Monday, July 19, 2010

Congress doesn't take action to curb extremism

தீவிரவாதத்தை ஒடுக்க காங்., நடவடிக்கை எடுப்பதில்லை: பா.ஜ., தாக்கு

திருப்பூர்: தீவிரவாதத்தை ஒடுக்க, காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேசினார். திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஓட்டுகளை பெறும் முயற்சியாக ஓட்டு வங்கியாக சிறுபான்மையின மாணவ, மாணவர்களை மாற்றும் முயற்சியாக கல்வி உதவித் தொகை திட்டத்தில், கீழ்த்தரமான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை ஒடுக்க காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்துக்களை தீவிரவாதிகளாக பொய் பிரசாரம் செய்கிறது; இது கண்டிக்கதக்கது என்றார். தேசிய செயலர் கிரண் மகேஸ்வரி, தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில செயலர்கள் செல்வகுமார், மாநில பொதுச் செயலர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42750

No comments:

Post a Comment