Wednesday, May 18, 2011

கருணாநிதியின் படுதோல்வியை மகிழ்வுடன் கொண்டாடும் உலகத் தமிழினம்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. சோனியா தலைமையிலான காங்கிரஷ் கட்சிக் கூட்டணி படுதோல்வியை சந்திதுள்ளது. இதனை உலகத் தமிழர்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். அப்போ உலகத் தமிழினத்தின் தலைவன் தான்தான் என்று முழங்கிவந்ததெல்லாம்....? என்னவாயிற்று? சும்மா லொலலலலல.... தானா? மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தோல்வியால் துவண்டுபோய் கோபால புரத்திற்குள் பதுங்கியிருந்தவரிற்கு அதிர்ச்சியளிப்பது போன்று இந்த உலகத் தமிழர்களது மகிழ்ச்சிக் கொண்டாட்டம் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

தொலைபேசிகளில் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய புலம்பெயர் உறவுகள் நலம் விசாரிப்பதற்கு முன்னர் தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டது பரிமாறிக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் கருணாநிதி படுதோல்வி அடைந்திருப்பது குறித்து பெருமகிழ்வுடன் சிலாகிக்க தவறவில்லை.

முள்ளிவாய்க்காலில் இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர் எமது சொந்தங்கள் புழு பூச்சிகளை நசுக்குவதைப் போல மானிட வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு சிங்களத்தால் கொன்று குவிக்கப்பட்டதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு நல்கியிருந்தவர் இந்த கருணாநிதி என்பதை வரலாற்றுப் பக்கங்களில் மறைக்க முடியாது.

அதன் வெளிப்பாடாகத்தான் உலகத் தமிழர்கள் கருணாநிதியின் தோல்வியை எமது பெரு வெற்றியாக எண்ணி கொண்டாட வைத்துள்ளது. எத்தனை மயக்கும் வார்த்தை விளையாட்டுக்களை மேற்கொண்டாலும் தமிழினத்தை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்திவிட முடியாது.

உலகத் தமிழர்களின் ஒரே நிரந்தரத் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தான். இது தான் சத்தியமான உண்மை. வரலாறு திரும்பும் என்பது இதனைத் தான்.

தமிழ் மக்களிற்கான அரசை தனது குடும்பம் செழிக்க கோபாலபுரத்திற்கும் சி.ஐ.டி. காலனிக்கும் மடை மாற்றிவிட்டு தனிக்காட்டு ராசாவாக விளங்கிய கருணாநிதி ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு எமது தலைவனைப்பற்றியும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்திருந்தார். அப்போதெல்லாம் அவர் நினைத்திருப்பாரா... இப்படி தள்ளாத வயதிலும் தலைகுப்புற விழுத்துவார்கள் என்று.

நாம் எதிர்பாரத்தோம். இந்த வரலாற்றுத் தோல்வியை மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கான நிரந்தர அரசாக தமிழீழத் தனியரசை தமிழினத் தலைவன் மேதகு வே.பிரபாகரன் அமைப்பதை இந்த கருணாநிதி கண்ணார கண்டுகளிக்க வேண்டும் என்று. அதற்காக கருணாநிதி இன்னும் சொற்ப காலம் உயிரோடு இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருக்கின்றோம்.

பட்டங்களும் பதவிகளும் தானாகத் தேடிவர வேண்டும். அப்போதுதான் அதற்கு மதிப்பு மரியாதை உண்டு. ஆட்சி அதிகாரங்களை வைத்துக் கொண்டு வீரமணி, திருமாவளவன் போன்ற அல்லக் கைகளை ஏவிட்டு பாராட்டுப் பத்திரம் வாசிக்க செய்வதெல்லாம் மல்லாக்க படுத்துக் கொண்டு மேலே துப்புவதைப் போன்றது என்பதை உணர்ந்து கொள்ளாமலா இருப்பார் இந்தக் கைப்புள்ளை கருணாநிதி...?

கைப்புள்ளையாக திரையில் வந்து ரசிகப் பெருமக்களை வயிறு குழுங்கவைத்து சற்று ஆரோக்கியச் சிறப்பிற்கு வழியேற்படுத்திய வடிவேலுவை நம்பி தேர்தலை சந்திக்க வேண்டியளவிற்கு அரசியல் சாணக்கியம் மிக்கவர் வல்லவர் நல்லவர் எனப் பெயரெடுத்த கருணாநிதி வந்தபோதே பேரறிஞர் அண்ணா அவர்கள் மெரினா பீச் கடற்கரையோரம் உள்ள நிணைவிடத்தில் இருந்து எழுந்து தலையிலடித்துக் கொண்டிருந்திருப்பார்.

மெரினா பீச் என்ற போது தான் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகின்றது. கருணாநிதிக்கு இந்த மெரினா பீச்சின் மீது அளவு கடந்த காதல். தனது சமாதியைக் கூட மெரினா பீச்சோரம் நிறுவ வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அது நிறைவேற வேண்டும் என்றால் ஆறாவது முறையாக இந்த முறை முதலமைச்சர் ஆனால்தான் உண்டு.

கருணாநிதியின் இந்த கடைசி ஆசையை நிறைவேற்ற ஜெயலலிதாவின் அரசு ஒருக்காலும் சம்மதிக்கப் போவதில்லை. இந்த ஏக்கத்தை வாரிசு சண்டையில் ஈடுபட்டிருந்த தனது புத்திரர்களுக்கு ஆதங்கத்துடன் சொல்லித்தான் கோடி கோடியாக கொட்டி ஆட்சியை தக்கவைக்க முயன்றார் இந்த கருணாநிதி.

அதுதான் நடக்காது என்று தெரிந்து விட்டதே. தமிழக மக்கள் கருணாநிதியின் கடைசி ஆசையைக் கூட நிராசையாக்கி விட்டு விட்டார்களே. அய்யோ பாவம்.

நாம் எதிர்பார்த்த முதல் வெற்றி கிடைத்துவிட்டது. அதுவும் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப்போன எமது சொந்தங்களை நிணைவு கூறும் இந்தக் காலத்தில் இந்த வெற்றி கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எமது தியாகமும் இழப்புக்களும் ஒருபோதும் வீண்போகாது. தமிழீழத் தனியரசை தமிழினத் தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் உலகத் தமிழினம் வென்றெடுக்கும் நாள் விரைந்து வரத்தான் போகுது. அதுவரைக்கும் இந்த தள்ளாத வயது தாத்தா கருணாநிதியின் உயிரோடு இருக்க வேண்டும் என்று தலைவன் வணங்கும் நல்லூர் கந்தனை நாமும் வேண்டுவோம்.

http://suthumaathukal.blogspot.com/2011/05/blog-post_1146.html

No comments:

Post a Comment