டன. இவை மிக விரைவாகப் பரவி சொல்லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்தின. இந்த வியாதிகள் பரவியபோது சின்ன அம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வியாதிகள் முதன் முதலில் அறிமுகமானபோது சீன மற்றும் இந்துக் கோயில்களில் இந்த வியாதிகளைத் தவிர்க்கத் தேவையான தெய்வீக உருவங்கள் ஏற்படவில்லை.” - பக்கம் 34. The History of the Small Pox By James Carrick Moore.

அறிந்த தகவல் 5:

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருத்துவப் பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதாகத் தொலைக்காட்சிகளில் காட்டினர். அறுவடை செய்யப்பட்ட ஆடுகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

அறியாத தகவல் 2:

சுனாமி பாதிப்பின்போது வீடு வாசலை இழந்தாலும் மந்தைக்குள் மாட்டிக்கொண்டதால் கிடைத்த வீடுகள் மிக மோசமான தரமற்றவையாக இருப்பதாகவும், அந்த வீடுகளை “சில அமைப்புக்கள்” சுனாமி பாதிப்பின்போது கட்டிக்கொடுத்தன என்றும் தொலைக்காட்சி சேனல்கள் சில சமீபத்திய செய்திகளின் ஊடே தெரிவித்தன.

அறியாத தகவல் 3:

கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின் மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.

அறியாத தகவல் 4:

காஷ்மீரத்தில் இருந்த பண்டிட்டுகளின் அழிவை வெறும் பத்திரிக்கைச் செய்திகளாக ”ஓரளவு” மட்டும் அறிந்த நமக்கு நாகலாந்தில் வாழும் ரியாங்குகள் அகதிகளாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது. கிருத்துவ மதத்திற்கு மாற மறுப்பதால் லட்சக்கணக்கான ரியாங்குகள் வருடம் தோறும் அங்கே கொல்லப்படுகிறார்கள். இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இது தகவலாகக்கூட உங்களுக்குத் தெரியாது.

சோமாலிய வறுமையைப் போலக் காஷ்மீரத்து இன அழிப்பு நமக்கு வெறும் தகவல் மாத்திரமே. இலங்கையில் அழியும் நம் சொந்த ரத்தமான தமிழர்களின் அழிவு நமக்கு மரத்துவிட்டது. ரியாங்குகளின் அழிவு பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. காஷ்மீரப் பண்டிதர்களின் அழிவு நமக்கு எந்தக் கவலையையும் ஏற்படுத்திவிடவில்லை.

அறியாத தகவல் 5:

தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில் உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.

எதிர்கால தகவல் 12:

வெளிப்படுத்தின விசேஷம் 0:0: நாளை தமிழகத்தில் நமது பிள்ளைகள் அகதிகளாகத் திரிவார்கள். அப்போது அவர்களின் உடம்பு துப்பாக்கிக்கு இரையாகும்போதும், நமது மகள்கள் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்படும்போதும், குண்டை வெடிக்கச் செய்தும், குண்டால் வெடிபட்டும், நடுத்தெருவில் அவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதறி சாகும்போதும், நாசமாப் போகும்போதும், ………………

இந்த உலகம் இப்போது போலவே அப்போதும் இப்படி நிம்மதியாகவே சுற்றிக்கொண்டிருக்கும்.

Source: http://www.tamilhindu.com/2009/07/facts-amidst-gospels/

No comments:

Post a Comment