Friday, December 17, 2010

"ராஜராஜன் 1000" கருணாநிதி அவமரியாதை


"நீர் உயர நெல் உயரும் நெல் உயர மக்கள் உயர்வார்கள் மக்கள் உயர மன்னன் உயர்வான்" என்ற பழமொழி இன்று இந்த தி மு க ஆட்சியில் மக்கள் உயராமல், மன்னன் மட்டும் உயரும் காலமாக தமிழகம் மாறிவிட்டது.

இந்த சூழலில் ராஜராஜன் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி அவர்கள் ,

தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன் என்று அறிவிப்பு செய்து பேசியுள்ளார்கருணாநிதி. ஒரு மாநில முதல்வர், மூத்த அரசியல் வாதி, இந்திய அரசியலுக்கே ஆலோசனை சொல்பவர், முத்தமிழ் வித்தகர் என பல பெருமைகளை தாங்கியவர் இப்படியா பேசுவது .

உங்களுக்கு என்னையா ஆச்சு? செம்மை நெல் என்பது நெல் ரகம் அல்ல. அது நெல் சாகுபடி செய்யும் முறைக்குபெயர்தான் செம்மைநெல் சாகுபடியே தவிர அது ஒரு நெல்லின் பெயர் அல்ல என்பதே உண்மை ஆகும்.

இது கூட இந்த கரிகால் சோழ மன்னர் கலைஞர் கருணாநிதிக்கு தெரிய வில்லையா?நெல் ரகத்திற்கு பெயர் வைத்தால் கூட பரவாஇல்லை. சாகுபடி முறைக்கா ஒரு புகழ் பெற்ற மாமன்னன் ராஜராஜன் பெயரை சூட்டுவாங்க?. அதெல்லாம் கூட இருக்கட்டும், மக்களிடம் அதிகமாக சென்றடையும் ஜனரஞ்சகமாக இருக்கும் திட்டத்திற்கு எல்லாம் கலைஞர் கருணாநிதி என உங்கள் பெயர். பரிச்சயம் இல்லாத மக்களுக்கு தெரியாத ஒரு சாகுபடி முறை நெல் ரகத்திற்கு ராஜராஜன் பெயரா?.

வாழ்க உங்கள் பழந் தமிழரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தமிழ்த்தொண்டு !!
!

http://nagainthu.blogspot.com/2010/09/1000.html

No comments:

Post a Comment