Monday, July 26, 2010

Attempt to defend Poovarasi reasoning "Depression"

மனச்சிதைவு என்று சொல்லி கொலைக்காரி பூவரசியை காப்பாற்ற முயற்சி: இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் குற்றச்சாட்டு


நாகர்கோவில், ஜூலை. 26-
இந்து முன்னணி மாநில தலைவர் ராமகோபாலன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

சென்னையில் சிறுவன் ஆதித்யாவை சென்று சூட்கேசில் அடைத்து வீசிய கொலைக்காரி பூவரசியை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. அவருக்கு மனச்சிதைவு நோய் என்று சொல்லி தப்பிக்க வைக்கப் பார்க்கிறார்கள். அதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைத்து அடைக்க வேண்டும்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆனையடி பகுதியில் உள்ளது. இதை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுபற்றி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு போடப்பட்டு நிலத்தை மீட்டு கோவிலுக்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் சென்று வர பாதை வேண்டும் என்று சொல்லி நிலஆக்கிரமிப்பு செய்வோருக்கு இத்தொகுதி எம்.எல்.ஏ. துணை போகிறார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு ஒப்படைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது அவருடன் இந்து முன்னணி மாவட்ட தலைவர் செல்வன், மிசாசோமன், ராஜா, அசோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Source: http://www.maalaimalar.com/2010/07/26174052/child.html

No comments:

Post a Comment