Saturday, December 11, 2010

தி.மு.க., மாஜி மத்திய அமைச்சர் ராஜாவை கண்டித்து போஸ்டர்

தூத்துக்குடி, : ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கியுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கண்டித்து, தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ராஜாவைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில், தூத்துக்குடியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,"1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை, ஆறு கோடி தமிழர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் தரலாம். தமிழக வாக்காளர்களுக்கு, தலா 60 ஆயிரம் ரூபாய் தரலாம். தூத்துக்குடி மக்களுக்கு, தலா 36 லட்சம் ரூபாய் தரலாம். தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு, தலா 9 லட்சம் ரூபாய் தரலாம். மூன்று ஆண்டிற்கு தமிழக பட்ஜெட் போடலாம். ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 15 கோடி ரூபாய் தரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5,500 கோடி ரூபாய் தரலாம்' எனக் குறிப்பிட்டு, "மக்கள் சொத்தை கொள்ளையடித்த ராஜாவை ஏந்திப் பிடிக்கும் தி.மு.க.,வை ஊழலில் திளைக்கும் காங்., மத்திய அரசை மன்னிக்கலாமா?' என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143905

No comments:

Post a Comment