Wednesday, July 21, 2010

Signature campaign - BJP


10 கோடி கையெழுத்து 29ம் தேதி பா.ஜ., மகஜர்

புதுடில்லி: விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 10 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் அதை மகஜராக அளிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. நாட்டில், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5ம் தேதி, விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., கூட்டணிக் கட்சிகள் சார்பில், துபாரத் பந்த் நடத்தியது. அதே நாளில், இடதுசாரி கட்சிகளும் பந்த் நடத்தின. இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., 10 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் அளிக்க திட்டமிட்டுள்ளது. வரும் 29ம் தேதி அக்கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய, மாநில தலைவர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இந்த கையெழுத்து மகஜரை அளிக்க உள்ளனர்.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=44541



No comments:

Post a Comment