Saturday, July 31, 2010

BJP Rule in Tamilnadu Very Soon - Says Pon Radhakrishnan தமிழகத்தில் விரைவில் பா.ஜ.,ஆட்சி மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேச்சு

திண்டுக்கல் :

தமிழகத்தில் விரைவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என அக்கட்சி யின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார். மத்திய,மா நில அரசு அனைத்து மாணவர்களு க்கும் கல்வித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் லில் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருமலைபாலாஜி தலைமை வகித்தார். மாநில செயற்குழுஉறுப் பினர் போஸ் முன்னிலை வகித்தார். நகர தலைவர் தனபாலன் வரவேற்றார். மாநில துணை தலைவர் திருமலைசாமி, மாநில மகளிரணி தலைவர் தமிழரசி, மாநில செயலாளர் கள் பழனிவேல்சாமி, நாகராஜன் உட்பட பலர் பேசினர்.

மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது :

ஜூலை 4ல் துவங்கிய போராட்டம் 28-வது ஊராக திண்டுக் கல்லில் முடிகி றது. அடுத்தக் கட்ட போராட் டத்தை விரைவில் துவக்குவோம். அனைத்து மாணவர்களுக்கும் கல்வித்தொகை அரசு தரும் வரை போராட் டம் தொடரு ம். ஓட்டுக் களை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறுபான்மை யினர் எனக் கூறி கல்வி உதவித்தொகையை அரசு வழங்குகிறது. தி.மு.க., நடத்திய இந்தி எதிர்ப்பு போராட் டம் போல் இந்து குழந்தைகளின் எதிர்கால த்திற்காக பா.ஜ., போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆறு மாதத்தில் தேர்தல் வர உள்ளது. வரும் தேர்தலில் ஒரு ஓட்டிற்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை கூட தர தி.மு.க., தயாராகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் அவர்களிடம் உள்ளது. உழைப் பை மட்டுமே நம்பி, மக்கள் ஆதரவுடன் பா.ஜ., மத்தியிலும், பிற மாநிலத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி அமைக் கும். கேரளாவில் கிறிஸ்தவ பேராசிரி யர் ஜோசப் பின் கை யை வெட்டியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் பேசி னார். பழநி நகர செயலாளர் தீனதயாளன் நன்றி கூறி னார்.

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=51777

No comments:

Post a Comment