Monday, January 3, 2011

பெண்மை இங்கே மலிவா ...? வெறும் 30 கோடிக்கு மனைவி மாற்றமா ...?

vedaprakash எழுதியது

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

தமிழச்சிகள் கலக்குகிறார்கள்! குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான்! திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்! கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்………….. இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள்! எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது!

திகவினரையும் வென்றுவிட்ட பிரபுதேவா! மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு! மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள்! ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது!

கமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார்? கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே? கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்ருக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை!

மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி!: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்.

http://evilsofcinema.wordpress.com/2010/12/30/30-crores-divorce-indian-achievement/

No comments:

Post a Comment