Thursday, January 6, 2011

பிரதமர் பதில் சொல்வாரா..?

கேள்விக்கு என்ன பதில்?

விலைவாசி கண்ணைக் கட்டும் இந்நேரத்தில் பிரதமருக்கு பாரதிய ஜனதா கட்சி பின் வரும் பத்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

1. பிரதமர் மன்மோகன்சிங் விலைவாசி உயர்வு ஏன் என்று தெரிந்திருந்தும் நாட்டு மக்களுக்கு அதை தெரியப்படுத்த மறுப்பது ஏன்?

2. இந்தியாவில் மட்டும்தான் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 11 சதவீதமாக உள்ளது. உணவு பண்டங்களுக்கான பணவீக்க விகித அளவு மட்டும் கடந்த 20 வாரங்களில் 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவே இருக்கிறதே தவிர இறங்கியபாடில்லை இதற்கு காரணம்தான் என்ன? இந்த விலை உயர்வை தடுக்க மத்திய அசு எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?

3. உலக அளவில் பணவீக்க விகிதம் 1 சதவீதம் முதல் 2 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் பண வீக்கம் 11 சதவீதமாக இருப்பதன் மர்மம் என்ன?

4. உலக அளவில் ஒப்பிடும்போது சர்க்கரை விலை 100 சதவீதம் உயர்வாக உள்ளது. கோதுமை விலை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகச் சந்தையை விட இந்தியாவில் உணவு பண்டங்களின் விலை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

5. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் சீனாவில் 9 சதவீதம், ஆனால் சீனாவில் பண வீக்க விகிதம் 2 சதவீதம்தான். இந்தியாவில் மட்டும் பண வீக்கம் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது ஏன்?

6. 48 லட்சம் டன் சர்க்கரையை கிலோ ரூ.12.50 விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள். பின்னர் அதையே வெளிநாடுகளில் இருந்து கிலோவுக்கு ரூ.22 முதல் ரூ.32 வரை கொடுத்து இறக்குமதி செய்தீர்கள். இந்த லாபகரமான நடவடிக்கை ஏன் என்று நாட்டு மக்களுக்கு விளக்க தயாரா? சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் விலை உயராமல் கட்டுப்படுத்தவும் கையிருப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் ஆன் லைன் வாணிபத்துக்கு துணை போனது ஏன்?.

7. அரசின் தானிய கிடங்குகளில் தானியங்களை வைக்க இடமில்லாமல் நிரம்பி வழிகின்றன. பொது விநியோகத்துக்கு எடுத்து வழங்காமல் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை புளுத்து போய் உள்ளது. இந்த நிலையில் நாட்டின் சரிபாதி மக்கள் இரவில் காலி வயிறோடுதான் தூங்க செல்கிறார்கள் என்பது இந்த அரசுக்கு தெரியுமா?

9. 2005 ல் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 31 கோடி என்று மத்திய திட்டக்குழு அறிவித்தது. ஆனால் 2009 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயர்ந்துள்ளது என்கிறது டெண்டுல்கர் குழு. வறுமையை ஒழித்து விட்டோம் என்று இன்னமும் நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?

10. நாட்டின் ஏழைகளில் 51 சதவீதம் பேருக்கு ரேஷன் அட்டையே கிடையாது. அவர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் தரப்படுதே இல்லை என்று மத்திய அரசு நியமித்த சக்சேனா கமிட்டி கூறி உள்ளதே?

ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்வாரா சர்தார்ஜி?

http://krelango.blogspot.com/2010/04/blog-post.html

No comments:

Post a Comment