Monday, January 3, 2011

கருணாஸ், நமீதா மற்றும் யோகா

வேதாங்கங்களையும் படிக்க வேண்டாம், அனால், வேதாங்கங்களில் யோகம் வேண்டும்,

யோகாவிலும் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால் தமிழ் வேண்டும்;

தமிழ் எழுத்துகளில் கிரந்தம் இருக்கலாம், ஆனால், கிரந்த எழுத்துருக்களில் தமிழ் எழுத்துக்கள் இருக்கக் கூடாது;

இப்படி, கருணாநிதிக்கும் போலித்தனத்திற்கும் சொல்லவே வேண்டாம், ஏனெனில் அதுதான் திராவிட கலாச்சாரம் எனலாம். “சமஸ்கிருதத்தை” எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் “சமச்கிருதம்” என்று எழுதி, தட்டெழுத்து அடித்து, பேசி பார்த்ததில்லை. அதுப்போலத்தான் தமிழில் மொழிபெயர்த்து மந்திரம் சொல்கிறேன், யோகாவின் பலன் மட்டும் எனக்குக் கிடைத்தால் போகும் என்றால், என்ன செய்வார் தேசிகாச்சாரி அல்லது எந்த சாரி? சாரி! இப்படித்தான், இப்பொழுது யோகாவில் இறங்கிவிட்டார்கள். அதையும் மாற்றிவிட்டால் போயிற்று!

இனிஷியல், பெயர், மந்திரம் மாற்றும் கருணாநிதி: உண்மையான பெயர் – தட்சிணாமூர்த்தி, அது “கருணாநிதி” ஆனது. டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். இப்போது மு.க!. கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார். `நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்! இதோ, கருணாநிதியே அதைப் பற்றி சொன்னது:

“நான் விடியற்காலையில் யோகா பயின்று வருகிறேன். இதனை எனக்கு ஒரு பெரிய ஆசிரியர் கற்றுத் தருகிறார். வயதில் பெரியவரான அவர், வெளிநாடுகளுக்குச் சென்று யோகா கற்றுக் கொடுத்தவர். நான் யோகா கற்றுக் கொடுக்க அவரிடம் கேட்டபோது அவரும் விரும்பி பயிற்சி அளிக்க முன்வந்தார்.

“யோகா பயிற்சியைத் தொடங்கும்போது வடமொழியில், `நாராயணா நமகா’ என்று சொல்லச் சொன்னார். அவருடைய ஆன்மிக உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது, அதே நேரத்தில் பயிற்சியையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், `நாராயணா நமகா’ என்று சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். நீங்கள் இதனை தமிழில் சொன்னால் என்ன? என்று கேட்டேன்.

“இந்த பயிற்சிக்கு இந்த சொற்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதற்கு நாராயணா என்றால் என்ன என்று நான் சொன்னேன். அவர் சூரியனை குறிப்பிடுகிறேன் என்றார். இப்போது கூட பழக்கத்தில் சூரிய நாராயணன் என்று சொல்வதில்லையா? அதைப் போல சூரியனைத்தான் அவர் குறிப்பிட்டு `நாராயணா நமகா’ என்று சொல்ல வேண்டும் என்றார். அதன்பிறகு நான் சிந்தித்து, ஞாயிறு என்றால் சூரியன். நீங்கள் சூரிய வணக்ககத்தை `நாராயணா நமகா’ என்று சொல்கிறீர்கள். அதையே ஞாயிறு போற்றுதும் என்று சொன்னால் என்ன என்று கேட்டேன். அவர் அதை முணுமுணுத்துப் பார்த்து, நன்றாக இருக்கிறது அதையே வைத்துக் கொள்ளலாம் என்றார். இப்போது, வகுப்பின்போது ஞாயிறு போற்றுதும் என்றுதான் சொல்கிறேன். அதனால் இந்த ஞாயிறு என்னை மிகவும் கவர்ந்தது”.

இப்பொழுது எல்லாமே உலக அளவில் நடப்பதால், அதற்கேற்றப்படி தயார் செய்து கொள்கிறார்கள். இன்றைக்கு ஒபாமாவே இந்தியாவிற்கு வந்து வியாபாரம் செய்கிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆக அங்கிருந்து ஒரு “சான்றிதழ்” வேண்டும்.

யோகாவும், செக்ஸும் (ஜனவரி 2009): மேனாட்டவரைப் பற்றியும் கேட்கவே வேண்டாம், அவர்களும் எந்த விஷயமானாலும் உச்ச-நீச்சங்களில் போய்விடுவர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில், “செக்ஸ் மீதான ஆர்வத்தை பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்”, என்று கூறியுள்ளனர். செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் “செக்ஸ் ஜர்னல்’ என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில், “68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்‘ என்று எழுதப்பட்டுள்ளது.

இரட்டை வேடம் போடும் அமெரிக்கர்கள்: மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. “யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால், யோகா கற்றுக் கொண்டதால், அமெரிக்கர்கள், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது, என்னால் குரு சொன்னது போல எல்லா நிலைகளையும் என்னால் அடைய முடியவில்லை என்றெல்லாம் வழக்குகள் போட்டு, தொல்லை கொடுத்தது, மில்லியன் கணக்கில் பணத்தைப் பெற்றது முதலியவற்றைப் பற்றி சொல்வதில்லை / ஞாபகபடுத்திக் கொள்வதில்லை. இவையெல்லம் சுத்த “ஃபிராட்” என்ற அளவில் அவதூறு செய்து விட்டார்கள். பிறகு எதற்கு செக்ஸ்-மிட்டாய்கள்?

கருணாநிதியும், நமிதாவும்; கருணாநிதியின் இளமை, நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார். பாவம் இணைத்தள வீரர்கள். ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைத்திருக்கிறேன்”, என்றாராம். ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும்! பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி! தங்கம் தென்னரசு சட்டசபையில் பதிலளித்துப் பேசுகையில், “யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. 84 வயதிலும் தினந்தோறும் முதல்வர் கருணாநிதி யோகா பயிற்சி மேற்கொள்வதால்தான் 24 வயது இளைஞரை போல உழைத்து வருகிறார்”. இதுதான் ரகசியம்!

வடக்கில் ஒல்லியாக இருக்கவேண்டும் என்றால், தெற்கில் குண்டாக இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்? வடக்கிலுள்ள நடிகைகள் ஒல்லியாக இருக்கிறார்கள், உலக அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தெற்கத்தைய நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள், உள்ளங்களை உசுப்பிவிட்டு, யோகநிலையைக் கெடுத்து போகநிலைக்கு தள்ளுகிறார்கள். உலக அழ்கி என்பதைவிட உள்ள அழகிகளாக இருக்கிறார்கள். ஆகையால்தான், என்னத்தான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலும், நமீதா போல ஆகுமா என்றுதான் பார்க்கிறார்கள். ஏனென்றால், ஐஸ் நழுவி விடுகிறாதாம், ஆனால், நமீதா நச்சென்று ஓட்டிக் கொள்கிறதாம். அதனால்தான் குஷ்புவிற்கும் மௌசு! குஷ்பு ஒல்லியாக இருந்திருந்தால், திமுகவிற்கு பதிலாக பி.ஜே.பியில் தான் சேர்ந்திருக்கவேண்டும். இஞ்சி இடுப்பழகி என்று பாடியவர்களைக் கேட்டுப் பாருங்கள், எந்த இடை சுகம் தரும் என்று. நல்ல வேளை, யோகா செய்தால், இளைத்துவிடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேலை அப்படியிருந்தால், அது ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சரி, தெற்கத்தைய நடிகைகள் உலக அழகி பட்டங்களைப் பெறவில்லை? அதிலும் குறிப்பாக ஏன் எந்த தமிழச்சியும் இதுவரை பெறவில்லை? அதுவும் ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.

கருணாநிதியும், யோகாவும், எந்திரனும், கலாநிதியும்: ஷேப்பைப் பற்றிய ரகசியம்[15]: கருணாநிதி, நமீதா முதலியோருக்கு மட்டுமல்ல இந்த ஆசை, மற்றவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வியாபாரம் அல்லது ஒன்றில் காசு வருகிறது என்றால், இன்றைய நிலையில், பணக்காரர்கள், அந்த குறிப்பிட்ட தொழிலை குத்தகை எடுத்து, பெரிய அளவில் கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவர். ஆகவே இப்பொழுது யோகா இவர்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டு படாத பாடு படுகின்றது. எந்திரன் மாதிரி, யோகா “சப்ஜெக்ட்” செய்து கோடிகள் வரும் என்றால், ஐஸ்வர்யாவை வைத்து அடுத்த படத்தை எடுக்க கலாநிதி தயங்க மாட்டார். எனெனில், அவர் தனது பணத்தின் ஷேபைப் பற்றிதான் கவலைப் படுகிறார். சமயம் பார்த்து, தயாநிதி போல அரசியலில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லாமே யோகா தான்! இந்நிலையில் ரஞ்சிதாவை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (யோக நிலை), ஏன் அவர்களை புதைத்துவிட்டார்கள் (சமாதி நிலை) என்ற மர்மமும் புரியாமல் இருக்கிறது.

ரஞ்சிதாவின் யோக நிலையும், நித்யானந்தாவின் சமாதி-நிலையும்: ரஞ்சிதாவின் யோக நிலை, நித்யானந்தாவின் சமாதி-நிலையும் பற்றி விவரமாக பார்த்து விட்டாகியது. நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர்களின் உபயத்தால் தமிழகத்தின் கண்மணிகள் அதிகமாகவே பார்த்து அவற்றைப் புரிந்து கொண்டு விட்டன.. பிறகு யோகா பற்றிய சி.டி. ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இருந்த நடிகை ரஞ்சிதா அதனால் நொடிந்து போய்விட்டார். அவரே பல நிலைகளில் யோகாசனம் செய்து காட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த சி.டி, தயாரித்திருந்தார், ஆனால், திருட்டு விசிட் வெளியிடுவது மாதிரி நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர் செய்துவிட்டதால், அந்த யோகா-சிடி விற்க்குமோ-விற்க்காதோ என்று பயந்து விட்டார் போலும்!

வேதபிரகாஷ்

http://evilsofcinema.wordpress.com

No comments:

Post a Comment