Saturday, February 19, 2011

சேலத்தில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் பேசியவை.




தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை எல்லாம் இழிவுபடுத்தும் வகையில் ஒரு அம்மா, ஊருக்கு ஊரு போய், "மைனாரிட்டி' அரசு என்று பேசி வருகிறார்.முதல்வர் கருணாநிதி 4 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து, முரசொலிக்கு எழுதுகிறார்; கட்சிக்காரர்களை பார்க்கிறார்; பின், தலைமைச் செயலகத்துக்கு சென்று, மக்களுக்கு திட்டங்களை தீட்டுகிறார்; தினந்தோறும் மக்களை சந்திக்கிறார்.ஆனால், அவரோ (ஜெயலலிதா) ஊட்டிக்கு போய் விடுகிறார். கட்சி அலுவலகத்துக்கு வரும் தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கட்சி அ.தி.மு.க., மட்டுமே. தெய்வத்தாய், பராசக்தி, தர்மத் தாய் என்றெல்லாம் கட்-அவுட் வைப்பவர்கள், ஜெயலலிதாவை, "கன்னித்தாய்' என்று குறிப்பிட்டு கட்-அவுட், போஸ்டர் அடிக்க முடியுமா? அது போன்று அவரை அழைக்கவாவது முடிகிறதா? இவ்வாறு அழகிரி பேசினார்.

இதனை பற்றி மக்களின் சிலரின் கருத்து.




1.அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது என்று சொல்லுவார்கள். அந்த வார்த்தையை மு.க.அழகிரி இன்று நிரூபித்துள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் சட்டம் சொல்கிறது. அதுவும் அரசுப் பணியாற்றும் ஒருவருக்கு கட்டாயம் இச்சட்டம் பொருந்தும். தமிழக முதல்வர் என்கின்ற வகையிலும், தமிழக அரசின் மாத சம்பளம் பெரும் ஊழியர் என்கின்ற முறையிலும் உங்கள் தந்தைக்கும் இச்சட்டம் பொருந்தும். ஊரறிய ஒரு தவறு செய்தால் அது "வீரச்" செயல் ஆகாது. மத்திய அமைச்சரவையிலே மந்திரி பதவி பெற்ற பிறகு எத்துனை முறை நீங்கள் பாராளுமன்றத்திற்கு சென்றீர்கள், உங்கள் இலாகா சம்பந்தப்பட்ட எத்துனை கேள்விகளுக்கு நீங்களே ஆஜராகி பதில் சொல்லியிருக்கிறீர்கள் என்று புள்ளி விவரத்துடன் பேச முடியுமா?? அரசு விழாக்களுக்கு செல்லும்பொழுது ஒரு மனைவி, உண்ணாவிரதம் இருக்கும்பொழுது ஒரு மனைவி, திரைப்படத்துறை விழாக்களில் கலந்துகொள்ள என்று இப்படி மனைவியையும், துணைவியையும் அழைத்துக்கொண்டு சுற்றும் உங்கள் தந்தைக்கு தயவு செய்து "வக்காலத்து" வாங்க வேண்டாம். தங்களுக்கு அளித்துள்ள மத்திய அமைச்சரவைப் பதவிக்கு முக்கியத்துவம் அளித்து அதற்குப் பதில் பேசுங்கள். வெட்கக்கேடான விசயம், சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு. உங்கள் "லாவணி" சண்டைகளுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் நலனில் நீங்கள் காட்டப்போகும் "அக்கறைக்குத்" தான் வாக்களித்துள்ளோம். முதலில் இதனை உணர்ந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துகொள்ளுங்கள்.


2.அண்ணே ரொம்போ தெளிவா பேசறோம்னு வாய்க்கு வந்தது அல்லகைகள் சொல்றத கேட்டு பேசிடாதிங்க. அப்புறம் அவங்க திரும்பி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க? சோ கொஞ்சம் அடக்கி வாசிங்க....

3.பெண்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி இதை விட கேவலமாக வேறு யாரும் விமர்சிக்க முடியாது ! அதுவும் ஒரு முன்னால் முதல்வரை பற்றி,காசு கொடுத்து ஒட்டு வாங்கி ஜெய்த்து பாராளுமன்றத்தில் ஒரு வருடத்திற்கு "ஒன்றை நாள்" மட்டுமே வருகை தந்த "மாண்புமிகு மானங்கெட்ட மத்திய அமைச்சர்" பேசி இருப்பது - தமிழ்நாட்டுகே பெருத்த அவமானம்! இவரோட அப்பாவும்,குடும்ப உறுபினர்களும் "கூடி சேர்ந்து கோடி சேர்த்த" கொள்ளைகளை கேள்வி கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாமல்,இப்படி தனது "தன்மான அப்பாவை" போல தனயன் "நாகரிகமாக" விமர்சனம் பண்ணி இருப்பதை எந்த ஒரு தி.மு.க அடிவருடிகள் கூட ஏற்றுகொள்ள மாட்டார்கள்!.

4.கன்னித் தாய் என்ற புனித வார்த்தையை நீ கண்ணியமற்ற முறையில் பயன்படுத்தியதற்க்காக...எனது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! அடுத்து நீ சுத்த கூமுட்டை !!! புரட்சித் தலைவிய பராசக்தி என்று சொன்னதற்கு அர்த்தம் சொன்னால் உனக்கு புரியாது ! வாயப் பொத்திக்கிட்டு பேசாமப் போ !!!

5.பெண்கள இழிவா பேசாதே. இன்னிக்கு கூட்டம் கூட்டமா மக்கள் அந்தம்மா பின்னால ஓடுறத பாத்து வயிதெரிச்ச்சள்ள பொது இடத்தில இவளோ கேவலமா பேசுற நீ, நாளைக்கே தேர்தல்ல தோத்து போய்ட்டா ஒட்டு போடலேன்னு எங்க ஊட்டு பொண்ணுகள கேவலமா பேச மாட்டேன்னு என்ன நிச்சயம்?. இன்னிக்கு எங்க பொம்பளைங்க ஒட்டு போடுறாங்க, நீ வந்தா ஆரத்தி எடுக்கிறாங்க, நீ ஜெயிச்சுட்ட, அதனால அவங்கள பத்தி ஒன்னும் பேச மாட்டேன்கிற. நாளைக்கே பொம்பளைங்க ஒட்டு கம்மியா போயி தோத்து போய்ட்டா, அப்போ எங்களையும் இப்படிதான் எங்க போன, எவன் கூட போனான்னு கேவலமா பேசுவியா? இன்னிக்கு அந்தமாவ இவளோ கேவலமா பேசுற நீ, நாளைக்கே உனக்கு ஒட்டு போடுற பொம்பளைங்கள அசிங்கபடுத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்? சொல்லு. அது சரி, எங்கள கேவலமா பேசின குஷ்பூ கூட உறவு வெச்சுக்கிட்ட ஆளுங்கதான நீங்க. அப்புறம் உங்ககிட்ட வேற என்னத்த எதிர்பாக்க முடியும். இங்க இவளோ பெண் வாசகிகள் இத படிக்கிறீங்களே, உங்களுக்கெல்லாம் சொரனையே இல்லியா? எதாச்சும் சொல்லுங்களேன் பார்ப்போம். பொம்பள நெனச்ச பிரபஞ்சத்தையே மாத்த முடியும்ன்னு வாய்கிழிய பேசுறீங்களே, எதாச்சும் சொல்லுங்க. ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பெண்ணை இப்படி தரகுறைவா பேசுவதை ஒத்துக்குறீங்களா? சொல்லுங்க. நீங்களும் ஒரு பொம்பளதான. வாயத்தொறந்து சொல்லுங்க. அட ச்சை, பரவல்ல, கடைசிக்கு ஓட்டு சீட்லயாச்சும் சொல்லுங்க..

6.அய்யா அழகிரி! நான் ஒரு கட்சியும் சாராதவன்! ஆனாலும் தங்கள் பேச்சில் ஒரு மத்திய மந்திரிக்கான நளினம் இல்லை அய்யா. தயை கூர்ந்து தங்களின் மதிப்பை உயர்த்தி கொள்ளுங்கள்.. நீங்கள் இப்படியே பேசினால் உங்கள் ஒருத்தர் மூலமாகவே அனுதாப அலை பெற்று அந்த அம்மையார் பதவி பெறுவது உறுதி!

7.மத்திய அமைச்சருக்கு பொதுமக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் . 'அமைச்சராக இருக்கிறீர்கள் கொஞ்சம் கண்ணியமாக பேசுங்கள் , உங்கள் அப்பாவை போல் கண்ணிய குறைவாக யாரையும் பேசாதீர்கள் '. ஓ இதுதான் 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் ' கதையா ? ரொம்ப கேவலமா இருக்கு . இவர்கள் பேச்சை கேட்டால் காதை பொத்திக்கொள்ள வேண்டியது தான் ..

8.ஒரு மத்திய அமைச்சர் இவ்வளவு இழிவாக ஒரு பெண்ணை பேசுவது மிகவும் கண்டிக்க தக்கது . என்ன செய்வார், இவர் வந்த குளம் அந்த மாதிரி . அதான் மந்திரி இப்படி புலம்புகிறார் .


அண்ணே நம்ம குடும்பமே சரியில்லதா போது உங்களுக்கு எதுக்கு இந்த வேலை..

No comments:

Post a Comment