Sunday, January 2, 2011

இந்திரா பற்றி கருணாஸ் அன்று சொன்னவை

இந்திரா காந்தி பற்றி கருணாநிதி வசைபாடியதை காங்கிரஸ் நண்பர்களுக்கு எடுத்து வைப்பது நமது கடமையாகும். இதோ....

* "இந்திராவே...காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா...?" என்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.

* "எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன..." என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.

* "விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்" என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.

* "...அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை..." என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.

* மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி..." என்று, இந்திராவை இழிவுபடுத்தினார்.

* முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் "கார்ட்டூன்" போட்டார்.

* "கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி" என்று, ஜாதி துவேஷத்தைத் தூண்டினார்.

* மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.

* "...பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்" என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.

இப்படி இதற்கு மேலும் ஏட்டில் எழுத முடியாத வார்த்தைகளால் இந்திரா காந்தியை கருணாநிதி இழிவுபடுத்தியதை காங்கிரஸ் கட்சியினர் அவ்வளவு சுலபமாக மறந்து இருக்க மாட்டார்கள்.

டாக்டர் இரா.அசோகன், சென்னை.62

http://roudhrampazhagu.com/website.php?pageid=15&topicid=37

No comments:

Post a Comment